தமிழ் அரங்கம்

Saturday, December 27, 2008

தொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும்

தொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும் உரை பேரா.ஷாஜகான் கனி

ஆதிக்க சாதிவெறியர்கள் கொட்டம் : தமிழகத்தின் அவமானம்


· நவம்பர் 2ஆம் தேதியன்று உத்தப்புரம் சென்றுவிட்டுத் திரும்பிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் காரை எழுமலை எனும் கிராமத்தின் அருகே தேவர்சாதி வெறியர்கள் அடித்து நொறுக்கினர். எழுமலையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டுவிட்டதாக கூறியே இத்தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலைக் கண்டித்து நடந்த சாலைமறியல் போராட்டத்தின்போது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டார்.

· உத்தப்புரத்தில் கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வரும் அடுத்தடுத்த மோதல்களில் ஆதிக்க சாதியினர் மீது சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் கூட வழக்குப் பதிவு செய்யாமல், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வெடிமருந்துச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்; போலீசார் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறதென்பதை அங்கு சென்று வந்த உண்மையைக் கண்டறியும் குழுவினர் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளனர் போலீசினுடைய.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, December 26, 2008

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.


இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுனாமி ஏற்படுத்திய சமூக அழிவையே மிஞ்சும் அதிகார வர்க்கங்களின் சூறையாடல்

சு னாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத்தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாததாக்குகின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று இருதளத்திலும் இந்தச் சமூக அவலம் அக்கம் பக்கமாகவே நிகழ்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்படாத மக்களும் கூடிவாழும் வாழ்வியல் உரிமையையே இடைத்தரகர்கள் தமது அதிகாரங்கள் மூலம் மறுக்கின்றனர். மக்களுக்கு இடையில் இந்த இடைத்தரகர்கள் பெருமளவில் பெருகியுள்ளதுடன், ஒரு ஒட்டுண்ணியாகி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதிக்கப்படாத மக்கள் கொடுத்த உதவிகளின் பெரும்பகுதியை, இந்த இடைத்தரகர்கள் சூறையாடிக் கொள்கின்றனர்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்ற நிவாரணங்களை விட, இடைத்தரகர்களின் வீடுகளுக்குச் சென்ற நிவாரணங்கள்தான் அதிகம். இது தொடருகின்றது. அதேநேரம் பெரும் அளவிலான மக்களின் உதவிக்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறிய முடியாத சூனியமாகவே உள்ளது. இதுவும் கூட மக்களின் ........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 25, 2008

சீமானும் செல்வியும்

இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.

“நீ சொல்லும் கருத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை, ஆனாலும் அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக் கொடுத்துப் போராடவும் நான் தயார்” என்ற வோல்தயரின் புகழ்பெற்ற கூற்றை வெறுமனே வீம்புக்கு உச்சரிப்பவர்களில் நானும் ஒருவனல்ல. அந்தக் கூற்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மகிந்தவின் பாசிச சிந்தனையிலான புலித்தடை

இலங்கையில் புலியை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ள பின்னணியோ, மிகவும் ஆபத்தான பாசிசமாகும். புலிப் பாசிசமோ மக்களை யுத்தப் பணயப்பொருளாக வைத்துக் கொண்டு நடத்துகின்ற மனித விரோத யுத்தத்தையே, தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாதம் அறிவிக்கும் புலித் தடை சூழ்ச்சிமிக்கதும், ஆபத்தானதுமாகும். இதன் மூலம் தமிழினத்தை அழித்தொழிக்கும் யுத்தத்தை, சர்வதேச ஆதரவுடன் பேரினவாதம் நடத்த முனைகின்றது.

புலிகள் தம் பிடியில் வைத்துள்ள வன்னி மக்களை 26.12.2008 முன்பாக விடுவிக்காவிட்டால், புலியை தாம் தடை செய்யப்போவதாக கூறுகின்றது மகிந்தாவின் பேரினவாத பாசிச சிந்தனை. இந்த உத்தி மூலம் தம்மை தமிழ் மக்களின் மீட்பாளராக காட்ட முனையும் பாசிசமோ, மிகத் திட்டமிட்ட சதியை அடிப்படையாக கொண்டது.

இதன் மூலம் புலியை அழித்தொழிக்க, சர்வதேச அங்கீகாரத்தை பேரினவாத பாசிசம் கோருகின்றது. இதற்கு புலிகள் தம் பிடியில் பணயப்பொருளாhக வைத்துள்ள அப்பாவி மக்களையே, மகிந்த சிந்தனை தன் பணயப் பொருளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் எதிரி என்றுமில்லாத வகையில் மிக நெருக்கமாக புத்திசாலித்தனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில் இயங்குகின்றான். மிகத் திட்டமிட்ட வகையில், புலிகளிடமிருந்து மக்களை தனிமைப்படுத்தியே யுத்தத்தை செய்யும் தன் நியாயப்பாட்
.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்களின் அவலம், அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையா?


