தமிழ் அரங்கம்

Friday, June 20, 2008

தேசத்தில் தஞ்சமடைந்துள்ள பொறுக்கிகள் யார்?

மக்கள் விடுதலையை மறுக்கின்றவர்களை பெரும்பான்மையாக கொண்ட, சமூக விரோதிகளாலானது. சொந்த நடத்தைகளாலும், கருத்தாலும் மனித இனத்தையே வேரோடு அழிக்கின்றவர்கள் தான் இவர்கள்.

மிகக் கணிசமான புலி ஓட்டுண்ணிகள், இதற்குள் பல பெயர்களில் ஓட்டிக் கொண்டு இதற்குள்ளும் வாழப்பழகிவிட்டார்கள். அது செய்வது திடட்மிட்ட வகையில், புலிப்பாசிசத்தை பாதுகாக்க, புலியெதிர்ப்பு கும்பலின் மக்கள் விரோத அரசியலை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்கின்றது. மக்கள் விடுதலை என்ற கருத்துக்கு எதிராக, புலியும் – புலியெதிர்ப்பும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒன்றாக கூட்டாக சேறடிக்க முனைகின்றது. அத்துடன் புலியெதிர்ப்பு தனிநபர் உள் முரண்பாடுகளை ஊதிப் பெருக்கி மோதவைக்கின்றது.

இணையங்களின் (தமிழ்மணம், யாழ் இணையம்… ) புலி சார்பாக எழுதிக்கொண்ட பலர், தேசத்தின் நிலையெடுத்து குந்தியிருந்தே பாசிசப் பிரச்சாரம் செய்கின்றனர். புனை பெயரில் உள்ள பலர், முன்பு சொந்த பெயரில் புனை பெயரில் புலியாக அசல் பாசிட்டாக அம்பலமானவர்கள்;. தம்மை மூடிமறைத்துக் கொண்டு தான், அம்மணமாகி நிற்கின்றனர்.

சமூக நோக்கமற்ற தேசத்தின் 'தொழில் நேர்மை" போல், புலிகள் தமது 'பாசிசத்தின் நேர்மையை" தேசத்தின் துணையுடன் வியாபாரம் செய்கின்றனர். தேசத்தின் 'தொழில் நேர்மை"க்கு ஏற்ப, பாய் விரித்து தானும் விபச்சாரம் செய்கின்றது.

இதில் இரண்டாவது வகையினர் புலியை எதிர்த்தால் முற்போக்கு என்றும், அது தான் இடதுசாரியம் என்றும் ஊர் உலகத்தையே ஏமாற்றும் கடைந்தெடுத்த ஏமாற்றுப் பேர்வழிகள். இதில் புலியெதிர்ப்பு என்றால் அரசை ஆதரிப்பது, மறுபகுதி புலி எதிர்ப்பு என்றால் தமது சொந்த சமூகச் சீரழிவுக்கு ஏற்ப கோஸ்டி கட்டி அதை மோதலாக்குகின்ற கும்பல். இவர்கள் தான் தேசத்தில் தஞ்சமடைந்து விட, அது அவதூறாக காழ்ப்பாக வெளிப்படுகின்றது.
இதற்கு ஏற்ப தேசம் இயங்குகின்றது. புலியெதிர்ப்பு அரச பாசிட்டுகள் இன்றி எப்படி இலக்கிய சந்திப்பு நடத்த முடியாதோ, அப்படி தேசம் அரசு மற்றும் புலிப் பாசிட்டுகள் இன்றி தேச 'ஊடகவியலை" நடத்த முடியாது. இது தான், அதன் 'ஊடகவியல்" அறம்.

மக்களின் விடுதலைக்காக நீங்கள் எதை முன் வைக்கின்றீர்கள், எப்படித் தான் அவர்கள் விடுதலையை அடைய முடியும் என்றால், இதில் உள்ள எந்தப் பொறுக்கியும் பதில் ..கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தான் வாழும் சமூகத்துக்கு எதிராக இயங்குபவனை எப்படி பாராட்ட முடியும்?

பாரதி பற்றி நாகார்ஜுனனுக்கும் ஏகலைவனுக்கும் நடந்த விவாதம், மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கிறது.

பாரதி பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு முற்போக்கு முகாமை சேர்ந்த பாரதி அபிமானம் கொண்ட அறிவுஜீவிகள், தங்கள் மவுனங்களையே பதில்களாக தருகின்றனர்.

நெருக்கிப் பிடித்துக் கேட்டால், குணா கமல்போல், ‘அபிராமி, அபிராமி‘ என்ற பாணியில் ‘காலக்கட்டம், கவிதை` ‘கவிதை, காலக்கட்டம்` என்று சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்கிறார்கள்.

எதையும் விளக்கு விளக்கு என்று விளக்குகிற Intellectuals நம் கேள்விகளுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல், ஒரு பொதுபுத்தியில் இருந்தே பதில் அளிக்கின்றனர்.

***
ஏகலைவனின் கேள்விகளுக்கு நாகார்ஜுனின் பதில்கள் ஒரு தனிநபரின் பதில்கள் அல்ல. ஒட்டுமொத்த அறிவுஜீவிகளின் அபயக் குரலாகவே நாம் அதை பார்க்கிறோம்.

சில மாதங்களுக்கு முன் எஸ்.வி. ராஜதுரையை ஒரு மேடையில், பாரதி பற்றிய விவாதத்தின் போது, தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு, குணா கமல் போல், ‘தெளிவாக` பதில் அளித்திருக்கிறார் ராஜதுரை.

( எஸ்விஆர் இதற்கு சரியான பதிலைக் கூறாமல் “இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர் அவர். அவர் காலகட்டத்தின் குழந்தை. நவீன தமிழ் அவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதை மதிக்கிறேன்.” என்று சொல்லி நழுவிக் கொண்டார்

Thursday, June 19, 2008

தேசம்நெற் சொறியும் அரசியல் என்ன?

தேசம் தனக்கு எந்த அரசியலும் கிடையாது என்கின்றது. அரசியல் கிடையாது என்றால், அதன் அர்த்தம் நிலவுகின்ற பாசிசத்தை நடுநிலையுடன் ஆதரிப்பது தான். இதைத் தான் ஊடகவியல் என்று கூறுவதுடன், இதை நியாயப்படுத்தவே 'தொழில் நேர்மை" என்கின்றனர். இதுவல்லாத சமுதாய நலனா தேசத்திடம் உண்டு? சொல்லுங்கள்?

தேசத்தில் புல்லுருவியாக வாழ நினைக்கும் நீங்கள், எந்த சமுதாய நலத்துடன் செயல்படுகின்றீர்கள். அதையாவது சொந்த பெயரில் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு அரசியல் முகமிருந்தால், ஒரு துளி நேர்மையிருந்தால் அதைச் சொல்லுங்கள். மானம் ரோசமற்ற, மக்களின் அவலத்தை வைத்து பிழைக்கின்ற சொறி நாய்கள் தான்டா நீங்கள்.

