தமிழ் அரங்கம்

Saturday, May 3, 2008

வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம்: தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை



வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம் : தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை

பார்ப்பன இந்து மதத்தைப் போலவே, இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எறையூரில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஜெபமாலை அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வன்னிய கிறித்தவர்கள் பெரும்பான்மையாகவும்; தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் சிறுபான்மையாகவும் உள்ளனர். சாதிதீண்டாமையைக் கோட்பாட்டளவில் கிறித்துவ மதம் ஏற்காத போதிலும், இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது வன்னிய கிறித்தவர்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் நீண்டகாலமாகப் பங்குத் தந்தையின் ஆசியோடு நீடித்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்குத் தனிக் கல்லறை, தனிசவஊர்தி (தூம்பா), தேவாலயத்தின் பொதுவழியைப் பயன்படுத்த அனுமதி மறுப்பு, ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடை, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிப்பது, சாதிவெறியோடு தாழ்த்தப்பட்டோரைக் கிண்டல்கேலி செய்து அவமதிப்பது என வன்னிய கிறித்தவர்களின் சாதிவெறிக் கொட்டம் கேள்விமுறையின்றித் தொடர்ந்து வருகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாளன்று, முகையூரில் பாதிரியாராக இருந்த எறையூரைச் சேர்ந்த தலித் கிறித்தவரான ஃபாதர் இருதயநாதனின் தாயாரது இறுதி ஊர்வலத்தைத் தேவாலயத்தின் பொதுவழியாகச் செல்லத் தடைவிதித்து, ஆயுதங்கள் வெடிகுண்டுகளுடன் சாலையை மறித்து வன்னிய கிறித்தவ சாதிவெறியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். புதுச்சேரி கடலூர் மறை மாவட்டப் பேராயர் வந்து கெஞ்சியும் கூட இச்சாதிவெறியர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி ஃபாதர் இருதயநாதன் தாழ்த்தப்பட்டோருக்கென விதிக்கப்பட்ட குறுகிய சந்தின் வழியாகத் தனது தாயாரின் உடலை எடுத்துச் சென்று, தலித்துகளுக்கான தனிக் கல்லறையில் அடக்கம் செய்தார். பாதிரியாருக்கே இந்தக் கதி என்றால், சாமானிய தலித் கிறித்தவர்களின் மீதான வன்னிய கிறித்தவ சாதிவெறியர்களின் அடக்குமுறை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எறையூரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த திருவிழாவின் போது தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பெண்களை செல்போனில் படம் பிடித்த வன்னிய கிறித்தவ இளைஞர்களைத் தட்டி கேட்டதற்காக வன்னிய சாதிவெறியர்கள் அடிதடி கைகலப்பில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தீண்டாமை வழக்கின் கீழ் புகார் கொடுத்ததும், மளிகைக் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்குப் பலசரக்குகளைக் கொடுக்கக் கூடாது, ஓட்டல்களில் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று தடைவிதித்தனர். இந்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கண்டு குமுறிய தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள், தங்களுக்கென தனியாக சகாயமேரி மாதா ஆலயம் என்ற பெயரில் தனி தேவாலயத்தை கடந்த டிசம்பரில் கட்டியமைத்துக் கொண்டனர். இத்தேவாலயத்திற்கு புதுச்சேரிகடலூர் மறை மாவட்ட அங்கீகாரத்தையும் தனி பாதிரியாரையும் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், சாதி அடிப்படையிலான தனி தேவாலயத்தை அனுமதிக்க முடியாது என்று நிராகரித்தது கிறித்தவ பேராயம்.

தாங்கள் கட்டிய தேவாலயமும் முழுமையடையாமல், ஜெபமாலை அன்னை தேவாலயத்திலும் வழிபட முடியாமல் தத்தளித்த தாழ்த்தப்பட்ட மக்கள், கடந்த மார்ச் முதல் வாரத்தில் ""சாதிப் பாகுபாட்டை நீக்கு; இல்லாவிட்டால் சாதிப் பாகுபாடு காட்டும் தேவாலயத்தைப் பூட்டு'' என்று முழக்கத்துடன் சுவரொட்டிகளை ஒட்டி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனாலும் உள்ளூர் தேவாலயப் பாதிரியாரோ, மாவட்ட முதன்மை குருவோ, பேராயரோ, மூன்றாவது நாள் உண்ணாவிரதத்தில் சிலர் மயங்கி விழுந்த பின்னரும் எட்டிக் கூடப் பார்க்காமல் அலட்சியப்படுத்தினர்.

மதகுருபீடமே தாழ்த்தப்பட்டோரை அலட்சியப்படுத்திப் புறக்கணிப்பதைக் கண்ட வன்னிய சாதிவெறியர்கள் சும்மா இருப்பார்களா? ""தேவாலயத்தைப் பூட்டுவோம்னு போஸ்டராடா ஒட்டுறீங்க?'' என்று அரிவாள், தடிகளோடு மார்ச் 9ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கில் திரண்ட சாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாகத் தாக்கி அவர்களது வீடுகளை இடித்து நாசப்படுத்தி, அற்ப உடைமைகளைச் சூறையாடி வெறியாட்டம் போட்டனர். தேவாலய விவகாரத்தையொட்டி பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீசாரையும் இச்சாதிவெறியர்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த போலீசு கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியது.

இத்துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரு வன்னிய கிறித்தவர்களின் உயிருக்குப் பழிக்குப் பழியாக இருபது தலித்துகளைக் கொன்று பதிலடி கொடுப்போம் என்று வெளிப்படையாக ஆதிக்க சாதியினர் அச்சுறுத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆசீர்வாதம் (தி.மு.க), இந்நாள் தலைவர் எம்.சி. ஆரோக்கியதாஸ் (அ.தி.மு.க.) மற்றும் பாதிரியார் இலியாஸ் ஆகிய மூவரும் கூட்டணி சேர்ந்து கொண்டு வன்னிய சாதிவெறியர்களை வழிநடத்துகின்றனர். இம்மூவர் கூட்டணியோ, வன்னிய சாதி வெறியர்களோ இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பாயவில்லை.

பானை சோற்றைப் பதம் பார்த்தாற்போல, தமிழகமெங்கும் பல தேவாலயங்களில் நிலவும் சாதிப்பாகுபாடு தீண்டாமைக்கு எறையூர் ஓர் உதாரணம். பல பகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கல்லறை, வழிபாட்டு உரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்ட பாதிரியாரை அவமதித்தல் எனத் தீண்டாமைக் கொடுமைகள் பரவலாக தொடர்ந்து நீடிக்கின்றன. கிறித்தவ மதம் இந்தியாவில் நுழையும் போதே, பார்ப்பன இந்து மதத்தின் சாதியதீண்டாமைகளோடு சமரசம் செய்து கொண்டுதான் படிப்படியாகக் காலூன்றியது. இன்று அது ஆதிக்க சாதியினருடன் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குமளவுக்கு மாறிவிட்டது.

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பெயரளவிலாவது சட்டப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், கிறித்தவ மதத்தில் அதுகூடக் கிடைப்பதில்லை. மதச் சிறுபான்மையினர் விவகாரம் என்பதால், தொடரும் இச்சாதிவெறித் திமிரையும் தீண்டாமைக் கொடுமையையும் தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. சாதிப் பாகுபாட்டை ஒழிக்கச் சட்டரீதியாக நெருக்கடி கொடுக்கக் கூட அது தயங்குகிறது.

இருப்பினும், விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் தமது செல்வாக்குள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பாதிரியார்களும் கிறித்தவ தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களை அணிதிரட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் துணையுடன் ஈஸ்டர் பண்டிகையைப் புறக்கணிக்கும் போராட்டத்தை அறிவித்து, 21 தேவாலயங்களைப் பூட்டி கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தை கடந்த மார்ச் 16 அன்று நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இப்பாதிரியார்களும் தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்டோரைத் திரட்டி வந்து திருமாவளவன் தலைமையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஈஸ்டர் பண்டிகை நேரத்தில் இவ்வளவு தேவாயலங்களிலும் வழிபாடு நடக்காததை வைத்துப் பேராயரின் பதவியே பறிக்கப்பட்டு விடும் என்பதால், அரண்டு போன கடலூர்புதுவை மறைமாவட்டப் பேராயரான ஆனந்தராயர், ""இனி சாதிப் பாகுபாடே இருக்காது; அனைவரும் தேவாலயத்தில் வழிபடலாம்'' என்று வாக்குறுதி அளித்துள்ளார். சாதிவெறியர்களுடன் கூடிக் குலாவிக் கொண்டு இதை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது அவருக்கே வெளிச்சம்.

மறுபுறம், எறையூர் வன்னிய கிறித்தவர்களோ பேராயரின் முடிவை ஏற்க மறுத்து, தங்களுக்கும், தலித்துகளுக்கும் தனித்தனியே பங்கு கொடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் மதம் மாறப் போவதாகவும் கொக்கரிக்கின்றனர். அவர்களது சாதிய அடக்குமுறையை அங்கீகரிக்கும் இந்து மதத்துக்கு அவர்கள் மாறினாலும், சொத்துரிமை வாக்குரிமையையோ, இடஒதுக்கீட்டு சலுகைகள் பதவிகளையோ அவர்கள் இழக்கப் போவதில்லை. இதனாலேயே இன்னமும் சாதியத் திமிரோடு அவர்ளால் மிரட்டி எச்சரிக்கை விடுக்க முடிகிறது.

இந்நிலையில் இச்சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் வாக்குரிமை ஜனநாயக உரிமை, இடஒதுக்கீடு உரிமை உள்ளிட்டு அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் ரத்து செய்யக்கோரி போராட்டங்களைத் தொடர வேண்டும். எறையூர் மற்றும் கடலூர் விழுப்புரம் மாவட்டத் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் தொடங்கியுள்ள தீண்டாமைக்கெதிரான இப்போராட்டத்தை ஆதரித்து, அனைத்து மதங்களிலும் நீடிக்கும் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் பெரும் போராட்டமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். இது மதச்சார்பற்ற புரட்சிகரஜனநாயக சக்திகளின் முன்னுள்ள மாபெரும் கடமை; நமது கடமை.

· தனபால்

Friday, May 2, 2008

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?


பி.இரயாகரன்

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுய விமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

புலிகள் தோற்று வருகின்றனர் என்று நாம் கூறுவதை, துரோகமாக, எட்டப்பத்தனமாக வழமைபோல் காட்டுகின்றனர். இது எப்படி தோற்காமல் முன்னேறுகின்றது என்று அவர்களால், காட்ட முடியாதுள்ளது. புலிகள் எதைத்தான், தமிழ் மக்களுக்கு பெற்று தருவார்கள் எனக் கூட அவர்களால் கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட புலிப்போராட்டம் பல பத்தாயிரம் மக்களின் மனித உயிர்களை காவு கொண்டது. போராட்டத்தின் பெயரில், இரண்டு பத்தாயிரம் இளமையும் துடிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களை பெயரில் பலியிட்டுள்ளனர். புலியுடன் முரண்பட்டதால் இதேயளவு எண்ணிக்கை கொண்ட துடிப்பும் ஆர்வமும் தியாக உணர்வும் கொண்டவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றனர்.

இப்படி ஒரு சமூகமே புலியின் சொந்த நலன் சார் அரசியலுக்குள்ளான மதிப்பீட்டுக்குள்ளாகியது. துரோகி அல்லது தியாகி என்ற அரசியல் வரையறைக்குள் அனைத்தையும் வரட்டுத்தனமாக உள்ளடக்கினர். அதற்குள் தான் அவர்கள் போராட்டம் நடத்தினர். புலிகளின் குறுகிய அறிவுக்கு ஏற்ப, அவை மிக எளிய அரசியல் சமன்பாடாகியது. இப்படி அதன் அரசியலே குறுகிப்போனது.

இதுவே பின்னால் பணம் தர மறுத்ததால் துரோகியாகியது. போராட வர மறுத்தால் துரோகியாகியது. கேள்வி கேட்டால் துரோகியாகியது. கட்டாய இராணுவ பயிற்சிக்கு வரமறுத்தால் துரோகியாக்கியது. இப்படி அரசியல் மாபியாத்தனமாகி, துரோக தியாகி என்ற குறுகிய அரசியலுக்கு மேலும் வக்கிரமாகி வழிகாட்டியது.

இப்படி புலிகள் எதை விரும்பினரோ, அதற்கு மாற்றான அனைத்தையும் துரோகமாக்கினர். இதற்கு மரண தண்டனை வரை பரிசாக வழங்கினர். இப்படித் தான் இப்போராட்டம் படிப்படியாக தன்னைச் குறுக்கிய வட்டத்துக்குள் சுருங்கி வந்தது.

இதில் இருந்து மீள்வதன் மூலம் தான், தமிழ் மக்களுக்கு விமர்சனம் கிடைக்கும் என்பதே எமது ஆதங்கமான விமர்சனங்கள். இதைத்தான் இவர்கள் துரோகத்தனமாக காட்டுகின்றனர். இதன் மூலம் அரசியல் ரீதியாக தாம் நீடித்து விடலாம் என்று, மெய்யாகவே இவர்கள் நம்புகின்றனர்.

இது இயல்பாக புலிகளை ஆதரித்தால் அது தியாகம், புலிகளை எதிர்த்தால் அது துரோகமாகி விடுகின்றது. இது சமூகத்தின் மீதான, கொடுமையிலும் கொடுமையாகியது. புலிகள் கண் அசைவுக்கு இசையாத எதுவும், உயிர்வாழ முடியாத அவல நிலை. இப்படி இலகுவான அரசியல் வரையறை சார்ந்த வரட்டுக் கொடுமை. இப்படித் தான், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு புலிப்போராட்டம் வழிநடத்தப்பட்டது. இதற்குள் தான், புலிகளின் மொத்த அரசியல் வடிவமும் இயக்கப்படுகின்றது.

புலிகளின் சொந்த விருப்பங்கள் தான், தமிழ் தேசியமாக காட்டப்பட்டது. இதற்கு உட்படாத அனைத்தும் துரோகமாகியது. இப்படித் தான், இதற்குள் தான் புலிகளின் வரலாறு உருண்டது. இதை கண்காணிக்க, இதை நடைமுறைப்படுத்த படுகொலைகள், புலியில் நடைமுறை அரசியலாகியது. இதை நியாயப்படுத்தவே சொந்தப் பலியிடல். இதையே புலிகள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்றனர்.

இதற்கு ஆதரவை பெறுவதும், ஆட்களை திரட்டுவது என்பதும், இயல்பான சமூகத்தின் போராட்ட உணர்வில் செய்யப்படவில்லை. தேச மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளில் இருந்து செய்யப்படவில்லை. மாறாக தமது சொந்தக் கருத்தை ஒற்றைப் பரிணாமத்தில் திணித்து, தமது சொந்த புலி நலனை சாதிக்க முனைந்தனர்.

இப்படி மக்கள் நலன்கள் புலிகளின் நலன்களில் இருந்து வேறுபட்டதால் தான், கருத்து தளத்தை குறுக்கி கட்டுப்படுத்த வேண்டிய நிலை புலிக்கு ஏற்பட்டது. மக்களின் போராட்டத்தில் இருந்த புலிகள் அன்னியமாகிச் செல்ல, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை வெட்டியெறிந்தனர். மக்களோ கருத்துகளற்ற நடைப்பிணமாகினர்.

இப்படி சமூகத்தின் பன்மைத் தன்மையை அழித்து, ஒற்றைப் பரிணாமத்தில் மக்கள் முன் கருத்தைத் வரட்டுத்தனமாவே திணித்தனர். இப்படி மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை தம் பின்னால் வைத்துக்கொண்டு, வெம்பிய பிஞ்சுகளை உள்வாங்கினர். அறிவியல் ரீதியாக சமூகத்தில் சிந்தித்து செயலாற்ற முடியாத, கடைநிலையில் உள்ள சமூகப் பிரிவையே புலிகள் உள்வாங்க முடிந்தது. இதை வைத்து பிழைத்துக் கொள்ள விரும்பிய ஒரு அறிவுப் பகுதி இதை தனக்காக பயன்படுத்தியது.

இப்படி போராட்டம் மக்களில் இருந்து அன்னியமாகிய, படிப்படியாக ஒரு பிரிவின் குறுகிய சொந்த நலன் சார்ந்த போராட்டமாகியது. இதன் யுத்த தந்திரமும், பிரச்சாரத் தந்திரமும் என்பது, குறுகிய தமது இருப்பு சார்ந்த ஒன்றாகியது. இதுவே மிகமிக மலிவான அரசியலாகியது.

எதிரிகளைத் தாக்குவதும், எதிரி திருப்பி மக்களை தாக்குகின்ற போது அதை வைத்து அரசியல் செய்வதுமாக மாறியது. மக்களின் அரசியல் கோரிக்கைகள் எதுவும் இதற்குள் இல்லாத வகையில், போராட்டம் ஆழமாகவே ஒரு குறுகிய வழியில் குறுக்கப்பட்டது.

இப்படி மக்கள் தாம் போராடாத வகையில், புலிகள் அவர்களை கண்காணித்தக் கொண்டனர். மக்களை புலிகளின் வெறும் மந்தைக் கூட்டமாக்கினர். மேயவிட்டால் அதில் ஓடி மேயும் வகையில், மக்களின் உணர்வை உணர்ச்சியை மலடாக்கினர். மக்களின் உணர்ச்சியை தூண்ட எதிரி மீது தாக்குதலை நடத்தி, எதிரி மக்கள் மேல் தாக்குதலை நடத்துவதை உருவாக்கும் புலிகளின் குறுகிய யுத்த தந்திரம் அரசியலாகியது.

மக்களை அணிதிரட்டாத புரட்சி பற்றி பேசும், சேகுவேராவின் கோட்பாடுகளில் ஒன்றுதான் இது. இப்படித்தான், இதற்குள் தான் புலிகள் மக்களின் உணர்வை, உணர்ச்சியை அறுவடை செய்தனர். இப்படி புலிகள் மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியமாக்கினர். புலியின் செயலுக்கு ஏற்ப உணர்வும் உணர்ச்சியும் என்ற எல்லைக்குள், போராட்டம் கீழ் இறங்கியது.

மக்களை தமக்கு வாலாட்டவும், குலைக்கவும் பழக்கப்படுத்தினர். எந்த சுயமுமற்ற மக்கள் கூட்டத்துக்கு, வேடிக்கையும் வித்தையும் (இராணுவ சாகசங்களையும்) காட்ட வேண்டியிருந்தது. இராணுவம் மீதான தாக்குதல்கள் மூலம், ஊதிவிட்ட பலூன் போல் உணாச்சிவசப்படுத்தும் வித்தையை புலிகள் நடைமுறைப்படுத்தினர். மறுபக்கத்தில் தாக்குதல் இல்லாத போது, காற்றுப் போன பலூன் போல் உணர்ச்சியை இழந்து அது புலியை விராண்டுகின்றது.

இதில் உள்ள சோகம் என்னவென்றால், மக்கள் மட்டுமல்ல சொந்த புலிப் படையே இந்த நிலைக்குள் சோர்ந்து துவண்டு போவதுதான். புலியின் முன்னணி தளபதிகளுக்கும் இந்த கதி ஏற்பட்டுவிடுகின்றது. தலைவர் புலிகளின் தளபதிகளுக்கே எல்லாளன் படையைக் காட்ட வேண்டிய அளவுக்கு, நிலைமை நெருக்கடிக்குள்ளாhகியுள்ளது. தலைவர் தாக்குதலை நடத்தி தம் மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டியுள்ளது. இப்படி சொந்த புலித் தளபதிகளினதும், அணிகளினதும் நம்பிக்கையைப் பெற வேண்டிய அளவுக்கு அவலம். இதானாலேயே தாக்குதல்களை செய்து காட்ட வேண்டிய கட்டாய நிலை.

இப்படி புலிகளின் அரசியலே, இராணுவ தாக்குதல் தான். அதைச் சுற்றித்தான் புலிகள் உருவாக்கப்பட்டனர். அமைப்பையும், தன்னையும் பாதுகாக்க இராணுவத் தாக்குதல் என்ற குறுகிய எல்லைக்குள், இப்படி புலிகள் முடங்கிவிட்டனர். போராட்டம் இப்படி குறுகிய எல்லைக்குள் சிதைந்தது. இப்படியான நெருக்கடிக்குள் புலிகளும், புலிகளின் தலைவரும் சிக்கியுள்ளனர்.

மீள்வதற்கான தமது பாதைகள் குறுகி, அவற்றை தாமே மூடிவிட்டனர். இனி புலிகள் அரசியல் பேச முடியாது. இராணுவத்தைக் கொன்றும், மற்றவனைக் கொன்றும், அதையே அரசியலாக செய்யப் பழக்கப்பட்ட ஒரு இயக்கம், இயல்பாகவே தனிமைப்பட்டு விடுகின்றது. குறுகிய எல்லைக்குள் சுருங்கி, வெளிவர முடியாது தானாகவே மரணிக்கத் தொடங்குகிறது.

மக்களில் இருந்து அன்னியமாக, அது பணக்கார இயக்கமாகியது. பணத்தை குவிப்பதே, அதன் சொந்த அரசியல் இலட்சியமாகியது. இதனால் தன்னை ஒரு மாபியா இயக்கமாக வளர்த்துக் கொண்டது. இதன் மூலம் மக்களை சார்ந்து இருத்தல் என்பதற்குப் பதில், பணத்தை சார்ந்து இயங்குதல் என்ற வகையிலும் தன்னை மாற்றிக் கொண்டது.

இதற்கு ஏற்ப நவீன ஆயுதங்கள் புரட்சி செய்யும் என்பது புலிகளின் மற்றொரு அரசியல் சித்தாந்தம். இப்படி நவீன ஆயுதங்கள் கொண்ட தேசியத்தைக் கட்டினர். இதன் முன் மக்களோ அந்த நவீன ஆயதங்களை வேடிக்கை பார்த்தனர். அதைப்பற்றி கதைத்தனர். நவீன ஆயதங்கள் புரட்சி செய்ய, மக்களை வேடிக்கை பார்ப்பதன் மூலம் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்தனர்.

இப்படி குறுகிப்போன புலிகளின் அரசியல் மற்றும் யுத்த தந்திரத்ததை வரையறுத்துவிட முடியும். இதற்குப் பின்னால் மக்களின் அரசியல் உணர்வும், உணர்ச்சியும் கிடையாது. மக்கள் மந்தைகளாக, வேடிக்கை பார்ப்பவர்களாக வைத்துக் கொண்ட அடக்குமுறை தான், புலிப் போராட்டம். தமிழ் மக்களுக்கும் புலிக்குமான அரசியல் உறவு இதற்கு உட்பட்டது தான்

இப்படி கூனிக் குறுகிக் போன போராட்டமாகியது. இதற்கு மக்கள் அரசியல் கிடையாது. மக்கள் சார்ந்த நோக்கம் கிடையாது. இதுவே கடந்து போனதும், இன்றும் ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இதுவல்லாத சமூகத்தின் இருந்த அனைத்துக் குரல்களையும் வெட்டிச்சாய்த்தனர். கண்மூடித்தனமான அரசியல் படுகொலைகள் மூலம், சமூகத்தை இருண்ட சூனியத்துக்குள் தாழ்த்தி அடிமைப்படுத்தினர். தம்மை தாம், தமிழரின் ஏகப்பிரதிநிதிகளாக்கிக் கொண்டனர். இந்த கொடுமை என்பது சமூகத்தில் உயிர் உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் பிடுங்கி எறிந்தது. சமூகமோ மூச்சுத்திணறி தானாக மடியத் தொடங்கியது.

புலிகளின் இந்த பாசிசத்தை எதிர்கொள்ளமுடியாது திணறிய மற்றைய குழுக்கள், வேட்டையாடப்பட்டனர். ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட்டனர். இப்படி போராட்டம் என்பது சமூகத்தில் இருந்து அன்னியமாகி, தன்னைக் குறுக்கி அழிக்கத் தொடங்கியது.

புலிப் பாசிசத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பியவர்கள் கண்மண் தெரியாத திசையில் ஓடினர். அதில் ஒரு பகுதியை இந்திய இலங்கை அரசுகள், தமது சொந்த அரசியல் இராணுவ கூலிக் குழுக்களாக மாற்றின. இப்படி புலிகள் தமக்கு எதிரான எதிரியை பலப்படுத்தினர். எதிரியின் பக்கத்தில், தமிழரின் ஒரு பிரிவை செல்லுமாறு எட்டி உதைத்தனர்.

இப்படி தொடர்ச்சியாகவே புலிகள் சமுகத்தினுள் எதிரிகளை உற்பத்தி செய்தனர். ஒரு பாசிச சூழலை சமூகத்தின் முன் வித்திட்டனர். புலிகளின் கொடுமைகள் பலவாகப் பெருகியது. இதனால் தமிழ்ச் சமூகம் தானாகவே தப்பியோடத் தொடங்கியது. எதிரியின் பிரதேசம் பாதுகாப்பானதாக கருதும் அளவுக்கு, புலிப் பாசிசம் அவர்களை விரட்டியது. இதுவே சமூக எதாhத்தமாகியது. மக்கள் தப்பியோடாதவாறான புலிகளின் பாஸ் மற்றும் தடைகள் இதை தடுத்து நிறுத்திவிடவில்லை.

தப்பியோட முனைந்தவர்கள் கதியோ, தமது பொருளாதார வாழ்வையே இழந்தனர். கொழும்பு என்பது சுயமாக வாழமுடியாத எல்லைக்குள் பொருளாதார சுமைக்குள் மக்களை அன்னியமாக்கியது. வாழ வழியற்று அதை தேடியவர்கள், அரச கூலிக் குழுக்களின் வலையில் இலகுவாக சிக்கிக்கொள்ளத் தொடங்கினர். இப்படி புலிகள் போராட்டம், எதிரியை பலப்படுத்தும் வகையில் மக்கள் விரோதத்தை அரசியலாக்கியது. இப்படி வரலாற்றில் நம்ப முடியாத ஒன்று தான், நம்பும்படியாக நடந்தது.

இப்படி புலிகள் தம்மைச் சுற்றி, சதா எதிரியை உற்பத்தி செய்தனர். நம்பமுடியாத வேகத்தில் அது பெருகியது. அது பல தளம் கொண்ட, பல முனைப்புக் கொண்ட ஒன்றாகியது. உண்மையில் அவர்களாக அதில் ஓடிச் சென்றது கிடையாது. மாறாக புலிகள் தான் எதிரியை பலப்படுத்தும்படி, தமது பாசிசத்தை சமூகம் மீது நிறுவினர். இப்படி தம்மைத்தாம் குறுக்கி வந்தனர்.

இப்படி புலிப் போராட்டம் என்பது ஆக்கத்துக்கு பதில், அழிவைக் கொண்ட ஒன்றாக மாறியது. புதிது புதிதாக எதிரியை உற்பத்தி செய்யும் போராட்டம் தான், புலித் தேசியமாகியது. சமூகத்தின் பல்வேறு கூறுகளை உண்மையான தமிழ் தேசியமாக்க அதனால் முடியவில்லை. மாறாக தமிழ் தேசியத்துக்கு பதில், புலித்தேசியத்தை வைத்த, ஒரு குறும் கும்பலாகவே சீரழிந்து வந்தனர். அது தனக்குள் தானே ஒரு கிணற்றுத் தவளையாக முடங்கிக் கொண்டது. பரந்து விரிந்த மனித சமூகத்துடன் எப்படி இணைவது என்பதை, அதனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு அதன் அரசியல் குறுகியது.

அவர்கள் தமது குறுகிய புலி அரசியலைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை மேலும் ஒடுக்கினர். இப்படி உண்மையான தேசியத்துக்கு தலைமை தாங்க வேண்டிய புரட்சிகரமான மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி தேசியத்துக்கு தலைமை தாங்கும் தகுதியை புலிகள் இழந்தனர். புலிகளின் இராணுவ பொம்மைகளின் ஆட்சியை, மொத்த மக்கள் மேல் திணித்தனர். அனைத்தும் இராணுவ வகைப்பட்ட இராணுவ ஆட்சியாகியது. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயமான தன்மை என்பது, இராணுவத் தன்மையாகி, அதையே அது மறுக்கத் தொடங்கியது. ஒரு இராணுவ சூனியம் தோற்றுவிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் ஆழமாக ஒடுக்கப்பட்டனர். சமூக உள் முரண்பாடுகளான ஒடுக்குமுறை ஒருபுறம். அதன் மேல் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை மறுபுறம். புலிகள் ஒடுக்குமுறை, மக்கள் தமது வாழ்வையே தாங்கிக் கொள்ளமுடியாத அவலமான வாழ்வுக்குள் வீழ்ந்தனர். சமூகம் தப்பிப் பிழைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

புலிகள் இதை எதிரியின் நடவடிக்கையாக முத்திரை குத்தினர். இப்படி புலிகள் அரசியல் என்பது குறுகிவந்தது. தன்னை நியாயப்படுத்த, சமூகத்தில் எதிரியை உற்பத்தி செய்வதே புலி அரசியலாகியது. சமூக முரண்பாடுகளையே புலிகள் தமது எதிரிக்குரிய அடையாளமாக்கினர். தமது எதிரிகளின் அடையாளம், இந்த முரண்பாடுகளினான அடையாளமாக மாற்றினர். இப்படி தமிழ் மக்களின் எதிரிகள் என்று, ஆயிரமாயிரமாக புலிகள் உருவாக்கினர். இப்படி சமூகமே புலிக்கு எதிராக மாறியது. தமிழ்த் தேசியமே புலிக்கு எதிராக மாறியது. தமழ் மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து, புலி உரிமையை அதனிடத்தில் திணித்துவிட்டனர். இதை கண்காணிக்க மக்கள் மேல் வன்முறையை ஏவினர்.

