தமிழ் அரங்கம்

Sunday, September 6, 2009

பிரபாகரனை பலிகொடுத்த அரசியல் எது?


இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கும் தம்மைச் சுற்றிய தன் இனத்துக்கும் நடக்கும் இனவொடுக்குமுறையை, சுயமாக எதிர் கொள்ளும் அனைத்து சுய சமூக ஆளுமையையும் இழந்து நிற்கின்றனர். கடந்த காலத்தில் அவர்களைச் சுற்றி பல்வேறு நிகழ்வுகள், அவர்களின் சுயாதீனமான கூறுகளை அழித்து இருந்தது.

இதனால் சமூகமோ வாழா வெட்டி நிலைக்குள், இன்று சிதைந்து கொண்டிருக்கின்றது. இதை நாம் எம் சொந்த தவறுகள் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தான், எதிர்காலத்திலாவது நாம் சரியாக எதிர்வினையாற்ற முடியும்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இனவொடுக்குமுறையோ..
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தொடரும் கொத்தடிமைக் கொடூரம் அரசின் பாராமுகம்!

ஓய்வின்றிக் கட்டாய வேலை; சம்பளம் கிடையாது; சம்பளம் கேட்டால் சவுக்கடி; நோய்வாய்ப்பட்டாலும் விடுப்போ, மருத்துவமோ கிடையாது; இக்கொடுமையிலிருந்து தப்பியோட முயற்சித்தால்,

பிடித்து வந்து கட்டி வைத்து பெல்ட்டாலும் கேபிள் ஒயராலும் நாள் முழுக்க அடித்து வதைக்கும் கொடூரம்; ரூ. 5,000 முன்பணம் பெற்றுக் கொண்டு பிழைப்புக்காக இங்கு வேலைக்கு வந்த கூலி ஏழைகள், இங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி வெளியில் முணுமுணுக்கக்கூட முடியாது. போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையோடும், குண்டர்களின் பாதுகாப்போடும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரத்தை கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி வட்டத்திலுள்ள தலைப்பட்டி கிராமத்தில் நடத்தி வந்தான், மணி என்ற கொடுங்கோல் முதலாளி. டாடா கிரஷர் என்ற......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, September 5, 2009

பட்ஜெட் : விவசாயிகளுக்குச் சலுகையா? சமாதியா?


முதலாளிகளுக்குச் சலுகைகள் அளித்து, அவர்கள் மூலம் அச்சலுகைகளில் சிறு பங்கு தொழிலாளர்களைச் சென்றடையச் செய்யும் உத்திக்குப் பதிலாக, இந்த பட்ஜெட் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திப் போடப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்படிச் சுற்றி வளைத்துப் பேசாமல், தனியார் முதலாளிகளின் ஊதுகுழலான இந்தியா டுடே ஏடு, இந்த பட்ஜெட்டை "சோசலிச பட்ஜெட்'' என வஞ்சகமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது.

முதலாளித்துவப் பத்திரிகைகளின் புகழாரங்களைக் கேட்கும்பொழுது "மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா மூக்கின் கீ....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 4, 2009

மகிந்தாவின் பேரினவாத பாசிசம், ஊடகவியலை குதறுகின்றது

இனவொடுக்குமுறையும் இனவழிப்பும் பேரினவாத பாசிசமாக, அதுவே குடும்ப ஆட்சியாக மாறி வருகின்றது. அது தன்னை விமர்சிக்கின்ற, தன்னை எதிர்க்கின்ற அனைத்தையும், ஈவிரக்கமின்றி அரச இயந்திரங்கள் மூலம் ஓடுக்குகின்றது அல்லது போட்டுத் தள்ளுகின்றது. ஒரு கூலிப்படையும், சலாம் போட்டு நக்கும் கூட்டமும் தான் அரசாக உள்ளது. இந்தக் கும்பல் போடும் பாசிசக் கூத்தைத்தான், சட்டத்தின் ஆட்சி என்றும், ஜனநாயகத்தின் சிம்மாசனம் என்று கூச்சல் போடுகின்றது.

தன் சொந்த பாசிச ஆட்சியை தக்கவைக்க, தமிழ் சிங்களம் என்று எந்த வேறுபாட்டையும் அது காட்டவில்லை. ஆனால் தமிழ்மக்களை ஓடுக்கும் அதிகாரத்தையும், இனவழிப்பு செய்யும் உரிமையையும், பயங்கரவாதமாக சித்தரித்துக் கொண்டு பாசிசத்தை இலங்கை முழுக்க நிறுவிவருகின்றது. தமிழர்களை ஓடுக்குவது சிங்களவர்களின் நியாயமான உரிமை என்று கூறி, சிங்கள மேலாதிக்கம் சார்ந்த ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு, பாசிச ஆட்டம் போடுகின்றது. புலிப்பாசிச.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, September 3, 2009

தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்.

கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் ஒரு டன் எடையுள்ள இரும்புத் தகடு சரிந்து விழுந்து, ரகுபதி என்ற உதிரித் தொழிலாளி கோரமாகக் கொல்லப்பட்டார். எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி உதிரித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்களைக் கட்டாயமாக வேலை செய்யுமாறு நிர்வாகம் நிர்பந்திப்பதால் ஏற்பட்ட கோரமான விபத்துகளில் ஒன்றுதான் இது. வழக்கம் போலவே, இப்படுகொலையை மூடி மறைக்க ஆலை நிர்வாகிகள் முயற்சித்தபோது, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடியதால், இழப்பீடு நிவாரணமும் மாண்டுபோன தொழிலாளி ரகுபதியின் மனைவிக்கு இந்நிறுவனத்தில் வேலைதரவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இக்கொடிய விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, கடந்த ஜூலை முதல் நாளன்று இதே நிறுவனத்தில் மீண்டும் இரும்புத் தகடு சரிந்து விழுந்து, லாசர் என்ற உதிரித் தொழிலாளி கொல்லப்பட்டார். விபத்து நடந்த போது, அருகில் தொழிலாளிகள் யாருமில்லாததால், படுகாயமடைந்த தொழிலாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும்,...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, September 2, 2009

வெடிவிபத்தல்ல, பச்சைப்படுகொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
ஒன்றரை வயது குழந்தையோடு பெண்களும் பள்ளிச் சிறுவர்களும் கோரமாகக் கொல்லப்பட்ட துயரம் தாளாமல் மரண ஓலத்தில் துவண்டு கிடக்கிறது வடக்குப்பட்டி.

இறந்தவர்களில் 4 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு வெந்து கரிக்கட்டையாகி கிடந்தனர். மாண்டவர் களைக் கட்டிப்பிடித்து அழுவதற்குக் கூட முடியாமல், உறவினர்கள் கதறியழுத காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் செங்கற்சுவரும் வெடித்துச் சிதறி தப்பியோடிவர்களைத் தாக்கியதால் தலை, கைகால்கள் என பிய்த்தெறியப்பட்டு பலர் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

துரைப்பாண்டியன் என்பவருக்கு.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, September 1, 2009

தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்கு தாரை வாய்ப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்


அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு ஒவ்வாத நிலையில் உடல் மெலிந்து காணப்படுவதாகவும்; அவன் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் குடும்பத்தாரி டம் கூறிவிட்டனர். 6 மாதங்களுக்கு முன்பு சரவணகுமார் காலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு உள்ளூரில் உள்ள கிளை சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி (ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி) போடுவதற்கான மருந்து இல்லாமல் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. சரவணக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் அன்பு மகனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

இது ஏதோ சரவணகுமார் என்ற குழந்தைக்கு மட்டும் விதிவிலக்காக நடந்த சம்பவம் அல்ல. நாடு முழுவதும் ஆண்டு தோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் எதிர்காலம் இதை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை அரசே உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2008இல் 13 மாநிலங்களை ஆய்வு செய்த சுகாதார துறை அதிகாரிகள் பீகார், சட்டிஸ்கர், அஸ்ஸாம், கேரளா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் தொண்டை அழற்சி, ஜன்னி, காசநோய், கக்குவான் இருமல் மற்றும் அம்மை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் அரசு
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 31, 2009

வினவு அறிவித்த "வரட்டுத்தனம்" மீது புலம்பல்களும், ஓப்பாரிகளும்

"வரட்டுத்தனத்தை" வினவுகுழு அறிவிக்க, அதை நிறுவப் புறப்பட்ட பலர் புலம்பியுள்ளனர். ஜனநாயகம், மார்க்சியம் .. அது இது என்று, கன்னா பின்னாவென்று ஓப்பாரிவைத்துள்ளனர். பலர் விவாதத்தையே வாசிக்கக் கூடவில்லை. ஒரு நூலில் தொங்கி கொண்டே கொசிப்போ கொசிப்பு. இதற்கு வெளியில் வேறு சிலர் ஏதோ ஏதோ உளறிக் கொட்டியுள்ளனர். வேறு சிலர் முன்னுக்கு பின் வாசிக்காமல், எம்மீது இல்லாத பொல்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கக் கூடிய வகையில், அதில் எதுவும் கிடையாது. குப்பை மேடு.

இவற்றின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட சில புரட்டுகளைப் மட்டும் பார்ப்போம்.

1.அவர் (ரதி) எழுத முன்னமே, அவரை நாம் பாசிட் என்று அறிவித்து விட்டோம் என்கின்றனர்.

மிகத் தவறான, அப்பட்டமான ஒரு திரிபு. அவர் எழுதியிருந்த மூன்று கட்டுரைகளின் பின்புதான், அதுவும் இதன் பின் வினவுக்கு தனிப்பட எழுதிய கடிதத்தில் தான், அவரை பாசிட் என்று குறிப்பிடுகின்றோம். அக் கடிதத்தைத்தான், பின்பு வினவு பிரசுரித்தும் இருந்தது. வெளிவந்த மூன்று கட்டுரைகளுக்கு பின்தான், அவரை பாசிட் என்று ....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?

தமிழகத்தில் ஏறத்தாழ 3 லட்சத்து 90 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் இயங்கிவரும் நிலையில், 2011க்குள் மேலும் ஒரு லட்சம் சுயஉதவிக் குழுக்களைக் கட்டியமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, விவசாயிகளுக்கென 10,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார், நிதியமைச்சர் அன்பழகன்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் இலட்சக்கணக்கில் பல்கிப் பெருகி வருகின்றன. 1990களில் 500 சுயஉதவிக் குழுக்கள் மட்டுமே இருந்த நம் நாட்டில், நபார்டு வங்கியின் கணக்குப்படி 2006ஆம் ஆண்டின் இறுதிக்குள் 33.7 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாடு முழுவதுமுள்ள சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டிவிடும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெண்களின் தற்சார்பு.............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 30, 2009

"வரட்டுத்தனம்" குறித்து வினவும், "ஈழ நினைவு குறித்து" புலிப்பாசிசமும் (பகுதி : 6)


இந்த எளிய மார்க்சிய உண்மையை முன்னிறுத்தி, மனித குலத்துக்கு எதிராக புலிப்பாசிசம் செய்த கொடூரத்தைப் பற்றி, எதையும் கூறத்தேவையில்லை என்ற "மார்க்சிய" விளக்கத்தை, எம்மீது திணிக்க முனைந்தனர். பாசிசம் கட்டமைக்கும் வரலாற்றுத் திரிபு, அவரின் சார்புக்கு உட்பட்டது. எனவே "அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும். படிப்பவருக்கும் அப்படித்தானே? இதில் யார் எந்தப்பக்கம் சார்ந்தவரோ அதன்வழியில் தானே ஒரு எழுத்து பிடிக்க, பிடிக்காமல் போகும். நடுநிலை என்று ஒன்று உண்டா?" என்று கூறி, பாசிசப் பிரச்சாரத்தை நாசூக்காக முன்தள்ளுகின்றனர். "வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்." என்று கூறிய போது, எமக்கு கிடைத்த பதில் தான் இது.

இப்படி பாசிசத்தை பாதுகாத்து வாதிட்டவர்கள் "அவர் எழுதுவதில் விவரப்பிழை இருந்தால் சுட்டலாம், அவர் ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு இருந்தால் வாதிடலாம்." என்றனர். வாதிட முற்பட்ட போது, அதை வரட்டுவாதம் என்கின்றன
..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, August 29, 2009

சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்


ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப+ர்வ பத்திரிகையான சியரட்ட பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும், லங்கா ஈ நிய+ஸ் இணையத்தளத்தின் சிறப்புக் கட்டுரை ஆசிரியராகவும் இதற்கு முன்னர் பணியாற்றிய பிரகீத் எக்நேலியகொட என்பவரே இவ்வாறு கடத்ததப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர், நேற்று முன்தினம் (27) இரவு தனது வீட்டிற்கு நடந்துசென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது வீதியின் அந்தப் பிரதேசத்தில் சனநடமாட்டம் அற்றுக் காணப்பட்டதாகவும் தமக்கெதிரே கொண்டுவந்து நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து அவசராக இறங்கிய மூன்று இளைஞர்கள், தன்னை இழுத்து வேனில் போட்டுக் கொண்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். வேனில் ஏற்றப்பட்ட தமது கண்கள் கட்டப்பட்டு, ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" (பகுதி 5)

'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு குழு அறிவித்துள்ளது. இங்கு அவர்கள் 'புலி அனுதாபிகள்' என்று கூறுபவர்களை, புலிகளாக, பாசிட்டுகளாக பார்த்தால் மன்னிக்க முடியாத வரட்டுத்தனமாம்.

இப்படி கூறி ஈழத்து கம்யூனிஸ்டுகளை புலியுடன் சென்று, வென்று எடுப்பது தான், சரியான அரசியல் யுத்ததந்திரம் என்கின்றனர். இதை அவர்கள் நடத்த, நாங்கள் அம்பலப்படுத்த, அதை வறட்டுவாதம் என்று முத்திரை குத்தியுள்ளனர்.

மற்றொரு நாட்டு கம்யூனிச இயக்கத்தின் அரசியல் வழிமுறைக்கு எதிரான போராட்டத்தை, "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" என்று வினவு, திடீரென வினவு குழுவாக மாறி அறிவித்திருக்கின்றது. இந்த அரசியல் வழிமுறை சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது. ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய (நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளல்ல என்றால் அதைச் சொல்லுங்கள்) நாங்கள், பாசிசத்தை எந்த அரசியல் வழி ஊடாக, யாரைச் சார்ந்து எப்படி போராட வேண்டும் என்ற பிரச்சாரத்தை, கிளர்ச்சியையும் கடந்த 30 வருடமாக பலரை இழந்தபடி தொடர்ச்சியாக செய்து வ....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.


கேரள முதல்வரும், கேரள மாநில சி.பி.எம். கட்சி நிறுவனர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான அச்சுதானந்தனை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) விலிருந்து நீக்கியதன் மூலம் இப்புதிய கொள்கையைச் செயல்படுத்தவும் கிளம்பி விட்டது.

கேரளத்தில் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியும், அக்கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியும் பதவிக்காகவு ம், சி.பி.எம் கட்சியின் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அனுபவிக்கும் அதிகாரத்துக்காகவும் தீராத நாய் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பினாரயி விஜயன் மீதான லாவலின் ஊழல் விவகாரம் வீதிக்கு வந்து நாறத் தொடங்கியதும், இந்த கோஷ்டி மோதல் உக்கிரமடைந்தது.

அதென்ன லாவலின் ஊழல்? கேரளாவில் 1996 முதல் 2001 வரை சி.பி.எம். முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான "இடது முன்னணி' ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, August 28, 2009

தோழர் வினவின் தளத்தின் கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்ல, ஒரு பாசிட்டே (பகுதி 4)


வினவு கொள்கையளவில் கூட பாசிசம் இங்கு மூடிமறைக்கும் என்பதை ஏற்க மறுத்தார். பாசிசத்தை இந்த உள்ளடக்கத்தில் வைத்து பிரிக்க முடியாது என்பது வாதமாக மாறும் போது, அரசியல் ரீதியான ஒரு முரண்பாடாக அது மாறிச் செல்லுகின்றது.

இந்த வகையில் இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் புலிக்கு ஆதரவாக "எதையும்" எழுதவில்லை என்ற வாதம் எம்முன் முன்வைக்கப்படுகின்றது. கட்டுரையாளர் முன் வைப்பதே புலிவாதம் தான். புலிக்கு ஆதரவாக "எதையும்" எழுதவில்லை என்று கூற, கட்டுரையாளரோ கொள்கையளவில் புலிப் பாசிசம் வைத்த தேசியத்தை, தான் ஏற்;றுக் கொள்வதை மறுக்கவில்லை என்ற உண்மை இங்கு வெளிப்படையானது. அதை அவர் ".. எனக்கு புலிகள் மீது எப்பொழுதுமே எங்கள்
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, August 27, 2009

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்


கிளிநொச்சித் தாக்குதல் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில், தா. பாண்டியன், பழ.நெடுமாறன் போன்ற அரசியல் வாதிகள், இந்திய அரசே தலையிடு போன்ற சுலோகங்களுடன் போராட்டங்களை ஆரம்பித்தனர். கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலான போராட்டங்களை நடத்தினர். அவர் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.

தோழர் வினவின் தளத்தில் கூறும் ஈழ அனுபவம் புரட்டுத்தனமானது

கடந்த வரலாற்றில் தமிழ்மக்கள் சந்தித்தது, புலிப் பாசிசம் கூறுவது போல் ஒரு அனுபவமல்ல. பேரினவாதம் முதல் இயக்கங்கள் வரை, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின. புலிகள் மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை வழங்கினால், தாம் அரசியல் அனாதையாகிவிடுவோம் என்று வெளிப்படையாக துண்டுப்பிரசுரம் போட்டு சொல்லுமளவும் புலிப் பாசிசம் கொட்டமடித்தது.

(பார்க்க.....தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு) தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மாணவர் சமூகம் முன்னிறுத்தி, புலிப் பாசிசத்துக்கு சவால் விட்டது. இது புலிகளை அரசியல் அனாதையாக்கி விடும் என்று புலிகள் பகிரங்கமாகவே கூறினர். இவை எல்லாம் அந்த மண்ணில் நடந்தது. இப்படிப் போராடியவர்களைத் தான், புலிகள் தேடி அழித்தனர். இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவன் விமேலேஸ்வரன், புலிகளால் படுகொலை செய்யப்பட்டான்;. பார்க்க பு.ஜ கட்டுரையை (புலிகளின் பாசிசம்); இந்தப் பாசிசத்தை முகம் கொடுக்காத சமூக உறுப்பினர் எம் மண்ணில் யாரும் கிடையாது. இந்த வகையில் தான் இயக்கங்களுக்கும் அதன் அடிவருடித்தனத்துக்கும் எதிராக, 22 வருடத்துக்கு முந்தைய பல்வேறு துண்டுப் .......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, August 26, 2009

பேரினவாத பரிசிட்டுகள் இனவழிப்பை எப்படி நடத்தினர் (விடியோ ஆதாரம் இணைப்பு – வலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம்)

மகிந்த சிந்தனையும், அதன் ஜனநாயகமும் இதுதான். தமிழினத்தின் மேல், கைது செய்தவர்கள் மேல், சரணடைந்தவர்கள் மேல் ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்தனர். சிறிலங்கா அரசே குற்றக் கும்பலாக, கூட்டுப் படுகொலைகளை நடத்தியும், ஒரு இனத்தின் இனவழிப்பை நடத்தி முடித்துள்ளது.

இந்தப் பாசிசப் பயங்கரவாதத்;தின் மேல்தான், வெள்ளைவேட்டி அரசியல் முதல் ஜனநாயகத் தேர்தல் வரை நடத்தினர், நடத்துகின்றனர். புலியெதிர்ப்பு "ஜனநாயகம்" வரை பேசுகின்றனர். வடக்கின் "வசந்தம்" முதல் கிழக்கின் "உதயம்" வரை, தலையில் தூக்.....
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, August 25, 2009

தோழர் வினவின் தளத்தில் அப்பாவி வேஷம் போட்டு நிற்கும் தமிழ் பாசிசம் (பகுதி 2)

பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில்தான், பாசிசம் தன்னை தற்காத்துக் கொள்கின்றது, நிலைநிறுத்திக் கொள்கின்றது. அதற்கமைய நடிப்பது, பாசிசத்திற்கு கைவந்த கலை. ஆணாய், பெண்ணாய், எதுவுமறியாத அப்பாவியாய் என்று தொடங்கி அழுவது, ஒப்பாரி வைப்பது என்று அதற்கு தெரியாத பாசிசக் கலை கிடையாது. பொய்யில் புரண்டு, புழுப்பதுதான் பாசிசம்.