தேசம் சொறிவதன் மூலம் 'தொழில் நேர்மை" என்று அரசியல் பேசுகின்றது. நீங்கள் அதையே சொறிவதன் மூலம், தமிழ் மக்களின் அவலத்துக்கு தீர்வு காண்கின்றீர்கள்!

கொசிப்பும், வம்பளப்பும், தூற்றலும், அவதூறுமின்றிய, ஒரு தேசம் நெற்றை கற்பனை பண்ணி பாருங்கள். எத்தனை பேர் அதைப் பார்ப்பார்கள் என்று? நீங்கள் எத்தனை பேர் அதில் சென்று வம்பளப்பீர்கள்? தேசம் மக்கள் கருத்தை வைத்தால், நீங்கள் அதற்காக முக்கியா முனைவீர்கள்! தேசம் நெற் உங்களைப் போன்ற பொறுக்கிகளை நம்பி, உங்களைப் பொறுக்க வைக்கின்றது.

கிழக்கு பாசிட்டுகளின் இணைய ஊடகமான விழிப்பு, ஆபாச சினிமா இன்றி கிழக்கு மக்களுக்காக இயங்க முடியவில்லை. அது செய்யும் மக்கள் சேவையை, சினிமா ஆபாசம் ஊடாகத் தான் உங்களைப் போன்றவர்களை கொசிக்க அழைக்க முடிகின்றது. கிழக்கு பாசிட்டுகளால் கிழக்கு மக்களின் வாழ்வைப் பேசி, மக்களை அணுக முடியாது. இப்படித்தான் யாழ் மேலாதிக்க வடக்கு பாசிட்டுகளின் சில இணையங்கள் இயங்குகின்றது.

இப்படித் தான் தேசமும். அது அவதூறுகளும் கொசிப்புகளும், வம்பளப்புகளுமின்றி, அதனால் ஒரு இணையமாக உயிர் வாழவே முடியாது. ஏன் சமூக அக்கறை கொண்ட எந்த நோக்கமும், அதனிடம் கிடையாது. இதனால் கொசிப்பை ஊக்குவிக்க, சேறடிப்பது அவசியம்.

உதாரணமாக பாரிசில் என்ன நடந்தது என்பதை அறிய, தேசத்திடம் தொலைபேசி தொடர்பு எண் இல்லை. பலருக்கு தொலைபேசி எண் கொடுத்தவராச்சே. அண்மையில் கிழக்கில் நடந்த பாலியல் வன்முறைகளை மறுக்கவும், தேசத்தின் முதுகெலும்பான கிழக்கு பாசிட்டுமான ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல் : 'வன்முறையே வெல்லும!"; - "மார்க்கிஸ்டு"களின் தேர்தல் கொள்கை

பஞ்சாயத்துத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே எதிர்க்கட்சியினரைப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல பகுதிகளில் சி.பி.எம்.குண்டர்கள் விரட்டியடித்தனர். குறிப்பாக,சிங்கூர்நந்திகிராமம் பகுதியில் சி.பி.எம் குண்டர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு, தமது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் இப்பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ""சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்காக கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட சி.பி.எம் கட்சியினருக்கு இத்தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்'' என்று பிரச்சாரம் செய்து வந்த நந்திகிராமத்தைச் சேர்ந்த பூமி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகள் மீது சி.பி.எம். குண்டர்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தினர். அவர்களின் வீடுகள்வாகனங்கள் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டன.
சிங்கூர்நந்திகிராமம் பகுதியில், அன்னிய சக்திகள் ஊடுருவி மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகப் புளுகி, அடக்குமுறைகளை நியாயப்படுத்தி வந்த சி.பி.எம் கட்சி, தற்போதைய பஞ்சாயத்து தேர்தல் வெற்றி மூலம் தமது செல்வாக்கை நிரூபிக்கலாம்; பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை இத்தேர்தலைச் சாதகமாக்கிக் கொண்டு பழிவாங்கி ஒடுக்கலாம் என்று கணக்கு போட்டு, இப்பகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு குண்டர் படைகளை ஏவியது.

சி.பி.எம் குண்டர்படையின் வன்முறைகள் பற்றிய புகார்கள் குவியத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் மத்திய ரிசர்வ் போலீசுப் படையை இப்பகுதிகளில் குவித்தது. ஆனாலும், உள்ளூர் போலீசின் துணையுடன் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். மத்திய ரிசர்வ் போலீசு பல இடங்களில் சி.பி.எம்.குண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி, பாதுகாப்பு அளித்த பிறகே எதிர்க்கட்சியினர்.. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, June 18, 2008

தேசம் பேசும் கருத்துச் சுதந்திரம் என்பது, மற்றவனை தூற்றுவதற்கான உரிமையைத்தான்

மக்களின் விடுதலைக்கான கருத்து சுதந்திரத்தையல்ல. அதை அது பேசுவதும் கிடையாது. சமூக நோக்கமற்ற கருத்துச் சுதந்திரம் என்பது, அரட்டையும், கொசிப்புமாக, அது காழ்ப்பாக தூற்றுவதுமாக மாறுகின்றது. இப்படித்தான் தேசம் நெற் புழுத்துக் கிடக்கின்றது. இப்படிச் செய்வதையே தேசம் தனது 'தொழில் நேர்மை" என்கின்றது.

இந்த 'தொழில் நேர்மை" க்கு ஏற்ற அரட்டைக் கும்பல், புலிகளை வைத்து ஜனநாயகத்துக்கு நீளம் அகலம் சொல்லுகின்றனர். உலக ஜனநாயகத்துக்கு வரைவிலக்கணம் எழுதும் தமிழ் வல்லூறுகள், அனைத்தையும் புலியில் அமர்ந்தபடி தான் கொத்திக் கிளறுகின்றது. புலியல்லாத அனைத்து மக்கள் விரோதத்தையும், தனக்கு பிடித்ததையும் சீவி சிங்காரிக்க வைக்கின்றது. ஆகா ஆகா இதுவல்லவோ ஜனநாயகம், என்ன அழகு என்கின்றது. மனித குலத்துக்கு எதிரான தனது சொந்த வக்கிரங்களை எல்லாம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் என்று போற்றுகின்றது. புலியின் அரசியலை மறுக்காது, அதே அரசியலை உலையில் போட்டு புலியையே நக்கி உண்ணுகின்றது. தமது பாசிச 'தொழில் நேர்மை"க்கு ஏற்ப, கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தமக்கேயான பாணியில் புரட்டிப் போடுகின்றனர்.

