தமிழ் அரங்கம்

Showing posts with label பார்ப்பனர்கள். Show all posts
Showing posts with label பார்ப்பனர்கள். Show all posts

Monday, May 18, 2009

மாயாவதியின் பார்ப்பன சேவை பல்லிளித்தது தலித்தியம்

தாழ்த்தப்பட்டோரை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் எனும் அரசியலை முன்வைத்து, "பார்ப்பனர்கள், வைசியர்கள், ராஜபுத்திரர்களை செருப்பால் அடிப்போம்'' என்ற புகழ்பெற்ற முழக்கத்தின் மூலம் தனது அடித்தளத்தை உ.பி.யில் உருவாக்கி இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. தற்பொழுது இம்மூன்று சக்திகளுடன் சமரசமாகியதன் மூலமும், பார்ப்பனர்களுக்குப் பதவிகளைக் கொடுத்ததன் மூலமும் அக்கட்சி உ.பி.யில் 2007இல் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. தமிழ்நாட்டில் தலித்தியம் பேசிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், தாழ்த்தப்பட்டோரின் வாக்கு வங்கியை வைத்துப் பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத அரசியல் வித்தகர்களும் இப்பரிசோதனைக்காக மாயாவதியைப் போற்றிப் புகழ்ந்தார்கள். திருமாவளவன் கூட, "இந்திய நாடெங்கும் இந்த வெற்றியின் தாக்கம் தீயாய்ப் பற்றிப் பரவும்'' என மதிப்பிட்டிருந்தார்.

தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டிலும் அதே உத்தியுடன் களமிறங்கியுள்ளது. அதிகார வர்க்கப் பார்ப்பனர்களையும்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்