உண்மையில் இப்படி தமிழ்ச் சமூகம் சொல்லவும் மெல்லவும் முடியாத பாரிய அவலத்தையும், சோகத்தையும் சந்தித்தனர். மக்கள் புலிகளுடன் வாழமுடியாத ஒரு நிலையை அடைந்தனர். புலிகளுடன் இருப்பதில் இருந்தும் தப்பியோடவே விரும்பினர். இப்படி போராட்டம் மக்களிடம் இருந்து விலகிச்சென்றது.

இலட்சம் இலட்சமாக தமிழ் சமூகம் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு அன்னிய நாட்டுக்கு தப்பி ஓடினர். புலிகளின் பாசிசமே தேசிய மொழியாகி, அது மட்டும் தான் தேசமென்னும் நிலையில் மக்கள் அங்கு வாழமுடியவில்லை. புலியின் பொருளாதார கொள்கையால், தமிழ் தேசிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. மக்கள் எப்படியும் புலிகளுடன் வாழமுடியாத நிலை.

இப்படி மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த ஓடியவர்கள் 10 இலட்சத்தை தாண்டிவிட்டது. இது மட்டுமா இல்லை. மேற்கு நோக்கி புலம்பெயர முடியாதவர்கள், சிங்களப் பகுதிகளை நோக்கி ஓடினர். அதுவும் பத்து இலட்சமாகி விட்டது. இதைவிட இந்தியாவில் ஒன்றில் இருந்து இரண்டு இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். மத்திய கிழக்கு நோக்கி புலம்பெயர்வு என்று, ஒரு தேசிய இனமே புலம் பெயர்ந்தது. புலிகள் வைத்த தேசியத்துடன் மக்கள் நிற்க முடியவில்லை. அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ முடியவில்லை.

இப்படி புலிப்போராட்டம் மக்களையே சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடித்தது. அது மக்களை தலைமை தாங்கும் தகுதியையும், மக்களுக்காக போராடும் தகுதியையும் இழந்தது. மக்களைப் போராட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கும் பாசிசத்தை விசிறி அடித்தனர்.

புலிப் பாசிசம் சொந்த மக்களை மட்டும் ஓடு என்று துரத்தவில்லை. தமிழ் மக்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லீம் மக்களை, கூட்டாகவே அடித்து விரட்டினர். வாழ்ந்த ப+மியை விட்டே அவர்களை துரத்தினர். புலிகளின் குறுகிய புலிப்போராட்டம், அனைத்து மக்களையும் துரத்தி அடித்தது. மக்கள் தமது வாழ்வுக்காக போராட வேண்டியவர்கள், தமது வாழ்வை இழந்தனர். குறைந்தது மக்களுக்காக போராட வேண்டியவர்களால், மக்கள் வாழ்வை இழந்த அவலம். இப்படி இந்தப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிராக மாறியது. இதை தவறு என்றவர்களை துரோகி என்றனர். வெட்டியும், கொத்தியும், சுட்டும் போட்டனர்.

இப்படி போராட்டம் என்ற பெயரில் மக்கள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக சிதறியோடிய அவர்கள் உதைப்பட்ட நிலையில், ஐயோ போராட்டமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். போராட்டம் என்பது வெறுமனே, புலிகளின் அபிலாசைக்குள் சுருங்கி வெம்பியது.

இந்த வெம்பிப்போன அரசியல் சமூகத்தின் இழிவான ஆதிக்கத்தை சார்ந்த தன்னை நிலை நிறுத்த முனைந்தது. யாழ் மையவாதம் தலைக்கேற, பிரதேசவாத உணர்வுகளை கொண்டு முழு தமிழ் சமூகத்தையும் இதற்குள் ஒடுக்கினர். பிரதேசவாத உணர்வுகளையும், அது சார்ந்த ஒடுக்குமுறையை தக்கவைத்தபடி, பிரதேச ரீதியாக மக்களைப் பிரித்தாளுவதை கையாண்டனர். இன்று இதன் விளைவால் பிரதேசங்கையே விட்டு ஓட வேண்டிய அளவுக்கு, புலிகள் பிரதேசவாத அரசியல் இருண்டு போனது. வெளிச்சதுக்கு பதில் இருட்டு என்பதே புலி அரசியல்.

எங்கும் எதிலும் சூனியவாதம். புலிப் போராட்டம் அறநெறியற்ற ஒன்றாகியது. பொதுவாக இந்த சமூக அமைப்பில் நிலவும் தந்தைக்குரிய வழிகாட்டல் கிடையாது. தாய்க்குரிய கனிவு கிடையாது. தலைமைக்குரிய சமூகப் பொறுப்பு கிடையாது. அடி உதை, வெட்டுக் கொத்து, போட்டுத் தள்ளுதல், சதியும் சூதும், பொய்யும் புரட்டும், இதுவன்றி புலியில்லை என்றாகிவிட்டது.

இப்படி சர்வதேச ரீதியாக, தமது இழிசெயல்களால் அம்மணமானார்கள். சர்வதேச மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், அந்த மக்களை ஒடுக்கிய அரசுகளின் தயவுகளை வேண்டி நிற்குமாறு தள்ளிவிட்டனர். அவர்களோ புலிகளின் மக்கள் விரோத செயல்களை பட்டியலிட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தி தடை செய்து ஒடுக்குகின்றனர். இப்படி புலிகள் உலகளவில் தனிமைக்குள் சிக்கிச் சிதைகின்றனர்.

இந்தியாவில் ராஐPவை வெறும் தனிமனித பழிவாங்கும் உணர்வுடன் கொன்றதன் மூலம், இந்தியாவிலும் தமக்கான அரசியல் கிறுக்குத்தனம் கொண்ட சூனியத்தை நிறுவிக் கொண்டனர். எங்கும் எதிலும் தனிமைப்பட்டு, ஒரு சிறிய கிணற்றுக்குள் நின்று கத்தும் தவளையாக மாறினர்.

இவர்கள் ஒரு அரசியல் பேச்சுவார்த்தையைக் கூட நடத்தும் தகுதி தமக்கு கிடையாது என்பதை நிறுவினர். அரசியல் சூனியமாகிவிட்ட நிலையில், தமது நலன் என்ற எல்லைக்குள் நின்று அதிலும் தம்மை அம்மணமாக்கினர். தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்பதற்குப் பதிலாக அவர்கள் பேசியதோ அற்பத்தனமானவை. இப்படி ஒரு அரசியல் இராஜதந்திரமே கிடையாது. தமிழ் மக்களை தலைமைதாங்கி வழிநடத்திச் செல்லும் தகுதி தங்களுக்கு கிடையாது. என்பதை, பேச்சுவார்த்தையிலும் மீள நிறுவினர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பேச்சுவார்த்தையில் கோருவது தான் அடிப்படையானது. பேரினவாதத்தின் அரசியல் இருப்பில் கைவைத்து, அரசியல் பேசத்தெரியாத முட்டாள்கள் என்பதை நிறுவினர். சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு வைக்கும் அரசியல் தீர்வை அல்லவா அவர்கள் கோரியிருக்க வேண்டும். இது கூட தெரியாமல் புலிகள் அரசியல் நடத்தினர். இப்படி புலி அரசியல் பேரினவாத அரசை பாதுகாக்கும் அரசியலாகிப் போனது. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுக்கும் புலிகள், எப்படி அதை அரசிடம் கோருவர் என்பதே இங்கு நிதர்சனமாகியது.

இந்தியாவை நிர்ப்பந்திக்கும் வகையில், இந்தியா வாலாட்டாத வகையிலும், இந்திய மாநிலங்களுக்கு குறைந்த எதையும் நாம் பேச முடியாது என்று அழகாகவும் ஆணித்தரமாகவும் இராஜதந்திரமாகவும் கூறியிருக்க முடியும். இப்படி உலகை வெல்வதற்கு எத்தனையோ இராஜதந்திர அரசியல் வழிகள் இருந்தது. எல்லாவற்றையும் புலிகள் நாசமாக்கினர்.

எங்கும் எதிலும் இருட்டு. தமிழ் மக்கள் வெளிச்சத்தைப் பார்க்க எந்த வழியுமில்லை. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் பத்து வருடத்தில் தமிழ் மக்கள் எம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் வகையில் எதுவும் எஞ்சாது. தமிழ் இனமே இன்று குறுகி சிறுத்துவிட்டது. இலங்கையில் இரண்டாவது பெரிய இனம், நாலாவது சிறிய இனமாக எப்போதே மாறிவிட்டது. மக்கள் சொந்த வாழ்வைத் துறந்தோடுகின்றனர். தமிழ் மக்கள் அங்கு வாழவ்தற்காக இருக்கமாட்டார்கள் என்ற நிலைக்கு, புலிகள் தமிழ் மக்களின் வாழ்வுக்கான சூழலை அழித்துவிட்டனர்.

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது இப்படித் தான். எங்கும் எதிலும் தோல்வி. அவர்களை வாழ வைத்த, இராணுவ சாகசங்கள் கூட பெரும் தோல்வியில் முடிகின்றது. மீள்வதற்கான மீட்சிக்கான பாதை கிடையாது. சுயவிமர்சனம் என்ற மீள்வதற்கான பாதையை, எல்லாம் சரியாக சிறப்பாக நடப்பதாக நம்பும் கொங்கிரீட்டைப் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.

இப்படி கடந்து வந்த வரலாறு எங்கும் பாரிய மனித விரோதத்துடன் அரங்கேறியது. மனித விரோதமல்லாத எதையும், அவர்கள் உருவாக்கியது கிடையாது. தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுடையது என்பதையே மறுத்தனர். அனைத்தையும் புலியாக்கி, புலிப் போராட்டமாக்கி குறுக்கினர். வெறும் வரட்டுத்தனமான நம்பிக்கையைக் கொண்டு, உயிராற்றல் உள்ளவற்றை கருக்கினர். குறுகி குறுகி, வன்னிக்குள் முடங்கிய நிலைக்குள் சென்றுவிட்டனர்.

அங்கு வாழ்ந்த மக்களை தப்பியோடாத வண்ணம் சிறைப்பிடித்தனர். தம்மைச் சுற்றி தமது பாதுகாப்புக்காக அவர்களை நிறுத்தியுள்ளனர். மக்கள் வெளியேறாத வண்ணம், ஒரு திறந்த வெளிச் சிறையில் மக்களை அடைத்துள்ளனர். புலிகள் தமது குறுகிய வட்டத்தை சுற்றி நடக்கின்றனர். அவர்களுக்கு மனித கேடயங்களாகவே வன்னி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இப்படி வன்னியில் ஒரு லட்சம் மக்கள் புலிகளால் சிறைவைக்கபட்டுள்ளனர். அவர்களை பலாத்காரமாக ஆயுதபாணியாக்குகின்றனர். இந்த மக்களைக் கொண்டு தான், மீட்சிக்கான புலிகளின் இறுதி தற்கொலைக்கு ஒப்பான தமது தாக்குதலை நடத்த முனைகின்றனர்.

ஆனால் புலிகளின் ஆயுதம் ஏந்திய படைப்பிரிவும், அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட மக்களின் உளவியல் என்பதும், போராடும் ஆற்றலை இழந்துவிட்டது. யுத்தத்தை விரும்பாத மக்கள் முன், யுத்தம் வலிந்து திணிக்கப்படுகின்றது. இது எண்ணிக்கையற்ற மனித இழப்பையும், தமிழ் தாய்மையையுமே தொப்புள் கொடியுடன் அறுத்தெறிகின்றது. மனித அவலமும், மனிதத் துயரமும், வன்னி மேல் கவிழ்ந்து கிடக்கின்றது. மனித வாழ்வே பிணமாகி நாற, மக்கள் நடைப்பிணமாகி விட்டனர். தாம் எதற்கு உயிருடன் வாழ்கின்றோம், ஏன் வாழ்கின்றோம் என்று தெரியாத ஒரு நரக வாழ்க்கை.

புலிகள் என்ற குறுகிய சூனியத்தில், எல்லாமே பூச்சியமாகிவிட்டது. இவை இன்று இராணுவத்தின் வெற்றியாக மாறுகின்றது. புலிகளின் பாரிய மனித இழப்புகளாக மாறி வருகின்றது. தமிழ் மக்களின் சூறையாடிய பொருட் செல்வம், எதிரியிடம் அன்றாடம் சென்றுவிடுகின்றது அல்லது அழிந்து விடுகின்றது. தமிழ் மக்கள் பெறப் போவது என்ன? இறுதியில் எதுவுமில்லை. இழப்புகளைத் தவிர எதுவுமில்லை. தமிழர்கள் வாழ்ந்த ப+மியில், தமிழர்கள் வாழ்வார்களா என்ற நிலை கூட இன்று உருவாகியுள்ளது. இது தான் இன்றைய உண்மையான எதார்த்தம். தமிழ் மக்கள் எப்போதோ யார் யாரிடமெல்லாமோ இழிந்து நலிந்து தோற்றுவிட்டார்கள். இப்படி தமிழ் மக்களை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கியவர்கள், இன்று தாங்கமுடியாது அதற்குள் தோற்றுப் போகின்றனர்.

பி.இரயாகரன்
08.12.2007

>

மாஓ வாதிகள்...

மாஓ வாதிகள்...

//எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாகவர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //

மறுபக்கம்:

''மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல. ''

நேபாளத்தில் அதி முக்கியமான அரசியல் நிகழ்வென்று கூறக் கூடிய விதமாக முடியாட்சியின் ஒழிப்பை அதன் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள மாஓ வாதிகளின் வெற்றி, வெறும் தேர்தல் வெற்றியல்ல. பாராளுமன்றத்தின் மூலம் வர்க்கம், இனம், மதம், சாதி, பால் என்ற அடிப்படைகளில் ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளை வென்றெடுக்க இயலாது என்பது ஒரு புறம் இருக்க ஒரு சனநாயக நாட்டில் பாராளுமன்றத்தின் மூலம் செய்யக் கூடியதைக் கூடச் செய்ய இயலாதளவுக்கு உண்மையான அரசியல் அதிகாரம் நேபாள மன்னராட்சியின் கையில் இருந்தது. நேபாள இராணுவம் அந்த அரசியல் அதிகாரத்தின் உத்தரவாதமாக இருந்தது.

1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாராளுமன்ற இடதுசாரிக் கட்சியால் எதையுமே செய்ய இயலாதது போக அந்த ஆட்சி கூடக் கலைக்கப்பட்டு மன்னராட்சிக்கு உடன்பாடான நேபாள காங்கிரஸ் அரசாங்கம் அமைத்தது. இத்தகையதொரு பின்னணியிலேயே மாஓ வாதக் கம்யூனிஸ்ட்டுக்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறி 1996 ஆம் ஆண்டு மக்கள் யுத்தத்தைத் தொடுத்தனர்.

அப்போது அவர்கள் வலுவான ஒரு சக்தியாக இருக்கவில்லை. அவர்கள் ஒரு புறம் அரசுடன் போர் தொடுத்தனர். மறுபுறம் தங்கள் ஆதரவுப் பிரதேசங்களில் மாற்று அரசியல் அதிகாரம் ஒன்றைக் கட்சியெழுப்பினர். இந்த அதிகாரத்திற்கு ஆயுதங்களை விட அரசியல் முக்கியமானதாக இருந்தது. காணிச் சீர்திருத்தம், பண்ணையடிமை முறை ஒழிப்பு, சாதி, மதப் பாகுபாட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், பெண்கள் சமத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் அவர்களது அக்கறை இருந்தது. அதை அவர்கள் செயலிலும் காட்டினர். கொள்கைகளை மக்களுக்கு விளக்கினர். அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி மக்களுடன் கலந்தாலோசித்தனர். மக்கள் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்தினர்.

கட்சியிலும் மக்கள் படையிலும் தலைமைப் பொறுப்புகளிலும் பல்வேறு மட்டங்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் இருந்தனர். யாரையும் கட்டாயப்படுத்திக் கட்சியிலோ படையிலோ சேர்க்கும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. மக்கள் அரச படைகளதும் ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாட்களதும் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. தாங்கள் வென்றெடுத்த உரிமைகளைக் காத்து விருத்தி செய்ய அவர்களுக்கு அரசியல் தேவைப்பட்டது. அரசியற் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் மக்களை நெறிப்படுத்தியது. வெகுசன அரசியல், வெகுசனப் போராட்டம், மக்கள் யுத்தம் என்பவற்றை முதன்மைப்படுத்தியது. ஒரு அரசியல் சிந்தனையே.

நேபாளத்தின் சனத்தொகை இலங்கையுடன் ஒப்பிடத்தக்கது. அங்கு பத்தாண்டுகளாக நாடு தழுவிய ஒரு ஆயுதப் போராட்டம் நடந்தது. அப் போராட்டத்தின் போக்கில் நாட்டின் 80 முதல் 90 சதவீதம் வரையிலான நிலப்பரப்பு மாஓ வாதக் கம்யூனிஸ்ற்றுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாஓ வாதிகள் மக்கள் யுத்தத்தின் மூலம் ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்த எத்தனையோ தருணங்கள் இருந்தன. அவர்கள் அதேவேகத்தில் தொடர்ந்திருந்தால் தலை நகரமான காத்மண்டு உட்பட முழு நாட்டிலும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஓரிரு ஆண்டுகளே போதுமாயிருந்திருக்கும். இதை அப்போது ஒத்துக் கொள்ளத் தயங்கியவர்கள் இப்போது ஒத்துக் கொள்கின்றனர்.

"வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓவாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓவாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தைமுடிவு செய்யும். "

மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச் சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில் பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப் பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில் குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்கு சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே, விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம் கொடுக்க நேரும்.

நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல் குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நிய ஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்த பத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும் இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு முக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது.

நேபாள முடியாட்சி தன் இயலாமையை மூடி மறைக்கப் பாராளுமன்றத்தைக் கலைத்து முழு அதிகாரத்தையும் தன் வாசமாக்கிய போது பாராளுமன்றக் கட்சிகள் இயங்குவதற்கான வாய்ப்பே இல்லாது போயிற்று. மன்னராட்சிக்கு எதிராக அவை ஒன்றிணைந்த போதும் அவற்றால் மன்னராட்சியின் அடாவடித்தனங்கட்கு முன் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இச் சூழலில் மாஓ வாதிகளின் குறுக்கீடு அவர்கட்கு உதவியாக அமைந்தது. அவர்களால் மன்னராட்சிக்கு எதிராகத் தைரியமாக ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிந்தது. சுருங்கச் சொன்னால் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மாஓ வாதிகள் ஒரு சனநாயக ஆட்சியை இயலுமாக்கினர். வேறு விதமாக நேபாளத்திற்கு எவ்விதமான சனநாயக ஆட்சியும் மீண்டிருக்க இயலாது.

//மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச் சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில் பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப் பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில் குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்குசனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே,விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம்கொடுக்க நேரும்.
நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல்குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நியஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்தபத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும்இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்குமுக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது. //

மன்னர் பணித்த பின்பு ஏழு பாராளுமன்றக் கட்சிகளிடையிலும் பழைய பாராளுமன்ற விளையாட்டுக்கு மீளுகிற நோக்கம் வந்து விட்டது. குறிப்பாக நேபாள காங்கிரஸ், ஐக்கிய மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ற் கட்சி என்பன தமது பாராளுமன்ற அரசியல் ஆதிக்கம் பற்றிய சிந்தனையிலே இருந்தன. மாஓ வாதிகள் அதற்கு உடன் படவில்லை. ஒரு அரசியல் நிர்ணய சபையைச் சனநாயக முறைப்படி தெரிந்தெடுத்துப் புதிய அரசியல் யாப்பொன்றை வகுத்து மக்களின் சனநாயக, அரசியல், சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்று வற்புறுத்தினர். வேறு வழியின்றி ஏழு கட்சிக் கூட்டணி அதற்கு உடன் பட்டது. அதன் பின்பும் மாஓ வாதிகள் அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை வலிமை பெற இயலாத விதமாகப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

தென் கிழக்கு நேபாளத்தின் மாதேஸி சமூகத்தினரிடையே இந்திய இந்துத்துவ விஷமிகள் கலவரங்களைத் தூண்டி விட்டனர். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை இழுத்தடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பல `கண்டங்கள் தாண்டி' மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல.

பத்தாண்டுக்கால ஆயுதப் போராட்டத்தின் மூலம் பால் அடிப்படையிலும் இன,மத,மொழி அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் இருந்து வந்த ஒடுக்கு முறைகட்கெதிரான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பழைய நிலவுடைமையாளர்கள் தங்களது இழந்த ஆதிக்கத்திற்கு மீளப் பலவாறும் முயல்வார்கள். அது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட வேண்டும். அதை விட முக்கியமாக நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புகிற பேரில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்த முயலும். ஏற்கனவே நேபாளத்தில் நிலை கொண்டுள்ள என்.ஜீ.ஓ. முகவர்கள் மூலம் பல குழிபறிப்பு வேலைகள் நடைபெறும். இதனிடையே கம்யூனிஸ்ட்டுகள் தம்மைத் திரும்பத்திரும்பப் புடமிட வேண்டும்.
வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓ வாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓ வாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தை முடிவு செய்யும்.

எவ்வாறாயினும் தேசிய வாதிகளும், தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாக வர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற் சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை.

-பேராசிரியர் கோகர்ணன்
நன்றி:தினக்குரல்

Thursday, May 1, 2008

""பார்ப்பன கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு! பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்!'' தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் "


""பார்ப்பன கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு!
பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்!''
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்



இந்துவெறியர்களின் தேசிய நாயகன் ராமனை இழிவுபடுத்திப் பேசியதற்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கொல்ல உத்தரவிட்ட தலைவெட்டி வேதாந்தியின் பார்ப்பனத் திமிரை எதிர்த்தும், ராமன் பாலத்தை வைத்து தமிழகத்தை குஜராத்தாக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 27.9.07 அன்று தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சாரத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கிரிமினல் வேதாந்தியின் உருவப் பொம்மையைத் தூக்கிலிட்டும், அவனது உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தும் மேற்கொள்ளப்பட்ட இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்று, பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான புரட்சிகர அரசியலை அவர்களின் நெஞ்சிலே பதிய வைத்தது.

ஓசூரில் 27.9.07 அன்று பு.ஜ.தொ.மு.வினர் ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது அங்கு அடியாட்களுடன் வந்த இந்துவெறியர்கள், தோழர்களுடன் தகராறு செய்ததோடு, கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு என்று எழுதப்பட்டிருந்த தட்டியைக் கிழித்து தீ வைத்து கொளுத்தினர். இதுபற்றி போலீசுக்குத் தகவல் தெரிவித்ததும், அங்கு வந்த போலீசு அதிகாரிகள் இந்துவெறி குண்டர்களைக் கைது செய்யாமல், சட்டம்ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி ஆர்ப்பாட்டத்துக்கு திடீர் தடை விதித்தனர். இதை ஏற்கமறுத்த தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதும், அனைவரையும் கைது செய்த போலீசு, பின்னர் இரவு விடுதலை செய்தது.

கடந்த ஆண்டில் பெரியார் சிலையை உடைத்து அவமதித்த இந்துவெறியர்களுக்கு எதிராக வருணாசிரமக் கிரிமினல் ராமன் படத்தை எரித்து ஓசூரில் பு.ஜ.தொ.மு.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டு ஆத்திரமடைந்த இந்துவெறி குண்டர்கள், ஓசூர் பு.ஜ.தொ.மு. செயலர் தோழர் பரசுராமனின் மண்டையை உடைத்து மிருகத்தனமாகத் தாக்கினர். ஓசூர் போலீசு இக்கொலைவெறிக் கும்பலைக் கைது செய்யாமல், தோழர் மீதே பொய் வழக்குப் போட்டது. இப்போது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ள இந்துவெறி கும்பல் மீது ஓசூர் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுதந்திரமாகத் திரிய விட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி ராமனின் யோக்கியதையை அம்பலப்படுத்தி பேசினாலும், அதிகார வர்க்கம் போலீசு நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் காவிமயமாகியிருப்பதை அம்பலப்படுத்தியும், இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகவும் பு.ஜ.தொ.மு.வினர் தொடர்ந்து வீச்சாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பு.ஜ. செய்தியாளர்கள்

Wednesday, April 30, 2008

பார்ப்பன ஜெயாவின் 'நீதி வாதம்"!

பார்ப்பன ஜெயாவின் 'நீதி வாதம்"!


நீதிபதிகளை மிரட்டுவதையும், விலைக்கு வாங்குவதையும் வாடிக்கையாகக் கொண்ட ஜெயா, நீதிமன்ற அவமதிப்பு பற்றிப் பேசுவது வேடிக்கையானது

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி, தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும் அக்.1 அன்று தமிழகம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இந்த உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்படாத, ""பந்த்'' ஆக நடந்து முடிந்தது.

பொழுது விடிந்து பொழுது போனால், ""தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும்'' என அறிக்கை விட்டு, வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஜெயாவிற்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் அவலாக மாறியது. ""தி.மு.க. நடத்தத் திட்டமிட்டிருந்த பந்த் மட்டுமல்ல, இந்த உண்ணாவிரதப் போராட்டமும் நீதிமன்ற அவமதிப்புதான்'' என அறிக்கைவிட்டு, தி.மு.க. அரசிற்கு எதிராக உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குக் கொம்பு சீவிவிட்டார், ஜெயா.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக மனு செய்யுமாறு அ.தி.மு.க.விற்கு ஆலோசனை வழங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் அகர்வாலும், நவலேகரும் ""தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்குக் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்'' என அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்புச் செயலாளர்களாக மாறிக் கருத்துத் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக தி.மு.க. அரசைக் கலைக்கலாம் என்றால், நீதிபதிகளையும், நீதிமன்ற நடைமுறைகளையும், அதனின் தீர்ப்புகளையும் தனது வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்தி வருவதற்காக ஜெயாவைச் சிரச் சேதமே செய்யலாம். ஜெயா, சமயத்திற்கு ஏற்றபடி, மாண்புமிகு நீதிபதிகளை மிரட்டவும் செய்திருக்கிறார்; அவர்களுக்கு பிஸ்கெட்டும் போட்டிருக்கிறார் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இவையாவும், ராமன் பாலம் போல பதினெழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த புனைவு அல்ல; கடந்த பதினைந்து ஆண்டுகளாக நம் கண்முன் நடந்துவரும் உண்மை.

ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (199196) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, ஜெயா பதவியில் இருந்தபொழுதே அம்பலமாகியது. மறைந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி இந்த ஊழலை விசாரிக்க தொடுத்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதி இலட்சுமணன், நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தார்.

ஜெயா, இந்த இடைக்காலத் தடையை சட்டத்தின் பொந்துகளில் புகுந்து உடனடியாக உடைத்துவிட்டாலும், தனக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விடும் என பீதியடைந்து போயிருந்தார்; நீதிபதி இலட்சுமணன் வேறு சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்ததால், அவரை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது அதன் மூலம் வழக்கை இழுத்தடிப்பது என்ற சூழ்ச்சியை மேற்கொண்டது, ஜெயாசசி கும்பல்.

இச்சதியின்படி, நீதிபதி இலட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொய் வழக்கு சோடிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது, பொய் வழக்கு என்பது விரைவிலேயே அம்பலமாகி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டாலும், ஜெயா கும்பலின் நோக்கம் நிறைவேறியது. ""நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தன்னைப் பாதிப்பதாக''க் கூறி, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இலட்சுமணன் விலகிக் கொண்டார்.

