தமிழ் அரங்கம்

Saturday, November 28, 2009

ஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துகின்றது!?

இன்னும் இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?

இன்னும் இரண்டு வருடத்தின் பின்னான தேர்தலை, இந்த அரசு வெல்ல முடியாது. மக்களுக்கு எதிரான பாரிய அடக்குமுறையின்றி ஆள முடியாது. இந்த உண்மையால், தாங்கள் அதிகாரத்தை தக்கவைத்து தொடர்ந்தும் மக்களை அடக்கியாள தேர்தலை முன் கூட்டி நடத்துகின்றனர். இந்த அவசர தேர்தல், எதிர்காலத்தில் சமூக கொந்தளிப்பும், சமூக நெருக்கடியும் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பாரிய சமூக ஓடுக்குமுறையை ஏவி ஆளமுடியும் என்ற எதார்த்தம், எதிர்காலம் இலங்கையில் அமைதியற்ற கொந்தளிப்பான காலமாக இருக்கும் என்பதன் அடிப்படையல் ஆளும் வாக்கம் தன்னை தயார் செய்கின்றது.

இலங்கை மக்கள் என்றுமில்லாத வகையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் காலம், இனிவரும் ஆண்டுகள்தான். இலங்கைக்குள் ஏகாதிபத்திய ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, November 27, 2009

ஆயிரம் ஆயிரமாக தியாகம் செய்த தியாகிகளும், துரோகி பிரபாகரனும் (சரணடைந்த பின் கொல்லப்பட்டவர்கள் படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது.)

இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் அதன் தலைவர்களும் தாம் உயிர் தப்பிப் பிழைக்க மக்களை பணயம் வைத்தனர். அதற்கு உடன்பட மறுத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். இப்படிப்பட்ட கொலைகாரர்கள், இறுதியாக தாம் தப்பிப் பிழைக்க கோழைகளாக சரணடைந்தனர். மக்களுக்கு எதிராகவும், தம் அமைப்புக் கோட்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.

இப்படி எல்லாவிதத்திலும் துரோகத்தை செய்தவர்கள் தான், பிரபாகரன் தலைமையிலான புலித்தலைமை. ஆயிரம் ஆயிரம் இளைஞர்களும், யுவதிகளும் இந்த துரோகத்துக்காக, தங்கள் உயிரை தியாகம் செய்யவில்லை. ஆனால் இந்த மாபியாத் தலைமையோ தங்கள் சுயநலத்துடன், தியாகங்களையே காட்டிக் கொடுத்து. தன் சுயநலம் சார்ந்த முட்டாள் தனம் மூலம், தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச்சென்றது.

இப்படி சரணடைந்து மரணமான துரோகி பிரபாகரனை எப்படிக் காட்டி பிழைப்பது என்பதுவே புலத்து புலிக்குள்ளான முரண்பாடு. மாவீரராக்கி பிழைக்க முடியுமா அல்லது உயிருடன் இருப்பதாக சொல்லி நக்க முடியுமா என்பதே, புலத்து மாபியாக்களின் திரிசங்கு நிலை. இதற்குள் பினாமி சொத்தைப் பங்கு போட்டு அனுபவிக்கும் முரண்பாடுகள். இப்படி துரோகி பிரபாகரனை....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 26, 2009

போராளிகளிற்கு தலை சாய்ப்போம் துரோகிகளை இனம் காண்போம்

புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை உயிரோடு உள்ளது என்பது போன்ற மாஜயை ஏற்கனவே பரப்பியுள்ளனர் மேலும் கணிசமான அளவு தமிழ் மக்கள் தலைமை உயிரோடு உள்ளதாகவே இன்னமும் வீணான கற்பனையில் உள்ளனர் மக்கள் விழித்துக் கொள்ளும் முன் இன்றய நிலையை தமக்கு சாதகமாக்கி பணம் கறப்பதற்கு தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகளின் கூட்டுடன் புறப்படடுள்ளனர்

இந்த தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகள் எப்படி எமது 40 ஆண்டு கால போரட்டத்தினை தமது நலன்களிற்கு பயன்படுத்தினார்கள் என நீண்ட பட்டியலே வெளியிடலாம் இறுதியாக எமது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஓலமிட்ட போது இந்த கழிசடை அரசியல்வாதிகள் தமது பாரளுமன்ற நாற்காலிக்காக எந்த இந்திய மத்திய அரசின் முழு ஆதரவுடன் எம் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்டதோ அவர்களுடன் கைகோர்த்து கொஞ்சி குலாவியதுடன் எமது பிரச்சினை குறித்து வாய் ழூடி இருப்பதற்காக பெட்டி பெட்டியாக பணமும் கைமாறிக் கொண்டவர்கள்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 25, 2009

புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!

வன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.

பொதுநிதியத்தை இங்கு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாத வண்ணம், மண்ணில் வாழும் மக்களுக்கான ஒரு பொதுநிதியமாக மாற்றக் கோருவது தான், உண்மையான மக்கள் நலனாகும். அனைத்து புலிப்பினாமிச் சொத்தையும் அப்படி மாற்றக் கோருங்கள். அப்போது தெரியும் உங்கள் இந்த பினாமிகளின் நேர்மையும், தமிழ்மக்கள் பற்றிய அவர்களின் உண்மையான அக்கறையும்.

இன்று இதை புலத்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை.

ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.

மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன்,.... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிரபாகரனை பலிகொடுத்த அரசியல் எது?


இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கும் தம்மைச் சுற்றிய தன் இனத்துக்கும் நடக்கும் இனவொடுக்குமுறையை, சுயமாக எதிர் கொள்ளும் அனைத்து சுய சமூக ஆளுமையையும் இழந்து நிற்கின்றனர். கடந்த காலத்தில் அவர்களைச் சுற்றி பல்வேறு நிகழ்வுகள், அவர்களின் சுயாதீனமான கூறுகளை அழித்து இருந்தது.

இதனால் சமூகமோ வாழா வெட்டி நிலைக்குள், இன்று சிதைந்து கொண்டிருக்கின்றது. இதை நாம் எம் சொந்த தவறுகள் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தான், எதிர்காலத்திலாவது நாம் சரியாக எதிர்வினையாற்ற முடியும்.

இனவொடுக்குமுறையோ இன்று என்றுமில்லாத வடிவில், தட்டிக்கேட்பாரின்றி மக்கள் மேல் ஒரு ஒடுக்குமுறையாகவே ஏவப்படுகின்றது. ஆள் நடமாட முடியாத சூனியப் பிரதேசத்தில், ஆளையே போட்டுத் தள்ளும் சூழலில்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 24, 2009

மக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு, அஞ்சலி செலுத்த முனையும் மாபியாக்கள்!

புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.

இப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல இந்த பினாமி சொத்து எப்படி ஒரு காரணமாக இருந்ததுவோ அது போல், அதை தமக்குள் பங்கிட பிரபாகரனின் மரணத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கமைய மாபியா கேபி பிரபாகரனுக்கு பிரமாண்டமான அஞ்சலியை நடத்திவிட முனைகின்றார்.

மறுபக்கத்தில் இந்த
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

என்ன செய்வது? இது இன்று பலரும் எழுப்பும் கேள்வி கூட

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

தமிழ்மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். எம் மண்ணில் சுயாதீனமான எந்த செயல்தளமும் மக்களுக்காக கிடையாது. பெரும்பாலாவைகளை புலிகள் அழித்தனர். எஞ்சியதை அரசு அழித்துள்ளது. மக்களின் ஓப்பாரிக்கு வெளியில், அவர்களுக்கு வாழ்வில்லை. இது எதார்த்தம்.

இன்று அண்டை அயலவரின் சுகதுக்கத்தைக் கூட விசாரித்தால், அச்சமூட்டும் வண்ணம் கண்காணிப்பும், தண்டிக்கப்படும் அவலநிலையும். இன்று தமிழப்; பாசிசத்தின் இடத்தில், அரச பாசிசம் குடிகொண்டுள்ளது. இன்று கூலிக்குழுக்களுக்கு வெளியில், தமிழ் அரசியலுக்கு இடமில்லை. அங்கு எந்த சுதந்திரமுமில்லை.

புலம்பெயர்ந்த சமூகத்தி............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......

பற்ரிய துவக்கெலாம் வாரங்கள் மாதங்கள்
பகைகண்டு தரம்பிரிக்க வெட்டியமுடிகளாய்
விழவிழ மிதித்தேறி
விண்ணிலிருந்து வருவர் காக்கவென
எண்ணவைத்த புலத்தோனே--இன்னமுமா
ஆண்டொருக்காய் உரைகேட்கும் ஆவலொடு......


ஆயிரமாயிரமாய் இழந்தோம்

ஆத்தனையும் மாத்தளனில்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, November 23, 2009

புலிகளின் தோல்விக்கான காரணமும், அரசியல் எதார்த்தமும்

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

அரசு தாம் வென்றதுக்கு இந்தியா சீனா, பாக்கிஸ்தான்.. உதவிகள் தான் காரணம் எண்கின்றது. தமது உறுதியான தலைமை தான் காரணம் என்கின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் பேரினவாத மேலாதிக்கத்தை வாழ்த்தி, கொலைகாரர்(கலாநிதி) பட்டத்தைக் கூட வழங்க முன்வந்;துள்ளது. இப்படி வெற்றி தோல்வி பற்றிய காரணங்கள், நியாயப்படுத்தல்கள், அங்கீகாரங்கள், விளக்கங்கள்.

இந்தத் தோல்வி பற்றி, தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் சொல்லும் விதம், எந்த சுயவிமர்சனமுமற்றது. இதன் மூலம் சமூகத்தை மந்தைகளாகவே தொடர்ந்தும் வைத்திருக்க முனைகின்றனர்.

இதற்காக இவர்கள்
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சுருட்டுவதே சுகம்.

இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் போல இம்முறை மாவீரர் நாளும் பெரும் எதிர்பார்ப்புகளோடு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வளமை போல மாவீரர் உறவுகள் கௌரவிப்பு முதல் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

னாலும் இம்முறை மாவீரர் நாள் கொண்டாடுவதற்காக யேர்மனியில் மக்களைத் தேடிப்புறப்பட்டுள்ளனர் வசூல்ராஜாக்கள். மாவீரரை நினைவுகூர மக்களிடம் பணம் வசூலிபபில் மும்முரமாக யேர்மனியில் பல பாகங்களிலும் ரிக்கெற்றுடன் புறப்பட்டுள்ளனர் .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, November 22, 2009

"இனியொரு" இணையம் தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை திரித்து, கலையரசன் மேல் நடத்தும் இழிவரசியல்


இந்தக் கும்பல் தம்மை தூய்மையானவராக காட்ட, கலையரசன் மேலான ஒரு தாக்குதலை நடத்தியது. கடந்த காலத்தில் புலியல்லாத மாற்றுத்தரப்பின் பெயரில் நடத்திய இலக்கியச் சந்திப்புகள் முதல் புலம்பெயர் அரசியல் கூத்துகள் மக்கள் அரசியலை துறந்து நின்றதுடன், அதை கேவலப்படுத்தியது. குறிப்பாக மார்க்சியத்தை மறுத்தனர், திரித்தனர். இதன் மூலம் அனைத்து எதிர்ப்புரட்சிக் கூத்தையும் நடத்தினர். முன்னாள் இயக்க கொலைகாரர்கள், வலதுசாரிகள், தன்னார்வ கைக்கூலிகள், அரச எடுபிடிகள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்தே, புலியல்லாத ஒரு மாற்றை முன்னிறுத்தினர். இதைத்தான் புலிக்கு மாற்று என்றனர். மக்கள் விடுதலைக்கான அரசியல் பாதை என்றனர்.

இப்படி கூடிக் கும்மி அடித்து எதிர்ப்புரட்சி அரசியல் எல்லைக்குள் இயங்குவது தான் சரியானது என்று, முன்னின்று வழிகாட்டியவர்களில் இனியொரு ஆசிரியரான அசோக் முதன்மையானவர். மார்க்சியத்தை மறுத்து, மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைத்த புலியல்லாத கும்பலுடன் கூடி, மக்கள் அரசியலை நிராகரித்தவர் தான் இந்த இனியொரு அசோக். இப்படி
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர்.

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டும்தான், இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கள் எழ முனைகின்றது. அவையும் மக்களுக்காக அல்ல, புலத்து புலி தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைக்கும் அதே துரோக அரசியலுக்காக. தமது கடந்தகால தவறுகளை திரும்பிப் பார்க்காத, அதே மக்கள்விரோத அரசியல். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டு நடத்திய அதே பாசிச அரசியல்.

இன்று பேரினவாதத்தின் திறந்தவெளிச் சிறைகளில் சிக்கியுள்ள மக்களை, இந்த அவலமான நிலைக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளே. புலிகள் இந்த மக்களை வதைத்து, அவர்களை படுகேவலமாக கொல்ல உதவியும், கொன்றும், இறுதியாக இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் புலிகள்தான். இதைப்பற்றி எந்த சுயவிமர்சனமுமற்ற நிலையில், மீளவும்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, November 21, 2009

ம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர் காணலை இங்கே நீங்கள் ஒலிவடிவில் கேட்கலாம்.

ம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர் காணலை இங்கே நீங்கள் ஒலிவடிவில் கேட்கலாம்.


பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது


புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது.

இதற்குள் சிங்களப்.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, November 20, 2009

புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும்

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

புலித் தலைமை சரணடைந்ததும், அவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை. புலித்தலைமை தன்னை பாதுகாத்துக்கொள்ள, இறுதியாக அது தேர்ந்தெடுத்தது சரணடைவை. அதற்கு அமையவே, இதில் மூன்றாம் தரப்பும் சம்பந்தப்பட்டது உண்மை. இந்தப் பின்னணியில் தான், இந்தப் படுகொலை அரங்கேறியது.