அது எப்போதும் தன் சொந்த பாசிச வரலாற்றை, தனக்கு எதுவும் தெரியாத ஒன்றாகவே ஊர் உலகத்துக்கு காட்டும். அதைப் பற்றி எதையும் பேச மறுக்கும். தனது பாசிசத்தால் மக்கள் சந்தித்த எந்த மனித அவலத்தையும் பேசமறுத்து, எதிரி மக்களுக்கு செய்த கொடுமையை மட்டும் எடுத்து வைத்து பேசும்.

இப்படி பாசிசம் தன்னையும் தன் பாசிச வரலாற்றையும் எதுவுமற்றதாகக் காட்டித்தான், சமூகத்துக்குள் தன்னை புகுத்திக் கொள்கின்றது. வினவு தளத்தில் புலிப்பாசிசம் இந்த வகையில்தான், மூடிமறைத்தபடி ஊடுருவியுள்ளது. சர்வதேசிய..
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 24, 2009

இந்து வெறியர்களுக்கு குஜராத் ! இந்திய இராணுவத்துக்கு காஷ்மீர்!!

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.

காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலையிலேயே சென்று விட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார். மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃப ரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கு...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 23, 2009

முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்

வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு.

இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது. 15000 பேருக்குமேல் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அவர்கள் பற்றிய விபரம் தெரியவரவில்லை எனவும் மனிதஉரிமை அமைப்புகள் கூறுகின்றன. புலிகளின் உறுப்பினர்களிலிருந்து புலிக்கு சாப்பாடு கொடுத்தவர்வரை சுழியோடி தேடிப்பிடித்து அழிப்பதுதான் புலியழிப்பு என சொல்வதை நாம் கேட்டாகவேண்டியிருக்கிறது. இது இந்த இடைத்தங்கல் முகாமின் வாழ்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்குமெனின், இந்த மக்களின் துயரம் நீளவேசெய்யும்.இப்போ வெள்ளம் இந்த முகாமை சிப்பிலியாட்டுகிறது. கடும் மழையில் கூடாரங்கள் குறுகிப்போயிருக்கின்றன. சுமார் 3 இலட்சம் மக்களின் கதி இன்னும் பரிதாபத்துக்கு உரியதாக மாறியிருக்கிறது. வெள்......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் (பகுதி 1)

தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது. இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.

மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.

இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்


நம்ப மறுப்பவர்கள், தயவுசெய்து, தமிழகத் தலைநகர் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மீனாட்சி பல்கலைக்கழகத்தை வந்து பாருங்கள்.

இப்பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்தபொழுது, "பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரையில், சென்னைப் புறநகர்ப் பகுத யில் உள்ள சிறீமுத்துக்குமரன் பொறியியில் கல்லூரியைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஆய்வுக் கூடங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என இப்பல்கலைக்கழக நிர்வாகிகள் அன்புக் கட்டளை போட்டார்களாம். பணத்தைக் கட்டிச் சேர்ந்த பிறகு வந்து பார்த்தால், "இப்பல்கலைக்கழகத்திற்கென்று தனி வளாகம் எதுவும் கிடையாது; கட்டிடம் மட்டுமின்றி, இப்பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரமே கிடையாது'' எனப் புலம்புகிறார், இப்பல்கலைக்கழகத்தை நம்பி மோசம் போன ஒரு மாணவர். பல்கலைக்கழக மானியக் குழு, மீனாட்சி பல்கலைக் கழகத்தை அங்கீகரித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மானியக்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, August 22, 2009

காலச்சுவடு கட்டுரை தொடபர்பான எதிர்வினை மீது

காலச்சுவடு கட்டுரை எழுதியவர் தொடர்பாக, பெட்டையின் பின்னோட்டம் மற்றும் ஒரு பொதுவான உள்சுற்றில் ஒருவிவாதம் தொடர்கின்றமையால் மேலும் சில விளக்கங்கள் அவசியமாகின்றது.
கட்டுரை பொதுவான மூன்று பகுதியைக் கொண்டது.

1.காலச்சுவட்டின் வியாபாரம் தொடர்பானது.

2.சிவத்தம்பி, சேரனின் பிழைப்புவாதம் தொடர்பானது.

3.கட்டுரை எழுதியவர் இலங்கையர் அல்ல என்பது தொடர்பானது.

1. காலச்சுவடு இலக்கிய வியாபாரிகள். எந்த அரசியல் நேர்மையுமற்றவர்கள். எதையும் எப்படியும் தங்கள் இலக்கிய வியாபாரத்துக்காக செய்யக்
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, August 21, 2009

அணுசக்தி (123) ஒப்பந்தம்: பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்தது அமெரிக்கா!

இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடந்த பெரும் எட்டு நாடுகள் (ஜி 8) மாநாட்டில், "அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்கப் போவதில்லை'' என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

ஜி 8 மாநாடு இந்த முடிவை எடுப்பதற்கு அமெரிக்காதான் காரணம் என்பதோடு, இம்முடிவு இந்தியாவைக் குறிவைத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் இப்பொழுது அம்பலமாகிவிட்டது.

இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டவும், மறுசுழற்சி செய்யவும் தனக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்பதோடு, அதற்கான தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்க வேண்டும் என வாதாடியது. இதற்குச் சில நிபந்தனைகளோடு சம்மதித்த அமெரிக்கா, அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் குழுமத்தோடு (என்.எஸ்.ஜி.) இந்தியா பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, செறிவூட்டும் மறுசுழற்சி செய்யும் உரிமைகளை இந்தியாவிற்கு அக்குழுமம் வழங்கக் கூடாது என நிர்பந்தம் கொடுத்தது. எனினும், அக்குழுமத்தின் தற்போதைய விதிகளுக்கு....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, August 20, 2009

அரச பாசிசத்தைக் கண்டிக்காமல் இருப்பதும் பாசிசத்தின் ஒரு வகைதானோ?


இந்த மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவற்துறையினரின் இந்த அட்டுழியத்திற்கெதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வஞ்சகத்தனமான பாதாள உலகத்தினருக்கெதிரான போரில் இறுதியாகப் பலியாகியிருந்தனர் இவ்விரு இளைஞர்களும்.

22 வயதுடைய டினேஸ் தரங்க பெர்ணாண்டோ, 24 வயதுடைய தனுஸ்க உதயங்கா அபொன்சு ஆகிய இருவரும் அங்குலான காவற்துறையினரால் கடந்த புதன்கிழமை இரவு பத்து மணியளவில் கைது செய்யப்பட்டனர். பெண்மணி ஒருவர் தன்னை இவ்விரு இளைஞர்களும் கிண்டலடித்ததாக முறைப்பாடு மேற்கொண்டதால் தான் தாhம் அவரைக் கைது செய்ததாகப் காவற்துறையினரர் தெரிவித்தனர்.

இவ்விரு இளைஞர்களும் அழைத்து வரப்பட்ட போது நான் எனது செல்லில் இருந்தேன். ஐந்துக்கு மேற்பட்ட காவற்துறையினர் அவர்களைத் தாக்கிக்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இலக்கிய வியாபாரம் செய்யும் காலச்சுவடும், விபச்சார அரசியல் செய்யும் சேரன் அன்ட் கோக்களும்

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சேரன் அன் கோவும், சிவத்தம்பியும் புலிக்கு பின் நின்று துதிபாடி அரோகரா போட்டத்தை, இன்று மறைக்க வேண்டிய அரசியல் அவலம். காலச்சுவடு கண்ணனுக்கு கல்லாப் பெட்டியை மேலும் நிரப்பும் இலக்கிய கவலை.

ஜீனியர்விகடன் பத்திரிகை விற்பனை அதிகரிக்க பிரபாகரன் இருப்பதாக காட்ட, படத்தில் ஒரு மோசடி செய்தனர். இதுபோல் காலச்சுவடு ஈழத்து மக்களின் பெயரில் பணம் சம்பாதிக்க, அகதிகளின் பெயரில் தாமே ஒரு புனைவை எழுதி வெளியிட்டுள்ளனர். இது இலங்கையரால் எழுதப்படவில்லை. அதற்கு சில எடுத்துக்காட்டை நாம் எடுத்துக் காட்டிவிட்டு மற்றைய பிழைப்புவாத மோசடிக்குள் செல்வோம்.

இந்தப் புனைவு வன்னியில் இல்லாத ஒன்றையும், வழக்கில் இல்லாத சொற்களும் கொண்டது. இந்தியாவில் உள்ளதை, வன்னியில் இருப்பதாக எமக்கு காட்ட முனைகின்றனர். வன்னியில் ஆறில்லை. காலனியில்லை. பட்டினங்கள் இல்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இலக்கிய வியாபாரம் செய்யும் காலச்சுவடும்;, விபச்சார அரசியல் செய்யும் சேரன் அன்ட் கோக்களும்

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சேரன் அன் கோவும், சிவத்தம்பியும் புலிக்கு பின் நின்று துதிபாடி அரோகரா போட்டத்தை, இன்று மறைக்க வேண்டிய அரசியல் அவலம். காலச்சுவடு கண்ணனுக்கு கல்லாப் பெட்டியை மேலும் நிரப்பும் இலக்கிய கவலை.

ஜீனியர்விகடன் பத்திரிகை விற்பனை அதிகரிக்க பிரபாகரன் இருப்பதாக காட்ட, படத்தில் ஒரு மோசடி செய்தனர். இதுபோல் காலச்சுவடு ஈழத்து மக்களின் பெயரில் பணம் சம்பாதிக்க...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, August 19, 2009

மணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு, பித்தலாட்டத்தின் அவதாரம்!


தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு, வெற்றுச் சவடால் அடித்து, திருச்சியில் கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று ஒரு மாநாட்டையும் அது நடத்தியுள்ளது.

நேற்றுவரை தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பாடு போட்ட இக்கும்பல், ஈழத் தமிழின அழிப்புப் போருக்குப் பிறகு, இப்போது தமிழ்த் தேசியம்தான் ஒரே தீர்வு என்று கூப்பாடு போட்டுக் கொண்டு தமிழர்களைப் புல்லரிக்க வைக்கிறது.

இந்தியா, தமிழனை நம்பத் தயாராக இல்லையாம்! நட்புக்க ரம் நீட்டிய ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் நம்ப முடியாது என டெல்லி ஏகாதிபத்திய ஆட்சியாளர் கள் கணக்கு போடுகிறார்களாம்; ஆரிய திராவிட வரலாற்றுப்.......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, August 18, 2009

தொ.நு. கல்லூரி மாணவன் நிப்புன தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 11 பொலிஸாருக்கும்....

வினவு தளத்தில் ரதி கீர்த்தனா - சில கூற்றுகளும் தெளிவான மறுப்புகளும்

வினவு தளத்தில் ரதி என்பவர் தொடராய் எழுதும் ”ஈழத்தின் நினைவுகள்” கட்டுரையின் அங்கம் ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! இக் கட்டுரையில் வெளியானவற்றுக்கும் அங்கு விவாதமாய் வரும் கருத்துக்களுக்கும் பதில் தரும் வகையில் நானும் சில நினைவுகளை பதியும் முயற்சியாய் அவர்களது கூற்றுக்களுக்கு பதில் தரும் வகையில் அமைந்த இச்சிறு கட்டுரையின் ஊடாக எனது கருத்துக்களையும் பதிவு செய்து கொள்ளுகின்றேன்.
கூற்று (Keerthana) 1.

போர் மாணவர்களைப் பாதித்த இன்னொரு விடயம், மின்சாரம் இல்லாமை. 90 களின் பின் யாழ் மாவட்டத்தில் மின்சாரம் முற்றாக இல்லாமல் போனது. மண்ணெண்ணெய், தேங்காயெண்ணை விளக்குகள்தாம், இரவுகளில் எம்மை ஒளியை நோக்கி நடக்க உதவின........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிக்கு "கரையார்" தலைமை தாங்கியதால், அது சாதியற்ற தேசியமாம்

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மறுப்பவர்கள், சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோதவிட்டே கையாள்வார்கள். இங்கு யமுனா புலி அரசியலை தேசிய விடுதலைக்குரிய வழிகாட்டும் தத்துவமாக காட்ட, "கரையார்" தலைமை பற்றி கூறி, வெள்ளாளர் தலைமையை வேர் அறுத்தது பற்றியும் கதை விடுகின்றார். வேறு எப்படித்தான் வரலாற்றை இவரால் திரிக்க முடியும்.

எப்போதும் சம்பந்தமில்லாது புலம்பி புளுத்தெழுதும் யமுனா, இங்கும் அதையே செய்கின்றார். புலியை நியாயப்படுத்த ஸ்ராலின் வரை சென்று, புலியை போற்ற ஸ்ராலின் மீது காறி உமிழும் இந்தப் பன்னாடை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தன் சொந்த அரசியல் காழ்ப்பை அள்ளித்தெளித்துள்ளது.

இதற்கு 'கரையார்' தலைமை பற்றி கூறி, புலிப் பாசிசத்தை வெள்ளையாக வெளுத்து அதை தமிழ்மக்களுக்கு கட்டவைக்க முனைகின்றார். அப்படி.....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 17, 2009

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்.


புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு 'வடக்கின் வசந்தம்' எனக் கவர்ச்சியான பெயரைச் சூட்டி இருக்கும் இலங்கை இனவாத அரசு, தனக்கு உதவிகள் சீனாவிலிருந்து வந்தாலும் இந்தியாவிலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டு அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் உள்ளது.

விவசாய நிபுணரு....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்


புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு 'வடக்கின் வசந்தம்' எனக் கவர்ச்சியான பெயரைச் சூட்டி இருக்கும் இலங்கை இனவாத அரசு, தனக்கு உதவிகள் சீனாவிலிருந்து வந்தாலும் இந்தியாவிலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொண்டு அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் உள்ளது.

விவசாய நிபுணரும், "பசுமைப் புரட்சி' மூலம் இந்திய விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஈழத்தமிழர் சிந்திய ரத்தம் உலரும் முன்னரே இலங்கைக்குப் பறந்து சென்று வன்னி, யாழ்ப்பாணம்,....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தமிழ்மக்களை கேனயனர்களாக காட்டும் புளாட் சித்தார்த்தனும், பேரினவாத மகிந்த கும்பலும்

புலி இல்லாது நடந்து முடிந்த தேர்தல் மூலம், தமிழ்மக்கள் ஒரு செய்தியை முகத்தில் அறைந்து கூறியுள்ளனர். எல்லாம் புலியினால் வந்த வினை, புலிகள் அழிந்தால் எல்லாம் சரி என்று கூறி வந்த, எல்லா புலியெதிர்ப்பு பன்னாடைகளுக்கும் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர்.

மக்களாகிய தாங்கள் என்ன நினைக்கின்றோம் என்பதை மட்டுமின்றி, ஏன் புலியின் பின் கடந்தகாலத்தில் நின்றோம் என்பதையும், மண்டையில் கொத்தி பதிலளித்துள்ளனர். மக்கள் கோரியது அரசியல் உரி;மையையே. இந்த உண்மையை மறுத்து வந்தவர்களை, பிரபாகரனின் மரணம் போல் அனாதையாகவே மக்கள் சாகடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில்...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 16, 2009

யமுனாவின் புலித் "தேசியமோ" சாதியை .....

இப்படி தனக்கேற்ற ஒரு "மார்க்சிய" கோட்பாட்டை யமுனா உருவாக்கி, அதைக்கொண்டு புலியைச் சாதி பார்க்காத ஒரு இயக்கமாக காட்டிவிட முனைகின்றார். சமூகத்தின் நலனை முதன்மைப்படுத்தி எழுதாது, பணத்துக்கு எழுதுபவர்கள் இவர்கள். சமூகத்தில் இருந்து அன்னியமான தனிமனிதனையோ குழுவையோ, சமூகத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை.

இப்படி சமூகத்துக்கு வெளியில் தனிமனிதனையும், குழுவையும் முதன்மைப்படுத்தி, தம் வசதிக்கு ஏற்ப அதை சமூகத்துக்கு பொருத்தி விடுகின்றனர். இதற்கு யமுனா புலிகள் ஊடாக அவர் தனக்கேற்ப எடுத்துக்கொண்ட கருதுகோள் 1. கரையார் அதிகாரம். 2. புலிகள் தங்கள் திருமணங்களில் சாதியம் பார்ப்பதில்லை.

இப்படி இதைக் கொண்டு 30 வருட புலிப்பாசிச சாதிய வரலாற்றையே திரித்துக் காட்டிவிட முனைகின்றார். இப்படி வேடிக்கையானதும் லூசுத்தனமானதுமான வாதங்கள்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, August 15, 2009

இங்கு இணைத்துள்ள இந்த படங்களுக்கு, இலங்கையின் "ஜனநாயகம்" மரணத்தை தண்டனையாக தரும்

தமிழ்மக்களை எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் "ஜனநாயகம்". அப்பாவி மக்களை எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்;கின்றனர் என்பதை, வெளியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள் இலங்கையில் உயிர் வாழவே முடியாது.

அப்படிப்பட்ட படங்கள் தான் இவை. இந்த பேரினவாத பாசிச அரசு எதை புலியிடம் இருந்து மீட்பாக அந்த மக்களுக்கு காட்டியதோ, எதை அந்த மக்களுக்கு ஜனநாயகம் என்கின்றதோ, அதை அவர்களை மீறி படம் எடுத்தால் அங்கு மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு இலங்கையில் "ஜனநாயகம்" உள்ளது "ஜனநாயகத்தின்" பெயரில், புலி "மீட்பின்" பெயரில் மக்களை எப்படி அடைத்து வைத்துள்ளதோ, அந்த உண்மையை வெளிப்படுத்தும் படங்கள் இவை.

தங்கள் உயிர் ஆபத்தையும் மீ...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

8.கஞ்சி ஊத்த வக்கில்லே

கஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம்)

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

1.காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை

3.கருவாகி உருவான கதை

4.விசுவாச நாய்கள்

5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

6.சாத்வீகச் சதிச் செயல்

7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி

8.நிலப்பிரபுக்களின் தாசன்

9.மூக்கில் நாறிய சுயராச்சியம்!

10.அகிம்சையின் நோக்கம்

11.மகான் அல்ல; மக்கள் விரோதி!

12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை

14.மக்கள் முதுகில் குத்திய காந்தி

15."சுதந்திரம்' ஒரு கபட நாடகமே!

16.குழப்பவாதிகள்

17.படுபிற்போக்காளர்கள்

18.இந்து சநாதனி

19.சர்வாதிகாரிகள்

20.ரௌடிக் கும்பல்

21."வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

22.மேலும் சில ஆதாரங்கள்

புலிகள் சாதி மறுப்பு இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 3

புலி தனக்குள் சாதியைக் கடைபிடிக்கவில்லை என்றால், அது "முற்போக்கு" இயக்கமாம். பொது விடுதிகளில் அல்லது பொது இடங்களில் சாதி பார்க்காமல் பழகினால், அவர்கள் முற்போக்கானவர்கள். பிரதமராக இருந்த வாஜ்பேயும், ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனும்; ஒன்றாக கூடி இந்துத்துவ சாதிய ஆட்சியை தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஏவிய போது கூட, அவர்கள் தமக்குள் என்றும் சாதி பார்க்கவில்லை.

ஊர் சொத்தை கொள்ளையடித்து ஒன்றாக விருந்துண்டு கூட மகிழ்ந்தனர். தமக்குள் அவர்கள் சாதி பார்க்காமல் ஆட்சியை கடைப்பிடித்தால், அவர்கள் முற்போக்கானவர்கள். இதைத்தான் யமுனாவின் புலி "மார்க்சியம்" புதிதாக இன்று கண்டுபிடித்துள்ளது.

இப்படித்தான் யமுனா, வரலாற்றுக் கதை சொல்ல முனைகின்றார். புலிகள் தேசியத்துக்காக போராடியதாக யமுனா ராஜேந்திரன் திரிப்பதன் மூலம், தேசியமல்லாத புலி பாசிச மாபியாவின் வரலாற்றை தனக்கேற்ப திரிக்கின்றார். இதற்கமைய புலிகள் கட்டமைப்பு மற்றும் அதன் சட்டங்கள் திட்டங்களை துணைக்கு அழைக்கின்றார்.

புலிகள் தேசியத்தை.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, August 14, 2009

கோயாபல்சை விஞ்சிய இந்து என்.ராம்.

இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது. அவ்வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், ஈழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் ராஜபக்சேவின் இனவெறி அரசு, தமிழர்களை முகாம்களில் அடைத்து வதைத்துக் கொன்று கொண்டிருக்கிறது.

ஈழ இன அழிப்புப் போரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வவுனியாக் காட்டுப் பகுதியில் முட்கம்பி வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களில் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம்களுக்கு பொன்னம்பலம், ஆனந்த குமாரசாமி, தமிழ்த்துரோகி கதிர்காமர் போன்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இம்முகாம்களைப் பார்வையிட ஐ.நா. ....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிகள் முற்போக்கான சட்டங்களையம், திட்டங்களையும் கொண்ட இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 2

புலிகள் தமக்குள் சாதி பார்க்கவில்லை, ஆணாதிக்கத்தை கையாள்வதில்லை, முதலாளித்துவ உறவைப் பேணுவதில்லை, பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிப்பதில்லை, எனவே அதை அவர்கள் மேல் குற்றம்சாட்ட முடியாது. "யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது." இதுதான் யமுனாவின் "மார்க்சிய" ஆய்வு.

இதை நியாயப்படுத்த, இவரைப்போல் அரசியல் ஒழுக்கக்கேட்டையே அரசியலாகக் கொண்ட பச்சோந்தியான "ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி' யை துணைக்கு அழைக்கின்றார். சமூக எதார்த்தம் மீதான விமர்சன நடைமுறையில், மார்க்சியமல்லாத புலிப் பாசிச தேசியத்தை தொழுத ஒரு மார்க்சிய விரோதியான சிவத்தம்பியின் துணையுடன், தன் முற்போக்கு கட்டுரையைத் தொடங்குகின்றார். இப்படி அண்ணன் தம்பியாக சேர்ந்து புலியை முற்போக்காகக் காட்டி பாதுகாக்க, கா.சிவத்தம்பியை கூட்டுக்கு அழைக்கின்றார். பாவம் கா.சிவத்தம்பி, "மாமனிதன்" பட்டத்தை எதிர்பார்த்து, கடைசிகாலத்தை புலி உச்சாடணம் செய்துகொண்டு கிடந்தவர். இதற்கு மேல் அவரின் "மார்க்சிய", எதார்த்தம், இயங்கிய சமூகம் மீது எந்த சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியது கிடையாது. இவர்களுடன் காலச்சுவடும், சேரனும் கூட்டுச் சேர்ந்தால், புலியின் மனிதவிரோத வரலாற்றை முற்போக்காக காட்டிவிடலாம். இந்தியாவின் முதுகு சொறிந்து கிடக்கும் இலக்கிய பிழைப்புவாதிகள் மூலம்,
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, August 13, 2009

புலிகள் முற்போக்கான கொள்கைகளை தனக்குள் கடைப்பிடித்த ஒரு இயக்கமாம்! : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல்

யமுனா ராஜேந்திரன் என்ன கூறுகின்றார். புலி தனக்குள் சாதி பார்க்கவில்லை என்றால், அது சாதிய சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலி தனக்குள் பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றால், அது பிரதேசவாதத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலிகள் தனக்குள் ஆணாதிக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், ஆணாதிக்க சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.

புலிகள் தமக்குள் முதலாளித்துவமல்லாத உறவை பேணினார்கள் என்றால், அவர்கள் முதலாளித்துவ சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். இப்படி யமுனா வலதுசாரிய பாசிசப் புலியை "மார்;க்சியம்" மூலம் ஆய்வு செய்கின்றார். இப்படி யமுனா கூட்டிக்கழித்து, புலிகள் முற்போக்கு இயக்கமாக தற்போதைக்கு காட்டுகின்றார். விரைவில் புலியை மார்க்சிய...
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, August 12, 2009

"காலச்சுவடு' டிசம்பர்'04 இதழில் ஜெயேந்திரர் கைது குறித்து ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அதில் இறுதியாக,

".... சங்கர மடத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு வார்த்தை. மடம் இன்று சந்தி சிரிக்கிறதென்றால் அதற்குக் காரணம் மடம் நடந்து வரும் விதம்தான்.... ஜெயேந்திரரை ஓரங்கட்டிவிட்டு விஜயேந்திரரின் தலைமையில் மடம் தனது வழக்கமான போக்கில் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தனிநபரை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகி விடாது. மடத்தை உண்மையான சமய ஆன்மீக அமைப்பாக மாற்றுவதற்கான போராட்டத்தை அவர்கள் மேற்கொள்வதே மடத்தின்பால் அக்கறை கொண்டவர்களின் முயற்சியாக இருக்க முடியும்.

அப்புக்களும் ரகசிய செல்பேசிகளும் தேவைப்படாத அமைப்பாக இயங்குவதற்கான சாத்தியங்களைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு, ஜெயேந்திரரையும் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் தாண்டிச் செல்லும் மனவலிமையை மடமும் அதன்...
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அமெரிக்கா: மாயை கலைந்தது உண்மை சுடுகிறது

பசி, பட்டினி ஏதுமில்லாத செல்வச் செழிப்பு மிக்க நாடு என்றும், குடிசைகளே இல்லாத நாடு என்றும் அமெரிக்காவைச் சொல்வார்கள். இங்கிருக்கும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர் களைக் கேளுங்கள்; ""அந்த சொர்க்க பூமிக்கு வேலைக்குச் செல்வதுதான் தங்கள் வாழ்வின் லட்சியம்'' என்பார்கள்.

இந்தக் கனவு தேசத்தின் மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா. எண்ணிலடங்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கும் இம்மாகாணந்தான் தமிழ்நாட்டுக் கணிப்பொறியாளர்கள் பலருக்கும் புனிதத்தலம். அமெரிக்காவின் செல்வச் செழிப்புக்கு இம்மாகாணத்தையே சான்றாகக் கூறுவர். ஆனால் இன்று அமெரிக்காவை மட்டுமல்ல; உலக முதலாளித்துவத்தையே பிடித்தாட்டும் பொருளாதார நெருக்கடி, சொகுசான அமெரிக்கக் கனவைக் கலைத்துப் போட்ட பிறகு; அமெரிக்க மக்களின் அவல நிலைக்குச் சாட்சியமாக இருப்பதும் இதே கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரான சாக்ரமண்டோதான்.

சென்ற ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்த, பொருளாதார வீழ்ச்சியால் வேலை இழந்த அமெரிக்கர்கள் பலரால் வீட்டுக் கடன்களைக் கட்ட முடியவில்லை. வாங்கிய கடனுக்கு, வங்கியிடம் வீட்டைப் பறிகொடுத்த இவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர்......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, August 11, 2009

இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

சொங்காம் சஞ்சித் (Chongkham Sanjit) என்ற இளைஞரின் வயது 27. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மக்கள் விடுதலைப்படை என்ற இயக்கத்தில் சிறிது காலம் இருந்தார். 2000ஆவது ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

2006ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றியதால் மக்கள் விடுதலைப்படையிலிருந்து விலகினார். எனினும் 2007ம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 23ம்....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாட்டாளி சிந்தனையே பாசிசம் அழிய படைநகர்த்தும்

புலியழியக் காத்திருந்து.
ராஜபக்ச புத்திரரை அடியொற்றி
களமிறங்கி நிற்கின்ற காலமிது
பொறிகொண்ட வாழ்வுணரா
போக்கிரியாய் புத்திஜீவிகள்
நெறிகெட்டு கொழும்பு சென்று
நின்றுரைக்கும் கதைகேளேன்

விழிவழியே வழிகின்ற கண்ணீரோ
ஆனந்தக் கழிப்பினிலே வந்ததுவாம்
வழிநெடுக வீழ்ந்தவரோ.. புலி
அத்தனையும் சுட்டவராம்
களிகொண்டு மக்கள் முகாமில்
கால்நடை பயில்கினமாம்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 10, 2009

சி.பி.எம்-காங்கிரசு இந்து மதவெறியர்களின் இளைய பங்காளிகள்

கேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.

கேரளத்தின் கடற்கரையோர மீனவ கிராமமான மராத்தில், கடந்த 2002இன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு முஸ்லீம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இந்து இளைஞருக்கும், அதனை தட்டிக்கேட்ட முஸ்லீம் இளைஞருக்கும் மோதல் உருவானது. இம்மோதல் பின்னர் மதக்கலவரமாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டது.

ஜனவரி 2002இ...........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இன்று புலிகளைக் கொண்டே பேரினவாதம் நடத்தும் இனக்களையெடுப்பு

புலிகள் தம் உயிரைக் பாதுகாக்க, வன்னியில் மக்களைப் பணயமாக்கி அவர்களைப் பலியிட்டனர். வெளிப்படையாக புலிகள் மக்கள் மேல் துப்பாக்கியை நீட்டினர். தம் பலியிட்டுக்கு அடங்க மறுத்தவர்களையும், தப்பியோடியவர்களை அடித்தார்கள் சுட்டார்கள் கொன்றார்கள். இதற்கென்று ஒரு லும்பன் கும்பலை, புலித்தலைமை பயன்படுத்தியது.

இன்று சிங்களப் பேரினவாதம் அதே வன்னி மக்களுக்குள் ஒரு பரந்த இனக் களையெடுப்பை நடத்துகின்றது. இதை புலிகளைக் கொண்டே செய்கின்றது என்பது, இங்கு மிக முக்கியமானது. புலிகள் மக்களை பணயம் வைத்து பேரினவாதம் மூலம் படுகொலை செய்த போது, மக்கள் தப்பியோட வண்ணம் புலிகள் யாரை முன்நிறுத்தியதோ, அவர்களைக் கொண்டு இந்த இனக்களையெடுப்பை பேரினவாதம் இன்று நடத்துகின்றது.

வன்னி வதை முகாமில் உள்ளவர்கள் புலிகளா என்பதை கண்டறியும் பொறுப்பு, அண்மையில் கைதான கொலைகாரப் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அதே புலி முகங்களை சந்திக்கின்றனர். அதே அவலத்தையும், அதே வேதனைகளையும் சந்திக்கின்றனர்.

அவர்கள் தம் பார்வையில்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 9, 2009

புதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்


பேரினவாதம் தன் பாசிசம் மூலமான கொடூரமான ஒடுக்குமுறையை, தமிழினத்தின் மேல் மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை. இலங்கை மக்கள் மேலான சர்வாதிகார பாசிச ஒடுக்குமுறையாகவே, புலியழிப்பை தன் வெற்றியாக்கி அதை எவி வருகின்றது. இந்த வகையில் கே.பி கைது, அதற்கு மேலும் உதவுகின்றது. இந்த வகையில் இந்த பாசிச அரசின் கொடுமையான கொடூரமான மக்கள் விரோத ஆட்சியை, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. மாபிய கே.பியின் கைதையும், நாடு கடத்தலையும், இதன் பின்னான சித்திரவதையையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அதை அம்பலப்பபடுத்தி போராட வேண்டியுள்ளது.

மறுதளத்தில் கே.பி என்ற புலி மாபிய தலைவர் அரசியல் ரீதியாக இருத்தல், தமிழினத்தின் எதிர்கால வாழ்வுக்கே எதிரானது. தமிழ்மக்க...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

வடக்கு தேர்தல் முடிவு, "வசந்தத்தின்" விடிவல்ல


சிங்கள இனவாதம் தான், தமிழ் மக்களை பெரும்பான்மை மக்களுடன் இணைய இன்று தடையாக இருப்பதை தமிழ் மக்கள் மீளவும் உணர்த்தியுள்ளனர். புலிகள் தங்கள் பாசிச வழியில் இதைச் சொன்னார்கள். தமிழ் மக்களோ தமக்கு கிடைத்த இந்த வழியில், இதை கூறியுள்ளனர். இதை சுதந்திரமாக, மக்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று சொல்ல நாட்டில் ஜனநாயகமில்லை. அரச பாசிசமே நாடு முழுவதும் ஆட்சியாக நிலவுகின்றது. தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை, இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.

1.இந்த தேர்தலால் தமிழ்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, August 8, 2009

புதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்


பேரினவாதம் தன் பாசிசம் மூலமான கொடூரமான ஒடுக்குமுறையை, தமிழினத்தின் மேல் மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை. இலங்கை மக்கள் மேலான சர்வாதிகார பாசிச ஒடுக்குமுறையாகவே, புலியழிப்பை தன் வெற்றியாக்கி அதை எவி வருகின்றது. இந்த வகையில் கே.பி கைது, அதற்கு மேலும் உதவுகின்றது. இந்த வகையில் இந்த பாசிச அரசின் கொடுமையான கொடூரமான மக்கள் விரோத ஆட்சியை, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. மாபிய கே.பியின் கைதையும், நாடு கடத்தலையும், இதன் பின்னான சித்திரவதையையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அதை அம்பலப்பபடுத்தி போராட வேண்டியுள்ளது.

மறுதளத்தில் கே.பி என்ற புலி மாபிய தலைவர் அரசியல் ரீதியாக இருத்தல், தமிழினத்தின் எதிர்கால வாழ்வுக்கே எதிரானது. தமிழ்மக்களின் மீட்சிக்கு எதிரானது. புலிப்பினாமிகளின் அரசியல் இருப்புத்தான், இன்னமும் தமிழினம் சுயமாக தங்கள் சொந்த....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, August 7, 2009

இன்று புலிகளைக் கொண்டே பேரினவாதம் நடத்தும் இனக்களையெடுப்பு

புலிகள் தம் உயிரைக் பாதுகாக்க, வன்னியில் மக்களைப் பணயமாக்கி அவர்களைப் பலியிட்டனர். வெளிப்படையாக புலிகள் மக்கள் மேல் துப்பாக்கியை நீட்டினர். தம் பலியிட்டுக்கு அடங்க மறுத்தவர்களையும், தப்பியோடியவர்களை அடித்தார்கள் சுட்டார்கள் கொன்றார்கள். இதற்கென்று ஒரு லும்பன் கும்பலை, புலித்தலைமை பயன்படுத்தியது.

இன்று சிங்களப் பேரினவாதம் அதே வன்னி மக்களுக்குள் ஒரு பரந்த இனக் களையெடுப்பை நடத்துகின்றது. இதை புலிகளைக் கொண்டே செய்கின்றது என்பது, இங்கு மிக முக்கியமானது. புலிகள் மக்களை பணயம் வைத்து பேரினவாதம் மூலம் படுகொலை செய்த போது, மக்கள் தப்பியோட வண்ணம் புலிகள் யாரை முன்நிறுத்தியதோ, அவர்களைக் கொண்டு இந்த இனக்களையெடுப்பை பேரினவாதம் இன்று நடத்துகின்றது.

வன்னி வதை முகாமில் உள்ளவர்கள் புலிகளா என்பதை கண்டறியும் பொறுப்பு, அண்மையில் கைதான கொலைகாரப் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அதே புலி முகங்களை சந்திக்கின்றனர். அதே அவலத்தையும், அதே வேதனைகளையு....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.

நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நல்ல வேடிக்கை. காற்றின் .......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, August 6, 2009

ஜெகத்துரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி

சங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.

"இதிலென்ன ஆச்சரியம்? என்னுடைய ஆட்சியில் எப்போதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்'' என்று ஒரு விஷமப் புன்னகையுடன் இதற்குப் பதிலளிக்கிறார் புரட்சித் தலைவி.

விசாரணையின் பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் ""இதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும்'' என்று ஐயம் எழுப்புகிறார் கருணாநிதி. ""ஆமாம்'' என்று வேறு ஒரு முனையிலிருந்து இதனை ஆமோதிக்கிறார் இல. கணேசன். ஜெயலலிதாவின் உள்நோக்கம் குறித்த பேச்சு தவிர்க்கவியலாமல் ஜெயேந்திரனுக்குச் சாதகமாக அமைகிறது.

மாறாக, ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்ற ஜெயலலிதாவின் கூற்றை நாம் ஆமோதித்தாலோ, இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, August 5, 2009

மக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு...........

புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.

இப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு, அஞ்சலி செலுத்த முனையும் மாபியாக்கள்!

புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.

இப்படி புலத்து மாபியாப் புலிகளின் ஊடாக புதிய தலைவராக தன்னைத் தான் பிரகடனம் செய்த கேபியோ, தான் காட்டிக்கொடுத்து கொன்ற பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தன் தலைமையை உறுதி செய்ய முனைகின்றார். தன் தலைமையை உறுதி செய்ய, பிரபாகரனின் மரணத்தை தன் அஞ்சலி ஊடாக பிரகடனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் மூலம் பிரபாகரனின் விசுவாசியாக தன்னைத்தான் நிறுவவேண்டியுள்ளது. இப்படி பிரபாகரன் பெயரில் பினாமிச் சொத்தை பங்கு போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை ஒரு பொது நிதியமாக்க முனையவில்லை. பிரபாகரனை கொல்ல இந்த பினாமி சொத்து எப்படி ஒரு காரணமாக இருந்ததுவோ அது போல், அதை தமக்குள் பங்கிட பிரபாகரனின் மரணத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கமைய மாபியா கேபி பிரபாகரனுக்கு பிரமாண்டமான அஞ்சலியை நடத்திவிட முனைகின்றார்.

மறுபக்கத்தில்........
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்கு முடியுமா

தனியார் ஆற்றிவரும் ""கல்விச் சேவை'' வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத வகையில் நர்சரி பள்ளிகள் தொடங்கி தனியார் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை கல்வி கட்டணங்களும், கட்டாய நன்கொடைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.

சென்னையிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ.பள்ளியில் 6ஆம் வகுப்புக்கு சென்ற ஆண்டு கட்டணம் ரூ.17,000/. அது, இந்த ஆண்டு ரூ.25,025/ஆக உயர்ந்திருக்கிறது என்பதிலிருந்தே இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். 6ஆம் வகுப்புக்கே இந்தக் கதியெனில், பொறியியல் மருத்துவக் கல்லூரிகளின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.

இதுவரை "தரமானக் கல்விக்காக' தனியார் கேட்டதைக் கொட்டியழுத பெற்றோர்கள், இன்று நிலைமை கைமீறிப் போனதையடுத்து, வேறுவழியேயின்றி கட்டண உயர்வுக்கெதிராக ஆங்காங்கே பள்ளிகளுக்கு முன் கூடிக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி நிர்வாகத்திற்கு.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, August 4, 2009

ஆலயத்துக்குள் மட்டுமா கருவறைக்குள்ளும் நுழைவோம்

இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் சமூகக் கொடுமையாக சாதி இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் தமிழ்நாடு மட்டும், சாதிய ஒடுக்கு முறைக்கெதிராகப் போராடிய முன்னோடி மாநிலம் என்றும், சுயமரியாதை இயக்க பூமி இது என்றும் சொல்வதில் நமக்கெல்லாம் பெருமை இருந்தாலும், இன்றைக்கு நடைமுறை என்னவாக இருக்கிறது?

"சமத்துவப் பெரியாரின்' ஆட்சியில் சாதிக்கொடுமை ஒழிந்திருக்கிறதா எனும் கேள்விக்கு மதுரையைச் சேர்ந்த ""எவிடென்ஸ்'' எனும் தன்னார்வ நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு விடையளிக்கிறது.

தென்மாவட்டங்களில் சுமார் 85 கிராமங்களில் அந்நிறுவனம் நடத்திய கள ஆய்வில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிப்பாகுபா.......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, August 3, 2009

புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!

வன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.

இதற்கு வெளியில் அகதிகள், வன்னி முகாம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு யாருக்காவது உண்மையில் அக்கறையிருந்தால், புலிக்கு பின்னால் குவிந்துள்ள மக்கள் சொத்தை பொதுச் சொத்தாக மாற்றும் படி கோருங்கள்.

இது தானே நியாயம். இதுதானே .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, August 2, 2009

மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள் : அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து...


வேலூர் லாங்கு பஜாரில், ஒரு ஞாயிற்றுக்கிழமை, தெருவோரம் விரிக்கப்பட்டு சிதறிக்கிடந்த பழைய புத்தகங்களின் நடுவே ஆப்பிரிக்க முகம் நிறைந்த மேலட்டை கண்ணில் பட்டது. Desert flower-the extraordinarylife of a desert nomad. புத்தகத்தை எடுத்து பின்அட்டையைப் பார்த்தேன். ஒரு விமர்சனத்தின் முதல் வரி.. He first job was for a Pirelli calender shoor பைரேலி காலண்டர்! ஃபாஷன் டிவியில் அம்மண மங்கையரை பைரேலி காலண்டருக்காகப் படம்பிடிக்கும் ஒளிபரப்புகள் நினைவுக்கு வந்தது.மாடலிங் மங்கை வாரிஸ் டேரி. சோமாலியாவில் ஒரு கிராமத்தில் பிறந்து, தந்தை பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் 13 வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து நகரத்தில் அத்தையுடன் போய்ச் சேரும் வரை உதவி செய்வதாக வந்து தன்னை அடைய விரும்பிய ஆண்களிடமிருந்து தப்பி, அத்தையுடன் லண்டன் சென்று, அவர்கள் மீண்டும்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கடந்த வரலாற்றில் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், நிகழ்காலத்துக்கு ஒளிகொடுக்க முடியாது

கடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும்!? மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!?

இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை. இதைச் செய்யமுனையாத அனைத்தும், தன்னுடன் எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறை உள்ளடக்கியபடி தான் முன்நகர முனைகின்றது. இது இன்று வெளிப்படையான உண்மை.

புலி, புலியெதிர்ப்பு மட்டும் ஒரு எதிர்ப்புரட்சிக் கூறாக, கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்மத்தியில் செயல்படவில்லை. மாறாக இதற்கு வெளியில்; இதற்கு மாறாக எந்த மாற்று அரசியலையும் முன்வைத்து செயற்படாது, அங்குமிங்கும் செயல்;பட்ட கூறுகளும் கூட எதிர்ப்புரட்சி அரசியலையே விதைத்தனர். அவர்கள் இன்றைய சூழலில்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, August 1, 2009

ஈரான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முகமது அகமதிநிஜாத் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து அங்கு நடந்து வரும் போராட்டங்கள், ஈரான் உள்நாட்டுப் போரில் விழுந்துவிடுமோ என்ற ஐயத்தை உலகெங்கும் தோற்றுவித்திருக்கிறது. அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் தோற்றுப் போய் விடுவார் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக, அவர் ஒரு கோடியே பத்து இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மிகப்பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

மேற்குலகாலும், ஈரானின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தாலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மிர் ஹுசைன் மௌசாவி, "இத்தேர்தலில் மோசடிகள் நடந்திருப்பதாகவும், அகமதிநிஜாதின் வெற்றி திருடப்பட்ட வெற்றி'' என்றும் குற்றஞ்சுமத்தி, தனது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்.

தேர்தல் .............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 31, 2009

நடைமுறைப் போராட்டம் எது?

சமகால நிகழ்வுகள் மீது, உடனுக்குடன் வழிகாட்டி எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதைச் செய்யாத, செய்ய முனையாத அனைவரும் சந்தர்ப்பவாதிகள். சமூகத்துடன் சேர்ந்து எதிர்வினையாற்றாதவர்கள், நிலவும் சூழலுக்குள் விலாங்கு மீன் போல், வழுக்கி தப்பித்து நெளிபவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மக்களை வழிகாட்ட முடியாதவர்கள்.

இன்று நாம் பேசும் விடையங்கள், அது சார்ந்த சூழலுக்கு வெளியில் இருந்தே அநேகமாக பேசப்படுகின்றது. அந்தளவுக்கு சமூகத்தினுள்ளான அசைவுகள் அனைத்தும் நலமடிக்கப்படுகின்றது. இன்று இலங்கையில் தமிழினம் சந்திக்கின்ற அவலங்கள், பெருமளவுக்கு புலத்தில் தான் பேசப்படுகின்றது.

குறித்த மக்கள் மத்தியில் செயல் சார்ந்த ஒரு அரசியல் வேலை முறை, அறவே இன்று அற்றுப்போயுள்ளது. முன்பு புலிப் பாசிசமும்,
.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 30, 2009

அரசியல் நகர்வெனும் அடிவருடித்தனம்

புலத்தென்னினத்து மானுடனே
பட்டினி போரெடுத்தாய்
பாதையெலாம் தடுத்தாய்
கையெழுத்துப்போர் கடையடைத்தாய்
பேருந்தில் நிறைத்து பெருநகரவீதிகளில்
ஜெனிவாவில் பெல்ஜியத்தில்
எழுச்சியெலாம் அடங்கி ஏன்படுத்தாய்
இனிக் கேபி சொல்கிறார.........
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பாசிசத்தை இனம் காண்பது எப்படி? அது மறுபடியும் தன்னை மூடிமறைத்தபடி வேஷம் போடுகின்றது

மக்களுக்கும் பாசிசத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு, சமூகத்தின் சராசரி அரசியல் மட்டம் என்பது வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கமைய இடதுசாரிய சமூகக் கூறு, அரசியல் தலையீட்டை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த நிலைமையை அடைய முடியாத வண்ணம், சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறுகள் அழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாசிசம் மக்கள் வேஷம் போடுகின்றது.

அன்று பாசிசம் மக்களின் அரசியல் மட்டம் வளரவிடாது தடுக்க, இடதுசாரி புத்திஜீவிகளை குறிவைத்து கொன்றது. கடந்த காலத்தில், ஈழத்தில் இதுதான் நடந்தது. பாசிசம் தன்னை நிலைப்படுத்தவும், மக்களின் அறியாமையை ஏற்படுத்தவும், 1980 களில் தொடங்கி 1990 வரை பெருமளவில் இடதுசாரிய அரசியல் புத்திஜீவிகளையும் அதன் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. அந்தப் படுகொலை வரலாற்றை தனது பாசிச வரலாறு மூலம், இன்று இருட்டடிப்பு செய்ய முனைகின்றது. இதற்கு தமிழகத்து இடதுசாரிகளை அது பயன்படுத்துகின்றது.

கடந்தகால இடதுசாரிய படுகொலை வரலாற்றை மூடிமறைத்ததன் மூலம், வலதுசாரிய பாசிசமே சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறா.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 29, 2009

புலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி!

விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்திற்கு ஓர் சுனாமியே எற்பட்டது! புலிகளின் 30 ஆண்டு காலமாக வீங்கி வெம்பிய இராணுவ வளர்ச்சியும் வீழ்ச்சியும், மதிலில் எறிந்த பந்துபோல் ஆகியது! எதிலும் விரலுக்கேற்ற வீக்கம் இருக்கவில்லை! ஆயுதம், படைப்பலம், பணத்தில், பாசிச சரவாதிகாரத்தில், புலிகள் போன்ற ஓரு அமைப்பு உலகில் உருவாகவில்லை என்றே சொல்லலாம்! இவைகளின்; ஊடாக புலிகள் வடகிழக்கின் தம்மை ஓரு மாற்று அரசாக அமைந்தனர்! அதன் பரினாம வளர்ச்சி அவர்களை ஓர் பாசிச சர்வாதிகார அமைப்பாக கட்டமைத்தது!

Tuesday, July 28, 2009

பாசிட் மகிந்த தன் குடும்ப சர்வாதிகாரத்தை, இலங்கையின் "ஜனநாயக" ஆட்சியாக்கின்றனர்

மகிந்த குடும்பம், தன்னைச் சுற்றி ஒரு கூலிக்குழுவை உருவாக்கி வருகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை தனக்கு கீழ் மென்மேலும் அடிமைப்படுத்த முனைகின்றது. இந்த வகையில் இராணுவத்திற்குள் நடக்கும் குழிபறிப்புகள், கைதுகள், பதவி இறக்கங்கள், இட மாற்றங்கள் எல்லாம், தம் குடும்ப பாசிச அதிகாரத்தை தக்க வைக்கவும், அதை பலப்படுத்தவும் செய்கின்ற தில்லுமுல்லுகள் தான்.

பாசிசத்தின் முரண்பட்ட கூறுகள், தம் அதிகாரத்துக்கான மோதல்களில் ஈடுபடுகின்றது. இது இன்று இலங்கையில் உச்சத்தை எட்டியுள்ளது. இராணுவத் தளபதி முதல் அரசின் எடுபிடியாக நக்கிய டக்ளஸ் வரை, இந்த குடும்ப பாசிச மயமாக்கலில் சிதைந்து உருத்தெரியாமல் சிதைக்கப்படுகின்றனர்.

குடும்ப பாசிசமயமாக்கலில், பாசிட்டுகளிடையே ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. பல உயர் இராணுவத் தளபதிகளின் தலை உருட்டப்படு..............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, July 27, 2009

தன் தலைவரையே காட்டிக்கொடுத்த கே.பி என்ற மாபியா, புலிகளின் புதிய தலைவராம்!

போராட்டத்தின் பெயரில் மந்தையாக வளர்க்கப்பட்ட அடிமையினத்தின் மேல், மற்றொரு வெட்கக்கேடான அரசியல் திணிப்பு. தமிழ்மக்களை தொடர்ந்து மாபியாக்கள் வழிநடத்த முடியும் என்று நம்பும் அடி முட்டாள்தனத்தின் மேல், துரோகிகள் தமக்குத்தாமே செங்கம்பளம் விரிக்க முனைகின்றனர்.

இனத்தின் ஒரு பகுதியை துரோகிகள் என்று சொல்லி, ஒரு இனத்தை அழித்தான் புலித் தலைவன். அவரையே காட்டிக் கொடுத்த ஒரு துரோகி, இன்று அந்த இயக்கத்தின் புதிய தலைவராகிவிட்டார். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் பித்தலாட்டம். தன் தலைவரைக் காட்டிக் கொடுத்தவன், தன் சர்வதேச மாபியா வலைப்பின்னல் மூலம் தன்னைத்தான் தலைவராக்கிக் கொண்டான். போராட்டத்தின் பெயரில் கேடுகெட்ட அரசியல் வக்கிரம்.

திட்டமிட்.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 26, 2009

சிறப்பு வெளியீடு : 25ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்

மனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.
இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.

