தமிழ் அரங்கம்

Sunday, June 14, 2009

இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்


1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

4.கல்வியும் தமிழ் தேசியமும்

5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்

6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்

9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்

11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்

15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.

16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு

17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்

19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்

20.இனவாதமும் சுயநிர்ணயமும்

21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்

22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது.

Saturday, June 13, 2009

பன்றிக் காய்ச்சல்: பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்!


கடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Friday, June 12, 2009

குற்றங்களை மூடிமறைக்கும் அறிவியலும், அரசியல் பித்தலாட்டங்களும்

மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள்.

இன்று புலிப் பாசிசத்தை அழித்துவிட்ட அரச பாசிசம் தானே அனைத்துமாகி, பிசாசாக மாறி நிற்கின்றது. இந்தப் பாசிச அரசைப் பாதுகாக்;கின்ற, அறிவுசார் தில்லுமுல்லு அரசியல் வேலைகள். புனைபெயரில் உலாவும், புலுடாப் பேர்வழிகள்.

இவர்கள் மனிதனுக்கு எதிராக இழைத்த குற்றங்களையும், அதன் அரசியல் அடித்தளத்தையும் பாதுகாக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கு விபச்சாரம் செய்யும் ஊடகத்துறை. இழிவான நடத்தைக்கு ஏற்ப, கள்ள மௌனங்கள். வேறு சிலர் நடத்தவற்றை, ......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈழம், புலி, புலம்


பாராளுமன்ற சொகுசுகளுக்காக தமிழ்மக்களை விற்ற தமிழர்விடுதலைக்கூட்டணி, இந்தியாவுக்குச் சோரம் போன ரெலோ தலைமை, தொடர்ந்த ஈ.பி.ஆர்.எல் எவ் தலைமை, ஈ.என்.டி.எல்.எவ் தலைமை, இலங்கை அரசுக்கு சோரம் போன புளொட் தலைமை, ஈ.பி.டி.பி தலைமை, ரி.எம்.வி.பி தலைமை, புலிகளைச் சரணடைந்த ஈரோஸ் தலைமை, யாரோ ஒரு தரப்பினரிடம் சரணடைய முயற்சித்த/ சரணடைந்த புலித் தலைமை….. என்று தமிழ்மக்களின் இன்றைய அவலத்துக்கு அனைத்துத் தலைமைகளும் காரணமாயின. இதில் புலிகள் மீது மட்டும் குற்றத்தைச் சுமத்திவிட்டு மற்றையவர்கள் தப்பிவிட முடியாது.

பெரும் இருபது நாடுகள் (G 20) மாநாடு: அமெரிக்காவின் நயவஞ்சகம், இந்தியாவின் துரோகம்!


‘‘இப்பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்குச் சலுகை அடிப்படையில் கடன்; மேற்குலக நாடுகளின் சந்தையை எவ்விதத் தடையுமின்றி ஏழை நாடுகளுக்குத் திறந்து விடுவது; சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வேட்டையாடிக் கொண்டு வருவது; தேவைப்படும் நிதி ஆதாரங்களைச் சந்தையில் கொட்டுவது” என இம்மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இம்மாநாடு நடந்து............
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, June 11, 2009

காலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்

களமாடி மடிந்தவர்கள்..எம் இனத்தின்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது

புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை - உபாலி கூரே

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப்படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள்பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்கவேண்டும்.

முதலாவதாக உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. “இலங்கை இராணுவம்தான் உலகின் மிக உயர்ந்த இராணுவம்” என்பது போன்ற உரிமைகோரல்கள் ஐயத்துக்கிடமின்றித் தவறானவை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இறுதிச் சில மாதங்களாக நடந்த இராணுவ நடவடிக்கைகளில் 6000க்கும் அதிகமான இராணுவச் சிப்பாய்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் அதிகமானவர்கள் மோசமாகக் காயம்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இதனை, இந்திய அமைதிப்படை இரண்டு வருடங்கள் தரித்திருந்தபோது கொண்டு வந்த இழப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமானது. அந்த நேரத்தில், ஜேவிபியினாலும் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலராலும் தூண்டப்பட்டு, அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவினால் இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமையைச் சுற்றி வளைத்தார்கள். விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ளும் இறுதிப்பேரத்தினை அண்மித்திருந்தார்கள். அந்த நேரத்தில்கூட இந்திய அமைதிப்படை ஆயிரத்துக்கும் சிறிதளவு...............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மகிந்தாவுக்கு குடைபிடிக்கும், திரோஸ்கிய அழகலிங்கத்தின் ஓட்டுண்ணித்தனம் - நன்றி - தேசம் வாசகர்கள்


அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்......... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 10, 2009

பிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம் -3

புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.

பேரினவாத பாசிசம், இதில் எப்படிப்பட்ட குற்றத்தை இழைத்துள்ளது.

1. சரணடைந்தவர்களை படுகொலை செய்து, பாரிய யுத்த கிரிமினல் குற்றத்தைச் செய்துள்ளது

2. குழந்தைகளை.........
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகளின் போராட்டத் தோல்வியும்… வால் பிடிகளின் கொண்டாட்டமும்…


எங்கள் தலைவன், தேசியத்தலைவன் என்று வாய் ஓயாமல் கத்தியவர்கள்… தலைவன் காலத்திலே தமிழீழம் கிடைத்து விடும் என்ற ஆழமான எதிர்பார்ப்பினை தங்களோடு வளர்த்துக் கொண்டவர்கள் இன்று மனதாலே பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் உள்ளார்கள். இவர்கள் விசுவாசிகள். அமைப்பு மீதும், தலைவர் மேலும் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள். இப்படியொரு சந்தர்ப்பத்தில் இந்த உண்மை விசுவாசிகள் உடைந்து போவது தவிர்க்க முடியாதது. வேறு சிலரோ இன்று எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக உள்ளார்கள். தலைவர் சாகமாட்டார் அவரை யாராலும் சாவடிக்க முடியாதென்ற மிதமிஞ்சிய கற்பனையிலும், எதிர்பார்ப்பிலும் காலத்தை கழிக்கிறார்கள்.

இன்னும் சிலர் கிடை
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

குஜராத் இனப்படுகொலை: பாதிக்கிணறு தாண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள்!

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி எரிந்து போனதை, பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஊதிப் பெருக்கி, அவ்வழக்கை காலாவதியாகிப்போன பொடா சட்டத்தின் கீழ் நடத்தி வந்தது, குஜராத் அரசு. “இச்சம்பவத்தைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது; எனவே, இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கோத்ரா சம்பவம் தொடர்பான தனது பித்தலாட்டங்களை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மோடி அரசு, தனது கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது.

ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்

அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.

இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் ஈராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச்சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.

"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 8, 2009

பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்

இராணுவத்தின் வெற்றிகரமான இனவழிப்பின் போது, பெண்களுக்கு நடந்த அவமானத்தை உறுதிசெய்யும் வண்ணம் இராணுவம் எடுத்த நிர்வாணப்படத்தை அதிரடி இணையம் வெளியிட்டு இருந்தது. அதிரடியில் தொடர்ச்சியாக எழுதும், கிழக்கான் ஆதம் என்ற நபர், 'இராணுவத்தினரை விட புலிகளே செய்திருக்கச் சாத்தியங்கள் அதிகமுள்ளது." என்று எழுதுகின்றார்.

அதிரடி ஆசிரியர்கள் இதை வெளியிட்டு, தம் மறுப்பை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அதிரடியின் நிலை என்பது, பொறுப்புமிக்கதும் ஆரோக்கியமானதுமாகும். அத்துடன் இன்னும் பல படங்கள் தமக்கு கிடைத்ததாகவும் கூட அறிவித்துள்ளனர்.

கிழக்கான் ஆதம் எழுதுகின்றார் 'அப்பெண் போராளிகள் இராணுவத்தினரால் தான் நிர்வாணமாக்கப்பட்டனரா? என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அதில் காண முடியவில்லை மாறாக பல சந்தேகங்களே தொக்கி நிற்கின்றன. அவைகளை நோக்கும் போது தங்கள் சக போராளிகளால் நிர்வாணப்படுத்தப்பட்டு அவைகள் புகைப்படங்களாக்கப்பட்டு இறுதியில் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் போலத்தான் அவை தெரிகின்றன." இங்கு பேரினவாத ஆணாதிக்க இராணுவத்தைக் காப்பாற்றும்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்

தர்மச்சக்கரத்தில் உலகைச் சுழற்ற..புதிதாய்
தலைவர் வருகிறார்
புலத்து தமிழா தெருவில் இறங்கு
கொடியைத் தூக்கு
விடியலைத்தரும் சூரியதேவன்

படத்தைத் தாங்கு
உலகை வெல்ல கருத்தே கேட்கிறார்
அடங்கிப்போன ஆய்வாளர்களே
எழுதுகோல்களை எடுங்கள்
புதிய உலக ஒழுங்கின் இராஜதந்திரமாம்
வென்று காட்டுங்கள் ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, June 7, 2009

பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)

பேரினவாதம் தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்க எடுக்கும் பாரிய முயற்;சிகள் ஒருபுறம். இதற்கு மறுபுறம் இந்தியா முதல் பல நாடுகள் இன்று துணை நிற்கின்றது.