இவை அனைத்தும் நடந்திருந்தும், ஏன், எதற்காக இதை மக்களுக்கு தெரியாத வண்ணம் அனைவரும் திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர்? அங்கு என்ன நடந்தது? அவை எப்படி நடந்தது? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? ஏன் இதை மக்களுக்கு மூடி மறைக்கின்றனர்?

மக்களை மந்தையாக.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 19, 2009

எப்போதும் மக்களின் எதிரியாகவே கூத்தாடிய கூட்டமைப்பு

வலதுசாரி தமிழ் அரசியல் என்பது, யார் அதிகாரத்தில் உள்ளனரோ, அவர்களின் பாதம் தொழுது மக்களின் முதுகில் குத்துவதுதான். அன்று புலிப் பாசிசத்தினை தவழ்ந்து நக்கியவர்கள், இன்று மகிந்தாவுக்கு ஆரத்தி எடுத்து நக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த வலதுசாரிய பிழைப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு. தமிழ் காங்கிரஸ்சில் இருந்த சிலர், தமிழரசுக் கட்சியாகினர். மீண்டும் தமிழ் காங்கிரஸ்; உள்ளடங்க, கூட்டணியாகினர். புலியின் பின் தொழுது எழுவதற்காய் கூட்டமைப்பாக்கினர். இவர்கள் தங்கள் இந்த வரலாறு நெடுகிலும், மக்களுடன் மக்களுக்காக நின்றது கிடையாது. சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாக, வலதுசாரிய வக்கிரத்துடன் மக்களின் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள். இதற்கமையவே தமிழ் மக்களை குறுகிய இனவாதத்துடன் இன ரீதியாக பிளந்தனர். அதையே தமிழ் மக்களின் விடிவிற்கான அரசியலாகவும் காட்டினர்.

இப்படி பேரினவாதத்தின் துணையுடன், தமிழ் குறுந் தேசியத்தை விதைத்தனர். குறுகிய இனவாதத்தை தமிழ் தேசியம் என்றனர். இப்படி தங்கள் குறுகிய அரசியல் பிழைப்பு வாதத்தைத் தாண்டி, தமிழ் மக்களை இவர்கள் வழிகாட்டவில்லை. இதனால் இந்த மிதவாத பிழைப்புவாதம் நெருக்கடிக்குள்ளானது. இதன் பின் இருந்த இளைஞர்கள், தங்கள் தலைமைகளின் பிழைப்புவாதத்தையே கேள்விக்குள்ளாக்கினர்.

இவர்களின் மிதவாதத்.... ..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.

தமிழ் மக்கள் முன் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம், இயல்பாக எம்முன் ஒரு இனந்தெரியாத சூனியத்தை உருவாக்குகின்றது. எங்கும் இனந்தெரியாத சோகம், அவலமாகின்றது. நடந்ததை நம்பாமல் இருக்க முனைகின்றது. மக்கள் நடைப்பிணமாக, அஞ்சலி கூட செலுத்த முடியாது, அவர்கள் அரசியல் அனாதையாகி நிற்கின்றனர்.

இந்த நிலையில் படுகொலையுடன் கூடிய இந்தச் சதி என்பது உண்மையானது. யுத்த முனையில் இருக்காத மூன்றாம் தரப்புகளின் கூட்டுச்சதி தான், புலித் தலைவர்களின் மொத்த மரணம். இந்த மரணத்தின் பின், எதிர்பாராதா வண்ணம் வெளிவரும் காட்சிகள். எப்படி இது நடந்தது, என்ற அதிர்ச்சி. இதனால் இறந்தது 'எங்கள்" தலைவரல்ல என்று கூறுமளவுக்கு, நம்ப முடியாத அதிர்ச்சிகள்.

அப்படியாயின்......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 18, 2009

குண்டுகளால் பொட்டு வைத்ததால் பொட்டம்மானான கொலைகாரனின் பெயரில் மாவீரர் உரையாம்!?

தமிழ் மக்களை "தேசியத்தின்" பெயரில் மொட்டை அடித்த கும்பல், மக்களின் காதுக்கு பூ வைத்து தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவ முனைகின்றது. பேரினவாதம் தன்னிடம் சரணடைந்த பிரபாகரனைக் கொன்று, அவனுக்கு கோமணத்தைக் கட்டி அவமானப்படுத்திக் காட்டியது. புலத்துப் புலிகள் தமிழ் மக்களிடம் எஞ்சிய கோமணத்தையும், அவன் அறியாமலே எப்படியும் உருவலாம் என்று எண்ணுகின்றது.

புலத்து புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்க, பிரபாகரனை உயிருடன் இருப்பதாக காட்ட முனைந்தது. ஆனால் பிணத்துக்கு உயிரூட்ட முடியாத நிலையில், தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பவைக்க முடியவில்லை. கொஞ்சப் புலிகள் மட்டும், அப்படி நம்பி பிதற்றித் திரிகின்றனர். தலைவரை முன்னிறுத்தி, மக்களை ஏமாற்றி புலி வியாபாரத்தை இனியும் செய்;ய முடியாதநிலை. இதனால் காணாமல் போனவராக உள்ள பொட்டரைக் காட்டி, தமிழ் மக்களின் கோமணத்தை உருவ முடியும் என்று புலத்து புலிகள் கணக்கு போடுகின்றனர்.

கைது செய்தவர்களின் நெற்றி பொட்டில் சுட்டுக் கொல்வதால், "பொட்டர்" என்ற பெயர் பெற்று தலைவனானவன் தான் பொட்டன். இந்தக்...... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும், அமெரிக்காவின் நப்பாசையும்!

தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது; இலவச ஆரம்பக் கல்வி அளிப்பது; போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சில சில்லறை சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க முயன்றதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிரடி இராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்ட ""அதிசயத்தை'' நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஹோண்டு ராஸ் நாட்டில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த அதிரடி இராணுவப் புரட்சி அப்படிபட்ட அதிசய நிகழ்வாகும்.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா, ஈக்வடார், எல்சல்வடார் ஆகிய நாடுகளில் 1980களில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெ ற்று வந்தபொழுது, அத்தேசிய விடுதலைப் போராட்டங்களைச் சீர் குலைக்கவும், ஒடுக்கவும் ஹோண்டு ராஸ்தான் அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்பட்டு வந்தது. குறிப்பாக, நிகரகுவாவில் அமெரிக்கா வுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வந்த சாண்டினிஸ்டா போராளிகளை ஒழிப்பதற்கான மையமாக ஹோண்டுராஸை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. அன்று தொடங்கி இன்று வரை ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அதன் தளபதிகளுக்கும் அமெரிக்காதான் பயிற்சியும் நிதியுதவியும் அளித்து வருகிறது. ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அந்நாட்டைச் சேர்ந்த முதலாளிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இருந்து வரும் பிணைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அந் நாட்டு அரசியல் சாசனச் சட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப் பட்ட பின்னணி கொண்ட நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் எந்த இலட்சணத்தில் செயல்பட்டிருக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை.

ஹோண்டுராஸில்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 17, 2009

மகிந்த கும்பலின் எதிரியாகிவிட்ட சரத் பொன்சேகாவை போட்டுத் தள்ளுவார்களா!?

