தமிழ் அரங்கம்

Saturday, October 6, 2007

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!

(29.9.2006 அன்று தருமபுரி பெண்ணாகரத்தில் நடைபெற்ற பகத்சிங் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்,

கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)


பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!


ந்தக் கவிதை நாம் பாட?

கண்ணில் தெரியும் பூக்களையா!

காலில் குத்தும் முட்களையா?

எந்த மரபை நாம் தேட?


மாமல்லபுரத்துச் சிற்பங்கள்

தரையில் நிழல்விழா தஞ்சைக் கோவில் அற்புதங்கள்

சூளகிரி இசைத் தூண்கள்.... புடைப்புச் சிற்பங்கள்

இப்படி மூளியாய் கிடக்கும் சிலைகளுக்கும்

முன்கதை ஒன்று இருக்கிறது.

ஆனால் கூலியாய் நிலம் பெயர்ந்து

பெங்களூரிலும், கல் குவாரியிலும்

பிய்த்து எறியப்படும் உழைக்கும் மக்களின்

கல்லாய்ச் சமைந்த வாழ்க்கையை

எழுப்புவதற்கான இலக்கியம் எங்கே?

குண்டு குண்டாய் இருக்கும்

கொழுப்பேறிய இலக்கியமெல்லாம்

சுரண்டுபவனின் நக அழுக்கை அல்லவா

விண்டு வைத்து விருந்து படைக்கிறது

கண்டதுண்டா! நீங்கள் கண்டதுண்டா!

நக்சல்பாரிகளின் துண்டறிக்கைகள் அல்லவா

நமது உழைக்கும் மக்களின் குரலை

உயர்த்திப் பிடிக்கிறது

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அல்லவா

மறுக்கப்பட்ட நம் இலக்கியம் இருக்கிறது!


தருமபுரிக்கு

ஆருயிர் நீட்டிக்கும்

அரும்சுவை நெல்லிக்கனியை

அதியமான் அவ்வையாருக்கு கொடுத்ததா பெருமை?

மக்களின் அரசியல் வாழ்வு நீடிக்க

தம் ஆருயிரையே கொடுத்த

எங்கள் அப்பு, பாலன் தந்த

நக்சல்பாரி பாதையல்லவா பெருமை!


தருமபுரி கரும்புக்கு

சருக்கரை விழுக்காடு அதிகமாம்!

இருக்காதா பின்னே,

கணுக்கணுவாய்

இனிய பாட்டாளி வர்க்கக் கனவுகளை

வேர் இறக்கிய

நக்சல்பாரிகள் மண்ணில்

நட்ட பயிராயிற்றே!


அரசாங்கம் அழகாய் கதைவிடுகிறது

ஈரமற்ற மண்...

சாரமற்ற கலிச்சோறு...

வேலையற்ற மக்கள்...

பின்தங்கிய மாவட்டமாதலால்...

பின்தங்கிய மனநிலையினால்

மக்கள் நக்சல்பாரிகள் ஆகிவிடுகிறார்களாம்!


மடையர்களா!

வேலை இல்லாதவனா புரட்சியாளன்

வெட்டி வேலை செய்பவன் போலீஸ்காரன்.

பின்தங்கிய மனநிலையா புரட்சி?

முன்னேறிய உணர்ச்சி அல்லவா புரட்சி!

முன்னேறிய அறிவு அல்லவா புரட்சி!

முன்னேறிய உழைப்பு அல்லவா நக்சல்பாரி!


கதை முடிக்கப் பார்ப்போரே!

அது முடியாது

நாங்கள் பகத்சிங்கின் தொடர்ச்சி.


சில குழந்தைகளுக்கு

பொம்மைகள் போதும்

அழுகையை நிறுத்திக் கொள்ள

சில குழந்தைகளுக்கோ

அம்மா வேண்டும்!

கிலு கிலுப்பைகளோடு அடங்கிவிடும்

சில குழந்தைகள்.

சில குழந்தைகளுக்கோ தாயின் குரல் வேண்டும்!

வயிறு நிறைந்தால்

தூங்கிவிடும் சில பிள்ளைகள்.

சில பிள்ளைகளுக்கோ அது முடியாது

அடுத்து கதை÷வண்டும்.

அவர்களுக்குச் சொல்லுங்கள்

இந்தக் கதையை...

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழõம் ஆண்டு

செப்டம்பர் இருபத்தி எட்டாம் நாள்

ஒரு பஞ்சாப் தாயின் பிரசவ வலி

புதிய இந்தியாவையே ஈன்றெடுத்தது.

