தமிழ் அரங்கம்

Showing posts with label ஜனாதிபதி. Show all posts
Showing posts with label ஜனாதிபதி. Show all posts

Saturday, May 2, 2009

தமிழ்மக்களைக் கொல்வதையே நியாயப்படுத்துகின்றான் ஒரு ஜனாதிபதி

நீ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களை கொல்லலாம் என்றால், நான் ஏன் என் மக்களை கொல்;லக் கூடாது. நீ அதைக் கேட்கக் கூடாது. அதைக் கேட்கும் உரிமை உனக்கு இல்லை என்கின்றான், மாண்புமிகு கொலைகார ஜனாதிபதி. கொல்வது என்பது, ஜனாதிபதியின் உரிமை. இந்தக் கொல்லும் உரிமையை எப்படி செய்வது என்பதில், 'எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்" என்கின்றான்.

இப்படி நாங்கள் வரைமுறையின்றி தமிழ் மக்களை கொல்கின்றோம், இதைக் கேட்கும் உரிமை உனக்கில்லை. இது தான் ஏகாதிபத்திய நாட்டுத் தலைவர்களுக்கு, எமது அதி உத்தம பாசிச ஜனாதிபதி வழங்கிய பதில். தம்பி கோத்தாபாய மட்டுமல்ல அண்ணன் ராஜபக்சவும் தன் வேஷத்தைக் களைந்து கர்ச்சிக்கின்றான். கையெடுத்து கும்பிட்டு, இரந்து வாக்கு பிச்சை கேட்டு நடித்த நடிகன், இன்று ஒரு பாசிட்டாகவே கொக்கரிக்கின்றான்.

கொலைகார ஜனாதிபதி உலகுக்கு கூறும் தத்துவம் என்ன, நீங்கள் கொல்லலாம் என்றால் நாங்களும் கொல்லலாம். இது தான் ஒரு நாட்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்