மறுபக்கத்தில் இவை ஒவ்வொன்றாக அம்பலமாகின்றது. பெண்கள் மேல் இராணுவம் நடத்திய பாலியல் யுத்தம் மூலம், யுத்தம் வெல்லப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆணாதிக்க பண்பின் ஊடாக, யுத்தம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் தான், சிங்கள மேலாதிக்க பாசிச திமிருடன் இன்று நாட்டை ஆளுகின்றனர். பெண்களை நிர்வாணப்படுத்தி ரசித்த ஆணாதிக்க படைக்கு, நன்றி தெரிவித்து கொண்டாட்டங்கள் வேறு. கம்யூனிசத்தின் பெயரில் இனவாதம் பேசும் ஜே.வி.பியும் அதன் தலைவரும், இந்தக் குற்றத்தை விசாரித்தால் தங்கள் பிணத்தின் மேலாகத்தான் இது நடக்கும் என்று கொக்கரிக்கின்றனர். ........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, June 6, 2009

அரசுக்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான, ஒரு பொதுக்கொள்கையிலான வேலைத்திட்டம் மட்டும்தான் மக்களுக்கானது


இனி புலிகளிடம் எந்த தியாகமும் கிடையாது. இதைச் சார்ந்த எந்த வீரமும் கிடையாது. இனியும் கூட புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு, கொடிபிடிக்க மட்டும்தான் முடியும். இதைத்தான் தமிழ் மக்களின் விடிவிற்கான, ஒரு பொதுவேலைத்திட்டமாக புலிகள் காட்ட முனைகின்றனர்.

கடந்த காலத்தில் புலிகள் மாற்றுக்களை எல்லாம் அழித்தபடி, தாமே தொடர்ச்சியாக போராடுவதாக கூறினர். இதன் மூலம் தமக்கு பின்னால் ஒரு தியாகத்தைக் காட்டினர். இதன் மூலம் ஒரு படுபிற்போக்கான இன அழிவினை, சமூகநடைமுறையாக்கினர். அதையே அவர்கள் அறுவடை செய்தனர்.

இவர்கள் தான் இன்று பொதுவேலைத்திட்டத்தைக் கோருகின்றனர். இவை எதற்காக? ஏன்? இவை தமிழ்மக்கள் நலன் சார்ந்ததா? இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் காரணங்கள், இவர்கள் சார்ந்து அவை அனைத்தும் உண்மையானவையல்.........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ராக்கிங்க்கு எதிராக, இரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

100க்கு உட்பட்ட மக்கள் தான் யுத்தத்தில் இறந்தனர்! ஜனாதிபதி கூறுகின்றார்


இப்படி ஒரு பொய்யான, ஒரு புரட்டு பேர்வழி, ஒரு நாட்டின் ஜனாதிபதி. இவர்கள் எல்லாம் நேர்மையாக நாட்டை ஆள்வார்கள்!, இனப்பிரச்சனையை தீர்ப்பார்கள்!? தமிழ்மக்களை குத்தகைக்கெடுத்த அடாவடித்தனத்துடன் 'தமிழ் மக்களை பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்பும்" என்று தமிழ் வர்த்தகர்கள் முன் பேசுகின்றான். தமிழ் மக்களைக் கொன்று குவித்த இரத்தக்கறை மறைய முன், வெளிப்படும் திமிர். கொல்வது, பாதுகாப்பது எல்லாம், பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் அடங்கி ஓடுங்கி விடுகின்றது.

புலிப் 'பயங்கரவாதத்தில்" இருந்து நாட்டை மீட்ட கதையிது. இப்படி மக்களுக்கு விடுதலை தந்தவர்கள் என்று சொல்லியே, நம்பவைத்து தாலியை அறுக்கின்ற 'ஜனநாயக" அரை லூசுகள்தான், இந்த பாசிட்டுகளின் இன்றைய அடியாட் கும்பல்கள்.

100க்கு உட்பட.........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, June 5, 2009

1986 இல் புலிக்கு எதிராக போராடிய யாழ்பல்கலைகழகம் (உரை) பாகம் : 1

புலியை விமர்சிப்பது பேரினவாதத்துக்கு ஆதரவானதா!?


அரசுக்கு எதிராக தமிழ்மக்கள் தமக்காக போராடத் தடையாக இருந்தது, இருப்பது புலி. இந்தப் புலியை விமர்சிப்பதை, அரசுக்கு ஆதரவானது என்பது எப்படி? இவை புலிக்கண்ணாடிக்கு ஊடாக எவற்றையும் பார்ப்பதுதான். பகுத்தறிவற்ற தமிழினவெறிக்கு ஊடாக, அறிவிழந்து பார்ப்பதுதான். புலிகள் முதல் தமிழ்நாட்டு பிழைப்புவாத தமிழினக் கும்பல்களை விமர்சிக்காமல், தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட நேர்மையாக முன்வைக்க முடியாது.

போராட்டத்தின் பெயரில் கடந்தகாலத்தில் நடந்த அரசியல் சீரழிவுகள் மேலான விமர்சனங்களின்றி, மக்களால் சுயமாக முன்னேற முடியாது. கடந்த 30 வருடமாக வலதுசாரிய புலிகள் பேரினவாதத்தை ஒழிப்பதாகக் கூறி, தவறான தம் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழினத்தையே அழித்தவர்கள். கடந்த அறுபது வருடமாக இந்த வலதுசாரியம் தமிழினத்தின் பெயரில், வெறும் இனவாதம் மூலம் தமிழினத்தை சுடுகாடாக்கி பிழைத்தவர்கள்.

இதன் மேல், இன்று எந்த சுயவிமர்சனமும் கிடையாது. விமர்சனம் கிடையாது. விமர்சித்தால், ஐயோ அரசு ஆதரவு என்று ஓப்பாரி. மக்
............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, June 4, 2009

தமிழில் இப்படி ஒரு இணையம் கிடையாது

6000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.

இந்த வகையில்

1.அறிவுக் களஞ்சியம் 40 உபதலைப்பைக் கொண்டது. அண்ணளவாக 800 கட்டுரைகள் உள்ளது.

2.அரசியல் - சமூகம் பி.இரயாகரன் அண்ணளவாக 803 கட்டுரைகள் உள்ளது.

3.புதிய ஜனநாயகம் அண்ணளவாக 754 கட்டுரைகள் உள்ளது.

4.புதிய கலாச்சாரம் அண்ணளவாக 337 கட்டுரைகள் உள்ளது.

5.அரசியல் - சமூகம் 46 மேற்பட்ட எழுத்தாளர்களுடைய கட்டுரைகள். அண்ணளவாக 1087 கட்டுரைகள் உள்ளது.

6.நூல்கள் அண்ணளவாக 23 நூல்கள் உள்ளது.

7.ஒலி – ஒளி அண்ணளவாக 9 உப தலையங்கத்தின் கீழ் 440 தலைப்புகளில் 350 மணித்தியாளங்கள் கொண்டவை. இவை பல்துறை சார்ந்தவை.

8.சமூகவியலாளர்கள் 11 பேருடைய 480 கட்டுரைகள் உள்ளது.

9.ஆவணக் களஞ்சியம் 12 உப தலைப்பில் 300 ஆவணங்கள் உள்ளது.

10.இணைப்புக்கள் 55 இணைப்புகள் உள்ளது.

11.நிழற்படங்கள் - பல நூறுபடங்கள்

இவ் இணையத்தை சமூகத்தில் அறிமுகம் செய்யவும். சமூகத்துக்கு தேவையானவை என்று கருதும் எல்லாவற்றையும், நாம் இணைக்கத் தயாராக உள்ளோம். அந்த வகையில் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்கப்படுகின்றது. இணைக்க கூடிய கட்டுரைகளை தந்து உதவவும்;. இதில் இணைகப்பட்டவை மூலம் (உரிமம்) தவறுதலாக பதியப்பட்டு இருப்பின், அதை சுட்டிக்காட்டின் திருத்தப்படும்.

மேலும் தொழில் நுட்ப ரீதியாக இதைச் செலுமைப்படுத்த முனைகின்றோம். இதற்கும் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்க்கப்படுகின்றது.

email : tamilcircle@tamilcircle.net

குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?


அதாவது குழந்தை பணம் சம்பாதிப்பதை வழிகாட்டுவதா, பெற்றோரின் கடமை? இப்படித்தான் பல பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆகவே ஆட்டுக் கிடாயை வளர்க்கும் மனநிலையில் தான், குழந்தையை வளர்க்கின்றனர். மொழி மற்றும் உடல் வன்முறை மூலம் இதைச் செய்யமுனைகின்றனர். இப்படி இணக்கமற்ற குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.

குழந்தையை இணக்கமான வகையில், அறிவியல் பூர்வமாக இணங்கி நிற்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும், என்று பெற்றோர் கற்பனை கூட செய்வதில்லை. ஆனால் அதையே, குழந்தை தம்முடனான சமூக உறவில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். முரணிலையான அணுகுமுறையுடன் கூடிய பெற்றோரின் செயல்பாடுகள். அதாவது சமூகமாக குழந்தை தம்முடன் வாழவேண்டும் என்று விரும்பும் சுயநலம், தாம் அல்லாத மற்றவருடன் சமூகத்துக்கு எதிராக சுயநலத்துடன் வாழத்தூண்டும் நடைமுறையைக் கையாளுகின்றனர்..............

பெற்றோர் குழந்தை வள............. முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, June 3, 2009

கொடுங்கோல் அழிய கொடிபிடிப்பர் பார்

...............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஓட்டுக்குழுக்களை விழுங்கி வரும் அரச பாசிசம்


இதுதான் இன்று இலங்கையின் நிலை. இதற்கு வெளியில் யாரும் சுதந்திரமாகவில்லை. ஜனநாயகமோ, இதை அனுசரித்துச் செல்லுகின்றது.
பாசிசப் பயங்கரவாதத்துக்கு அஞ்சி, தன்னைத்தான் அதற்கு இசைவாக மாற்றிக்கொள்வது தான், உயிருடன் இருப்பதற்கான அரசியல் உத்தரவாதமாகும். அரச பாசிசத்துக்கு ஏற்ப, சமூகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் நாட்டின் நடைமுறைகளும், சட்டங்களும்.

இதற்கமைய மக்கள்விரோத ஓட்டுக் குழுக்களை, தன்னுடன் இணைந்து தமிழ்மக்களை ஒடுக்கக் கோருகின்றது. புலிகளின் பாசிப் பயங்கரவாதத்தின் போது உருவான தமிழ் ஓட்டுக் குழுக்கள், தம் மக்கள் விரோத அரசியலுடன் பேரினவாத பாசிசத்துக்கே எப்போதும் துணைபுரிந்து வந்தனர். இன்று புலிகள் இல்லையென்ற நிலையில், இந்த ஒட்டுக்குழுக்களை தன்னுட........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் ம..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, June 2, 2009

புலத்துப் புலிகள் பினாமிகளுக்கு லாடம் கட்டி ஓட்டும், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் கூத்து

உழைத்து வாழும் தமிழனை, உழைத்து வாழும் ஐரோப்பியனுக்கு எதிராக தேர்தலில் வாக்களிக்கக் கோரும் புலத்துப் புலியிசம், தமிழ் மக்களுக்கே எதிரானது. ஐரோப்பிய மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் ஏகாதிபத்திய நலனுக்கு சார்பானது. இதுதான் புலத்து வலதுசாரிய புலியிசமாகும்.
தமிழன் ஒருவன் வென்றால், தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பான். இந்த அடி முட்டாள் தனத்தை கொண்டு தமிழனை ஏமாற்றி தின்னும் கூட்டம் இருக்கும் வரை, இது போன்ற மக்கள்விரோதக் கூத்துகளும் தொடர்ந்து அரங்கேறும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குரல் ஒலித்தால், தமிழனுக்கு விடிவு வந்துவிடுமா!? ஐ.நாவில் குரல் கொடுத்த தமிழன் என்று, எத்தனை கதைகளை, எம் அவலமான இன வரலாறு கண்டிருக்கின்றது. இப்படி பலர் பிழைக்க, ஒரு இனம் ஏமாற்றப்பட்டது. மக்கள் தாமே தமக்கானதை தீர்மானிக்க முடியாத வண்ணம், ஏமாற்றுவது தான் இதில் உள்ள அரசியல் உள்ளடக்கம்.

இதற்கமைய புலிப் பினாமிகளை ஐரோப்பிய தேர்தலில் நிறுத்தி, அழகு பார்க்கும் புலத்துப் புலிகள். ஏதோ தமிழ் மக்களுக்காக அந்த தனிமனிதர்கள் உழைப்பார்கள் என்று கூறி, பிரிட்டன் மற்றும் பிரான்சின் தேர்தல் கூத்தில் களமிறங்கி கதைகள் பல சொல்லுகின்றனர்.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட ........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் ............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, June 1, 2009

சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர்.

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டும்தான், இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கள் எழ முனைகின்றது. அவையும் மக்களுக்காக அல்ல, புலத்து புலி தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைக்கும் அதே துரோக அரசியலுக்காக. தமது கடந்தகால தவறுகளை திரும்பிப் பார்க்காத, அதே மக்கள்விரோத அரசியல். மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டு நடத்திய அதே பாசிச அரசியல்.

இன்று பேரினவாதத்தின் திறந்தவெளிச் சிறைகளில் சிக்கியுள்ள மக்களை, இந்த அவலமான நிலைக்கு கொண்டு வந்தவர்கள் புலிகளே. புலிகள் இந்த மக்களை வதைத்து, அவர்களை படுகேவலமாக கொல்ல உதவியும், கொன்றும், இறுதியாக இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்தப் புலிகள்தான். இதைப்பற்றி எந்த சுயவிமர்சனமுமற்ற நிலையில், மீளவும் அந்த மக்களை காட்.........
.முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, May 31, 2009

புலிகளின் தோல்விக்கான காரணமும், அரசியல் எதார்த்தமும்

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

அரசு தாம் வென்றதுக்கு இந்தியா சீனா, பாக்கிஸ்தான்.. உதவிகள் தான் காரணம் எண்கின்றது. தமது உறுதியான தலைமை தான் காரணம் என்கின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் பேரினவாத மேலாதிக்கத்தை வாழ்த்தி, கொலைகாரர்(கலாநிதி) பட்டத்தைக் கூட வழங்க முன்வந்;துள்ளது. இப்படி வெற்றி தோல்வி பற்றிய காரணங்கள், நியாயப்படுத்தல்கள், அங்கீகாரங்கள், விளக்கங்கள்.

இந்தத் தோல்வி பற்றி, தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் சொல்லும் விதம், எந்த சுயவிமர்சனமுமற்றது. இதன் மூலம் சமூகத்தை மந்தைகளாகவே தொடர்ந்தும் வைத்திருக்க முனைகின்றனர்.

இதற்காக இவர்க...........
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்று பாசிட் மகிந்தா, அன்று மனிதவுரிமை மகிந்தா - வீடியோ ஆவணம்

என்ன செய்வது? இது இன்று பலரும் எழுப்பும் கேள்வி கூட

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

Saturday, May 30, 2009

புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும்

மேடைக்கு ஏற்ப ஆட்டம். ஆட்களுக்கு ஏற்ப அரசியல். போலிக் கம்யூனிசத்தின் புதுவிசைக்கு ஏற்ப பேட்டி. அரசு – புலிக்கு எதிராக, அரசியல் நீக்கம் செய்த விமர்சனங்கள். ஏகாதிபத்திய நிலைக்கு ஏற்ப தாளம். இதுவே சுசீந்திரன் முதல் பலரின் இன்றைய அரசியல் கூட. மக்கள் அரசியலை முன்னிறுத்தி, அதற்காக எந்த முன்முயற்சியும் பொதுவில் கிடையாது. இதற்கு எதிராகத்தான் பயணிக்கின்றனர்.

உதாரணமாக சுசீந்திரன் ஆசிரியராக உள்ள உயிர்நிழல் சஞ்சிகையின் மற்றொரு ஆசிரியரான லக்சுமி 'தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவர்களுடனான நேர்காணல்" என்ற தலைப்பிலான பேட்டியை மொழி பெயர்ப்பு செய்கின்றார். உயிர்நிழல் மற்றொரு ஆசியரான பிரதீபன் முன்னின்று நடத்தும், புகலி இணையத்தில் இது வெளிவருகின்றது.

வரதராஜப்பெருமாள் கடைந்தெடுத்த இந்தியக் கைக்கூலி. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பின் போது, கூலிப்படை தலைவனாக இ.........
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன?


ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை.
ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான து...................முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, May 29, 2009

ஈழவியாபாரம்–விலைபோகும் சதைப்பிண்டங்கள்

ஆர்குட்டில் பலரும் விஜய் டிவியில் நடந்த அடுத்த பிரபு தேவா யார் என்ற போட்டியின் வீடியோ காட்சியை தங்களுக்கு பிடித்த வீடியோவாக இணைத்திருந்தார்கள். அதிகம் டிவி பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தும் சாக்கில் தன்னை விளம்பரப்பொருளாக அறிவித்துக்கொள்ளும் எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை.
என்னடா எல்லோரும் (அதுவும் ஆர்குட்டில் தமிழீழ ஆதரவாளர்கள் ) பார்க்கிறார்களே என அந்த லின்க்கை கிளிக் செய்தேன்.

படுகொலையை விளக்கும் புதிய படம் (பழைய கட்டுரையில் இணைப்பு)


புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய .........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

முடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.

1. புலிகள் இதை ம..........

Thursday, May 28, 2009

நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதி, புதுவிசை இதழில் புலம்பியது என்ன?

எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீராழிவுவாதியான சுசீந்திரன் 'இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை" என்கின்றான். சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?

ஏகாதிபத்திய பணத்தில் எப்போதும் லாடம் கட்டி ஆடும் பொம்மலாட்டங்கள், இனவழிப்பை இல்லையென்று சொல்வது தான் அதன் அரசியல் அடிப்படையாகும். 60 வருட காலமாக சிங்களப் பேரினவாதம் நடத்தும் இனவொடுக்குமுறையோ இனவழிப்புத் தான். அதன் ஒரு அங்கமாக நடந்ததுதான், இந்த யுத்தம்.

இதை மறுத்து புதுவிசை என்ற சஞ்சிகைக்கு சுசீந்திரன் என்ற கூத்தாடி வழங்கிய பேட்டியின் சாரம் இதுதான். இதைத் தொடர்ந்து பேரினவாதத்தை ஆதரிக்கின்ற ஈழத்து இணையங்கள் வரை, இதை மறுபிரசுரம் செய்தது. அந்தளவுக்கு இந்த கூத்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, May 27, 2009

பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.
புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும். இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான்.

இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம். அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப் படுத்துகின்றது.
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

நேபாளம், ஒரு நம்பிக்கையூட்டும் புரட்சிகரமான முன்னெடுப்பு. : சமிர் அமின்

உண்மையான புரட்சிகர முன்னேற்றம். விவசாயிகளின் பொதுவான புரட்சியை ஆதரித்து வரும் ஒரு விடுதலை இராணுவம் தலைநகரத்தின் வாயிலை எட்டுவதாகவும், நகர்ப்புற மக்கள் தம்பங்கிற்கு கிளர்ந்தெழுந்து மன்னராட்சியை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, தமது மீட்பர்களாக இந்த புரட்சிகர இராணுவத்தை வரவேற்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சியினரின் இந்த வெற்றியானது நேபாளத்தில் தேசிய மற்றும் மக்கள் ஜனநாயக புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதுடன், நேபாள கொம்யூனிஸ்ட்டுக் கட்சி வரையறுத்திருப்பது போல, இந்த புரட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு பண்புகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நகர்ப்புறத்தின் இந்த பொது எழுச்சியானது, வறிய வர்க்கங்களை நடுத்தர வர்கங்களுடன் இணைத்ததானது, ஏனைய நேபாள அரசியற் கட்சிகளை, தம்மைத்தாமே “குடியரசுப் புரட்சியாளர்கள்” என்று பிரகடனப்படுத்திக் கொள்ள .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, May 25, 2009

துரோகத்தையே மூடிமறைக்கும் புதிய துரோகம்!

புலித்தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார், இல்லையில்லை அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி, புலித் தலைவர்களை சரணடைய வைத்துக்கொன்ற தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைகின்றனர்.

புலிகளின் வெளிநாட்டு தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதன், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த உண்மையைச் சொன்னதற்காக, அவரை துரோகியாக்கி வைகோ மற்றும் நெடுமாறன் போன்ற பிழைப்புவாதிகளின் அறிக்கை வெளிவந்துள்ளது. புலிக்குள் இப்படி ஒரு பிளவு உருவாகியுள்ளது. பிரபாகரனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்ற ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில், பிரபாகரன் விசுவாசிகள் திணறுகின்றனர்.

இங்கு பத்மநாதன் பிரபாகரனின் மரணத்தை சண்டையில் ஏற்பட்ட வீரமரணம் என்ற ஒரு பொய்யை இதற்கூடாக உமிழ்கின்றார். வீரமரணமான தலைவனுக்கு அஞ்சலி என்று இதற்கு ஊடாக, அவர் முன்னின்று காட்டிக்கொடுத்து கழுத்தறுத்த அந்த சரணடைவு என்ற அந்த உண்மையை புதைத்து விடுகின்றார். தமது காட்டிக்கொடுப்பை மூடிமறைக்க, மரணம் என்ற ஓரு உண்மையைப் பயன்படுத்துகின்றார்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, May 24, 2009

புலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன

ஒவ்வொரு செல்பேசிச் செய்திச்சிணுங்களைஅடுத்தும் கொட்டுகிறது கைதட்டல் மழை
சிரிப்பின் இடி
எம்மீது விழும் ஓரப்பார்வையின் குரூரமின்னல்


மின்னஞ்சல்களாகவும் Instant Messenger களின் ஒற்றை வரிகளூடாகவும் நண்பர்கள் கண்ணீர் தெறிக்கிறது.

செல்பேசிகளின், இணையத்தொடர்புகளின் முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத்தேடி அலைகிறது
வெடிக்காமல் பொத்திவச்ச விம்மும் மனசு.

ஒட்டுக்கேட்கப்படக்கூடிய தொலைப்பேச்சுக்களின்
திக்கித்திணறிய குறியீட்டு வார்த்தைகளாயும் இடைவெளிகளாயும்
வெடித்து உடைந்து நொறுங்கிச்சரிகின்றது...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும்

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

புலித் தலைமை சரணடைந்ததும், அவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை. புலித்தலைமை தன்னை பாதுகாத்துக்கொள்ள, இறுதியாக அது தேர்ந்தெடுத்தது சரணடைவை. அதற்கு அமையவே, இதில் மூன்றாம் தரப்பும் சம்பந்தப்பட்டது உண்மை. இந்தப் பின்னணியில் தான், இந்தப் படுகொலை அரங்கேறியது.

இவை அனைத்தும் நடந்திருந்தும், ஏன், எதற்காக இதை மக்களுக்கு தெரியாத வண்ணம் அனைவரும் திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர்? அங்கு...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மடிந்த மக்களுக்கும், மக்களுக்காக மடிந்து போன அனைவருக்கும் அஞ்சலி

எம் மக்களின் பொது எதிரிக்கு எதிராக மரணித்துப் போன பல்வேறு வர்க்கங்களுக்கும், சமூகங்களுக்குமான இந்த அஞ்சலி அரசியல் ரீதியானவை. எம் மக்களின் பொது எதிரி, தன்னை தனிமைப்படுத்தி பலம்பெற்று நிற்கின்ற இன்றையநிலை. மக்களின் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து மரணிக்கும் இன்றைய நிலை. இந்த நிலையில் பிரதான எதிரிக்கு எதிராக மரணித்த அனைவருக்கும், நாம் அஞ்சலியை செலுத்தக் கோருகின்றோம்.

பொது எதிரிக்கு எதிராக, எம் வர்க்கத்தின் சார்பாக இதைக் கோருகின்றோம். பொது எதிரிக்கு எதிராக, இவர்கள் பெயரால் போராடக் கோருகின்றோம். இந்த யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்கும் இதைக் காணிக்கையாக்கின்றோம்.

எதிரிக்கு எதிரான நட்பு சக்திகளை கடந்த காலத்தில் எதிரியாக்கி அழித்த தவறுகளை இனம் காண்பதும், அதேநேரம் எதிரிக்கு எதிரா.........
..முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 23, 2009

இரத்தம் தோய்ந்த வெற்றியும் மை பூசிய மசிரும் - ரவி

இலங்கை அரசின் ஜனாதிபதி கறுப்பு மயிருடனும் கறுப்பு மீசையுடனும் கம்பீரமாய் வருகிறார். ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கும் அவசரத்தில் விமானத்திலிருந்து இறங்கிவருகிறார். இதுவரை மண்ணைப் பிரிந்து அகதியாக இருந்ததுபோன்ற, அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு மண்ணில் முதன்முதல் காலடி வைப்பதுபோன்ற ஒரு பாவனையில் மண்ணை தொட்டு வணங்குகிறார். அவர் பரபரப்பாக இருந்தார். விமான ஓடுபாதையில் அமைச்சர் பட்டாளம் குதூகலமாய் வரவேற்றுக் கொண்டிருந்தது..

