தமிழ் அரங்கம்

Showing posts with label பேரினவாதம். Show all posts
Showing posts with label பேரினவாதம். Show all posts

Wednesday, April 29, 2009

பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்துவது எப்படி?

தமிழ் மக்களாகிய எம் கையில் அது உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாக்கப் பட்டுள்ளோம். செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, நாம் நடைப்பிணமாகியுள்ளோம். தமிழ் மக்களையே அழித்தொழிக்கும் பேரினவாத யுத்தத்தை ஒட்டி, தமிழ் மக்களாகிய நாம் எந்தக் கருத்தையும் சுதந்திரமாக கூற முடியாத அவலம். தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்தத் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாத வகையில் எமக்கு எதிராக பல துப்பாக்கிகள்.

ஒன்றலல் இரண்டல்ல. பல. புலிகள், துரோகக் குழுக்கள் முதல் பேரினவாதம் வரை, தமிழ் மக்கள் மேல் தம் துப்பாக்கியை நீட்டி வைத்து, இது தான் உங்கள் தலைவிதி என்கின்றன. சாதாரணமான மனித உரிமை முதல் இனத்தின் சுயநிர்ணயவுரிமை வரை மறுத்து, இது தான் தீர்வுகள் என்கின்றனர். இதைத்தான் இன்று தமிழ் மக்களாகிய நாம் அனுபவிக்கின்றோம்.

தமிழ் மக்களாகிய நாம் எம் விடுலை...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 27, 2009

இராணுவ தீர்வு மூலம் தமிழினத்தை பேரினவாதம் அடிமை கொள்ளமுடியாது

தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.

அதே போல் ஒடுக்குமுறையிலான இராணுவத் தீர்வை மூடிமறைக்க முனைகின்றது. புலிகளின் கொடுமையான, கொடூரமான நடத்தைகளை முன்னிறுத்தி, தன் கொடுமைகளையும், கொடூரங்களையும், தமிழ்மக்களை வகைதொகையின்றி கொல்வதையும் மூடிமறைக்க முனைகின்றது. இதன் மூலம் மிக இலகுவாக ஒரு இனவழிப்பை, இனக்களையெடுப்பை, இனச்சுத்திகரிப்பை செய்கின்றது. மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றும், காயப்படுத்தியும், அங்கவீனராக்கியும், ஒரு தமிழ் சமூகத்தை உற்பத்தி செய்கின்றது. நாலு முட்கம்பிக்கு வேலிகளுக்கு பின்னால், முழு மக்களையும் பலாத்காரமாக சிறை வைத்திருக்கின்றது.

புலியிடம் 'மீட்டவர்கள்" களை, இன்று நாலு முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் அப்பாவி மக்களை அடைத்து வைத்துள்ளது. புலியை விட கேவலமாக, அடிமையாக இந்த மக்களை நடத்துகின்றது. புலிகள் தமக்காக சண்டைசெய்ய இழுத்துச் .
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, April 25, 2009

குண்டு வீசி கொன்றவர்கள் போக, தப்பிவந்தவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்க உதவி கோருகின்றது பேரினவாதம்

ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

இதற்குள் நடக்கும் இனச்சுத்திகரிப்பு, களையெடுப்பு, வெளிவர முடியாத கொடுமைகள் பல. இதை இந்த பேரினவாத பாசிச அரசு, திட்டமிட்ட தமிழ்மக்களுக்கு எதிராக செய்கின்றது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் 'மீட்பு" 'மனிதாபிமான நடிவடிக்கை" என்று பல. இதை தொடர்ந்து செய்ய, அவர்கள் உதவி கோருகின்றனர்.

புலம்பெயர் மண்ணில் தன் சொந்த கைக்கூலிகளாக உள்ள அரச எடுபிடிகள் மூலமும், பேரினவாத அரசின் துணையுடன் இயங்கும் 'டான்" தொலைகாட்சி மூலம், தம் சொந்த அரசியல் பித்தலாட்டங்களை முன்வைத்து கோருகின்றது. வணங்கா முடிக் கப்பலைச் சொல்லி புலம்பெயர் நாட்டில் திரட்டியது போல், உள் நாட்டில் மக்களை காட்டி இந்த கொலைகார பாசிச அரசு திரட்டுகின்றது.

இப்படி செய்திக........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 22, 2009

தமிழ் மக்களுக்கு எதிரான ஊடக வன்முறையும், மொழி வன்முறையும்

பேரினவாதம் தன் இனவழிப்பை குண்டுகள் மட்டும் போட்டுச் செய்யவில்லை. மொழி மூலமும் அதைச் செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வண்ணம் நடத்துகின்ற யுத்தத்தை, ஏதோ மனித விரோத கும்பலுக்கு எதிராக தாம் நடத்துவதாக காட்டமுனைகின்றது. இதற்கூடாக தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றது. இதற்கு மொழியையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.

புலிகளை மட்டும் கொடுமையான கொடூரமான ஒன்றாகவும், அதை ஒழிக்க தான் புறப்பட்டுள்ளதாகவும் இது சித்தரிக்கின்றது. இதை தமிழ் இடதுசாரியம் வரை, அது ஏற்க வைத்துள்ளது. இப்படி பேரினவாத ஊடகவியல், தன் இனவொழிப்பு அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இதை தமிழ் ஊடகவியல் அப்படியே வாந்தியெடுக்கின்றது.

நடப்பது இனவொழிப்பு யுத்தம் என்பதை ஏற்றுக் கொள்ளாத தமிழ் ஊடகவியல். புலியெதிர்ப்பு, பேரினவாதத்தை நிலைநாட்டுவதுதான் இன்று.......
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 17, 2009

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது


புலிகள் எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுமிராண்டிகளாக, பண்பாடற்றவர்களாக உறுமுகின்றார்களோ, அந்தளவுக்கு தமிழ் இனத்தில் எலும்பு சிதிலங்கள் மட்டும் எஞ்சுவதை யாரும் தடுக்கமுடியாது. பேரினவாதம் மிகவும் பலமான நிலையில், தமிழ் இனத்தை புலிகளைக் கொண்டே அழிக்கின்ற எதார்த்தத்தை, ஒரு காலமும் தமிழ் இனம் தானாக எண்ணியிருக்கமாட்டது. பேரினவாதத்தின் சூழச்சிமிக்க அரசியல் நரித்தனத்துக்கு எதிராக, நியாயமான ஒரு போராட்டம் (அரசியல் மற்றும் இராணுவம்) அவசியமாக இருந்த போது கூட, அதை நியாயமான மக்களின் கோரிக்கைளால் தனிமைப்படுத்தி வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் ஆளுமை காட்டுமிராண்டிகளுக்கு எப்போதும் கிடையாது என்பதை தமிழினத்தின் சார்பாக மீண்டும் புலிகள் நிறுவிவருகின்றனர்.

புலிகள் இயக்கமே பதவி வெறியர்களாலும், கொள்ளையடிப்போராலும், சுத்துமாத்துகாரர்களும், ஒட்டுண்ணிகளாலும், பிழைப்புவாதிகளாலும் சூழப்பட்டுவிட்டது. அது இன்று ஒரு போராட்ட இயக்கமே அல்ல என்ற நிலைக்கு, படிப்படியாக தனக்குத் தானே நஞ்சிட்டு சீரழிந்து சிதைந்து வருகின்றது. இந்த சிதைவுகள் சமூகத்துக்கே நஞ்சாகின்றது. தியாகங்கள் எல்லாம் சிலரின் நலனுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகளை பயன்படுத்தி தாம் நன்றாக வாழமுடியும் என்று நம்புகின்ற பொறுக்கிகளின் கூட்டமே, புலியைச் சுற்றி இன்று கும்மாளமடிக்கின்றது. புலிகளின் பின் இருந்த சில அரசியல் இலட்சியங்கள் எல்லாம் கண்காணாது தொலைந்து போகின்றது. புலித் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள், ஏன் புலித்...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, February 18, 2009

சிங்கள பேரினவாதம் மக்களை படுகொலை செய்வதில் இருந்து மீட்க மறுத்து, அதற்கு உதவியதால் எமது ராஜினாமா

இன்று சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களை கொத்துகொத்தாக கொல்லுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கவே தாம் போராடுவதாக கூறிய புலிகள், தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு பதில், அவர்களைப் பலியிட வைக்கின்றது. பின் அதை தம் சொந்த சுயநலத்துக்காக பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழ்மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை புலிகள் இன்று மறுத்து நிற்கின்றனர். இந்த வகையில் இன்று தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, தமிழ் மக்களுக்கும் பொது அமைப்புகளுக்குமே உண்டு. ஆனால் பொது அமைப்புகள் புலிகளின் வால்களாக மாறி, தமிழ்மக்களை கொல்வதை ஊக்குவித்து அதை வைத்து பிரச்சாரம் செய்கின்றது.

இதை மறுத்தால் புலியின் சர்வாதிகார வழியில் அணுகுகின்றது. இதுபோல் தான் 1985 களில் பின்னால் எம் மண்ணில் இருந்து சகல மாற்றுக் கருத்துக்களையும், மிக திட்டமிட்ட முறையில் புலிகள் அழித்தொழித்தனர். அத்துடன் எம் மண்ணில் இருந்த சகல பொது.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, August 19, 2008

வன்னி மக்களின் துயரமும், தமிழ் மக்களின் கையாலாகாத்தனமும்

அனைத்து சுயாதீனத்தையும் இழந்துவிட்ட தமிழ் இனம், புலியினதும் அரசினதும் கோரப்பற்களுக்கு இடையில் சிக்கி அழிகின்றது. அகதியானலும் சரி, அமைதியின் பெயரில் அரசு புலி என்று யார் ஆண்டாலும் சரி, தமிழ் மக்கள் மலடாக்கப்பட்டு ஊமையாக்கப்பட்டுள்ளனர். எங்கும் எல்லையற்ற மனித அவலம்.

மனிதம் சந்திக்கின்ற சொந்த துயரத்தை யாரும் பேச முடியாது. தேசியத்தின் பெயரில், பயங்கரவாதத்தின் பெயரில், எல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றது.

இன்று பேரினவாதம் நடத்தும் இனவழிப்பு யுத்தமோ, புலிகளின் பாசிச அரசியலின் மேல் அரங்கேற்றப்படுகின்றது. புலிகளும் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள பாரிய முரண்பாட்டை பயன்படுத்தியே, புலிகள் ஒழித்துக்கட்டப்படுகின்றனர். மறுபக்கத்தில் இதன் மூலம் தமிழ் இனத்தின் சுயநிர்ணயம் என்ற கோரிக்கைக்கு அடிப்படையாக இருந்த, சமூக பொருளாதார அடிக்கட்டுமானங்கள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தலைமை முதல், அதன் சமூக பொருளாதார கூறுகளை எல்லாம் அழித்துவிட்டனர்.

புலிகள் அழித்ததை ஆதாரமாகக் கொண்டு, பேரினவாதம் அதன் சமூகக் கூறுகளையே இல்லாதாக்கி வருகின்றது. பேரினவாதத்துக்கு தொண்டு செய்யும் கைக் கூலித்தனம் தான் .....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்