தமிழ் அரங்கம்

Monday, November 9, 2009

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்?

1.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? : புதிய ஜனநாயகம் வெளியீடு

2.பு.ஜ.வின் விமர்சனங்களும் மாவோயிஸ்டுகளின் வசவுகளும்

3.எதிரிக்கு ஒத்திசைவாக அமைவது மாவோயிஸ்டுகளின் செயலா? பு.ஜ.வின் விமர்சனங்களா?


4.யார் நேர்மையானவர்கள்: பு.ஜ.வா, மாவோயிஸ்டுகளா?இதோ ஆதாரம்!

5.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட "நடிப்பு'

6.முதன்மைத் தவறும் ஆயுதக் குழுக்களும்

7.மாவோயிஸ்ட் இயக்கம்: ஏறுமுகத்திலா, இறங்கு முகத்திலா?

8.தர்மபுரி அனுபவம் என்ன? மீளாய்வு எங்கே?

9.கர்நாடகா அனுபவமும் இதுதான்!

10.ஒப்பாரி வைக்கமாட்டார்கள்! புரட்சி சவடால் அடிப்பார்கள்!

11.உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் மாவோயிஸ்டுகளின் சாணக்கியத்தனம்

12.குதர்க்கவாதமே கோட்பாடாக!

13.புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்

14.அரசியலுக்காகத்தான் ஆயுதமா? ஆயுதத்துக்காக அரசியலா?

15.இணைப்பு: நக்சல்பாரி "அபாயம்': அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?(புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2007இல் வெளியான கட்டுரை)

போலி மோதல் கொலைகள் அரசு பயங்கரவாதமே!


""அந்த நான்கு பேரும் லஷ்கர் இதொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் வந்த அவர்களை வழிமறித்தபொழுது, நெடுஞ்சாலையில் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு இம்"மோதல்' பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது.

இந்த "மோதல்' கொலை பற்றி அப்பொழுதே பல்வேறு சந்தேகங்களும் விமர்சனங்களும் மனித உரிமை அமைப்புகளாலும் முசுலீம் மக்களாலும் எழுப்பப்பட்டன. "மோதலில்' கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹனின் தாயாரும், ஜாவேத் ஷேக்கின் தந்தையும் இம்"மோதல்' கொலை பற்றி விசாரிக்கக் கோரி குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். குஜராத் அரசும் தன்னை நியாயவானாகக் காட்டிக்கொள்ள இம்"மோதல்' கொலை பற்றி போலீசு விசாரணையும், துணை கோட்ட நடுவர் விசாரணையும் நடத்த உத்தரவிட்டது.

தனது அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் போலீசும், துணைக் கோட்ட நடுவரும் (Sub divisional magistrate) தனக்கு எதிராகத் தீர்ப்பெழுத மாட்டார்கள்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, November 8, 2009

புலத்துப் புலிகள் போடும் "ஜனநாயகம்", மக்களை ஏமாற்றித் தின்னும் போக்கிலி அரசியலாகும்


இதன் பின் இருப்பவர்களோ, கடந்தகாலத்தில் தமிழ் மக்களை மந்தைகளாக அடிமைப்படுத்தி தின்றவர்கள். இவர்கள் யார் என்றால் புலிகளின் பின் சொத்தைக் குவித்தவர்கள், புலிகளின் சொத்தை இன்று அனுபவிப்பவர்கள், மக்கள் மேல் அதிகாரத்தைக் கையாண்டவர்கள், உழையாது போராட்டத்தின் பெயரில் தின்று திரிந்தவர்கள் தான், இன்று மீண்டும் தமிழ் மக்களின் பின் தம்மை தக்கவைக்க முனைகின்றனர்.

இதற்காக ஜனநாயக வேசம் போடுவது முதல் தமிழ் மக்களிடம் வாக்கைக் கேட்பது வரை, பற்பல நாடகங்கள். ஆனால் ஜனநாயக விரோத நடைமுறை ஊடாகவே, மீண்டும் தம்மைத் தக்கவைக்க முனைகின்றனர். பாரிஸ்சில் சுயமாக செயல்படுகின்ற பொது அமைப்புகளின் உள்ள ஒரு சில ஜனநாயக விரோதிகளைக் கொண்டு, அமைப்பின் பெயரால் புலத்து புலிப் பினாமிகள் பொது அமைப்பை உருவாக்குவது முதல் நோர்வேயில் சுயமான அமைப்பின் பெயரில் போட்டி புதிய அமைப்பை....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: கூலித் தொழிலாளர்களைப் பலியிட்டுக் கொண்டாட்டமா?


இச்சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம், அதே கட்டிடத்தில் நடந்தது. அச்சம்பவத்தில் பொருட்களைக் கட்டிடத்தில் ஏற்ற உதவும் கி÷ரன் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரது உடலைப் பார்க்கக்கூட மற்றதொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசயாரும் முன்வராததால்þ அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார், தொழிலாளர்களை அடித்து விரட்டியதால் அந்தப் பகுதி முழுவதுமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

இந்நிலையில் ஜூலை சம்பவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்புதான்þ தெற்கு தில்லியின் ஜம்ருத்பூர் பகுதியில் புதிதாகக்கட்டப்பட்டு
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, November 6, 2009

உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய் ஓடிற்று. இந்தத் தத்தளிக்கும் தீக்கடலிலிருந்து இரக்கமற்ற அப்பட்டமான வர்க்கப் போராட்டமும், புதிய கிரகங்களது மெல்லக் குளிர்ந்து கெட்டியாகும் மொறுமொறுப்பான மேலோடும் உருவாகி வெளிப்பட்டன.

ரசியப் புரட்சி இரண்டு அங்கங்களைக் கொண்டது. முதலாவது, பழைய ஆட்சியினை ஒழித்திடுதல், இரண்டாவது புதிய ஆட்சியினை உருவாக்குதல்.

ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 5, 2009

முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!

வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.


அவர் குடும்பத்தினர்þ சலீமை உடனே பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அம்மருத்துவமனை, ஆரம்ப பரிசோதனை செய்துவிட்டு சலீமை உள்நேõயாளியாகச் சேர்த்தது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு முன் "முன்னெச்சரிக்கை'' நடவடிக்கை என்ற பெயரில் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே நோய் பரவாமலிருக்க கிருமி நாசினிகள்þ முகமூடிகள், சோப்புகள், துப்புரவுக் கைக்குட்டைகள் மற்றும் வைட்டமின் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவமனை பரிந்துரைத்தது.

இறுதியாகþ நான்காவது நாளில்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 4, 2009

“ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்

இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.

-ஆசிரியர் குழு

பு.ஜ: கல்வியறிவு பெற்றவர்கள் எனக் கூறப்படும் யாழ்ப்பாணத் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எந்த அடிப்படையில் சகித்துக் கொண்டார்கள்? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்ற அபாயம் காரணமாகவா? இல்லை, தமிழ்ச் சமூகமே ஜனநாயக மறுப்புத் தன்மையுடைதாய் இருந்து வருகிறதா?

சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித்தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும்போது, மஹாராஜா போன்ற ஒரிருவரைத்தான்... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

போர்க் குற்றம் : அமெரிக்க ஏகாதிபத்திய சதிராட்டமும், பேரினவாதத்தின் சூழ்ச்சியும்

தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களும் துயரங்களும், இன்று குறுகிய நலன்களுடன் அரசியல் ரீதியாக விலை பேசப்படுகின்றது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முதல் மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சியைத் தக்க வைக்கும் எல்லைகள் வரை, தமிழ் மக்களின் அவலம் அரசியலாக்கப்படுகின்றது.

ஆளும்வர்க்க வலதுசாரிய பாசிட்டுகளுக்குள்ளான முரண்பாடுகள், ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் வெளிப்படையாகவே தாளம் போடத் தொடங்கிவிட்டது. போர்க் குற்றத்தில் ஈடுபட்ட குற்றக் கும்பல், தமக்குள் எதிரணியாக மாறி நிற்கின்றது. முரண்பட்ட எகாதிபத்திய நலன்கள், இதை தனது நலனுக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இலங்கையின் எதிரணி அரசியல் கூட, இந்தப் போக்கில் பிளவுபட்டு வருகின்றது. பரஸ்பரம் போர்க்குற்றத்தை காட்டிக்கொடுப்பதில்லை என்று கூறிக்கொண்டு, ஒன்றையொன்று குழிபறிக்கின்றது. இதையே சரத் பொன்சேகா "யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்கின்றார். இதன் மூலம் காட்டிக்கொடுக்க போர்க் குற்றங்கள் உண்டு என்பதும், வெளிப்படையாக..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 3, 2009

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…

கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………

தமிழ் மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவக்குழியைத்தான் வெட்ட முடியும். கடந்த காலத்தில் அதை செய்து முடித்த பெருமை எங்களைச் சாரும். மனித உணர்வுகளை மறுத்து, அவற்றை சவக்குழிகளில் தோண்டிப் புதைத்தவர்கள் நாங்கள். இதுவே எம் கடந்தகால வரலாறாகிவிட்டது.

நாங்களோ மந்தைகளாக இருந்தோம். இதனால் எம்மினம் இன்று அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னமும் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை.

ஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது!....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, November 2, 2009

கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும்.

இலங்கையில் தேர்தலுக்கான பரபரப்புக்கள் தொடங்கி விட்டன. அங்கைமாறி இங்கமாறிக் கதைப்பதும், விலைக்கு வாங்குவதும், வழமைபோல் இந்தத் தரகுகளை வளைத்துப் போடுவதுமாக களைகட்டத் தொடங்குகிறது தேர்தல் வியாபாரம்.

அரசில் இருக்கும் மகிந்தா பக்கம் சுளையாக யுத்த வெற்றியை கையில் வைத்திருக்கிறது. இதைத் தமது பக்கம் இலேசாகச் சாய்பதற்கு சரத்பொன்சேகாவை நாடுகிறது ரணிலின் பக்கம். இப்படி படு உசாரான தேர்தலாக இது களைகட்டுமாப்போல் தெரிகிறது.

இதன் பிறிதொரு அங்கமாக வன்னிமக்களின் முகாம் பிரச்சனை நிலுவையாக இருக்கிறது. பிரிட்டனில் இருந்து வன்னிக்கு வந்துபோன பிரதிநிதிகள்: பருவ மழைக்குள்ளும் இம் முகாம்கள் இப்படியே இருந்தால், பாரதூரமான தொற்று நோய்களும் மனித அவலங்களும் நிகழுமென அது எச்சரித்தது. மழைகாலம் வரும் முன்னே வடிகால்களை அமைத்து
... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, November 1, 2009

கொல்வதோ அரசின் உரிமை! அதை ரசிப்பதே சமூகத்தின் கடமை!

இலங்கையின் ஜனநாயகம் இதுதான். இதற்குள் தான் சட்டம் நீதி, சமூக ஒழுங்கு என அனைத்தும் இயங்குகின்றது. நாட்டின் அதிகார வர்க்கம், தான் விரும்பியவர்களை எதுவும் செய்ய முடியும். மக்கள் முன் ஈவிரக்கமின்றியே அடித்துக் கொல்லுகின்றது. சூடு சுரணையற்ற சமூகம், அதை வேடிக்கையாகவே பார்த்து ரசிக்கின்றது.


இலங்கை பாசிச சமூகம் எப்படி இருக்கின்றது என்பதற்கு, இந்தக் வீடியோ காட்சி ஒரு நல்ல உதாரணம். கொல்வதில் எந்த ஓளிவு மறைவும் கிடையாது. இப்படி நடப்பதே அதிகார வர்க்கத்தின், கேள்விக்கிடமற்ற கொலைத் தொழிலாக உள்ளது. இதைச் செய்வதை நியாயப்படுத்தும் அரசியல் தான் பூத்துக் குலுங்குகின்றது. இதற்கு இனம், நிறம், சாதி, பால், பிரதேசம், அதிகாரம் என, எது வேண்டுமென்றாலும் ஒரு காரணியாக இருக்;கலாம்.

இந்த நிகழ்வு தற்செயலாகவே..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்னமுமேன் தெருவிறங்கு.......

குமுறும் அலைதிரண்டு
தூக்கி கரைபோவென எறிகிறது
எகிறியே அசையாகொலை வெறியொடு
கோலெடுத்தோங்கி அறையும் அரக்கத்தனம்
பாசிசம் வளர்த்தெடுத்த காவற்படை
மனிதமிளந்து மிருகமாய்...

ஆற்றில் தத்தளித்த உயிரை
காத்தசிறுவனை பெற்ர நாடு
கையேந்தி நின்ற பேதலித்த இளைஞனை....

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, October 31, 2009

ஒரு நல்ல மனிதனும் கட்சி அரசியலும் – ரிபிசி கலந்துரையாடல்

கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.

ஜயலத் அவர்கள் தமிழ் மக்களிடம் நல்ல அபிப்பிராயங்களை தக்கவைத்துள்ளவர். அவர் ஒரு நல்ல மனிதர் என எடுத்துக்கொள்வோம். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வந்திருந்தார். இலங்கை மக்கள் நலன் சார்பில் அல்ல என்பதாலோ என்னவோ அவரது கலந்துரையாடல் ஒரு கட்சியின் வெளிப் பரப்புக்குள் சென்று எதையும் சொல்லிவிடவில்லை. நல்ல மனிதர்கள் என்பது அரசியல் பார்வையை நல்லதாக்கிவிடுவதில்லை. காலமெலாம் தமிழ் மக்களிற்காக நியாயத்துடன் அரசியல் குரலெழுப்பிய வாசுதேவ நாணயக்கார அவர்கள் ராஜபக்ச அரசின் ஆலோசகராக மாறித்தான் போனார். போரைக் கண்டடைந்தார். நிலையான தீர்வு என்பது எப்பொழுதும் அதிகார மையத்திலிருந்து அதாவது மேலிருந்து கீழாக........ ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 30, 2009

இளையோரின் ஜனநாயகப் பண்பும் கிழப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்


மக்களின் உற்சாகமற்ற வருகையில் ஏற்பட்ட தாமதத்தினால் வழமைக்கு மாறாக சுமார் ஒரு மணிநேரம் தாமதித்தே நிகழ்வும் ஆரம்பமானது. வெவ்வேறு மாநிலங்களிலும் இருந்தும் வருகை தந்திருந்த இளையோர்கள் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மொழிகளில் நாட்டின் இன்றைய அவலநிலைகளை வெளிப்படுத்தினர். அறியப்பட்ட சுவிஸ் நபர்கள்....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, October 29, 2009

அந்த கறுத்தப் பெட்டி…

"'……."
' தர்மலிங்கம் அண்ணை இல்லையா...? "
'…….."'வாங்க தம்பி..."
'நீங்க எனக்கு பெட்டி ஒன்று செய்து தரோணும்."
'பெட்டியா… என்ன பெட்டி தம்பி...?"
'இதுதான் அண்ணை அளவு. சூட்கேஸ் மாதிரி, கொண்டு திரியக் கூடியதாய் இருக்கோணும்..."
'……….."
'டேய்… என்னடா செய்யுறியள்...? சின்னப்பொடியள் மாதிரி கத்திக் கொண்டிருக்கிறியள்.... கரியன் வாறான், சத்தம் போடாமல் இருங்கோ…!"
சண்முகசுந்தரம் மாஸ்ரர் வராததாலை கெமிஸ்ரிப் பாடம் பிறீ. பிறீ கிடைச்சால் கௌரி பாடுறதும்..., ரவி மேசேலை மோளம் அடிக்கிறதும் வழமையா......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 28, 2009

இளையோர் அமைப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து…


புலம்பெயர் சூழலில் பரந்து விரிந்து கிடக்கின்ற இளமைக்குரிய வசதிகள், வாய்ப்புக்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, தாய்த்தேசத்தின் உணர்வுகளுடன் உலாவரும் இளமை உள்ளங்களே! உங்கள் உணர்வுகளுக்கு தலை சாய்க்கின்றோம். தாய்த் தேசம் சார்ந்த உங்கள் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அப்பழுக்கற்றவை என்பதையும் நம்புகிறோம். உங்கள் செயற்பாடுகள் தொடர்வதை உளச்சுத்தியுடன் வரவேற்கின்றோம்.

Tuesday, October 27, 2009

மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்

போரென்று எழுந்தநிலம் புதைகுழியாய்படைகளிடம்
பதையுண்டுபோனதென்ன---விதியாஇது
சாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை--
பாரின்றுசந்ததியை அழிக்கின்ற பகைமுகாமில்
சோறின்றி வாழ்தலல்ல உறுத்துதலாய்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 26, 2009

பாரிஸ் கூட்ட முடிவுகள் : மாற்றத்தை நோக்கிய ஒரு பகிரங்க அறைகூவல்

செப் 26-27ம் திகதியில் பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் தமிழரங்கத்தின் முயற்சியில் கூட்டு விவாதம் ஒன்று நடை பெற்றது. கடந்தகால அரசியல் சூழலை மாற்றியமைக்க, முதலில் தன்னைத் தான் அது கோரியது. எதிர்காலத்தில் நடைமுறையில் நாம் செய்யவேண்டிய அரசியல் பணிகளை, ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் வரையறுத்;து. அத்துடன் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த, கூட்டு உழைப்பைக் கோரியது. தனித்துவமான செயல்களை, கூட்டான அரசியல் திட்ட செயல்முறைக்கூடாக முன்னெடுக்கவும் கோரியது.

கூட்டு விவாதம் இன்றைய அரசியல் சூழலை மதிப்பீடு செய்தது. இனவொடுக்குமுறையால் கடந்த 30 வருடமாக இலங்கையில்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புதிய இணையம் அறிமுகம் : புகலிடச் சிந்தனை மையம்

புகலிடச் சிந்தனை மையத்தின் இணையம், www.psminaiyam.com கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க முன்முனைப்புடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. சிங்களம் முதல் பல மொழிகளில் தன்னை ஒருங்கிணைத்து, மக்கள் மத்தியில் செயல்பட அது உறுதி பூண்டுள்ளது. சமகால நிகழ்வுகளை ஓட்டி, ஒரு பொது விவாத அரங்கையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் அங்கத்தவராக பதிவு செய்து கொள்ளும், யாரும் இங்கு சுதந்திரமாக விவாதிக்க முடியும்.

புரட்சிகர மாற்றத்தை நோக்கி....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, October 24, 2009

அமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும்

மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.

அறுபது நீண்ட ஆண்டுகள், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது.........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 23, 2009

மகிந்தாவுக்கு குடைபிடிக்கும் அலுக்கோசு அரசியல்


இனவொடுக்குமுறையால் இன்று தமிழ்மக்கள் எண்ணிக்கை குறைந்து, அவர்கள் மிகச் சிறுபான்மை இனமாக மாறி வருவதை சுனந்த தேசப்பிரிய சுட்டிக் காட்டினார். இதன் போது, சுகன் மகிழ்ச்சி பொங்க கைதட்டி ஆர்ப்பரித்தான். தமிழ் மக்களை கொன்றும், அவர்களை நாட்டை விட்ட துரத்தியும் அழித்த அந்த அரசியலுக்காகத்தான், இந்த மகிழ்ச்சி. அலுக்கோசுகள் மட்டும் தான், கோமாளித்தனத்துடன் தங்களை இப்படி வெளிப்படுத்த முடியும்.

தமிழ் மக்களின்....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும் - தில்லை (சுவிஸ்)


3) இலங்கையி...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 21, 2009

மகிந்தாவின் கை வைத்தியத்தில் தயாராகும் புதிய தூக்க மாத்திரைகள்.


இவர்களின் மிக மோசமான வாழ்நிலை தொடர்பாக பாட்டம் பாட்டமாகக் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. கூடவே இவை வாதப் - பிரதிவாதங்களாகவும் அமைந்திருந்தன. முதற் கட்டமாக - வன்னியில் இருந்து வந்த மக்கள் பட்டினி மரணங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் பலர் இறந்து வருவதாகவும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. பெரும் தொகையான மக்கள் வெளியேறியதால் சில நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் - வெகுவிரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும் எனவும் பிரதிவாதங்கள் அமைந்திருந்தன. (இவைகள் புலிகளின் தலைமை அழிவுக்கு முன்னர்)

புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் ஒரு மவுன இடைவெளி காணப்பட்டது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டி கே.பி யின் கைதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக மாறியது. கிட்டத்தட்ட யூலை கடைசி வாரம் வ......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 20, 2009

வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள்

புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

விரிந்து விசாலமுற்ற பார்வையை மக்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் வகையிலான விடுதலை ஆட்சியமைப்பை உருவாக்குவதன் மூலம் வாழ்வின் சாராம்சத்தை உயர்த்துவதற்கு பதில் அதற்கு எதிரான கைங்கரியத்தையே புலிகள் தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் பாவிப்பதற்கான பண்டங்களாகவே அனைவரும் மதிக்கப்படுகின்றனர். தலைவர்கள் அங்கத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பின் அதே பெறுமானத்தினைத் தான் அங்கத்தவன் ஒருவன் தான் சித்திரவதை செய்யும் கைதிகளிடம் காட்டுகின்றான். மனிதன் ஒருவனில் மதிக்கத்தக்க குணாம்சங்கள் அர்ப்பணிப்பு- அதாவது மற்றைய இயக்கங்களில் சேர்ந்தவர்களில் பலர் தங்களை மக்களின் நலனுக்காகவும் இலட்சியத்துக்காகவும் தியாகம் செய்ய தயாராயிருந்தமை- அனைத்தும் அர்த்தமற்றுப் போய் விட்டது. சிறுவர்களைச் சித்திரவதையாளர்களாகப் பாவிக்கும் புலிகள் அமைப்பானது சிறைச்சாலைகளும் வதைமுகாம்களும் கொண்ட வலைப்பின்னாலாக வியாபகமடைந்துள்ளது.
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிற மாவட்ட மக்களை விடுவிப்பது என்பது, வன்னியில் இருந்து நிரந்தரமாக துரத்துவதாகும்

அரசு செய்கின்ற புதிய நுட்பமான ஒரு போர்க் குற்றம். இதுவோ மூலதனத்தின் கபட நாடகம். சுரண்டும் வர்க்க நலன்களே, இங்கு இந்த நிலையை உருவாக்கி வருகின்றது.

பேரினவாதம் உருவாக்கி வைத்துள்ள திறந்தவெளி சிறை இதன் அடிப்படையிலானது. மக்களை அடைத்து வைத்திருப்பது இதற்காகத்தான்.
ஆனால், அரசு கூறும் காரணமோ, வன்னியில் இன்னமும் கண்ணி வெடியை அகற்றவில்லை என்கின்றது. அத்துடன் முகாமில் உள்ள மக்களுடன் புலிகள் உள்ளதால், அவர்களை கைது செய்ய வேண்டியுள்ளது என்கின்றது.

புலிகளோ இதற்கு கூறும் காரணம் வன்னியில் சிங்கள குடியேற்றம் செய்யவும், இனவழிப்பு செய்யவும், இப்படி மக்களை அரசு அடைத்து வைத்துள்ளதாக கூறுகின்றது.

.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 19, 2009

பிரபாகரனின் சகாப்தத்தின் முடிவின் மேல், அரச பாசிசமும் புலியெதிர்ப்பு அரசியலும்

மண்ணில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின், அரசுக்கு எதிரான பொது அரசியல் என்பது படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றது. தனித்துவமான சுதந்திரமான அரசியல், அரச பாசிசத்தின் முன் சிதைந்து போகின்றது. இன்று இலங்கையில் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது, பயங்கரவாதமாகிவிட்டது. இந்த அரச பாசிசத்தைப் பற்றி பேசுவது, கைதுக்கும் படுகொலைக்குமுரிய ஒரு அரசியல் செயலாகிவிட்டது.

இன்று இலங்கையில் இதுதான் நிலைமை. புலத்திலும் இந்த நிலைமையை உருவாக்கவே, அரச பாசிசம் தீவிரமாக முனைகின்றது. அரச பாசிசத்துக்கு அஞ்சி வெளியேறிய சிங்கள ஊடகவியலாளர்கள் முதல் புலத்தில் இயங்கும் சொத்துப் புலிகளை கருவறுப்பதில் தீவிரமாக அரசு களமிறங்கியுள்ளது. இந்த வகையில் அரச உளவுப்பிரிவு, தீவிரமாக புலத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்காக பாரிய நிதியை ஓதுக்கியுள்ளது. எல்லாம் விலை பேசப்படுகின்றது.

இதன் மூலம் தமது பாசிசத்தை நிறுவ ஆள்காட்டிகள் முதல் தமக்கு ஏற்ற ஒரு அரசியல் தளத்தையும் உருவாக்க முனைகின்றது. இப்படி
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, October 18, 2009

புகலிடச் சிந்தனை மையம் சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்


என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார். இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்


என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார். இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

பேரினவாதப் பாசிசம்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, October 17, 2009

குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்

இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

பு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 16, 2009

அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்.

இப்படி பேசுபவர்கள்...
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, October 15, 2009

ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது

தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமர்சனம் குறித்த அவரது கட்டுரைகள், ""விமர்சனங்கள்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. தற்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சியலெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார்.

Wednesday, October 14, 2009

சுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் பிரிய

"இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்" என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய உரையாற்றினார்.

இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவரும், 15 வருட சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அத்துடன் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

பேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை விமர்சிக்கும் சிங்கள....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 13, 2009

நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...? நண்பர்கள் யார்...?

Monday, October 12, 2009

இந்திய இலங்கை அரசுகளின் தொப்புள்கொடி உறவுகள்

இரண்டு தலைமுறைகளை கண்ட முதியவர்
முகாம் கூடாரத்து மூலையில்
யாரிவர்கள் எனக்கேட்கிறார்.....

உலகத்தமிழினத் தலைவரின் தூதுவர்கள்

நேரிடை தகவல் சேர்க்கும் நீதிமான்கள்
இந்திய அரசின் மனச்சாட்சியை தட்டிக்கேட்க .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, October 10, 2009

புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் சிந்தனைக்கு

கடந்த காலங்களில் புலத்தில் முன்னணியில் நின்று தமிழ் தேசியம் ஐனநாயகம் பாட்டாளி வர்க்கத் தலைமை மற்றும் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு வேலை செய்த புத்திஜீவிகளில் பலர் இன்று இலங்கை பாசிச அரசை போற்றுவோராகவும் ஒட்டுக் குழுக்களின் பிரமுகர்களாகவும் மேடைகளில் பவனி வருகின்றனர்.

தமிழ் தேசிய விடுதலையின் பேரில் புலிகள் தமிழ் மக்களின் அனைத்து ஐனநாயக உரிமைகளையும் மறுத்து அச்சுறுத்தி தேசத்தை விட்டு வெளியேற்றி படுகொலைகள் செய்து மக்களின் மீது கொரத்தாண்டபம் ஆடினர்.

புலிகளின் அராஜகத்தினால் நாங்கள் நண்பர்கள் உறவினர் மற்றும் விடுதலைக்காய் அனைத்தையும் துறந்து போராட வந்த பல நூற்றுக்கணக்கான தோழர்களை இழந்துள்ளோம்

Friday, October 9, 2009

பாரிஸ் சந்திப்பு தொடர்பாய் எனது அவதானங்கள்

தமிழ் அரங்கத்தால் நடாத்தப்பட்ட இச் சந்திப்பு என்பது ஒரு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன். இன்றைய சூழலில் மக்களை புலிகளின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பை நடத்தும் பிழைப்புவாதக்கோஸ்டி ஒருபுறமிருக்க தம்மை புலி எதிர்பாளர்கள் என்றும் தற்போது புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டதனால் தாமே இன்றைய சமூக சிந்தனையாளர்கள் என்றும் தம்மை காட்டியபடி இலங்கை அரசுக்குப் பின்னால் நிற்கும் மாற்றுக்கருத்தைக் கொண்ட கோஸ்டி என்பவர்கள் மறுபுறமிருக்க மக்களை தனித்தனியாக ஏமாற்றி மக்களின் கருத்துக்களையும், மனங்களையும் மாற்றி அலையவிடும் ஒரு சில சாரார்களுக்கிடையே தொடர்ந்தும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தவறை தவறு என்று விமர்சித்து, ஒரு கருத்தை அடையக்கூடியவர்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரு மேடைக்கு அழைத்தது என்பது தமிழரங்கத்தின் வெற்றி என்றே கூறவேண்டும்.

ஒரு கட்டத்தில் றயா என்ற தனிமனிதன் தான் அக்கருத்தை.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 7, 2009

பாரிசில் நடந்த கூட்டம் : மக்கள் மேலான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்களைச் சார்ந்து போராட அது உறுதி பூண்டது.


கடந்தகாலத்தில் தேசியம் என்ற பெயரில் நீடித்த புலிப் பாசிசம், இன்று தன்னைத்தானே பிணமாக்கியுள்ளது. அதன் எச்சசொச்சம், தன் இறுதி மூச்சுடன் சேடம் இழுகின்றது. மறுபுறத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் இருந்த புலியெதிர்ப்பு, அரச பாசிசமாக மாறி நிற்கின்றது. "ஜனநாயக" வேஷம் இன்று அரச பாசிசமாகி நடுரோட்டில் அம்மணமாகிக் கிடக்கின்றது.

இப்படி மாறிய சூழலை தன் கருத்தில் எடுத்த கூட்டம், மக்களை நோக்கி செயல்பட வேண்டியது அனைவரினதும் மையக்கடமை என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதை மதிப்பிட்ட கூட்டம் அரசுடனும் புலியுடனும் இல்லாத அனைவரையும், கடந்தகால முரண்பாடுகளைக் கடந்து இந்தத் திட்டத்தில் இணைக்கும் வண்ணம் தான் செயலாற்றவும் உறுதிபூண்டது.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 6, 2009

நாளைய வாழ்வே பெருவலியாய்.....

பெண்ணின் பெரும்பேற்றில் பிறந்த உலகே
கண்முன்னே
கருவைத் தாங்கும் தாயை
தெருவில் இறக்கிவிடும் பேரினவாதம்.......
தன்மண்ணில் தவளவிடும் கனவுடன்

கருவறையின் உதைப்பில்
பொறு மகவே என்கிறது தாய்மை
பிரசவ வலியல்ல.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 5, 2009

கலந்துரையாடல் அறிவிப்பு

கலந்துரையாடப்படும் புள்ளிகள்

1. இலங்கை இனமுரண்பாடு:

அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்தமிழ்மக்களின் எதிர்காலமும் 2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின் நிலை
3. பங்குபற்றுவோர் கருத்துகளும் விவாதங்களும்
காலம் : 11.10.09 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணிக்கு
(குறித்த நேரம் ஆரம்பிக்கப்படும். நேரத்துடன் வந்து உதவுங்கள்)

இடம் :
:
Gemeindschaftszentrum, Rebenweg 6, 8041 Zürich

-----------------------
......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இருள் மனிதர்கள்

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.
அக்னி நட்சத்திரம் முன்னேழு பின்னேழு முடிந்து ஒரு ஏழுநாள் ஆனபின்னாலும் வெயிலின் உக்கிரம் தீயாய் உடம்பில் விழுந்து எரிந்தது. அறுபதைத் தாண்டிய வயதாகிப் போன பங்கஜத்தம்மாளுக்கு ஈழை நோய் கண்டிருந்தது. முந்திச் சேலையால் தலையை......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 2, 2009

மானுடராய் வாழ்தலிற்காய் இணைக

நந்திக்கரைவரை நம்மினத்தை
கூடவே குழிபறித்த கூட்டெல்லாம்
வெட்டிவிடு முள்வேலியை என்கிறது
மெல்லத்தடவி மகிந்தவை
வெல்லலாம் என ஏய்க்கிறது
செல்லக்கண்டிப்பாய்---ஜ.நா பலமுறை சென்று திரும்புகிறது
வல்லவனாய் எழாதிருத்தி
மனஉளைச்சல் கொடுக்கிறது
நல்கூட்டு உலக வல்லவர்கள்
சொல்லெல்லாம் மாயை
கல்லில் நார் உரிப்போமென்கிறது

Monday, September 28, 2009

அடக்குமுறை – வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பள்ளி மாணவர்கள்

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் ஆபிரஹாம் தனது மகள்கள் மற்றும் மருமகன்களையே ஆசிரியர்களாக நியமித்துக்கொண்டு, வரைமுறையற்ற முறைகேடுகளையும் வன்கொடுமைகளையும் இழைத்து வந்திருக்கிறார்.

இக்கும்பலின் கொடுமைகளை காணச்சகிக்காது, மாவட்டகல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்த குற்றத்திற்காக லாமெக் என்ற ஆசிரியரை, பள்ளிமாணவர்களின் முன்னிலையிலேயே கொலைமிரட்டல் விடுத்துக் கன்னத்தில் அறைந்திருக்கிறார், ஜேம்ஸின் மகளான ஸ்டெல்லா மேரி. தமக்காக வாதாடிய ஆசிரியர் தம் கண் எதிரிலே அவமானப்படுத்தப்படுவதைக் கண்டுகொதித்த மாணவர்கள் உடனே, சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். மனுகொடுத்தும் மறியல் நடத்தியும் கூட நடவடிக்கை எதுவுமில்லை!

இந்நிலையில், இ...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, September 27, 2009

நீதியின் வறட்சியும் பாயும் நிதியும்


இது ஒன்றும் சொடுக்குப் போடும் கணத்தில் நடந்துவிடவில்லைதான். 2004தேர்தல் முடிந்தபோது துவரம் பருப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 34 தான். அதுவே, 2009 தேர்தலுக்கு முன் ரூபாய் 54. தேர்தலுக்குப் பின் அது, ரூபாய் 62 ஆகி, இப்போதோ ரூபாய் 90ஐயும் தாண்டி, மூன்றிலக்கத்தைத் தொட்டுவிடத் துடிக்கிறது.

மாண்டேக் சிங் அலுவாலியாவின் "கஷ்ட காலத்தைக்கடந்து கரையேறிவிட்டோம்'' என்ற சொல்லாடலும் ஜூலைமாதக் கூத்தில் கலந்திருந்தது (இவ்வாறு அவர் சொல்லிவைப்பது முதல்முறையல்ல; ஜூனிலும் இப்படித்தான்சொன்னார். ஏன், அதற்கு முன்பும் சொல்லியிருக்கலாம்). இதையெல்லாம் சொன்னவர், நமக்குக் கஷ்டகாலம் எப்போதிலிருந்து தொடங்கியது என்பதை உரைத்திடாததால், கரையேறித் தப்பித்ததை அறிந்து பாராட்ட நம்மால் இயலவில்லை.

"உள்ளபடியே,...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, September 26, 2009

வறட்சியின் பிடியில் விவசாயிகள்! கொண்டாட்டத்தில் முதலாளிகள்!!


அக்கிராமத்தைச் சேர்ந்த ராதா என்ற கர்ப்பிணிப் பெண் தினமும் அந்த மரத்தின் அருகே சென்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். அந்த மரத்தில்தான் 25 வயதான இளைஞரும் ராதாவின் கணவருமான கோவர்த்தன நேனாவத், கடந்தஆகஸ்ட் 6ஆம் நாளன்று தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

லம்பாடி பழங்குடியினத்தைச் சேர்ந்த கோவர்த்தன், கந்துவட்டிக்குக் கடன் வாங்கி மழையை நம்பி பயிர் வைத்தார். ஆனால், இம்முறை தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போய் வறட்சி தாக்கி, நீரின்றி நிலங்கள் வெடித்து, பயிர்கள் கருகிப் போயின. ஏற்கெனவே அவரது
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 25, 2009

பஞ்சாப்: பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்டோரின் கலகம்!


சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் நடத்திவரும் இப்போராட்டங்களைக் கண்டு, சீக்கிய ஜாட் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களும், அவர்களை நத்திப் பிழைக்கும் அகாலிதள், காங்கிரசு, பா.ஜ.க. ஓட்டுப் பொறுக்கிக் கும்பலும் கொஞ்சம் அரண்டுதான் போயுள்ளன.

பஞ்சாப் மாநில அரசும், நிலப்பிரபுக்களும் தாழ்த்தப்பட்டகூலி விவசாயிகளின் இக்கோரிக்கையை, தீவிரவாதமாகச் சித்தரிக்க முயன்று...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, September 24, 2009

இப்படியோர் இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச்சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபாய். எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபாய் கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

"பருவ மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்'' எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்த போதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச்சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின்...
.முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, September 23, 2009

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் "பொற்கால' ஆட்சியின் சாதனையாக ""உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ""நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை'' என்றும் ""சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது'' என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் ..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 22, 2009

கோஷ்டிச் சண்டை முற்றுகிறது! பா.ஜ.க. கனவு நொறுங்குகிறது!

ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும்,பொய்யான நம்பிக்கைகளை ஊட்டினாலும் தீவிரமாகிவிட்ட கோஷ்டிச் சண்டைகளால் அக்கட்சி பலவீனமடைவதைத் தடுக்கவே முடியாது என்கிற நிலைமை நெருங்கிவிட்டது.

பா.ஜ.க.வின் தேர்தல் தோல்விக்குப் பழிபோடப்பட்டு உத்தர்கண்ட் முதல்வர் கந்தூரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அருண் ஜேட்லிக்கு நாடாளுமன்ற மேலவையின் பா.ஜ.க. தலைவர் பதவியும், சுஷ்மா சுவராஜுக்கு நாடாளுமன்ற பா.ஜ.க...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, September 21, 2009

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.

இக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற "சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், "மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்?'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுக.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, September 20, 2009

உங்கள் ஓட்டு அம்பானிகள் ஆட்சி

அம்பானி சகோதரர்களிடையே மீண்டும் சொத்துத்தகராறு வெடித்து, உலகமே பார்க்க நடந்து வருகிறது. ஆனால்,அந்தச் சொத்தோ அவர்களுக்குச் சொந்தமானது கிடையாது என்பதுதான் இந்த இரண்டாம் கட்டத் தகராறில் சுவராசியமான விசயம். அந்தச் சொத்து — கிருஷ்ணா — கோதாவரி நதிப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு — இந்தியமக்களுக்குச் சொந்தமானது.

ஊரான் சொத்தை எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்பதையொட்டி அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், தம்பி அனில் அம்பானிக்கும் இடையே நடந்துவரும் இந்தச் சண்டை, பேராசை பிடித்தவர்களின் கீழ்த்தரமான கிரிமினல் குற்றமாக இந்திய மக்களின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக, பாகப்பிரிவினை சட்டச் சிக்கலைப் போல இந்திய நீதிமன்றங்களால்கையாளப்படுகிறது. இந்தப் பொதுச் சொத்தைக் காக்கவேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய அரசோ, இந்தச்சொத்துத் தகராறில் அண்ணன் முகேஷ் அம்பானிக்கு எந்தவிதமான பாதகமும் நேர்ந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு காய்களை நகர்த்தி வருகிறது.

பிரதம மந்திரி அலுவலகம், நிதி அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகம், சட்ட அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் இயக்குநர் அலுவலகம் என...
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, September 19, 2009

நேபாளக்குண்டு வெடிப்பு : இந்துமதவெறி பயங்கரவாதிகளின் சதிகள்!


ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் வழிபாட்டுக்குத் திரண்டிருந்தனர். தலைமைப் பாதிரியார் பைபிளை மேற்கோள் காட்டிப் பிரசங்கம் செய்தபொழுது, திடீரென பேரொலியுடன் குண்டுகள் வெடித்தன.எங்கும் புகைமூட்டம்; தேவாலயத்தின் கண்ணாடி சன்னல்களும் மேசை நாற்காலிகளும் நொறுங்கிச் சிதறின; "யேசுவே! ஆண்டவரே!'' என எங்கும் மரண ஓலம். கடந்த மே 23ஆம் தேதியன்று நடந்த இக்குண்டு வெடிப்பில் தீபாபாட்ரிக், செலஸ்டி எனும் இரு இளம்பெண்கள் கொல்லப்பட்டு இரத்தவெள்ளத்தில் மிதந்து கிடந்தனர். பாதிரியார்கள் உள்ளிட்டு 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் குற்றுயிராகக் கிடத்தப்பட்டனர்.

தீபா பாட்ரிக்கும், செலஸ்டியும் இந்தியாவின் பாட்னாவைச் சேர்ந்த மாணவிகள். அவர்கள் நேபாளத்தின் லலித்பூரிலுள்ள தமது உறவினரைச் சந்திக்கச் சென்றிருந்தனர். அந்தச் சிறுநகரம் அமைதியாகவும் அழகாகவும் உள்ளதென்று தீபா....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 18, 2009

மக்களுக்கு சுதந்திரமான பேச்சுரிமையை மறுக்கும் வரை, போர்க் குற்றத்தை நிறுவமுடியாது


இன்று வன்னியில் என்ன நடந்தது என்பதை மக்கள் சுதந்திரமாக சொல்ல முடியாத வண்ணம் மக்களை அடைத்து வைத்துள்ளது பேரினவாத குற்றக் கும்பல். பேரினவாத பாசிச அரசு தாங்கள் செய்த யுத்தக் குற்றங்களை இல்லாததாக்க, மக்களை வதைத்து உளவியல் ரீதியாக சிதைக்க முனைகின்றது.

இதில் இருந்து தப்பி வெளிநாடு வந்தவர்களை சுதந்திரமாக பேசமுடியாத வண்ணம், புலத்து புலிகள் உண்மையின் ஒரு பகுதியை மூடிமறைத்து வைக்க நிர்ப்பந்திக்கின்றனர். இதன் மூலம் சாட்சிகளும், தகவல்களும் நம்பிக்கை இழந்து போகின்றது.
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 15, 2009

பாசிசமும் வரட்டுவாதமும் குறித்து…

பாசிசம் குறித்து மேற்கு நாடுகளுக்கும் எமது நாடுகளுக்கும் இடையில், அதன் வளர்ச்சி வடிவத்தில் குறிப்பான வேறுபாடுகள் உண்டு. ஆட்சிக்கு வரத் துடிக்கின்ற பாசிசம், எங்கும் தேசிய என்ற மையக் கோசத்தில் தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இந்தப் பாசிச தேசியம், பல்வேறு சமூகக் கூறுகள் சார்ந்து தன்னை நிலை நாட்டுகின்றது. மதம், தூய்மைக் கூறு, சாதி, இனம், நிறம், மரபு என வௌ;வெறு வழிகளில், பாசிச தேசியத்தை கட்டமைக்கின்றது.

இது குட்டிபூர்சுவா வர்க்கத்தின் நலன்களை பூர்த்தி செய்வதாக பாசங்கு செய்தபடி, தன்னை நேர்மையானவனாக தூய்மையானவனாக காட்டிய படி அரங்குக்கு வருகின்றது. ஆனால் இந்தப் பிரிவு ஆட்சிக்கு எறுகின்ற போது, அந்த ஆட்சி; குட்டிபூர்சுவா வர்க்க நலன்களை பிரதிபலிப்பதில்லை. இது அந்த நாட்டில் எந்த பொருளாதார சமூக கட்டமைப்பு காணப்படுகின்றதோ, அதற்கு இசைவான பொருளாதார ஆதிக்க பிரிவை பலப்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. உண்மையில் பாசிசம் உழைக்கும் மக்களை தொடர்ந்தும் சுரண்டும் வழியை நவீனப்படுத்தும், ஒரு வர்க்க சர்வாதிகாரமே. இருக்கும் சுரண்டும் வர்க்க நலன்களை தக்கவைக்கவும், அதை பாதுகாக்கவும், இருக்கின்ற சமூக அமைப்பால் முடியாத அளவுக்கு வர்க்கப் போராட்டம் நடக்கின்ற ஒரு நிலையில், பாசிசம் அதிகாரத்துக்கு வந்து சுரண்டு வர்க்கத்தைப் பாதுகாக்கின்றது. பாசிசம் எப்போதும் அதிகாரத்துக்கு மூலதனத்தின் துணையுடன் வருகின்றது.

அரச என்பது எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகரமே. ஜனநாயகம் என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமே. இது இருக்கின்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, September 14, 2009

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்

இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து.

எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி.

ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்த ஈழ ஆதரவாளர்களுக்கும் இந்த முடிவுகள் நிச்சயமாக பலத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மத்தியில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், சிங்கள அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை நிறுத்திவிட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது.

தமிழக மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொய்த்து விட்டது. ஈழத் தமிழர்க்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் ஒ......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகளைக் காட்டி தொடர்ந்து கட்டமைத்து வரும் சர்வாதிகார பாசிச ஆட்சியமைப்பு...

இன யுத்தத்தை பேரினவாதத்தின் வெற்றியாக்க, உலகமயமாக்கல் முரண்பாட்டுக்குள் இலங்கை தன்னை வலிந்து நுழைத்துக் கொண்டது. உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடைபெறும் முரண்பாடுகளும், மோதல்களும் இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. செல்வாக்கு மண்டலங்கள், இராணுவ மண்டலங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் உலகளாவிய போட்டியில், இலங்கை தன்னை வலிந்து உட்படுத்திக் கொண்டது.

Sunday, September 13, 2009

பேரினவாத பாசிசம் இலங்கையில் விதைக்கும் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடு, மக்களுக்கு இடையிலான முரண்பாடாகின்றது

இன யுத்தத்தை பேரினவாதத்தின் வெற்றியாக்க, உலகமயமாக்கல் முரண்பாட்டுக்குள் இலங்கை தன்னை வலிந்து நுழைத்துக் கொண்டது. உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடைபெறும் முரண்பாடுகளும், மோதல்களும் இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. செல்வாக்கு மண்டலங்கள், இராணுவ மண்டலங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் உலகளாவிய போட்டியில், இலங்கை தன்னை வலிந்து உட்படுத்திக் கொண்டது.

சீனா - இந்தியா – பாகிஸ்தான் என்ற பிராந்திய முரண்பாட்டுக்குள், மேற்கு – சீனா என்ற உலகளாவிய முரண்பாட்டுக்குள், இலங்கை தனது அனைத்துவிதமான பாசிசக் கட்டமைப்பையும் புகுத்தியுள்ளது. இதன் மூலம் தன் வரைமுறையற்ற பாசிச குடும்ப ஆட்சியை நிறுவியது. நாட்டு வளத்தை விற்றது. இனப்படுகொலையைச் செய்தது. இதை இன்றும் தொடருகின்றது. இதற்குள் ஏகாதிபத்திய முரண்பாடு கூர்மையடைந்து வருகின்றது.

பேரினவாத ...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

திட்டமெதுவுமின்றி புலிகள் அன்றாடம் தாம் செய்தவற்றை, நியாயப்படுத்தி தாமே கூறுவதே புலிகள் அரசியலாகியது. திட்டமாக வெளியிடப்பட்டவை எவையும், அவர்கள் தமது சொந்த இயக்க நடைமுறையாக கொண்டது கிடையாது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், அவர்களாக வெளியிட்ட சொந்த வேலைத்திட்டம் எதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது.

இந்த வகையில் கட்டுரையில் சில பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளேன். அன்ரன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் இந்த வகையில் அமைந்ததே. புலிகள் தாம் செய்ததை நியாயப்படுத்த, தம்மை மறுக்கின்ற முரணை உள்வாங்கியதே இந்த நூல். உண்மையில் புலிகளின் லும்பன் தனமான நடத்தைகளுக்கு, அரசியல் முலாம் ப+சுவதே புலியின் அரசியலாக உள்ளது. பாலசிங்கமே அதன் பிதாமகன். இந்த நூலின் முன்பகுதி மீதான, சுருக்கமான விமர்சனத்தை இக்கட்டுரை அவர்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலம் செய்கின்றது.

Saturday, September 12, 2009

புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்


ஆனால் தமிழீழ மக்களின் தேசிய பொருளாதாரம் பற்றி அவர்களால் பேசமுடிவதில்லை. பேரினவாத பொருளாதார தடையை, தாம் வெற்றிகரமாக வென்றுவிடுவோம் என்று, ஊரையே ஏமாற்றும் ஒரு பரப்புரையை சுடுகாட்டில் நடத்துகின்றனர்.

ரி.ரி.என் தொலைக்காட்சியில் 'நிலவரம்" என்ற நிகழ்ச்சியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் இதைச் செய்தனர். உப்புச்சப்பற்ற, நடைமுறைக்கு உதவாத, சுடுகாட்டில் எரிந்து சிதைந்து கிடக்கும் பிணங்களை நோக்கி ஒரு பரப்புரை நடத்தினர். புலித் தேசிய பொருளாதாரத்தை கட்டி, நாம் மக்களை மீட்டுவிடுவோம் என்கின்றனர். உலக பொருளாதாரம் பற்றி கரிகாலனும்,.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 11, 2009

புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் .. த ஜெயபாலன்


பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மத்தியில் தீவிர நிதி வசூழில் ஈடுபட்ட இன்னமும் ஈடுபட்டு வருகின்ற வெண்புறா வின் கணக்குப் புத்தகம் சில பலமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றது. பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வெண்புறாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகளில் பின்வரும் விடயங்களில் சந்தேகங்கள் எழுந்தள்ளது.

ஜெர்மனி நீதிமன்றத்தில் வெள்ளை நிறவெறியனால் கொல்லப்பட்ட முசுலீம் பெண்


16 கத்திக்குத்துகளை வாங்கி ஸ்தலத்திலேயே மரணமடைந்த மார்வா என்ற எகிப்தியப் பெண்ணும், கொலையாளியான அலெக்ஸ் என்ற ஜெர்மன் நபரும் அயலவர்கள். வெளி நாட்டவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அலெக்ஸ், பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டி ருந்த 4 மாத கர்ப்பிணியான முக்காடு போட்டிருந்த மார்வாவைப் பார்த்து "பயங்கரவாதி' என தூற்றியுள்ளார்.

மார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார். நீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்தக் கொடூ.....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, September 10, 2009

தமிழ் மக்களை கொன்று, அதை மூடிமறைப்பது தமிழ் தேசியமா? பாசிசமா?

தமிழனைக் கொன்றாலும், ஒடுக்கினாலும் அதுவே தமிழ் தேசியமென்கின்றனர் பாசிட்டுகள். அவை எதுவும் நடவாதது போல், தம்மை மூடிமறைத்துத் கொண்டு சில பாசிட்டுகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கமைய சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய, தன் முனைப்புடன் கூடிய புலிப் பாசிச அரசியலை பாதுகாக்க தம்மை மூடிமறைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இதை செய்வது தமிழ் மக்கள் என்கின்றனர். இதுவே தமிழ் மக்களின் அப்பாவித்தனமான நிலை என்கின்றனர். இதுவோ மூடிமறைக்கப்பட்ட பாசிட்டுகளின் தந்திரமல்ல என்கின்றனர். இவர்களை மறுப்பது மார்க்சியமல்ல என்கின்றனர். இதை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றுவது, மார்க்சியத்துக்கே எதிரானது என்கின்றனர். இந்த நிலைக்கு ஏற்ப, நான் (நாங்கள்) உங்களின் வர்க்கப் போராட்டத்துக்கும், அதன் அரசியல் வழிக்கும் தடையாக இருந்தால், அதற்கு வழிவிடத் தயாராகவிருக்கின்றோம். ஈழத்து வர்க்கப் போராட்டத்துக்கு தடையாக, நாங்கள் என்றும் அரசியல் ரீதியாக இருக்கவிரும்பவில்லை. அதை செய்யுங்கள் என்றுதான் கூறுகின்றோம். நாங்கள் ஒதுங்குகின்றோம்.

இதை நீங்கள் செய்யும் வரை, நாம் எம் நிலையில் நின்று நாம் போராடுவோம். மூடிமறைக்கப்பட்ட பாசிசத்தை பாதுகாக்க தத்து......
... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சங்கரமடத்தை சட்டத்தால் தண்டிக்க முடியுமா?


புதிராகவும் இருந்தது. இரு மையங்களுக்கும் இடையிலான கட்டைப் பஞ்சாயத்து, பொருளாதார முரண்பாடுகள் மற்றும் பாசிச ஜெயாவின் தனிப்பட்ட குணாதிசயங்கள் காரணமாக இந்த "வரலாற்றுப் புகழ்' வாய்ந்த கைது அன்று நிகழ்ந்தது.

எல்லா ஊடகங்களும் பெரியவாள், பால பெரியவாளின் லீலைகளை விலாவாரியாக எழுதியதும், சங்கரராமனைக் கொன்றதை ஜெயேந்திரன் பெருமையாக ஒத்துக்கொண் டதும் நக்கீரன் இதழில் வெளியான போது, சங்கர மடத்தின் அதிகாரம் சரிந்து விடும் போலத் தெரிந்தது. ஆனால் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், இந்து மதவெறி அமைப்புகள் ஆகியவற்றின் தரகு, கட்டைப் பஞ்சாயத்து மையமாகத் திகழும் சங்கரமடம் தனது அதிகாரத்தைச் சற்றே இழந்திருந்தாலும், அது தற்காலிகமானதே என்பதை இவ்வழக்கின் தற்போதைய நிலைமைகள் எடுத்துக் கூறுகின்றன.

சங்கரராமனைக்....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, September 9, 2009

சிறுகதை : மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!


படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாகச் சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்க மாட்டார் என்றாலும் அப்படித்தான் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட் ராமன் துயிலெழும் முகூர்த்தமும் சொல்லிவைத்தது போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.

பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வார நாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்து விடுபவர், விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்கு மூட்டையைக் கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியைப் பக்கத்து வீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு முடித்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் .. எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன்.

ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பது போல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன் சிந்தனையில் அவர் அறி....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 8, 2009

மே 17ம் திகதி முடிவை 20 வருடங்களுக்கு முன் சொன்னவர்கள் யார்?


அவர்கள் மே 17 நிகழ்வு தவிர்க்க முடியாது என்று சொன்னவர்கள். அதை மாற்றியமைக்க முனைநத்தால் கொல்லப்பட்டனர். புலியெதிர்ப்பு அரசியல் புரட்டுப் போல், புலிகள் மட்டும் அவர்களைக் கொல்லவில்லை. அனைத்து பெரிய இயக்கமும், அவர்களை தேடி படுகொலை செய்தனர். ஏன் புலிகள் அல்லாத மற்றவர்களும் கொன்றனர். அவர்களோ புலிகளல்ல, அப்படியிருக்க ஏன் கொன்றனர்? ஏன் இவர்களை கொன்றனர் என்பதை திரும்பிப் பார்ப்பதன் மூலம் தான், அடுத்தடுத்த எம் தோல்விகளையாவது தவிர்க்கமுடியும். உங்கள் அறிவுக்கு அவர்கள் கற்பித்தது போல், இவர்கள் இந்திய இலங்கை கைக்கூலிக் குழுக்களல்ல. மாறாக மக்களை அதிகளவில் நேசித்ததால், கொல்லப்பட்டனர். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை என்னவோ அதுதான். அதை சுயமாக நீ தெரிந்து கொள்ள முனைவதில் என்ன தவறு?

1980 களில் தொடங்கிய....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

போராளி என்பவன் யார்? – நன்றி விடுதலைப் புலிகள்

புலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் 7 இதழில் கூறினார்கள். எதைச் செய்தால் அது போராட்டமல்ல என்று அன்று சொன்னார்களோ, அதை தாமே கடைப்பிடிக்காமல் மரணித்துப் போனார்கள்.

அன்று மற்றவனை கொல்லவும், ஒடுக்கவும் இதைச் சொன்னார்கள். அதை அன்றிலிருந்து தாங்களே இன்றுவரை செய்து இறுதியில் தற்கொலை செய்து மரணித்துப் போனார்கள்.

- தமிழரங்கம் -

மூலம் விடுதலைப்புலிகள் இதழ் - 7 பக்கம் - 2

உண்மையில் ஒரு விடுதலைப் போராளி என்பவன் யார்?.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, September 7, 2009

தமிழனென்று சொல்லடா! வர்க்க உணாவு கொள்ளடா!!


சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.

புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.

இவர்கள் மீதெல்....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்