தமிழ் அரங்கம்

Saturday, November 15, 2008

மின்வெட்டு : பற்றாக்குறையா? மோசடியா?


ஏற்கெனவே நிலவி வரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழகத்தின் தொழிலும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. கோவை, சேலம், ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜவுளித் தொழிலும், ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலும் ஏறத்தாழ முடங்கி விட்டன. தீப்பெட்டி, உப்பு, மீன் பதப்படுத்தல், அச்சகம் முதலான சிறு தொழில்கள் அனைத்தும் நசிந்து விட்டது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றன. பல கிராமங்கள் மின்வெட்டால் வாரக்கணக்கில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பல நாட்களுக்குத் தடைப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

No comments: