தமிழ் அரங்கம்

Saturday, January 30, 2010

வேதாளம் முருங்கையில் எறியது : மேயர் சிவகீதா மட்டுநகரில் இருந்து தலைமறைவு.


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் வெளியாகிய மறுகணமே பிள்ளையானின் காட்டுமிராண்டித்தனம் மட்டுநகரில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. மட்டு மேயர் சிவகீதா இலக்கு வைக்கப்பட்டுள்ளார். மட்டுநகர் மாநகர சபை அலுவலகம், மேயரின் வீடு என்பன பிள்ளையானின் குழுவினரால் பெற்றோல் குண்டுகள் , கிரனேட்டுக்கள் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக அவர் தனது முழுக்குடும்பத்துடனும் மட்டக்களப்பு நகரிலிருந்து தலைமறைவாகி பிறமாவட்டம் ஒன்றில் ஒழிந்துவாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதல் சம்பவங்களானது பிள்ளையானின் நேரடி வழிநடத்தலிலே இடம்பெற்றுள்ளது. மட்டுநகர் மாநகர சபை அலுவலகமும் அவரது வீடும் மட்டக்களப்பு நகரின் மிகவும் பாதுகாப்பான பிரதேசங்களில், சுற்றிவர பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைச் சாவடி அமைந்துள்ள பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. அத்துடன் தாக்குதலுக்குள்ளான மேயர் இல்லத்திற்கு பாதுகாப்பாக பொலிஸ் காவல்தடை போடப்பட்டுள்ளதுடன் 24 மணிநேரமும் அங்கு பொலிஸார் கடமையில் இருப்பர். அங்குவரும் வாகனங்கள் , ஆட்கள் சோதனையிடப்பட்டே உள்ளே அனுமதிப்படுவது வழமை.

தாக்குதல் நடாத்தப்பட்ட வித.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: