தமிழ் அரங்கம்

Saturday, July 26, 2008

 பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.
2. தமிழ் மக்களின் கடந்தகால அவலங்களுக்கு காரணமானவர்களை தெளிவுபடுத்திய ஒரு கூட்ட அழைப்பைக் கோரினோம்.

3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்....
இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது.

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் : ஊதிய உயர்வு விடுதலை தருமா?

ஊழியர்களின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. ஐ.ஏ.எஸ் தகுதி கொண்ட அரசுச் செயலர்களின் மாதச் சம்பளம் தற்பொழுது ரூ. 28,000/ தான். இதனை, ரூ. 80,000/ ஆக அதிகரிக்க வேண்டுமென ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இதோடு இந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய இதரப் படிகளையும் சேர்த்தால், அவர்களின் மொத்தச் சம்பளம் ரூ. 96,000/ ஆக எகிறிவிடும்.

முப்படைத் தளபதிகளின் சம்பளத்தை ரூ. 90,000/ ஆகவும்; தற்பொழுது ரூ. 8,250/ சம்பளம் பெறும் இளம் லெப்டினென்ட் அதிகாரிகளின் சம்பளத்தை ரூ. 25,760/ ஆகவும்; துணை இராணுவப் படைகளின் தலைமை அதிகாரியின் சம்பளத்தை ரூ. 80,000/ ஆகவும் உயர்த்த வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரையால் 60 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.

அதேசமயம், தற்பொழுது படிகளையும் சேர்த்து ரூ. 5,115/ சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு இனி ரூ. 6,790/ சம்பளம் வழங்க ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த உயர்வு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப்படியை (ரூ. 7,000/) விடக் குறைவானதாகும். கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை 18 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்துக் கொடுக்கப் பரிந்துரைத்துள்ள ஊதியக் குழு, மேல் மட்டத்தில் 60 முதல் 200 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க அறிவுறுத்தியிருக்கிறது.

Friday, July 25, 2008

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்

உலக மேலாதிக்கத்தையே ஜனநாயகத்தின் பெருமையாக பீற்றித்திரியும் இடமான வாஷிங்டனிலிருக்கும் அமெரிக்கப் பாராளுமன்றமான கேப்பிட்டல் கட்டிடத்தையும், காலனிகளை உருவாக்கும் அமெரிக்கத் தாகத்தை சுதந்திர வேட்கையாக மாற்றி அதனை நினைவுகூறும் வண்ணம் மான்ஹாட்டனில் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் சுதந்திரதேவி சிலையையும் கட்டி எழுப்புவதற்கு வேலை செய்தவர்கள் கருப்பின அடிமை மக்கள். இதற்கான கூலிகூட அம்மக்களுக்குத் தரப்படாமல், அவர்களை வேலை வாங்கிய வெள்ளை முதலாளிகளுக்குத்தான் தரப்பட்டது.
அமெரிக்கப் பெருமிதத்தின் சின்னங்கள் அனைத்தும் கருப்பின மக்களின் இரத்தம் கலந்து கட்டப்பட்டவைதான். வெள்ளை நிறவெறியினுடைய மூலம் ஐரோப்பாவென்றாலும், அதை வைத்தே ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால் அது அமெரிக்காதான்.
கி.பி 1600களின் மத்தியில் ஆப்பிரிக்காவிலிருந்து மந்தைகளைப்போல பிடித்து வரப்பட்டார்கள் ஆப்பிரிக்க மக்கள். இதே காலத்தில்தான் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாறே நிறவெறியால் எழுதப்பட்டதுதான். கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மட்டுமல்ல பின்னர் வந்த லத்தீன் அமெரிக்கர்களும், ஆசியர்களும் கூட அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். 1778இன் சுதந்திரப் பிரகடனமும், 1860இல் நடந்த உள்நாட்டுப் போரும் நிறவெறியின் மீதுதான் நின்றுகொண்டிருந்தன.

உடனே நாடே குமுறத் தொடங்கியது. எங்கும் எதிலும் கருப்பின மக்களின் மீதான துவேசம் பொங்கி வழிந்தது. போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சார்லஸ் சொன்ன அடையாளங்களுடன் கூடிய கருப்பின இளைஞன் தேடப்பட்டான். பின்னர் பென்னட் என்ற கருப்பின இளைஞன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவே கண்ணீர் விடும்படி சென்டிமெண்ட் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டன ஊடகங்கள். கருப்பின மக்கள் அனைவருமே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்தது. சார்லஸின் தம்பி மாத்திவ் உண்மையை ஒப்புக்கொண்டான். மனைவியை சார்லஸே கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவள் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காப்பீட்டிலிருந்து பெரும் பணம் கிடைக்கும் என்பதுதான் கொலைக்கான காரணம். "அண்ணனுக்கு துப்பாக்கி வழங்கியது நான்தான்' என்று தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

Thursday, July 24, 2008

பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.

3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்.

இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. இப்படி அரச ஆதரவு கும்பல் இன்றி, மக்களுக்காக தனித்துவமாக போராட மறுக்கின்ற புலம்பெயர் நடத்தைகளும் நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானது. பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில், அந்த மக்களை மீண்டும் மீண்டும் ஏறி மிதிக்கின்ற தொடர்ச்சியான வழமையான சடங்குத்தனமான முயற்சிகள் தான் இவை.
... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 23, 2008

சிறப்பு வெளியீடு : 25ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்


இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.

ஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.

Tuesday, July 22, 2008

சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்

எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது. இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர். .... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, July 21, 2008

பணம் அலுக்கவில்லை பகட்டு அலுத்துவிட்டது - குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

ஸாவின் எனும் மேட்டுக்குடி ஓட்டல் நிறுவன முதலாளி, ""இது உடைமை உணர்ச்சிக்கு மாறாக இருத்தலின் உணர்ச்சியாகும்'' எனத் தெரிவிக்கிறார். இவ்வாறு பஞ்சு மெத்தையில் புரண்டவாறு இருத்தலை தேடியலைந்து, யதார்த்த உலகத்தில் கிடைக்காததாலோ என்னவோ, "இரண்டாம் வாழ்க்கை' எனும் இணையதள விளையாட்டில் மேட்டுக்குடியினர் இறங்குகிறார்கள்.

செயற்கையான உலகமான இந்த விளையாட்டில், அந்த உலகத்திற்கென தனி நாணயம் உள்ளது. அங்கே நகைகள், ஆடைகள், அணிகலன்கள், அசையாச் சொத்துக்கள் என எல்லாப் பொருட்களையும் வாங்கவோ, விற்கவோ முடியும். அந்த இணையத் தளத்தில் அவர்களது ரசனைக்கேற்ற பொருட்களை நிறுவனங்கள் விளம்பரப் படுத்துகின்றன; காட்சிக்கு வைக்கின்றன. இந்த செயற்கை நுகர்வு உலகத்தில் அவர்களது இருத்தலின் தேடல் தொடர்கிறது.

நடுத்தர வர்க்கத்தை "உட்கார்–வாயை மூடு, வாங்கு' எனக் கட்டளையிடுகிறது நுகர்வுத் தொழில். விளம்பரங்களின் வழியாக நுகர்பொருட்களால் கட்டமைக்கப்பட்ட ஆளுமைகளை முன்வைத்து செயற்கைத் தேவைகளை உருவாக்குகிறது. ஆனால், சொத்து சேரச் சேர நுகர்பொருளை மென்மேலும் சொந்தமாக்கிக் கொள்வது தனது ஆளுமையை அடையாளம் காண்பது என்ற நிலை அவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. எனவே, தனக்கான பிரத்தியேகமான நுகர்பொருளைத் தேடும் ரசனையை நோக்கித் தாவுகிறது கோடீசுவர வர்க்கம்... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, July 20, 2008

பாரதியின் முரண்பாடுகள் அருவருக்கத்தக்கவை - மருதையன்

படைப்பாளியின் சுதந்திரம் என்பது அநேகமான சந்தர்ப்பங்களில், அது தன்னகங்காரமாக, சமூக விரோதமாக முடிகிறது. அமைப்புக்களில் இல்லாவிட்டாலும், ஓர் அமைப்பில் இணைந்து இயங்காவிட்டாலும், தனி நபராக சமூக உணர்வுடன் உழைக்கும் மதிமாறனைப் போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அதை தரம்தாழ்த்தி உள்ளடக்கத்தை கொச்சைப்படுத்தி சொல்லப்படுகின்ற விமர்சனங்களை நாம் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால், ஒரு தவறின் மீது ஏன் கடுமையாக நான் விமர்சனம் செய்கிறேன் என்றால் அதன் பொருள் என்ன? எனக்கெதிராக ஒரு வாளைத் தயார் செய்து உங்கள் கையில் கொடுக்கிறேன் என்று அர்த்தம். ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால் அது அவர் செய்தாலும், யார் செய்தாலும், நான் செய்தாலும், அதன் பொருள் என்ன? நாளை அதே போன்றதொரு வாய்ப்பில், அதே போன்றதொரு நிகழ்வில், சூழலில் அத்தகைய தவறை நான் செய்வேனாகில் அந்த வாள் கொண்டு என்னை நீங்கள் குத்த முடியும். ஏண்டா அவனுக்குச் சொன்னாய்? நீ என்ன யோக்கியமா? என்று கேட்க முடியும்?
அப்ப ஒவ்வொரு விமர்சனத்தையும் எதிராளி மீது செலுத்தப்படும் அம்பு என்று மட்டும் பார்க்கக்கூடாது. அது தன்னை எய்வதற்கு வாசகர்களுக்கும், மக்களுக்கும் ஏன் எதிரிகளுக்கும் வழங்கப்படும் அம்பு. விமர்சனங்களைச் செய்வதற்குப் பொறுப்பின்மை அல்ல; தைரியம் வேண்டும். அறிவு நாணயம் வேண்டும். அத்தகைய பக்குவத்தை தோழர் மதிமாறன் பெற்றிருக்கிறார். இன்னும் பெற வேண்டும். அவரது விமர்சனங்கள் புதுமைப்படவேண்டும். சிந்தனையும், செயல்களும் செம்மைப்படவேண்டும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.

புலம்பெயர் இலக்கியத்தில் மக்கள் நலன் மறுப்பும் இதற்கெதிரான போராட்டமும்

ஆரம்ப புலம்பெயர் இலக்கியம் மக்களின் நலனை உயர்த்தியது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு அது படிப்படியாக மக்களுக்கு எதிராகவே மாறத் தொடங்கியது. புதிய சொத்துடைய மத்தியதர வர்க்கமாகவும், முதலில் சொந்தமாக பணத்தை கொண்டு வாழத் தொடங்கிய சூழல்களும், இந்த சூழலுக்கு ஏற்ப வலதுசாரிய பூர்சுவா குடும்பங்கள் உருவானது. இவர்கள் முன் மக்கள் நலன்சார் அரசியல் என்பது, தமது புதிய பூர்சுவா வாழ்வியல் இருப்புக்கு எதிரானதாக கருதியது. இதனால் மக்கள் நலன் அரசியலை எதிர்ப்பது, இவர்களுக்கு அவசியமாகியது.

இப்படி மக்கள் விரோத கோட்பாடுகள், கருத்துக்களே எங்கும் குடிபுகுந்தது. நான், நாங்கள் மட்டும் தனித்து நின்றோம். மறுபக்கத்தில் இடது கலந்த வலதுசாரியம் புலி எதிர்ப்பை அளவுகோலாகக் கொண்டு, மக்கள் அரசியலைத் திரித்து அதில் மிதக்க முனைந்தது.

இதை நான், நாங்கள் மட்டுமே கடுமையாக எதிர்த்து நின்றோம். மக்கள் அரசியலை இதற்கு எதிராக உயர்த்தினோம். இயல்பாகவே நாம் இவர்களின் முதல் எதிரிகளானோம். இவர்கள் தமது செயல்பாட்டுக்கு எதிர்ப்பைச் சந்தித்தது, எம்மிடம் இருந்துதான். எமது எதிர்ப்பு என்பது அரசியல் தளத்தில் இருந்ததால், இது தனிப்பட்ட முரண்பாடாகா வண்ணம் எமது கடுமையான ஈவிரக்கமற்ற விமர்சனத்தை முன்வைத்தோம். இதை தனிப்பட்ட முரண்பாடாக்க முனைந்த போதெல்லாம், அதை நாம் தோற்கடித்தோம்.