தேசம்நெற்றின் 'தொழில் நேர்மை" என்பது, இரண்டு பாசிசத்துக்கும் இடையால் ஒட்டுவது. இந்த இரண்டு பாசிசத்தையும் நம்பியே இருப்பது, ஊடகவியல் தர்மமாம். இவர்களை தனது சொந்த வாசகர்களாகக் கொண்டு கும்மியடிப்பது தான் அரசியலில் 'தொழில் நேர்மை" என்கின்றனர். இப்படி பாசிசத்திற்கும் தான் வடிகாலாக இருந்து பிழைக்கும் தொழிலைத் தான், தேசம் நெற் 'தொழில் நேர்மை" ஊடாகச் செய்கின்றது. தேசமும், தேசம்நெற் பொறுக்கிகளும் இதை 'தொழில் நேர்மை" என்று சொல்ல, மற்றப் பொறுக்கிகளோ இதை ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்கின்றனர்.

வாசகர்களுக்கு பின்னால் இருந்து லூட்டி அடிப்பது, அதை நியாயப்படுத்துவது' தொழில் நேர்மை"யாகின்றது. சினிமா உலகில் ஆபாசத்தை சினிமா ஆக்கிவிட்டு, அதை ரசிகரின் விருப்பமாக கூறி நியாயப்படுத்துவது போன்றது. தேசம்நெற் வாசகர் பகுதி, அசல் நிதர்சனம்டொட்கொம், விழிப்பு போன்ற இணையங்களாக உள்ளன. தமது சமூக விரோதத்துடன், கழிசடைத்தனமான வகையில் காழ்ப்புகளைக் கொட்டியும், காழ்ப்;புகளை விதைத்தும், பொய்யையும் புரட்டையும் அள்ளி தெளித்தே அவை இயங்குகின்றன. தனிமனித முரண்பாடுகளையும், குழு வக்கிரங்களையும் தூவி, அவை அதைத் தூண்டுகின்றன. இது சமுதாயத்துக்கு தேவையா? இதன் சமூக நோக்கம் தான் என்ன? இதில் இருந்து தேசம்நெற் எப்படி வேறுபட்டது? அது இயங்கும் செய்திகளின் அடிப்படை தான் என்ன? நிதர்சனம்டொட்கொம், விழிப்பில் இருந்து தேசம்நெற் எப்படி வேறுபடுகின்றது?
.

குப்பையாகிப் போன வாழ்க்கை : குப்பையைக் கிளறித் தினியைத் தேடும் கோழியைப் போல வாழும் சிறுவர்களின் அவலக் கதை.

பெருங்குடியின் குப்பை மலையில் அதிகாலையிலேயே கையில் கோணிப்பையுடன் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் கண்ணகி எனும் 8 வயதுச் சிறுமியும் குணா போன்ற பதின்வயதுச் சிறுவர்களும் தினமும் இம்மலையினைக் குடைந்தால்தான் அவர்களுக்கு 20 ரூபாயாவது கிடைக்கிறது. பகலில் எப்போதும் இவர்களைப் போலக் குறைந்தது நூறு சிறுவர்களாவது பெருங்குடிக் குப்பை மலையில் கையில் குப்பை கிளறும் குச்சிகளுடன் அலைகிறார்கள்.

உயிருக்கே உலை வைக்கும் மருத்துவமனைக் கழிவுகளான பேண்டேஜ்கள், அழுகிய சதைத் துண்டுகள், தூக்கியெறியப்படும் ஊசிகள், இரசாயனக் கழிவுகள் என எண்ணற்ற அபாயங்களுடன், எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேட்டில் இச்சிறார்கள் அலைந்து திரிவதால் கை கால்கள் எல்லாம் ஆறாத புண்களுடனும், தீராத இருமல்களுடனும் இவர்களின் இளமை, மொட்டிலேயே கருகி நிற்கிறது. புகை மூட்டத்தினூடே, குப்பைகளைக் கொட்ட வரும் லாரிகளில் அடிபட்டு மாண்ட சிறுவர்கள் பற்றி எல்லாம் வெளியே தெரிவதே இல்லை.

இதே சிங்காரச் சென்னையில் மேட்டுக்குடிக் குழந்தைகள் சனி, ஞாயிறுகளில் சுகமாய் ஓய்வைக் களிப்பதற்கென்றே மாநகரைச் சுற்றிலும் கேளிக்கைப் பூங்காக்கள், வீடியோ கேம்ஸ் மையங்கள், அமெரிக்க இனிப்புச் சோளத்தை கொறித்தபடி வலம் வர சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா என எண்ணற்ற கேளிக்கை மையங்கள் உள்ளன. இக்குழந்தைகள் விளையாடுவதற்கான விலை உயர்ந்த பொம்மைகளை விற்க அரசே கண்காட்சி நடத்துகிறது. தன் செல்ல மகளிடம், அவளுக்குப் பிடித்த பொம்மையை என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்கிச் செல்லும் தாய்மார்கள் உள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டுகளிக்க ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கிச் சென்று ஊளையிட்டு ரசிக்கின்றனர் மேல்தட்டு வர்க்கச் சிறார்கள். சேப்பாக்கத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ள மெரீனா கடற்கரையில் அதே வயதொத்த சிறார்களோ தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக பட்டாணி, சுண்டல் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
சிங்காரச் சென்னை மட்டுமல்ல,
.

Tuesday, June 17, 2008

சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை"

சமூக நோக்கமற்ற புலித் தேசியம். சமூக நோக்கமற்ற புலியெதிர்ப்பு ஜனநாயகம். சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை". இவைக்கு பின்னால், தெளிவான மக்கள் விரோத நோக்கங்கள் தெளிவாக உண்டு.

இங்கு சொந்த சுயநலம் உண்டு. அதுதான் சொந்த 'தொழில் நேர்மை" பற்றி பேச வைக்கின்றது. மக்களுக்கு எப்படி நேர்மையாக செயல்படுகின்றீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்;. மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசத்தையும், எப்படி நேர்மையாக எதிர்த்துப் போராடுகின்றீர்கள்? அதைச் சொல்லுங்கள். இதுவல்லாத ஊடகவியல் நேர்மை என்பது, பாசிசத்தை ஆதரித்து பூசிப்பது தான். இரண்டு பாசிசத்தை எதிர்த்து, அந்த வகையில் கருத்தாளரைக் கொண்டிராத தேச 'தொழில் நேர்மை"யைக், கொண்டு போய் குப்பையில் போடுங்கள். அது யாருக்குத் தான் தேவை. இது சொந்த சுயநலத்துக்கு வேஷம் போட்டுக் காட்ட உதவும் என்று, கனவு காணாதீர்கள்.

இங்கு சுயநலம் தான் 'தொழில் நேர்மை" என்கின்றது. தொழில் வளர்ச்சி, தொழில்சார் பிரபல்யம் தான், தேச ஆசிரியரின் முதன்மையான நலனாகின்றது. இங்கு சமூக நோககமல்ல. சமூக விடையத்தை தனது 'தொழில் நேர்மை"யின் பெயரில், பயன்படுத்தவே முனைகின்றனர். இதனால் புலியெதிர்ப்பையும், இடதுசாரியத்தையும் கூட சந்தைப்படுத்தியவர்கள்.

