தமிழ் அரங்கம்

Saturday, May 16, 2009

தமிழனை ஏமாற்றி பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது.

புலி அரசியல் செத்துப் போகவில்லை. தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது. புலித் தலைமைக்கு என்ன நடந்தது என்பது, எந்த நேரமும் ஒரு அரச செய்தியாக வெளிவரலாம். அது கைது அல்லது மரணம் அல்லது அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பது, இதில் நிச்சயமான ஒன்று.

ஆனால் கடந்த 60 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்த அரசியல் செத்துவிடவில்;லை. கடந்த 30 வருடமாக ஆயுதமேந்தி, தமிழ் மக்களை ஏமாற்ற அது போட்ட வேஷம் கலைந்துவிடவில்லை.

இந்த வேஷத்தை காப்பாற்ற, அது பாசிச சர்வாதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் ஏவியது. ஆயிரம் ஆயிரம் மக்களை, இதற்காக நரை வேட்டையாடியது. இரத்தமும் கண்ணீருமின்றி மக்கள் வாழவில்லை. தேசமோ விடியவில்லை. மக்களின் தேசியத்தை, அதன் ஆன்மாவை குழி தோண்டிப் புதைத்தனர்.

ஆனால் இதை அண்டி பலர் பிழைத்துக் கொண்டனர். கோடிகோடியாக சம்பாதித்துக் கொண்டனர். புலி முதல் புலியெதிர்ப்பு வரை இந்த
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இதத்ருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக்கொணு மக்களை அறிவூட்டி ...


ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிக்கு வாக்களி என்று சொல்வதாகவே இந்த வரலாறு நீளப்போகிறது.

கட்சிகளைத் தோற்கடிப்பதை விட மக்களை ஏமாற்றும் சதிவலையான கட்சி ஜனநாயகத்தையே தோகடிப்பது என்ற வகையில் தேர்தல் புறக்கணிப்பு சிறந்த அரசியல் நிலைப்பாடு.

ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்பழக்குவதை விட, தேர்தல்களூடு படிப்படியாக கட்சி அரசியலுக்கு எதிரான அரசியற்சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமானால் அதன் அறுவ்டை பெரியது.

ஈழஅவலத்தால்........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் : வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?

ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் பலமுனைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. அப்போர் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அல் காய்தா தலைவர் ஓசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. அல் காய்தா, தாலிபான் ஆகிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவால் முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்கானின் அண்டை நாடான பாகிஸ்தானையும் ஆட்டங்காணச் செய்துவிடும் அளவிற்கு அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

அமெரிக்கா, ஆப்கானில் கர்சாய் என்பவர் தலைமையில் நிறுவியுள்ள பொம்மை அரசாங்கத்தின் அதிகாரம், அந்நாட்டின் தலைநகர் காபூலைத் தாண்டினால் செல்லாக்காசுதான் எனுமளவிற்கு முடங்கிப் போய்க் கடக்கிறது. இன்னொரு புறமோ, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற கதையாக, ஆப்கானிலும், ஆப்கான் எல்லையையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் தாலிபான் என்ற பெயரை வைத்துக்கொண்டு இயங்கி வரும் பல்வேறு இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் ஆங்காங்கே குட்டி சமஸ்தானங்களை நடத்தி வருகின்றன. இந்த யுத்தப் பிரபுக்களை அழிப்பதற்காக அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தும் வான்வழித் தாக்குதல்களிலும், தரைவழித் தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர்.

தனது தேர்தல் பிர
...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 15, 2009

ஏன் இன்னமும் இனவழிப்பு யுத்தம் முடியவில்லை!?

காலக்கெடு பல விதிக்கப்பட்டது. நாட்கள் பல குறிக்கப்பட்டது. சில மணி நேரங்கள் கூட அறிவிக்கப்பட்டது. இருந்தும் பேரினவாத இனவழிப்பு யுத்தம், இன்னமும் முடிவுக்கு வரவில்லை. காரணம் என்ன!?

அரசின் 'மீட்பா!?" அரசின் 'மனிதாபிமானமா!?" இல்லை. இவை எல்லாம் அரசின், அரசியல் நோக்கமாக இருப்பதில்லை. இனவழிப்பே பாசிட்டுகளின் அரசியல். 'மீட்பு", 'மனிதாபிமானம்" என்பன இனவழிப்புத் திட்டத்தின் முன், தவிர்க்க முடியாத வண்ணம் வந்த புதிய விடையங்கள். அப்படியாயின் காரணம் என்ன!?

புலிகள் பலமா!? இல்லை, அதுவுமில்லை. புலிகளின் பலத்தின் முன், அவர்களின் யுத்த தந்திரத்தின் முன், அவர்கள் என்றோ அழிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படியாயின் எது!?

உண்மையில் இந்த இனவழிப்பை தான் விரும்பியவாறு செய்யமுடியாது தடுப்பது, சர்வதேச முரண்பாடுகள்தான். இனவழிப்பின் ஊடாகத்தான், புலியை அழிக்க அரசு விரும்பியது. பாரிய இனப்படுகொலைகள் மூலம், இதைச் செய்யவே விரும்பியது.

இதைத் தடுத்தது, நிலவும் சர்வதேச................
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது!

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது, பாரதீய ஜனதா கட்சி. தேர்தல் என்றாலே கருப்புப் பணத் திருவிழா என்பது ஊரறிந்த உண்மை. கட்சிக்குள் "சீட்'' வாங்குவதில் தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்து, ஆட்சி கவிழ்ந்து விடாமல் காப்பது முடிய ஓட்டுக்கட்சி அரசியலில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவது ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அப்படிபட்ட புழுத்து நாறும் ஓட்டுச்சீட்டு அரசியலில் புரண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க., "தாம் ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களுக்குள் தோண்டியெடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்'' எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரசுக் கட்சியோ இக்கருப்புப் பண வேட்டை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "பா.ஜ.க., கருப்புப் பணம் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக''க் குற்றஞ்சுமத்தி வரும் அக்கட்சி, கருப்புப் பணம் பற்றிய உண்மை விவரங்களை வெளியிட மறுக்கிறது. வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ்தாஸ் குப்தா, "இக்கருப்புப் பணம் பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தான் எழுதிய கடிதத்தை அவர்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்துவிட்டதாக''ப் புலம்பி வருகிறார்.

சுவிஸ் வங்கியில்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 14, 2009

மக்களின் அவலம் மேல், புலியின் பொய்ப் பிரச்சாரம்

செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்பு முயற்சியை தடுத்து, வகைதொகையின்றி கொன்று குவிக்கும் 'மீட்பு" 'ஜனநாயகம்"

புலிகள் தமிழ் மக்களை பணயம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களை குறிவைத்துக் கொல்லுகின்றது இந்த அரச 'ஜனநாயகம்". இந்த ஜனநாயகத்தின் மகிமையோ, இன்று தாம் குண்டு போட்டு காயப்படுத்திய மக்களை மருத்துவமனையில் வைத்து கொல்லுகின்றது. மருத்துவ மனைகளையே, குண்டு வீசி அழிக்கின்றது.

அங்கு இரவு பகல் பாராது மருத்துவம் செய்யும் வைத்தியர்கள் முதல் சமூக நல மனிதாபிமானிகளை, பழிவாங்கும் உணர்வுடன் கொல்லும் மிருக வெறியுடன் தாக்குதலை நடத்துகின்றது. தாம் கொல்வதற்கு தடையாக உள்ள உயிர்காக்கும் மருத்துவமனையை, செயல்படவிடாத வண்ணம் மீண்டும் மீண்டும் தாக்கி அழிக்க முனைந்தது, முனைகின்றது.


