தமிழ் அரங்கம்
Monday, March 2, 2009
Sunday, March 1, 2009
Saturday, February 28, 2009
நான் உன்னோடு பேச வேண்டும்…
தலைவனே…!
இல்லை
நண்பனே…!
இல்லை
அண்ணணே...!
அன்று…
உன்னை பேசியவன் தான்
நேற்று...
உன்னை பேசியவன் ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
அர்த்தமற்றுப் போன போராட்டமும் இழப்புகளும்…!
எம்மின மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து புலிகள் நடத்துவதோ சதி அரசியல். இதன் மூலமான அரசியல் பேரங்கள், இதை அடிப்படையாக கொண்ட போராட்டங்கள் எல்லாம், விழலுக்கு இறைத்த நீராகின்றது.
புலிகள் தம் தற்காப்பை, தம் இருப்பை தம் சொந்தப் போராட்டம் மூலம் அணுக வேண்டும். அவர்கள் தம் சொந்த வழியில் இதற்கு விடை காணவேண்டும். அதைச் செய்ய வக்கின்றி, மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து, இதன் மூலம் அரசியல் பேரம் பேச முனைவது, அடிமுட்டாள் தனமான பயங்கரவாதத் தற்கொலையாகும்.
இதன் பின்னணியில் புலிகள் நடத்தும், நடத்தவிருக்கும் போராட்டங்கள் புலிப் போராட்டம் போல் ஒரு அடி கூட முன்னேறுவதில்லை. அடிசறுக்கி வீழ்கின்றது. கடந்தகாலத்தில் அரசியல் பேச்சுவார்த்ததையை எப்படி தோற்கடித்து தாம் தோற்றனரோ, அப்படி இந்த போராட்டங்களும் நடக்கின்றது.
மக்களை கொன்று குவிக்கும் காட்சிப் படங்களை காட்டி, தமிழ் மக்களை அணி திரட்டியது போல், உலகத்தை அணி திரட்ட முடிவதில்லை. இதற்கு உலகின் ஆளும் வர்க்கங்கள், புலியின் பாணியில் அவை தம் தீர்வை வைக்கின்றது. இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, ஆயுதத்தை கீழே வைக்கக் கோருகின்றது. இதன் மூலம் இந்த மனித அவலத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுகின்றது. இப்படி புலிகள் நடத்திய அரசியல் பாணியில், பதிலடி தருகின்றது. அதற்கு அமைய புலிகள் ஊடாக ஏகாதிபத்தியங்கள் வைத்த கோசங்கள், புலிகளை முடக்க உதவுகின்றது.
உண்மையில் ஏகாதிபத்தியத்தையும், சர்வதேச சமூகத்தையும் நோக்கி எதை வைத்திருக்க வேண்டும்.
1. இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!
2. புலிகளே! மக்களை விடுவி!
3. சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!
4. புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!
இப்படி போராட்டங்கள் அதன் உண்மைத் தன்மையுடன் மக்கள் போராட்டமாக மாறியிருந்தால், உலகம் உங்களை திரும்பி பார்த்திருக்கும். உலகம் ஆயுதத்தை கீழே வை என்று கூறியிருக்க முடியாது. உங்கள் கோரிக்கையை நடைமுறைப்படுத்த கோரியிருக்கும். இதற்கு அமைய யுத்த நிறுத்தத்தை அது முன்வைத்திருக்கும்.
இதற்கு மாறாக ஏகாதிபத்திய சதிக்கு அமைய, போராட்டத்தை புலிக்கு சார்பாக இசைவாக மாற்றி, எம்மை நாமே அழித்துக்கொள்ளும் போராட்டமாக சீரழிந்து போனது. எம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்.
இலக்கற்றும், களைத்தும் போகின்ற கோசங்கள். விளைவு இரந்து வேண்டுவதும், உதவி கோரும் பிச்சைக்கார ஓப்பாரிப் போராட்டமாக மாறிவிடுகின்றது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்த, உணவை அனுப்பி போராட்டத்தை இழிவாடியது போல்தான் இதுவும்.
இதன் பின்னணியில் இதை வழிநடத்துபவர்கள் வெறும் புலிகளல்ல. ஏகாதிபத்திய நோக்குக்கு, இசைவான எல்லைக்குள் போராட்டத்ததை மட்டுப்படுத்தி வழிநடத்தப்படுகின்றது. அந்த வகையில் ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய நபர்கள், அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப போராட்டங்களை வழிநடத்தி முடக்குகின்றனர்.
இவர்கள் நடத்தும் போராட்டங்களில் மேடையேறும் மேற்கு அரசியல்வாதிகள் அனைவரும், ஏகாதிபத்திய நாட்டை ஆளும் அல்லது எதிர் கட்சியில் உள்ள ஏகாதிபத்திய பிரமுகர்கள்தான். அவர்கள் மனம் புண்படாத வண்ணம், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைக்குள், எந்த நிர்ப்பந்தத்தையும் தராத போராட்டமாக எம் மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது.
இப்படி மக்கள் அவலம் மேல் மக்களை திரட்டும் போராட்டங்கள், ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானதாக மாறிவிடுகின்றது. பரந்துபட்ட வகையில் சர்வதேச சமூகத்தை, அணி திரட்ட முடியாத கோரிக்கைக்குள் அரசியல்வாதிகளின் தயவை இரந்து பெறும் எல்லைக்குள் முடங்கிவிடுகின்றது. ஓப்பாரி போராட்டமாக, இரந்துவேண்டும் போராட்டமாக, பிச்சைச்காரர் போராட்டமாக கூனிக்குறுகி விடுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதையே எம் வரலாறு, மீண்டும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
பி.இரயாகரன்
06.02.2008
Friday, February 27, 2009
Thursday, February 26, 2009
Wednesday, February 25, 2009
Tuesday, February 24, 2009
Monday, February 23, 2009
Sunday, February 22, 2009
Saturday, February 21, 2009
Friday, February 20, 2009
Thursday, February 19, 2009
Wednesday, February 18, 2009
சிங்கள பேரினவாதம் மக்களை படுகொலை செய்வதில் இருந்து மீட்க மறுத்து, அதற்கு உதவியதால் எமது ராஜினாமா
Labels:
புலிகள்,
பேரினவாதம்,
ராஜினாமா
Tuesday, February 17, 2009
Monday, February 16, 2009
Sunday, February 15, 2009
Saturday, February 14, 2009
Friday, February 13, 2009
Thursday, February 12, 2009
Wednesday, February 11, 2009
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்
மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள்.
இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.
நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.
வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம்.
உங்கள் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், இன்றும் நீங்கள் மக்களுக்கு செய்யக் கூடியதுண்டு.
1. நீங்கள் கடந்தகாலத்தில் மக்களுக்கு இழைத்த அனைத்து தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை உணரும் வண்ணம், அதை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யுங்கள். நாளை அவர்கள் உங்களை மதிக்கும் வண்ணம், தவறை உணர்ந்ததற்காக நன்றி கூறும் வண்ணம், உங்கள் வரலாற்றை அவர்களுக்கு விட்டுச்செல்லுங்கள்.
2. நீங்கள் மக்களை விடுவிக்காவிட்டால், அவர்களின் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பேரினவாதம் கொக்கரித்துள்ளது. பேரினவாதம் உங்கள் இரத்த உறவுகளையும் உங்களுடன் சேர்த்து கொல்வதை, நீங்கள் அனுமதிக்க போகின்றீர்களா!? தயவு செய்து அவர்களை விடுவித்து, மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் வரலாற்றை முடியுங்கள். தவறுகள் தவறாக இதனுடனாவது நிறுத்திவிடுங்கள்.
3. உங்களுடன் சண்டையில் நிற்கின்றவர்களில், சண்டை செய்ய விரும்பாதவர்களை விடுவியுங்கள். அவர்களால் சண்டை செய்ய முடியாது. இந்த தவறையும் திருத்திக் கொண்டு, மொத்த தவறுகளையும் ஓத்துக் கொண்டு, அதற்காக போராடுங்கள். அதன் பின் ஒருநாளும் சரண் அடைந்து விடாதீர்கள். மக்களுக்காக போராடி மரணியுங்கள். வரலாறு அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றது.
4. நாம் ஏன் தோற்றுப்போனோம்? அதை வழமையான உங்கள் பதிலுக்கு பதில், மனித வரலாற்றில் தேடுங்கள். அதிகாரம் முதல் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருந்தும், பெரும் படையிருந்தும் ஏன் தோற்றோம்? வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள். இதை கடந்தகால மனித வரலாறு காட்டுகின்றது. ஏன் உங்கள் வரலாறு இன்று காட்டுகின்றது. இதை இன்றாவது உணர்ந்து, அதை ஓத்துக்கொண்டு, உங்கள் காலத்தில் அதை திருத்திக் கொள்வதன் ஊடாக, மனித வரலாறு உங்களை போற்றவையுங்கள். தியாகங்களை வரலாறு கொச்சைப்படுத்த விட்டுவிடாதீர்கள்.
கடந்த வரலாற்றில் அதன் தவறுகளையும் உணர்வதன் மூலம், இன்றே வரலாற்றை மாற்றமுடியும். நாளைய தலைமுறை அதை உணரும்; வண்ணம், மக்களை இன்றே நேசிக்க முனையுங்கள். இந்தக் கணமே, அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
மூன்று சகாப்தமாக மனிதத்தை சிதைந்து சின்னாபின்னமாக்கிய உங்களின் அரசியல் வரலாற்றில் இருந்து, உங்கள் இறுதி மூச்சை மனிதத் தன்மையாக்குங்கள். அதை வரலாற்றில் புதைத்து விடாதீர்கள். மொத்த தவறையும் உணர்ந்து, வரலாற்றை சரி செய்யுங்கள்.
பி.இரயாகரன்
03.02.2009
Tuesday, February 10, 2009
Monday, February 9, 2009
Sunday, February 8, 2009
Saturday, February 7, 2009
புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் ...
Friday, February 6, 2009
Thursday, February 5, 2009
ஈழமக்கள் மேல் மலம் கழிக்கும் சந்திப்பு : இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள்
Wednesday, February 4, 2009
Tuesday, February 3, 2009
Monday, February 2, 2009
Sunday, February 1, 2009
பாரதி இன்றிருந்தால்…
சிங்களத் தீவினிற்கோர்
பாலமைப்போம் - என்ற
என்
நடபுப்பாலம்
மக்களை ஆக்கிரமிக்கும்
பாலமானதடி கிளியே!
மன்னனும் நானே
மக்களும் நானே
கண்ணனும் நானே
போரிடவும் –
போராட வைப்பவரும்
நாமேயென.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
பாலமைப்போம் - என்ற
என்
நடபுப்பாலம்
மக்களை ஆக்கிரமிக்கும்
பாலமானதடி கிளியே!
மன்னனும் நானே
மக்களும் நானே
கண்ணனும் நானே
போரிடவும் –
போராட வைப்பவரும்
நாமேயென.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
Subscribe to:
Posts (Atom)
