தமிழ் அரங்கம்

Friday, August 17, 2007

புலியெதிர்ப்பு ஆசாமிகளின் புலியொழிப்பு அரசியலோ புளுக்கின்றது

பி.இரயாகரன்
18.8.2007


புலியொழிப்பை வைக்கும் புலியெதிர்ப்பு புளுக்க வைக்கும் கட்டுரை ஒன்றை தேனீ வெளியிட்டுள்ளது. 'புலம் பெயர் நாடுகளில் மதில்மேல் குந்தியிருக்கும் ஆசாடபூதி பூனைகள்." (http://www.thenee.com/html/170807.html )என்ற தலைப்பில், ம.அரவிந்தன் என்ற மூகமுடி ஆசாமி, புலியொழிப்பு மட்டும் தான் முற்போக்கானது என்கின்றார்.


புலி அல்லது புலியெதிர்ப்பு என்று சமூகத்தை இரண்டாக வறட்டுத்தனமாக பிரித்து, இதற்கு அப்பால் மூன்றாவது அணி என்பது புலிகளின் ஐந்தாம் படை என்கின்றனர். இந்த கயவாளிகள் அன்று, பேரினவாதம் அல்லது குறுந்தமிழ் தேசியம் என்று இரண்டாக பிளந்தனர். இதற்கு அப்பால் உள்ள அனைத்தும் ஐந்தாம் படை என்று கூறி, நூற்றுக் கணக்கில் படுகொலைகளை நடத்தியவர்கள் தான், இன்று புலி அல்லது புலியெதிர்ப்பு என்கின்றனர்.

இந்த ஆசாமி கூறுகின்றார் 'ஒரு புறம் தமிழ் மக்கள் மேல் பாசிச அடக்குமுறையைக் கையாள்கின்ற புலிகள் இயக்கம், மறுபக்கம் அதை எதிர்த்து நிற்கின்ற பரந்துவிரிந்த தமிழ் ஜனநாயக சக்திகள். இவை தவிர, இதுவுமில்லை அதுவுமில்லை என்ற மூன்றாவது சக்தி எதுவுமில்லை." இதற்குள் உலகத்தை வகைப்படுத்தி ஆடுகின்ற புலியெதிர்ப்பு புலியொழிப்பு, சாராம்சத்தில் புலியை ஒழிக்கும் பேரினவாதத்தை பரந்துவிரிந்த ஜனநாயக சக்தி என்கின்றது.


'தமிழ் மக்கள் மேல் பாசிச அடக்குமுறையைக் கையாளுகின்ற புலிகள் இயக்கம்" என்கின்ற புலியெதிர்ப்புக் கோட்பாடு, தமிழ் மக்கள் மேல் பாசிச அடக்குமுறையைக் கையாளுகின்ற பேரினவாத அரசை பாதுகாக்கின்றது. இதை மறுக்கின்ற, மறைக்கின்ற கோட்பாடு தான், புலியெதிர்ப்பு புலியொழிப்பு கோட்பாடாகும். தமிழ் மக்களின் எதிரியை வெறும் புலியாக காட்டுகின்ற புலியெதிர்ப்பு, அனைத்தையும் இரண்டாக வகுக்கின்றது.


புலியை மட்டும் எதிராக காட்டுகின்ற இந்த இரண்டு கோட்பாடு, பேரினவாதத்தை எதிராக காட்டுகின்ற மூன்றாவது அணியை மறுக்கின்றது.


புலிகள் பேரினவாதத்தை எதிராக காட்டிக் கொண்டு நடத்துகின்ற அரசியல் எதுவோ, அதே அரசியலையே புலியை எதிரியாக காட்டிக்கொண்டு புலியொழிப்பு முன்வைக்கின்றது. இதை இரண்டு அணியாக காட்டிக்கொண்டு, மூன்றாவது அணி இல்லை என்கினறனர். இது துரோகி தியாகி என்ற அதே கோட்பாடு.


மூன்றாவது அணி தெளிவாக தமிழ் மக்களின் எதிரியாக பேரினவாதத்தையும், புலியையும் முன் வைக்கின்றது.


புலியும், புலியெதிர்ப்பும் தனித்தனியாகவே தனது ஒற்றைப்பரிமாண கோசத்தை வைக்கின்றது. புலி தமிழீழத்தை வைக்கின்றது. புலியெதிர்ப்பு புலியொழிப்பை வைக்கின்றது. இவ்விரண்டும் சகல சமூக ஒடுக்குமுறைகளையும் முன்னெடுக்க மறுக்கின்றது. மற்றவனை ஏமாற்ற, அதை புலி புலித்தமிழீழத்தின் பின், புலியெதிர்ப்பு புலியொழிப்பின் பின், சமூக ஒடுக்குமுறைகளை ஒழிக்கப் போவதாக கூறுவதில் கூட, அரசியல் ஒற்றுமை.


இந்த இரண்டு அணிக்கு வெளியில் மூன்றாவது அணி, சமூக ஒடுக்குமுறையையும் ஒழிக்கக் கோருகின்றது.


புலிகள் புலித்தமிழீழத்தை அடைவதற்காக மக்களை சார்ந்து நிற்பதில்லை. மாறாக மக்களை எதிரியாக பார்க்கின்றனர். புலியெதிர்ப்பு புலியொழிப்புவாதிகள் புலிகளை ஒழிக்க, தமிழ் மக்களைச் சார்ந்து இருப்பதில்லை. பேரினவாத பேய்களையும், ஏகாதிபத்திய பிசாசுகளையும் சார்ந்து நிற்கின்றனர். இப்படி இந்த இரண்டு அணியும் தமது இலட்சியத்தை அடைய, மக்களை அணிதிரட்டுவது சாத்தியம் இல்லையென்கின்றனர். இப்படி மக்களை எதிரியாக காட்டி, அந்த வழி சாத்தியமற்றது என்கின்றனர்.


இதில் இருந்து மூன்றாவது அணி, இதற்கு மாறாக மக்களைச் சார்ந்து நின்று போராடக் கோருகின்றது. மக்கள் மட்டும் தான், தமது விடுதலைக்காக போராட முடியும். இதுவல்லாத அனைத்தும் மக்கள் விரோரதத்தன்மை கொண்டவை.


இப்படி மூன்றாவது அணி புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியில் இருந்து தெளிவாக அனைத்திலும் வேறுபட்டது.


1. பேரினவாதம் மற்றும் புலியை மக்களின் எதிரியாக மூன்றாவது அணி பார்க்கின்றது

2. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் மூன்றாவது அணி ஒழிக்க கோருகின்றது.

3. மக்கள் தமது விடுதலைக்காக தாமே போராட வேண்டும் என்கின்றது.

4. ஏகாதிபத்தியத்தை எதிரியாக பார்க்கின்றது.


இப்படி புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியில் இருந்து முற்றிலும் தனித்துவமானவர்கள் நாங்கள். இப்படி மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டுள்ள, மூன்றாவது அணிதான், உண்மையாக மக்களைப் பற்றி பேசுகின்றது. அனைத்தையும் வர்க்க அடிப்படையில் அணுகுகின்றது. வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் வர்க்க அடிப்படையில் அங்கீகரிக்கின்றது.


இந்த உண்மையை புலியொழிப்பு புலியெதிர்ப்பு அணி எதிர்கொள்ள முடிவதில்லை. அதனால் மூன்றாவது அணியின் கோட்பாட்டுடன் தொடர்பற்றவர்களை உள்நுழைத்து, எம்மை புலியாக காட்டி எம் மீது காறித் துப்ப முனைகின்றனர்.


இந்த வகையில புதுசு ரவியை கொண்டு வருகின்றனர். புலியிடம் நக்கித் தின்னுவதையே அரசியலாக கொண்ட ஒட்டுண்ணி. இந்த பிழைப்புவாத ஓட்டுண்ணியை மூன்றாவது அணிக்குள் பொருத்திக் காட்டுவது கடைந்தெடுத்த புலியெதிர்ப்பு கயவாளித்தனம். இதுபோன்று சேரன் என்ற சந்தர்ப்பவாதி. புலிக்கு பின்னால் காவடியெடுக்கும் ஒரு அற்பவாதி. இந்த சந்தர்ப்பவாத அற்பவாதிக்கும், மூன்றாவது அணி கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் அரசியல் ரீதியாக கிடையாது. புலியெதிர்ப்பு அணி இப்படி இழிவாக தான், அரசியல் செய்யமுனைகின்றது.



அவர்களை புரிந்துகொள்ள


மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும் (புதுசு ரவி பற்றி)



புலியெதிர்ப்பின் அலம்பலும், சேரனின் புலம்பலும்



மற்றும் எஸ்.கே. விக்கினேஸ்வரன், செழியன் போன்றவர்கள் அரசியல் ரீதியாக மூன்றாவது அணியின் அரசியலை முன்வைப்பவர்கள் அல்ல. எந்த அரசியல் செயல்பாட்டையும் இன்று வைப்பவர்கள் அல்ல. மூன்றாவது அணி இதற்கு மாறாக தெளிவான அரசியலைக் கொண்டது.



எம் கோட்பாட்டை எடுத்து விவாதிக்க துணிவு இருந்தால், அரசியல் நேர்மை இருந்தால், நாம் அவர்களை சந்திக்கமுடியும். நாங்கள் அதற்குத் தயார்.


இதை விடுத்து "இதுவுமில்லை அதுவுமில்லை என்ற மூன்றாவது சக்தி எதுவுமில்லை." என்று புலம்புவதற்கு அர்த்தம் கிடையாது. புலியுமில்லை, புலியெதிர்ப்பு அணியுமில்லை என்ற எமது நிலைப்பாடு, தெளிவாகவே மக்கள் நலனைச் சார்ந்துள்ளது. மக்களைச் சாராத, எந்த போக்குடனும் எம்மை இணைத்துக்கொள்ள மறுப்பவர்கள்.


புலியெதிர்ப்பு புரட்டல்வாதிகள் கூறுகின்றனர். 'சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறையிலிருந்து தமிழ் மக்கள் விடுதலையடைவதற்கான முன்நிபந்தனை, அதற்கு தடையாகவுள்ள புலிகள் என்ற பாசிச இயக்கம் அழிக்கப்படுவதே என்பது நிதர்சன உண்மையாகும்." என்கின்றனர். பேரினவாதத்தை ஒழிக்க புலிகளை ஒழிக்க வேண்டும் என்றால், பேரினவாதிகளை ஒழிக்க யாரை ஒழிக்க வேண்டும். இதன் சாரம் உள்ளடக்க ரீதியாக புலியை ஒழிக்க வேண்டும் என்றால் பேரினவாதத்தை இப்ப ஒழிக்க கூடாது என்கின்றனர்.


புலியை ஒழிக்க முனையும் பேரினவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தை, புலியை ஒழிக்கும் நட்பு சக்தியாக காட்ட முனைகின்றனர். இதைத்தான் நிதர்சமான உண்மை என்கின்றனர். இதை அவர்கள் '‘மூன்றாவது அணி’ ‘நடுநிலைமை’ பிரச்சாரங்கள் யாவும் புலிகளுக்காக செயற்படும் ஐந்தாம் படை ஒற்றர்களின் வேலையே தவிர வேறொன்றுமில்லை." என்கின்றனர். நல்ல வேடிக்கை. புலிகள் துரோகி தியாகி இடையில் எப்படி நடுநிலை கிடையாது என்கின்றனரோ, அப்படிப்பட்ட பொறுக்கித்தனமான எதிர்புரட்சிகர அரசியல்.


பேரினவாத அரசுடனும், இந்தியக் கைக் கூலிகளாகவும், ஏகாதிபத்தியத்துடனும் சேர்ந்த இயங்குகின்ற இந்த கொலைகார புலியெதிர்ப்புக் கும்பல், தன்னை மறைக்க மற்றவனை ஐந்தாம்படை என்கின்றனர். இந்திய இலங்கை அரசின் கூலிப்படையாக இயங்குகின்ற ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி:டி.பி, புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், கருணா குழு என்று, இக்குழுக்கள் எப்படிப்பட்ட ஐந்தாம் படை. அரசியல் ரீதியாக வெறும் கூலிக் குழுக்கள். பேரினவாததத்தின் நிதி மற்றும் ஆயுததுணையில் இயங்குகின்ற கொலைகார நாசகாரக் கும்பல்கள். புலிகள் இருந்தால் தான் இவர்களுக்கு வாழ்வு என்ற நிலை.


இதையும், இதைச் சார்ந்து இயங்குகின்ற புலியெதிர்ப்பு புலியொழிப்பு அணியை 'பரந்துவிரிந்த தமிழ் ஜனநாயக சக்திகள்" என்கின்றனர். கேடுகெட்ட கொலைகார கூட்டம்.


மக்களைச் சார்ந்து நிற்காத, மக்களையே ஒடுக்குகின்ற பாசிச கும்பல். இந்தக் கும்பல் எம்மை புலியின் ஐந்தாம் படை என்கின்றனர். ஒற்றர்களின் வேலையே தவிர வேறு எதுவும் தாம் செய்வதில்லை என்கின்றனர். புலியெதிர்ப்பை முன்வைத்து புலியொழிப்பை வைத்து எதைச் செய்கின்றனரோ, அதை எம் மீது தலைகீழாக்கி காறி துப்புவதால் புலியெதிர்ப்பு அரசியல் நேராகிவிடாது.


புலியை நாம் விமர்சித்த அளவுக்கு, புலியெதிர்ப்பு அணி புலியை விமர்சித்தது கிடையாது. முக்கியமாக புலியின் அரசியலை புலியெதிர்ப்பு அணி விமர்சிப்பதே கிடையாது. புலியின் அதே அரசியலைக் கொண்ட, புலியெதிர்ப்பு அரசியல். புலியின் மக்கள் விரோத அதே அரசியலே, புலியெதிர்ப்பின் அரசியலாகும்.


இந்த புலி அரசியலை விமர்சிக்காத புலியெதிர்ப்புவாதிகள் கூறுகின்றனர் 'வரட்டு மார்க்சியம் பேசி வருகின்ற இவர் அரசாங்கம் முதலாம் எதிரி, புலிகள் இரண்டாம் எதிரி என்ற ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்து வருகின்றார். மார்க்சிய கண்ணோட்டத்தில் இதன் அர்த்தம் என்னவெனில் பிரதான எதிரியை அழிப்பதற்கு இரண்டாம் கட்ட எதிரியுடன் தற்காலிக கூட்டுச் சேரலாம் என்பதாகும். அதாவது சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துச் தோற்கடிப்பதற்கு புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்துச் செயற்படலாம் என்பதாகும்." மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக்கி, அதை திரித்துப் புரட்டி, அதுவாக எம்மை விளக்க முனைகின்ற வக்கிரம்.


