தமிழ் அரங்கம்

Saturday, May 24, 2008

மூளைக்கோளாறு பிடித்தவர்கள் நடத்திய படுகொலையும், நியாயப்படுத்தும் கிழக்கு பாசிட்டுகளும்

பாசிசப் புலியில் கருணா என்ற தனிநபருக்கு ஏற்பட்ட முரண்பாடு கிழக்கு பிரிவினையாகியது. அதுவோ இன்று பேரினவாதத்தின் கிழக்கு கூலிக் கும்பலாகி நிற்கின்றது. இது கிழக்கு மக்களின் 'ஜனநாயகம்" கிழக்கு தமிழ் மக்கள் 'நலன்" என்று பல்வேறு கோசங்களுக்கு ஊடாக, தனது மக்கள் விரோத பாசிசத்தை விதைத்தனர், விதைக்கின்றனர்.

கிழக்குக் கூலிக் கும்பலுக்கெல்லாம் தலைமை தாங்கும் ஒரு ரவுடியை, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்ற தலைவனாக இனம் கண்ட பேரினவாதம், அவனை தனது கிழக்கு முதலமைச்சராக்கியது. இப்படி 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் புகழும் இந்த நிகழ்வுகள் அனைத்தும், பேரினவாத சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பத்தான் நடக்கின்றது. இப்படி இருக்க, இந்த கூலிக்கு மாரடிக்கும் கிழக்கு பாசிட்டுக்களை, கிழக்கு மக்களின் விருப்பாகவும், தேர்வாகவும் கூறுகின்றனர். புலியெதிர்ப்பு கிழக்கு பாசிட்டுக்களின், ஒரேயொரு அரசியலாக இதுவே உள்ளது.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தில்லைப் போராட்டம் : 'தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பவாதம்

தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியதைத் தொடர்ந்து சில "விரும்பத்தகாத' துணை விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தீட்சிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2 போராட்டத்தின் வெற்றிக்குப் பின் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையேறிப் பாடிவிட்டு இறங்கும்போது, அங்கே கூடியிருக்கும் பல பக்தர்கள் அவரை வணங்கி அவரிடமிருந்து திருநீறும் வாங்குகிறார்கள்.

தீட்சிதர்களால் பக்தர்களைத் தடுக்கவும் முடியவில்லை; ஆறுமுகசாமிக்கு பக்தர்கள் வழங்கும் இந்த மரியாதையைச் சகிக்கவும் முடியவில்லை. எனவே, புழுங்குகிறார்கள். தங்களது "ஏரியாவுக்குள்' அத்து மீறி நுழைந்த ஒருவன் தங்களுக்கு மட்டுமே உரித்தான திருநீறு வழங்கும் "அத்தாரிட்டி'யையும் பறித்துக் கொண்டுவிட்டதை எண்ணி வயிறு வெந்து துடிக்கிறார்கள்.

தமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் தம்மையே வாளும் கேடயமுமாக நியமித்துக் கொண்டுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும்கூட தீட்சிதர்களைப் போலவே தீராத சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏப்ரல் 2008 ""தமிழர் கண்ணோட்டம்'' இதழில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது.

""இந்திய தேசியர்களும், மறைமுகப் பார்ப்பனீயர்களும், துக்ளக் சோ வுக்கு இணையான சூழ்ச்சிக்காரர்களுமான ம.க.இ.க.வினர், தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்று விட்டார்களே, இந்த "விபரீதம்' நேர்ந்தது எப்படி?'' என்ற கேள்விக்கு விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்.
.

Friday, May 23, 2008

சரப்ஜித் சிங்குக்கு ஒரு நீதி, அப்சல் குருவுக்கு வேறொரு நீதியா?

இந்தியாபாக். இடையேயான உறவு சாண் ஏறினால் முழம் வழுக்கும் வழுக்குப்பாறை போன்றது. உப்புப் பெறாத விசயத்தைக்கூட ஊதிப் பெருக்கி, முட்டல்மோதல் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்துவதில் இரு நாட்டு ஆளும் கும்பலும் கை தேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ""செண்டிமென்டை''த் தூண்டிவிடக் கூடிய பிரச்சினை கிடைத்தால், சும்மா விட்டு விடுவார்களா?


சரப்ஜித் சிங் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 17 ஆண்டுகளாக பாக்.சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக அடைபட்டுக் கிடக்கிறார். பாக்.இல் உள்ள லாகூர், ஃபைசலாபாத், கஸுர் ஆகிய மூன்று நகரங்களில் 1990 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புகளில் 14 பேர் கொல்லப்பட்டனர். சரப்ஜித் சிங்கை பாக். எல்லைக்குள் வைத்துக் கைது செய்த போலீசார், அவருக்கும் இந்தக் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சுமத்தி, இந்த வழக்கில் அவருக்குத் தூக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்தனர். சரப்ஜித் சிங்கின் மீதான குற்றச்சாட்டு பாக். உச்சநீதி மன்றத்திலும் "நிரூபிக்கப்பட்டு', தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. பாக். அதிபரால் அவரது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு, ஏப்ரல் 1அன்று அவரது தண்டனையை நிறைவேற்றப் போவதாக அறிவிக்கப்பட்டது.

சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடும் தேதி திடீரென முடிவு செய்யப்பட்டதற்கு பின்னே, சில வக்கிரமான உண்மைகள் உண்டு. பாக். சிறையில் தூக்கு தண்டனைக் கைதியாக அடைபட்டுக் கிடந்த, இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீர் சிங்கை மன்னித்து, விடுதலை செய்து, கடந்த மார்ச் 3 அன்று இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது, பாக்.அரசு. காஷ்மீர் சிங் 35 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுக் கிடந்ததால், அவரின் விடுதலையை இரண்டு தரப்புமே, நல்லெண்ணத்தின் அடையாளமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. காஷ்மீர் சிங் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த மறுநாளே, தான் பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இந்தியாவிற்காக உளவு பார்த்த உண்மையைப் போட்டு உடைத்தார். இது, இந்தியாவிற்கு தர்ம சங்கடத்தையும், பாகிஸ்தானுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது.
.

தீவிரவாத ஒழிப்பும் போலீசின் அத்துமீறல்களும்

நீதிபதி: எனது மேசையின் மீதுள்ள ஆவணங்கள், ""இவர் முக்தர் அல்ல'' எனத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகையால், இவரின் உண்மையான பெயர் என்ன?
போலீசு அதிகாரி: அஃப்டாப் ஆலம் அன்சாரி என்பது இவரின் உண்மையான பெயர்.நீதிபதி: நீங்கள் தவறான நபரைக் கைது செய்துள்ளீர்கள் என்பதுதான் இதன் பொருள். இந்தக் கொடூரமான தவறு எப்படி நடந்தது?

நீதிபதியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் போலீசு அதிகாரி மௌனமாக நிற்கிறார்.

— இது ஏதோவொரு திரைப்படத்தின் திரைக்கதை வசனம் அல்ல. கடந்த ஆண்டு (2007) நவம்பர் மாதம் உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த உண்மையான விசாரணை இது.
இந்த விசாரணையின் முடிவில் அஃப்டாப் ஆலம் அன்சாரி, கொல்கத்தா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என்பதும், உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்புக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் நிரூபணமாகி, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அப்பாவி அஃப்டாப் தீவிரவாதியாக உருமாற்றம் செய்யப்பட்ட கதையோ, புலனாய்வு என்ற பெயரில் போலீசார் நடத்திவரும் அத்துமீறல்களையும், அவர்களின் அடிமுட்டாள்தனத்தையும் ஒரு சேர அம்பலப்படுத்துகிறது. ""உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக முகம்மதுகாலித், தாரிக் குவாஸ்மி என்ற இரு தீவிரவாதிகளைக் கைது செய்து உ.பி. போலீசு விசாரணை நடத்தியபொழுது, அவர்கள் உ.பி. குண்டு வெடிப்பின் மூளையாகச் செயயல்பட்டவன் "முக்தர் என்ற ராஜு என்ற அஃப்டாப்' என்றும்; அவன் கோரக்புரைச் சேர்ந்தவன் என்றும் சாட்சியம் அளித்தார்களாம். கொல்கத்தாவைச் சேர்ந்த அஃப்டாபையும் முக்தர் எனச் செல்லமாக அழைக்கும் பழக்கம் இருந்ததாலும், அவரும் கோரக்புரைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த இரண்டு பொருத்தங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, கூலித் தொழிலாளி அஃப்டாபைக் குண்டு வைக்கும் தீவிரவாதியாகக் குற்றஞ் சுமத்திக் கைது செய்திருக்கிறது, உ.பி. போலீசு.
.