. அந்தப் பெண்ணின் முதுகுப்பகுதி நீளத்துக்கும் கோரமாகக் கிழிபட்டிருந்தது. வன்னி மண்ணில் சரிந்து வீழ்ந்திருந்தாள் அவள். இலையான்கள் காயத்தை மொய்த்துக்கொண்டிருந்தன. சதையின் கிழிவுக்குள் உட்புகுந்த இலையான்கள் வெளிவரத்துடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போதெல்லாம் அவளின் கிழிந்த சதைகள் பொருமுவதும் அமர்வதுமாக அசைந்துகொண்டிருந்தது. அவள் உயிருடன் இருந்தாள். முனகினாள். இரத்தம் கொட்டியபடி இருந்தது. காயத்துள் புகுந்த இலையானின் அரிப்பை விரட்ட அவளது கைகள் எழ எத்தனித்து எத்தனித்து தோல்விகண்டன. கண்கள் திறந்திருந்தன. ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஈழத்தின் அரசியல் எழுச்சியை தட்டித் தடவி தமக்கேற்றபடித் திருப்பும் அதிகாரங்களின் கலை- ஜனகன்


புலிகளுக்குச் சார்பாக எந்தச்சக்திகளும் இல்லாமற்போனது புலிகளின் இயல்பு, இன்றைய உலக அரசியற் சூழல் போன்றவை வழிவந்த துரதிஷ்டம். முன்பெல்லாம் இந்தியா போன்ற சக்திகள் புலிகளை ஆதரித்து தமது கைப்பாவையாக நடத்தியுள்ளன. பிறகு இக்கட்டான முட்டுச்சந்துகளுக்குள்ளிருந்து வெவ்வேறு சக்திகள் புலிகளைக் காப்பாற்றி விட்டிருந்த.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வரலாற்றில் பிரபாகரன்

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.

தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான். மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன். இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 22, 2009

புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?

திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

இந்த சதி வலையின் முன் பக்க பரிணாமத்தை நன்கு தெரிந்தவர்கள், இதை வழி நடத்தியவர்கள். சரணடைய வைத்து, இந்த துரோகத்தை முழுமையாக வழி நடத்தியவர்கள் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதை சொல்கின்றனர். உண்மையில் புலித்தலைமையை விட்டில் பூச்சியாக்கிய அரசியல், அதன் பின்னணி என்பது துரோகத்தாலானது.

.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் புதிய அபாயம்

ஆறுகளும் பசுமையான வயல்களும், மலைகளும் நீர்வீழ்ச்சியும், காடுகளும் விலங்குகளும் கொண்ட இயற்கை அழகு நிறைந்த ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் விவசாயிகளின் போராட்டங்களால் குலுங்கியது. "ஒருபிடி மண்ணைக்கூட அந்நியனுக்குத் தரமாட்டோம்!; தென்கொரிய டேவூ நிறுவனமே, நாட்டை விட்டு வெளியேறு!; நாட்டைத் தாரைவார்க்கும் சர்வாதிகார அதிபர் ஒழிக!'' என்ற முழக்கங்களுடன் அந்நாட்டு விவசாயிகள் அணிதிரண்டு போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

போராட்டத்தை ஒடுக்க சர்வாதிகார அதிபர் மார்க் ரவலோமானனா கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத அடக்குமுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். இப்போராட்டங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, தலைநகர மேயரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆண்ரி ரஜேவினா சர்வாதிகார அதிபருக்கெதிரான நாட்டு மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவரைச் சர்வாதிகார அதிபர் பதவி நீக்கம் செய்ததும், நாடெங்கும் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் மார்க் அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போன நிலையில், இராணுவம் மற்றும் சட்டவாத நீதித்துறையின் ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவரான ஆண்ரி, சர்வாதிகார அதிபரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு கடந்த மார்ச் மூன்றாம் வாரத்தில் புதிய அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 21, 2009

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.

தமிழ் மக்கள் முன் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம், இயல்பாக எம்முன் ஒரு இனந்தெரியாத சூனியத்தை உருவாக்குகின்றது. எங்கும் இனந்தெரியாத சோகம், அவலமாகின்றது. நடந்ததை நம்பாமல் இருக்க முனைகின்றது. மக்கள் நடைப்பிணமாக, அஞ்சலி கூட செலுத்த முடியாது, அவர்கள் அரசியல் அனாதையாகி நிற்கின்றனர்.

இந்த நிலையில் படுகொலையுடன் கூடிய இந்தச் சதி என்பது உண்மையானது. யுத்த முனையில் இருக்காத மூன்றாம் தரப்புகளின் கூட்டுச்சதி தான், புலித் தலைவர்களின் மொத்த மரணம். இந்த மரணத்தின் பின், எதிர்பாராதா வண்ணம் வெளிவரும் காட்சிகள்;. எப்படி இது நடந்தது, என்ற அதிர்ச்சி. இதனால் இறந்தது 'எங்கள்" தலைவரல்ல என்று கூறுமளவுக்கு, நம்ப முடியாத அதிர்ச்சிகள்.

அப்படியாயின் நடந்தது என்ன?............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 20, 2009

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.

உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு; அக்காட்டின் நடுவே திடீரென ''டும், டும்'' என முரசொலிக்க, எங்கும் எதிரொலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் வில்அம்பு, கோடரி, அரிவாள், தடிகளுடன் பழங்குடியின மக்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அணிதிரள்கிறார்கள். ''கொலைகாரர்கள் வந்துவிட்டார்களா? சி.பி.எம். குண்டர்கள் எங்கே?'' என்று பதற்றத்தோடு நாற்புறமும் அவர்கள் தேடுகிறார்கள். முரசொலி கேட்டதும் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சி, அவர்கள் பின்வாங்கி ஓடி விட்டார்கள் என்று தெரிந்த பிறகு, அம்மக்கள் திரும்பிச் செல்கிறார்கள்.

"கடந்த நவம்பரிலிருந்து இப்படியொரு முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை நாங்கள் செய்துள்ளோம். உயரமான மரங்களில் ஏறி, எங்களில் ஒருவர் கண்காணிப்பார். சி.பி.எம். குண்டர்களோ, போலீசோ, அரசு அதிகாரிகளோ இப்பகுதிக்குள் நுழைந்தால், உடனே அவர் முரசொலிப்பார். உடனே நாங்கள் அணிதிரண்டு அவர்களை முற்றுகையிடுவோம்'' என்கிறார் சுபாஷ் மஹடோ என்ற பழங்குடியின விவசாயி.

Tuesday, May 19, 2009

முழுமையான அழிவிலிருந்து புலிகள் தப்பியிருக்க முடியாதா!?


தாம் தம் சாவு நோக்கி நகர்கின்றோம் என்று அவர்கள் தெரிந்து கொள்ளாது இருந்தனர். தமக்கு ஏன் இந்த நிலை என்று, தம் மரணம் வரை தெரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை. தலைவருக்கு வெளியில் யாரும் இதைப்பற்றி சிந்திக்க முடியாது என்பது இயக்க நடைமுறை.

இன்றைக்கு இந்த நிலைமை ஏற்படுவதை தடுக்க, இதுவே தடையாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் தப்ப, அதற்கான சந்தர்ப்பங்கள் பல வந்து போனது. இதை நாம் குறித்த அக்கால கட்டத்தில் தெளிவுபடுத்தி வந்தோம்.

ஒரு இனத்தின் மீதான அழிவு அரசியலை புலிகள் கையாண்டு வந்தனர். நாம் இதில் இருந்து மக்களை பாதுகாக்கவும், போராட்டத்தை சரியாக இட்டுச்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்தியா நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை ...

அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

 

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

 

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தி......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 18, 2009

இறுதிவரை போராடி மடிந்த புலித் தலைவர்களின் மரணம்

அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடுத்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தின் மேலான இனவெறுப்பையும், அலட்சியத்தையும் அருவருக்கத்தக்க முறையில் பேரினவாதம் விதைக்கின்றது.

தமிழினமோ செய்வதறியாது
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பாரிய இனவழிப்பின் இறுதிக்கட்டமும், புலிகளின் இறுதி கட்டமும்

இன்று, இந்த மணி, இந்த நிமிடம், இந்தக் கணம், ஒரு பாரிய மனித அவலத்தின் மேல், ஒரு அழிப்பு யுத்தம் நடக்கின்றது. இது ஒரு இனத்தின் மேலாக நடக்கின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை பலியிடுதல் இன்றி, இந்த அழித்தொழிப்பு நடக்கவில்லை. மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதாகக் கூறும் ஒரு பொய்ப் பிரச்சாரம் மூலம் இந்த இனவழிப்பு உச்சத்தில் அரங்கேறுகின்றது.

இதன் மூலம் ஆகப் பெரும்பான்மையான தமிழ்மக்கள், தங்கள் தலைமையாக நம்பிய ஒரு தலைமை அழிக்கப்படுவதை பார்க்கின்றனர். அவர்கள் இந்த அழித்தொழிப்பை, வெறும் புலி அழிப்பாக பார்க்கவில்லை. அப்படி தமிழ்மக்கள் நம்பவுமில்லை. தமிழினத்தின் மேலான அழித்தொழிப்பாகவே, தமிழ் மக்கள் உணருகின்றனர். சாராம்சத்தில் அதையே பேரினவாத அரசு, கொக்கரித்தபடி செய்கின்றது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மாயாவதியின் பார்ப்பன சேவை பல்லிளித்தது தலித்தியம்

தாழ்த்தப்பட்டோரை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் எனும் அரசியலை முன்வைத்து, "பார்ப்பனர்கள், வைசியர்கள், ராஜபுத்திரர்களை செருப்பால் அடிப்போம்'' என்ற புகழ்பெற்ற முழக்கத்தின் மூலம் தனது அடித்தளத்தை உ.பி.யில் உருவாக்கி இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. தற்பொழுது இம்மூன்று சக்திகளுடன் சமரசமாகியதன் மூலமும், பார்ப்பனர்களுக்குப் பதவிகளைக் கொடுத்ததன் மூலமும் அக்கட்சி உ.பி.யில் 2007இல் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. தமிழ்நாட்டில் தலித்தியம் பேசிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், தாழ்த்தப்பட்டோரின் வாக்கு வங்கியை வைத்துப் பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத அரசியல் வித்தகர்களும் இப்பரிசோதனைக்காக மாயாவதியைப் போற்றிப் புகழ்ந்தார்கள். திருமாவளவன் கூட, "இந்திய நாடெங்கும் இந்த வெற்றியின் தாக்கம் தீயாய்ப் பற்றிப் பரவும்'' என மதிப்பிட்டிருந்தார்.

தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டிலும் அதே உத்தியுடன் களமிறங்கியுள்ளது. அதிகார வர்க்கப் பார்ப்பனர்களையும்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 17, 2009

இறுதிக் காலக்கெடுவின் பின் பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.

இதற்கு அமைய இறுதி இனவழிப்பாக 48 மணி நேரத்தை பிரகடனம் செய்தார் 'மாண்புமிகு” கொலைகார ஜனாதிபதி. ஆனால் அந்தக் காலம், இனவழிப்பு இயந்திரத்துக்கு போதவில்லை. அந்தளவுக்கு மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அறிவித்த 48 மணி நேரத்தை விட, அது மூன்று மடங்கு நேரத்தையும் கடந்துவிட்டது. இன்னமும் இந்த இனவழிப்பு யுத்தம் முடியவில்லை. அவசரமாக இனவழிப்பின் நற்செய்தி அறிவிக்க விமானத்தில் ஏறி ஒடோடி வந்த வேகத்தில், கால் தடுக்கி விழுந்த மண்ணை முத்தமிட்ட ஜனாதிபதியால் கூட, இந்தக் கணம் வரை கூட நற்செய்தியை வெளியிட முடியவில்லை.

பயங்கரவாதம் ஒழிந்த மண்ணுக்கு தான் செல்வதாக உலகறிய கொக்கரித்தவர், பயங்கரவாத மண்ணை மீள முத்தமிட்டவேண்டிய சோகம்.

இவை எல்லாம்............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிக்கு ஏன் இந்தக் கதி ஏற்பட்டது!?

புலித்தலைமை முதல் புலிப்பினாமிய வலதுசாரி கும்பல் வரை, இதற்கான அரசியல் காரணத்தை தெரிந்து கொள்ள மறுக்கின்றது. தாமல்ல, பல காரணங்களைக் கற்பிக்க முனைகின்றது. தாங்கள் சரியாகவே இருந்ததாகவும், இருப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. இப்படி அவர்கள் தாங்கள் கற்பிக்கும் காரணங்கள் ஊடாக, தமது தவறான வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து நகர்த்த முனைகின்றனர். தாமல்லாத காரணம் தான், இந்த தோல்விக்கான காரணம் என்ற சொல்ல முனைகின்றனர்.

புலிகளுக்கு வெளியிலான புறநிலையான காரணங்கள் தான் புலியின் அழிவுக்குரிய யுத்தமாக மாறியது என்றால், அதற்கு அகநிலையான காரணமாக புலிகளே இருந்துள்ளனர். இங்கு புலிகளின் அகநிலைக் காரணங்கள் தான், இந்த யுத்தத்தை அவர்களுக்கு எதிரான முழு அழிவுக்கும் இட்டுச்சென்றது. இதை மறுதலிக்கும் வண்ணம், புலிப்பினாமிகள் தம் வலதுசாரிய அறிவிலித்தனத்துடன் புலம்புகின்றனர்.

1. பல நாடுகளின் இராணுவ உதவியை பேரினவாத அரசு பெற்றதாலும், தமக்கு எதிராக உலகம் தளுவிய சதிகளாலும் தான், புலிகள் தோற்றனர் என்கின்றனர். இதுவா காரணம்!?

இந்த வாதம் தமது சொந்த வலதுசாரிய பாசிசத் தவறுகளை நியாயப்படுத்த வைக்கின்ற தர்க்கம். உலகில் எந்த விடுதலைப் போராட்டமும், உலகம் தளுவிய தாக்குதலை எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். இதை எதிர்கொள்ள முடியாதவர்கள், சரியான...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

குசேலன் குபேரனான கதை

சி.பி.எம். என்பது ஒரு கட்சியல்ல; அதுவொரு முதலாளித்துவக் கம்பெனி. கம்பெனி என்றால் அதற்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். ஆண்டுதோறும் சொத்து விவரங்களைத் தணிக்கை செய்து, வருமான வரி அலுவலகத்துக்குச் சட்டப்படி தாக்கல் செய்யும். சி.பி.எம். கம்பெனியும் இப்படி ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறது. கடந்த 2006 மார்ச் 31ஆம் தேதி முடிய உள்ள நிதியாண்டில் சி.பி.எம். கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77.27 கோடிகளாகும்.

இழப்பதற்கு ஏதுமில்லாத தொழிலாளி வர்க்கத்தின் கட்சி; பஞ்சைப் பராரிகளின் கட்சி; சொத்துடமை முறையை ஒழித்து சோசலிசத்தைப் படைக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் கட்சி இப்படிப்பட்ட கட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. முதலாளித்துவ கம்பெனிகளின் சொத்து நாள்தோறும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பல்கிப் பெருகுவதைப் போல, சி.பி.எம். கம்பெனியின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Saturday, May 16, 2009

தமிழனை ஏமாற்றி பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது.

புலி அரசியல் செத்துப் போகவில்லை. தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது. புலித் தலைமைக்கு என்ன நடந்தது என்பது, எந்த நேரமும் ஒரு அரச செய்தியாக வெளிவரலாம். அது கைது அல்லது மரணம் அல்லது அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பது, இதில் நிச்சயமான ஒன்று.

ஆனால் கடந்த 60 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்த அரசியல் செத்துவிடவில்;லை. கடந்த 30 வருடமாக ஆயுதமேந்தி, தமிழ் மக்களை ஏமாற்ற அது போட்ட வேஷம் கலைந்துவிடவில்லை.

இந்த வேஷத்தை காப்பாற்ற, அது பாசிச சர்வாதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் ஏவியது. ஆயிரம் ஆயிரம் மக்களை, இதற்காக நரை வேட்டையாடியது. இரத்தமும் கண்ணீருமின்றி மக்கள் வாழவில்லை. தேசமோ விடியவில்லை. மக்களின் தேசியத்தை, அதன் ஆன்மாவை குழி தோண்டிப் புதைத்தனர்.

ஆனால் இதை அண்டி பலர் பிழைத்துக் கொண்டனர். கோடிகோடியாக சம்பாதித்துக் கொண்டனர். புலி முதல் புலியெதிர்ப்பு வரை இந்த
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இதத்ருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக்கொணு மக்களை அறிவூட்டி ...


ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிக்கு வாக்களி என்று சொல்வதாகவே இந்த வரலாறு நீளப்போகிறது.

கட்சிகளைத் தோற்கடிப்பதை விட மக்களை ஏமாற்றும் சதிவலையான கட்சி ஜனநாயகத்தையே தோகடிப்பது என்ற வகையில் தேர்தல் புறக்கணிப்பு சிறந்த அரசியல் நிலைப்பாடு.

ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்பழக்குவதை விட, தேர்தல்களூடு படிப்படியாக கட்சி அரசியலுக்கு எதிரான அரசியற்சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமானால் அதன் அறுவ்டை பெரியது.

ஈழஅவலத்தால்........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் : வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?

ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் பலமுனைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. அப்போர் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அல் காய்தா தலைவர் ஓசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. அல் காய்தா, தாலிபான் ஆகிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவால் முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்கானின் அண்டை நாடான பாகிஸ்தானையும் ஆட்டங்காணச் செய்துவிடும் அளவிற்கு அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

அமெரிக்கா, ஆப்கானில் கர்சாய் என்பவர் தலைமையில் நிறுவியுள்ள பொம்மை அரசாங்கத்தின் அதிகாரம், அந்நாட்டின் தலைநகர் காபூலைத் தாண்டினால் செல்லாக்காசுதான் எனுமளவிற்கு முடங்கிப் போய்க் கடக்கிறது. இன்னொரு புறமோ, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற கதையாக, ஆப்கானிலும், ஆப்கான் எல்லையையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் தாலிபான் என்ற பெயரை வைத்துக்கொண்டு இயங்கி வரும் பல்வேறு இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் ஆங்காங்கே குட்டி சமஸ்தானங்களை நடத்தி வருகின்றன. இந்த யுத்தப் பிரபுக்களை அழிப்பதற்காக அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தும் வான்வழித் தாக்குதல்களிலும், தரைவழித் தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர்.

தனது தேர்தல் பிர
...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 15, 2009

ஏன் இன்னமும் இனவழிப்பு யுத்தம் முடியவில்லை!?

காலக்கெடு பல விதிக்கப்பட்டது. நாட்கள் பல குறிக்கப்பட்டது. சில மணி நேரங்கள் கூட அறிவிக்கப்பட்டது. இருந்தும் பேரினவாத இனவழிப்பு யுத்தம், இன்னமும் முடிவுக்கு வரவில்லை. காரணம் என்ன!?

அரசின் 'மீட்பா!?" அரசின் 'மனிதாபிமானமா!?" இல்லை. இவை எல்லாம் அரசின், அரசியல் நோக்கமாக இருப்பதில்லை. இனவழிப்பே பாசிட்டுகளின் அரசியல். 'மீட்பு", 'மனிதாபிமானம்" என்பன இனவழிப்புத் திட்டத்தின் முன், தவிர்க்க முடியாத வண்ணம் வந்த புதிய விடையங்கள். அப்படியாயின் காரணம் என்ன!?

புலிகள் பலமா!? இல்லை, அதுவுமில்லை. புலிகளின் பலத்தின் முன், அவர்களின் யுத்த தந்திரத்தின் முன், அவர்கள் என்றோ அழிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படியாயின் எது!?

உண்மையில் இந்த இனவழிப்பை தான் விரும்பியவாறு செய்யமுடியாது தடுப்பது, சர்வதேச முரண்பாடுகள்தான். இனவழிப்பின் ஊடாகத்தான், புலியை அழிக்க அரசு விரும்பியது. பாரிய இனப்படுகொலைகள் மூலம், இதைச் செய்யவே விரும்பியது.

இதைத் தடுத்தது, நிலவும் சர்வதேச................
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது!

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது, பாரதீய ஜனதா கட்சி. தேர்தல் என்றாலே கருப்புப் பணத் திருவிழா என்பது ஊரறிந்த உண்மை. கட்சிக்குள் "சீட்'' வாங்குவதில் தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்து, ஆட்சி கவிழ்ந்து விடாமல் காப்பது முடிய ஓட்டுக்கட்சி அரசியலில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவது ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அப்படிபட்ட புழுத்து நாறும் ஓட்டுச்சீட்டு அரசியலில் புரண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க., "தாம் ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களுக்குள் தோண்டியெடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்'' எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரசுக் கட்சியோ இக்கருப்புப் பண வேட்டை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "பா.ஜ.க., கருப்புப் பணம் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக''க் குற்றஞ்சுமத்தி வரும் அக்கட்சி, கருப்புப் பணம் பற்றிய உண்மை விவரங்களை வெளியிட மறுக்கிறது. வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ்தாஸ் குப்தா, "இக்கருப்புப் பணம் பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தான் எழுதிய கடிதத்தை அவர்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்துவிட்டதாக''ப் புலம்பி வருகிறார்.

சுவிஸ் வங்கியில்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 14, 2009

மக்களின் அவலம் மேல், புலியின் பொய்ப் பிரச்சாரம்

செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்பு முயற்சியை தடுத்து, வகைதொகையின்றி கொன்று குவிக்கும் 'மீட்பு" 'ஜனநாயகம்"

புலிகள் தமிழ் மக்களை பணயம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களை குறிவைத்துக் கொல்லுகின்றது இந்த அரச 'ஜனநாயகம்". இந்த ஜனநாயகத்தின் மகிமையோ, இன்று தாம் குண்டு போட்டு காயப்படுத்திய மக்களை மருத்துவமனையில் வைத்து கொல்லுகின்றது. மருத்துவ மனைகளையே, குண்டு வீசி அழிக்கின்றது.

அங்கு இரவு பகல் பாராது மருத்துவம் செய்யும் வைத்தியர்கள் முதல் சமூக நல மனிதாபிமானிகளை, பழிவாங்கும் உணர்வுடன் கொல்லும் மிருக வெறியுடன் தாக்குதலை நடத்துகின்றது. தாம் கொல்வதற்கு தடையாக உள்ள உயிர்காக்கும் மருத்துவமனையை, செயல்படவிடாத வண்ணம் மீண்டும் மீண்டும் தாக்கி அழிக்க முனைந்தது, முனைகின்றது.


பேரினவாத இனவழிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுக் காயங்களுக்கு உள்ளாகி தவிக்கும் இன்றைய சூழலில், ஒரு சில மருத்து............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மக்களுக்கான அரசியலை நிராகரிக்கும், புதிய அரசியல் போக்குகள்

புலிகளின் அழிவு, புலிக்குள் இருந்த பலரை புலிக்கு எதிரான அரங்கிற்கு கொண்டு வருகின்றது. புதிதாக கருத்துத்தளத்தில் இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கத்தில் அரசு சார்பானவர்கள் அம்பலமாவதால், இதற்கு வெளியில் பலர் தெளிவடைகின்றனர். இது இன்றைய புதிய அரசியல் நிகழ்ச்சிப் போக்காக உள்ளது.

இப்படி விழிப்புற்று தெளிவுறும் இந்தக் காலகட்டத்தில், இவை மக்களுக்கு சார்பாக மாறிவிடவில்லை. இப்படி வெளிவருபவர்கள் மக்களுக்கான ஒரு அரசியலை முன்னிறுத்தி, அதற்காக செயல்படத் தயாராகவில்லை என்பதுதான், ஒரு கசப்பான உண்மை. இரண்டு வலதுசாரி போக்குகளில் இருந்து வெளிவருபவர்கள், அதை விமர்சிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் வலதுசாரிய அரசியலைத் தாண்டி, இடதுசாரிய மக்கள் அரசியலை முன்னெடுக்க அவர்கள் தயாராகவில்லை.

மக்களுக்கான அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் வர்க்கப் போராட்டமும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில், இந்த சமூகத்தில் நடைபெறும் இன்றைய அரசியல் மாற்றங்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 13, 2009

கோடீசுவர வேட்பாளர்கள் கோவணத் துணியோடு மக்கள்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க. அழகிரி, "தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன், எனக்கு ஓட்டுப் போடுவீங்களா?'' என்று அழகம்மா என்ற வாக்காளரிடம் கட்க, அவரோ "நாங்க ஓட்டுப் போடுவோம் நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க?'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். இந்தியத் தேர்தலில் பணநாயகம் பல்லிளிப்பதைக் காட்டும் ஒரு சோற்றுப் பதம் இது.

தேர்தலில் வாக்குறுதிகளைக் கொடுத்த காலம் போய், கொள்ளையடிப்பதில் மக்களுக்கும் பங்காக "இலவசங்கள்' கொடுத்த காலமும் போய், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய், எங்க வீட்டில் இவ்வளவு பேர், இவ்வளவு ரூபாய் கொடுங்கள் என வாக்காளர்களே, வேட்பாளரைத் தேடிச் செல்லும் புதியதொரு பரிணாமத்தை இந்தியத் தேர்தல் களம் தொட்டுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் தந்த படிப்பினையில் வாக்காளர்கள் இவ்வாறு விழிப்படைந்திருப்பதால், அதற்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் பட்ஜெட்டையும் தயாரித்துள்ளன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பார்த்தாலே இது புரிந்துவிடும். தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுபவர் திரைகடல் ஓ.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இனவழிப்பை செய்யும் யுத்த வடிவங்கள்

பேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.