சமூகத்தின் பங்களிப்பு மறுக்கப்பட்டு, அவை தனிநபர்களின் சொந்த பிரச்சனையாக்கப்படுகின்றது. இந்த மனித அவலங்களுக்கு காரணம் யார்? மக்களா! சொல்லுங்கள்;. ஓருபுறம் அரசு என்றால் மறுபுறம் புலிகள். இதை இல்லையென்று, சொல்ல உங்களால் முடியுமா?

இப்படியிருக்க இவர்கள் காரணமில்லை என்று எப்படித்தான் கூறமுடிகின்றது. அதையும் ஒரு பக்கச்சார்பாக சொல்ல முடிகின்றது. எப்படித்தான் உங்களால் இவற்றை திரித்து பிரச்சாரம் செய்யமுடிகின்றது. இதன் மேலான உங்களின் அக்கறை, நேர்மை, உண்மை, மனிதப் பண்பு எல்லாம் போலியானது என்பதும், அவை போக்கிலித்தனமானது என்பதும் உண்மையாகின்றது.

மக்கள் மேலான உங்கள் கரிசனை என்பது, உங்களின் குறுகிய பிரச்சார தேவைக்கானதாக இருப்பது வெளிப்படையாகின்றது. உங்கள் மக்கள் விரோத யுத்தத்துக்கு, இவை தேவையானதாக இருப்பதும் அம்பலமாகின்றது. இது மக்களின் துயரங்களையும் துன்பங்களையும் தம் பங்குக்கு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, December 24, 2008

வாஜிபாயா காசிம் பாயா

வாஜிபாயா காசிம் பாயா

சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்


இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.


இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோதLink குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும்
...........................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, December 23, 2008

மொட்டைத் தலையன் துக்ளக் சோ

அகமதாபாத் குண்டு வெடிப்பை மேலோட்டமாகக் கண்டிக்கும் துக்ளக் சோ, ஒருவேளை இராணுவம் மற்றும் உளவுத் துறைகள் பயங்கரவாதத்திற்கு எதிராக இத்தகைய எதிர் நடவடிக்கைகளில் (அதாவது குண்டு வெடிப்புக்கள்) ஈடுபட்டால், அது இரகசியமாக இருக்கவேண்டுமென ஆலோசனை கூறுகிறார். இதன்மூலம் இந்திய உளவுத் துறை அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அங்கீகாரமும் வழங்குகிறார். இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வெடித்தால், அது நிரூபிக்கப் படாமலேயே அவர்களைக் கொன்று அழிக்க வேண்டுமெனச் சாமியாடும் இந்த மொட்டைத் தலையன், இந்து பயங்கரவாதத்திற்கு மட்டும் இனப்பாசத்தோடு வக்காலத்து வாங்குவதை என்னவென்று சொல்ல? மற்ற குண்டுவெடிப்புக்களின் போது மத்திய அரசு தீவிரவாதிகளை மென்மையாக நடத்துகிறது, பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று துள்ளியவர்கள், இப்போது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே?..................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இந்தியாவின் நிலவுப் பயணம்: வல்லாதிக்கக் கனவுக்கு வரிபணம் சூறை!


1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை முதன்முறையாக விண்ணில் செலுத்திய போது, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யர்கள் தங்களைத் தாக்குவர் எனும் வதந்தி அமெரிக்க மக்களிடையே பரப்பப்பட்டது. சோவியத்துக்குத் தாம் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்க அமெரிக்காவும் ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது. இவ்விரு நாடுகளும் தங்களது வலிமையை நிரூபிக்க அடுத்தடுத்து செயற்கைக்கோள்களை அனுப்பி, விண்வெளி யுத்தம் நோக்கிச் சென்றன. பனிப்போர் காலகட்டத்தில் நடந்த இந்தப் போட்டி தற்போது மீண்டும் வேறுதளத்தில் தலைதூக்கியுள்ளது.

சீனா விண்வெளிக்கு மனிதனை அனுப்பியதுடன், 2007இல் பயனற்ற செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா இதனைச் செய்திருந்தாலும், அமெரிக்காவும் தனது பலத்தை நினைவூட்ட மீண்டும் ஒரு செயற்கைக்கோளைத் தனது ஏவுகணையைச் செலுத்தித் தகர்த்தது. ஜப்பானும் தன் பங்குக்கு அதிநவீன செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியது.

