தமிழ் அரங்கம்

Showing posts with label மறுகாலனி. Show all posts
Showing posts with label மறுகாலனி. Show all posts

Tuesday, April 28, 2009

அந்திய முதலீட்டுக்கு அபாரச் சலுகை

மக்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் கூத்துக்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டிருக்கும் நேரமாகப் பார்த்து, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மிகவும் கமுக்கமாக முடிவு செய்து அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தால்கூட, அதற்கு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் முட்டுக்கட்டை போட்டிருக்கமாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் என்ற முறையில் பா.ஜ.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் முணுமுணுத்திருப்பார்களேயொழிய, அந்நிய முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் மன்மோகன் சிங்குக்கு வேறு தலைவலி எதுவும் ஏற்பட்டிருக்காது. எனினும், மன்மோகன் சிங் கும்பலோ அந்த வாசூப்பைக்கூட நாடாளுமன்றத்திற்குத் தராமல், அமைச்சரவையை மட்டும் கூட்டி முடிவெடுத்து இம்மாற்றத்தை அறிவித்து விட்டது.

மறுகாலனியாதிக்கச் சூழலில் நாடாளுமன்றத்திற்கு ""ரப்பர் ஸ்டாம்ப்'' என்ற மதிப்புமிக்க தகுதியைத் தருவதற்குக்கூட ஆளும் கும்பல் தயாராக இல்லை என்பதை மன்மோகன் சிங் மீண்டும் எடுத்துக் காட்டிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில், 15ஆவது.........
.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, August 6, 2008

தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக ஒப்பந்த பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள்.

தற்காலிகத் தொழிலாளர்கள் காலை 7.30 மணிக்கு ஆலைக்குள் நுழைந்தால், பணிநேரப்படி 4.30 மணிக்கு அவர்களுக்கு வேலை முடிந்தாலும், மாலை 67 மணி வரை கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். இதுதவிர, "இணிட்ணிஞூஞூ " என்ற பெயரில் ஒருசேர இரண்டு ஷிப்ட் (16 மணி நேரம்) வேலை வாங்கிக் கொண்டு, சட்டப்படி தரவேண்டிய இரட்டிப்பு ஊதியத்தைத் தராமல் ஏய்ப்பது, சீருடைபாதுகாப்புச் சாதனங்கள் இன்றி வேலை செய்ய நிர்பந்திப்பது, மருத்து ஈட்டுறுதிக்காகவும்.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்