இதற்கு ஏற்ப இந்தப் பொறுக்கி காலத்துக்கு காலம் ஆட்களையும், அவர்களின் சொந்த பலவீனங்களையும் தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தியதுடன், பயன்படுத்தவும் முனைகின்றான். மனித அவலத்தை கேலிசெய்யும் இந்த பொறுக்கியுடன் சேர்ந்து பொறுக்கும் கூட்டத்தையும், இந்த பொறுக்கியின் பல்லாக்கை தூக்கும் சுயநலக் கூட்டத்தை 'தொழில் நேர்மை" ஊடாக தான் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றேன் என்பதையும் கேலிசெய்து விடுகின்றான். இடதுசாரியம், அரசியல் எல்லாம் 'தொழில் நேர்மை" ஊடாக விலை போகின்றது.
.

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்” -திருமதி மங்கையற்கரசி அம்மையார்

நீங்கள் சுட்டுவிரலை நீட்டி யார் யார் துரோகிகள் என வரையறுத்தீர்களோ வீராவேசப் பேச்சில் நரம்பு முறுக்கேற உணர்ச்சிப் பிழம்பாக்கி இரத்தத்திலகமிட்டு தம்பிகளை அண்ணன் அமிர் தளபதியாக விடுதலைக்களத்தில் முளைத்தெழுந்த ”களைகளை” துடைத்தெறிந்து விடுதலையை வென்று வாருங்கள் சிங்களவன் தோலைக் கொண்டு வாருங்கள் செருப்பாய் அணிகின்றேன் என்றெல்லாம் வெறியூட்டி ” ”ஓடையிலே என் சாம்பல் ஓடும்போதும் ஒண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்” ”பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்” என கீதங்கள் பாடி அனுப்பி வைத்து எதைச் செய்யச் சொன்னீர்களோ தூண்டினீர்களோ அவற்றையே தான் அவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். அன்று உங்கள் ஆணையில் இருந்தார்கள். இன்று இல்லை.

உங்கள் சுட்டுவிரல் ஏவியது. ”உங்கள் பெடியள்” சுட்டுவிரல்கள் நீங்கள் காட்டிய திசையில் துப்பாக்கியை இயக்கியது. இயக்கி உங்கள் அரசியல் எதிரிகளை துடைத்தெறிந்தார்கள். இதுவே தான் ஆரம்பம் என்பது நீங்கள் புரியாததல்ல. அன்று சுடும் உத்தரவை ”பிறப்பிக்கும்” உங்கள் மேடைப் பேச்சுக்கள் உருவாக்கிய ”வளர்த்த கடாக்கள்” இன்று வேலி தாண்டி விட்டனவே என்ற ஆதங்கமா உங்களுக்கு. உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் ”வளர்த்த கடா உங்கள் மார்பில் பாய்ந்தது” மட்டுமல்லாமல் விடுதலை என்றும் தோட்டப்பயிரை துவம்சம் செய்து நிற்பதிலும் உங்களுக்கு பங்குண்டு என்பதும் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அவற்றையெல்லாம் பேசிக் கொள்ளாமல் மூடி வைத்துவிட்டு மீண்டும் அரசியல் மேடைக்கு வரும் கரிசனை இப்போது தங்களுக்கு ஏற்பட்டது ஏனோ?

ஒருவேளை உங்களுக்கு அதே அரசியல் மேடை இன்றும் இருந்திருந்தால் உங்கள் கட்டளைக்கு அவர்கள் துப்பாக்கிகள் குறிபார்க்கும் நிலைமையும் இருந்திருந்தால் இன்று நடப்பவை யாவும் ” வெறும் களையெடுப்புகளாவும் விடுதலைப் பாதையில் முளைத்த தடைக்கற்கள் எனவும் உங்கள் பாசையில் துரோகிகளாகவும் நீங்கள் தளபதிகளாகவோ விடுதலை வீராங்கனையாகவோ வலம் வந்திருப்பீர்கள். நதியின் ஊற்று ஓடும் நதியை பார்த்து நீ எங்கிருந்து பிறப்பெடுத்தாய் என்று கேட்க முடியுமா?

தேசமும் ராஜேஸ் பாலாவும் மீண்டும் உங்களை தூசு தட்டி தூய்மையானவர்களாக ஏன் தூக்கி நிறுத்துகிறார்கள் ?
.

Monday, June 16, 2008

பாசிசத்தை எதிர்க்காத 'தொழில் நேர்மை"

மனித அவலத்தையே சமூகமாக்கிவிட்ட பாசிசத்தை, எதிர்க்காத ஒரு ஊடகவியலை 'தொழில் நேர்மை" என்ற பெயரில் நடத்துவதே பாசிசம் தான். பாசிசத்தை இப்படியும் அரங்கேற்ற முடியும் என்பது, பொறுக்கிகளினதும் கிரிமினல்களினதும் வக்கிரமாகும். புலி - புலியெதிர்ப்பு பாசிட்டுகளுடன் கூடி, நடத்துகின்ற அரசியல் விபச்சாரம் தான், அவரின் 'தொழில் நேர்மை" யாகின்றது.

இந்த தேசம்நெற்றுக்கு என்று எந்த சமுதாய நோக்கமும் கிடையாது. இதை நடத்தும் ஜெயபாலனோ, மனிதாபிமானமற்ற ஒரு பாசிச வியாபாரி. 'தொழில் நேர்மை" பேசும் வண்ணம், பாசிசம் பெற்றெடுத்த ஒரு பொறுக்கி. இதற்குள் சில வலது இடது பேசும் தரகர்கள். தனது சொந்த வியாபாரத்தைச் செய்ய, இடதுசாரியம் முதல் வலதுசாரியம் வரை, இவருக்கு தேவைப்பட்டது, தேவைப்படுகின்றது. அன்று முதல் இன்றுவரை அவன் செய்ததும், செய்து வருவதும் இதைத்தான். இதை புரிந்து கொண்ட சிலர், இதில் இருந்தே விலகிவிட்டனர்.

இந்த பொறுக்கியுடன் யாரெல்லாம் சேர்ந்து பொறுக்க முடியுமோ, அவர்கள் கூடுகின்றனர். முன்பு தேசம் பத்திரிகையில் இருந்தவர்கள் ஏன் விலகினர் என்று ஆராயாது, பொறுக்கியுடன் சேர்ந்து வலதுகள் இடதுகள் தத்தம் பங்குக்கு பொறுக்க முனைகின்றனர்.