Monday, December 22, 2008

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவித்தனம்


தமிழ் மக்கள் விரும்புவதோ, யுத்தமற்ற சூழலில் வாழ்வதைத்தான். அது வன்னியிலா கொழும்பிலா என்பது கூட, அவர்களுக்குப் பிரச்சனையில்லை. ஏன் இந்த நிலைக்கு தமிழ் மக்கள் வந்து உள்ளனர்? ஏனென்றால், இந்த யுத்தம் எந்த உரிமைக்கான யுத்தமுமல்ல. தமிழரின் உரிமைக்கான யுத்தமுமல்ல, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்கான யுத்தமுமல்ல.

மாறாக இது மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம். அவர்களை அடக்கியொடுக்கி, யார் எப்படி ஏன் ஆள்வது என்ற முரண்பாட்டின் அடிப்படையில்; மக்கள் விரோதிகள் நடத்தும் யுத்தம். இவர்கள் யாரும், எந்த மக்கள் நலனில் இருந்தும் தாம் செயல்படுவதாக யாரும் நிறுவ முடியாது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

உணவைக் கொடுக்கவும், உணவை வாங்கித் தின்னவும், ஊர்வலம் விடுவதையும்;தான், இவர்கள் மக்கள் போராட்டம் என்கின்றனர். மக்களை அடக்கியொடுக்கி, அவர்களை நாய்களைப் போல் தமது கட்டுப்பாட்டில் அடிமையாக வைத்திருக்கும், தம் அதிகாரத்தைத்தான் இவர்கள் மக்களின் விடுதலை என்கின்றனர்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இந்த யுத்தத்தில் அரசு வெற்றி பெற்றாலும் சரி, புலிகள் வெற்றி பெற்றாலும் சரி, அதில்

Sunday, December 21, 2008

மக்களைப் பற்றிப் பேசும் துரோகத்துக்காக போராடி மரணிப்போம்

தமிழ் மக்களைப் பற்றி பேச மறுப்பதையே, தியாகம் போராட்டம் என்கின்றனர். ஒரு இனத்தை இன்று அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும், இதைத்தான் கூறுகின்றனர். இதைத்தான், இன்று புலிகள் முதல் பேரினவாதம் வரை கூறுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது, தேசியம், யுத்தம் பற்றி மட்டும் பேசக் கோருகின்றனர்.

தமிழ் மக்களை யார் எப்படி கொடுமைப்படுத்தினாலும், அதைப் பார்க்காது இருப்பதே தேச நலன் என்கின்றனர். எதையும் பக்கச்சார்பாக பேசவும், ஒன்றையொன்று மூடிமறைத்தும் பேசுவதே மனித சுதந்திரத்தின் அடிப்படைகள் என்கின்றனர்.

தேசியம் மற்றும் யுத்தம் என்ற பெயரில், தமிழ் மக்கள் மேல் திணித்துள்ள கொடுமைகளையும் கொடூரங்களையும் பேசுவது இன்று துரோகமாக உள்ளது. அந்த வகையில் நாம் தொடர்ந்தும் மக்களைப்பற்றி பேசுவதால், துரோகிகளாகவே உள்ளோம்.

எம்மை என்ன செய்யக் கோருகின்றனர். ஒன்றில் பேரினவாதத்தை ஆதரி அல்லது புலிப் பாசிசத்தை ஆதரி என்கின்றனர். நாம் இவ் இரண்டையும் மறுப்பதால், இவர்கள் முன் துரோகியாக மாற்றப்பட்டுள்ளோம்.

எமக்கு வெளியில் பேரினவாத தமிழின அழித்தொழிப்பு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மோதல் : ஆதிக்கசாதித் திமிருக்கு விழுந்த-பதிலடி!

கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல், தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சாதிதீண்டாமையின் கோரத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சட்டக் கல்லூரியில் சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பதிலடி கொடுத்துள்ளதன் வாயிலாக, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தென்மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்ற போதிலும், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆதிக்க சாதித் திமிர் நீறுபூத்த நெருப்பாகவே நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்க சாதிவெறி அமைப்புகள் சட்டக் கல்லூரியில் வேர்விடத் தொடங்கின. "முக்குலத்தோர் மாணவர் பேரவை'' அதில் ஒன்று. தாழ்த்தப்பட்ட மாணவர்களால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிகண்ணன், அதன் முக்கிய பிரமுகர்.

கடந்த 2007ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் தகராறு செய்து அடிதடியில் இறங்கியவர்தான் பாரதி கண்ணன். ஆறு மாதங்களுக்கு முன்பு கல்லூரியின் பெயரில் இருக்கும் "அம்பேத்கர்'' என்ற வார்த்தையை நீக்கச் சொல்லி பாரதிகண்ணன் தலைமையில் ஆதிக்கசாதி மாணவர் கும்பல் தகராறு செய்தது. "சிங்கங்களே, ஒன்று சேருங்கள்!'' என்று தேவர் சாதி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, கல்லூரி வளாகத்திலேயே இக்கும்பல் சுவரொட்டிகளையும் ஒட்டியது. இதற்குத் தாழ்த்தப்பட்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.