Thursday, May 22, 2008

கிழக்கு : தமிழ் முஸ்லீம் மக்களை பிளக்கும் 'ஜனநாயகம்"

பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்த கிழக்கு மக்களின் இன ஒற்றுமையை, தமிழ்தேசியம் தான் பிளந்தது என்று கூறிக்கொண்டு புலியெதிர்ப்பு என்ன அரசியல் நடத்தியது? தமிழ்தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தியதை விட, மிகமோசமாக இன ஒற்றுமையை கிழக்கிசம் சிதைத்தது.
தமிழ் தேசியத்தில் இருக்கின்ற ஜனநாயகக் கோரிக்கையை மறுக்கும் ஜனநாயக விரோதிகளில் ஒரு பகுதியினர், அதை மூடிமறைக்க கிழக்கு என்ற கோசத்தை எடுத்தனர். இவர்களோ புலியை விட மிகமோசமான, (கிழக்கு) மக்களின் விரோதிகளாக வெளிவந்துள்ளனர். கிழக்கு மக்கள் மத்தியில் புதிய சமூகப் பிளவை, புலிக்கு நிகராக பேரினவாதத்தின் துணையுடன் விதைத்துள்ளனர். இதைத்தான் இவர்கள் தமது 'ஜனநாயகம்" என்கின்றனர்.
மக்களை பிரித்து பிளக்கும் அரசியலை, மக்கள் மத்தியில் விதைப்பதைத்தான் மக்களின் 'ஜனநாயகம்" என்கின்றனர்.இவர்கள் தமிழ் தேசியத்தின் ஜனநாயக கோரிக்கையையே ஏற்க மறுப்பவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஜனநாயக விரோதிகளாக உள்ளனர். இதனால் இவர்கள் தமிழ் தேசியத்தை தவறாக விளக்கியதுடன், அதன் மேல் குப்பைகளை வாரிக்கொட்டினர். மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக இருந்ததுடன், தேசியத்தை வெறும் புலியாகவே காட்டி இயங்கினர். தமிழ் தேசியத்தை, வடக்கு மக்களின் பிரச்சனையாக திரித்தனர். இதன் மூலம் குறுகிய கிழக்கு மையவாதத்தை உருவாக்கினர்.
.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மக்கள் சக்தி எழுந்தது! சிறப்புப் பொருளாதார மண்டலம் வீழ்ந்தது!

கோவா என்றாலே கடற்கரை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கொண்டாட்டங்கள் என்றுதான் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. இந்த முதலாளித்துவச் சித்தரிப்புக்கு மாறாக, இனிமேல் கோவா என்றால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடித்த மாநிலம் என்றுதான் நாம் அடையாளம் காண வேண்டும்.

நமது நாடு முழுவதும் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிராக (சிபொம) இங்கொன்றும் அங்கொன்றுமாகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், கிராம மக்கள், படித்த நடுத்தர வர்க்கம், பொறியாளர்கள், கிறித்துவ சபை, ஊடகங்கள் என அனைவரும் ஓரணியில் இணைந்து போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை அனுமதியளிக்கப்பட்ட அனைத்து சி.பொ.ம.க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட 7 சி.பொ.ம.க்களின் அங்கீகாரமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இனிமேல் சி.பொ.ம.வைப் பற்றிப் பேசவேமாட்டோம் என மாநில அரசை உறுதியளிக்க வைத்திருக்கிறது, இம்மக்கள் எழுச்சி.

