தமிழ் அரங்கம்

Saturday, January 16, 2010

அரசியற் குறிப்புகள் (மார்கழி-09 – தை-10)

ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நிகழும் என்ற எதிர்பார்ப்புக்கு இம்மாதத் தொடக்கத்தில் பதில் கிடைத்திருந்தது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இத் தேர்தலில் மகிந்தாவும் எதிரணி பொது வேட்பாளராக சரத்தும் போட்டியிடுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. புலிகளையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட்டியது தாம் தான் என இருவரும் உரிமைகோரும் போட்டிப்பலத்துடன் களத்தில் குதித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியவில்லை என்பதால் இரு வருடத்துக்கு முன்னரே தான் தேர்தலை வைப்பதாக தமிழ் மக்களின் மனங்களை லேசாகத் தொட முயற்சிக்கிறார் மகிந்தா. கடந்த தேர்தலில் புலியுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை நயிசாக மென்று விழுங்கியும் விடுகிறார்.

சரத்தோ தானேதான் களத்தில் நின்று போராடி புலிப் பயங்கரவாத்தை ஒழித்தவன் என்றும் ஆனாலும் மனிதாபிமானம் இல்லாமல் புலிகளைக் கொன்றது தனக்குத் தெரியாது என்று கைகளைக் கழுவி சுத்தம் செய்து விடுகிறார். தான் ஜனாதிபதியாக வந்தால் இவற்றுக்கு விசாரணை நடத்துவேன் என்று தன்னை நிரபராதியாகக் காட்டியும் விடுகிறார். உண்மையில் சரத் புலிகள் கொல்லப்பட்ட அடுத்த நிமிடம் தனது பதவியைத் துறந்திருந்தால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் ஏதாவது இருந்திருக்கும். யுத்த காலத்தில் சிறுபான்மை இனங்கள் இந்த நாட்டில் வாழலாமே தவிர உரிமைகளைக் கோர முடியாது என்று சொன்னது ஒருவேளை இராணுவ நாக்காக இருந்திருக்குமோ தெரியாது.

புலிகள் இருந்த காலத்தில் ஆளும் எதிர் மற்றும் யேவிபி கட்சிகளின் வாக்கு வங்கிகள் புலிகள் மற்றும் தமிழ் மக்கள்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: