தமிழ்மக்கள் தாம் போராடாமல், தமக்கான விடுதலையை ஒருநாளும் அடையமுடியாது. இதுவல்லாத அனைத்துமே மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையில் அக்கறையுள்ள அனைவரும் மக்கள் போராட வேண்டும் என்பதை அங்கீகரிக்காத வரை, மாற்றுப்பாதை என்பது அவர்களைப் பொறுத்தவரை தமது மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த உதவும் வாதத்துக்கு உரிய வெற்றுச் சொல்லாடல்கள் தான்.
மக்கள் போராடாமல், மக்கள் தமது விடுதலையை அடைய முடியாது என்பதை, யாராலும் மறுக்க முடியாது. இந்த உண்மையோ, ஒருபுறம் பளிச்சென்று உள்ளது. மறுபக்கம் மக்கள் தமது எதிரியாக கருதி யாருக்கு எதிராக போராட வேண்டியுள்ளதோ, அவன் தான் கூறுகின்றான் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்று. அதேநேரம் அவனே தான் தன்னை முற்போக்குவாதியாக, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரானவனாக, காட்டி தான் மக்களுக்காக போராடுவதாகவும் கூறிக்கொள்கின்றான்.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Showing posts with label இரயாகரன். Show all posts
Showing posts with label இரயாகரன். Show all posts
Monday, June 2, 2008
Friday, May 30, 2008
மக்களுக்காக போராட மறுக்கும் 'ஜனநாயகம்"
'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Labels:
இரயாகரன்,
குற்றவாளி,
சமூக விரோதி,
ஜனநாயகம்
Thursday, May 29, 2008
கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பாதுகாக்கும் பாசிச அரசியல்
கிழக்கில் திட்டமிட்ட வகையில் நடைபெறும் கற்பழிப்புகளோ அரசியல் ரீதியானவை. இதை மூடி மறைப்பது கூட, அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இலங்கையில் நடைபெறும் பொதுவான கற்பழிப்புக்களை விட, இது வேறுபட்டவை. இந்தக் குற்றம் நிகழ்கின்ற ஒரு பொதுச் சூழலில் தான், ஆசிய மனித உரிமை அமைப்பின் செய்தி வருகின்றது. குறித்த ஒரு சம்பவம் மீது, கவனத்துக்குரிய ஒரு செய்தியை வெளியிட்டது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி எதிர்வாதங்கள், இது போன்ற உண்மைகளை குழிதோண்டி புதைக்கும் மிக இழிவான அரசியல் செயலாகும்.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Labels:
இரயாகரன்,
கற்பழிப்பு,
மனித உரிமை
Subscribe to:
Comments (Atom)
