தமிழ் அரங்கம்

Saturday, September 27, 2008

வீர சோழ தப்பாட்டக் குழுவினர்

வீர சோழ தப்பாட்டக் குழுவினர்

நிதர்சனம் டொட் கொம் நித்திரையில் கனவு காண்கின்றது

''ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!" என்று நிதர்சனம் டொட் கொம் அறை கூவுகின்றது. (இக் கட்டுரை முழுமையாக கீழ் உள்ளது.) எல்லாம் முடிந்த பின், முடித்து வைத்த பின், எதைத் தான் இனி தமிழ் இனம் பாதுக்காக்க முடியும். விமர்சனம் சுயவிமர்சனமின்றி, எதையும் குறைந்தபட்டசம் யாரும் மீட்க முடியாது. செத்துக் கொண்டிருக்கும் புலி தேசியத்தை விமர்சிக்காமல் விட்டுவிடுதால், அது உயிர் வாழ்ந்துவிடமா!?

உயிருடன் அணுயணுவாக செத்துக் கொண்டிருக்கும் புலியை விமர்சிப்பதற்கு இனி எதுவுமில்லை. அது தனது சவப்பெட்டிக்கே, தானே ஆணி அடித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்படி ஏன் இந்த நிலையை அடைந்தது என்பதை திரும்பிப் பார்ப்பது மட்டும் அவசிமாகின்றது..................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

முந்தானை விரிக்கும் புலம்பெயர் 'ஜனநாயகம்"

இந்த 'ஜனநாயகம்" தனது சொந்த மனவிகாரங்களையும், முரண்பாட்டையும், தனிமனித காழ்ப்புகளையும்;, அரசியல் முலாம் ப+சி கொட்டித் தீர்ப்பதைத் தான் மாற்றுக் கருத்து என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான கருத்துகளுக்கு புலியெதிர்ப்பு தளத்தில் இடமில்லை. அவை இவர்களால் மறுக்கப்படுகின்றது, மறுபக்கத்தில் அவை அனுமதிக்கப்படுவதில்லை. இது புலியெதிர்ப்பாக வேஷம் போட்டுவிடுகின்றது. மக்களின் விடுதலைக்கான கருத்துகள் இந்த 'ஜனநாயகத்தில்" வைக்கப்படுவது கிடையாது.

இதனால் தான் இது அரசுடன் அல்லது புலியுடன் தஞ்சமடைகின்றது. இதற்கு வெளியில் இந்த புலம்பெயர் 'ஜனநாயகம்" என எதுவும் சுயமாக கிடையாது. இந்த வெட்டை வெளியில் தான், தேசம் (நெற்) பவ்வியமாக மிதக்க முனைகின்றது. இரண்டையும் பயன்படுத்தி பிழைக்கும் 'தொழில் நேர்மை" ஊடாக, இது ஒரு அலியாக பிறப்பெடுத்துள்ளது. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு அரச பாசிட்டுகள் துணை இன்றி எப்படி இன்று இயங்க முடியாதோ, அப்படித் தான் தேசமும். புலி புலியெதிர்ப்பு பாசிட்டுகளை சார்ந்தும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளிடையே முரண்பாடுகளையும் தனது பங்குக்கு உருவாக்கித் தான், தேசம் உயிர் வாழ முடிகின்றது. இதைத் தான் தேசம் பொறுக்கிகள் தமது 'தொழில்நேர்மை" .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, September 26, 2008

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

5.தூங்கிறயா நடிக்கிறியா

தூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா? )

மாற்றுப் பயிர்த் திட்டம் : விவசாயிகள் விட்டில் பூச்சிகளா?

கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு ஒரு மாற்றுப் பாதையை காட்டுவதாகப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள், பாரம்பரிய உணவு மற்றும் தானிய உற்பத்தியில் உள்ள நிலங்களில் இம்மண்ணுக்கே அறிமுகம் இல்லாத புதிய பயிர்களையும் மற்றும் ஏற்றுமதிக்கான பயிர்களையும் விவசாயம் செய்ய வழிகாட்டுதல் கொடுக்கின்றன.

 இதை விவசாய விஞ்ஞானிகள் பன்முகப் பயிர் (Crop diversification) விவசாயம் என்கிறார்கள். பன்முக விவசாயத்தை மேற்கொள்வதே விவசாயிகளை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள். இதனடிப்படையில் மைய விவசாய அமைச்சர் சரத்பவார், "கோதுமை, அரிசி உற்பத்தியைக் குறையுங்கள்; மாற்றுப் பயிர்களைப் பயிரிடுங்கள்'' என விவசாயிகளைப் பார்த்து அறிவுரை கூறி வருகிறார்.


இந்த மாற்றுப் பயிர் விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டியது பா.ஜ.க. கூட்டணி அரசு. மாற்றுப்பயிர் விவசாயத்தை ஜூலை 8, 2004 அன்று தேசியத் தோட்டகலைத் திட்டத்தின் ஊடாக (
National horiculture Mission-NHM) அமல்படுத்தியது. இத்திட்டத்தின் அடிப்படையில் பழங்கள், காய்கள், வாசனைப் பொருட்கள், மருத்துவச் செடிகள், மலர்கள், தென்னை, பாக்கு, முந்திரி, கோக்கோ, ஹெர்கின், நெல்லி, காட்டாமணக்கு, சர்க்கரைச் சோளம், மற்றும் பல்வேறு புதிய வகைப் பயிர்கள் பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்தகைய பயிர்களை வல்லுனர்கள் "தோட்டப்பயிர்'' என்று வரையறுத்துள்ளனர். மேலும் இந்தப் புதிய............  முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, September 25, 2008

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இது இன்று இலங்கையில் வரலாறாகின்றது. புலிகளின் தவறான வழிகாட்டலால் இது அரங்கேறுகின்றது. இது நிறுவப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றது. புலிகளின் பின் ஆயிரம் ஆயிரம் படைகள் இருக்கலாம், நவீன ஆயுத பலம் இருக்கலாம், இருந்தும் எந்தப் பிரயோசனமுமில்லை. ஒரு போராட்டத்தைச் சரியாக வழிநடத்தத் தவறுகின்ற போது, அது நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு.

தமிழ் மக்களின் நியாயமான.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்து வென்றால் சொல் சம்மதமா?

 இந்து வென்றால் சொல் சம்மதமா? (காவிஇருள்)

ஆந்திராக்ஸ் பீதி : அமெரிக்காவே குற்றவாளி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதையடுத்த சில தினங்களில், "ஆந்த்ராக்ஸ்'' என்ற நச்சுக் கிருமியின் உயிர் அணுக்கள் தடவப்பட்ட கடிதங்கள், சில அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களைக் குறி வைத்து அனுப்பப்பட்டன. மர்மமான முறையில் நடந்த புதிய வகையான இத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடம் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறிவந்த அமெரிக்கக் கூலிப் பிரச்சாரக் கும்பல், ஆந்த்ராக்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள் தொடங்கியிருக்கும் உயிரியல் யுத்தம் எனப் பீதியூட்டின. ஈராக் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க வேண்டும் எனத் திட்டம் போட்டுக் காத்திருந்த அமெரிக்க ஆளும் கும்பல், அமெரிக்க மக்களை மூளைச் சலவை செய்ய ஆந்த்ராக்ஸ் தாக்குதலையும் பயன்படுத்திக் கொண்டது.

ஆந்த்ராக்ஸ் கிருமி தடவப்பட்ட கடிதம் யார் வீட்டுக்கு வருமோ என்ற பீதி ஒருபுறமிருக்க, அமெரிக்க உளவு அமைப்பான "எஃப்.பி.ஐ.'' யார் வீட்டுக் கதவைத் தட்டுமோ என்ற அச்சத்திலும் அமெரிக்க மக்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், எஃப்.பி.ஐ., வெள்ளைத் தோல் அல்லாத அந்நியர்களை மட்டுமல்ல, அமெரிக்க விஞ்ஞானிகளைக் கூட விட்டு வைக்காமல், விசாரணை நடத்தியது. உயிரியல் விஞ்ஞானிகள் அனைவரும் சந்தேகப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

Wednesday, September 24, 2008

காடு களைந்தோம்

காடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை)

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?


ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் தீர்வாக காட்டுகின்றனர்.