1996இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க.; ஜெயா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. இச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா தொடர்ந்த வழக்கில், அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபரான், ""சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது சட்டப்படி செல்லும்'' எனத் தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்திருந்த ஜெயா, தனது ஆதரவோடு நடந்துவந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, லிபரானை சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஜெயாவின் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வந்த மற்றொரு நீதிபதி, ஜெயாவின் நிர்பந்தங்களுக்குப் பணிய மறுத்ததால், அசாமுக்கு மாற்றப்பட்டார்.

சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லும் என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ஜெயா போட்ட வழக்கில் தீர்ப்புச் சொல்லப்படும் நேரத்தில், ஜெயாவின் ஆதரவோடு நடந்துவந்த ""உத்தமர்'' வாஜ்பாயின் ஆட்சி, ""சிறப்பு நீதிமன்றங்களைக் கலைத்துவிட்டு, ஜெயாவின் வழக்குகளை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றும்'' உத்திரவைப் போட்டு, ""நீதி''யைப் பலியிட்டு, ஜெயாவைக் காப்பாற்றியது. ஜெயாவின் ஊழல் வழக்குகளை விசாரணை மட்டத்திலேயே நீர்த்துப் போகச் செய்வதற்காக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், அ.தி.மு.க.வின் தம்பிதுரை சட்ட மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

கொடைக்கானல் ""ப்ளஸண்ட் ஸ்டே'' விடுதி ஊழல் வழக்கில், ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. காலிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2000ஆம் ஆண்டு நடந்த இந்தக் கொலை குற்றத்திற்கான தீர்ப்பு, ஏழு ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. இந்தத் தாமதத்திற்குக் காரணமே, சட்டத்தையும், நீதியையும் மயிரளவிற்குக் கூட மதிக்காத ஜெயாவின் பாசிசத் திமிர்தான்.

2001இல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. குண்டர்களின் மிரட்டலுக்குப் பயந்து, 22 அரசு சாட்சிகளும், குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பல்டியடித்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கை நடத்த நியமிக்கப்பட்ட கூடுதல் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரும், சிறப்பு அரசு வழக்குரைஞரும் சாட்சிகள் மிரட்டப்பட்டதற்குத் துணை நின்றனர்.

இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2001 இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. ""இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியும், சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை அரசு வழக்குரைஞராக நியமித்தும்'' சென்னை உயர்நீதி மன்றம் 22.08.03 அன்று தீர்ப்பளித்தது.

எனினும், வழக்குரைஞர் சீனிவாசனுக்கு பணி நியமன உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததன் மூலம், சேலம் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற முடியாமல் முடக்கி வைத்தது, அ.தி.மு.க. அரசு. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்கள் ஆன பிறகும் கூட வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்படாததை எதிர்த்து, கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின் பொழுது, மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட மூல வழக்கைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் நோக்கத்தோடு, ""மூல வழக்கின் கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; அதனை டிச. 2003இலிருந்து தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாகக் கேஸ் கட்டுத் தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்'' எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு.

இப்படி அ.தி.மு.க.வால் அரசு அதிகாரத்தோடு உருவாக்கப்பட்ட எல்லாத் தடைகளையும் மீறி, அக்கட்சியைச் சேர்ந்த 28 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயா ""நீதி''க்குத் தலை வணங்கவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பல இலட்ச ரூபாய் கருணைத் தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம், நீதிமன்றத் தீர்ப்பை எள்ளி நகையாடி விட்டார்.

தமிழக முதல்வர் என்ற பதவியைப் பயன்படுத்தித் தான் அடித்த கொள்ளையைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும்விதமாக, தனது வளர்ப்புப் ""பிராணி'' சுதாகரனின் திருமணத்தை 1995ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தினார் ஜெயா. அந்தத் திருமணம் தொடர்பாக நடந்து வந்த அதிகார முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, பல வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையின்பொழுது, ""வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கே என்ன பாதுகாப்பு?'' என நீதிபதி புலம்பியதில் இருந்தே, நீதிபதிகள் நீதிமன்றங்கள் மீதான ஜெயாவின் "பாசத்தை'ப் புரிந்து கொள்ள முடியும். ""அதிகார முறைகேடுகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு முதல்வர் ஜெயா பொறுப்பல்ல'' எனத் தீர்ப்பெழுதி, தனது தோலைப் பாதுகாத்துக் கொண்டார், நீதிபதி.

டான்சி, நில பேர ஊழல் வழக்கு விசாரணையில் ஜெயாவுக்கு சாதகமாக உயர்உச்சநீதி மன்றங்கள் நடந்து கொண்டதை வைத்துத் தனி ஊழல் புராணமே எழுதலாம். டான்சி நில பேர ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தபொழுது, அவ்வழக்கையே ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், ஜெயா.

""சந்தை விலையைக் காட்டிலும் நிலத்தின் விலை திட்டமிட்டே குறைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டிருந்த போதிலும்; டான்சி நிலத்தை விற்பதற்காக நடத்தப்பட்ட பொது ஏலம் பித்தலாட்டமானது எனத் தெளிவாக்கப்பட்டிருந்த போதிலும்; அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் அரசு சொத்துக்களை வாங்கக் கூடாது என்ற விதிமுறை இருந்த போதிலும், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி தங்கராசு, ஜெயாவைக் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தார்.

""டான்சி நிலத்தை வாங்கியதில் ஜெயா எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை; மாறாக, வழக்குதான் மோசடியானது'' என்பதுதான் நீதிபதி தங்கராசு அளித்த தீர்ப்பின் சாரம். நீதிபதி தங்கராசு, அ.தி.மு.க.வின் மந்திரி ஒருவரின் சிபாரிசின் பின்னணியில்தான் நீதிபதி பதவியைப் பெற்றார் என்பதும்; டான்சி நிலபேர வழக்கில் தீர்ப்புக் கொடுக்கும் முன் உல்லாசச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் பின்னர் அம்பலமாகியது.

நீதிபதி தங்கராசின் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு வந்தபொழுது ""தனி நீதிமன்றத்தில் 80 சதவீத அளவு விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், அதில் உயர்நீதி மன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். இது எங்கள் தீர்ப்பு அல்ல; கருத்துதான். உங்கள் கட்சிக்காரர் (ஜெயா) மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க விரும்புகிறாரா?'' எனக் குற்றவாளியிடமே தீர்ப்பைச் சொல்லும் உரிமையை வழங்கினார்கள் நீதிபதிகள்.

டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப் பெற்ற ஜெயா, அத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினகர், ""டான்சி நிலம், அரசு சொத்தே அல்ல; அரசு ஊழியர், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது நன்னடத்தைக் குறித்த விதிமுறை தானே தவிர, சட்டமல்ல'' எனச் சட்டத்தையே வளைத்து, புதிய விளக்கம் கொடுத்து, ஜெயாவை வழக்கில் இருந்தும், தண்டனையில் இருந்தும் விடுதலை செய்தார். நீதிபதி தங்கராசு தீர்ப்புக்கு முன் சிங்கப்பூர் சென்று வந்தார்; நீதிபதி தினகர் தீர்ப்புக்குப் பின் ஒரு மாத ஓய்வில் போனார்.

நீதிபதி தினகரின் தீர்ப்பை எதிர்த்த வழக்கில், உச்சநீதி மன்றத்தில் நடந்த விசாரணையும், அதனின் தீர்ப்பும் மிகவும் விநோதமாக அமைந்தன. சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த ""பந்த்''ஐத் தடை செய்து, ஞாயிற்றுகிழமை கூடி தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றம், டான்சி நில பேர வழக்கில் விசாரணை முடிந்த பிறகும், தீர்ப்பு வழங்காமல் 14 மாதங்கள் இழுத்தடித்தது. அதன் பின் வந்த தீர்ப்போ, ஜெயாவின் விடுதலையை உறுதி செய்ததோடு அவரின் மனசாட்சியிடம் மண்டியிட்டது.

""முதல் குற்றவாளியான ஜெயலலிதா குற்றமிழைத்திருக்கிறாரா இல்லையா என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவர் தமது மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் வகையில் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதே பரிகாரமாக அமையும்'' — இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதிய வெங்கடராம ரெட்டி, ராஜேந்திரபாபு என்ற இரு நீதிபதிகளுக்கு ஜெயாவிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்ததோ, அது அந்த ""ராமனுக்கு''த்தான் தெரியும்!

""டான்சி வழக்கு ஜெயாவைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்ட வழக்கு அல்ல;'' ""டான்சி வழக்கில் குற்றம் நடந்திருப்பதற்கான பூர்வாங்க ஆதாரம் (கணூடிட்ச் ஊச்ஞிடிஞு) உள்ளது'' என உயர்உச்சநீதி மன்றங்களே தீர்ப்பளித்துள்ளன. அப்படியிருந்தும், அதே உயர்உச்சநீதி மன்றங்கள், டான்சி நில பேர ஊழல் வழக்கில் இருந்து ஜெயாவை நிரபராதியாக விடுதலை செய்திருப்பதை ""நீதி தேவதையின் மயக்கம்'' எனச் சொல்லலாமா? இல்லை, பார்ப்பன பாசம் எனக் குற்றஞ் சுமத்தலாமா?

ஜெயாசசிதினகரன் கும்பல் மீது வருமானத்தை மீறி சொத்துக் குவித்துள்ள வழக்கும்; அக்கும்பல் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் நகரில் விடுதி வாங்கிய வழக்கும், பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வழக்குகள் தமிழ்நாட்டில் நடந்தால், ஜெயா கும்பல் வழக்கு விசாரணையைச் சீர்குலைத்து விடும் என்ற காரணத்தினால்தான், அண்டை மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, ஜெயா கும்பல் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு, இவ்வழக்ககளை, விசாரணைக் கட்டத்தைத் தாண்டவிடாமல் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வருகின்றது. நீதிமன்றமும், இக்கும்பல் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே செல்கிறது.

ஜெயாவின் அன்புச் சகோதரி சசிகலா மீது 1996ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கிலும் கூட, கடந்த 11 ஆண்டுகளாக ""விசாரணை''தான் நடந்து வருகிறது. ""சசிகலா, திட்டமிட்டே வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக'' மைய அரசு உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட பிறகும், சசிகலாவைக் கண்டிக்கக் கூட நீதிமன்றம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதி மன்றம், ""இந்த தாமதத்தைக் காரணமாகக் காட்டி, அதன் அடிப்படையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்'' என சசிகலா போட்டுள்ள மனுவை விசாரித்து வருகிறது.

மேலும்,

ஜெயாசசிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 லட்சம் டாலர் வழக்கு;

ஜெயா வருமானவரி தாக்கல் செய்யத் தவறிய வழக்கு;

ஜெ.ஜெ. டி.வி. அந்நியச் செலாவணி மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளும், கடந்த 10 ஆண்டுகளாக ""விசாரணை'' என்ற ஊறுகாய் பானைக்குள்ளே சட்டப்பூர்வமாகவே முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஜெயாவிற்கும், நீதித்துறைக்கும் இடையேயான உறவை விளங்கிக் கொள்ள இந்த நீதிமன்ற இழுத்தடிப்புகளும், அதிரடி தீர்ப்புகளும் வாசகர்களுக்கு நிச்சயம் உதவும்.

அக்.1 அன்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ""பந்த்'' நடத்தியதாகக் குற்றஞ்சுமத்தி அ.தி.மு.க.வால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும், நீதிபதி அகர்வால்தான் விசாரிக்க வேண்டும் என ஜெயா ஒற்றைக் காலில் நின்றுள்ளார். ஜெயாவின் இந்தப் பிடிவாதத்துக்குப் பின்னுள்ள காரணம், ""தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தடை செய்து, ஜெயா கொண்டு வந்த டெஸ்மா சட்டத்தை ஆதரித்தும்; ஜெயா மீது தொடரப்பட்ட வருமான வரி வழக்கில் அவருக்குச் சாதகமாகவும் தீர்ப்பளித்தவர் நீதிபதி அகர்வால் (ஆதாரம்: நக்கீரன்: அக்.6, பக்: 56) என்பதுதான்.

ஜெயாவைப் போலவே நீதிபதி அகர்வால் சிந்திக்கிறார் என நீங்கள் கருதினால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ""பந்த்''தைத் தடை செய்து நீதிபதிகள் அகர்வாலும், நவலேõகரும் தீர்ப்பு அளித்தவுடனேயே, ""இனி எந்த மாநில அரசும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்க முடியாது. இந்தத் தீர்ப்பு மூலம் அ.தி.மு.க. புதிய வரலாறு படைத்துள்ளது'' எனப் பெருமையோடு குறிப்பிட்டுள்ளார், ஜெயா. அவர் ஊழல்கிரிமினல் மேர்வழி மட்டுமல்ல; ஜனநாயக விரோத பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமா வேண்டும்?

· ரஹீம்


""உச்சநீதி மன்றமா,

உச்சிக் குடுமி மன்றமா?''



மனித உரிமை பாதுகாப்பு

மையத்தின் (HRPC) ஆர்ப்பாட்டங்கள்

தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தத்திற்கு உச்சநீதி மன்றம் விதித்த தடையானது, அதன் அதிகார வரம்பை மீறிய செயலாகும். மேலும், "இராமன் பாலம்' என்ற கட்டுக் கதைக்கு ஆதாரமாக சுப்பிரமணியசாமி காட்டிய வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து சேது சமுத்திர திட்டத்தை முடக்கிய உச்சநீதி மன்றத்தின் உத்தரவானது, அதன் பார்ப்பன மதவெறி பாசிசத் திமிரையே காட்டுகிறது. பா.ஜ.க.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இராமன் பாலம் பிரச்சினையைக் கிளறி, மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயமடையத் துடிக்கும் முயற்சிக்கு உச்சநீதி மன்ற பார்ப்பன நீதிபதிகள் வெளிப்படையாகவே ஆதரவாக நிற்கின்றனர்.

