தமிழ் அரங்கம்

Friday, March 20, 2009

மகிந்தாவின் பாசிசத்துக்கு முண்டு கொடுக்கும் புலியிசம்

மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.

மக்கள் சமாதானத்துக்காகவும் அமைதிக்காகவும் ரணிலுக்கு வாக்களிப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட புலிகள், தமிழ்மக்களின் இந்த விருப்பத்தை குழிபறிக்கவே, மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றனர். இப்படி புலிகள் யுத்தத்தை விரும்பித்தான், தம்மை தூக்கில் போடும் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். முந்திக்கொண்டே யாழ்குடாவில் கிளைமோர் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தினர். இப்படி புலிகளே யுத்தத்தை தொடங்கினர். மறுபக்கத்தில் மகிந்த அரசை தேர்ந்தெடுக்கவும், மக்களை வாக்களிக்கவிடாது தடுக்கவும், மகிந்த புலிகளுக்கு கையூட்டும் வழங்கினார். இப்படித்தான் தமிழ் மக்களைக் கொல்லும் கொலைகார பாசிட்டுக்கள், புலிகளின் துணையுடன் அதிகாரத்துக்கு வந்தனர்.

தான் இந்த அதிகாரத்துக்கு வர, மகிந்த போட்ட வேடமோ அப்பாவி வேஷம். கையெடுத்து கும்பிட்டும், இரந்தும், நடித்தும், இந்த பாசிட் அதிகாரத்தை கைப்பற்றினான். இதற்கு முன் பிரதமர் பதவியில் இருந்த போது, சாதுவைப் போல் வேஷம் போட்டு, அதிகாரத்தை கைப்பற்றவே தன்னை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டான். இந்த அதிகாரத்துக்கு வர ஜே.வி.பியின் உதவி.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: