தமிழ் அரங்கம்

Showing posts with label வன்முறை. Show all posts
Showing posts with label வன்முறை. Show all posts

Monday, September 1, 2008

இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்


பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது. அர்விந் அப்பாத்துரை இணங்கி உறவு கொள்ள முயன்று தோற்றவர். இணங்க வைப்பதில் அவர் தொடர்ச்சியாக கையாண்ட வழியில் வெற்றி பெற்றதாக நம்பிய முயற்சியில் தோற்றபோதே, அதை தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள்.

இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான்;. இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில்............ அரசியல் கூறுகள் எதுவும், கிழக்கு என்ற மேலாதிக்க கூச்சலின் பின் கிடையாது. .......... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, August 30, 2008

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட எதிர்வினையாகின்றது. இது வரையறுக்கப்பட்ட தெளிவான ஒரு சமூக அடிப்படையைக் கொண்டதல்ல. பூர்சுவா மன இயல்பில் ஏற்படும் அன்றாட தடுமாற்றங்கள் இவை. பெண்கள் தமக்குள் கொண்டுள்ள இந்த உரையாடல் சார்ந்த உணர்வே, பல குடும்பங்களின் மகிழ்ச்சியை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மற்றைய வீட்டில் உள்ளவர்கள் போல், பரஸ்பர கற்பனைகளை கட்டிக்கொண்டு சதா புலம்புகின்றனர். அந்த மற்றைய வீட்டிலும் இதே பல்லவியும், இதேநிலையும் தான். மற்றைய வீட்டில் நகை வாங்கினால் அதைப்போல் அல்லது அதைவிட உயர்வாக வாங்குவது, மற்றைய வீட்டார் ஒன்றைச் செய்தால்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, August 6, 2008

சரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போரின் வன்முறை அரசியலும்

சரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.


சரவணனை தாக்கிய அரசியல் 'தமிழ்" தேசியம். இந்த 'தமிழ்" தேசியத்தை இன்று புலிகள் கொண்டுள்ளனர் என்பதால், அது புலிக்கு எதிரான கண்டனமாகின்றது. இப்படி புலியெதிர்ப்பு அரசியல் இங்கு, கும்மியடிக்கத் தொடங்குகின்றது. இதனடிப்படையில் தான் கண்டனங்கள் வெளி வந்தன. ஆனால் இது புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

வன்முறை அரசியலின் மூலம் 'தமிழ்" தேசியத்தில் மட்டுமா உண்டு? இல்லை, 'தமிழ்" தேசிய மறுப்பிலும் கூட அதுவுள்ளது. இதற்கான சமூக அடிப்படையும், அதன் அரசியல் அடித்தளமும், எம் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தன சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. இப்படி இந்த வன்முறையின் அரசியல் மூலம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வன்முறை பலதளத்தில் பல பின்னணியில் நிகழ்கின்றது...

Thursday, June 19, 2008

மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல் : 'வன்முறையே வெல்லும!"; - "மார்க்கிஸ்டு"களின் தேர்தல் கொள்கை

பஞ்சாயத்துத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே எதிர்க்கட்சியினரைப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல பகுதிகளில் சி.பி.எம்.குண்டர்கள் விரட்டியடித்தனர். குறிப்பாக,சிங்கூர்நந்திகிராமம் பகுதியில் சி.பி.எம் குண்டர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு, தமது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் இப்பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ""சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்காக கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட சி.பி.எம் கட்சியினருக்கு இத்தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்'' என்று பிரச்சாரம் செய்து வந்த நந்திகிராமத்தைச் சேர்ந்த பூமி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகள் மீது சி.பி.எம். குண்டர்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தினர். அவர்களின் வீடுகள்வாகனங்கள் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டன.
சிங்கூர்நந்திகிராமம் பகுதியில், அன்னிய சக்திகள் ஊடுருவி மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகப் புளுகி, அடக்குமுறைகளை நியாயப்படுத்தி வந்த சி.பி.எம் கட்சி, தற்போதைய பஞ்சாயத்து தேர்தல் வெற்றி மூலம் தமது செல்வாக்கை நிரூபிக்கலாம்; பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை இத்தேர்தலைச் சாதகமாக்கிக் கொண்டு பழிவாங்கி ஒடுக்கலாம் என்று கணக்கு போட்டு, இப்பகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு குண்டர் படைகளை ஏவியது.

சி.பி.எம் குண்டர்படையின் வன்முறைகள் பற்றிய புகார்கள் குவியத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் மத்திய ரிசர்வ் போலீசுப் படையை இப்பகுதிகளில் குவித்தது. ஆனாலும், உள்ளூர் போலீசின் துணையுடன் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். மத்திய ரிசர்வ் போலீசு பல இடங்களில் சி.பி.எம்.குண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி, பாதுகாப்பு அளித்த பிறகே எதிர்க்கட்சியினர்.. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்