மகிந்த கும்பல், முன்னாள் கூட்டாளியான சரத் பொன்சேகாவுக்கு செய்யாத அவமானம் கிடையாது. தொடர்ந்தும் சகல விதமான நெருக்கடிகளையும், தனிமைப்படுத்தலையும் தீவிரமாக்கியிருக்கும் மகிந்த கும்பல், ஆளை போட்டுத்தள்ளுவதன் மூலம் தான் தன் குடும்ப சர்வாதிகாரத்தை தக்க வைக்கமுடியும் என்ற அரசியல் நிலைக்குள் நகர்ந்து வருகின்றது. சரத் பொன்சேகாவை நாளை துரோகி என்று கூறும் வண்ணம், அண்மையில் மகிந்தாவின் உரை ஒன்று வெளிவந்துள்ளது. தன்னுடன் இல்லாத அனைவரும், துரோகிகள். இதுதான் மகிந்த சிந்தனையும், மகிந்த சித்தாந்தமுமாகும்.

மகிந்த கும்பலின் அரசு தன் எதிரிகளையும், தனக்கெதிரான கருத்துகளையும் அரசியல் ரீதியாக எதிர் கொள்ள முடிவதில்லை. மாறாக தனக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்களை போட்டுத் தள்ளுவது வரையான ஒரு அரசியல் நடைமுறைதான், இலங்கையின் இன்றைய ஜனநாயகமாகும்.

தன்னுடன் இல்லாதவர்கள் அனைவரையும் மிரட்டுவது, விலை பேசுவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது, இறுதியாக போட்டுதள்ளுவது....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகள் மட்டும் உலாவிய பாரிஸ் லாச்சப்பலில் மக்களுடன்


அப்போது விநியோகிதவர்களில் ஓருவர் அவர்களுக்கு துண்டுபபிரசுரம் சம்பந்தமாகவும், சிந்தனைமையம் சமபந்தமாகவும் விபரங்களைச் சொன்னார். தொடர்ந்து யார் இவர்கள் என வினாவினர். ஓரிருவர்களின் பெயர்களைச் சொன்னபோது அதில் ஒருவர் நீங்கள் அவர்களின் கைக்கூலிகளா? என்றார். அதற்கு அவரோ, நானோ, அல்லது சிந்தனை மையத்தில் உள்ளவர்களோ யாருடைய கைக்கூலிகளும் அல்ல என்றார்.

Monday, November 16, 2009

சூரிச் இல் 11.10.2009 அன்று நடந்த கலந்துரையாடல் (தொடர்ச்சி…)

பாகம்-2
ரயாகரன் :வணக்கம். நேரடியாகவே விவாதத்துக்குப் போகலாம் என நினைக்கிறேன். இங்கு உரையாற்றியவர்களினது கருத்துகளிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன். மே17 க்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களில் முக்கியமானது அதுவரைகாலமும் புலிப் பாசிசத்தினூடாகத்தான் அனைத்தும் என புலியல்லாத தரப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அது முடிவுக்கு வந்திருக்கின்றது. புலத்துப் புலிகள் அதனுடைய நிதியாதாரத்துக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளின் பாசிசம் தகர்ந்து போக அரசு பாசிசம் மேலெழுந்து வந்துள்ளது. எதைப் புலி செய்ததோ அதை இன்று அரசு செய்துகொண்டிருக்கின்றது. கடந்தகாலத்தில் புலிப் பாசிசம் எனறு சொல்லிக் கொண்டு அதற்கு எதிராகப் போராடினோமோ அல்லது எதிர்த்து நின்றமோ அதேயளவு காரணங்கள் எல்லாவற்றையும் மூடிவைத்துவிட்டு இன்று அரசை ஆதரிப்பவர்களாக பெரும்பான்மையாக புலியெதிர்ப்புப் பேசியவர்கள் மாறி நிற்கின்றார்கள். ஒரு மாற்றத்தை நோக்கிய தேவை அவசியம் என்பதைத்தான் நாம் இன்று சொல்லி நிற்கின்றோம்.

Sunday, November 15, 2009

நக்சல் வேட்டை….அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போர்!நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழ

நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

""நக்சல் ஒழிப்பு கோப்ரா படை, மத்திய ரிசர்வ் போலீசு, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் இப்போரில் பயன்படுத்தப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் செயற்கைக் கோள் வழியே அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்படும். நக்சல்பாரிகள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களின் வன்முறையை முறியடிக்க உளவுத்துறை, இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் () என்ற உயர்மட்ட அமைப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் நிறுவப்படும். தேசத்தின் பாதுகாப்பு நலனையொட்டி உருவாக்கப்படும் இத்தகைய அமைப்புக்கென தனியே சட்டம் இயற்றப்படும்'' என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, November 14, 2009

மீண்டும் வட்டுக்கோட்டை நோக்கி….


தமிழ்த் தேசியத்தின் மிதவாத வலதுசாரியத் தலைவர்களில ஒருவரான் காலம் சென்ற என்.Nஐ.வி. செல்வநாயகம் அவர்களே, வட்டுக்கோட்டை மாநாட்டின் பிரதான தீர்மானமான தமிழ் ஈழக் கோரிக்கையை அன்றே ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அவரின் மைந்தர்களே ஒப்புக்கொணடுள்ளனர். வட்டுகோடடை மாநாட்டில் அமிர்தலிங்கம் உட்பட உணரச்சிவசப்பட்ட இளைஞர்களின் நிர்ப்பந்தத்தின் நிமிர்த்தமே செல்வநாயகம் அவர்கள் தமிழ் ஈழத்தை மனப்பூர்வமின்றி ஏற்றுக்கொண்டார்!

வட்டுக்கோட்டை "தமிழ் ஈழம்" தமிழர் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒன்று. இது தமிழ்பேசும் மக்களின் முழு அபிலாசைகளையும் பிரதிபலிக்காத ஒன்று! இதை எவ்வித சமூக விஞ்ஞானப் பார்வையோ ஆய்வோ இன்றி இளைஞர் இயக்கங்கள் அன்று கையில் எடுத்தன! இதன் விளைவு பல இயக்கஙகள் துரோகிகள் (புலிகளால்) ஆகி, பின்பு ஐனநாய....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, November 13, 2009

நோர்வே புலித் தேர்தல்கள் பற்றிய, சிறு குறிப்பு..

நோர்வேயில் வெளியாகிய, புலிகளின் 3 பிரிவினரது பிரசுரத்தை (பிரகடனத்தை) - தமிழரங்கம் - வெயியிட்டிருந்தது. நாடுகடந்த தழிழீழ அறிவிப்பு, புலிகளின் அழிவின் பின்னர் சுமார், ஒருமாத காலத்தின் பின்னர் வெளிவந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், வன்னியுத்தத்தின் நெருக்கடி காலகட்டத்தில்: புலிகளால் வெளிநாட்டுப் புலிகளிடத்தில் ஏவப்பட்டது. இது யுத்தநேரத்தில் புலிகளின் இருப்புக்காக -சர்வதேச அழுத்தமாக - இதைத் தேர்தலாக்கி (மே 10-2009) நோர்வே ஊடாகப் பிரயோகித்துப் பயனடைய முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகும்!


புலிகளின் அழிவுக்குப் பின்..... (நோர்வே)
உள்ளுக்குள் நடக்கும், நடத்தப்படும் நாடகம்:


1- 'நாடுகடந்த தமிழீழ' கோரிக்கையானது, இலங்கை தவிர்ந்த - ஏனைய நாடுகளிலுள்ள அனைத்துப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்களையும்: தம்கீழ் கொண்டுவரும் கோரிக்கையாகும். இது தானே தன்னை தழிழீழத்தின் அதி உயர் பீடமாகப் பிரகடனப்படுத்துகிறது. (புலிகளின் அழிவை அடுத்து தலைமையாக தன்னை காட்டுகிறது)

2- 'வட்டுக்கோட்டை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்.

உளுத்துப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானம், மாபியாத் தனத்துக்கே இறுதியாக உதவுகின்றது

இந்தத் தீர்மானத்தின் பெயரில் தான், தமிழினத்தையே அழித்தனர். தமிழினத்தை பல பத்தாகப் பிளந்தனர். இதுவே எம் கடந்தகால, நிகழ்கால வரலாறாகிக் கிடக்கின்றது.


இன்று புலத்து மாபியாப் புலிகளின் ஒரு பகுதி, மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்கின்றனர். வேடிக்கை என்னவென்னால் கடந்த காலத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்தவர்களை துரோகிகள் என்று கூறி போட்டுத் தள்ளியவர்கள் தான், மீண்டும் வட்டுகோட்டைத் தீர்மானம் என்கின்றனர். சரி இந்த நாடகம் எல்லாம் இன்று எதற்கு?

தமிழ் மக்களை ஏமாற்றி சுருட்டிய பணத்தை தமதாக்கவும், புதிதாக பணத்தை கொள்ளையிடவும், தமிழ்மக்கள் மேல் தங்கள் அதிகாரத்தை தக்கவைக்கவும், உளுத்துப் போன வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள எடுத்து கடை விரிக்கின்றனர்.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாரால் முன்வைக்கப்பட்டது. தமிழ் மக்களை ஓடுக்கிய, மேலாதிக்க சமூகப் பிரிவுகளால், சொந்த சுயநலத்;துடன் தமிழனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. யாழ்மேலாதிக்க வலதுசாரியக் கும்பலால் தான், இடதுசாரிய......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று கோவா மாநிலத்திலுள்ள முக்கியமான வர்த்தக நகரான மார்காவோவின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்கள் யார் என்பது இந்நேரம் தெரியாமல் போயிருந்தால், முசுலீம் தீவிரவாதிகளைக் குற்றஞ்சுமத்தி போலீசும்,தேசியப் பத்திரிகைகளும் "புலனாய்வு' நடத்தியிருப்பார்கள். கோவா சுற்றுலா மையம் என்பதால், இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பாகிஸ்தானின் சதி இது என மைய அரசும் சாமியாடியிருக்கும்.

எனினும், இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் ""விதி'' வேறு மாதிரி விளையாடிவிட்டது. அந்தக் குண்டு திடீரென வெடித்துவிட்டதால், அந்தக் குண்டைத் தமது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கடத்தி வந்த மால் குண்டா பாட்டீல், யோகேஷ் நாயக் என்ற இரு இளைஞர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே படுகாயமடைந்து போலீசிடம் மாட்டிக் கொண்டனர். அந்த இரு இளைஞர்களும் சிகிச்சைப் பலனின்றி இறந்து போய்விட்டாலும், அவர்கள் இருவரும் ""சனாதன் சன்ஸ்தா'' என்ற இந்து மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியிருக்கிறது.

அந்த இளைஞர்கள் எதற்காகக் குண்டு வைக்க வந்தார்கள் என்பது குறித்துப் பல ஊகங்கள் கூறப்படுகின்றன. எனினும், இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதா
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 12, 2009

ஈழம்‍ : தமிழ‌கம் முழுவதும் ஆர்ப்பாட்டம். நண்பர்களே கலந்து கொள்ளுங்கள்..

சிங்கள அரசே!
ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதை முகாம்களை நீக்கு!
மக்களை தத்தம் வசிப்பிடங்களில் குடியமர்த்து!
அவர்களின் விவசாயம், தொழில்களை புணரமைத்துக்கொள்ள நிதி உத‌வி செய்!
ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!

இந்திய அரசே!

சிங்கள அரசின்.....
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலத்து புலிக்குள் நடக்கும் சொத்து மோதல்கள் (நோர்வேயைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு குழுக்களின் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)

தமிழீழத்தின் பெயரில் தமிழினத்தையே கடந்த காலத்தில் அழித்தவர்கள், இன்று அதன் பெயரில் உள்ள பினாமி சொத்துக்களுக்காக மோதுகின்றனர். இப்படி புலத்து புலிக்குள் நடக்கும் மோதல்கள், நோர்வேயில் குறைந்த பட்சம் மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த மோதல்களின் பின்னணி, எந்த மக்கள் நலன் சார்ந்ததுமல்ல.

மாறாக புலிகளின் பின் உள்ள பினாமிச் சொத்துக்கள், அதன் மேல் பொறுக்கித் தின்ன கட்டமைக்கும் அதிகாரம் சார்ந்த குழு மோதல்கள், எதிர்மறையான போட்டிக் குழுக்களை உருவாக்கி வருகின்றது.

ஊர் உலகத்தை ஏமாற்ற, ஒரு பிரிவு வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், மற்றைய பிரிவு நாடு கடந்த தமிழீழத்தையும் முன்னிறுத்தி மோதுகின்றது. இவை இரண்டிலும் தாமில்லை என்று கூறி, மூன்றாவது அணியாக இருந்து தின்ன, ஒரு காரணத்தை மூன்றாவது குழு முன்வைக்கின்றது.

தங்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 11, 2009

கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் - 02

இன்று தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாது, தாறுமாறாக தலைகீழாக நடக்கிறார்கள். பாருங்கோ, 76 ல் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' எடுத்தபோது ''சத்துருக்கள்'' என்று கூறியவர்களுடன் இன்று கூட்டும் நடந்து முடிந்துள்ளது. '' அடைந்தால் தமிழீழம்'' என்றவர்கள், நோர்வேயில் 'ஐனநாயகத் தேர்தல்' நடத்துகிறார்களாம்.! என்னமா மிளகாய் அரைக்கிறாங்கள் தலையிலை - தெரியாமல் தான் கேக்கிறன்.
அப்ப, நோர்வேயின் கடைசிப் பாராளுமன்றத் தேர்தல் 'ஐனநாயகமாக' நடக்கவில்லையா? ஏதோ ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் தங்களுடைய பிரச்சனைக்காகத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக இவங்கள் படம் காட்ட முட்படுகிறாங்கள். இவங்களுக்குத் தெரியுமோ தெரியாது, 'இன்னுமொரு சாதி' (1985) என்ற புத்தகத்தை பெண்களுக்காக எழுதியது - நோர்வே சமூகத்துப் பெண் என்பது. யாழ்ப்பாணத்துக் கருக்குமட்டை வேலி பற்றி நோர்வே சமூகத்திடம் ஆயிரமாயிரம் கதைகளுண்டு. நோர்வேயில் அகதிகள் உள் நுழைவுக்கு முன் 3 மாதத்துக்கு மேல் கடலிலே, கப்பலில் ஏன் வாழவேண்டி வந்தது என்பதற்கு, இவங்களிடம் அரசியல் விளக்கம் ஏதாவது இருக்கிறதா? அரசியலா, அது என்ன மண்ணாங்கட்டி! எங்களுக்கு கண்கட்டி அரசியல் தான் கைவந்த கலையாச்சே!! இதுதானே தழிழரின் கலாச்சாரம்!!! அதை மீறுவது தேச...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தமிழக எம்.பிக்களின் ஈழச்சுற்றுலா: துரோகிகளுக்கு புரியுமா மக்களின் அவலம்?

ஈழப் போருக்குப் பின், முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் மக்களின் நிலைமையை அறியும்முகமாக ஐந்து நாட்கள் பயணமாக தமிழக எம்.பி.க்கள் கடந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்று வந்துள்ளனர். மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள், ஆடல்பாடல்கள் எனத் திருமண விழாவுக்கு வருபவர்களைப் போல, தமிழக தூதுக் குழுவினருக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்தது, சிங்கள அரசு. அவலத்தின் நடுவே இத்தகைய ஆடம்பர வரவேற்பு எதற்காக என்று கேட்டு, தமிழக எம்.பி.க்கள் அதனைத் தவிர்க்கவில்லை. மாறாக, புன்முறுவல் பூத்தபடியே சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந்தார்கள்.


ஈழத்திலுள்ள நலன்புரி மையங்களை அதாவது, வதைமுகாம்களைப் பார்வையிட்டு, மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து, அந்த அவலங்களைப் போக்க ஏதாவது செய்வார்கள் என்று ஈழத்தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஈழத்துக்குச் சுற்றுலா சென்று வந்ததைப் போலவே தமிழகத்தின் பத்து எம்.பி.க்களின் பயணம் அமைந்தது.

யாழ் பொது நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் கருத்துக் கூறியவர்களை அதட்டி உட்கார வைத்தும், முகாம்களில் வதைபடும் மக்களின் அவலத்தைப் பற்றிப் பேசுவதைத் திசைதிருப்பியும், நேரமில்லை என்று தட்டிக் கழித்தும் தூதுக்குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு சிடுமூஞ்சித்தனமாக நடந்து கொண்டார். இதை, ""இலங்கைக்கு முன்பு அனுமன் வந்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 10, 2009

போலித்தேர்தல்

Monday, November 9, 2009

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்?

1.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? : புதிய ஜனநாயகம் வெளியீடு

2.பு.ஜ.வின் விமர்சனங்களும் மாவோயிஸ்டுகளின் வசவுகளும்

3.எதிரிக்கு ஒத்திசைவாக அமைவது மாவோயிஸ்டுகளின் செயலா? பு.ஜ.வின் விமர்சனங்களா?


4.யார் நேர்மையானவர்கள்: பு.ஜ.வா, மாவோயிஸ்டுகளா?இதோ ஆதாரம்!

5.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட "நடிப்பு'

6.முதன்மைத் தவறும் ஆயுதக் குழுக்களும்

7.மாவோயிஸ்ட் இயக்கம்: ஏறுமுகத்திலா, இறங்கு முகத்திலா?

8.தர்மபுரி அனுபவம் என்ன? மீளாய்வு எங்கே?

9.கர்நாடகா அனுபவமும் இதுதான்!

10.ஒப்பாரி வைக்கமாட்டார்கள்! புரட்சி சவடால் அடிப்பார்கள்!

11.உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் மாவோயிஸ்டுகளின் சாணக்கியத்தனம்

12.குதர்க்கவாதமே கோட்பாடாக!

13.புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்

14.அரசியலுக்காகத்தான் ஆயுதமா? ஆயுதத்துக்காக அரசியலா?

15.இணைப்பு: நக்சல்பாரி "அபாயம்': அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?(புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2007இல் வெளியான கட்டுரை)

போலி மோதல் கொலைகள் அரசு பயங்கரவாதமே!


""அந்த நான்கு பேரும் லஷ்கர் இதொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் வந்த அவர்களை வழிமறித்தபொழுது, நெடுஞ்சாலையில் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு இம்"மோதல்' பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது.

இந்த "மோதல்' கொலை பற்றி அப்பொழுதே பல்வேறு சந்தேகங்களும் விமர்சனங்களும் மனித உரிமை அமைப்புகளாலும் முசுலீம் மக்களாலும் எழுப்பப்பட்டன. "மோதலில்' கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹனின் தாயாரும், ஜாவேத் ஷேக்கின் தந்தையும் இம்"மோதல்' கொலை பற்றி விசாரிக்கக் கோரி குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். குஜராத் அரசும் தன்னை நியாயவானாகக் காட்டிக்கொள்ள இம்"மோதல்' கொலை பற்றி போலீசு விசாரணையும், துணை கோட்ட நடுவர் விசாரணையும் நடத்த உத்தரவிட்டது.

தனது அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் போலீசும், துணைக் கோட்ட நடுவரும் (Sub divisional magistrate) தனக்கு எதிராகத் தீர்ப்பெழுத மாட்டார்கள்
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, November 8, 2009

புலத்துப் புலிகள் போடும் "ஜனநாயகம்", மக்களை ஏமாற்றித் தின்னும் போக்கிலி அரசியலாகும்


இதன் பின் இருப்பவர்களோ, கடந்தகாலத்தில் தமிழ் மக்களை மந்தைகளாக அடிமைப்படுத்தி தின்றவர்கள். இவர்கள் யார் என்றால் புலிகளின் பின் சொத்தைக் குவித்தவர்கள், புலிகளின் சொத்தை இன்று அனுபவிப்பவர்கள், மக்கள் மேல் அதிகாரத்தைக் கையாண்டவர்கள், உழையாது போராட்டத்தின் பெயரில் தின்று திரிந்தவர்கள் தான், இன்று மீண்டும் தமிழ் மக்களின் பின் தம்மை தக்கவைக்க முனைகின்றனர்.

இதற்காக ஜனநாயக வேசம் போடுவது முதல் தமிழ் மக்களிடம் வாக்கைக் கேட்பது வரை, பற்பல நாடகங்கள். ஆனால் ஜனநாயக விரோத நடைமுறை ஊடாகவே, மீண்டும் தம்மைத் தக்கவைக்க முனைகின்றனர். பாரிஸ்சில் சுயமாக செயல்படுகின்ற பொது அமைப்புகளின் உள்ள ஒரு சில ஜனநாயக விரோதிகளைக் கொண்டு, அமைப்பின் பெயரால் புலத்து புலிப் பினாமிகள் பொது அமைப்பை உருவாக்குவது முதல் நோர்வேயில் சுயமான அமைப்பின் பெயரில் போட்டி புதிய அமைப்பை....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: கூலித் தொழிலாளர்களைப் பலியிட்டுக் கொண்டாட்டமா?


இச்சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம், அதே கட்டிடத்தில் நடந்தது. அச்சம்பவத்தில் பொருட்களைக் கட்டிடத்தில் ஏற்ற உதவும் கி÷ரன் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரது உடலைப் பார்க்கக்கூட மற்றதொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசயாரும் முன்வராததால்þ அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார், தொழிலாளர்களை அடித்து விரட்டியதால் அந்தப் பகுதி முழுவதுமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

இந்நிலையில் ஜூலை சம்பவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்புதான்þ தெற்கு தில்லியின் ஜம்ருத்பூர் பகுதியில் புதிதாகக்கட்டப்பட்டு
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, November 6, 2009

உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய் ஓடிற்று. இந்தத் தத்தளிக்கும் தீக்கடலிலிருந்து இரக்கமற்ற அப்பட்டமான வர்க்கப் போராட்டமும், புதிய கிரகங்களது மெல்லக் குளிர்ந்து கெட்டியாகும் மொறுமொறுப்பான மேலோடும் உருவாகி வெளிப்பட்டன.

ரசியப் புரட்சி இரண்டு அங்கங்களைக் கொண்டது. முதலாவது, பழைய ஆட்சியினை ஒழித்திடுதல், இரண்டாவது புதிய ஆட்சியினை உருவாக்குதல்.

ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, November 5, 2009

முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!

வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.


அவர் குடும்பத்தினர்þ சலீமை உடனே பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அம்மருத்துவமனை, ஆரம்ப பரிசோதனை செய்துவிட்டு சலீமை உள்நேõயாளியாகச் சேர்த்தது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு முன் "முன்னெச்சரிக்கை'' நடவடிக்கை என்ற பெயரில் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே நோய் பரவாமலிருக்க கிருமி நாசினிகள்þ முகமூடிகள், சோப்புகள், துப்புரவுக் கைக்குட்டைகள் மற்றும் வைட்டமின் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவமனை பரிந்துரைத்தது.

இறுதியாகþ நான்காவது நாளில்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, November 4, 2009

“ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்

இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.

-ஆசிரியர் குழு

பு.ஜ: கல்வியறிவு பெற்றவர்கள் எனக் கூறப்படும் யாழ்ப்பாணத் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எந்த அடிப்படையில் சகித்துக் கொண்டார்கள்? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்ற அபாயம் காரணமாகவா? இல்லை, தமிழ்ச் சமூகமே ஜனநாயக மறுப்புத் தன்மையுடைதாய் இருந்து வருகிறதா?

சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித்தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும்போது, மஹாராஜா போன்ற ஒரிருவரைத்தான்... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

போர்க் குற்றம் : அமெரிக்க ஏகாதிபத்திய சதிராட்டமும், பேரினவாதத்தின் சூழ்ச்சியும்

தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களும் துயரங்களும், இன்று குறுகிய நலன்களுடன் அரசியல் ரீதியாக விலை பேசப்படுகின்றது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முதல் மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சியைத் தக்க வைக்கும் எல்லைகள் வரை, தமிழ் மக்களின் அவலம் அரசியலாக்கப்படுகின்றது.

ஆளும்வர்க்க வலதுசாரிய பாசிட்டுகளுக்குள்ளான முரண்பாடுகள், ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் வெளிப்படையாகவே தாளம் போடத் தொடங்கிவிட்டது. போர்க் குற்றத்தில் ஈடுபட்ட குற்றக் கும்பல், தமக்குள் எதிரணியாக மாறி நிற்கின்றது. முரண்பட்ட எகாதிபத்திய நலன்கள், இதை தனது நலனுக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இலங்கையின் எதிரணி அரசியல் கூட, இந்தப் போக்கில் பிளவுபட்டு வருகின்றது. பரஸ்பரம் போர்க்குற்றத்தை காட்டிக்கொடுப்பதில்லை என்று கூறிக்கொண்டு, ஒன்றையொன்று குழிபறிக்கின்றது. இதையே சரத் பொன்சேகா "யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்கின்றார். இதன் மூலம் காட்டிக்கொடுக்க போர்க் குற்றங்கள் உண்டு என்பதும், வெளிப்படையாக..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, November 3, 2009

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…

கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………

தமிழ் மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவக்குழியைத்தான் வெட்ட முடியும். கடந்த காலத்தில் அதை செய்து முடித்த பெருமை எங்களைச் சாரும். மனித உணர்வுகளை மறுத்து, அவற்றை சவக்குழிகளில் தோண்டிப் புதைத்தவர்கள் நாங்கள். இதுவே எம் கடந்தகால வரலாறாகிவிட்டது.

நாங்களோ மந்தைகளாக இருந்தோம். இதனால் எம்மினம் இன்று அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னமும் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை.

ஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது!....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, November 2, 2009

கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும்.

இலங்கையில் தேர்தலுக்கான பரபரப்புக்கள் தொடங்கி விட்டன. அங்கைமாறி இங்கமாறிக் கதைப்பதும், விலைக்கு வாங்குவதும், வழமைபோல் இந்தத் தரகுகளை வளைத்துப் போடுவதுமாக களைகட்டத் தொடங்குகிறது தேர்தல் வியாபாரம்.

அரசில் இருக்கும் மகிந்தா பக்கம் சுளையாக யுத்த வெற்றியை கையில் வைத்திருக்கிறது. இதைத் தமது பக்கம் இலேசாகச் சாய்பதற்கு சரத்பொன்சேகாவை நாடுகிறது ரணிலின் பக்கம். இப்படி படு உசாரான தேர்தலாக இது களைகட்டுமாப்போல் தெரிகிறது.

இதன் பிறிதொரு அங்கமாக வன்னிமக்களின் முகாம் பிரச்சனை நிலுவையாக இருக்கிறது. பிரிட்டனில் இருந்து வன்னிக்கு வந்துபோன பிரதிநிதிகள்: பருவ மழைக்குள்ளும் இம் முகாம்கள் இப்படியே இருந்தால், பாரதூரமான தொற்று நோய்களும் மனித அவலங்களும் நிகழுமென அது எச்சரித்தது. மழைகாலம் வரும் முன்னே வடிகால்களை அமைத்து
... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, November 1, 2009

கொல்வதோ அரசின் உரிமை! அதை ரசிப்பதே சமூகத்தின் கடமை!

இலங்கையின் ஜனநாயகம் இதுதான். இதற்குள் தான் சட்டம் நீதி, சமூக ஒழுங்கு என அனைத்தும் இயங்குகின்றது. நாட்டின் அதிகார வர்க்கம், தான் விரும்பியவர்களை எதுவும் செய்ய முடியும். மக்கள் முன் ஈவிரக்கமின்றியே அடித்துக் கொல்லுகின்றது. சூடு சுரணையற்ற சமூகம், அதை வேடிக்கையாகவே பார்த்து ரசிக்கின்றது.


இலங்கை பாசிச சமூகம் எப்படி இருக்கின்றது என்பதற்கு, இந்தக் வீடியோ காட்சி ஒரு நல்ல உதாரணம். கொல்வதில் எந்த ஓளிவு மறைவும் கிடையாது. இப்படி நடப்பதே அதிகார வர்க்கத்தின், கேள்விக்கிடமற்ற கொலைத் தொழிலாக உள்ளது. இதைச் செய்வதை நியாயப்படுத்தும் அரசியல் தான் பூத்துக் குலுங்குகின்றது. இதற்கு இனம், நிறம், சாதி, பால், பிரதேசம், அதிகாரம் என, எது வேண்டுமென்றாலும் ஒரு காரணியாக இருக்;கலாம்.

இந்த நிகழ்வு தற்செயலாகவே..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்னமுமேன் தெருவிறங்கு.......

குமுறும் அலைதிரண்டு
தூக்கி கரைபோவென எறிகிறது
எகிறியே அசையாகொலை வெறியொடு
கோலெடுத்தோங்கி அறையும் அரக்கத்தனம்
பாசிசம் வளர்த்தெடுத்த காவற்படை
மனிதமிளந்து மிருகமாய்...

ஆற்றில் தத்தளித்த உயிரை
காத்தசிறுவனை பெற்ர நாடு
கையேந்தி நின்ற பேதலித்த இளைஞனை....

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, October 31, 2009

ஒரு நல்ல மனிதனும் கட்சி அரசியலும் – ரிபிசி கலந்துரையாடல்

கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.

ஜயலத் அவர்கள் தமிழ் மக்களிடம் நல்ல அபிப்பிராயங்களை தக்கவைத்துள்ளவர். அவர் ஒரு நல்ல மனிதர் என எடுத்துக்கொள்வோம். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வந்திருந்தார். இலங்கை மக்கள் நலன் சார்பில் அல்ல என்பதாலோ என்னவோ அவரது கலந்துரையாடல் ஒரு கட்சியின் வெளிப் பரப்புக்குள் சென்று எதையும் சொல்லிவிடவில்லை. நல்ல மனிதர்கள் என்பது அரசியல் பார்வையை நல்லதாக்கிவிடுவதில்லை. காலமெலாம் தமிழ் மக்களிற்காக நியாயத்துடன் அரசியல் குரலெழுப்பிய வாசுதேவ நாணயக்கார அவர்கள் ராஜபக்ச அரசின் ஆலோசகராக மாறித்தான் போனார். போரைக் கண்டடைந்தார். நிலையான தீர்வு என்பது எப்பொழுதும் அதிகார மையத்திலிருந்து அதாவது மேலிருந்து கீழாக........ ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 30, 2009

இளையோரின் ஜனநாயகப் பண்பும் கிழப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்


மக்களின் உற்சாகமற்ற வருகையில் ஏற்பட்ட தாமதத்தினால் வழமைக்கு மாறாக சுமார் ஒரு மணிநேரம் தாமதித்தே நிகழ்வும் ஆரம்பமானது. வெவ்வேறு மாநிலங்களிலும் இருந்தும் வருகை தந்திருந்த இளையோர்கள் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மொழிகளில் நாட்டின் இன்றைய அவலநிலைகளை வெளிப்படுத்தினர். அறியப்பட்ட சுவிஸ் நபர்கள்....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, October 29, 2009

அந்த கறுத்தப் பெட்டி…

"'……."
' தர்மலிங்கம் அண்ணை இல்லையா...? "
'…….."'வாங்க தம்பி..."
'நீங்க எனக்கு பெட்டி ஒன்று செய்து தரோணும்."
'பெட்டியா… என்ன பெட்டி தம்பி...?"
'இதுதான் அண்ணை அளவு. சூட்கேஸ் மாதிரி, கொண்டு திரியக் கூடியதாய் இருக்கோணும்..."
'……….."
'டேய்… என்னடா செய்யுறியள்...? சின்னப்பொடியள் மாதிரி கத்திக் கொண்டிருக்கிறியள்.... கரியன் வாறான், சத்தம் போடாமல் இருங்கோ…!"
சண்முகசுந்தரம் மாஸ்ரர் வராததாலை கெமிஸ்ரிப் பாடம் பிறீ. பிறீ கிடைச்சால் கௌரி பாடுறதும்..., ரவி மேசேலை மோளம் அடிக்கிறதும் வழமையா......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 28, 2009

இளையோர் அமைப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து…


புலம்பெயர் சூழலில் பரந்து விரிந்து கிடக்கின்ற இளமைக்குரிய வசதிகள், வாய்ப்புக்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, தாய்த்தேசத்தின் உணர்வுகளுடன் உலாவரும் இளமை உள்ளங்களே! உங்கள் உணர்வுகளுக்கு தலை சாய்க்கின்றோம். தாய்த் தேசம் சார்ந்த உங்கள் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அப்பழுக்கற்றவை என்பதையும் நம்புகிறோம். உங்கள் செயற்பாடுகள் தொடர்வதை உளச்சுத்தியுடன் வரவேற்கின்றோம்.

Tuesday, October 27, 2009

மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்

போரென்று எழுந்தநிலம் புதைகுழியாய்படைகளிடம்
பதையுண்டுபோனதென்ன---விதியாஇது
சாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை--
பாரின்றுசந்ததியை அழிக்கின்ற பகைமுகாமில்
சோறின்றி வாழ்தலல்ல உறுத்துதலாய்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 26, 2009

பாரிஸ் கூட்ட முடிவுகள் : மாற்றத்தை நோக்கிய ஒரு பகிரங்க அறைகூவல்

செப் 26-27ம் திகதியில் பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் தமிழரங்கத்தின் முயற்சியில் கூட்டு விவாதம் ஒன்று நடை பெற்றது. கடந்தகால அரசியல் சூழலை மாற்றியமைக்க, முதலில் தன்னைத் தான் அது கோரியது. எதிர்காலத்தில் நடைமுறையில் நாம் செய்யவேண்டிய அரசியல் பணிகளை, ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் வரையறுத்;து. அத்துடன் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த, கூட்டு உழைப்பைக் கோரியது. தனித்துவமான செயல்களை, கூட்டான அரசியல் திட்ட செயல்முறைக்கூடாக முன்னெடுக்கவும் கோரியது.

கூட்டு விவாதம் இன்றைய அரசியல் சூழலை மதிப்பீடு செய்தது. இனவொடுக்குமுறையால் கடந்த 30 வருடமாக இலங்கையில்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புதிய இணையம் அறிமுகம் : புகலிடச் சிந்தனை மையம்

புகலிடச் சிந்தனை மையத்தின் இணையம், www.psminaiyam.com கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க முன்முனைப்புடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. சிங்களம் முதல் பல மொழிகளில் தன்னை ஒருங்கிணைத்து, மக்கள் மத்தியில் செயல்பட அது உறுதி பூண்டுள்ளது. சமகால நிகழ்வுகளை ஓட்டி, ஒரு பொது விவாத அரங்கையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் அங்கத்தவராக பதிவு செய்து கொள்ளும், யாரும் இங்கு சுதந்திரமாக விவாதிக்க முடியும்.

புரட்சிகர மாற்றத்தை நோக்கி....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்