இரண்டாவது எதிரியுடன் ஐக்கிய முன்னணி கட்டுவது என்பதை, இவ்வளவு எளிமையாக அற்பமாக விளக்குகின்ற கொச்சையான வறட்டுச் சூத்திரம். பிரதான எதிரி என் நாம் கூறுவது பேரினவாத ஏகாதிபத்திய சக்தியைத்தான். இரண்டாவது எதிரியாக கருதுவது புலி மற்றும் புலியல்லாத ஏகாதிபத்திய சக்தியையும் தான். எமது அணுகுமுறையானது வர்க்க ரீதியானது. எந்த எதிரியை, எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது, வர்க்க ரீதியானது. எதிரியை ஒழித்து கட்டுவது என்பது, வர்க்க நலன்களின் அடிப்படையிலானது. வறட்டுக் கோட்பாட்டிலான வெறும் சூத்திரங்களின் அடிப்படையிலல்ல. வர்க்க நலனை பூர்த்திசெய்யாத எந்த அரசியலையும் ஆதரிப்பதுமில்லை, முன்னெடுப்பதும் கிடையாது.


சூத்திரங்கள் எதையும் தீர்மானிப்பதில்லை. வர்க்க நலன்கள், அதை அடையும் உத்திகள் தான் போராட்டம்.


இதை மேலும் புரிந்துகொள்ள


புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் சார்பாக தேனீ எமக்கு சொல்ல முனைவது என்ன?

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல

தமிழுக்கு எதிராகப் பார்ப்பன – சூத்திரக் கூட்டணி

தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரில் உள்ள சிற்றம்பல மேடையில், பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி வழிபடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, ஜோதிமணி ஆகியோர் தடை விதித்திருக்கின்றனர். இந்தத் தீர்ப்பு, கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருக்கிறது. சட்டமும் நீதியும் பார்ப்பனர்களின் கோவணத் துணிக்குள் அடக்கம் என்ற உண்மை மிகவும் ஆபாசமான முறையில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதனைப் புரிந்து கொள்வதற்கு கடந்த இரு மாதங்களில் இது தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஏப்ரல் 30ஆம் தேதி அறநிலையத்துறை ஆணையரின் மேற்கூறிய உத்தரவு வெளியாகிறது. மே 17ஆம் தேதி கோயிலுக்குள் செல்கிறார் சிவனடியார் ஆறுமுகசாமி. ஆறுமுகசாமி தமிழ் பாடுவதற்கு முன்சீப் கோர்ட்டில் தீட்சிதர்கள் தடை உத்தரவு வாங்கியிருப்பதாகக் கூறி அவரைக் கோயிலுக்குள்ளேயே நுழைய விடாமல் கைது செய்கிறது போலீசு. அடுத்து, அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்குவதற்கு உயர்நீதி மன்றம் வருகிறார்கள் தீட்சிதர்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் ஆறுமுகசாமியின் சார்பில் ஆஜராகி தடைக்கு எதிராக வாதாடுகிறார்கள். ""அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவில் கருத்து வேறுபாடு இருந்தால், அரசுக்கு மேல்முறையீடு செய்யுங்கள். இடைக்காலத் தடை விதிக்க முடியாது'' என்று கூறி தீட்சிதர்களின் மனுவைத் தள்ளுபடி செய்கிறார் நீதிபதி ஜெயபால்.

வாதில் வெல்ல முடியாத தீட்சிதர்கள் சூதில் இறங்குகிறார்கள். நீதிபதி ஜெயபாலின் தீர்ப்புக்கு எதிராக தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்கிறார்கள். எதிர்மனுதாரராகிய ஆறுமுகசாமிக்கு "நோட்டீசு' அனுப்பாமலேயே காதும் காதும் வைத்தாற்போல தடையாணை கேட்கிறார்கள்; வாங்குகிறார்கள். வழக்கு முடியும் வரை, தமிழுக்கு நிரந்தரத் தடையே (Absolute Stay) விதித்து அருள்பாலிக்கிறது உயர்நீதி மன்றம். எதிர்தரப்பினரின் கருத்தைக் கூடக் கேட்காமல், அவருக்கே தெரியாமல் ஒருதலைப்பட்சமாக இப்படியொரு தீர்ப்பு வழங்குவது சட்டவிரோதமானது, இயற்கை நீதிக்கே முரணானது, கட்டைப் பஞ்சாயத்தை விட மோசமானது என்பதை ஒரு பாமரனும் புரிந்து கொள்ள முடியும். நீதிபதிகளுக்கா புரிந்திருக்காது?

பார்த்த மாத்திரத்தில் நீதிபதிகளின் உள்ளத்தைக் கவர்ந்திழுத்து தமிழுக்குத் தடை விதிக்க வைத்த தீட்சிதர்களின் வாதங்களை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.

""சிவபெருமானின் ஆணையின் பேரில் கைலாயத்திலிருந்து 3000 தீட்சிதர்களை வரவழைத்தான் மன்னன் இரண்ய வர்மன். சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்ததோ 2999 தீட்சிதர்கள்தான். "ஒரு ஆளைக் காணோமே' என்று எல்லோரும் விசனமுற்றபோது ""அந்த தீட்சிதன் நான்தான்'' என்று ஒரு அசரீரி ஒலித்தது. நடராசனே ஒரு தீட்சிதர்தான் என்பதால் நாங்கள் தெய்வப் பிறவிகள். இந்தக் கோயிலை நிர்வாகம் செய்வது தீட்சிதர்களின் பிறப்புரிமை. அதன்மீது ஆணையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது.

""இந்தக் கோயிலில் வேத நெறிப்படி வழிபாடு நடக்கிறது. ஆகம விதிகள் இதற்குப் பொருந்தாது. திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுப்பதற்கு முன்னமே அவற்றைத் தில்லையில் தீட்சிதர்கள் பாடி வருகிறார்கள். ஆன்மீக நம்பிக்கைகளைப் பகுத்தறிவு கொண்டு ஆராய முடியாது. மத நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராகத் தமிழைப் புகுத்துவதுதான் இந்த அரசின் கொள்கை. எனவே, ஆணையரின் உத்தரவு தொடர்பாக இந்த அரசிடம் மனுச் செய்தால் நீதி கிடைக்காது. ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக ஆணையர் கூறுகிறார். வழிபடுவதற்குத்தான் உரிமையே தவிர எங்கே நின்று வழிபடுவது, என்ன பாடுவது என்பதெல்லாம் வழிபாட்டு உரிமையில் சேராது.''

இவை தீட்சிதர்களுடைய மனுவில் காணப்படும் வாதங்களில் சில. இந்த வாதங்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. ""தீட்சிதன் ஒருவனை இப்போது காணாமல் போக வைத்தால் மீண்டும் அசரீரி ஒலிக்குமா?'' என்று நீதிமன்றம் கேட்கவில்லை. ""உருவ வழிபாட்டை எதிர்க்கும் வேள்வி வழிபாடான வேதத்துக்கும் கோயிலுக்கும் என்ன தொடர்பு?'' என்று கேட்கவில்லை. தாமே திருமுறைகளைப் பாடியதாகப் புளுகும் தீட்சிதப் புரட்டர்கள் திருமுறைகளைப் பதுக்கி வைத்ததும் அழித்ததும், அவை இராசஇராசனால் மீட்கப்பட்டதும் பொய்யா என்று கேட்கவில்லை. ""தனக்குச் சாதகமான முடிவு கிடைக்காது என்பதற்காக அரசின் நிர்வாக அதிகாரத்தையே ஒரு குடிமகன் கேள்விக்குள்ளாக்க முடியுமா?'' என்றும் கேட்கவில்லை. ""எங்கே நின்று வழிபடுவது என்பதைத் தீர்மானிப்பவன் தீட்சிதன்தானென்றால், இது நவீன காலமா, நந்தன் காலமா?'' என்றும் கேள்வி எழுப்பவில்லை.

தடையாணை வழங்குவதற்கான காரணம், விளக்கம், நியாயம் ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூடக் கூறாமல், ஒரே வரியில் தடையாணை வழங்குமளவுக்கு உயர்நீதி மன்றத்தின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன தீட்சிதர்களின் இந்த வாதங்கள்! ""சேது சமுத்திரத் திட்டத்தால் இராமர் பாலம் பாதிக்கப்படக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து'' என்று வலிந்து பேசும் ஒரு நீதிபதியின் உள்ளம் தீட்சிதர்களுக்காகத்தானே துடிக்கும்! இதில் வியப்பொன்றுமில்லை.

""தில்லையில் சிவனுக்கு முன்னால் தேவாரம் பாடக்கூடாது'' என்று தீட்சிதர்கள் தடையாணை வாங்கியிருக்கிறார்கள் என்றால், "எவனுக்கு முன்னாலும் தேவாரம் பாடக்கூடாது' என்று தடையாணை வாங்கியிருக்கிறார்கள் தருமபுரம் ஆதீனத்தின் சீடர்கள். தில்லைக் கோயிலில் வேதநெறிப்படி வழிபாடு நடப்பதால் அங்கே தமிழ் நுழையக் கூடாது என்பது தீட்சிதர்களின் வாதம். தமிழில் வழிபாடு செய்வதும் குடமுழுக்கு நடத்துவதும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதும் ஆகம நெறிக்குப் புறம்பானது என்பதால் தமிழைத் தடை செய்யவேண்டும் என்பது ஆதீனங்களின் வாதம்.

இவர்களுடைய மனுவை ஏற்று, திரு.சத்தியவேல் முருகன், சண்முகசுந்தரம் ஆகியோர் தமிழில் நடத்திவரும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளுக்கும், தமிழ் குடமுழுக்கு மற்றும் தமிழ்த் திருமறைகளை ஓதி நடத்தப்படும் திருமணங்களுக்கும் தடை விதித்திருக்கிறது உயர்நீதி மன்றம். மே 30ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜோதிமணி, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ஆகியோர் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர்.

தமிழுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் இத்தகைய தடையாணைகள் அடுத்தடுத்துப் பிறப்பிக்கப்பட்ட போதும், இவற்றுக்கெதிராக குமுறலோ கொந்தளிப்போ கண்டன அறிக்கைகளோ எதுவும் இல்லை. இந்து அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து ஒரு வார்த்தை கூட கூறாமல், இந்தத் தடையை நீக்கக் கோரி மேல் முறையீடு கூடச் செய்யாமல் மவுனம் சாதிக்கிறது தமிழக அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்குச் சட்டம் இயற்றி விட்டதாகவும், "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்ற அறிவிப்பை மாற்றி "தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என்று பலகையைத் தொங்கவிட்டு விட்டதாகவும் பெருமைப் பாராட்டிக் கொள்கிறார் கருணாநிதி. ஆனால், ""தமிழ் அர்ச்சனைக்கு பயிற்சியே கொடுக்கக்கூடாது'' என்று நீதிமன்றம் தடை விதிக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அரசு.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோயிலில் பார்ப்பனரல்லாத இருவரை அர்ச்சகராக நியமித்து மே 7ஆம் தேதி இந்து அறநிலையத்துறை ஆணை வெளியிடுகிறது. ""பட்டாச்சாரியார் குடும்பத்தில் பிறந்து ஆகம பாடசாலையில் 6 ஆண்டுகள் குருகுலப் பயிற்சி பெற்றவர்களைத்தான் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் பார்ப்பனர்கள். உடனே, ""இரு அர்ச்சகர்களின் நியமன உத்தரவையும் நிறுத்தி வைத்திருப்பதாக'' பதில் அளிக்கிறது அரசு.

தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்களோ, ""தமிழில் அர்ச்சனை செய்தால் உலகம் அழியும் என்றும், குடமுழுக்கு நடத்தினால் அரசு கவிழும் என்றும், தமிழன் அர்ச்சகனானால் கடவுளுக்குத் தீட்டு'' என்றும் பகிரங்கமாக வழக்கு தொடுக்கிறார்கள். ""குஷ்புவுக்கு கோயில் கட்டி தமிழ் குடமுழுக்கு, தமிழ் வழிபாடு நடத்திக் கொள்ளட்டும். ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் அதைச் செய்ய முடியாது'' என்று தருமபுரம் ஆதீனத்துக்காக ஆஜரான வழக்குரைஞர் என்.ஆர்.சந்திரன் பார்ப்பனக் கொழுப்பு வழிய நீதிமன்றத்தில் தமிழை எள்ளி நகையாடுகிறார்.

ஜெயேந்திரனின் தரகனாகச் செயல்பட்டு வரும் புலவர் மகாதேவன் என்ற நபரோ, தருமபுரம் ஆதீனத்துக்கும் "மக்கள் தொடர்பு அதிகாரி'யாகச் செயல்படுகிறார். சிவராத்தியன்று காசிக்குச் சென்றிருந்த சிவனடியார் ஆறுமுகசாமி அங்கேயுள்ள திருப்பனந்தாள் மடத்தில் தங்கச் சென்றபோது ""சமஸ்கிருத விரோதிக்கு மடத்தில் இடமில்லை'' என்று விரட்டியிருக்கிறார்கள் அந்த "தமிழ்' மடத்தின் நிர்வாகிகள். இரண்டு வாரங்களுக்கு முன் ஆறுமுகசாமியை வழிமறித்து மிரட்டிய தீட்சிதøன் கையும் மெய்யுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்த போதும் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறது சிதம்பரம் நகர போலீசு.

""கடவுளின் நகைகளைத் திருடியது, பக்தர்கள் கொடுத்த காணிக்கைகளைக் கணக்கே இல்லாமல் சுருட்டிக் கொண்டது போன்ற குற்றங்களுக்காக தீட்சிதர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்'' என்று 1997லேயே சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை. கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிராக தீட்சிதர்கள் பெற்றிருக்கும் நீதிமன்றத் தடையாணையை உடைப்பதற்கும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெறும் 250 தீட்சிதப் பார்ப்பனர்கள் இத்தனை கோடி தமிழ் மக்கள் மேல் எவ்வாறு ஏறி மேய முடிகிறது என்ற கேள்வி யாருக்காவது இருந்தால், அதற்கான விடை மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாத அனைவரும் தமிழால் ஒன்றுபடுவதாகக் கூறப்படும் பித்தலாட்டத்துக்கு யாரேனும் மயங்கியிருந்தால், அவர்களுடைய மயக்கம் தெளிவிக்கும் மருந்து மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது. ஏமாளித் தமிழன் பார்ப்பன சூதுக்குப் பலியாகி விட்டான் என்ற நைந்து போன திராவிட இயக்கப் பொய்க்கு யாரேனும் பலியாகியிருந்தால், தருமபுரம் ஆதீனம் முதல் கோபாலபுரம் ஆதீனம் வரையிலான "ஏமாளிகளின்' யோக்கியதைக்குச் சான்று மேற்கூறிய விவரங்களில் இருக்கிறது.

தமது பதவி, நிலம், சொத்து ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதில் ஆதீனங்களும் தீட்சிதர்களும் ஒரே அணியில்தான் இருக்கிறார்கள். இன்று தீட்சிதர்களுக்கு நேருவது நாளை நமக்கு நேரக்கூடும் என்பதுதான் பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத "சூத்திர' ஆதீனங்களின் கவலை. ஆகையால், இந்த பார்ப்பனசூத்திரக் கூட்டணி மிகவும் இயற்கையானது. தம்முடைய சுரண்டலையும் ஆதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பார்ப்பனர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்ட தமிழ் மன்னர்கள் முதல் கருணாநிதி, வைகோ, ராமதாசு வரை இதுதான் உண்மை.

""எவன் வேண்டுமானாலும் அர்ச்சகனாக முடியுமா, வேதங்களின் இடத்தில் தேவாரமா?'' என்று ஆதீனங்கள் கொதிக்கும்போது அந்த உருத்திராட்சப் பூனைகள் அணிந்திருக்கும் பூணூல் வெளியே தெரிகிறது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. "சாதி கெட்டவன்' கையால் திருநீறு வாங்குவதைக் காட்டிலும், பார்ப்பான் காலை நக்குவதையே அவர்கள் கவுரவமானதாகக் கருதுகிறார்கள். பார்ப்பனியம் என்பது தங்களுடைய சொந்த சித்தாந்தம் என்பதை புரியாதவர்களுக்கும் புரிய வைக்கிறார்கள்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க சட்டமியற்றி விட்டதாகவும், அர்ச்சகர்களைப் பயிற்றுவிக்க பயிற்சிப் பள்ளிகள் நடப்பதாகவும் தி.மு.க. அரசு ஜம்பமடிக்கிறது. "பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை'ப் பிடுங்கி எறிந்ததற்காக கருணாநிதிக்கு பாராட்டு விழாவும் நடத்திவிட்டார் வீரமணி. ஆனால் நியமன உத்தரவை எதிர்த்து பார்ப்பனர்கள் வழக்கு போட்டவுடனே, நியமனத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கிறது அரசு. ""நான் சட்டமன்றத்தில் சட்டம் போடுகிறேன். நீ நீதிமன்றத்தில் போய் தடையாணை வாங்கிக் கொள்'' என்று பேசி வைத்துக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும் குடும்ப சகிதமாக தில்லைக் கோயிலுக்கு வருகிறார்கள். தீட்சிதர்கள் திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். மூசாவுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள். பஞ்சைப் பராரிகளால் பாராட்டப்படுவதை விட பார்ப்பனர்களால் பாராட்டப்படுவதே அவர்களுக்குக் கவுரவமாகத் தெரிகிறது. அவர்கள் வீட்டு அம்மணிகளுடன் ஐயர்கள் ஹாட்லைனில் தொடர்பு வைத்திருக்கிறார்கள். பதவியும், பணமும் ஏற ஏற ஜோசியம், ஜாதகம், நாள், நட்சத்திரம், மஞ்சள் துண்டு அனைத்தின் மீதும் நம்பிக்கை வருகிறது. பார்ப்பனியத்தை மிகவும் இயல்பாக அவர்கள் அரவணைத்துக் கொள்கிறார்கள்.

ஆதீனங்களும் அதிகாரிகளும், நீதிபதிகளும் அரசியல் தலைவர்களும் பார்ப்பனர்களுடன் அமைத்துள்ள இந்தக் கூட்டணி சாதிக்கூட்டணி அல்ல; இது வர்க்கக் கூட்டணி. தமிழை எதிர்ப்பவர்கள் தீட்சிதர்கள் மட்டும்தான் என்றால், இந்தப் பிரச்சினை என்றோ முடிந்திருக்கும். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் சூதும் சதியும் செய்து தீட்சிதர்களுக்குக் கவசமாக நின்று கொண்டிருப்பவர்கள் இந்தக் கேடுகெட்டத் "தமிழர்கள்' தாம்!

எனவேதான், தமிழுக்கு எதிராக இத்தனை கொடுமையான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், இவற்றைக் கண்டிக்கவோ, எதிர்க்கவோ யாரும் முன்வரவில்லை. தமிழால் வயிறு வளர்த்தவர்களும் பதவி அடைந்தவர்களும் பட்டம் சூடியவர்களும் பத்திரமாகப் பதுங்கிக் கொண்டிருக்க, சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும் தன்னந்தனியாக நின்று தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாரே, ஏன்? ஏனென்றால், இழப்பதற்கு அவரிடம் எதுவும் இல்லை ஒரு மஞ்சள் பையும் சோற்றுப் பாத்திரமும் தவிர!

· சந்திரன்

Thursday, August 16, 2007

'குடியரசு"த் தலைவர்...பெண்ணுரிமையின் வெற்றியா?

ங்கிலேயக் காலனிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நிறுவிய எத்தனையோ அடிமைச் சின்னங்களில் ஒன்றுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கிலாந்து நாட்டின் அரசி / அரசனைப் போன்ற ஒரு அலங்காரப் பதவிதான் இந்தியாவின் அரசுத் தலைவர். மத்திய, மாநில அரசு நிர்வாகங்களெல்லாம் முறையே அரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநரின் பெயரால்தான் நடைபெறுகின்றன; ஆனால், அரசு நிர்வாக இயந்திரத்துக்குத் தேவையானதெல்லாம் அப்பதவிகளில் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் மனிதர்கள் அல்ல; கோடிட்ட இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு கையொப்பங்கள் போடும் இயந்திரங்கள்தாம். மற்ற நேரங்களில் அரசு விழாக்கள் விருந்துகளில் அலங்காரச் சின்னங்களாக நிறுத்தப்படுவார்கள். ஆகவே, இந்திய அரசுத் தலைவர் பதவிக்குத் தேவையான தகுதி, தலையாட்டி வேலை செய்யும் கைப்பொம்மைதான்.

இத்தகைய அதிகாரமில்லாத பதவிக்கு பிரதிபா பட்டீல் என்பவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இந்த நாட்டின் பெண்ணினத்தையே கௌரவப்படுத்துவதாகும் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது. அறிவுகல்வி, நேர்மை, அனுபவம், சேவை, நடத்தை போன்றவற்றைக் கருதியோ, இத்தகைய பண்புகளைக் கொண்ட பெண்களை ஒப்பு நோக்கியோ, பிரதிபா பட்டீல் அரசு தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்படவில்லை. ஓய்வு பெறும் பிழைப்புவாதியும் "அரச'வைக் கோமாளியுமான அப்துல் கலாமைப் போலவே கூட்டணி அரசியல் நிர்பந்தங்களின் உந்துதல் காரணமாகவே பிரதிபா பட்டீல் தெரிவு செய்யப்பட்டார்.

ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் "இடது' கூட்டணி, தான் வலுவாக உள்ள மேற்கு வங்கத்தவரே அரசுத் தலைவராக வரவேண்டும் என்ற பிராந்திய உணர்வோடு ஆசைப்பட்டது. முதலில், பிரபல அரசியல் தரகரான சோமநாத் சாட்டர்ஜியையும், பிறகு பிரணவ முகர்ஜியையும் முன்மொழிந்தது. இவர்களை நிராகரித்து சோனியாவின் விசுவாசிகளான அர்ஜுன் சிங், சிவராஜ் பட்டீல், சுசில்குமார் ஷிண்டே, கரண்சிங் ஆகியோரை காங்கிரசு முன்மொழிந்தது. இருதரப்பும் ஒப்புக் கொள்ளாத நிலையில், சோமநாத் சட்டர்ஜிக்கு அரசுத் துணைத் தலைவர் பதவி என்ற நிபந்தனையின் பேரில் பிரதிபா பட்டீல் ஆளும் கூட்டணியின் வேட்பாளராக்கப்பட்டார். அதுவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவத்துக்குப் போட்டியாக இன்னொரு செகாவத் என்ற முறையில் பிரதிபா பட்டீல் தேவ்சிங் செகாவத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

சுயேட்சை வேட்பாளர் என்ற பெயரில் பைரோன்சிங் செகாவத்தை அரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ்பா.ஜ.க. அணி நிறுத்தியிருந்தபோதும், பிரதிபா பட்டீலை ஏற்பதில் இந்த அணிக்கு மறுப்பு ஏதும் இல்லை; உண்மையில் நடப்பது இரு பங்காளிகளுக்கிடையிலான நட்புப் போட்டிதான். எனவேதான், ""மரபுகளை மீறி'' தேர்தலுக்கு முன்பு இரண்டு செகாவத்துகளும் சந்தித்துக் குலாவுகின்றனர். இப்போதைய அரசியல் வாழ்க்கைப்படி, மாநில ஆளுங்கட்சி விரும்பி ஏற்பவரையே மாநில ஆளுநராக நியமிக்கிறார்கள்; அந்த வகையில் இந்துமதவெறி பாசிசத்தின் இன்னொரு சோதனைச் சாலையாகக் கருதப்படும் பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானின் ஆளுநராக ஆர்.எஸ்.எஸ். கும்பலால் தெரிவு செய்யப்பட்டவர்தான் பிரதிபா பட்டீல். அந்தத் தெரிவுக்கு விசுவாசமாக நடந்து வந்தவர்தான் பிரதிபா பட்டீல். அதனால்தான் ""மகாராணா பிரதாப் சிங்'' என்ற தனது சாதியின் ராஜபுத்திர அரசரின் பிறந்தநாளில், ""மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவே இந்துப் பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்'' என்று இசுலாமியர் எதிர்ப்பு இந்துவெறிக் கருத்தை வாந்தியெடுத்துள்ளார். ""வரலாற்றறிவு அறவே இல்லாதவர்'' என்று அரசுத் தலைவராவதற்கு முன்பே வரலாற்று அறிஞர்களால் "பாராட்டும்' பெற்றுவிட்டார்.

கே.ஆர். நாராயணனோ, ஜெகஜீவன் ராமோ அரசுத் தலைவர்களானதும், ஜாகீர் உசேனும், பக்ருதீன் அலி அகமதுவும் அரசுத் தலைவர்களானதும் எப்படி ""தலித்'' மற்றும் இசுலாமியர் ஏற்றத்துக்கு வழிவகுக்கவில்லையோ அதுபோலவே, இந்தியப் பெண்ணினத்தின் பிரதிநிதியாக பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராகவில்லை. இந்திரா, ஜெயலலிதா போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் பதவிக்கு வருவது எப்படிப் பெருமை சேர்க்காதோ அதைப் போலவே, பிரதிபா பட்டீல் அரசுத் தலைவராவதும் இருக்கிறது. பார்ப்பனபனியசத்திரிய குடும்ப வாரிசுகளான பெண்களுக்கு உயர் பதவிகள் வழங்கும் காங்கிரசுஆர்.எஸ்.எஸ். வழக்கப்படிதான் பிரதிபா பட்டீலும் அரசுத் தலைவராக்கப்படுகிறார்.

Wednesday, August 15, 2007

மொழி வக்கிரம் பற்றி புலம்பும் புலியெதிர்ப்பு அவதூறுகள்

பி.இரயாகரன்
15.08.2007


புலியொழிப்பையே அரசியலாக செய்யும் புலியெதிர்ப்புவாதிகளின் அரசியல் துரோகத்தை நாம் தோலுரிக்கும் போது, அதை மொழி வக்கிரம் என்று முதுக்கு பின்னால் அவதூறு செய்யமுனைகின்றனர். புலியெதிர்ப்பை தவிர வேறு எதையும் பேசத்தெரியாத இக் கும்பலின் அரசியல் வாழ்க்கை என்பது, அவதூறு செய்வதே அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. புலியை ஒழிக்க ஏகாதிபத்தியத்துடனும் பேரினவாத அரசுடனும் கூடி விபச்சாரம் செய்யும் இந்தக் கும்பல், வேறு எதையும் சமூகத்துக்கு செய்வது கிடையாது.

இதை மூடிமறைக்கவே சமூக கோட்பாடுகள் மீதும், சமூக நடைமுறைகள் மீதும்,ஐஎச்சமிட்டு நஞ்சிடுவதை நடைமுறையாக கொள்கின்றனர்.

சமூகம் சார்ந்த கருத்தை விவாதிக்க முடியாது போகின்றது. கருத்து சார்ந்த விவாதத்தில் மொழி வக்கிரம் பற்றியும், தனிநபர் தாக்குதல் பற்றியும் முதுக்கு பின்னால் அவதூறு பொழிகின்றனர். இந்த மொழி வன்முறை மற்றும் தனிநபர் தாக்குதல்கள் எங்கே? எப்படி? எந்த வகையில்? நடக்கின்றது என்று அரசியல் ரீதியாக விளக்கி நிறுவ முடிவதில்லை.

புலியொழிப்பை புலியெதிர்ப்பில் முன்வைக்கின்ற இந்தக் கும்பலிடம், இதை விளக்கும் அரசியல் அடிப்படை எதுவும் இருப்பதில்லை. இதனால் தான் இயக்கங்கள் செய்த அதே உத்தியை, மீண்டும் மீண்டும் கையாளுகின்றனர். அதாவது அரசியல் அவதூறுகள் மூலம், புலியெதிர்ப்பு அரசியல் செய்ய முனைகின்றனர். குறிப்பாக புலியைக் கூட, அரசியல் ரீதியாக விமர்சிக்க முடிவதில்லை. புலியெதிர்ப்பைக் கொண்டு, புலி பாசிசத்தின் துணையில் புலியொழிப்பைக் கொண்டு வாழ்கின்றனர்.

இதில் அரசியல் வேடிக்கை என்னவென்றால், புலியெதிர்ப்பு புலியொழிப்பு அரசியலை பற்றி எதுவும் பேசுவது கிடையாது. ஏகாதிபத்தியத்துடனும், பேரினவாத அரசுடனும் சேர்ந்து புலியொழிப்பை வைப்பதால், அதற்கு வெளியில் வேறு மாற்று அரசியல் கிடையாது. இந்த அரசியல் துரோகத்தை மூடிமறைக்க, அதை திசைதிருப்ப இந்த மொழி வன்முறை பற்றி புலம்புகின்றனர்.

பொது வாழ்வு என்பது கேலிக்குரியதல்ல. மற்றவனை அரசியல் ரீதியாக ஏமாற்றி வாழ்வதல்ல. அரசியல் ரீதியான நேர்மை, அதே போல் அரசியல் கோட்பாட்டு நேர்மை அவசியமானது. மக்களை சார்ந்து நிற்காத எதுவும் நேர்மையற்றது. அது மக்களின் முதுகில் குத்தும் துரோகமாகும். இதைவிட இதற்கு மாற்று எதுவும் கிடையாது.

