தமிழ் அரங்கம்

Saturday, March 21, 2009

சிறுமி வர்ஷாவின் படுகொலைக்கான அரசியல் எது?

எம்மினத்தின் பெயரில் உருவான 'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியல் என்ன? அதன் நடைமுறைகள்தான் என்ன? இதுதான் சிறுமி வர்ஷாவின் படுகொலையை வழிகாட்டுகின்றது. இது தொடக்கமுமல்ல முடிவுமல்ல, மாறாகத் தொடரும்.

'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியலோ, முற்றிலும் மக்கள் விரோதமாகும். இதையொட்டிய நடைமுறைகள், மனித வெறுப்பை அடிப்படையாக கொண்டது. இதுவோ ஈவு ஈரக்கமற்றது. மனிதப் பண்பற்றது. லும்பன்தனமான அரசியல் வக்கிரத்தால், பூசி மெழுகப்பட்டது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கொள்கைக் கூட்டணி…

கொள்கைக் கூட்டணி…

தில்லை நடராசரின் ஆலயம்:தீட்சிதர்களின் ஆதிக்கம் தகர்கிறது!

நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டுள்ள இடைக்கால வெற்றியைக் கொண்டாடுவோம்.பிப்ரவரி 2, 2009 தமிழகத்தின் வரலாற்றில் இதுவொரு முக்கியமான நாள் என்றால், அது மிகையானதல்ல. அன்றுதான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்ப்பு வெளியானது.

தீட்சிதப் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராகத் தமிழக மக்கள் அடைந்த இந்த வெற்றி எளிதாகக் கிடைத்த ஒன்றல்ல. சிவனடியார் ஆறுமுகசாமியை முன்னிலைப்படுத்தி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்கள்; மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளை ஒருங்கிணைத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய பல்வேறு விதமான தெருப் போராட்டங்கள்; இப்போராட்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஊக்கம்; விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு தமிழின அமைப்புகளும், முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் திரு.வீ.வீ.சாமிநாதன், பா.ம.க.வின் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கொடுத்த ஆதரவு — ஆகியவற்றின் பின்னணியில்தான் இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது.

"எங்களின் கோயிலை நாங்கள் போனால் போகிறதென்று பக்தர்கள் வந்து வழிபடுவதற்கு அனுமதித்திருக்கிறோம்'' என்று தெனாவட்டாகப் பேசித் திரிந்த தீட்சிதர்களின் திமிரை, நடராஜர் கோயிலில் உண்டியல் வைக்கக்கூட அனுமதிக்காமல், இத்தனை ஆண்டுகளாகப் ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, March 20, 2009

ஓட்டுப் போடாதே புரட்சி செய்!

1.ஓட்டுப் போடாதே புரட்சி செய்!

2.வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?

3.ஜனநாயகத்தை அடியறுக்கும் ஆயுதமாக வாக்குரிமை!

4.யாரால் கொள்ளையடிக்கப்பட விரும்புகிறீர்கள்?

5.உங்களை ஒடுக்க நீங்களே நியாயவுரிமை வழங்காதீர்கள்!

6.உழைப்பாளிகளின் பிரதிநிதிகள் களவாணிகளா?

7.மறுகாலனியாக்கத்தை முறியடிக்க தேர்தல் தீர்வல்ல!

மகிந்தாவின் பாசிசத்துக்கு முண்டு கொடுக்கும் புலியிசம்

மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.

மக்கள் சமாதானத்துக்காகவும் அமைதிக்காகவும் ரணிலுக்கு வாக்களிப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட புலிகள், தமிழ்மக்களின் இந்த விருப்பத்தை குழிபறிக்கவே, மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றனர். இப்படி புலிகள் யுத்தத்தை விரும்பித்தான், தம்மை தூக்கில் போடும் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். முந்திக்கொண்டே யாழ்குடாவில் கிளைமோர் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தினர். இப்படி புலிகளே யுத்தத்தை தொடங்கினர். மறுபக்கத்தில் மகிந்த அரசை தேர்ந்தெடுக்கவும், மக்களை வாக்களிக்கவிடாது தடுக்கவும், மகிந்த புலிகளுக்கு கையூட்டும் வழங்கினார். இப்படித்தான் தமிழ் மக்களைக் கொல்லும் கொலைகார பாசிட்டுக்கள், புலிகளின் துணையுடன் அதிகாரத்துக்கு வந்தனர்.