இந்த உண்மைகளை விளக்கியும், மக்களின் பெயரைச் சொல்லி போராட்ட உரிமையைத் தடை செய்யும் அதிகாரமும் அருகதையும் உச்சநீதி மன்றத்துக்கு இல்லை என்பதை உணர்த்தியும், உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிசத் திமிரை எதிர்த்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளை உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிச உத்தரவுகளை அம்பலப்படுத்தி விரிவாக சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக 1.10.07 அன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழக சட்டத்துறை மாநில அமைப்பாளரான வழக்குரைஞர் கி.மகேந்திரன், தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ்ச் சங்க செயலாளரான மனோகரன், தி.மு.க. வழக்குரைஞர் மோகன்தாஸ், சி.பி.எம். வழக்குரைஞர் பாஸ்கரன் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் கண்டன உரையாற்றினர்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டக் கிளை சார்பில், உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிச உத்தரவுகளை அம்பலப்படுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்த இவ்வமைப்பினர், அதன் தொடர்ச்சியாக 6.10.07 அன்று மாலை விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பந்த்க்கு எதிரான உச்சநீதி மன்றத் தடையும் அதற்கான நீதிபதிகளின் கருத்தும் நீதித்துறை சர்வாதிகாரமே என்று முழங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் சி.ராஜு, வழக்குரைஞர்கள் வே.அம்பேத்கர், பட்டி சு.முருகன், திருமார்பன் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் திரு.செழியன், சிவனடியார் திரு.ஆறுமுகசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஜனநாயக உரிமைகளையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கவும், பார்ப்பனபாசிசத்தை வீழ்த்தவும் அறைகூவிய இந்த ஆர்ப்பாட்டங்கள், உழைக்கும் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

பு.ஜ. செய்தியாளர்கள்

Tuesday, April 29, 2008

முக்கிய அறிவித்தல்

முக்கிய அறிவித்தல்


தோழர்களே, நண்பர்களே, வாசகர்களே.. சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் எமது வணக்கங்கள்.

www.tamilcircle.net என்ற எமது இணையத்தளம், மே மாதம் முதலாம் திகதி முதல், எந்த இடைத் தடங்கல் எதுவுமின்றி ஒரு வடிவ மாற்றத்தைப் பெறுகின்றது. அத்துடன் இது இரண்டு பெயர்களில் இயங்கவுள்ளது

1. http://www.tamilcircle.net/


2. http://www.tamilmanram.net/

புதிய வடிமைப்பில் இந்த தளம் இயங்கும் சம காலத்தில், தளத்தின் பழைய வடிவம் தற்காலிகமாக புதிய தளத்தினூடான இணைப்பின் வழி அப்படியே இயங்கவுள்ளது. ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இடமாற்ற எடுக்கும் எமக்குத் தேவையான கால இடைவெளி வரை, அதுவும் இயங்கும்.

முக்கியமாக கட்டுரைகளுக்கு இணைப்புகளைக் கொடுத்தவர்கள், இணைய இணைப்புக் கொடுத்தவர்கள், அவ்விணைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டி எற்படலாம். இதை தொடர்ச்சியாக கவனத்தில் கொள்ளவும். பழைய தளம் சிறிது காலத்தில் முற்றாக செயலிழக்கும்.

இதன் மூலம் உங்களுக்கு ஏற்படுத்தும் சிரமத்தைப் பொருட்படுத்தாது ஓத்துழைப்பையும், வேண்டும் அதேவேளை உதவி தேவைபட்டால் நாம் உதவவும் தயாராகவுள்ளோம்.

புதிய தளம் பல வசதிகளைக் கொண்டது. இது தமிழில் தேடுதல் வசதியைக் கொண்டது. இலகுபடுத்தப்பட்டுள்ளது. கருத்துகளைக் கூறவும், ஈமெயில் அனுப்பவும், பி.டி.எவ் ஆக்கும் வசதியும் (இது தற்காலிகமாக தமிழ் எழுத்துருவில் செயல்படுவதில் ) உள்ளது. கட்டுரைகளை வகைப்படுத்தலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. புதிய பல விடையங்களை இது உள்ளடக்குகின்றது.

இது தவிர புதிய பலரின் எழுத்துகளை அன்றாடம் சேர்க்கவுள்ளோம். எதிர்காலத்தில் அன்றாட செய்தி கொண்டுவரும் வகையில், நாம் சிந்திக்கின்றோம்.

இதில் முக்கியமாக ஆவணப்பகுதி ஒன்றை தொடங்கியுள்ளோம். இலங்கைப் போராட்டம் தொடர்பான முழுத் தகவலையும் ஆவணப்படுத்தும் ஆரம்பமாக இது இருக்கும். எம்மிடம் உள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களை இதில் நாம் இணைக்கின்றோம். மிகுதியை நீங்கள் தான், தந்து அதனை பூரணப்படுத்த உதவ வேண்டுகின்றோம். உங்கள் பங்களிப்பு இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது கருத்து முரண்பாட்டுக்கு அப்பாற்பட்டது. அவை தொலைந்து போன, தொலைகின்ற ஆவணங்கள். இதை இலகுவாக நீங்கள் பார்க்கும் வகையில், பிரதி எடுக்கும் வகையில், உங்களிடமும், அவை ஒரு ஆவணமாக பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்யூட்டர் உள்ள ஒவ்வொருவரும் ஆவண காப்பகத்தை தனக்குள் கொண்டு இயங்கும் உணர்வை இது உருவாக்கும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை பல வழிகளில் எதிர்பார்க்கின்றோம்.

அறிவியல் பகுதி ஒன்றை தொடங்கியுள்ளோம். இது விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம், கம்யூட்டர், சமையல் கலை, தையற்கலை என்று, பல விடையங்களை உள்ளடக்கவுள்ளது. பலரின் கட்டுரைகளை, இதில் இலகுவாக பார்க்கும் வகையில் இதைத் தரவுள்ளோம்.

ஆவணப்பகுதி, அறிவியல் பகுதி இணையவேற்றம் முழுமையான பின்பு, அது தனக்குள் தகவல்களை பாரியளவில் கொள்ளத் தொடங்கும். பலரின் பல அரிய கட்டுரைகள், தகவல்கள் உங்களுக்கு இலகுவாக கிடைக்கும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாம் பல வழிகளிலும், உங்களிடம் கோருகின்றோம்.

ஆனால் இவை முன்பக்கத்துக்கு கட்டுரை நிரலாக வராது. முன்பக்கத்தில் உள்ள இணைப்பின் ஊடாக தேடிச் சென்று, இப்குதியை இலகுவாக பார்க்க முடியும்.

இந்தத் தளத்தில் உள்ள குறைபாடுகள், சேர்ப்புக்களை, தேவைகளைச் சுட்டிக்காட்டும் படியும், சமூக பொறுப்புள்ள உங்கள் ஒத்துழைப்பையும் நாம் கோருகின்றோம்.

உங்கள் பங்களிப்பு எதுவாக இருந்தாலும், அதை நாம் பொறுப்புணர்வுடன் அணுகத் தயாராக உள்ளோம்.


தமிழரங்கம்
29.04.2007

Monday, April 28, 2008

பீகார்: பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி!


பீகார்:
பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி
!



இறந்து போன மிருகத்தைக் கூட கைகால்களைக் கட்டி தெருவிலே இழுத்துச் செல்ல எந்தவொரு மனிதனுக்கும் மனம் ஒப்பாது. ஆனால் மிருகத்தை அல்ல, மனிதனை; நம்மைப் போல நினைவும் கனவும் கொண்ட உயிருள்ள மனிதனை இப்படி கைகால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது பீகார் போலீசு.

1980இல் பாகல்பூரில் 31 விசாரணைக் கைதிகளின் கண்களில் திராவகத்தை ஊற்றி அவர்களைக் குருடர்களாக்கிய பீகார் போலீசின் கொடுஞ்செயலை நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது. அதே பாகல்பூரில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று 20 வயதான சலீம் இலியாஸ் என்ற இளைஞரை, ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி ஒரு கும்பல் மிருகத்தனமாகத் தாக்கியது. அங்கு வந்த நாத்நகர் போலீசு நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார், அழுக்கடைந்த ஆடைகளுடன் பலநாள் பட்டினி கிடந்த தோற்றத்தில் இருந்த அந்த இளைஞரை, கொடூரமாக பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியதோடு, கைகால்களைக் கட்டி தமது மோட்டார் சைக்கிளில் பிணைத்து கதறக் கதற தெருவிலே இழுத்துச் சென்றனர். சதைகள் கிழிந்து தெருவெங்கும் இரத்தம் வழிந்தோடி நினைவிழந்து கிடந்த அவரை போலீசு நிலையம்வரை இழுத்துச் சென்று, பின்னர் பொதுமக்கள் திரண்டு கண்டனம் தெரிவித்ததும் மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகெலும்பு பல இடங்களில் முறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு குற்றுயிராகக் கிடக்கும் அந்த இளைஞர், இனி உடல்நிலை தேறி நடமாடுவாரா என்றே தெரியவில்லை.

விசாரணை இல்லை; குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வழக்கும் வாய்தாவுமில்லை. போலீசாரே நீதிபதிகளாக மாறி தீர்ப்பளித்து தண்டனையும் விதிக்கின்றனர். இக்கொடுஞ்செயலை பொதுமக்கள் பார்ப்பதையோ, தொலைக்காட்சிகள் படம் பிடிப்பதையோ பற்றி அப்போலீசு மிருகங்களுக்குக் கவலையுமில்லை. கொட்டடிகளில் தங்களது குரூரமானவக்கிரமான சித்திரவதைகளை ஏவி வெறியாட்டம் போட்டு வரும் போலீசு மிருகங்களின் அதிகாரத் திமிர் இப்போது நட்டநடு வீதிகளிலும் வழிந்தோடத் தொடங்கி விட்டது.

இந்தக் கொடுஞ்செயலின் அதிர்ச்சியிலிருந்து நாட்டு மக்கள் மீள்வதற்குள், அதே பீகாரின் வைஷாலி மாவட்டத்திலுள்ள தேல்புர்வாரா கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13ஆம் நாளன்று பின்னிரவில் 10 பேர் திருடர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ""நாட்'' எனும் தாழ்த்தப்பட்ட நாடோடிச் சாதியினர். இவர்கள் அருகிலுள்ள கிராமத்தில் நடந்த விருந்துக்குச் சென்றுவிட்டு இரவில் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். தேல்புர்வாரா கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடந்து வந்ததால், சந்தேகத்தின் பேரில் இவர்களைப் பிடித்த அக்கிராம மக்கள், காட்டுமிராண்டித்தனமாக அடித்தே கொன்றுள்ளனர்; இல்லையில்லை; கிராம மக்கள் பிடித்து வைத்திருந்த இவர்களை அருகிலுள்ள ராஜ்பகார் போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசார்தான் அடித்தே கொன்றனர் என்றும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.

இப்படுகொலைகளுக்குப் பின்னர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவோ, பிணங்களை முறைப்படி அடக்கம் செய்யவோ கூட முன்வராமல், ஹாஜிபூர் அருகே கங்கையும் கந்தோக் ஆறும் சங்கமிக்கும் கொனாரா சதுக்கம் அருகே, போலீசு மிருகங்கள் அப்பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்துள்ளன. அவற்றிலே ஏழு பிணங்கள் வீங்கி வெடித்து அலங்கோலமாக ஆற்றிலே மிதந்து கரை ஒதுங்கின; அவற்றை நாய்களும் கழுகுகளும் குதறித் தின்றன.

மாடோ, நாயோ செத்தால் கூட அவற்றைக் குழிதோண்டிப் புதைக்கும்போது, இறந்துபோன மனிதர்களின் பிணங்களை நாயைவிட கேவலமாக ஆற்றிலே வீசியெறிந்துள்ளதே பீகார் போலீசு, அது நாகரீக மனித இனத்தைச் சேர்ந்ததா? அல்லது வெறிபிடித்த மிருக இனத்தைச் சேர்ந்ததா?

""அவர்கள் நாயைவிடக் கேவலமான ""நாட்'' சாதியினர்; பரம்பரைத் திருடர்கள்; அவர்களிடம் இரக்கம் காட்டினால் குற்றங்கள் பெருகிவிடும்'' என்று நியாயவாதம் பேசுகிறது பீகார் போலீசு. வெள்ளைக்காரன் ஆட்சியில் குற்றப் பரம்பரையினர் எனப் பட்டியலிடப்பட்டு வதைக்கப்பட்ட எண்ணற்ற தாழ்த்தப்பட்டபழங்குடியினரில் ஒரு பிரிவினர்தான் ""நாட்'' சாதியினர். திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அதனால் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்ட, இவர்கள், காடுகளில் தேன் சேகரித்தும் பறவைகளைப் பிடித்தும் தமது பிழைப்பை நடத்துகின்றனர். காலனியாதிக்கவாதிகளை எதிர்த்துப் போரிட்ட பழங்குடியினரைக் ""குற்றப் பரம்பரை'' என்று பட்டியலிட்ட பிரிட்டிஷ் அரசும், அதன் பின்னர் அப்பெயரை மட்டும் ""சீர்மரபினர்'' என மாற்றிய இன்றைய அரசும் இம்மக்களை இன்னமும் பரம்பரைக் குற்றவாளிகளாகவே பார்க்கிறது. செய்யாத குற்றத்துக்கும் விசாரணை ஏதுமின்றி தண்டனை கொடுக்கிறது. எங்காவது திருட்டு நடந்தால் இம்மக்களையே குற்றவாளிகளாக அறிவித்து வதைக்கிறது. அவர்களை மிருகத்தனமாக அடித்தே கொன்று விட்டு, பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்து இழிவுபடுத்துகிறது.

தேல்புர்வாராவில் நடந்துள்ள கொலைகள், உணர்ச்சிவசப்பட்டு ஏதோ விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. அதே பீகாரின் நவடாவில், கடந்த அக்டோபரில் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவர் கிராம மக்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்; சைக்கிள் திருடியதாகக் குற்றம் சாட்டி மூன்று இளைஞர்களைப் பிடித்த கிராம மக்கள், அவர்களில் ஒருவரின் கண்களைத் தோண்டியெடுத்துள்ளனர். இத்தகைய கும்பல் பயங்கரவாதமும் போலீசின் வெறியாட்டங்களும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஜனநாயகம் மனித உரிமை பற்றிய வாசனையைக் கூட அறிய விடாமல் இன்னமும் பழமைவாதத்திலேயே ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள், குற்றப் பரம்பரையினராக இழிவுபடுத்தப்பட்டுள்ள பழங்குடியின உழைப்பாளிகளிடம் கும்பல் பயங்கரவாதத்தை ஏவும் சாதியக் கட்டுமானப் பிடியிலுள்ள கிராமங்கள், அக்கிராமங்களை நடுநடுங்க வைக்கும் நிலப்பிரபுக்களின் சாதிவெறி குண்டர் படைகள், ஒட்டு மொத்த சமூகத்தையே அச்சுறுத்தும் அரசு பயங்கரவாத போலீசு மிருகங்கள் என பீகார் இன்னமும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளதால், போலீசின் பயங்ரவாதமும் கொட்டமும் இன்னமும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நிலப்பிரபுக்கள், தரகுப் பெருமுதலாளிகள், ஓட்டுப் பொறுக்கிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, போலீசு, இராணுவம் என "குற்றப் பரம்பரை'யினரின் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் அங்கு நீண்ட நெடுங்காலமாகத் தொடர்கிறது. இந்த அநீதியும் பயங்கரமும் தொடர வேண்டுமென்பதற்காகவே, அப்பாவிகள் மீது தனது காட்டுமிராண்டித்தனத்தை ஏவி, இதர பிரிவு உழைக்கும் மக்களை அஞ்சி நடுங்க வைக்கிறது பீகார் போலீசு.

செய்யாத குற்றத்திற்காக விசாரணை ஏதுமின்றி அடித்தே கொல்லப்பட்டு, செத்த பிறகும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் அந்த 10 ""நாட்''கள். ஆனால் தாம் செய்த ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டும், தண்டனை அனுபவிக்காமலேயே மேல்முறையீடு செய்து தப்பித்து, பின்னர் செத்துப் போனதும் அரசு மரியாதையுடன் எரிந்து சாம்பலானார், "குற்றப் பரம்பரையை'ச் சேர்ந்த ஒருவர். அவர், முன்னாள் பிரதமர்; அவரது பெயர் நரசிம்மராவ்!

Sunday, April 27, 2008

வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை சோசலிசமா? முதலாளித்துவ சிர்திருத்தமா?


வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை:
சோசலிசமா? முதலாளித்துவ சிர்திருத்தமா?

"அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.

நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்க மேலாதிக்கவாதிகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த விழைகிறார். எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் தேசிய வருவாயில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், சுகாதாரம், உணவு, கல்வி முதலான சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது; இந்நிறுவனங்களில் பன்னாட்டு முதலாளிகளின் பங்குகளைச் சிறுபான்மையாகக் குறைப்பது; உலகவங்கி ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக் கொள்வது; மின்சாரம், தொலைபேசி மற்றும் நிலப்பிரபுக்களின் பெரும் பண்ணைகளை நாட்டுடமையாக்குவது; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும், தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பையும் நிறுவ முயற்சிப்பது; நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பது என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். வெனிசுலா ஒரு கம்யூனிச அரசு அல்ல என்ற போதிலும், வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படவில்லை என்ற போதிலும், தனது நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடி வரும் உலக மக்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார், அதிபர் சாவேஸ்.

சாவேசின் சீர்திருத்த நடவடிக்கைகள் முழுநிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்றபோதிலும், அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் மக்கள் நலத் திட்டங்களையும் வைத்து அவரை ""சோசலிஸ்டு'' என்று மதிப்பீடு செய்கிறது ஆஸ்திரேலிய போலி சோசலிஸ்டுகளின் ""கிரீன் லெஃப்ட்'' பத்திரிகை. நம்நாட்டு போலி கம்யூனிஸ்டுகளோ, அவரை ""இடதுசாரி'' போக்குடையவர் என்றும், வெனிசுலாவில் புரட்சிகர மாற்றங்கள் நடந்து வருவதாகவும், தென்னமெரிக்க கண்டத்தில் ""இடதுசாரி அலை'' வீசுவதாகவும் சித்தரிக்கின்றனர்.

இப்படி ""சோசலிஸ்டு'', ""இடதுசாரி'' என்றெல்லாம் வெனிசுலா அதிபர் சாவேசை மதிப்பீடு செய்வதற்கு ஏதாவது அடிப்படை உள்ளதா? அவரது நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவைத் தகர்த்து, நாட்டு விடுதலையையும் சுயசார்பையும் நிறுவும் புரட்சிகர நடவடிக்கைகள்தானா? வெனிசுலாவின் பொருளாதாரமும் அதிபர் சாவேசின் நடவடிக்கைகளும் எந்த திசையில் செல்கிறது?

எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்காக சாவேஸ் செலவிடுகிறார். விவசாயப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கப் போவதாகக் கூறுகிறார்; புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். எண்ணெய் விலையை உயர்த்துவது, எண்ணெய் உற்பத்தியை விரிவாக்குவது, புதிய சந்தைகளைத் தேடுவது ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்களைச் சாதிக்க விழைகிறார்.

இதன்படி, வெனிசுலாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் (கஈஙகுஅ), தற்போதைய உற்பத்தியான நாளொன்றுக்கு 33 லட்சம் பீப்பாயிலிருந்து 2012ஆம் ஆண்டில் 58 லட்சம் பீப்பாயாக உற்பத்தியை விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஏறத்தாழ 7500 கோடி டாலர் தேவை என்று கடந்த ஆண்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கெனவே உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களைப் பராமரித்து மேம்படுத்துதல், புதிய எண்ணெய் துரப்பண நிலையங்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கு இன்னும் பல்லாயிரம் கோடி டாலர்கள் தேவை. மேலும், வெனிசுலாவின் எண்ணெய்க் கிணறுகள் மிகவும் பழமையானவை; ஆண்டுக்கு 23% அளவுக்கு இக்கிணறுகள் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. எனவே, புதிய கிணறுகள் தோண்டப்பட்டால் மட்டுமே எண்ணெய் உற்பத்தியில் முன்னேற முடியும்; உலகளாவிய போட்டியில் ஈடுபடவும் முடியும்.

இதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது? வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது, வெனிசுலாவிலுள்ள அந்நிய எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ணெய்க்கு ஈடாக முன்பணம் பெறுவது, அந்நிய எண்ணெய் கம்பெனிகள் மீது புதிய வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம் நிதிதிரட்டத் தீர்மானித்துள்ளார், அதிபர் சாவேஸ். எண்ணெய் மூலாதாரங்களும் உற்பத்தியும் அரசின் கையில் இருப்பதால், அன்னிய எண்ணெய் கம்பெனிகளும் நிதி நிறுவனங்களும் முந்தைய காலத்தைப் போல கொள்ளையடிக்கவோ மேலாதிக்கம் செய்யவோ முடியாது என்று கருதுகிறார்.

ஆனால், வெனிசுலா மட்டுமல்ல; உலகின் முக்கால் பங்கு எண்ணெய் எரிவாயு மூலாதாரங்களையும் உற்பத்தியில் பாதிக்கு மேலாகவும் சௌதி அரேபியாவின் ஆரம்கோ, குவைத் பெட்ரோலியம், அல்ஜீரிய எண்ணெய் கழகம் முதலான அரசுத்துறை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், இந்த அரசுத்துறை நிறுவனங்கள் சர்வதேச நிதி மூலதனத்தைச் சார்ந்திருப்பதாலும், எக்சான் மொபில் முதலான பூதகரமான மேற்கத்திய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாலும், தமது வர்த்தகத்துக்கும் சந்தைக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களைச் சார்ந்திருப்பதாலும் உண்மையில் ஏகாதிபத்தியங்களே பல்வேறு வழிகளில் ஆதாயமடைகின்றன.

இப்படி பல்வேறு வழிகளில் ஆதாயமடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, வெனிசுலாவின் எண்ணெய் திட்டங்கள் அனைத்திலும் அரசுத்துறையின் பங்கு 60%க்கு மேல் இருக்க வேண்டும் என்று அறிவித்த அதிபர் சாவேஸ், கடந்த மே முதல் நாளன்று இம்முடிவை ஏற்காவிடில், அன்னிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்தார். தொடக்கத்தில், இதை ஏற்க மறுத்த அன்னிய எண்ணெய் நிறுவனங்கள், பின்னர் இதற்கு உடன்பட்டன. இதன்படி உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனங்களான ஷெல், செவ்ரான், பிரிட்டிஷ் பெட்ரோலியம் முதலானவற்றுடன் வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் கூட்டுச் சேர்ந்து இயங்கும்; இக்கூட்டுத்துறை நிறுவனங்களில் அரசுத்துறையின் பங்கு 60% ஆக இருக்கும். இதன் மூலம் முந்தைய காலத்தை விட வெனிசுலா அரசுக்கு எண்ணெய் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மறுபுறம், எண்ணெய் விலையை வெனிசுலா அரசு உயர்த்தியுள்ளதால், முந்தைய காலத்தைவிட, அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கூடுதல் ஆதாயமடைந்துள்ளன.

மேலும், சந்தைக்காகவும், முதலீட்டு ஆதாரங்களுக்காகவும், தொழில்நுட்பத்துக்காகவும் அமெரிக்காவையே வெனிசுலா பெரிதும் சார்ந்துள்ளது. இச்சார்பு நிலையிலிருந்து வெனிசுலா மீள்வதென்பது மிகவும் கடினம். ஏனெனில், அமெரிக்காவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், வெனிசுலாவின் பங்கு 12% தான். வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் தர மறுத்துவிட்டால், அதனால் அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது. அதேசமயம், வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யாமல் போனால், அதன் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும். ஏனெனில், வெனிசுலாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், 60%க்கு மேல் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எண்ணெய் வருவாயில் பெரும்பகுதி அமெரிக்க ஏற்றுமதியிலிருந்துதான் கிடைக்கிறது.

அமெரிக்காவைச் சார்ந்திராமல் எண்ணெய்க்குப் புதிய சந்தைகளைத் தேட முயற்சித்தார், அதிபர் சாவேஸ். அமெரிக்காவுக்கு அடுத்து பெருமளவு எண்ணெயைக் கொள்முதல் செய்யும் நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆனால் சீனாவுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஆகும் செலவு பூதாகரமானதாக இருப்பதோடு, உடனடி சாத்தியமின்றியும் உள்ளது. ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பசிபிக் பெருங்கடலில் வெனிசுலாவுக்குத் துறைமுகம் இல்லை. வெனிசுலாவிலிருந்து பனாமா கால்வாய் வழியாக பசிபிக் பெருங்கடலை அடைய முடியும் என்றாலும், பல்லாயிரம் டன் எடை கொண்ட எண்ணெய் கலன்களை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் செல்லுமளவுக்கு பனாமா கால்வாய் ஆழமானதல்ல. எனவே கொலம்பியாவின் ஊடாக பெரும் எண்ணெய்க் குழாய்களைப் பதித்து, அந்நாட்டு உதவியுடன் பசிபிக் பெருங்கடலிலுள்ள துறைமுகம் வழியாக ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்குப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்க வேண்டும்.

மேலும், வெனிசுலாவில் கிடைக்கும் எண்ணெயில் கந்தகம் மிகுந்துள்ளது. அதைச் சுத்திகரித்துப் பயன்படுத்தும் ஆலைகள் சீனாவில் இல்லாததால், வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க சீனா தயங்குகிறது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற காஸ்பியன் கடல் பிராந்திய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதிலேயே சீனா ஆர்வம் காட்டுகிறது.

இதுவொருபுறமிருக்க, வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டியா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவேஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார். மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.

ஆனால், இன்றைய உலகமயச் சூழலில் ஒரு ஏழை நாட்டு நிறுவனம் வெனிசுலாவில் முதலீடு செய்தாலும் அதன் பின்னணியில் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும் வங்கிகளும்தான் உள்ளன. அவை முதலாளித்துவ முறைப்படி சுரண்டுவதும், முதலாளித்துவ முறைப்படி இலாப விகிதங்களை வலியுறுத்துவதும்தான் நடக்குமே தவிர, அவை அமெரிக்க எதிர்ப்பு கொண்ட தென்னமெரிக்க பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்க ஒருக்காலும் உதவி செய்யாது. மேலும் பூதாகரமான இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பாரதூரமான விளைவுகளையே தோற்றுவிக்கும். தென்னமெரிக்கக் கண்டத்தில் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் முதலிடம் வகிக்கும் வெனிசுலா நாடு, இத்தகைய பெருந்திட்டங்களால் இயற்கை முறை குலைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல்வாதிகள் அறதியிடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வெனிசுலாவின் எண்ணெய்த் துறையின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது. அரசுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரினோகோ எண்ணெய் வயலில் 380 கோடி டாலர்களை சாவெஸ் அரசு முதலீடு செய்தும்கூட, அத்திட்டம் நிறைவேறும்போது ஏறத்தாழ 700 தொழில்நுட்ப தேர்ச்சி பெற்ற தொழிலாளிகளுக்கே வேலை கிடைக்கும். வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் தற்போது ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும். அதேசமயம் வெனிசுலாவின் வேலையில்லாதோர் விகிதம் ஏறத்தாழ 15% ஆக இருக்கிறது.

எண்ணெய் வளம் என்பது வெனிசுலாவின் பொக்கிஷமோ, பொன் முட்டையிடும் வாத்தோ அல்ல. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவிலிருந்து அல்ஜீரியா வரை உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகி பல்லாயிரம் கோடி வருவாய் குவிந்த போதிலும், அந்நாடுகளில் ஏற்றத்தாழ்வுகளும் சமூக அவலங்களும் நீங்கிவிடவில்லை. சோசலிசம் என்பது எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதோ, எண்ணெய் வருவாயை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோ அல்ல.

வெனிசுலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.

சுயசார்பான தேசிய பொருளாதாரத்தின் அடித்தளம் எண்ணெய் அல்ல; விவசாயம்! பின்தங்கிய ஏழை நாடான வெனிசுலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.

நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவேஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல். இதனாலேயே சோசலிசக் கனவுகளோடும், வெனிசுலாவின் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறையோடும் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள், முன்னேற முடியாமல் நிற்கின்றன.

சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை. ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவுடன் வெனிசுலாவின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், ஏகாதிபத்திய உலகிற்கு மாற்றாக, அதற்கு வெளியே புதிய உலகைக் கட்டியமைக்க விழையும் சாவேசின் இலட்சியக் கனவு நிறைவேற அடிப்படை இல்லை.

அதேசமயம் மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ள அதிபர் சாவேசின் முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்று ஆதரிப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சாவெசின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகள் சதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும் உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேநேரத்தில், வெனிசுலா அதிபர் சாவேசின் முதலாளித்துவ வழிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளையே ""மாபெரும் புரட்சி''யாகவும், சாவேசை ""இடதுசாரி'' என்றும் சித்தரித்து மாய்மாலம் செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகள் போலி சோசலிசவாதிகளின் பித்தலாட்டத்தை முறியடிப்பது, அதைவிட முக்கிய கடமையாகும்.
· மனோகரன்

உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி


சென்னை நகர விரிவாக்கத் திட்டம் :
உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி

சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழுந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தரமேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப் பாத்திரங்களையும் பளிங்குத் தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள்சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் — என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.