உள்ளூர் மக்கள் அனைவரும் சி.பொ.ம. விரோதி மஞ்ச் என்னும் அமைப்பின் கீழும், படித்த நடுத்தர வர்க்கத்தினரும் தொழில் வல்லுநர்களும் கோவா பச்சாவ் அபியான் (கோவாவைக் காப்போம் இயக்கம்) எனும் அமைப்பின் கீழும் திரண்டு போராடினார்கள்.

இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் வெர்னா என்னும் கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ் பெர்னாண்டஸ், மாண்டிரோ மற்றும் லுத்தோலிம் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஆலன் ஃபல்லேரியா ஆகிய மூவரும் பொறியாளர்கள். இவர்களுடன் பீட்டர் காமா எனும் ஒப்பந்தக்காரரும் இணைந்து சி.பொ.ம.வை எதிர்த்து இயக்கத்தை நடத்தியுள்ளனர்.
.

Wednesday, May 21, 2008

நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!

நேபாளத்தில் 10.2.2008 அன்று நடைபெற்ற அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் 10 வழக்குரைஞர்கள் சர்வதேசப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 856 பார்வையாளர்கள், நேபாளத்தில் தேர்தல் நடைபெற்ற எல்லாத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். சர்வதேசப் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்தத் தேர்தல் அமைதியாகவும், முறைகேடுகள் இன்றியும் நடைபெற்றது என்று 856 சர்வதேசப் பார்வையாளர்களும் ஒருமனதாக அறிவித்தனர்.

நேபாளத்தில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த மன்னராட்சியை அகற்றும் பொருட்டு நடைபெற்றுள்ள இந்தத் தேர்தல், மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேர்தல் நேபாள மாவோயிஸ்டு கட்சி நடத்திய 10 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் மற்றும் மக்கள் இயக்கம் தோற்றுவித்த சாதனை என்று கூறுவது மிகையல்ல. மன்னராட்சியை அகற்றுவது, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்துவது என்ற இரு கோரிக்கைகளுமே மாவோயிஸ்டுகளால் மட்டுமே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகும்.

எனினும், இந்தத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு மாவோயிஸ்டுகள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அமெரிக்க அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதனையொட்டி, இத்தேர்தலைக் கண்காணிக்கும் பொருட்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தலைமையில் நூற்றுக்கணக்கான தேர்தல் பார்வையாளர்களும் வந்திருந்தனர்.
.

தமிழ் முஸ்லீம் மக்களை பிளக்கும் 'ஜனநாயகம்"

பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்த கிழக்கு மக்களின் இன ஒற்றுமையை, தமிழ்தேசியம் தான் பிளந்தது என்று கூறிக்கொண்டு புலியெதிர்ப்பு என்ன அரசியல் நடத்தியது? தமிழ்தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தியதை விட, மிகமோசமாக இன ஒற்றுமையை கிழக்கிசம் சிதைத்தது.

தமிழ் தேசியத்தில் இருக்கின்ற ஜனநாயகக் கோரிக்கையை மறுக்கும் ஜனநாயக விரோதிகளில் ஒரு பகுதியினர், அதை மூடிமறைக்க கிழக்கு என்ற கோசத்தை எடுத்தனர். இவர்களோ புலியை விட மிகமோசமான, (கிழக்கு) மக்களின் விரோதிகளாக வெளிவந்துள்ளனர். கிழக்கு மக்கள் மத்தியில் புதிய சமூகப் பிளவை, புலிக்கு நிகராக பேரினவாதத்தின் துணையுடன் விதைத்துள்ளனர். இதைத்தான் இவர்கள் தமது 'ஜனநாயகம்" என்கின்றனர். மக்களை பிரித்து பிளக்கும் அரசியலை, மக்கள் மத்தியில் விதைப்பதைத்தான் மக்களின் 'ஜனநாயகம்" என்கின்றனர்.

இவர்கள் தமிழ் தேசியத்தின் ஜனநாயக கோரிக்கையையே ஏற்க மறுப்பவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஜனநாயக விரோதிகளாக உள்ளனர். இதனால் இவர்கள் தமிழ் தேசியத்தை தவறாக விளக்கியதுடன், அதன் மேல் குப்பைகளை வாரிக்கொட்டினர். மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக இருந்ததுடன், தேசியத்தை வெறும் புலியாகவே காட்டி இயங்கினர். தமிழ் தேசியத்தை, வடக்கு மக்களின் பிரச்சனையாக திரித்தனர். இதன் மூலம் குறுகிய கிழக்கு மையவாதத்தை உருவாக்கினர்.
.
.

Tuesday, May 20, 2008

பசுவின் புனிதம் : ஒட்டுப் பொறுக்கும் தந்திரம்

இந்து மதவெறியர்கள் எங்கெல்லாம் காலூன்றத் திட்டமிடுகிறார்களோ அங்குள்ள சிறுபான்மையினரை வம்புக்கிழுத்துத் தகராறை உருவாக்குவதற்காகப் பல உத்திகளைக் கையாளுகின்றனர். உள்ளூர் மசூதியில் வம்படியாகக் காவிக்கொடி ஏற்றுவது, பாகிஸ்தான் கொடியை பள்ளிவாசலில் ஏற்றி உள்ளனர் என்று வதந்தியைப் பரப்புவது, பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் வெற்றி பெறும்போது இங்குள்ள முசுலீம்கள் வெடி வெடிக்கிறார்கள் என்று புரளி கிளப்புவது இப்படிப் பல உத்திகளைக் கையாண்டு மக்களை மதரீதியில் பிளந்து கலவரத்தின் மூலம் வேரூன்றுவது என்பதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இவர்களின் சதிச்செயல்களில் ஒன்றுதான், "இந்துக்கள் தெய்வமாக வணங்கும் கோமாதாவை (!) முசுலீம்கள் உயிரோடு தோலை உரித்துக் கொல்கின்றனர்' என்று வதந்தியைப் பரப்பி இந்துக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, கலவரத்தை உருவாக்குவது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்தில், கோமாதா கொல்லப்படுவதாக பொய்ப் பிரச்சாரத்தை இந்துவெறியர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டம், சாந்திபுரா பகுதியில், ஒரு பசு மாட்டைக் கொன்றதற்காக பஜ்ரங் தள் வெறியர்கள் ஜெயராம் என்ற ஒரு தலித்தையும், இரண்டு முசுலீம்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 500 பேர் முன்னிலையில் சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை அடித்துப் படுகாயப்படுத்தியதுடன், அவர்களை நிர்வாணப்படுத்தி, மாட்டிறைச்சியைத் தலையில் வைத்து ஊர்வலமாக இழுத்து வந்துள்ளனர்.

Monday, May 19, 2008

மக்களுக்காக நாம் ஒரு நாளும் போராட மாட்டோம் - புலிகள் சார்பாக புலிப் பினாமி புதினம் வாக்குமூலம்


கொலைக் கலாச்சாரம் தான் எமது தேசியம். நாங்கள் நேபாள மாவோயிஸ்ட்டுகள் போல், ஜனநாயகம் பேச முடியாது. யார் இதற்கு எதிராக எதைச் சொன்னாலும், எப்படி விமர்சித்தாலும் நாம் சுயவிமர்சனம் செய்ய முடியாது. நாங்கள் இதற்கும் மரணதண்டனையைத் தான் வழங்குவோம். இதையே தான் வலதுசாரிய மக்கள் விரோத புலிகள், மீண்டும் சொல்ல முனைகின்றனர்.


அண்மையில் தமிழ் நாட்டு சட்டசபையில் கருணாநிதி புலிக்கு எதிரான ஒரு விமர்சனத்தில் நேபாளத்தை சுட்டிக்காட்டி புலிகளை விமர்சித்திருந்தார். இதை ஒட்டிய தொடர்ச்சியான விமர்சனத்தை அடுத்து, புலிகள் தமது சொந்த பாசிசத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்