புலிகள் மக்களைக் கொல்ல உதவும் வண்ணம் தான், யுத்ததந்திரத்தை கட்டமைக்கின்றனர். இதன் பொருள் என்ன? பேரினவாதம் மக்களை வகைதொகை இன்றி கொல்லும், அதைக் கொண்டு நாங்கள் தப்பமுடியும் என்று அது கருதுகின்றது.

இப்படி பேரினவாதம் வகை தொகையின்றி கொல்லும் என்பதன் மூலம் அந்த செயலை ஆதரிக்கும் புலி ஒருபுறம். மறுபக்கத்தில் பேரினவாதம் வகை தொகையின்றி கொல்வதை 'ஜனநாயகம்" என்று சொல்லி ஆதரிப்பவர்கள் புலியெதிர்ப்பாளராக உள்ளனர். இப்படி இரு தரப்பும், வௌ;வேறு வடிவங்களில் மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர்.

புலிகள் மக்களை 'பணயக்கைதியாக" வைத்திருப்பதால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றனர் என்று கூறி, கொல்வதையும் கொல்பவனையும் ஆ.......
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 12, 2009

பேரினவாத இனவழிப்பு யுத்தம், பெண்கள் மேல் திணித்துள்ள ஆணாதிக்க சுமை

பெண் உடல், பாலியல் உறுப்புகள் கூட, யுத்தத்தில் ஒரு கருவியாகின்றது. பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாரியது. எல்லையற்றது. ஆணாதிக்க சமூக அமைப்பில் யுத்தம், விதவைகளை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் உடல், பால் சார்ந்த உறுப்புகளை யுத்தம் மேய்கின்றது.

வாழ்வை நடத்த முடியாத யுத்த பொருளாதார சூழல், உடலை விற்கக் கோருகின்றது. தாயையும், குழந்தையையும் இழந்த பெண்ணின் யுத்தக் கதறல்கள், உளவியல் ரீதியில் மரணிக்கக் கோருகின்றனர். பேரினவாத பாசி;ட்டுகள் இனவழிப்பின் ஊடாக, பெண்ணை குறிவைத்து ஒரு உளவியல் யுத்தம் மூலமும் கொல்லுகின்றது. மறுபக்கத்தில் புலிகள் முதல் துரோகக் கும்பல் வரை, இந்த பெண்களை பிடுங்கித் தின்னுகின்றது. இந்த பெண்களுக்கு ஆறுதலாக இருக்க, உதவியாக இருக்க முன்வராத மலட்டுத் தேசியம், மலட்டு ஜனநாயகமும் பாசிசமாகி பெண் இனத்தையே புணருகின்றது.

இன்று இனவழிப்பு உச்சத்தில், பெண்களின் அவலமோ எல்லையற்றது. பேரினவாதம் தமிழர்களின் பொதுவான வாழ்வியல் அடிப்படைத் தேவைகளையே இன்று மறுத்து நிற்கின்றது. இதில் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும்,.........
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஈழப் "போர் நிறுத்தம்": காங்கிரசு - தி.மு.க.கம்பெனியின் கபட நாடகம்

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து

போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு, "இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சாகும் வரை உண்ணாவிரதம்" எனும் சூப்பர் நாடகத்தை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலைக் காட்சியாக அரங்கேற்றினார், இந்த "தமிழின"த் தலைவர்.

இதற்குக் கதை, வசனம், நடிப்பு, இயக்கம் அனைத்துமே அவர்தான். கதாநாயகனும் அவர்தான். கதாநாயகிகள் இருவர். அவர்கள் கருணாநிதியின் தலைமா
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 11, 2009

காங்கிரசு கயவாளிகளுக்குச் செருப்படி மட்டும் போதாது!

"ஒரு ஆலமரம் விழும்போது பூமியில் அதன் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்''. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதும் டெல்லியிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில், பலர் காங்கிரசு குண்டர்களால் கொல்லப்பட்டது குறித்துக் கேட்டபோது ராஜீவ் காந்தி திமிராகக் கூறிய பதில் தான் இது.

அந்தக் கலவரத்தின் போது காங்கிரசு குண்டர்கள், கையில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு சீக்கியர்களைத் தேடித்தேடிக் கொன்றனர். இதுநாள் வரை கலவரத்துக்குக் காரணமான காங்கிரசு தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் சீக்கியர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவரை வைத்துச் சீக்கியர் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கேட்கும் நாடகம் ஒன்றை நடத்திக் காட்டினார்களே தவிர, குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை.

அந்தக் கலவரத்தைத் தூண்டி விட்டதுடன், சீக்கியர் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்தியதாக ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார், எச்.கே.எல் பகத் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக விசாரணை.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பேரினவாத பாசிட்டுகள் தமிழ்மக்களை கொல்வதுடன், அப்பாவி சிங்கள இளைஞர்களையும் பலி கொடுக்கின்றனர்

வெளிவராத, கண்டுகொள்ளாத, மற்றொரு மனித அவலம். ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களின் மரணம், மூடிமறைக்கப்படுகின்றது. சிங்கள் சமூகத்துக்கு இனவெறியூட்டி, அதை சிங்கள தேசியமாக புணர்ந்து காட்டி, ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை வெறும் கூலி இராணுவமாக்கி, அதையே தன் பாசிச அரச இயந்திரத்தின் அச்சாக கொண்டுள்ளது

சிங்கள அரசு. இதன் மூலம்தான் புலிக்கு எதிரான யுத்த முனையில், ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களை பேரினவாத பாசிட்டுகள் பலியிடுகின்றனர். இப்படி இன்று இறந்து போன ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் மரணத்தை, தான் இனவெறியூட்டிய தன் சமூகத்தின் முன் முற்றாகவே இருட்டடிப்பு செய்து வருகின்றது. கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு, இந்த பாசிச பலியிடலை முற்றாக மூடி மறைத்து வருகின்றது. இதற்கு அமையவே, படுகொலைகள் மூலம் சிங்கள ஊடகவியலின் வாயையே மூடிவைத்துள்ளது.

இதன் மூலம் பாசிச யுத்தத்தை, தன் இனச் சமூகம் மீது கூட அது மறைமுகமாக நடத்துகின்றது. ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்க.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 10, 2009

ஈழப் போரும் இந்திய மேலாதிக்க நலன்களும்

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால் தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.

வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். "வல்லரசாக' வளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி நாடு விரித்த வலையில் சிக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறுவதைக் கேட்பதற்குக்கூடக் கூச்சமாக இருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, "பல நேரங்களில் இலங்கை இந்தியாவிற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதால், சிங்களர்களை இந்தியா நம்பக் கூடாது; தமிழீழம்.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின், சமூகங்களின் முன்னோடிகளுக்கும் ஒரு பகிரங்க வேண்டுகோள்

அரசும் புலியும் எம்மைச் சுற்றி கட்டமைத்த பாசிச அரசியல் சூழலின், நாம் என்றும் வெறும் பார்வையாளராகவோ, கருத்தற்றவர்களாகவோ இருந்ததில்லை. நாம் எம் சூழலின் எல்லைக்குள் போராடியிருக்கின்றோம், சிந்தித்து இருக்கின்றோம், செயல்பட முனைந்திருக்கின்றோம்.

இந்தவகையில் தான், மற்றவர்களில் இருந்தும் நாம் இன்று வேறுபடுகின்றோம். அரசு – புலி இரண்டையும் எதிர்த்து கடந்தகாலத்தில் எம் உதிரியான அரசியல் நடவடிக்கை, இன்று எமது தனித்துவமான ஒழுங்குபடுத்தபட்ட அரசியல் செயல்பாட்டைக் கோருகின்றது. நாம் செய்ய வேண்டியது என்ன?, எதைச் செய்யமுடியும்? என்ற பல கேள்விகள் எம்முன் உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றாக இதை விவாதிக்க வேண்டியுள்ளது.

இன்று எம் சமூகம் எதிர்கொள்ளும் பல முகம் கொண்ட மனித அவலமோ எல்லையற்றது. இதை புலித் 'தேசியமும்", அரச 'ஜனநாயகமும்" தத்தம் சொந்த பாசிச அரசியல் வழிகளில் உருவாக்கிய ஒரு பயங்கரவாதத்தின் பொது விளைவாகும். இது சுரண்டும் வர்க்கத்தை காப்பாற்ற, பேரினவாதம் உருவாக்கிய இனவொடுக்குமுறையே இதன் அரசியல் அடிப்ப...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்