1.பொதுவாழ்விற்கு வந்த பிற்பாடு, தனிமனித சீர்கேடுகள் அனைத்தும் பொதுவானவை தான். அதற்கு விலக்கு பெற முடியாது.

2.அரசியல் நடைமுறை, அரசியல் கோட்பாடுகள் வக்கிரம் கொண்டதாக இருக்கின்ற போது, அதை பற்றி பேசுவது அவசியமானது. இதைப்பற்றி பேசாது, மொழி வக்கிரம் பற்றி பேசுவது, பொதுவான தொடாச்சியான துரோகத்தை மூடிமறைக்க செய்யும் முயற்சியாகும்.

உதாரணத்துக்கு புலியொழிப்பை அரசியலாக கொண்ட, புலியெதிர்ப்பு சித்தாந்த குரு சிவலிங்கம், ஏகாதிபத்திய பிசாசுடன் சேர்ந்து புலியை ஒழிக்க போவதாக கூறியவர். அதைத்தான் சொந்த அரசியல் நடைமுறையாக கொண்டவர். இந்த அரசியல் இழிதனத்தை அம்பலப்படுத்துவது மொழி வக்கிரமா! இந்த பிசாசு எடுபிடி, பேரினவாத பேய்களுடனும் இதனடிப்படையில் தான் கூடிக்குலாவுகின்றார். இதை அம்பலப்படுத்துவதை மொழி வன்முறை என்றும், தனிமனித தாக்குதல் என்றும்; கூறுவதன் மூலம், இந்த கடைகெட்ட இழிசெயலை பாதுகாக்க முனைகின்றதைத் தவிர அது வேறு எதுவுமல்ல.

நாம் இதை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. இதை மொழி வன்முறை என்று, தனிநபர் தாக்குதல் என்றால், அதையிட்டு நாம் கவலைப்படுவதில்லை. பொறுக்கித்தனமான அனைத்து அரசியல் கோட்பாட்டு மற்றும் நடைமுறைத் துரோகத்தை, அம்பலப்படுத்தி போராடுவது தான் மனித குலத்தின் விடிவிற்கான ஒரு வழிப்பாதையாகும்.

Tuesday, August 14, 2007

குஜராத் விவசாயிகள் தற்கொலை:இதுதான் இந்துராஷ்டிரம்

குஜராத் மாநிலத்தைப் பற்றிக் கேட்டவுடனே, அங்கு நடைபெறும் இந்து மதவெறிப் பாசிச ஆட்சியும், அங்கு சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பீதியுடன் அன்றாடம் வாழ்வதும் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ""துக்ளக்''இல் இருந்து ""இந்தியா டுடே'' போன்ற பத்திரிக்கைகள் வரை, ""குஜராத் முதல்வர் மோடி அம்மாநிலத்தை அதிநவீனமாக்கி, சந்திரபாபு நாயுடுவை விடவும் முனைப்போடு அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினிமயமாக்கி, அந்நிய முதலீட்டைப் பெறுவதில் முன்னோடி மாநிலமாக்கி இருக்கிறார்'' எனப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ""ஊக்கமிகு குஜராத்'' எனப் பெயர் சூட்டி, அதன் நவீனமயத்தைப் புகழ்வது இருக்கட்டும். இந்தியாவிலேயே பருத்தி விளைச்சலுக்குப் பெயர் போன குஜராத்தில் விவசாயிகளின் நிலைமை என்ன?

பருத்தி விவசாயம் பொய்த்துப் போனதால் கடனாளிகளாகி தற்கொலை செய்து கொண்ட மராட்டிய , ஆந்திர விவசாயிகளின் நிலைமைதான் குஜராத்திலும் இன்று நிலவுகிறது. இத்தனைக்கும் குஜராத்தில் தான் உயர்ரகப் பருத்தி அதிகமாக விளைகிறது. அம்மாநிலத்தின் மொத்த விளைநிலப்பரப்பில் 44% நிலங்களில் நீர்ப்பாசன வசதியுடன் பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. அம்மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் பூபேந்திர சிங், ""குஜராத் விவசாயிகளில் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை'' என்கிறார். ஆனால் அரசாங்கமே, 2006 இல் மட்டும் 148 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. முதல்வர் மோடியோ, பொதுக் கூட்டங்களில் பேசும் போது, ""எங்கள் மாநில விவசாயிகள், கஷ்டமான வாழ்க்கை நடத்தவில்லை. அவர்களில் பலரிடம் மாருதி கார்கள் கூட உள்ளன''என்கிறார். இவற்றுள் எது உண்மை?

ராஜ்காட் அருகிலுள்ள சரப்தார் கிராமத்தைச் சேர்ந்த பிரபா பென்னின் கணவர் ரமேஷ் விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டார். ரமேஷûம் அவரின் சகோதரர்களும் இணைந்து 20 ஏக்கரில் சீரகமும், பருத்தியும் பயிர் செய்து வந்தõர்கள். தொடர்ந்து இரண்டாண்டுகளாய் விளைச்சல் இல்லாததால், ரமேஷ் வெறுப்புற்றுத் தூக்கு மாட்டிக் கொண்டார்.

ரமேஷின் தற்கொலையைப் பதிவு செய்த போலீசு, தற்கொலைக்குக் காரணமாய் விவசாயம் பொய்த்ததை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது. பின்னர் அதனைத் திருத்திய போலீசு, சாவுக்குக் காரணமாக குடும்பப் பிரச்சினையைச் சொன்னது. ""உண்மையான காரணத்தை எழுதிவிட்டால் அரசின் இழப்பீடு கிடைத்து விடும். இதையே முன்னுதாரணமாக்கிக் கொண்டு பணத்துக்காகப் பலரும் சாகத் துணிவர்'' என வக்கிரமாய்ப் பேசுகிறது போலீசு.

வாட்லி கிராமத்தில் நம்பிய விவசாயம் மோசம் செய்ததால் 50,000 ரூபாய்க்குக் கடனாளியாகி, கடனைத் திருப்ப முடியாத நிலையில் கடந்த ஜூலையில் பஹூபாய் எனும் 35 வயது விவசாயி உயிரை மாய்த்துக் கொண்டார். அவரின் விதவை மனைவி வஜூபென், இச்சாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்கவும் முடியவில்லை. ""புகாரைப் பதிவு செய்யக்கூடப் பணம் கேட்கும் போலீசுக்குத் தர என்னிடம் பணம் இல்லை'' எனும் வஜூபென்னால் சாதி வழக்கப்படி (தர்பார் சாதிராஜ்புத்) தண்ணீர் எடுக்கக்கூட வீட்டை விட்டு வெளியே வர இயலாது அவர் விதவை என்பதால்;வயிற்றுப் பாட்டுக்கு? தனது உறவினர்கள் செய்யும் சிறு உதவிகளாலும், தனது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதாலும் ஏதோ வாழ்க்கை ஓடுகிறது.

அதே ஊரில் தர்பார் சாதியைச் சேர்ந்த அனக்காய் தக்கடா (வயது 32) விவசாயத்தில் நட்டமடைந்து 2007 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் விதவையோ கூட்டுக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டு வயிற்றுப் பாட்டைச் சமாளிக்கிறார்.

பெண்களின் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கடன் வாங்கிச் செலவழிக்கும் விவசாயிகள், கடனை அறுவடைக்குப் பின் அடைத்து விடலாம் என எண்ணினால், விவசாய இடுபொருளின் செலவைக் கூட விளைச்சல் ஈடுகட்டுவதில்லை. வாங்கிய கடனும், அதன் வட்டியும் வளர்ந்து அவர்களின் உயிரைப் பறித்து விடுகிறது.

பனியா தேவ் கிராமத்தை சேர்ந்த 80 வயது முதியவர் வல்லப்பும் அவர் மனைவி, மகன்,மருமகள் ஆகியோரும் கடந்த நவம்பரில் சோமநாதபுரம் அருகே கடலில் குதித்து ஒட்டுமொத்தமாய் உயிரை மாய்த்துக் கொண்டனர். மின்சாரக் கட்டணப் பாக்கி கட்ட வேண்டி 5 வட்டிக்கு லேவாதேவிக்காரர்களிடமிருந்து ஒண்ணரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். விவசாயம் அவர்களை ஏய்த்து விட்டது. வட்டிக்கு மேல் வட்டி வளர்ந்து 12 லட்சமாய் ஆனபிறகு, தனது நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுப் பார்த்தார், வல்லப். கடன்காரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. "எந்நேரம் கடன்காரன் வீட்டில் வந்து உட்காரப் போகிறானோ' எனும் திகிலிலேயே அவர்களால் சாப்பிடக்கூட முடியவில்லை. அந்த அவமானமே அவர்களைக் கடல் நோக்கித் தள்ளிவிட்டது.

மலாக்நெஸ் கிராமத்தில் 5000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத தலித் விவசாயியின் வீட்டையே எடுத்துக் கொண்டுள்ளனர், கந்துவட்டிக்காரர்கள். ""அவர்களை எதிர்த்து எதுவும் பேசமுடியாது. சிறு விவசாயிகளில் ஒருத்தர் கூட நல்லா இல்லை. வாழ்வதற்கே பெரும் போராட்டமாய் இருக்கிறது'' என்கிறார் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் கானுபாய் கன்னியா.

விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு ஓடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் பூச்சிக்கொல்லி, விதை ஆகியவற்றின் விலை ஏறிக் கொண்டு வருகிறது. பாசனத்துக்கு தேவைப்படும் தண்ணீரின் கட்டணத்தை ஆண்டுக்காண்டு ஏற்றி வருகின்றனர். மோடி அரசோ மின்கட்டணத்தை இருமடங்கு ஏற்றி விட்டது. ஆந்திர, மராட்டிய மாநில விவசாயிகளை ஏமாற்றிய பி.டி.பருத்தி விதையின் விலை அதிகமாகி விட்டதால், அதே விதையின் போலி குஜராத் சந்தையில் மலிவாய் விற்கப்படுகிறது. அதை வாங்கி விதைத்துக் காய்ப் புழுக்களால் நாசமாகியுள்ளனர் விவசாயிகள்.

பெருகிக் கொண்டிருக்கும் குஜராத் தற்கொலைகளை மூடி மறைக்கும் மோடி அரசை எதிர்த்து, அவரது பா.ஜ.க. கட்சியின் துணை அமைப்பான ""பாரதீய கிசான் சங்கம்'' போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் தலைவர் பிரபுல் சஞ்சேலியா, ""தற்கொலை மொத்தம் 148 மட்டுமே எனப் புளுகுகிறது மோடி அரசு... எங்களுக்குத் தெரிந்தவரை இது 300க்கு மேல்'' என்கிறார்.

"தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை போலீசு முதல் தகவலறிக்கையில் எழுதி விட்டால், குஜராத்தில் கொந்தளிப்பு உருவாகிவிடும் என்பதால் பொய்யை எழுதி நிரப்புகிறார்கள்'' என அவர் சாடுகிறார்.

குஜராத் அரசின் விவசாய விரோதக் கொள்கையை அந்த அமைப்பே, ""அரசு விவசாயிக்கு ஒன்றுமே செய்வதில்லை. அதன் நோக்கமெல்லாம் விவசாய நிலத்தைக் கைப்பற்றி, அதைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வசம் ஒப்படைப்பதுதான்'' என அம்பலப்படுத்துகிறது.

மோடி, தனது மாநில விவசாயிகள் கார் வைத்திருப்பதாகச் சொன்னதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போன மலாக்நெஸ் கிராம விவசாயிகள், தங்கள் தேய்ந்து பிய்ந்து போன செருப்புகளைப் பத்திரிக்கையாளர்களிடம் காட்டி, ""நல்ல செருப்பு வாங்கவே வக்கற்ற நிலையில் இருக்கும் நாங்கள் காருக்கு எங்கே போவது? முடிந்தால் இந்தச் செருப்புகளை மோடிக்கு அனுப்புங்கள். அவரிடமே கார் வைத்திருக்கும் விவசாயியைக் காட்டச் சொல்லுங்கள்'' என்கிறார்கள்.

இந்துக்களின் ராஜ்ஜியம் என மோடியின் அரசைப் பாராட்டி மகிழ்கிறார்கள் இந்து வெறியர்கள். ஆனால், மோடியின் விவசாய விரோத கொள்கைகளால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் "இந்துக்கள்'தான் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, முஸ்லிம், கிறிஸ்துவ விரோத அரசு மட்டுமல்ல. அது ஏழை "இந்து' விவசாயிகளுக்கும் எதிரான அரசுதான். ஆனால், முதலாளித்துவ பத்திரிக்கைகள் அனைத்தும், அம்மாநில அரசு போலி என்கவுண்டர் (போலி மோதல்)களை மூடி மறைப்பதைப் போலவே, கணினிமயமாக்கிய "ஹைடெக்' முதல்வர் எனும் முகமூடியை மோடிக்கு அணிவித்து, நாட்டு மக்களை ஏய்த்து வருகின்றன.

·கவி

Monday, August 13, 2007

மதங்களும் பெண்ணும்

சமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு வழிபாடு வரை ஏற்றத்தாழ்வான ஆணாதிக்க வடிவத்தைக் கொண்டு கடவுள்கள் புனர் உற்பத்தி செய்யப்பட்டன. பெண் தெய்வங்கள் மனிதச் சமுதாயம் போல், ஆண் தெய்வங்களின் மனைவிமாராக மாற்றப்பட்டனர் அல்லது உறவுமுறை ஏற்படுத்தப்பட்டு ஆண் - பெண் உறவு வழியில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.

இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் (இங்கு பால் ரீதியில் ஆண் பெண் பிரிந்த உயிரியல் தொகுதியில்) பெண்கள் மறு உற்பத்தியில் விதிவிலக்கின்றி அனைத்து உயிரினங்களும் ஈடுபடுவது எதார்த்தமான உயிரியல் விதியாக இருக்கின்றது. ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களும் உலகத்தைப் படைத்தது முதல் உயிரினங்களைப் படைத்தது வரை ஆண் கடவுள்கள் என்பதில் முரண்பாடின்றிக் கூறும்போது, ஆணாதிக்க அமைப்பின் இடைச் செருகல் திட்டவட்டமாக இயற்கைக்கு எதிராக அம்பலமாகின்றது. ஆணாதிக்கச் சமுதாயத்தின் ஆணாதிக்க விளைவுகளே இன்றுள்ள மதங்கள் என்பது இதைத் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. பெண் தெய்வங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஆணின் வைப்பாட்டியாக அல்லது அவர்களின் தயவில் வாழும் வகையில் மதங்கள் புனைந்து உருவாக்கிய அனைத்துமே, ஆணாதிக்க மதமாக வக்கரித்து இருக்கின்றன. இந்தப் படைப்புகள் அனைத்தும் இயற்கைக்குப் புறம்பான வகையில் உருவானதாக இருப்பது ஆணாதிக்க வக்கிரம்தான்.