மௌனிக்கட்டும் துப்பாக்கிகள்

மக்கள் மரணத்தில் அவலத்தில்
உலகப்பிதாக்கள் கையைநம்பி
தேசம்காக்க கூவியழைத்த கொள்கையில்
நையப்புடைக்கப்பட்டு நடுத்தெருவில் தேசியம்
காட்டுக்குள் வீரரென கதையளப்பும்
பூட்;டியமுகாம் வாழ்வை நீட்டிப்போடும்
பாசிசநகர்வுக்கு பலம்சேர்க்கும்
........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, July 25, 2009

கருணா என்ற எடுபிடிக் கும்பல், மகிந்த பாசிசம் மூலம் விடுத்த மிரட்டல் (ஒலி வடிவம் இணைப்பு – பாசிசம் கையாளும் "தேசிய" மொழியிலானது. கவனம்)

மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வாகனத்தை, கருணா என்ற எடுபிடி பாசிசக் கும்பல் எப்படி அபகரித்தது என்ற செய்தியை அண்மையில் அதிரடி இணையமும், இலங்கைநெற்றும் வெளியிட்டது. இது தான், இந்த உடனடியான பாசிச மிரட்டலுக்கான காரணம். தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசியவர்கள், புலிப்பாசிசம் மட்டும் பேசியவர்கள், இந்த நிகழ்வையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை.

அதிரடியின் செய்தியால் மகிந்தாவின் எடுபிடியான இந்த மக்கள் விரோதிகள் அம்பலப்பட்டனர். இதனால் இந்த செய்தியை வெளியிட்ட இணைய...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 24, 2009

இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகின்றது?

லங்கா நியூஸ் வெப் இணையம் தங்கள் ஊடகவியல் தில்லுமுல்லுகளை ஒத்துக்கொள்ள மறுக்கும் போது, அதன் பின்னணியும் அதன் நோக்கமும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

மூன்று மொழியில் வெளிவரும் லங்கா நியூஸ் வெப் இணையம், மகிந்த புதல்வர் நாமல் தாக்கப்பட்டதாக கூறிய ஒரு செய்தியை முதலில் வெளியிட்டது. இதன் போது, தனது தில்லுமுல்லுகளுடன் கூடிய ஒரு போலிப்படத்தை தயாரித்து செய்தியை வெளியிட்டது. தில்லுமுல்லை அடிப்படையாக கொண்டு அந்தப் படத்தின் மூலம், இந்தப் படம் போலியானது என்பதை அம்பலப்படுத்;தினோம். பின் அதன் மூலப்படத்தையும் வெளியிட்டோம். (இதில் வெளியிட்ட படத்தை தங்கள் ......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

திருட்டு முழி

"ஏ! சரோசா... என்ன, பாக்காத மாதிரி போய்ட்ருக்க?''

"ஓ! ராணி, வா, வா, தப்பா எடுக்காதே, மாப்புள கார்ல வந்து இறங்கிட்டாரு, ஆலம் கரைக்கச் சொன்னாங்க. அதான் ஒன்ன கூடப் பாக்குல.''

"ஆமாம்! வீட்லதான் மாடு கன்ன வச்சிட்டு பொழுதுக்கும் லோல்படுற. இங்கவேற ஆடுறியா, ஆலம் கரைக்குறாளாம், அதுக்குத்தான நம்பள கூப்புடுவாளுவ, வீடியோ எடுக்குறப்ப பாரு நம்மள கண்ணு தெரியாம போய்டும். போறியா, வா கெடக்கு!''

"ஹி... ஹி... தே மெதுவா பேசு.. நீ வேற!'' சிரித்துக் கொண்டே ராணியை அடக்கினாள் சரோசா.

"சரி! மவள கடலூர்ல கட்டிக்...
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 23, 2009

தோழர்களுடனான ஒரு உரையாடல் : 20 வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா!?

இது என் மீதான அரசியல் அழுத்தங்களாகின்றது. இதன் மீதான எதிர்வினை, இறுதியான 20 வருடத்தில், தனித்து நிற்கும் அரசியல் சூழல் எனக்கு எற்படுத்தியது. மக்கள் அரசியல், மக்களின் விடுதலை, இதை முன்னிறுத்தி இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நான் தனித்து எதிர்கொண்டது என்பது இயல்பில் என்னை தனிமைப்படுத்தியது.

அரசியல் ரீதியாக எம் சரியான கருத்தை, யாராலும் முறியடிக்க முடியவில்லை. இதில் இருந்து தப்ப எனக்கு எதிரான முத்திரை குத்தும் பிரச்சாரத்தை இவர்கள், இலங்கை இந்தியா புலம் என்று எங்கும் செய்தனர். இது எம் தோழர்கள் மத்தியிலும் கூட, உடன்பாடான எம் அரசியலுக்கு வெளியில் இதன் செல்வாக்கு கணிசமாக காணப்படுகின்றது.

நாம் எம்மைப் பற்றி, என் நிலை பற்றி தனிப்பட்ட ரீதியில் எதையும் பிரச்சாரம் செய்வது கிடையாது. எமது கட்டுரைகளை தொடர்ச்சி.......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 22, 2009

தனக்கு எதிரான இணையங்களையே படுகொலை செய்யும் பாசிசம்

புகலி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூலம், அவ்விணையத்தை பாசிட்டுகள் படுகொலை செய்துள்ளனர். ஆளைப் போடு அல்லது கருத்தை முடக்கு என்பது, பாசிச சிந்தாந்தத்தின் அரசியல் மொழியாகும். "ஜனநாயகம், சுதந்திரம்" பேசுகின்றவர்கள், மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்வதை விரும்புவதில்லை.

மக்களுக்கு தங்கள் பற்றி எந்த உண்மைகளும் தெரியக் கூடாது. மக்கள் அரசியல் மயப்படக் கூடாது. மக்கள் மந்தைகளாக, தமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும். இதுவே மக்களை ஆளும் வர்க்கங்களின், அரசியல் இலக்கு மட்டுமின்றி, இலட்சியமுமாகும்...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்


வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவது.............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, July 21, 2009

மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

ஆண்டு பாடசாலை எண்ணிக்கை தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை
1903 43 1765
1949 997 56168
1951 942 60924
1952 935 59554
1955 891 67110
1960 874 78733
1964 859 81695
1966 746 191881


1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலைய......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, July 20, 2009

எம்மைச் சுற்றிய அரசியலில், நாம் எதிர் கொள்ளும் அரசியல் நெருக்கடிகள்

பல விடையங்களை பேசியாக வேண்டும். தோழமையுடனான அரசியல், முட்டி மோதாத அரசியல், இந்தப் போக்குகளுடன் நேரடியாக விவாதிக்க முடியாத தடைகள் இயல்பாக எம்மை பற்றிய எதிர்மறைக் கூறுகளுடன் பயணிக்கின்றது. இன்று இது எமக்கும், எமது அரசியலுக்கும் எதிராக படிப்படியாக மாறுகின்றது.

இன்று இதற்குரிய சூழல். சம காலத்தில் புலிப் பாசிசம் தற்கொலை செய்த நிலையில், அரச பாசிசம் அம்பலமாகும் போதும், பாசிசம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு எம்மை தம் அரசியலுக்கு எதிராக நிறுத்தி அரசியல் அரங்கில் நுழைய முனைகின்றது. கடந்து 20 வருடமாக நாம் போராடி நிலைநாட்டிய உண்மையை, எதுவுமற்றதாக காட்ட முனைகின்றது. எனது மொழியும், எனது அணுகுமுறையின் குறைபாடுகளும் தான், இதைக் கடக்க, கடந்தகாலத்திலும் இன்றும் தடையாக இருந்தாக, இருப்பதாக காட்ட முனைகின்றது. இதனால் நாம் சந்திக்கும் அரசியல் போராட்டங்கள் பல முனையாகி, அவை கடுமையானதாகின்றது.

ஈழத்து தமிழ் அரசியல் போக்கு என்பது, கடந்த 20 வருடமாக எதிர்ப்புரட்சி அரசியல் ஊடாக நகர்ந்துள்ளது. இது "தேசியத்தின்" பெயரில் ஜனநாயகத்தை மறுத்தது. மறுபக்கத்தில் "ஜனநாயகத்தின்" பெயரில் தேசியத்தை மறுத்தது. இந்தப் போக்கில் புலிப் பாசிசத்தினையும், அரச......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 19, 2009

யார் இனித் தலைவர்

போரினி முடிந்ததோ
பாரததேவியின் பாதம் கழுவி
என்தேசத்து தேரது ஓடுமோ
உணவுப்பொட்டலம் போட்டிறங்கிய அமைதிப்புறா
கழுகாகிக் குதறிய காலம் மறப்போம்
போயஸ்தோட்டத்து அம்மாவுக்கு
வாழ்த்தனுப்பிய கரங்களால்
கண்ணிவெடியகற்றும் கருணைப்படைக்கு
;வாழ்த்துப்பா பாடுவ....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

நாஜிகள் நடத்திய யூதப் படுகொலைக்கு அடுத்து மிகக்கொடிய இனப்படுகொலை 1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற துட்சி இனப்படுகொலை. ஹூட்டு இனவெறி அரசு மற்றும் இராணுவத்தின் துணையோடு சிறுபான்மையினரான துட்சி இன மக்கள் சுமார் 10 இலட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதை உலகம் அன்று கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. ஹூட்டு இனவெறி இராணுவத்துக்கு பிரான்சும், துட்சி கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்காவும் ஆதரவாக நின்றன.

பின்னர் துட்சி இனக் கிளர்ச்சிப் படை வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டது. இன்று பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் அருகாமை நாடான காங்கோவின் அகதி முகாம்களில் உழல்கிறார்கள். அமெரிக்காவின் ஆசி பெற்ற ருவாண்டாவின் துட்சி இன அரசு இன்று ஆப்பிரிக்காவின் இஸ்ரேலாக மாறிவருகிறது. அமெரிக்க ஆசியுடன், காங்கோ முதலான அண்டை நாடுகளை மிரட்டும் அமெரிக்க அடியாளாக வளர்ந்து வருகிறது.

ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாத தேசியமும், ஏகாதிபத்தியத்தால் தூண்டி வளர்க்கப்படும் இனவுணர்வும், இனப் பகைமை எனும் மீள முடியா....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்