தமிழ் அரங்கம்

Showing posts with label புலித் தேசியம். Show all posts
Showing posts with label புலித் தேசியம். Show all posts

Tuesday, September 9, 2008

பெரியவர்களையே தேசியத்தின் பெயரில் அடித்து உதைப்பதை எம் சமூகம் எண்ணிப் பார்த்திருக்குமா!?

வயது முதிர்ந்தவர்களை, பெரியவர்களை அடித்து உதைப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? புலித் தேசியத்தின் பெயரிலும், புலியின் குறுகிய நலனுக்காகவும், சமூகத்தால் கவுரவமாக மதிக்கப்பட்டவர்கள் தாக்கப்படுகின்றனர்.

அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி என அனைவரும் பகிரங்கமாக வெளிப்படையாகத் தாக்கப்படுகின்றனர். முன்பு இதை இரகசியமாகச் செய்ய, அவர்களை தம் வதைமுகாமுக்கு எடுத்துச் செல்வார்கள் புலிகள். தற்போது அவர்களின் வதைமுகாம்கள் நிரம்பி அங்கு இடமின்மையால், கண்ட கண்ட இடத்தில் பகிரங்கமாகவே அடித்து நொருக்குகின்றனர்.

இப்படித் தாக்குதலின் போது கால், கை முறிந்தவர்கள், எலும்பு உடைந்தவர்கள், அங்கவீனமானவர்கள், மரணமானவர்கள், அவமானத்தாலும் இயலாமையினாலும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையோ, எண்ணில் அடங்காது.

இதனால் முற்றாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம், மறுபக்கம் மனநோய்க்குள் முழுச் சமூகம் சேடமிழுக்கின்றது.

இதை செய்பவர்கள் அவர்களின் குழந்தைகளின் ஒத்த வயதுடைய, புலி காடையர் கும்பல்கள் தான். எந்த இலட்சியமுமற்ற, நோக்கமுமற்ற, பொறுக்கித்தின்னும் லும்பன் கும்பலாக வளர்ந்த வேட்டை நாய்கள் தான். அந்த வேட்டைக் கும்பலின் வக்கிரத்தை, அதன் இழிந்த நடத்தைகளையும் அனுபவரீதியாக காணாத, அனுபவிக்காத எந்த மக்களும் இன்று வன்னியில் கிடையாது.

சமூகமே அங்கு புலியைத் தூற்றுகின்றது. அடி உதையைக் கடந்து, எந்தப் பெண் தான் புலிகளைத் தூற்றவில்லை? 'நாசாமாப்போவாங்கள்", 'மண்ணுக்குள் போவாங்கள்" என்று, சாபமிடாத எந்தப் பெண் தான் அங்கு உண்டு! தம் குழந்தைகளை புலியிடம் பறிகொடுத்த தாய்மையும், குழந்தைகளின் பிணத்தை மீளத் தரும் புலிக்கு எதிராக, தூற்றிப் போடும் சாபங்களால், புலித் தேசியம் ஒருபுறம் செத்துக் கொண்டிருக்கின்றது. புலியின் கண்காணிப்பு, அடக்குமுறையையும் மீறி, புலியைக் காறி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்