இந்த நிலையில் புலிகள் என்றுமேயில்லாத அளவுக்கு இராணுவ ரீதியாக தோற்றுக் கொண்டிருக்கின்றனர். பேச்சவார்த்தை என்ற அரசியல் மேசையில் தோற்றவர்கள், அதைத் தொடர்ந்து இன்று இராணுவ அரங்கில் தோற்பது தொடங்கியுள்ளது. அரசியல் மேசையில் தோற்று வந்த ஒரு நிலையில், வெல்வதற்காக அவசரமாகவே ஒரு தலைப்பட்சமாக வலிந்த ஒரு இராணுவ அரங்கைத் தொடங்கினர்.

இப்படி உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படாத ஒரு யுத்தத்ததை நோக்கி அவசரமாக ஒடிய புலிகள், தொடர்ச்சியாக அதில் தோற்றுப் போகின்றனர்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 23, 2008

இந்து என்று சொல்லாதே

இந்து என்று சொல்லாதே கவிதை – தோழர் துரை. சண்முகம்

'அவர்களுக்கு நிலம் சொந்தமாய் இருந்தது!" ஆந்திராவில், சி.பொ.மண்டலத்தால் நிலத்தை விழந்துவிட்ட தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் போராட்ட வாழ்வு

அண்மையில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தின் ஜட்செர்லா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 விவசாயிகள் சுயேச்சைகளாகக் களமிறங்கினர். அவர்கள் தேர்தலில் நின்றது சட்டசபைக்குச் செல்வதற்கு அல்ல. சிறப்புப்பொருளாதார மண்டலம் எனும் பேரால் தங்கள் நிலம் பறிக்கப்பட்டதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவே இத்தேர்தலில் நின்றனர். 8 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பிரித்து இதற்கு முந்தைய தேர்தலில் வென்ற தெலுங்கானா ராஷ்டிர சமிதியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளனர்.

2003ஆம் ஆண்டில் "பசுமைப்பூங்கா' அமைப்பது என்ற பெயரில் நில அளவை ஆரம்பிக்கப்பட்டதும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் திரண்டெழுந்து சாலைமறியல் செய்தனர். தலைநகர் வரை போராட்டத்தை எடுத்துச் சென்று சட்டசபை முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 2005ஆம் ஆண்டில், "பசுமைப்பூங்கா' என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரோபந்தோ பார்மா எனும் மருந்துக் கம்பெனிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் போலபள்ளி கிராம நிலத்தின் சந்தை மதிப்போ ரூ. 20 லட்சத்தும் மேல். ஆனால், இழப்பீடாக ஏக்கருக்கு வெறும் 18 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் அதிகார வர்க்கம் மோசடி செய்து ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 22, 2008

இந்துங்கிறவன் எவன்டா

இந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம்)

அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் ஈழத்து இயக்க அரசியல் : ஷோபா சக்தியும் கல்வெட்டும் சேனனும்: -சில கருத்துக்கள்.

இரயாகரனுக்குக் கல்வெட்டுப் பாடிய சோபா சக்திக்கு என்ன நியாயமிருக்கிறதோ இல்லையோ அதை வரவேற்று நியாயப்படுத்தும் சேனனுக்கு என்ன அருகதையிருக்கு பெண்ணின் உள்ளாடை-அதிகாரம்-ஆண்மொழி குறித்துப் பேசுவதற்கென்று நாம் கேட்டு வைப்போம்!எஸ்.போ.வின் எழுத்துக்களைப் படித்த அன்றைய இளைஞர்கள்,ஒரு பெருமைக்காக அவரை அப்படியே கொப்பி பண்ணிய வரலாறு எனக்குள்ளும் ஓடுகிறது.

Sunday, September 21, 2008

நந்தனை எரித்த தீ இன்னும் தணியவில்லை.

8.கடவுள் கடவுள்

கடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை)

 ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது

திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள் அடுத்தடுத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் இவற்றின் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன. நவீன பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், சாலைகளை அகலப்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசு, நகர்ப்புற மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து மேம்படுத்துவதாக மக்களும் கருதுகின்றனர்.

47 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழும் தமிழ்நாட்டில்தான் நகரமயமாக்க வேகம் இந்தியாவிலேயே அதிகம் என்பதால், இம்மக்களுக்கு தரமான சேவை செய்திடவும் உள்கட்டுமானங்களை வலுவாக்கிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினை உருவாக்கி அதற்கு 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளில் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ. 1200 கோடி கடன் தந்திருக்கிறது, மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி.