தமிழ் அரங்கம்

Sunday, January 17, 2010

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் … செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்ஓ கெயிட்டியே!…..

ஓ கெயிட்டியே!…..

இவ்வருடத்திலாவது எம்மை நிம்மதியாக மனிதனாக வாழவிடு என புத்தாண்டை வேண்டுவோம். ஆனால் இப்புத்தாண்டு பிறந்ததிலிருந்து அரைமாதக் கலன்டர் கடதாசியைக் கூட கிழிப்பதற்கிடையில் இயற்கையின் சீற்றம் கெயிட்டியை (ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்களையும் பல பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்களையும்) காவு கொண்டுள்ளது. நான்கு லட்சம் மக்களை காயப்படுத்தியுள்ளது.

இவ்வுலகின் அதிகாரத திமிர் கொண்ட ஆளும் சுரண்டும் வர்க்கம் எம்பூமியின் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி இயற்கையை அழிப்பது ஒருபுறம். பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அதை போர்களாக்கி உலக மக்களை அழிப்பது இன்னொருபுறம். இயற்கை சீற்றம் கொண்டு மழையாய், வெள்ளப்; பெருக்காய், பெருங் காற்றாய், சூறாவளியாய், நிலநடுககமாய், சுனாமியாய், தொற்று நோய்களாய் எம்மானிடத்தை அழிப்பது மற்றொர்புறம். இவவுலகின் மக்கள் அதிகாரச் செருக்கு, இயற்கைச் சீற்றததிற்கும் ஏதிராகப் போராடுகின்றார்கள். போராடியே தீரவும் வேணடு;ம். மனிதகுலத்தின் வரலாறு அதிகாரத்திற்கும் – இயற்கைக்கும் எதிரான போராட்டமே. இன்றைய இவ்வுலகம் பற்பல லட்சம் வருடங்களாக மக்களின் போராட்டத் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டதே! அண்மையில் அமெரிக்கா கெயிட்டியை ஆக்கிரமித்த போது, அந்த மக்கள் சிந்திய இரத்தம் இன்னும் காயவில்லை, அதற்குள் இயற்கை அந்த மக்களை கொன்று குவித்துவிட்டது. கெய்ட்டி மக்களின் தியாகளுக்கும், மரணங்களுக்கும் தலைசாய்ப்போம்.

சத்தியவான்களின் குற்றச்சாட்டுக்கள்

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறு தமது நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் முஸம் மிலலுக்கு மூன்று கோடி ருபா லஞ்சம் கொடுத்து விலை பேசப்பட்டதாம். அதில் முப்பது லட்சம் வெள்ளவத்........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: