தமிழ் அரங்கம்
Friday, October 10, 2008
Thursday, October 9, 2008
Wednesday, October 8, 2008
Tuesday, October 7, 2008
Monday, October 6, 2008
Sunday, October 5, 2008
தமிழில் இப்படி ஒரு இணையம் கிடையாது
4000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.
இந்த வகையில்
1.அறிவுக் களஞ்சியம் 40 உபதலைப்பைக் கொண்டது. அண்ணளவாக 700 கட்டுரைகள் உள்ளது.
2.அரசியல் - சமூகம் பி.இரயாகரன் அண்ணளவாக 655 கட்டுரைகள் உள்ளது.
3.புதிய ஜனநாயகம் அண்ணளவாக 630 கட்டுரைகள் உள்ளது.
4.புதிய கலாச்சாரம் அண்ணளவாக 270 கட்டுரைகள் உள்ளது.
5.அரசியல் - சமூகம் 30 மேற்பட்ட எழுத்தாளர்களுடைய கட்டுரைகள். அண்ணளவாக 400 கட்டுரைகள் உள்ளது.
6.நூல்கள் அண்ணளவாக 22 நூல்கள் உள்ளது.
7.ஒலி – ஒளி அண்ணளவாக 9 உப தலையங்கத்தின் கீழ் 440 தலைப்புகளில் 300 மணித்தியாளங்கள் கொண்டவை. இவை பல்துறை சார்ந்தவை.
8.சமூகவியலாளர்கள் 11 பேருடைய 480 கட்டுரைகள் உள்ளது.
9.ஆவணக் களஞ்சியம் 12 உப தலைப்பில் 300 ஆவணங்கள் உள்ளது.
10.இணைப்புக்கள் 55 இணைப்புகள் உள்ளது.
மேலும் தொழில் நுட்ப ரீதியாக இதைச் செலுமைப்படுத்த முனைகின்றோம். இதற்கும் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்க்கப்படுகின்றது.
Saturday, October 4, 2008
உலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி!
கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மாக் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியதும் அமெரிக்க அரசு, அவற்றை அரசுடைமையாக்கி நிதிச் சந்தையை தூக்கி நிறுத்த 20,000 கோடி டாலரைக் கொட்டியது. அதைத் தொடர்ந்து, உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. அதற்கடுத்து, மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குருப் நிறுவனம் திவாலாகி, அமெரிக்க அரசு 8500 கோடி டாலரை இழப்பீடாகக் கொடுத்து அரசுடைமையாக்கியது. தற்போது............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Friday, October 3, 2008
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு :
2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை
5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்
7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி
9.மூக்கில் நாறிய சுயராச்சியம்!
12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்
13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை
14.மக்கள் முதுகில் குத்திய காந்தி
15."சுதந்திரம்' ஒரு கபட நாடகமே!
18.இந்து சநாதனி
21."வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்
ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும்
Thursday, October 2, 2008
Wednesday, October 1, 2008
யாழ் மக்கள் சுபீட்சமோ, பேரினவாத 'ஜனநாயக"த்தில் கிடைக்கின்றதாம்!
ஜனநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை முறை எதுவும் கிடையாது. நாம் இதில் இருந்து வேறுபட்டுப் பார்க்கின்றோம்.
பேரினவாத 'ஜனநாயக"த்தில் மக்களுக்கு 'ஜனநாயகம்" கிடைக்கின்றதா? ஆம் என்று சொல்லுகின்ற, அதை ஆதரிக்கின்ற, கண்டும் காணாமல் விடுகின்ற வகையில் புலியல்லாத 'ஜனநாயக" தளங்கள் இயங்குகின்றது. இதற்குள் தான், இப்படித்தான் புலியல்லாத தளங்கள் அரசியல் பேசுகின்றது. ஜயா 'ஜனநாயக" வாதிகளே, இது எப்படி? என்று கேட்டால், நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். நீ ஒருவன் தானே என்று நக்கலும் நையாண்டியும் அடித்து குலைக்கிறார்கள், கடிக்கின்றார்கள் கடித்துவிட்டு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Tuesday, September 30, 2008
Monday, September 29, 2008
Sunday, September 28, 2008
'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது
தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது. இந்த புலியெதிர்ப்பு அரசியல், மக்களை தமது நடைமுறை அரசியல் போராட்டங்களில் இருந்து எட்டியுதைக்கின்றது. மாறாக மக்களை தமது சொந்த எடுபிடி அரசியலுக்கு பயன்படுத்த கூவியழைக்கின்றது. மக்களை புலிகள் எப்படி தமது சொந்த குறுகிய நலனுக்கு பயன்படுத்த முனைகின்றனரோ, அப்படியே புலியெதிர்ப்பு கும்பலும் செய்ய முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பல் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஏற்ற மறுகாலனிய சூழலையுருவாக்க, மக்களை தமது அரசியல் எடுபிடிகளாகவே வரக்கோருகின்றனர்.
எங்கள் எல்லோருக்குமுள்ள அடிப்படையான சந்தேகமே, அனைத்துக்குமானதாக உள்ளது. இந்த "புதியதொரு ஜனநாயக" தலைமை ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமா? பேரினவாதத்தை எதிர்க்குமா? சுரண்டலை எதிர்க்குமா? சாதியம், ஆணாதிக்கம் போன்ற சமூக அநீதிகளையும், சமூக முரண்பாடுகளை ஒழிக்குமா?...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Saturday, September 27, 2008
Friday, September 26, 2008
மாற்றுப் பயிர்த் திட்டம் : விவசாயிகள் விட்டில் பூச்சிகளா?
கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு ஒரு மாற்றுப் பாதையை காட்டுவதாகப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள், பாரம்பரிய உணவு மற்றும் தானிய உற்பத்தியில் உள்ள நிலங்களில் இம்மண்ணுக்கே அறிமுகம் இல்லாத புதிய பயிர்களையும் மற்றும் ஏற்றுமதிக்கான பயிர்களையும் விவசாயம் செய்ய வழிகாட்டுதல் கொடுக்கின்றன.
இதை விவசாய விஞ்ஞானிகள் பன்முகப் பயிர் (Crop diversification) விவசாயம் என்கிறார்கள். பன்முக விவசாயத்தை மேற்கொள்வதே விவசாயிகளை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள். இதனடிப்படையில் மைய விவசாய அமைச்சர் சரத்பவார், "கோதுமை, அரிசி உற்பத்தியைக் குறையுங்கள்; மாற்றுப் பயிர்களைப் பயிரிடுங்கள்'' என விவசாயிகளைப் பார்த்து அறிவுரை கூறி வருகிறார்.
இந்த மாற்றுப் பயிர் விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டியது பா.ஜ.க. கூட்டணி அரசு. மாற்றுப்பயிர் விவசாயத்தை ஜூலை 8, 2004 அன்று தேசியத் தோட்டகலைத் திட்டத்தின் ஊடாக (National horiculture Mission-NHM) அமல்படுத்தியது. இத்திட்டத்தின் அடிப்படையில் பழங்கள், காய்கள், வாசனைப் பொருட்கள், மருத்துவச் செடிகள், மலர்கள், தென்னை, பாக்கு, முந்திரி, கோக்கோ, ஹெர்கின், நெல்லி, காட்டாமணக்கு, சர்க்கரைச் சோளம், மற்றும் பல்வேறு புதிய வகைப் பயிர்கள் பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்தகைய பயிர்களை வல்லுனர்கள் "தோட்டப்பயிர்'' என்று வரையறுத்துள்ளனர். மேலும் இந்தப் புதிய............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்