பேரினவாத இனவழிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுக் காயங்களுக்கு உள்ளாகி தவிக்கும் இன்றைய சூழலில், ஒரு சில மருத்து............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மக்களுக்கான அரசியலை நிராகரிக்கும், புதிய அரசியல் போக்குகள்

புலிகளின் அழிவு, புலிக்குள் இருந்த பலரை புலிக்கு எதிரான அரங்கிற்கு கொண்டு வருகின்றது. புதிதாக கருத்துத்தளத்தில் இது பிரதிபலிக்கின்றது. மறுபக்கத்தில் அரசு சார்பானவர்கள் அம்பலமாவதால், இதற்கு வெளியில் பலர் தெளிவடைகின்றனர். இது இன்றைய புதிய அரசியல் நிகழ்ச்சிப் போக்காக உள்ளது.

இப்படி விழிப்புற்று தெளிவுறும் இந்தக் காலகட்டத்தில், இவை மக்களுக்கு சார்பாக மாறிவிடவில்லை. இப்படி வெளிவருபவர்கள் மக்களுக்கான ஒரு அரசியலை முன்னிறுத்தி, அதற்காக செயல்படத் தயாராகவில்லை என்பதுதான், ஒரு கசப்பான உண்மை. இரண்டு வலதுசாரி போக்குகளில் இருந்து வெளிவருபவர்கள், அதை விமர்சிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் வலதுசாரிய அரசியலைத் தாண்டி, இடதுசாரிய மக்கள் அரசியலை முன்னெடுக்க அவர்கள் தயாராகவில்லை.

மக்களுக்கான அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் வர்க்கப் போராட்டமும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில், இந்த சமூகத்தில் நடைபெறும் இன்றைய அரசியல் மாற்றங்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 13, 2009

கோடீசுவர வேட்பாளர்கள் கோவணத் துணியோடு மக்கள்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க. அழகிரி, "தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அழகிரி வந்திருக்கேன், எனக்கு ஓட்டுப் போடுவீங்களா?'' என்று அழகம்மா என்ற வாக்காளரிடம் கட்க, அவரோ "நாங்க ஓட்டுப் போடுவோம் நீங்க எப்ப நோட்டைப் போடுவீங்க?'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். இந்தியத் தேர்தலில் பணநாயகம் பல்லிளிப்பதைக் காட்டும் ஒரு சோற்றுப் பதம் இது.

தேர்தலில் வாக்குறுதிகளைக் கொடுத்த காலம் போய், கொள்ளையடிப்பதில் மக்களுக்கும் பங்காக "இலவசங்கள்' கொடுத்த காலமும் போய், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய், எங்க வீட்டில் இவ்வளவு பேர், இவ்வளவு ரூபாய் கொடுங்கள் என வாக்காளர்களே, வேட்பாளரைத் தேடிச் செல்லும் புதியதொரு பரிணாமத்தை இந்தியத் தேர்தல் களம் தொட்டுள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் தந்த படிப்பினையில் வாக்காளர்கள் இவ்வாறு விழிப்படைந்திருப்பதால், அதற்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் பட்ஜெட்டையும் தயாரித்துள்ளன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பார்த்தாலே இது புரிந்துவிடும். தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுபவர் திரைகடல் ஓ.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இனவழிப்பை செய்யும் யுத்த வடிவங்கள்

பேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.

புலிகள் மக்களைக் கொல்ல உதவும் வண்ணம் தான், யுத்ததந்திரத்தை கட்டமைக்கின்றனர். இதன் பொருள் என்ன? பேரினவாதம் மக்களை வகைதொகை இன்றி கொல்லும், அதைக் கொண்டு நாங்கள் தப்பமுடியும் என்று அது கருதுகின்றது.

இப்படி பேரினவாதம் வகை தொகையின்றி கொல்லும் என்பதன் மூலம் அந்த செயலை ஆதரிக்கும் புலி ஒருபுறம். மறுபக்கத்தில் பேரினவாதம் வகை தொகையின்றி கொல்வதை 'ஜனநாயகம்" என்று சொல்லி ஆதரிப்பவர்கள் புலியெதிர்ப்பாளராக உள்ளனர். இப்படி இரு தரப்பும், வௌ;வேறு வடிவங்களில் மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர்.