உடலை உருக்கிப் போடும் கடின உழைப்பை ஈயும் இவர்களில் பலருக்கும் நல்ல உணவில்லை. இருக்க நல்ல இடமில்லை. வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகும் நிலையில் வருமானம் இல்லை. எனவேதான் இவர்களில் பலரும் குடியிருப்பது குடிசைகளில். கழிப்பறை, குளியலறை இல்லாத, காலை நீட்டிக் கூட தூங்க முடியாத, கொசுப்படை தாக்குதலுக்குள் முடங்கிட இவர்களுக்குக் கிடைத்தவையோ பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் போன்ற நீர்வழிகளின் கரையோரங்கள்தான்.

அதேபோல்தான் மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரையை ஒட்டிக் குடியிருக்கும் மீனவர்களின் குடியிருப்புக்களும். மீன் பிடிக்கப் பயன்படும் வலைகள், கட்டுமரங்களை எளிதில் கடலுக்குள் கொண்டு செல்லவும், வலைகளை உலர்த்தவும், விரைவில் தொழிலுக்குச் செல்லவும் எனத் தேவையை ஒட்டிப் பல நூற்றாண்டுகளாக அவ்விடங்களில் மீனவர்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வருகின்றனர்.

இவர்களது நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போட வந்துள்ளது, ""சென்னை 2026'' எனச் சொல்லப்படும் மாஸ்டர் பிளான் திட்டம்.

குடிசைவாசிகள் வாழத் தகாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களை சென்னையில் இருந்து அகற்றி மாநகர எல்லைக்கு வெளியே செம்மண்சேரிக்கு விரட்டத் தீர்மானித்துள்ளது, மாஸ்டர் பிளான் திட்டம். இம்மக்களால்தான் சென்னையின் நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அவர்கள் நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மாஸ்டர் பிளான் குற்றம் சாட்டுகிறது. கழிப்பறைகள் இல்லாத குடிசை மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நகரின் சுகாதாரமே கெடுவதாயும் குற்றம் சாட்டுகிறது.

நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகக் குற்றம் சாட்டி சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்றால் முதலில் துரத்தப்பட வேண்டியவர்கள், இலட்சக்கணக்கான லிட்டர் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் டைடல் பார்க் உள்ளிட்ட பல பன்னாட்டு ""சாப்ட்வேர்'' நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும்தான். மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் நீரை சிக்கனமாக செலவழிக்கும் குடிசைகளால் நீர்நிலை கெடுகின்றது என்பதை குடிசைகளைப் பற்றி அறிந்த எவருமே நம்ப மாட்டார்கள்.

பின் எதற்காக குடிசைகளைக் காலி செய்யச் சொல்கிறார்கள்? 2000ஆம் ஆண்டில் 286 கோடியாக இருந்த உலகின் நகர்வாழ் மக்கள் தொகை, 2030இல் 498 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள உலக வங்கி, அவ்வாறு நகர்மயமாகும் முக்கிய பெருநகராக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் சென்னை நகரோ, உலக வங்கியின் பசிக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் ஏற்றதாக இருக்கவில்லையாம். வெளிநாட்டுப் பயணிகளின் கண்களுக்கு இக்குடிசைகள் வெறுப்பை உண்டு பண்ணுகின்றனவாம். எனவே, அடையாற்றிலும், கூவத்திலும் படகுப் போக்குவரத்துத் திட்டமும், இடிக்கப்படும் குடிசைகளின் இடிபாடுகளின் மேலேயே சாலைகளைப் போட்டு ஆற்றங்கரைகளை இரு வழிச் சாலைகளாக்கும் திட்டமும் தயாராகிக் கொண்டுள்ளன.

இனிமேல் சென்னைக்குள் குடிசைகளோ, மீனவர்களின் கட்டுமரங்களோ, சென்னை கடற்கரையில் பலூன், சோளக்கதிர், பஞ்சுமிட்டாய், பட்டாணிக் கடைகளோ இருக்கக் கூடாது; வெளியேறுங்கள் எனக் கட்டளை இட்டுள்ளது, உலக வங்கி. அதனை ஆட்சியாளர்கள் விசுவாசமாக நிறைவேற்றக் கிளம்பி விட்டனர். இதன்படி, சென்னையின் குடிசை மக்களில் 75 ஆயிரம் பேரை செம்மண்சேரிக்கு அப்பால் குடியேற்றப் போகின்றனர். ஏற்கெனவே அடையாறு நதிக்கரை ஓரக் குடியிருப்புக்களை புல்டோசர்களால் தரைமட்டமாக்கி 1500 குடும்பங்களை இடம் பெயரச் செய்தும் விட்டனர். 7300 பேருக்கு வெளியேற்ற நோட்டீசு வழங்கி விட்டனர். படிப்படியாக அனைத்து குடிசைவாசிகளையும் துரத்தி விட்டு சென்னையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.

குடிசைகளை அகற்றச் சொல்லும் அரசால், அதே குடிசைகள் இருக்கும் இடங்களிலேயே காங்கிரீட்டு வீடுகளாகக் கட்டித்தர இயலாதா? அடையாறு பூங்கா எனும் ஊதாரித் திட்டத்துக்கு மட்டும் ரூபாய் 100 கோடி ஒதுக்க இயலுகிற அரசால் குடிசைகளை மேம்படுத்த இயலாதா?

திறந்தவெளியில் மலம் கழித்து நோயைப் பரப்புகிறதாய் குடிசை மக்கள் மீது குற்றம் சாட்டும் சென்னை மாநகராட்சி, ஏன் இதுவரை போதிய அளவில் கழிவறைகளைக் குடிசை மக்களுக்குக் கட்டித் தரவில்லை? பொதுக்கிணறு, குளங்களை தலித்துகளுக்கு மறுத்து விட்டு, தலித்களை சுத்தமற்றவர்கள் எனக் கூறும் பார்ப்பனீய வஞ்சகத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

உலக வங்கியின் ஆசிபெற்ற சென்னைப் பெருநகரத் திட்டம் இத்துடன் நின்று விடவில்லை. நகரின் முக்கியமான சாலைகளில் சுவரொட்டிகள் ஒட்ட ஏற்கெனவே தடை செய்துவிட்டது. ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களை ஊருக்கு ஒதுக்குப்புறங்களுக்கு நகர்த்தி விட்டது. வள்ளுவர் கோட்டம் அருகே இனிமேல் எந்தவித அரசியல் நிகழ்ச்சியும்நடத்தப்படக் கூடாது என்று அறிவித்தும் விட்டது.

அடுத்து, தில்லியைப் போன்றே கையேந்தி உணவகங்களைத் துரத்தும் சதியை மெல்ல ஆரம்பித்துள்ளது. சென்னை மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போன்று ""உணவகங்களில் கட்டாயமாக வெந்நீர் தரப்பட வேண்டும்'' எனும் சுகாதாரச் சுற்றறிக்கை, நடைபாதை உணவகங்களை அச்சுறுத்தித் துரத்தும் ஆயுதம்தான்.

சென்னையின் மொத்த பரப்பளவில் 3 முதல் 4 சதம் மட்டுமே சாலைகளாக உள்ளன என்றும் இதனை லண்டன், நியூயார்க் நகரங்களைப் போன்று 20% வரை அதிகரிக்க வேண்டும் என்றும் உலகவங்கி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னையை பிற நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. திருச்சி சாலையில் செங்கல்பட்டு வரைக்கும், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரைக்கும் நகரம் விரிந்து கொண்டே செல்கிறது. அச்சாலையின் இருபுறங்களிலும் பெட்டிக்கடைகள், காலைமாலை உணவகங்கள், தேநீர்க் கடைகள் இருந்த சுவடே இன்றைக்கு இல்லை. புல்டோசர்களின் கோரைப் பற்களால் பல பழைய கட்டிடங்கள் காங்கிரீட் கசடுகளாக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.

பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டிய 500 மீட்டர் வரை இருபுறமும் தகவல் தொழில்நுட்பப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொட்டிவாக்கத்தில் இருந்து செம்மண்சேரி வரை சாலையின் கிழக்கே உள்ள அனைத்து சிற்×ர்களும் அழிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட உள்ளன. இந்த சாலையும் உலக வங்கி நிதியால் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்திரா நகர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் அன்றாடக் கூலிகள், பழைய மகாபலிபுரம் சாலையைக் கடந்து வேலைக்குப் போக முடியாமல், உலக வங்கிச் சாலையின் டிவைடர்கள் (சாலைகளின் நடுவே உள்ள தடுப்புச் சுவர்) தடுக்கின்றன.

சாலையை அகலப்படுத்துவது என்ற பெயரில் இடிக்கப்பட்டுப் போர்க்களமாகி நிற்கும் வீடுகள், கடைகள்; கையில் தங்கக் காப்பு, கஞ்சி போட்ட வெள்ளைக் கதர், டாட்டா சுமோ என்பவற்றைத் தங்கள் அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் நிலத்தரகர்கள்; அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி எனப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் கணினி நிறுவனங்கள், ஓய்விடக் கடற்கரை இல்லங்கள் — என சென்னையின் அடையாளமே மாற்றப்பட்டு வருகின்றது.

எந்த ஒரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்வதில்லை எனக் கொள்கை முடிவெடுத்திருந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமோ, பழைய மகாபலிபுரம் சாலையில் கணினி மென்பொருள் விற்பன்னர்கள் சொகுசாய் வாழ, அவர்களுக்கு வீட்டு மனைகளை உருவாக்க முடிவெடுத்து சோழங்கநல்லூர் கிராமத்தில் 500 குடும்பங்களைத் துரத்தி அடிக்க உள்ளது. அடுத்த வருடம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கென்று இதே ஊரில் பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்து 25 லட்சம் சதுர அடியில் "அறிவுத் தொழில் நகரை' உருவாக்க உள்ளன.

சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அதனை பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கும் திட்டத்தை உலக வங்கி 1970களிலேயே தொடங்கி விட்டது. மாஸ்டர் பிளானை உலக வங்கி உருவாக்கி, அது கடனாக வழங்கி இருக்கும் தொகை மட்டும் ரூபாய் 25 ஆயிரம் கோடிகள்.

நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கம் எனக் கூறிக் கொண்டு, 1976இலேயே உலக வங்கியின் ஆலோசனையை ஏற்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவ்வங்கியின் நிதி உதவியோடு தொடங்கி 2000 வாக்கில் நிறைவேற்றிய திட்டம்தான் கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், காய்கனி அங்காடியும். அவர்களின் ஆலோசனையின் பேரில்தான், சாத்தாங்காடு இரும்பு வணிக வளாகமும், மாதவரம் சரக்குந்து நிலையமும் கட்டப்பட்டன.

மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி, பெருகி வரும் வெளிநாட்டுச் சுரண்டலுக்கு அத்தியாவசியமாகிப் போன விமானப் பயணங்களை விரிவாக்கும் நோக்கில், புதியதோர் விமான தளத்திற்கென்று மீனம்பாக்கத்துக்கு வடமேற்கே மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 1460 ஏக்கர் நிலத்தை வாங்க தமிழக அரசு 200506 பட்ஜெட்டிலேயே ரூ.100 கோடியை ஒதுக்கி உள்ளது.

சுமார் 25,000 கோடி முதலீட்டில் 2005இல் தொடங்கப்பட்டுள்ள "ஜவஹர்லால் நேரு தேசிய நகர மறு சீரமைப்பு திட்டம்' எனும் ஏழாண்டுத் திட்டம், சென்னைப் பெருநகரை நகர்மயமாக்கல் பகுதியாகவும் நகர்மயமாகாத பகுதி என்றும் பிரித்து, மைய நகரில் அனுமதிக்கப்படாத தொழில்களாக கால்நடை வளர்ப்பையும், நெல், மாவு அரைத்தல் போன்ற பல சிறு தொழில்களையும் வகைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நூற்றாண்டு காலமாய் பல்வேறு சிறு தொழில்கள் மூலம் பிழைத்து வந்தவர்களின் குடும்பங்களை நகர விரிவாக்கம் தூக்கி வீசப் போகின்றது.

இவ்வளவையும் செய்து நகரில் வாழத் தகுதியானவர்களைக் குடியேற்றி விட்டால் மட்டும் போதுமா? தகுதியான வர்க்கம் பொழுது போக்க வேண்டாமா? அதற்கென்று "சென்னைப் பெருநகரில் பாரம்பரியம் மற்றும் பொழுது போக்கு மேம்பாட்டுக்காக' 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைச் செம்மையாக செலவு செய்ய கனிமொழி, கஸ்பார் மூலம் "சங்கமம்' ஆக்கி உள்ளார்கள்.

சென்னையை ஒட்டியுள்ள சதுப்புநிலப் பகுதி பள்ளிக்கரணை சதுப்பாகும். வெளிநாட்டுப் பறவைகள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இப்பகுதியினை அழியாது காக்கும்படி ""நீரி'' (Nஉஉகீஐ) எனும் இந்திய அரசு நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமோ, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து கே.பி.என் எனும் பொறியியல் நிறுவனத்தை அழைத்து வந்து மாற்றுத் திட்டத்தை வகுத்து, அத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி விட்டது. அத்திட்டப்படி இச்சதுப்பு நிலம், கட்டிட இடிமானக் கழிவுகளால் நிரப்பப்பட்டு அப்பகுதி பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன. இன்று டாட்டா கன்சல்டன்சியும், விப்ரோவும் மாபெரும் கட்டிடங்களை அங்கு உருவாக்கியுள்ளன.

இந்த விரிவாக்கம் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு, ஒவ்வொன்றிலுமே உலக வங்கியின் நிதி மூலதனமிடப்பட்டு கிட்டத்தட்ட சென்னைப் பட்டணமே அடிமையாக்கப்பட்டு விட்டது. இத்திட்டங்களை மேற்பார்வையிடுவதற்கென்றே தனியாய் ஓர் அலுவலகத்தை உலக வங்கி சென்னை தரமணியில் அமைத்துள்ளது.

அழிக்கப்பட்டு வரும் விவசாயத்திலிருந்தும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாலும் சொந்த மண்ணில் இருந்து வேர் பிடுங்கப்பட்ட மக்களை, எந்த வேலையாவது செய்து பிழைக்கலாம் என்று சென்னை நோக்கித் துரத்துகின்றது வாழ்க்கை. ஆனால் சென்னையிலோ, குடியிருக்க ஒண்டக் கூட முடியாமல் புறநகருக்குத் துரத்தப் போகிறது உலக வங்கியின் விரிவாக்கத் திட்டம்.

·கவி