தமிழ் அரங்கம்

Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Thursday, April 2, 2009

சாயம் வெளுத்துப் போகும் ஓநாய் கூட்டங்கள்

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

இன்று அவர்களில் பலர் தமது செய்கைகள் மூலம் அம்பலமாகிவருகின்றனர். புலிகள் அரசு பேசுசுவார்த்தையின் போது, புலிகள் தாம் படுமோசமான மக்கள் விரோதிகள் என்பதை ஊர் உலகம் அறிய தம்மை அம்பலமாக்கினர். இதே காலத்தில் ஜனநாயகம் பேசும் கூட்டம் புளுத்து, திடீர் மிதப்பாகினர். ஆனால் அரசு புலியின் யுத்த தொடங்கியவுடன், தாங்கள் புலிகளை மிஞ்சிய மக்கள் விரோதிகள் என்பதை, தமது சொந்த அரசியல் நாற்றத்துடனேயே எடுப்பாக அவர்கள் அம்பலமாக்கி வருகின்றனர்.


'ஜனநாயகத்தின்" பெயரில் ரீ.பீ.சீயையும், தேனீயையும் மையமாக வைத்து ஜனநாயகம் பேசியவர்கள, இலங்கையின் இந்தியாவின் அரசியல் எடு............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, July 26, 2008

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் : ஊதிய உயர்வு விடுதலை தருமா?

ஊழியர்களின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. ஐ.ஏ.எஸ் தகுதி கொண்ட அரசுச் செயலர்களின் மாதச் சம்பளம் தற்பொழுது ரூ. 28,000/ தான். இதனை, ரூ. 80,000/ ஆக அதிகரிக்க வேண்டுமென ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இதோடு இந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய இதரப் படிகளையும் சேர்த்தால், அவர்களின் மொத்தச் சம்பளம் ரூ. 96,000/ ஆக எகிறிவிடும்.

முப்படைத் தளபதிகளின் சம்பளத்தை ரூ. 90,000/ ஆகவும்; தற்பொழுது ரூ. 8,250/ சம்பளம் பெறும் இளம் லெப்டினென்ட் அதிகாரிகளின் சம்பளத்தை ரூ. 25,760/ ஆகவும்; துணை இராணுவப் படைகளின் தலைமை அதிகாரியின் சம்பளத்தை ரூ. 80,000/ ஆகவும் உயர்த்த வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரையால் 60 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.

அதேசமயம், தற்பொழுது படிகளையும் சேர்த்து ரூ. 5,115/ சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு இனி ரூ. 6,790/ சம்பளம் வழங்க ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த உயர்வு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப்படியை (ரூ. 7,000/) விடக் குறைவானதாகும். கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை 18 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்துக் கொடுக்கப் பரிந்துரைத்துள்ள ஊதியக் குழு, மேல் மட்டத்தில் 60 முதல் 200 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க அறிவுறுத்தியிருக்கிறது.