புலிகள் மக்களை 'பணயக்கைதியாக" வைத்திருப்பதால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றனர் என்று கூறி, கொல்வதையும் கொல்பவனையும் ஆ.......
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 12, 2009

பேரினவாத இனவழிப்பு யுத்தம், பெண்கள் மேல் திணித்துள்ள ஆணாதிக்க சுமை

பெண் உடல், பாலியல் உறுப்புகள் கூட, யுத்தத்தில் ஒரு கருவியாகின்றது. பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாரியது. எல்லையற்றது. ஆணாதிக்க சமூக அமைப்பில் யுத்தம், விதவைகளை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் உடல், பால் சார்ந்த உறுப்புகளை யுத்தம் மேய்கின்றது.

வாழ்வை நடத்த முடியாத யுத்த பொருளாதார சூழல், உடலை விற்கக் கோருகின்றது. தாயையும், குழந்தையையும் இழந்த பெண்ணின் யுத்தக் கதறல்கள், உளவியல் ரீதியில் மரணிக்கக் கோருகின்றனர். பேரினவாத பாசி;ட்டுகள் இனவழிப்பின் ஊடாக, பெண்ணை குறிவைத்து ஒரு உளவியல் யுத்தம் மூலமும் கொல்லுகின்றது. மறுபக்கத்தில் புலிகள் முதல் துரோகக் கும்பல் வரை, இந்த பெண்களை பிடுங்கித் தின்னுகின்றது. இந்த பெண்களுக்கு ஆறுதலாக இருக்க, உதவியாக இருக்க முன்வராத மலட்டுத் தேசியம், மலட்டு ஜனநாயகமும் பாசிசமாகி பெண் இனத்தையே புணருகின்றது.

இன்று இனவழிப்பு உச்சத்தில், பெண்களின் அவலமோ எல்லையற்றது. பேரினவாதம் தமிழர்களின் பொதுவான வாழ்வியல் அடிப்படைத் தேவைகளையே இன்று மறுத்து நிற்கின்றது. இதில் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும்,.........
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஈழப் "போர் நிறுத்தம்": காங்கிரசு - தி.மு.க.கம்பெனியின் கபட நாடகம்

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து

போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு, "இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சாகும் வரை உண்ணாவிரதம்" எனும் சூப்பர் நாடகத்தை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலைக் காட்சியாக அரங்கேற்றினார், இந்த "தமிழின"த் தலைவர்.

இதற்குக் கதை, வசனம், நடிப்பு, இயக்கம் அனைத்துமே அவர்தான். கதாநாயகனும் அவர்தான். கதாநாயகிகள் இருவர். அவர்கள் கருணாநிதியின் தலைமா
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 11, 2009

காங்கிரசு கயவாளிகளுக்குச் செருப்படி மட்டும் போதாது!

"ஒரு ஆலமரம் விழும்போது பூமியில் அதன் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்''. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதும் டெல்லியிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில், பலர் காங்கிரசு குண்டர்களால் கொல்லப்பட்டது குறித்துக் கேட்டபோது ராஜீவ் காந்தி திமிராகக் கூறிய பதில் தான் இது.

அந்தக் கலவரத்தின் போது காங்கிரசு குண்டர்கள், கையில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு சீக்கியர்களைத் தேடித்தேடிக் கொன்றனர். இதுநாள் வரை கலவரத்துக்குக் காரணமான காங்கிரசு தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் சீக்கியர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவரை வைத்துச் சீக்கியர் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கேட்கும் நாடகம் ஒன்றை நடத்திக் காட்டினார்களே தவிர, குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை.

அந்தக் கலவரத்தைத் தூண்டி விட்டதுடன், சீக்கியர் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்தியதாக ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார், எச்.கே.எல் பகத் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக விசாரணை.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பேரினவாத பாசிட்டுகள் தமிழ்மக்களை கொல்வதுடன், அப்பாவி சிங்கள இளைஞர்களையும் பலி கொடுக்கின்றனர்

வெளிவராத, கண்டுகொள்ளாத, மற்றொரு மனித அவலம். ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களின் மரணம், மூடிமறைக்கப்படுகின்றது. சிங்கள் சமூகத்துக்கு இனவெறியூட்டி, அதை சிங்கள தேசியமாக புணர்ந்து காட்டி, ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை வெறும் கூலி இராணுவமாக்கி, அதையே தன் பாசிச அரச இயந்திரத்தின் அச்சாக கொண்டுள்ளது

சிங்கள அரசு. இதன் மூலம்தான் புலிக்கு எதிரான யுத்த முனையில், ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களை பேரினவாத பாசிட்டுகள் பலியிடுகின்றனர். இப்படி இன்று இறந்து போன ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் மரணத்தை, தான் இனவெறியூட்டிய தன் சமூகத்தின் முன் முற்றாகவே இருட்டடிப்பு செய்து வருகின்றது. கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு, இந்த பாசிச பலியிடலை முற்றாக மூடி மறைத்து வருகின்றது. இதற்கு அமையவே, படுகொலைகள் மூலம் சிங்கள ஊடகவியலின் வாயையே மூடிவைத்துள்ளது.

இதன் மூலம் பாசிச யுத்தத்தை, தன் இனச் சமூகம் மீது கூட அது மறைமுகமாக நடத்துகின்றது. ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்க.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 10, 2009

ஈழப் போரும் இந்திய மேலாதிக்க நலன்களும்

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால் தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.

வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். "வல்லரசாக' வளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி நாடு விரித்த வலையில் சிக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறுவதைக் கேட்பதற்குக்கூடக் கூச்சமாக இருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, "பல நேரங்களில் இலங்கை இந்தியாவிற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதால், சிங்களர்களை இந்தியா நம்பக் கூடாது; தமிழீழம்.......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின், சமூகங்களின் முன்னோடிகளுக்கும் ஒரு பகிரங்க வேண்டுகோள்

அரசும் புலியும் எம்மைச் சுற்றி கட்டமைத்த பாசிச அரசியல் சூழலின், நாம் என்றும் வெறும் பார்வையாளராகவோ, கருத்தற்றவர்களாகவோ இருந்ததில்லை. நாம் எம் சூழலின் எல்லைக்குள் போராடியிருக்கின்றோம், சிந்தித்து இருக்கின்றோம், செயல்பட முனைந்திருக்கின்றோம்.

இந்தவகையில் தான், மற்றவர்களில் இருந்தும் நாம் இன்று வேறுபடுகின்றோம். அரசு – புலி இரண்டையும் எதிர்த்து கடந்தகாலத்தில் எம் உதிரியான அரசியல் நடவடிக்கை, இன்று எமது தனித்துவமான ஒழுங்குபடுத்தபட்ட அரசியல் செயல்பாட்டைக் கோருகின்றது. நாம் செய்ய வேண்டியது என்ன?, எதைச் செய்யமுடியும்? என்ற பல கேள்விகள் எம்முன் உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றாக இதை விவாதிக்க வேண்டியுள்ளது.

இன்று எம் சமூகம் எதிர்கொள்ளும் பல முகம் கொண்ட மனித அவலமோ எல்லையற்றது. இதை புலித் 'தேசியமும்", அரச 'ஜனநாயகமும்" தத்தம் சொந்த பாசிச அரசியல் வழிகளில் உருவாக்கிய ஒரு பயங்கரவாதத்தின் பொது விளைவாகும். இது சுரண்டும் வர்க்கத்தை காப்பாற்ற, பேரினவாதம் உருவாக்கிய இனவொடுக்குமுறையே இதன் அரசியல் அடிப்ப...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்