தான் இந்த அதிகாரத்துக்கு வர, மகிந்த போட்ட வேடமோ அப்பாவி வேஷம். கையெடுத்து கும்பிட்டும், இரந்தும், நடித்தும், இந்த பாசிட் அதிகாரத்தை கைப்பற்றினான். இதற்கு முன் பிரதமர் பதவியில் இருந்த போது, சாதுவைப் போல் வேஷம் போட்டு, அதிகாரத்தை கைப்பற்றவே தன்னை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டான். இந்த அதிகாரத்துக்கு வர ஜே.வி.பியின் உதவி.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, March 19, 2009

சட்டிஸ்கர்: அப்பாவி பழங்குடியினரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை நக்சல்பாரிகளாகக் காட்டும் மோசடி தொடர்கிறது.

ஆளரவமற்ற காடு; பகலிலும் கூட இருள் சூழ்ந்த சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்திலுள்ள அடர்ந்த காடு; பாறைகளில் தெறித்தோடும் நீரோடை, கிரீச்சிடும் பறவைகள், காற்றில் சருகுகள் எழுப்பும் சலசலப்பு; இவை தவிர வேறெந்த ஒலியுமற்ற அமைதியில் உறைந்த காடு. கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று பட்டப் பகலில் அக்காட்டில் அப்பாவி பழங்குடியினர் 18 பேர் சல்வாஜூடும் என்ற போலீசு குண்டர் படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டின் பேரொலியால் பறவைகள் வானில் பறந்து கிரீச்சிட, அக்காடே அதிர்ந்து குலுங்கியது.

மறுநாள், சட்டிஸ்கர் மாநில உள்துறை அமைச்சரான நான்கிராம் கன்வர், ""வெற்றி! வெற்றி!!'' என்று எக்காளமிட்டுக் கொண்டு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ""கொல்லப்பட் டவர்கள் அனைவரும் நக்சல்பாரி பயங்கரவாதிகள்.

நக்சல்பாரிகளைப் பூண்டோடு அழிக்கும் போர் தொடங்கி விட்டது. பல ஆண்டுகளாக அத்தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்குள் நாங்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறோம். இன்னும் சில நாட்களில் எங்களது நிலங்களை நாங்கள் கைப்பற்றி விடுவோம்'' என்று கொக்கரித்தார் அவர்.

Wednesday, March 18, 2009

அவலமும் விரோதமும் -ஓவியங்கள் - வரைந்தவர் பாரதி

அவலமும் விரோதமும் -ஓவியங்கள் - வரைந்தவர் பாரதி

முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி பூங்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் இவரைத் தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

அப்போது மாணவராக இருந்த இவரைப் பிடித்துச் சென்ற போலீசார், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததுடன், வெடிகுண்டு வைத்ததாக ஒப்புக்கொள்ளும்படி, தொடந்து 5 நாட்களுக்குச் சித்திரவதை செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 30, 2008 அன்று, மாவட்ட கீழமை நீதிமன்றம், நிரபராதி எனக் கூறி இவரை விடுவித்துள்ளது. இதையடுத்து தனக்கு 20 லட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஜுனாயத் வழக்குத் தொடர்ந்துள்ளார். போலீசாரின் சித்திரவதைக்குள்ளான கொடுமையான அந்த ஐந்து நாட்களைப் பற்றி அவர் கூறுகிறார்:

Tuesday, March 17, 2009

புலிகள் அழிவும், புலியிசமாகும் இலங்கையும்

புலி அழியவில்லை, மற்றொன்றாகவே பிரதியிடப்படுகின்றது. இலங்கை எங்கும் கட்டவிழ்த்து விடப்படும் பாசிசமே, புலி அழிப்பின் ஊடாக மேலெழுந்து வருகின்றது. சாதாரணமான பத்திரிகைச் சுதந்திரம் முதல் போலித் தேர்தல்கள் வரை பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் எல்லைக்குள் அதை முடக்கி வருகின்றது. அனைத்தும் பாசிசக் கும்பல்களின் அதிகாரத்துக்கானதும் இருப்புக்கானதுமாகி, அதுவே நாட்டின் ஜனநாயகமாகின்றது.

புலிகளிடம் தமிழ் மக்கள் எதை இழந்து இன்று அரசியல் அனாதைகளானார்களோ, அது இன்று இலங்கை முழுக்க உருவாகின்றது. மக்கள் மக்களுக்காக சிந்திக்கக் கூடாது, இது இன்று ஒரு தேசக் குற்றம். இதுதான் மகிந்த சிந்தனை. ஆம், புலிகள் அழியவில்லை, மற்றொரு புலியாகி, இலங்கை முழுக்கவே அதுவாகின்றது. மகிந்த சிந்தனை என்ன செய்கின்றது, தம்மை யாரும் எதிர்க்காத வண்ணம் அனைத்தையும் கருவறுக்கின்றது. புலியின் பெயரில், இதை செய்கின்றது. யுத்தத்தை வெல்ல இது தடையாக இருப்பதாக கூறி, புலி முத்திரை குத்தியும் தன் பாசிசத்தை சமூகத்தில் திணித்து வருகின்றது.

வழகுரைஞர்கள் மீதான தாக்குதல் : அம்பலமானது போலீசின் உண்மை முகம்! தி.மு.க.வின் பொய் முகம்!

பிப்ரவரி 19 காக்கி உடை ரவுடிகளின் லத்திக் கம்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை இரத்தத்தில் முக்கி எடுத்தன. ஜனநாயகத்தின் மற்ற தூண்களெல்லாம் உளுத்து உதிர்ந்துவிட்ட நிலையில், நீதிமன்றம் என்ற ஒற்றைத் தூண்தான் அதனைத் தாங்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும், இந்திய ஜனநாயகத்தின் மீதான மக்களின் இறுதி நம்பிக்கையே நீதித்துறைதான் என்றும் ஆளும் வர்க்க அறிஞர்களால் போற்றிப் புகழப்பட்ட நீதிமன்றத்தின் வாயிற்கதவுகளை இழுத்து மூடிவிட்டு, லாக் அப்பில் சிக்கிய கைதியை அடித்துத் துவைப்பதைப் போல வழக்குரைஞர்களைத் தேடித்தேடி அடித்து நொறுக்கியது போலீசுப்படை. இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற நீதிபதிகளும் போலீசின் தடியடிக்குத் தப்பவில்லை. புனிதக் கருவறையின் போற்றுதலுக்குரிய தெய்வங்களைப் போல பாவிக்கப்பட்ட செங்கோல் தாங்கிய நீதிபதிகளை விரட்டியடித்துவிட்டு, "நானே அரசு, நானே நீதி' என்று போலீசின் தடிக்கம்பு பிரகடனம் செய்து கொண்டது.

நீதிபதிகளை போலீசார் ஓட ஓட விரட்டியதையும், அவர்கள் மீது விழுந்திருக்க வேண்டிய அடியைத் தாங்கள் வாங்கிக் கொண்டு, நீதிபதிகளின் உயிரை வழக்குரைஞர்கள் பாதுகாத்ததையும் நேரலை ஒளிபரப்பில் நாடே கண்டது. நீதிபதிகளின் அதிகாரம் செல்லாக்காசாகிவிட்டதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்தான் கண்டனர். எனினும் தமது அதிகாரம் அரசியல் சட்டப் புத்தகத்தில் இன்னமும் பாதுகாப்பாகவே இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கருதுவதால், இப்பிரச்சினையில் தலையிட்டிருக்கிறது...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, March 16, 2009

சாத்தியப்பாடாகி வரும் ஒரு யுத்த நிறுத்தம்!

வன்னியில் உத்தரித்துக் கொண்டிருக்கும் மக்களின் அவஸ்தைகள் எல்லைமீறி வருகின்றது. இந்த நிலையில் இந்தியா முதற்கொண்டு, வெளிநாடுகள் அனைத்தும் இன்று யுத்தநிறுத்தத்தை முன்தள்ளி வருகின்றன. அண்மித்து வரும் இந்நியத் தேர்தல்கள், சர்வதேச பூர்வீக மக்களின் அன்றாட வாழ்கைளில் குறுக்கிடும் புலிசார்பு போராட்டங்கள், இதற்கான சர்வதேசங்களின் பாதுகாப்புச் செலவீனங்கள், மற்றும் புலம் பெயர் தமிழர்களின் வாக்கு வங்கிமீதான கவனங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களால், ஒரு யுத்த நிறுத்தத்துக்கான சூழ்நிலைகள் மேலெழுந்து வருகிறது.