இங்கு அரசியல் பேசாத தேசத்தின் 'தொழில் நேர்மை" என்பது, அரசியல் அவதூறாக அரசியலைக் கட்டமைப்பதாகும். மக்களின் விடுதலைக்கான எந்த சமூகக் கூறும் வளர்ந்துவிடக் கூடாது என்பதே, இதன் அரசியல் இலக்காகும்;. அரசியல் பேசாத இந்தத் தேசம் தான், 'இரயாகரன் - அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும்" என்ற கட்டுரை ஊடாக, தனது அரசியல் முகத்தையும் இலக்கையும் வெளிக் காட்டியது.

இங்கு இதன் மூலம் இரண்டு விடையங்களை தேசம் அரங்கேற்றிக் காட்டியது.
.

பாசிசத்தின் கூடாரம் தான் தேசம் நெற்

புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார்.

பாரிஸ் கூட்டத்தை திரித்தும், புரட்டியும், தேசம்நெற்றை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக விளம்பரப்படுத்த முனைந்தனர். இதை ஜனநாயகத்தின் பெயரில், அதன் ஜனநாயக விரோதத்தை இட்டுக்கட்டுவது கூட பாசிசம் தான்;. (இதை எழுதிய சுரேஸ் பினாமியா? அண்மையில் கள்ள கிரடிற்காட்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதற்காக, இதே சுரேஸ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தது பலர் அறிந்ததே. இதில் இவர் அறியா வண்ணம் பினாமியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி தேசநெற்றிலும் இவர் பினாமியா? என்ற சந்தேகம் உண்டு.)

கேள்வியே இது தான். தேசம்நெற்றை கண்டிப்பது, இதற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது, அதை பார்க்க வேண்டாம் என்று கோருவது கூட, ஒரு ஜனநாயக உரிமையா? இல்லையா?. இங்கு இதை மறுப்பது தான் பாசிசம்.

தேசத்துக்கு எதிராக ஏன் எதற்கு இவை கோரப்படுகின்றது என்பது தான், அதாவது மக்கள் நலனுடன் தொடர்புடையாத இல்லையா என்பது தான், இதன் நோக்கத்தை தீர்மானிக்கின்றது. ஆனால் தேசம்நெற் சதியாளர்கள், இதை மறுக்கும் ஜனநாயக உரிமையையே ஜனநாயகம் என்கின்றனர். இந்த உரிமையை மறுக்கும் பாசிசத்தை, ஜனநாயகம் என்றனர். இதைத்தான் தேசம்நெற் வளர்க்கின்றது. வெட்கக் கேடான மனித விரோத பாசிச காழ்ப்;புகளாகவே, அவற்றைக் கொட்டி தமது பாசிச அரிப்பைத் தீர்க்கின்றனர்.

தமது இந்த பாசிச காழ்ப்புகளை, முன்னைய இயக்க அடையாளத்தின் ஊடாக முத்திரை குத்துவதாக மாறியது. நாயைவிடக் கேவலமான பாசிசக் குலைப்பு. அவர்களின் அரசியலை வைத்து விவாதிக்க முடியாது, அவதூறுகள் மூலம் பினாற்றுவது தான், இவர்களின் மொத்த அரசியல் ஆகிவிட்டது. அவர்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளனரோ அதே அரசியலைத் தான், இந்த புதிய பாசிச 'ஜனநாயக" ஜாம்பவான்கள் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

சமுதாயத்தின் தேவையுடன் இயங்காத எவையும், சமூகத்துக்கு தேவையற்றவை. அவை சமுதாயத்துக்கு எதிரானவை. இவையோ சமுதாயத்துக்கு எதிராக நஞ்சிடுபவை தான். பொருளை உற்பத்தி செய்தாலும் சரி, கருத்தை உற்பத்தி செய்தாலும் சரி, அது சமுதாய நலனுக்கு எதிரானது என்றால், அவை இந்த சமூக அமைப்புக்கு தேவையற்றது.
.

தொழல் வளர்ச்சி : கருணாநிதியின் காரியவாதம் இராமதாசின் கவாச்சிவாதம்

"புதிய இரு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்; அது குறித்து சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்குவதாகக் கூறிக் கொண்டு, ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது; புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; வெளிநாட்டினர் அல்லாமல் தமிழர்கள் தொழில் தொடங்க அரசு ஊக்குவிக்க வேண்டும்'' என்று கடந்த மே முதல் நாளில் காட்டமாக அறிக்கை வெளியிட்டார், இராமதாசு.

இதற்கு விளக்கமளித்து கேள்வி பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், தவறான தகவல்களின் அடிப்படையில் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளதை அம்பலப்படுத்தியதோடு, கடந்த ஈராண்டுகளில் 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதில் 6 நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1 லட்சத்து 26 ஆயிரத்து 610 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் புள்ளி விவரங்களை அடுக்கி, எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்காதீர்கள் என்று இராமதாசுக்குப் பதிலளித்தார். இராமதாசு இப்படியெல்லாம் கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியின் விசை ஒடிந்திடும் நிலைக்கு உள்ளாக்கும் என்றும் இடித்துரைத்தார். தூத்துக்குடி டைட்டானியம் ஆலை முதல் ஓசூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் வரை பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததே இராமதாசுதான் என்று சாடினார்.

உடனே இராமதாசு, ""நானா தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறேன்?'' என்று எதிர்கேள்விக் கேட்டு அறிக்கை வெளியிட்டார். ""வெள்ளை அறிக்கை கேட்டால் மவுனம் சாதிக்கிறார்கள். எத்தனை பேருக்கு, என்ன மாதிரியான வேலை கிடைத்துள்ளது என்று கேட்டால் பதில் இல்லை. வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு வேலையின்றி தவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கணினி தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்பைப் பெருக்கும்படி தொழிற்கொள்கை அமைய வேண்டும். வெளிநாட்டு உதவியுடன் வரும் முதலாளிகளுக்கு இங்குள்ள நிலங்களைத் தாரை வார்க்கக் கூடாது'' என்றெல்லாம் அதில் பொருமித் தீர்த்தார்.
.

Sunday, June 15, 2008

சபாலிங்கம் கொலைசெய்யப்பட்ட காலகட்டம் பற்றிய நிலைமையை மறந்து தண்ணிபாய்ச்சுவது ஒரு ஆய்வுமுறையே அல்ல

சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அவர்வீட்டு கொல்லைப்புறத்தில்கூட அஞ்சலி எழுத அச்சமடைந்து இருந்தவர்கள் பலர் என்று நாவலன் எழுதுகிறார். அன்று தேசம் நெற் இருந்திருந்தால் முகமிலிகளாக அஞ்சலியைப் பதிவுசெய்திருக்கும் என்று பின்நோக்கிய ஆரூடம் கொடுத்திருக்கிறார். திரும்பத்திரும்ப இந்த இரு வசனங்களையும் வாசித்துப் பார்த்தால் இதற்குள்ளேயே விடையும் இருப்பதை காணுவீர்கள்.


இதைவிட முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விடயமாக ஒன்று இருக்கிறது. சபாலிங்கம் கொலைசெய்யப்பட்ட காலகட்டம் பற்றிய நிலைமையை மறந்து தண்ணிபாய்ச்சுவது ஒரு ஆய்வுமுறையே அல்ல. 80 களின் நடுப்பகுதியில் புலிகளின் அடாவடித்தனம் உச்சத்தில் இருந்ததை (அனுபவித்த) சிறுபத்திரிகைக்காரர்கள் அறிவர்… புலிதவிர்ந்த -சிலமணிநேர- வானொலி ஒலிபரப்பைக்கூட நடத்த முற்பட்டவர் அறிவர். இயக்கக் கூட்டங்களுக்குள் புகுந்தடித்தனர். புதிய வெகுஜன அமைப்புகளிலிருந்து சிறுபத்திரிகைக்காரர்களின் ஒன்றுகூடல்கள்வரை கண்காணித்தபடி இருந்தனர்.. செய்திப் பத்திரிகைகளை தடைசெய்தனர் அல்லது கடைகளில் விற்கவிடாது பயமுறுத்தினர்… குகநாதன் ஆரம்பித்த தமிழ்த் தொலைக்காட்சியை அபகரித்தனர்…இப்படிப் பல. இந்த அடாவடித்தன சூழல் சபாலிங்கத்தின் கொலையுடன் ஒரு புதிய வடிவம் (கொலைவடிவம்) எடுத்திருப்பதாக அவர்கள் கருதினர். இது தமது பாதுகாப்புப் பற்றிய கேள்விகளை இந்த வட்டத்துள் எழுப்பியதும், தாம் அனுபவித்துக்கொண்டிருந்த அராஜகத்தின் வளர்ச்சிப்பாதையாக இந்தக் கொலையைக் கண்டதையும், அதனால் அமைப்புவடிவமற்ற வட்டங்கள்; அதிர்ச்சியடைந்ததையும் புரிந்துகொள்ள முடியாத ஆய்வுகள் வரட்சிமிக்கது.
.

Saturday, June 14, 2008

நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!

Anonymous said...
இரயாகரனுக்கு ஆதரவளிக்கும் நீ விடுதலைப்புலிகளுக்கு எதிராளி என்பதை நிருபித்துவிட்டாய். நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!
27 May, 2008 9:23 AM

தமிழச்சி said...
ஷட் அப் நாயே!எங்களை துரோகி என்று சொல்லும் உரிமையை உனக்கு யாரடா நாயே கொடுத்தது?
27 May, 2008 9:32 AM

ஏகலைவன் said...
மதிப்பிற்குரிய அனானி நண்பரே!
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நீர்தான் துரோகிகளின் பட்டியலில் இடம்பெறப் போகிறீர்கள்.

தமிழர்களை வேட்டையாடுவதில் சிங்கள இராணுவத்திற்குச் சளையாமல் துரோகத்தனம் புரியும் புலிகளை உயர்த்திப் பேசமுடியுமா?

இங்கே வந்து அங்கலாய்த்துக் கொள்ளும் நீங்கள், இரயாகரனின் தளத்தில் பதிவிடப்படும், புலிகளை விமர்சிக்கும் கருத்துக்களுக்கு எதிராகச் சென்று மறுமொழியிடலாமே, அதன் மூலமாக நல்லதொரு விவாதத்தைத் தொடங்கலாமே. உங்களை யார் தடுத்தது.
27 May, 2008 2:18 PM

தமிழச்சி said...
என்ன ஏகலைவன் இது?
காலையில் போட்ட இந்த பதிவுக்கு எவ்வளவு அனானி பின்னூட்டங்கள்? எவ்வளவு மிரட்டல்கள்? எனக்கு அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கிப் போனாலும் இவர்கள் விடுவதாயில்லை!

யார் இவர்கள் முகம் தெரியாத கபோதிகள் என்னை துரோகி என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. போய்த் தொலைகிறது என்று இருந்தால் தமிழ்மணத்தில் நான் ஆபாச எழுத்தாளரா? சிறந்த இலக்கியவாதியா? என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது. அந்த தளமும் அந்த பதிவரும் யாருக்கு ஆதரவாளரென்று படிப்பவர்களால் ஊகித்துக் கொள்ள முடியும். அதையும் போய் தொலைகிறது என்று விட்டால் ஓட்டெடுப்புக்கு விளம்பரப்படுத்தி இன்னொரு வலைதளம் விளம்பரம் செய்கிறது?

இங்கே பாருங்கள் தோழர்! தோழர் இரயாகரனைப்பற்றி எழுதிய பிறகே இவ்வளவு கூத்துக்களும் ....
.

Friday, June 13, 2008

நவீன் பிரசாத் கொலை : தமிழகப் போலீசின் நரபலி

நவீன் கொல்லப்பட்ட பின்பு, அது பற்றி சட்டசபையில் பேசிய கருணாநிதி, ""தி.மு.க.வின் இரண்டு வருட ஆட்சியில் 24 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களுள் எட்டு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கடந்த (ஐந்து வருட) அ.தி.மு.க. ஆட்சியில் 56 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுள் ஒருவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை'' என்ற புள்ளி விவரத்தை எடுத்துப் போட்டுள்ளார். எனவே "தீவிரவாதிகளை' ஒடுக்குவதில் தனது "சூத்திர' ஆட்சி எள்ளளவும் பார்ப்பனபாசிஸ்டுகளின் (ஜெயா) ஆட்சிக்குச் சளைத்ததில்லை எனக் காட்டுவதற்கு நவீனின் கொலையும் கருணாநிதிக்கு அமோகமாகப் பயன்படும்.

மாவோயிஸ்ட் கட்சியின் அனுதாபிகள் பலரும், "போலீசார் நவீனை எங்கோ வைத்து அடித்துக் கொன்றுவிட்டு, மோதலில் இறந்து போனதாக நாடகமாடுவதாக''ப் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். அவர் உடலின் பல இடங்களில் சித்திரவதைக்குள்ளான இரத்தக் காயங்கள் இருப்பதையும்; அதேசமயம், அவரது ஆடையில் குண்டு துளைத்துச் சென்றதற்கான அடையாளமோ, ஆடையில் இரத்தக் கறையோ இல்லாதிருப்பதையும் அத்தோழர்கள் பத்திரிகையாளர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

""பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாகப் பாடும் பிலாக்கணம்'' என்று இதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் மோகன்குமார்; மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த கோ.சுகுமாரன்; குடியுரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பேரா.கோச்சடை; குடியுரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி; ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டி, மும்பய்ஐச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.கோபால்; தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மார்க்ஸ் இளவேனில் ஆகிய மனித உரிமை ஆர்வலர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையும் கூட, நவீன் பிரசாத் போலி மோதல் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயப்பாட்டை எழுப்பியிருக்கிறது.
.

Thursday, June 12, 2008

புலி என்றும் அரச கைக்கூலிகள் என்று, நாம் தூற்றப்படுகின்றோமே! ஏன்?

மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.


புலியை ஆதரிக்காத அனைவரும் துரோகி என்று கூறி புலி நடத்தும் அரசியல் படுகொலை போல், அரச ஆதரவு அல்லாத அனைத்தையும் புலியாக காட்டி படுகொலை செய்வது போல், இன்று நாம் இருதரப்பாலும் தமக்கு எதிரானவராக அடையாளம் காணப்படுகின்றோம்.

நாங்களோ பெரிதாக ஒன்றும் கூறவில்லை. மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு, அரசும் புலிகளும் எப்படி காரணமாக இருக்கின்றனர் என்பதையே, நாம் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி விமர்சித்து வருகின்றோம்.

எமது இந்த அரசியலை எதிர்கொள்ள, இவ்விரண்டு மக்கள் விரோதப் பிரிவினராலும் முடிவதில்லை. இதனால் நாம் தொடர்ச்சியாக தூற்றப்படுகின்றோம். முன்பு இவர்கள் எமது இந்த விமர்சனத்தை தனிநபர் தாக்குதலாக தூற்றியவர்கள். இன்று எம்மை புலி என்றும், அரச கைக் கூலிகள் என்றும் தூற்றுகின்றனர்.

கடந்த காலத்தில் தனிநபர் முனைப்புகள் முதன்மை பெற்று, தனிநபர் ஊடாக அரசியல் வெளிப்பட்டது. அவர்கள் ஊடாக அவர்களின் அரசியல் இனம் காணப்பட்டு, அவை எம்மால் அமபலப்படுத்தப்பட்டது. இதையே அவர்கள் தனிநபர் தாக்குதல் என்றனர். இன்று அந்த நபர்களில் பெரும்பான்மையானோர் பேரினவாத அரசின் பின்நிற்கின்றனர். அரசு சார்பு குழுக்களின் அடிவருடிகளாகவும், அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், அவர்களுடன் சேர்ந்தே புலம்பெயர் அரசியல் விபச்சாரம் செய்பவராக அனைவரும் அம்பலமாகி கிடக்கின்றனர். புலி ஒழிப்பை அரசுடன் சேர்ந்து செய்யும் துரோகக் கும்பலாக அம்பலமாகி நிற்கின்றது. புலம்பெயர் புலியல்லாத நிகழ்ச்சி நிரல்கள், அரச வேலைத் திட்டத்துக்கு ஏற்புடையதாகவே அமைக்கின்றது. இதற்கு மாறாக இவர்கள் எதையும் மாற்றாக முன் வைப்பதில்லை. எதைக் கதைத்தாலும், அதை ஆதரிப்பதில் போய் முடிகின்றது.
.

Wednesday, June 11, 2008

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள்

"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது.

தமிழ் மக்களின் தேசிய உரிமையை மறுப்பதும், ஜனநாயக உரிமையை மறுப்பதும், இதற்குள் உள்ள அரசியல் சாரம். இது சாத்தியமல்ல என்கின்றனர். இவற்றை மறுத்து தீர்வு காணுதல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்கின்றனர். மக்களின் உரிமையை மறுப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள் என்கின்றனர்.

இப்படி இதற்குள் தான் அரசியல் வாதங்கள், தூற்றல்கள், படுகொலைகள் என அனைத்தும் அரங்கேறுகின்றது. இந்த 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகளின் பெயரில் தான், படுகொலைகள், கடத்தல்கள் முதல் யுத்தத்தில் பலியிடல் வரை அனைத்தும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இந்த அரசியலை ஆதரிக்கின்ற அனைவரும், இதன் மூலம் இழைக்கின்ற மொத்த குற்றங்களுக்கு உடந்தையானவர்கள் தான்.

இப்படி முடிவின்றி நீண்டகாலமாக இந்த அரசியல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தாக கூறிக்கொண்டு, மக்களுக்கு எதிரான 'தேசியத்தையும்" 'ஜனநாயகத்தையும்" ஆதரித்து அரங்கேற்றுகின்றனர். நாம் மட்டும்தான், இதற்கு வெளியில், இதற்கு எதிராக நீண்டகாலமாக, எதிர் வினையாற்றி வருகின்றோம்.
.

Tuesday, June 10, 2008

அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?

இந்தியப் பாதுகாப்புத்துறை இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஊடாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அக்னி5 என்ற ஏவுகணையையும்; ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ""ஹைபர் சோனிக்'' ஏவுகணையையும்; விண்ணில் இருந்து செலுத்தக்கூடிய ""அஸ்த்ரா'' ஏவுகணையையும் பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இத்தகைய ஏவுகணைகள், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகளைச் சுமந்து கொண்டு சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கக்கூடிய திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

இதுவொருபுறமிருக்க, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணை; பூமியில் இருந்து விண்ணுக்குச் சென்று, அங்குள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை; நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே15 சாகரிகா ஏவுகணை எனப் பல்வேறு விதமான பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்தியப் பாதுகாப்புத் துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.

இந்தியா இப்படி முண்டா தட்டிக் கொண்டு நிற்பதற்கு எதிர்வினைகள் இல்லாமல் போகுமா? இந்தியா அக்னி3 ஏவுகணையைப் பரிசோதனை செய்த அதே சமயத்தில், பாகிஸ்தான், இந்தியாவின் உட்பகுதிகளைக் கூடத் தாக்கக் கூடிய திறன் கொண்ட ""ஷஹீன்2'' என்ற ஏவுகணையை, இரண்டு முறை ஏவிப் பரிசோதனை நடத்தியது. சீனாவோ, ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுண்டுகளை ஏந்திக் கொண்டு, 8,000 கி.மீ சுற்றளவில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும்; ஒரேயொரு அணுகுண்டை ஏந்திக் கொண்டு 12,000 கி.மீ முதல் 14,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் தனது இராணுவத்தில் சேர்க்கப் போவதாக அறிவித்த்திருக்கிறது.
.

Monday, June 9, 2008

நீதி கொன்ற மோடி

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக வழக்குகளை நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கே.ஜி.ஷாவின் இடத்தில் வேறொருவரை நியமிக்க, ஐந்து நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைத்து, அவர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு குஜராத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அந்த ஐந்து நீதிபதிகளின் பெயரையும் புறக்கணித்துவிட்டு, ஓய்வு பெற்ற குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியான அக்சய் மேத்தா என்பவரை, நானாவதி கமிசன் நீதிபதிகளுள் ஒருவராக நியமித்திருக்கிறார். நரேந்திர மோடி மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவிற்குப் பதிலாக, தனது கையாட்களுள் ஒருவரை நானாவதி கமிசன் "நீதிபதி'யாக நியமித்திருக்கலாம். ஏனென்றால், மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவின் பணிக்கால வரலாறு அப்படிப்பட்டது. குஜராத் முசுலீம் படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கில், முக்கிய, முதன்மைக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்குப் பிணை வழங்கியவர்தான் நீதிபதி அக்சய் மேத்தா. அவ்வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், மோடிக்கும் அக்சய் மேத்தாவுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பின்னணியை நாம் விவரிப்பதைவிட, பாபு பஜ்ரங்கியின் வார்த்தைகளில் கேட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தெகல்கா ஆங்கில வார இதழ் குஜராத் முசுலீம் படுகொலை பற்றி நடத்திய இரகசிய விசாரணையில், பாபு பஜ்ரங்கி தனக்குப் பிணை கிடைப்பதற்காக நரேந்திர மோடி பட்ட பாட்டை பெருமிதத்தோடு விளக்கியிருக்கிறான். இதோடு, நரோடா பாட்டியா படுகொலை பற்றியும்; அப்படுகொலை வழக்கை ஊத்தி மூடிவிட குஜராத் போலீசு செய்திருக்கும் சதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகமதாபாத் நகர போலீசின் தலைமை அலுவலகத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகுதிதான் நரோடா பாட்டியா. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் எரிந்து போன மறுநாளே, பாபு பஜ்ரங்கி தலைமை தாங்கி வந்த கும்பலால் நரோடா பாட்டியா தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 200 முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது பாபு பஜ்ரங்கியே தரும் கணக்கு. ஆனால், அரசோ 105 முசுலீம்கள்தான் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அத்தாக்குதல் நடந்தபொழுது அகமதாபாத் நகர போலீசு கமிசனராக இருந்த பி.சி. பாண்டே, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே, அப்பகுதியில் கொல்லப்பட்ட பல முசுலீம்களின் உடல்களை போலீசு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய், நகரத்தின் பல பகுதிகளில் வீசியெறியச் செய்தார். இதற்குப் பரிசாக, பி.சி. பாண்டே குஜராத் போலீசு துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
.

Sunday, June 8, 2008

முன்னுரை : இந்து மதப் பார்ப்பனிய தத்துவ சாரம் தான் சாதியம்

எதுவெல்லாம் இந்துத்துவமோ, அதுவெல்லாம் சாதியாக இருக்கின்றது. எதுவெல்லாம் சாதியோ, அதுவெல்லாம் இந்துத்துவமாக இருக்கின்றது. எதுவெல்லாம் மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இருக்கின்றது. எவையெல்லாம் மனித விரோதத் தன்மை கொண்டதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இயங்குகின்றது.

இப்படி ஒரு இந்துத்துவ சமூக அமைப்பு என்பது, சாதிய சமூக அமைப்பாகவே உள்ளது. இது தனது சமூக அமைப்பின் அனைத்து மனித விரோதத் தன்மையையும், தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கின்றது. எதுவெல்லாம் சமூகத்துக்கு எதிரான கொடூரங்களாகவும், கொடுமைகளாகவும், சமூக விரோத செயலாகவும் உள்ளதோ, அவையெல்லாம் இந்துத்துவ சாதி வடிவில் நீடிக்கின்றது.

இப்படி சாதியமும், அதன் தத்துவமான இந்துத்துவமும் மனிதத் தன்மையற்றது. இது சகமனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இந்த இந்துத்துவ சாதிய சமூக அமைப்போ, காட்டுமிராண்டித்தனமானது. இதற்கு அடங்க மறுத்து மீறும் போது, அது கொல் என்கின்றது. அனைத்தையும் பார்ப்பான் என்ற ஒரு சாதியின் குறுகிய நலனில் இருந்து தான், இந்த இந்துத்துவக் கோட்பாடு பார்ப்பனியமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தான் சாதிய சமூகம்;அடிப்படையான வாழ்வுசார் ஓழுக்கமாக்கி, மனித வாழ்வை இந்துத்துவத்தின் சித்தாந்தமாக்கியுள்ளது.

இந்த வகையில் இது சக மனிதனை வெறு என்று, சாதிய இந்துத்துவம் கற்பிக்கின்றது. சக மனிதனை சாதி மூலம் இழிவாடக் கோருகின்றது. மனிதத் தன்மையற்ற நடத்தைகளையே, தனிமனித ஒழுக்கமாகக் கோருகின்றது. இப்படி சாதிய இந்துத்துவ வாழ்வியலை இயந்திரமயமாக்கி, அது பார்ப்பனியத்துக்கு இயல்பாக சேவை செய்ய வைக்கின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய சிந்தனைகளை, தனது சாதிய பார்ப்பனிய எல்லைக்குள் உள்வாங்கி அதை பாசிசமாக்குகின்றது. சாதியம் ஒரு இந்துவின் தனிப்பட்ட சுதந்திர தெரிவாக காட்டி விளக்குகின்றது. இதை இந்துவின் ஒரு உன்னதமான வாழ்வியல் ஒழுங்காக பண்பாடாக, இது காலகாலமாக நீடித்து மாறாது இருப்பதாக கூறிக்கொண்டு, மற்றவனை ஒடுக்கி அடிமைப்படுத்துகின்றது. இந்த சாதிய-தீண்டாமை என்ற சமூக ஒழுங்கு தான், இந்துத்துவம். இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏற்று நடப்பது தான், இந்தியாவின் ஜனநாயகம் என்கின்றனர். இதை சகிப்புத் தன்மை கொண்ட இந்திய சமூகத்தின், இயற்கையான இயல்பு என்கின்றனர்.
.

கொள்ளைக் கூட்டத்தின் ஒப்பாரி

இது அவரின் சொந்த கருத்து மட்டுமல்ல. விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த விமர்சனம் என்ற பெயரில் மேட்டுக்குடி கும்பலின் வர்க்க வெறுப்பும், பொச்சரிப்பும் இப்படித்தான் பொங்கி வழிகிறது.

ஒரு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி (இதுவே ஃபிராடு என்பது தனிக்கதை) குறித்து இப்படி அங்கலாய்த்துக் கொள்ளும் ""சோ'' வகையறாக்கள், ஒவ்வொரு ஆண்டும் வரிச் சலுகை என்ற பெயரில் பல பத்தாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், தரகு முதலாளிகள் மேல்தட்டு வர்க்கத்திற்காகத் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.

கடந்த (200708) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 58,655 கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.

பங்குதாரர் நிறுவனங்கள் உள்ளிட்ட பிற வர்த்தகத் தொழில் நிறுவனங்களுக்கு 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ, 4,000 கோடி.

தனிப்பட்ட நபர்களுக்கு, 200708 பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகையால் ஏற்பட்ட இழப்பு 38,000 கோடி ரூபாய்.

தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகையால், 200708இல் அரசுக்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 88,000 கோடி ரூபாய்.
.