இயற்கையான பெண்ணின் படைப்பாற்றலை ஆணின் கைக்கு மாற்றி உருவாக்கிய அனைத்து மதப்பண்பாடுகளும் விதிகளும் விதிவிலக்கின்றி, ஆணாதிக்கத்தின் வக்கிரத்தால் வீங்கிப்போயுள்ளது. மறுஉற்பத்தியை இயற்கை சார்ந்து எப்படி ஆண் ஈடுபடுவது சாத்தியம் என்ற அடிப்படையான கேள்வியே, மதத்தின் ஆணாதிக்கக் கற்பனைகளைத் தகர்க்கப்போதுமானது.

நான் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், பவுத்தம் என்ற நான்கு மதங்களையும் ஆய்வுக்கு எடுத்து, அதன் ஆணாதிக்கத் தன்மையை அம்பலப்படுத்த முனைகின்றேன். மற்றைய மதங்கள் இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஆனால் மற்றைய மதங்களின் நூல்கள் தமிழில் எனக்குக் கிடைக்காமையால் அதைச் செய்யமுடியவில்லை. ஆனால் அவைகளில் ஆணாதிக்கம் மேன்மையாகவோ, குறைவாகவோ இன்றி அம்மதங்களும் ஆணாதிக்கத் தன்மையால் புரையோடிப்போயுள்ளது. சமுதாயம் ஆணாதிக்க வடிவில் இறுகிப் போயுள்ளதால், அதில் இருந்து உருவான இன்றைய எந்த மதமும் விதிவிலக்கற்றவை. நாம் தொடர்ந்து தனித்தனியாக நான்கு மதத்தையும் ஆராய்வோம்.

ஆணாதிக்கக் கிறிஸ்தவ மதமும் பெண்ணும்

இயேசுவின் படுகொலைக்குப் பின்னணியாக உள்ள வரலாறு அக்காலத்துக்குரிய வர்க்கப்போராட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. ஏழை மக்களின் துயரங்களைப் போக்க, புதிய மதத் தத்துவங்கள் ஊடாகப் போராடியபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். இவரைப் பின்பற்றி ஏழைகளின் மதமாக வளர்ச்சி பெற்ற கிறிஸ்தவ வரலாற்றில், எல்லா முற்போக்குச் செயலையும் சுரண்டும் வர்க்கம் உள்வாங்கி, அதன் உயிராற்றலை அழிப்பது போல், இயேசுவின் வர்க்க அடிப்படை உள்ளடக்கத்தைச் சிதைத்தனர். பைபிள், இயேசுவின் சீர்திருத்தத்துக்கு உட்பட்ட ஆணாதிக்கக் கூற்றுகளையும், சுரண்டும் வர்க்கம் சார்ந்து இயேசுவால் மெருகூட்டப்பட்டதுதான். இதையே இயேசு தந்தார் என்ற பைபிள் எடுகோள், முரண்பாட்டுடன் பலவாக உள்ள நிலையில் இன்றைய நிலைக்கு ஏற்ப நீக்கியும், சேர்த்தும் மறுவாசிப்பு செய்தும் நியாயப்படுத்துவதும் நிகழ்வாக உள்ளது.

இந்தவகையில் பைபிள் பெண்ணை, ஆணாதிக்க வழியில் அடிமைப்படுத்தி நியாயப்படுத்தியது. இயேசுவிடம் இருந்த ஆணாதிக்கத்தில் இருந்து பெண்ணுக்குச் சில சலுகைகளை, அவரின் முற்போக்கான போராட்டத்தில் சீர்திருத்தத்தினூடாக ஆணாதிக்க எல்லைக்குள் வழங்க முற்பட்ட போதும், ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்ட விரும்பவில்லை. இந்தவகையில் பைபிள் ஆணாதிக்கத்தின் ஒத்த முகமாகவே உள்ளது. என்னதான் இன்று அதைமூடிமறைக்க மறுவாசிப்பை மதங்கள் முதல் பின் நவீனத்துவ ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளர்கள் முயல்கின்ற நிலையில், கிறிஸ்தவ ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தித் தோல் உரிப்பது அவசியமாகின்றது.

உலகில் தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியில் சீர்திருத்தங்கள், அதையொட்டிய கோட்பாடுகள் மதங்களாகித் தனிச்சொத்துரிமையின் வாரிசுகளாகின. கிறிஸ்தவ மதம் ஏழைகளின் நம்பிக்கை ஒளியாக, அவர்களின் துயரத்தைக் கிறிஸ்துவின் பரலோகத்தில் விடுதலையாகக் கண்டது. ஆனால் மக்களின் இந்த நம்பிக்கையை ஆளும் வர்க்கங்கள் உள்வாங்கி மதமாக மாற்றியபோது, அதுவே அவர்களை அடக்கும் புதிய வடிவமாகியது. இது சமுதாயத்தின் ஆணாதிக்கத்தைத் தனது உள்ளடக்கமாக்கியது. இம்மதத்தின் பல்வேறு முரண்பட்ட மதப்பிரிவுகள் பெண்ணுக்கு ஒழுக்கத்தைப் புகட்டியது பெண்ணை இழிவாக்கியது பெண்ணை அடிமையாக்கியது.

பெண்பற்றிய இழிவில் இருந்தே திருமண மறுப்பு கிறிஸ்தவத்தில் பிரதானமான ஒருவடிவமாகியது. கிறிஸ்தவக் குருமார் திருமணம் செய்யக் கூடாது என்ற கோட்பாடே ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டதுளூ பெண் எதிர்ப்பில் உருவானதே. இதில் இருந்து பெண் குருமார் என்ற பேச்சே மறுக்கப்பட்டது. குருமார் ஓரினச் சேர்க்கையிலும், கள்ளத்தனமான பாலியல் நடத்தையிலும் ஒரு விகாரத்தனமான ஜந்துவாக (பாம்பு) வளர்ச்சி பெற்றனர். ஆனால் இன்று கிறிஸ்தவ வக்கிரத்தை மறுத்துக் குருமார்கள் திருமணம் செய்வதும், அதைவிட்டு விலகிச்சென்று சாதாரண வாழ்க்கை வாழ்வதும் அதிகரித்துச் செல்லுகின்றது.

பிரேஸிலில்; நடந்த திருமணமான குருமார் சங்கத்தின் நான்காவது மகாநாட்டு அறிக்கையின்படி, உலகில் ஒரு இலட்சம் குருமார்கள் மதத்தின் ஆணாதிக்கக் கடமையில் இருந்து விலகிச் சென்று திருமணம் செய்துள்ளனர். தற்போது ஐந்து குருமாருக்கு ஒருவர் திருமணம் செய்கின்றனர். பிரேஸிலில் மட்டும் 3500 திருமணம் செய்த குருமார் காணப்படுகின்றனர். அமெரிக்காவில் மட்டும் 1982 இல் இருந்து 400 கிறிஸ்தவக் குருமார் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினர். அதேநேரம் 2500 குருமார் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் தொல்லைக்குள்ளாக்கினர். இனி நாம் பைபிளின் வழியில் அவர்களின் ஆணாதிக்கப் பெண் எதிர்ப்பு கூற்றில் இருந்து இவைகளைப் பார்ப்போம்.

கிறிஸ்தவத்தின் பழைய, மற்றும் புதிய பைபிளில் எபே 5.22 இல், "மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்."14 எபே 5.23 இல், "கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்."14 எபே 5.24 இல், "ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்."14 எபே. 5.33 இல், "...மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவது"14 என்று கிறிஸ்தவம் பெண்ணைப் பக்தியின் பின்னால் கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாகக் கோருவதன் மூலம், தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்கக் கோருகின்றது. ஏன் பெண் ஆணுக்குக் கீழ்படிந்து, மதித்து, பயபக்தியாகப் பெண் நடந்து கொள்ள வேண்டும்? இதைப் பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது? இது, இருக்கும் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமைக்குள், ஆணாதிக்கத்தைப் பிரதிபலித்தே கிறிஸ்தவ மதம் உருவாகியதைக்; காட்டுகின்றது.

ஆணாதிக்க எதார்த்தம் மீது, கற்பனையான கடவுள் என்ற கருத்துமுதல்வாதக் கோட்பாட்டால் இறுக்கியதன் மூலம், பொருள்முதல்வாத எதார்த்தமாகிய பெண்ணின் போராட்டத்தை மட்டுப்படுத்தமுடிந்தது, சிதைக்க முடிந்தது. கடவுளின் பெயரில் பெண்ணை அடங்கி நடக்கக் கோரியதன் மூலம், பெண்ணின் போராட்டத்தைப் பக்தியாக்கி ஆணாதிக்க வன்முறையைச் சீர்திருத்தமுடிந்தது. கடவுளின் பெயரில் நம்பிக்கையை உருவாக்கி, பெண்ணை அடிமையாக இயல்பில் வளர்த்தெடுத்ததன் மூலம், ஆணாதிக்க வன்முறை மட்டுப்படுத்தப்பட்டது. இந்தப் பக்தியை, நம்பிக்கையை, அடிமைத்தனத்தை மீறும்போது கொடூரமான ஒழுக்க மீறலாகச் சித்தரித்து வன்முறையை ஏவியது.

ஆண் - பெண் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழ்வதை மறுத்த மதம், பெண்ணை ஆணுக்கு அடங்கி சேவகம் செய்யும்படி நிர்ப்பந்தித்தது. தலைவனின் ஆணாதிக்கத்தை மதித்து, கீழ்ப்படிந்து, பயபக்தியாக அடங்கி நடக்கக் கோருவதே கிறிஸ்தவச் செய்தியாகும். கடவுளுக்கு ஒருவன் எப்படி அடிமையாகப் பயத்தால் தனது நலன் கோரி வழிபடுகின்றானோ, அதேபோல் பெண் கணவனிடம் பயத்தால், அதிகாரப் படிநிலையைச் சொத்துரிமையால் மதிக்கின்றாளோ, அதைக் கடவுளின் சித்தமாக்குவதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றாள். பெண்ணின் உடல், அவளின் செயல்கள் எல்லாம் ஆணுக்கு உட்பட்டவையே, அதை மீறுவது குற்றமாக உள்ளது. ஆணை மேவிய செயல், வார்த்தை, கோரிக்கை கிறிஸ்தவத்துக்கு எதிரானது. அதாவது, இன்று மனிதர்களின் ஜனநாயகம் பற்றிய பார்வையில் பெண் தனது ஜனநாயகத்தைக் கோரும் வரலாற்றில், பைபிள் படிப்பு ஊடாக முரண்பட்ட அனைத்து பழைய, புதிய மதப்பிரிவுகள் கோருவதும், பைபிள் ஆணாதிக்க விளக்கத்தைக் கட்டிக்காப்பதற்கே.

தொடர்ந்தும் தீத்து 2.4 இல், "தேவ வசனம், தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும் தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்;. (கணவனிடம் எல்லா வேளைகளிலும் அன்பு காட்ட வேண்டும்.)15"14 நீதி 31.22.25 இல், "... மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு. அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது, வருங்காலத்தைப்பற்றியும் மகிழ்கிறாள். (உங்களை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்வதுடன் மலர்ந்த முகத்துடனும் காணப்பட வேண்டும்.")15"14 நீதி 31.26 இல், "தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின் மேல் இருக்கிறது. (பேசும்பொழுது ஞானமாகத் தயைபொருந்திய வார்த்தைகளைப் பேச வேண்டும்)"15"14

தீத்து 2.5 இல், "தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு."15 நீதி. 31.15 இல், "இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து.... (கணவனுக்குப் பிடித்தமான உணவை உரிய நேரத்தில் பரிமாற வேண்டும்")15"14 எபே 4.26 நீதி. 15.1 இல், "ஒருவரோடொருவர் கோபத்துடன் படுக்கைக்குச் செல்லாதீர்"15 என்று கர்த்தரின் பெயரில் கிறிஸ்தவ மதப்பிரிவு பெண்ணைக் கோருகின்றது. கணவனின் சந்தோசத்தைப் பெண் பூர்த்தி செய்ய வேண்டும்;. ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய அழகாகவும், சுத்தமாகவும், மலர்ந்த முகத்துடன் இருப்பதுடன், படுக்கைக்குப் போகும்போது கோபத்துடன் செல்லக் கூடாது எனக் கோருகின்றது. அதாவது பெண்ணின் கடமை ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதில் சார்ந்து உள்ளது என்பதைக் கோருகின்றது. அத்துடன் சுறுசுறுப்பாக வீட்டில் தரித்து, வீட்டைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரித்து, கணவனுக்குப் பிடித்தமான உணவைப் பரிமாற வேண்டும் என்று பெண்ணின் கடமை - ஒழுக்கத்தை நிர்ப்பந்திக்கின்றது. ஆணுடன் பேசும்போது அடிமை போல் பேசி மகிழக் கோருகின்றது.

பெண் வீட்டை விட்டு ஆணின் கடமையைச் செய்யாது வெளியில் செல்ல முனையாது, கணவனைப் பராமரித்து உணவு தயாரித்துக் கொடுப்பதும், படுக்கையை அலங்கரிப்பதில் கவனம் கொள்ளவும் கிறிஸ்தவ மதப்பிரிவுகள் கோருகின்றன. பெண்ணின் இருப்பிடம் வீடும் அதற்கு உட்பட்ட கடமையுமே பெண்ணின் ஒழுக்கத்தின் மேன்மை என்பதை ஆணாதிக்க மதம் ஒழுக்கமாக்கிக் கண்காணிக்கின்றது. இது மேலும், இந்து மதத்தைப் போல் அவைகளையே அச்சுப்பிசகாது பெண்ணுக்கு நிபந்தனையாக்கி, அடக்கியொடுக்கி ஆள்கின்றது. அத்துடன் பெண் வெளியில் நடமாடுவது கற்பற்ற பெண்ணின் ஒழுக்கம் என்று விதிந்துரைக்கின்றது. அதனால், பெண் வீட்டில் ஆணின் கடமையைப் பூர்த்தி செய்யக் கோருகின்றது.

நீதி. 31.13,15,21,27 இல், "எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருக்க வேண்டும்"15, நீதி. 31.31 இல், "அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள், அவளுடைய செய்கைகள் வாசல்களின் அவளைப் புகக்கடவது"14 என்று கூறுவதன் மூலம் மதம் பெண்ணின் உழைப்பை ஆணுக்கான சேவையாகக் கட்டாயப்படுத்துகின்றது. அதாவது, ஆணுக்குச் சேவை செய்வதைச் சுறுசுறுப்பாகச் செய்யவும், அதற்குப் பரிகாரமாகக் கணவனின் புகழ் உரையூடாகக் கடமையாக்கப்படுகின்றது. வாழ்வின் மீதான ஜனநாயகம், பெண்ணின் கடின உழைப்பைக் கணவனுக்கான சேவையூடாகப் புகழ்ந்து மறுக்கப்படுகின்றது. முதலாளித்துவ அமைப்பு தொழிலாளியைச் சலுகைக்குள்ளும், புகழுக்குள்ளும் அடிமைப்படுத்தி ஏமாற்றிச் சுரண்டுவது போல், பெண்ணின் கடின உழைப்பைப் புகழ்ந்தும், பரிசு கொடுத்தும் கட்டிலில் அவள் உணர்ச்சியைச் சூறையாடியும், ஆணாதிக்கம் கோலோச்சுவதைப் பைபிள் கடவுளின் பெயரில் நியாயப்படுத்துகின்றது.

மத்தேயு 19.8 இல், "அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தின் நிமித்தம் மோசே உங்களுக்கு இடம்கொடுத்தார். ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை"14 என்று கூறியதன் மூலம் ஆணின் விவாகரத்து உரிமையை அங்கீகரித்த அதேநேரம், பெண்ணின் உரிமை மறுக்கப்படுகின்றது. முன்பு இப்படி இருந்ததில்லை என்றதன் மூலம், முன்பு ஆண் - பெண்ணின் இறுக்க மற்ற இணைவு இருந்ததைக் காட்டுகின்றது. அதாவது, இறுக்கமான குடும்ப அமைப்பு இல்லாத நிலையில் விவாகரத்தும் அர்த்தமிழந்து இருந்தது. பின்னால் பெண் தெரிவு செய்த ஒருதாரத் திருமணத்தைப் பெண்ணுக்கு மட்டுமாக ஆண் மாற்றிய போது, ஆண் பலதாரத் திருமணத்தைத் தக்கவைத்த வரலாற்றில், ஆணின் விவகாரத்தைக் கிறிஸ்தவ மதம் ஏற்றுக் கொண்டு பெண்ணுக்கு அதை மறுத்ததை இது காட்டுகின்றது.

ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் மீதான ஆணின் போகத்தை ஊட்டுவதற்கு அதிகாரம், செல்வம் ஆகியன துணைநின்றன. அக்காலத்தில் தாவீது என்பவர் இருவருடையை மனைவிமாரை (1சா.30.5, 2சா11.14-17,27)14 அபகரித்தார். அத்துடன் பல பெண்களை வைத்திருந்ததோடு அவர்களைச் சாகும் வரை விதவைகளாக அடைத்து (1சா20.33)14 வைத்திருந்தான். சாலமோனுக்கோ 700 மனைவியும், 300 மறுமனையாட்டியும் (இரா 11.3)14 இருந்ததைக் கிறிஸ்தவம் நிறுவுகின்றது. இங்கு அப்பெண்களின் பாலியல் தெரிவு ஒருதார மணத்தின் புறவிளைவு என்ன என்பது எமது கேள்வியாகின்றது. அப்பெண்கள் தவிர்க்க முடியாத ஓரினச் சேர்க்கையைத் தெரிந்தெடுத்ததை நிர்ப்பந்தித்தது. இதை மேலும் தூண்ட ஒரு ஆண் பல மனைவியுடன் ஒரே நேரத்தில் கொள்ளும் உறவு, இயல்பில் பெண்களிடையே பாலியல் உறவை இயற்கைக்குப் புறம்பாக ஊக்குவித்தது. ஆண் பலபேருடன் செய்யும் பாலியல் கூத்தும் பெண்ணின் உணர்ச்சி விலங்கிட்ட இந்த இடத்தில்தான், லெஸ்பியன் (ஓரினச் சேர்க்கை) அந்தப் பெண்ணின் தீர்வாகியது. ஆனால் இது ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை மறுப்பதாக இன்று உள்ளது. ஏன்?

முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளர் மீதான காட்டுமிரண்டித்தனமான சுரண்டலால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தன்னியல்பாகச் சிலர் சேர்ந்து உருவாக்கிய கம்யூன்கள் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் எப்படி வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக அராஜகவாதக் கோட்பாடாக மாறியதோ, அதே போல்தான் இதுவும். இன்று பாலியல் ரீதியாக உடலைச் சந்தைப்படுத்தும் கேவலத்தை மறுப்போர், இதற்கு மாறாக, நிர்வாணமாக வாழ்தல் போன்ற கோட்பாட்டை முன்வைத்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடாத செயற்தள எல்லைக்குள் ஆணாதிக்கத்தைத் தக்க வைக்கின்றனரோ, அதேபோல் ஓரினச்சேர்க்கை கோட்பாடுகள் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கின்றன

ஆணுக்குப் பெண் அடிமைப்படுதல், மனைவியல்லாத அடிமைப் பெண்களை அக்காலத்தில் பாலியலுக்குப் பயன்படுத்தியதைப் பைபிள் அங்கீகரிக்கின்றது. ஆதி 16.3 இல், ஆபிரகாமுக்கு ஒரு எகிப்திய பெண் இருந்ததையும் அவள் பெயர் ஆகார் என்பதையும் காட்டுகின்றது. பெண்ணைப் பணத்தின் மூலம் அடிமையாக வாங்குதல் அல்லது யுத்தக் கைதிகள் என்ற எல்லைக்குள் பெண் அடிமைப்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றது. அடிமைப் பெண் மீதான பாலியல் ஆதிக்கம் கொண்டு இருப்பது ஆணாதிக்க எதார்த்தமாகியது. பெண்ணின் நிலை என்பதும் அவள் மீது, பாலியல் அதிகாரமும் சுரண்டல் அதிகாரமும் ஆகும். ஒரு மனைவிக்கே இது பொருந்தும்போது அடிமைப் பெண்ணுக்குக் கற்பனைக்கு அப்பாற்பட்ட கொடுமையாக இருக்கின்றது.

மனிதனின் தோற்றத்தை இந்துமத ரிக் வேதம் 10.86.23 இல், "மனிதஉருவில் மாற்றப்பட்ட இந்த விலா எலும்பாகிய பரசுவை முதல் மனிதனாகிய மனுவின் மகளாகவும், அவள் மூலமாகப் பிள்ளைகளைத் (இருபது பிள்ளைகள்) தோற்றுவித்தான்"16 என்கிறது இந்து மதம். இங்கு தந்தைக்கும் மகளுக்குமான, உறவும், பின் சகோதர - சகோதரிக்கான உறவும் கூட ஏற்கப்பட்டதை மறுக்கவில்லை. இன்றைய ஒழுக்கத்தை விட அன்று கற்பனை புனைவான ரிக்வேதத்தில் நடைமுறையை ஒட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டுகின்றது. அத்துடன் இதில் இருந்து சாதி எப்படித் தோன்றியது என்பது அதன் முரண்பாடாகும்.

இதோடு ஒத்த கிறிஸ்தவ விளக்கத்தைப் பார்ப்போம்;. பைபிளில் ஆதியாகமம் 2.21.22 இல், "கடவுளாகிய யெகோவா, மனுஷனுக்கு அயர்ந்த நித்திரையுண்டாகும்படி செய்யவே அவன் நித்திரையாகிப் போனான். அவர் அவன் விலா எலும்புகளிலொன்றையெடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடிவிட்டார். கடவுளாகிய யெகோவா, மனுஷனிலிருந்தெடுத்த விலா எலும்பை மனுஷியாக அமைத்து உருவாக்கி...."16 என்று குறிப்பிட்டதன் மூலம் இந்து, கிறிஸ்தவப் பெண்பிறப்பு பற்றிய ஒற்றுமையைக் காட்டுகின்றது. அத்துடன் ஆணின் அங்கமாகப் பெண் மாற்றப்பட்டு ஆணின் விலாவுக்குட்பட்டு அடிமையாக்கப்பட்டாள். இதில் அடுத்த உண்மை ஒன்றும் அம்பலமாகின்றது. இந்த ஒத்த பார்வை ஊடாக ஆரியர்கள் வந்தேறு குடிகள் என்பது நிறுவப்படுகின்றது. ஆரியர்கள் ஐரோப்பிய தேசத்தில் இருந்து வந்தேறு குடிகளாக இருந்ததும், கிறிஸ்தவத்துக்கு முன்பே பெண்ணுடன் தொடர்பு படுத்தி விலாஎலும்பு பற்றிய புனைவுகள் இருந்ததை அடிப்படையாகக் கொண்டு, பெண்ணின் பிறப்பை ஒத்த தன்மையில் மதப்பண்பாடாக்க முடிந்ததை நிறுவுகின்றது.
மனிதனது தோற்றம் பற்றிய புனைவுகள் அவர்கள் வாழ்ந்த சமூகக் கண்ணோட்டத்தின் போக்கில், நீண்ட பிளவின் பின்பும், ஒரே மரபைப் பின்பற்றி வேறுபட்டதை மேலும் இது காட்டுகின்றது. பெண்ணைப் பற்றிய புனைவும், அடிமை ஒழுக்கமும் ஒரே வரலாற்றுப் பின்னணியில் இருந்து கிறிஸ்தவ, இந்து மதங்கள் தொடங்கியதைக் காட்டுகின்றது. இதேநேரம் கிறிஸ்துவ மதம் மனிதத் தோற்றத்தை ஆதியாகமம் 2.7 இல், "கடவுளாகிய யெகோவா, மனிதனைத் தரையினின்றெடுத்த மண்ணினால் உருவாக்கி, சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அப்படியே மனுஷன் உயிருள்ள ஆத்துமாவானான்."16 இப்படியே மனித உருவாக்கத்தை மதங்கள் விதிவிலக்கின்றி கற்பனையாக இட்டுக்காட்டின. பரிணாமக் கொள்கை நிறுவப்படுவதற்கு முன் மனிதத் தோற்றம் அறிவியலுக்குப் புதிராகவே இருந்தது. மதத்தின் விளக்கத்தை மீறுவது அபத்தமாக இருந்தது. மீறியபோது மரணதண்டனை பரிசாகக் கிடைத்தது.

அத்துடன் கிறிஸ்தவம் பெண் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். ஆதியாகமம் 3.15 இல், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் விந்துக்கும் அவள் விந்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்."16 எசாயா 54.1.5, கலாத்தியர் 4.26 இல், "... அவனுடைய விந்து அவனை ஆதரிப்பவர்களே என்பதும் தெளிவாய் இருக்கிறது. அந்த ஸ்திரி கடவுளுடைய ஈடற்ற ஆட்சிக்கு மனைவியைப் போன்ற பற்றையும் கீழ்ப்படிதலையும் தவறாமல் காத்து வருகிற கடவுளாகிய.."16 என்று குறிப்பிட்ட பகுதிகள் பெண்ணின் கீழ்நிலைப் பாத்திரத்தைக் கடவுளின் பக்தன் போல், கணவன் மீது பெண் இருக்கக் கோருகின்றது. அதிகாரப் படிநிலைப்படி கடவுளுக்குக் கட்டுப்பட்ட ஆண், ஆணுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட பெண் என்ற போக்கில் கிறிஸ்தவ மதம் ஒழுக்கத்தை நிலை நிறுத்தியது. அத்துடன் ஆணுக்குப் பெண்ணை எதிரிடையாகக் காட்டுவதும், ஆணின் விந்தை எதிர்த்தன்மையில் விளக்குவதும் ஆண் பெண்ணின் ஒருமித்த, சமமான வாழ்க்கையைப் பிளவினூடாக மறுக்கின்றது. ஆண் பெண்ணின் தலையைக் கீழ் நசுக்க, பெண் காலைக் கட்டிப்பிடித்து வாழ வேண்டுகின்றது. பெண் ஆணின் காலில் நசுங்கியிருக்க, ஆண் பெண்ணின் தலையை நசுக்க, பகையையும் முரண்பாட்டையும் பாலியல் விந்து (விந்து தற்போது பைபிளின் மறுவாசிப்பூடாகச் சேர்க்கப்பட்ட பதம். இது கண்டுபிடித்தே 150 வருடம்தான் ஆகின்றது.) வேறுபாட்டின் மூலம் நியாயப்படுத்தப்படுகின்றது.

ஆதி-3.16, 2 நாளா 13.21, 1இரா 1.1.3-15, சாமு 20.3 இல், ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்யப் பிறந்தவர்கள். பெண்கள் ஆணுக்கு அடிமை என்ற விளக்கத்தைப் பைபிள் தருகின்றது. ஆணாதிக்கம் பெண்ணின் அடிமைத்தனத்தில் அதிகாரத்தை நிறுவியதை இது காட்டுகின்றது. இது அன்று பைபிளில் இருந்து இன்றுவரையும் இதுவே போக்காக உள்ளது.

"நீ உன் கணவனோடேயன்றி வேறு ஆடவனோடு படுத்து தீட்டுப்பட்டிருந்தாயின் இந்தச் சாபமெல்லாம் என்மேல் வரும். சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னை எல்லோருடைய சாபங்களுக்கும் உள்ளாகச் செய்வாராக. அவர் உன் கால்கள் அழுகிப்போகவும், உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக. சபிக்கப்பட்ட தண்ணீர் உன்வயிற்றில் விழவே உன் கருப்பை வீங்கவும், உன் தொடைகள் அழுகவும் கடவன"(இலக்கம் -165)17 பைபிள் பக்கம் 145-இல், 20, 21-ஆம் வரிகள் இப்படி கூறுகின்றது. தனிச் சொத்துரிமை பாலியல் உறவை இப்படித்தான் ஒழுங்கமைத்தது. பெண்கள் மீது கடுமையான ஒழுக்கக் கோவையை விதிந்துரைத்தது. அன்று கிறிஸ்தவ மதம் இதற்காகப் பெண்களைச் சிலுவையில் அறைந்து, நெருப்பில் இட்டது.

ஆனால் கிறிஸ்தவ மதம் உருவாகி, வளர்ச்சி பெற்ற நாடுகளில,; இன்று பெண்கள் இதை மீறியபோது, எந்தச் சாபமும் பெண்களைச் சபித்து அழித்துவிடவில்லை. வக்கிரம் பிடித்த கிறிஸ்தவம் அன்று மக்களைக் கவர்ந்து கொள்ள, பாடகர்களைத் தமது சொந்தப் பாலியல் வக்கிரத்தில் இருந்து உருவாக்கியது. ஆண் பாடகர்களை நலமடித்ததன் மூலம் சிறந்த பாடகராக மாற்றி, கிறிஸ்தவச் சிந்தனைகளை உலகமயமாக்கி, உலகைத் தமது பொருளாதாரச் சூறையாடலுக்குள்ளாக்கினர். மனித அறநெறிகளை எல்லாம் கைவிட்டு உருவாக்கப்பட்ட ஒழுக்கம், ஆணாதிக்க மலட்டுத் தனத்தில் கோலோச்சியது. பெண்களின் இயற்கை உணர்வுகளை நலமடித்து, அதில் சபிக்கப்பட்ட பெண்கள், ஆண்களின் வரலாறு ஆணாதிக்க ஒழுக்கத்துக்கு எதிரானவை.

இந்தப் பைபிள் சாதிக் கட்டமைப்பைத் தனது சமூகத்துக்குள் கொண்டு திருமணத்தைக் கட்டுப்படுத்தியது. இதை நாம் எஸ் 10, நெ.13.23-31, சக 14.21, யோ 4.9-8.48 இல், காணமுடியும். புறச்சாதிப் பெண்களைத் திருமணம் செய்வது கர்த்தருக்கு விரோதமானது என்றும், புறச்சாதி மனைவிமாரை விவாகரத்து செய்வதே கர்த்தரின் அருள் பெற உதவும் நற்காரியம் என்றும் விதிந்துரைக்கின்றது. இந்தியப் பார்ப்பனிய இந்து மதத்தில் வளர்ச்சி பெற்ற சாதி வடிவத்திலான பெண்ணுக்கான திருமணத்தடை, கிறிஸ்தவச் சமூகத்தில் சாதிக்குப் பின்னால் சாதியாக வளர்ச்சி பெறவில்லை. எல்லாநாடுகளிலும் இருந்த உழைப்பு பிரிவினையையும், மக்கள் கூட்டங்களிடையே நிலவிய பிளவூடான திருமணத் தடையையும், கிறிஸ்தவப் பைபிள் பின்பற்றி, பெண்களின் பாலியல் தெரிவை மட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றது.

அன்று ஆண்கள் பெண்களுடன் கதைப்பதே இழிவானதென்று ஆணாதிக்கச் சமுதாயத்தால் கருதப்பட்டது. அரு 4.27 இல், இயேசு "ஒரு பெண்ணோடு பேசுவதைக் கண்டு அவருடைய சீடர்கள் வியப்படைந்தனர்"14 என்கின்ற கூற்றில் பெண்ணுடன் பேசுவது ஆண்களால் தவிர்க்கப்பட்டது. அது கேவலமாக, சமூகக் குற்றமாக இருந்தது என்பதையும் வேறு காட்டுகின்றது. ஆண் பெண்ணின் பிளவு எந்தளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையும் இது காட்டுகின்றது. இது இன்றளவில் கூட பல வேறுபட்ட மட்டத்தில் நீடிக்கின்றது. பாலியல் பற்றி அறிந்து கொள்ளல் பால்வேறுபாட்டில் சாத்தியமில்லை. அதன் மொழி கூட பிளவுபட்டு, ஆணாதிக்க எல்லைக்குள் மட்டும் சாத்தியமாகின்றபோது, அதன் அதிர்வுக்குள்; அவர்களுக்கிடையான உறவுகளாகப் பரிணாமிக்கும் சந்தர்ப்பத்தைப் பிளவு தீவிரமாக்கியது. இயேசு போன்றோர் புதிய உபதேசத்தை வழங்கும்போது, பெண்ணுக்குச் சலுகை கொடுப்பது அவசியமாகின்றது. இது இன்றும் புரட்சிகளின் போது பெண்ணின் பங்குபற்றுதலை உறுதி செய்ய வழங்கும் சலுகைக்குள், பெண்ணின் உரிமை பற்றியும், விடுதலை பற்றியும் உறுதி வழங்கப்படுகின்றது. சமணத்துக்கு எதிரான இந்து மதப் போராட்டத்திலும் பெண்கள் நாயன்மாராக உயர்த்தப்பட்டனர். இப்படியே பெண்கள் யாழ் கிடுகுவேலிக்கு வெளியில் வந்து புலிகளுக்காக ஆயுதமேந்துகின்றனர். இப்படி உலகு எங்கும் பல வரலாறுகள் நீண்டு கிடக்கின்றது.

கணவனை இழக்கும் விதவைத்தனத்தைப் பெண்ணின் இழிவாகவே கிறிஸ்தவம் கருதியது. ரூத் 1.20-21.., இசை 54.4, 1.23,10.2, சங் 24.6,யோபு 22.9,24.3 இல், எபிபோ மரபுப்படி கணவனை இழந்தவள் இழிவாக்கப்படடாள். இஸ்ரேலியர் தமது விதவைப் பெண்களை இழிவாக நடத்தியதுடன், கணவனின் பாவத்தில் கலந்தவளாகக் கருதப்பட்டாள். பெண்கள் மீதான ஒருதார மணத்தை, அதன் எல்லையில் இறுகிய வடிவில் கட்டமைக்க ஆண் அற்ற அனைத்து வாழ்விலும் பெண்ணின் சுதந்திரம் மறுப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெண்ணின் சுதந்திரம் ஆணுக்கு உட்பட்டதே. ஆண் பெண்ணின் சுதந்திரத்தை எந்த எல்லைக்குள் கையாள்வது என்பதைக் கடந்தகாலச் சமய ஒழுக்கங்கள் தீர்மானித்துச் சமூகமயமாக்கின. ஆண் அற்ற வாழ்வு பெண்ணுக்குச் சாத்தியமற்றதாக மாறியது. விதவை ஆணின் கட்டுப்பாட்டுக்குள், அதன் எல்லைக்குள் வாழ்வது நிபந்தனையானது. இந்து தர்மம் விதவையை உடன்கட்டையின் மூலம் எரித்தது. கிறிஸ்தவத் தர்மம் பெண்ணின் பாலியலைக் கட்டுப்படுத்தியது. பெண் மீறும் போது சிலுவையில் அறைந்து, நெருப்பிட்டு உயிருடன் கொளுத்தியது.

ஆதி 38.14-19-இல், விதவையின் உடுப்பைக் கட்டுப்படுத்தியது. விதவைக்குரிய உடையை உடுக்கக் கோரியது. அத்துடன் அப்பெண், பணம் படைத்த அதிகார வர்க்கத்தால், பல துன்பத்தைச் (பாலியல் ரீதியாகவும்) சந்தித்திருப்பதையும் அறியமுடிகின்றது. பெண்ணின் சாதாரண உடுப்பு பெண்ணின் பாலியல் மீதானதாக அடையாளப்படுத்தி, ஆணாதிக்கம் விதவையின் பாலியலைக் கட்டுப்படுத்த உடுப்பில் தரம் தாழ்த்தியது. இதையே இந்து தர்மமும் செய்தது. இன்று ஏகாதிபத்தியப் பெண்ணை உடையூடாக அழகுபடுத்தும்போதும் பாலியலை மையமாக வைத்தே நுகர்வுச் சந்தையை விரிவாக்குகின்றது. பெண்கள் தன்னை அழகுபடுத்தும் போதும் இந்தப் பண்பாட்டு எல்லைக்குள்தான் தனது சுதந்திரத்தைப் பற்றிய பிரமையுடன், விபச்சார எல்லைக்குள் தகவமைக்கின்றனர்.

பைபிளின் உள்ளடக்கத்தில் எவை எல்லாம் ஜனநாயக விரோதமானவை என்று இன்றைய சமூகம் கருதுமோ அவை எல்லாம் நீக்கப்பட்டு அல்லது அவை மறுவாசிப்பின் பின் மறைக்கப்பட்டே, புதிய வகையில்தான் விளக்கம் மட்டும் இன்றி பைபிளின் உள்ளடக்கமே எமக்குக் கிடைக்கின்றது. இதற்கு அப்பால் பழைய பைபிள், ஆய்வுகள், தமிழில் எமக்குக் கிடைக்கவில்லை. இருப்பதை மட்டும் கொண்டு இந்த ஆணாதிக்கத்தைப் பார்க்க முடிகின்றது. இதுவே இப்படி இருக்கும் போது முழுமையில் அதன் ஆணாதிக்கத்தையும், அதன் கொடூரத்தையும் புரிந்து கொள்ள முடியும்;. உலகைச் சூறையாடிய வெள்ளை ஆதிக்க இனத்தவர்களின் மதமாகக் கிறிஸ்தவம் இருந்தால், கிறிஸ்தவ மதத் தலைமை வழிகாட்டால் ஊடாகவே ஆக்கிரமிப்புகள் நடந்தால், இதன் கொடூரங்கள் எல்லையில்லாத ஆதிக்கவாதமாக இருந்தது. இது தனது ஒழுக்கத்தை உலக ஒழுக்கமாக்க வன்முறையை ஆதாரமாகக் கொண்டு தனது அதிகார நுகத்தடியில் ஆட்டம் போட்டது. இது ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களைச் சிலுவையில் தீ வைத்துக் கொளுத்தியது.

பைபிளில் எசாயா 47.1,2,3,5,6,..... இல், "பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காருளூ கல்தேயரின் குமாரத்தியே தரையிலே உட்காருளூ உனக்குச் சிங்காசனமில்லைளூ நீ செருக்குக்காரியும் சுகச்செல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை. எந்திரத்தை எடுத்து மாவரைளூ உன் முக்காட்டை நீக்கிவிடுளூ வெறுங்காலும் அம்மணத் தொடையுமாய் ஆறுகளைக் கடந்து போளூ உன் நிர்வாணம் வெளிப்படும்ளூ உன் இலச்சை காணப்படும்ளூ நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிகட்டுவேன். கல்தேயரின் குமாரத்தியே! நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மௌனமாய் உட்காருளூ இனி நீ இராஜ்ஜியங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை. நான் என் ஜனத்தின்மேல் கடும் கோபமடைந்து, என் சுதந்திரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம் வையாமல் முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி, என்றைக்கும் நாயகியாய் இருப்பேன் என்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதன் முடிவை நினையாமலும் போனாய். இப்பொழுது சுகச்செல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே! நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்கிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள். சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடுதியாக ஒரே நாளில் வரும்;. உன் திரளான சூனியங்களின் நிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளின் நிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்;. உன் துன்மார்க்கத்தில் நீ திட நம்பிக்கையாயிருந்து, என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது....."

இவ்வாறு வக்கிரமாகப் பெண்ணைத் திட்டிச் சாபம் இட்டு, தொடரும் இயேசுவின் ஆணாதிக்கம், பெண் என்பதற்காகப் பெண்ணை அதிகாரத்தில் இருந்து இறக்கி, அவளை வீட்டில் இருந்து வேலை செய்யக் கோருவது இன்றுவரை கோலோச்சுகின்றது. அத்துடன் அவளை நிர்வாணமாகவும், விபச்சாரியாகவும் அலையக் கோரி இறைவனின் ஆணாதிக்கம் சாபமிடுகிறது. ஆண் விதவையாவதில்லை என்ற அகங்காரத்தின் ஊடாக, பெண் விதவைத் தனத்தைப் பெண்ணின் இழிவாக்கிக், கொச்சைப்படுத்தி நிரந்தரமாக்குகிறது இயேசு பக்தி மார்க்கம். அதிகாரம், ஆணவம், ஆணாதிக்கத் திமிர், பெண் பற்றிய இழிவுக் கண்ணோட்டம் ஆகியவற்றை இதன் மூலம் இயேசு வெளிப்படுத்துகின்றார்.

இயேசுவும், அவரின் பைபிளும் பெண்ணை மிகக் கேவலமாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி, பெண்ணைக் கற்பழிக்கவும், கடத்தி பங்கிட்டுக் கொள்ளவும் பின் நிற்கவில்லை. இதை எப்படி கர்த்தரும் பைபிளும் செய்கின்றன என்பதைப் பார்ப்போம். எண் 31.32-40 இல், "படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறு இலட்சத்து எழுபத்தையாயிரம் (6,75,000) ஆடுகள். எழுபத்தீராயிரம் (72,000) மாடுகள், அறுபத்தோராயிரம் (61,000) கழுதைகளும் மீதியாயிருந்தன. புருஷ யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம் (32,000) பேர் இருந்தார்கள். யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்று இலட்சத்து முப்பத்துதேழாயிரத்து ஐந்நூறு (3,37,500). இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்தைந்து......."14 ஐஐ சாமு 12.11 இல், "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்"14 என்று இயேசு பிரகடனம் செய்கின்றார்.

இந்த வசனங்களின் பின் பல இன்று மறைக்கப்பட்டு, வெட்டித் திருத்தப்பட்ட நிலையிலும், இதுவே ஆணாதிக்க இயேசுவின் ஆணாதிக்க வன்முறையைக் காட்டுகின்றது. இன்று இவைகளை விமர்சிப்பதற்குப் பதில் மறுவாசிப்பு ஊடாக நியாயப்படுத்தும் ஏகாதிபத்தியத் தத்துவவியல்களை மீறியும் இது அம்பலப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. இன்று பல மறுவாசிப்புகள் எல்லாம் பைபிளைப் பெண்ணியலாகக் காட்டுமாறும், ஆணாதிக்கத்தை மூடிமறைக்குமாறும் பிரச்சாரத்தைக் கட்டமைக்கின்றனர். இயேசுவும், பைபிளும் யுத்தத்தில் மக்களிடமிருந்து பொருட்களை முழுமையாகக் கொள்ளை அடித்ததுடன், கன்னிப் பெண்களைக் கடத்தி வந்தனர். பெண்கள் ஆணின் சொந்தச் சொத்துவடிவில் இருந்ததாலும், கருதியதாலும், பொருட்களைப் போல் பெண்களைக் கொள்ளையடித்தனர். பின் அவைகளைப் பங்கிட்டதுடன் கர்த்தருக்குரிய பங்கும் வழங்கப்பட்டது. பெண்களைப் பிரித்துப் பங்கிட்டுக் கொண்டனர். இந்தப் பெண்கள் மீது கிறிஸ்தவ மதமும், இயேசுவும் அவர் சீடர்களும், செய்தி சொல்வோரும், அதைப் பாதுகாப்போரும் கற்பழிப்பை விதிவிலக்கின்றி நடத்தினர். இதைப் பைபிள் ஆணாதிக்க ஒழுக்க முறையூடாக நியாயப்படுத்துகின்றது. பெண்கள் யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதும், கற்பழிக்கப்பட்டதும் கிறிஸ்தவ அறநெறியாக இயேசு ஏற்றுக் கடைப்பிடித்துடன், தானும் அதில் பங்கு பெற்று அனுபவித்தார். கிறிஸ்தவமும் இந்தக் கொள்கைகளை, ஆணாதிக்கத் திமிர் ஊடாகவே, வன்முறையூடாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

இதன் சட்ட ஒழுங்கு ஆணாதிக்கத் திமிரில் எழுந்தது. ஒருவன் குற்றம் சாட்டப்பட்டால் அவன் மனைவி, பெண் குழந்தைகளைக் கைப்பற்றி கற்பழிக்க கர்த்தர் முன்நின்று ஏவுவதுடன் அதைக் கண்காணிக்கவும் பின்நிற்கவில்லை. இந்தவகையில் கைப்பற்றிய அப்பாவிப் பெண்கள் மீதான கற்பழிப்பைச் சூரிய வெளிச்சத்தில், பட்டப்பகலில், இயேசு முன்நிலையில் பலர் பார்க்க நடத்தினர். இது கிறிஸ்தவத்துக்கு மட்டுமல்ல. திருஞானசம்பந்தர் சமணப் பெண்களைக் கற்பழிக்கக் கோரி இறைவனின் பெயரில் தேவாரம் பாடினார். "பெண்ணகத்து எழில் அரசாக்கியப் பேய் அமன் தென்னற் கற்பழிக்கத் திருவுள்ளமே"18 என்று கோரி, சமணப் பெண்களை இந்து சமயப் போராட்டத்தில் தலைமை தாங்கிக் கற்பழித்தார். இது முஸ்லிம் மதத்திலும் நபிகளின் அனுமதியுடன் நடந்துள்ளதைத் திருக்குர்ஆன் நியாயப் படுத்தியுள்ளது.

மதங்கள் பெண்ணை இழிவாகக் கருதி, அவர்களை ஆண் கைப்பற்றி அனுபவிக்க, கற்பழிக்க பின்நின்றதில்லை. இதை அதன் தத்துவார்த்த நூல்கள் அங்கீகரித்ததுடன், இதன் மேய்ப்பாளர்கள், கடவுளின் அவதாரத்தின் பின் வாழ்ந்தவர்கள் அனுபவித்து சுகம் கண்ட ஆணாதிக்கவாதிகளே. இவர்கள் எப்போதும் பெண்ணைப் பெண்ணாக மதித்ததில்லை. தமது ஆணாதிக்கப் பாலியல் வெறிக்குப் பெண்ணைப் பலியாக்கியவர்கள். இவர்கள் போதித்த தத்துவங்களின் பின்னால் பெண்களின் இரத்தக் கண்ணீரைச் சுவைத்தவர்கள். இதை நாம் எதிர்த்து அம்பலப்படுத்தி அதன் அனைத்து செயல்தள வடிவங்களையும் களத்தில் தகர்க்காத வரை அது ஆணாதிக்கச் சகாப்தமாகவே நீடிக்கும்.

Sunday, August 12, 2007

பெண் எப்படி அடிமையானாள்?

பெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும், முதல் வர்க்கச் சுரண்டலும் பெண்ணுக்கு எதிராக ஏற்பட்டது. அந்த நாள்முதலே பெண்ணின் போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் பெண் - ஆண் சார்ந்த சமுதாயப் போராட்டம் என்பது இயற்கைக்கும், மற்றைய உயிரினத்துடனும் உயிர் வாழ்வதற்கானதாகப் பெண்ணின் தலைமையிலான போராட்டமாக இருந்தது. இதன் பின்னால் குழந்தையின் உயிர் வாழ்தலின் பாதுகாப்பு கருதி, பெண்கள் தமது குழந்தைகளுடன் பாதுகாப்பு இடத்தில் தங்கி தற்காப்பில் நிற்க, பெண் மற்றும் குழந்தைகள் அற்ற ஆண்கள் வேட்டையாடவும் உணவு சேகரிக்கச் சென்ற வரலாற்றில், உணவின் உரிமையையும், உபரியையும் தனதாகக் கண்ட ஆண், அதைப் பெண்ணுக்கு நிபந்தனைக்கு உள்ளாக்கி கொடுக்கத் தொடங்கினான். அத்துடன் வேட்டைக்குச் சென்ற ஆண் தனது பொருளாதார ஆதிக்கத்தாலும், பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரத்தாலும், பெண்ணின் பணிகளை ஆண் வரையறுக்கத் தொடங்கினான்.

வீட்டில் இருந்த பெண், குழந்தை பராமரிப்புக்கு வெளியில் சுற்றுச் சூழலை ஆராயக் கற்றுக் கொண்டு புதிய உணவு ஆதாரங்களைக் கண்டறிந்தாள்;. இதன் மூலம் உணவு சேகரிப்பைப் பெண் தொடங்கிய வரலாற்றில் நீண்ட, மெதுவாக மாறிய பல ஆயிரம் வருடங்கள் ஆண் - பெண் அசமத்துவம் அதிக இடைவெளியின்றி நகர்ந்தது. பின்னால் மனிதச் சமுதாய வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார முன்னேற்றங்கள், ஆணின் உபரியை உருவாக்கவும் பெண்ணைப் பொருளாதார ஆதாரமற்ற ஜடமாகவும் ஆக்கியது. பொருளாதார ஆதிக்கம் உள்ள பிரிவு ஆதிக்கச் சமூகமாகவும், பொருளாதார ஆதிக்கம் அற்ற பிரிவு அண்டி வாழும் பிரிவாகவும் சமுதாய இயக்கம் மாறிச்சென்றது. அதாவது எல்லோரும் தமது உணவைப் போராடிப் பெற்ற மனித வாழ்வுக்கான நிபந்தனைகள், ஆண் - பெண்ணைச் சம மதிப்புள்ள ஜீவனாக, உணவுப் போராட்டச் சமூக அரணாக இருந்தது. கூட்டு வாழ்வு இல்லை என்றால் பெண்ணும் சரி, ஆணும் சரி உயிர் வாழவே முடியாது என்ற இயற்கையின் நியதி, பெண்ணின் குழந்தைப் பிறப்பைக் கூட இயற்கையின் வாழ்வுக்கான ஒரு நிபந்தனையாக இருந்தது.

மனிதன் இயற்கையில் உயிர் வாழ்வதற்கான உணவுப் போராட்டத்தில், கூட்டுச் சமுதாயத்துக்கு வெளியில் தனிநபர்கள் உணவைச் சேகரிக்கவும் மிதமிஞ்சிய உணவைப் பெறுகின்ற உழைப்பாற்றலின் பலம், தனது உற்பத்தி சார்ந்த உபரி மீதான உணவின் உரிமை பற்றிய கோரிக்கையை உருவாக்குகின்றது. இது பலவீனமான பிரிவுகளுக்கு மறுப்பதில் தனது உரிமையைப் பறைசாற்றியது. இது பெண்களின் இனப்பெருக்கம், குழந்தைகளின் பாதுகாப்புக்காக உணவு சேகரிப்பில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட போது, மேலும் பெண்ணினதும் குழந்தையினதும் உணவுக்காக ஆணைச் சார்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டனர்;. ஆணோ தனது உணவு என்ற தனிநபர் சுதந்திர ஜனநாயகவாதத்தை முதன்மைப்படுத்தி, கூட்டுக்கு எதிரான கண்ணோட்டத்தில் அதை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் நிபந்தனைக்கு உட்படுத்தி விநியோகிக்க முற்பட்டான்.

இந்த ஆண் என்ற தனிமனிதனின் உபரி வளர்ச்சி பெற, அதைத் தனது நிபந்தனைக்குட்பட்ட, விரும்பிய பெண்ணுக்குக் கொடுக்க முற்பட்டான். இதன் வளர்ச்சி என்பது குறித்த பெண்ணுடன் அதிகமான ஈடுபாடும், குறித்த பெண் அந்த ஆணைச் சார்ந்து வாழ்வதும் அதிகரித்தது. இந்த நிலையில் ஆண் தனக்குப் பின் உபரியை யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வியில் தனக்கான வாரிசுகளைத் தெரிவு செய்த போக்கில், தனது இரத்தத்தின் நேரடி உரித்தொன்றை (இதை விஞ்ஞான ரீதியாக அல்ல. அனுபவ ரீதியாக ஆண்-பெண்ணின் இணைவு குழந்தையை உற்பத்தி செய்வதைக் காண்கின்றான்.) உருவாக்க விரும்பினான். இதற்காகத் தனது உபரியை நிபந்தனைக்குட்பட்ட வகையில் வழங்கிய போக்கில், ஒரு பெண்ணைத் தனது வாரிசுக்காகச் சொத்தாக்குவது இலகுவாக இருந்தது. இந்தப் பெண்ணின் மீதான ஆதிக்கம், அப்பெண் மூலம் ஆண் பெற்ற குழந்தை வாரிசுகள், ஒருதாரமணக் குடும்பத்தை உருவாக்கியது. இதை இலகுவாக்க பெண் மீதான ஆணின் கொடூரத்தனமான பாலியல் வேட்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள பெண் ஒரு ஆணைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பாக இருந்தது. பெண்ணின் இந்தத் தற்காப்பைச் சாதகமாகப் பயன்படுத்தினான். அதுவும் சமுதாயத்தில் அதிகமான உபரியை உற்பத்தி செய்யும் ஆணின் அதிகாரம் பெண்ணின் உணவையும், பாதுகாப்பையும் வழங்கிய சமுதாயத்தில், பெண்ணை ஆணின் சொத்தாக்குவது இலகுவாக்கியது. இது இயல்பில் ஏற்பட வரலாறு எங்கும், ஆதிக்கப் பொருளாதாரப் பிரிவுகளின் பண்பாடு - கலாச்சாரம் எப்படி நடைமுறையானதோ, அதேபோல் அனைத்து மக்கள் இனத்திலும் ஒருதார மணம் உருவானது. இந்த ஒருதாரமணம் ஆணின் வாரிசை உருவாக்கவும், ஆணைக் கவனித்துக் கொள்ளும் நிபந்தனைக்குள் ஆண் உணவு அளிக்க முன்வந்தான்.

பொருளாதார ஆதிக்கத்தைக் கொண்ட பிரிவுக்கு நலிவுற்ற பிரிவு சேவை செய்வதுபோல் பெண்ணின் சேவை ஆணுக்கு நிபந்தனையாகியது. அடிமைகள் அடிமையுடைமையாளனுக்கு உழைப்பைக் கொடுத்தபோது அங்கு சுதந்திரம் மறுக்கப்பட்டது. ஆனால் உழைப்பைச் சுதந்திரமாக விற்றபோது அவன் நவீன அடிமையாகி, அதே சொத்துடைய வர்க்கத்துக்கே இன்றுவரை சேவை செய்கின்றான். இதுபோல் பெண் ஆரம்பத்தில் நேரடியாக ஆணின் அடிமையாக இருந்தது மாறி, இன்று சுதந்திரம் பெற்ற நவீன அடிமையாக இருக்கின்றாள்;. இந்த உழைப்பு மற்றும் பெண்ணடிமைத்தனம் வழக்கம்போல் போராட்டத்தின் மீதான காட்டிக் கொடுப்புகள், சுதந்திரத்தின் பின்னான நம்பிக்கைகளில்தான் எப்போதும் நிகழ்கின்றது. இதில் இருந்துதான் திரிபுவாதப் பெண்ணியக் கோட்பாடுகள் ஆணாதிக்க வழியில் பெண்ணியக் கோஷத்தில் உதிர்த்தெழுகின்றது.

உழைப்பை இயற்கையின் மீது பயன்படுத்தியபோது உயிர் வாழும் போராட்டத்தில் பெண் இயல்பில் ஆணுடன் பங்கிட்டுக் கொண்ட உணவு என்பது, பொருளாதார வளர்ச்சியால் தனிமனிதன் உபரி உற்பத்தி செய்த போது பெண்ணுக்கு மறுப்பாக மாறியது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம், அறிவியல் கண்டுபிடிப்பிலும் ஏற்படும் பக்கவிளைவு போல் இது பெண்ணை முதலில் அடிமைப்படுத்தியது. பின்னால் இது சுரண்டல் ஊடாக வர்க்கச் சமுதாயத்தை உருவாக்கி, பல கூறுகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆணின் ஆதிக்கம் பண்பாடு - கலாச்சாரப் போக்குகளை, ஆதிக்கப் பொருளாதார வெளிப்பாடுகளை உள்வாங்கிய சமுதாயமாக மாற்றியது.

பெண் தனக்கு மறுக்கப்பட்ட உணவு முதல், ஆண் தனக்கான வாரிசைக் கோரி பெண்ணைப் பாலியல் அடிமையாக்கியது முதல், ஆணின் பாலியல் வேட்கைக்கு எதிராக, நிலைத்து வாழத் தொடங்கிய எல்லா மனித இனத்துக்குள் தொடங்கிய முதல் போராட்ட வடிவமாகும்;. முதல் வர்க்க அடிமைப்படுத்தல் பெண்ணினமாக இருக்க, முதல் வர்க்கப் போராட்டம் பெண்ணினத்தால் நடத்தப்பட்டது. முதல் மனிதனுக்கிடையிலான போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாக இருந்தது. அன்று தொடங்கிய போராட்டம் பெண் நிறுத்திவிட முடியாத வகையில், பெண் பொருளாதாரப் பலமற்றவளாக உள்ளதுடன், நிலவும் ஆணாதிக்கத்துடன் சேர்ந்து பெண் நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்ட ஒரு கவர்ச்சிப் பொருளாக, இந்தச் சமூகப் பொருளாதார, பண்பாட்டு - கலாச்சாரத் தளம் தொடர்கின்றது. பெண்ணின் போராட்டம் ஆரம்பம் முதலே ஒட்டு மொத்த தீர்வுக்குப் பதில் சலுகைகளைப் பெறுவது, தக்க வைப்பது, அதில் இருந்து முன்னேறுவது எனத் தொடங்கியது.

இன்று முதலாளித்துவச் சமூகத்தில் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து, தன்னை இந்த ஆணாதிக்கத்துக்குள் திடப்படுத்தும் போக்கு இயல்பானதாக உள்ளது. ஆணாதிக்கச் சமூகம் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமைத்தனமும் சூறையாடும் போக்கில் இயற்கைக்கு எதிரானதோ, அந்தளவுக்கு ஆணாதிக்கத்துக்குள் பெண் பெறும் போது அச்சலுகைகளும் மிகவும் மோசமானதாக மாறுகின்றது. பெண் எப்படி அடிமையானாள் என்ற கேள்விகள் விட்டுச் செல்லும் தீர்வுகள் பெண்ணை ஆணாதிக்கத்தில் இருந்து மீட்கவும், ஆணை ஆணாதிக்கத்தில் இருந்த இயற்கை சார்ந்த பெண்ணின் நிலைக்கு மேலாகத் தரம் உயர்த்தவும் போராடும், மனித வரலாற்றைக் கற்றுக் கொள்வது மட்டுமே இந்த ஆணாதிக்கத்துக்கு முடிவைக் கட்டும்.