பயங்கரவாத அமைப்பாக சர்வதேச ரீதியில் கணிசமான நாடுகளால் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்குச் சார்பான போராட்டங்கள் உலகெங்கும் பரவலாக நடந்தன. ஆனாலும் இப்போராட்டங்கள் மீது கடுமையான கெடுபிடிகளை இந்த நாடுகள் தவிர்த்திருந்தன. இதற்கான காரணங்களைத் தமிழர் தரப்பு புலி ஆதரவாளர்கள் அலசி ஆராயத் திராணியற்று கிடந்தார்கள். கிடக்கிறார்கள். உண்மையில் வன்னியில் சீவன் போகிற நிலையில் வாழ்ந்து வருகிற அப்பாவி மக்களுக்காக, தமது சொந்த உறவுகளுக்காக, உளவியல் ரீதியாக உந்தப்பட்டு அதை வெளிப்படுத்துகிற புலம் பெயர் மக்களின் மன உளைச்சலின் வெளிப்பாடாக இப்போராட்டத்தை இவர்கள் பார்க்கின்றனர். இதை அடக்குவதால், இவர்கள் மனநோயாளிகளாக மாறக்கூடிய யதார்த்தத்தை புரிந்து கொண்டும், இதற்கான சமூக உதவிகளைக் கணக்கிற் கொண்டும், இவ் மன உளைச்சலின் வடிகாலாக இப்போராட்டங்களை அனுமதித்தனர். அனுமதிக்கின்றனர்.

இருப்பினும், இவர்களின் இப்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

“டக்ளஸ் ஒரு பூனைமாதிரி. அதாவது எப்பிடித் தூக்கி எறிந்தாலும் நாலு காலில் தான் வந்து விழுவார்”


சிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.

மிதவாத தமிழ்த் தலைமைகள் செயற்பட்டதை நாம் எதிர்கொண்டதுபோல் இது இருக்காது. சமூகம் மீதான அச்சுறுத்தல்களுடன் கூடிய ஒன்றாக இது மாற்றமடைகிறது. கொலை கடத்தல் என்ற இன்னோரன்ன வன்முறைகளுடன் கூடிய மனோபாவத்தை தமிழ்ச் சமூகத்துக்குள்ளிருந்தே பேரினவாதம் சார்ந்து செயற்படுத்தக்கூடிய தமிழ் அரசியலை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். வன்முறை மனோபாவத்தினை வளர்த்தெடுத்த இயக்கக் கலாச்சாரம் பேரினவாதத்துக்கு ஏற்கனவே சேவகம் செய்யத் தயாராகிவிட்டிருந்தாலும் அது முனைப்புப்பெறும் நிலை இன்னு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மூக்குள்ளவரை !

மீண்டும் பார்த்திபனின் கதை. நீண்ட காலத்தின் பின் எழுதியுள்ளார். ஜெர்மனியில் வெளியாகி துண்டில் இதழ் ஆசியார்களில் ஒருவர். இவரின் சிறுகதைகள் சில புதிய கலச்சாரத்தில் முன்பு வெளிவந்துள்ளது. அந்தளவுக்கு சமூக கண்ணோட்டத்துடன், நுட்பமாக எழுதியவர்.

இந்தக் கதையும் அப்படித்தான். உருவாகக் கதையை அடிப்பiடாக கொண்ட, இந்த கதையின் கரு, இன்றைய சமகால அரசியல் போக்கில் உள்ள போலித்தனங்களையும், வன்முறையையும் எள்ளிநகையாடுகின்றது. அரசியல் இல்லாத மௌனம் கூட கிடையாது என்பதை, மிக நுட்பமாக இக்கதையுடாக சொல்ல முனைகின்றார்.

"சுட்டும் விழிச்சுடரே.... எங்கையோ பற்றிக்கொண்டதே.." எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை...

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

இந்த நேரத்திலை ஆர் என்னட்டை வாறாங்கள் எண்ட கேள்வியோடை, டிவிடியை நிப்பாட்டி, கதவைத் திறந்தால்..

"வணக்கம்" அழகுசீலனும், பாக்கியராசாவும் !

"என்ன இந்தப் பக்கம்! கண்டு கனகாலம் !!" ரண்டு,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, March 15, 2009

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும்

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எம்மத்தியில் உள்ளனரா? அப்படி யாரும் அரசியல் ரீதியாக எம் மத்தியில் கிடையாது. மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் என்பது, மக்களுக்காக வைக்கப்படும் புரட்சிகர கருத்துகளின் அடிப்படையில் தான், அரசியல் ரீதியாக அதை வரையறுக்க முடியும். அரசியல் அல்லாத தளத்தில், இது வெறும் நபர்கள் அல்ல.

எமது அரசியல் கருத்துடன் நிற்கின்ற பல்வேறு தரப்பினர் மத்தியில், திடீரென ஒரு குழப்பத்தை சிறிரங்கன் எழுதிய கட்டுரை
(புலம்பெயர் குழுக்களின் அரசியல் - மூன்றாவது அணியும், மூக்கணாங் கயிறும்.) ஒன்று ஏற்படுத்தியுள்ளது. பலர் இது எம்மைக் குறித்த ஒரு விமர்சனமாக, சுட்டிக் காட்டினர். ஏனென்றால் மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எங்களுக்கு வெளியில் இல்லை என்ற அடிப்படையில், இதை எமக்குச் சுட்டிக்காட்டினர்.

அரசியல் ரீதியாக எம் வாசகர்கள் சூழலைப்புரிந்து கொள்வதனால், இதை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த வகையில் இதை நாம் தெளிவுபடுத்த வேண்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

அரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல் - ரவி (சுவிஸ்)


சிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.

மிதவாத தமிழ்த் தலைமைகள் செயற்பட்டதை நாம் எதிர்கொண்டதுபோல் இது இருக்காது. சமூகம் மீதான அச்சுறுத்தல்களுடன் கூடிய ஒன்றாக இது மாற்றமடைகிறது. கொலை கடத்தல் என்ற இன்னோரன்ன வன்முறைகளுடன் கூடிய மனோபாவத்தை தமிழ்ச் சமூகத்துக்குள்ளிருந்தே பேரினவாதம் சார்ந்து செயற்படுத்தக்கூடிய தமிழ் அரசியலை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். வன்முறை மனோபாவத்தினை வளர்த்தெடுத்த இயக்கக் கலாச்சாரம் பேரினவாதத்துக்கு ஏற்கனவே சேவகம் செய்யத் தயாராகிவிட்டிருந்தாலும் அது முனைப்புப்பெறும் நிலை இன்னும் அதிகமாகத் தெரிகிறது.

தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதாக டக்ளஸ் 20 வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் அவர் எந்தளவு தூரம் நகர்ந்தார் அல்லது நிலைமையை நகர்த்தினார் என்ற கேள்விக்கு என்ன விடை?. மாறி மாறி வரும் அரசுகளோடு அவர்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கூலி எழுத்தாளர்கள் மூலம், மூடிமறைக்கப்பட்ட எதிர்ப்புரட்சி அரசியல்

எதிர்ப்புரட்சி அரசியல், வெளிப்படையான அரசியல் தளத்தில் மட்டும் இன்று நிகழவில்லை. மாறாக திட்டமிட்ட வகையில், கூலி எழுத்தாளர்களால் முன்தள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை அரசுகளின் மிகவும் திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இதை இன்று அவர்கள் கையாளுகின்றனர். புலிக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை நடத்தும் அதேதளத்தில், மக்கள் அரசியல் மீதான ஒரு எதிர் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மக்கள் அரசியலை விமர்சித்தல், மறுபுறத்தில் தாம் மக்கள் அரசியலை 'நடுநிலையாக" (புலி - அரசை நடுநிலையாக) வைத்தல் என்று, இரண்டு தளத்தில் இதைக் கையாளுகின்றனர்.

வெளிப்படையாக இது தேனீ இணையம் மற்றும் தேசம்நெற் இணையம் வாயிலாக இன்று இது அரசியல் அரங்கில் நுழைகின்றது. இவை அனைத்தும் பொதுவாக புனைபெயர்களின் ஊடாக இவை அரங்கேறுகின்றது. ஓரே நபர், பல புனைபெயர்களில் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.