கருவறையை விடவும் இருண்டு கிடக்கும்

நாட்டின் நிலைமையை

கர்ப்ப வெப்பத்திலேயே கண்டுணர்ந்து,

தன் மேனியில் வழிவது

தாயின் இரத்தம் மட்டுமல்ல

தாய்நாட்டின் இரத்தம் என்பதை

பார்த்து, பார்த்து

அடிமைத்தனத்தின் பனிக்குடம் உடைத்து

தொப்புள் கொடியின் தாமதம் அறுத்து

பிறப்பின் கலகம்

அங்கே பகத்சிங் என்று பெயரெடுத்தது.

அடிமை இந்தியாவின் தாலாட்டில்

அடங்க மறுத்து, அழுது சிவந்து

அவன் கையும் காலும்

எல்லோர் முகத்திலும் எட்டி உதைத்தது.


வெறும் வயிற்றுப் பசிக்காக

வளர்ந்தவனாய் இருந்திருந்தால்

அம்மா... அப்பா என்று மட்டும்

அழைத்திருப்பான்.

வர்க்கப் பசியோடு வளர்ந்த பகத்சிங்

அ... ம்.... மா, அ... ப்... பா... நாடு என

விரிந்த பொருளில்

பேசத் தொடங்கினான்.


பன்னிரெண்டாம் அகவையில்

பள்ளிக்கூடத்திலிருந்து

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்

துள்ளியெழுந்து

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை

பார்க்கப் போனான்.

அங்கே வெள்ளையன் குதறிய

இந்தியப் பிணங்களை

தன் கண்களில் விதைத்தான்.

கருகிய இரத்தம் இதயத்தில் உறைய

தன் காலத்தை வெறுத்தான்.

சிவந்து கிடக்கும் இந்தியக் கனவையும்

சிதறிக் கிடக்கும் இந்தியப் புரட்சியையும்

ஒன்று சேர்க்கும் உறுதியுடன்

கையில் அள்ளிய களத்தின் மண்ணை

தன் (சட்டைப்) பையில் திணித்தான்!


மண்ணைத் தின்று வளர்ந்தவர்களே!

உங்களில் எத்தனை பேருக்கு

இந்த மண்ணைப் பற்றிய அக்கறை உண்டு?

ணூ வெறும் வீட்டுப் பாடம் போதுமா?

பகத்சிங் போல நாட்டுப்பாடம் படித்தாலே

நல்ல புத்தி வந்து சேரும்.

இல்லையேல்

ஜாலியனாவது... பாக்காவது

அமெரிக்காவின்

கூலி என் பாக்கியம் என்று

சட்டைப் பையில் மட்டுமல்ல

சதைக்குள்ளும் அந்நிய நரகலின்

ஆணவம் ஊரும்.


பகத்சிங்கும் தான் படித்தார்!

""புரட்சி ஒன்றே என் விருப்பப் பாடம்

நாட்டுப்பற்றே உயர்நிலைக் கல்வி

கம்யூனிசமே உயிரியல் படிப்பு''

என்ற விடுதலைக் கல்வியின் வீரியத்தை

விளக்கிச் சொல்லுங்கள் பிள்ளைகளிடம்.

சுயநலம் என்ற தோல் வியாதி

உங்கள் பரம்பரைக்கே தொற்றாது.

""இளமைக்கேற்றவேலை வாய்ப்பு

இந்தியப் புரட்சியில் இருக்குது

அந்நியன் ஆதிக்கம் ஒழிப்பதிலேயே

நம் அனைவர் நலனும் பிறக்குது''

என்று பகத்சிங் சொன்ன கருத்துக்களோடு

பழக விடுங்கள் பிள்ளைகளை.

முதலாளித்துவம் எனும் கெட்ட பழக்கம்

உங்கள் வாரிசுகளுக்கே வராது.

எனக்கு மட்டுமே வாழ்வேன் என்று

இதயத்தை இழுத்து நடக்கும்

"வாதம்' அவர்களுக்கு வராது!

போராடத் தூண்டும் பகத்சிங் வாழ்வு!

பொறாமைப்பட வைக்கும் அவன் சாவு!

கரைக்கப்பட்ட பகத்சிங் சாம்பலால்

உணர்ச்சி பெற்ற சட்லெஜ் நதி இன்றோ...

சகலரையும் சந்தேகத்துடனே பார்க்கிறது.

எதுவுமே செய்ய முன்வராத

இவர்களை நம்பியா செத்தோம்

அச்சத்தில் தியாகிகள் கனவு உறைகிறது!

இவர்களை நம்பியா இருக்கிறோம்

பீதியில் இயற்கை நடுங்கித் தவிக்கிறது!


சும்மா பகத்சிங் பற்றி பேசாதே!

அவன் பேசவிரும்பியதைப் பேசு

சும்மா தியாகிகள் இரத்தத்தில் ஒளியாதே!

அவர்கள் தெரிவு செய்த பாதைக்கு

வேலை செய்ய வெளியே வா!

அழைக்கிறது புரட்சி நதி!

Friday, October 5, 2007

தொலைபேசி மூலம் பாலியல் ரீதியாக பெண்களை இழிவுபடுத்தல்

பி.இரயாகரன்
05.10.2007

வை தனிப்பட்ட பெண்களை அணுகுவதாக இருந்தபோதும், இது ஆணாதிக்க சமூக நோய். சமூகம் என்ற அறநெறிகளை இழந்து வரும் சமூகத்தில், இவை போன்றன தனிப்பட்ட சம்பவங்களாக மிக வக்கிரமாக வெடித்துக் கிளம்புகின்றது. தமிழ் சினிமா இப்படி வக்கிரமாக அணுகிக் கூத்தடிப்பதையே, தமிழ் காதலாக, உயர்வான கதாநாயகத் தன்மை கொண்டதாக காட்டுகின்றது. இதை சமூகமே ஜிரணிக்கும் பண்பாடாகி வருகின்றது.

இதையே அரசியல் தளத்தில் சிலர் செய்கின்றனர். தமிழ்மண இணையத்தில் செயல்படும் தமிழச்சிக்கு, பாலியல் ரீதியான மிரட்டல் விடப்பட்டுள்ளது. 'தமிழச்சியின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிடுவோம் - இணையப் பொறுக்கிகள் பகீரங்க மிரட்டல்! -தமிழச்சி" அவரின் கருத்துக்களை எதிர் கொள்ளமுடியாது பாலியல் ரீதியாக மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணின் எழுத்துரிமையை நிறுத்தமுனைகின்றனர். அவள் ஒரு பெண்ணாக இருப்பதால், பெண்ணை பாலியல் ஊடாக மிரட்டும் இழிவான ஆணாதிக்க வக்கிரங்களே பொறுக்கி அரசியலாக அரங்கேறுகின்றது.

கருத்தியல் ரீதியாக கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான, இழிவான செயல்கள், ஆணாதிக்கம் ஊடாக வெளிப்படுகின்றது. இது இந்த வர்க்க சமூக அமைப்பின், தரம் கெட்ட நடத்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பிரான்சில் அதாவது பாரிசைச் சுற்றி இந்தச் சம்பவம் நடக்கின்றது. தமிழச்சி பாரிசில் வாழ்ந்த போதும், நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இணையம் மூலம் தெரிந்து கொண்ட ஒரு நிலையில், கருத்து மற்றும் நடைமுறைகள் தொடர்பாக எமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் உண்டு. ஆனால் சமூகத்தின் ஒரு இழிவான பக்கத்தை சாட முனைகின்ற அந்த துணிச்சலை, அந்த நேர்மையை நாம் மதிக்கின்றோம்;. இதற்கு எதிரான எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்க முடியாது.

எந்தக் கருத்தின் மீது, எந்தத் தரப்பால் இவை விடப்படுகின்றது என்பதை தமிழச்சி வெளியிடவில்லை. அதாவது இதன் பின்னணியை பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் அவை மேலும் இந்தச் சம்பவத்தின் பின்னணியை கூர்மையாக்க கூடியவையாக இருக்கும்.

பாரிசில் நாம் அறிய தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் பெண் குழந்தைகளை குறிவைத்து, தொலைபேசி மூலம் பாலியல் வக்கிரத்தைக் கொட்டுகின்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றது. இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான். தம்மைத் தாம் தமிழர் என்றும், தமிழ்ப்; பண்பாட்டின் வாரிசுகள் என்றும் கூறிக்கொள்பவர்கள் தான். இதனால் தமிழ் ஊடகங்கள் இதை மூடிமறைக்கின்றன, அதை பூசி மொழுகுகின்றன. தந்தை அல்லது தாயை அல்லது அண்ணையைக் கொன்று விடுவோம் என்று கூறி, மிக இளம் வயது பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக அணுகுகின்ற தமிழ் வீரர்களைக் கொண்டதே எமது தமிழ் சமூகம். இப்படி தமது பாலியல் வக்கிரங்கள் அவர்களால் அன்றாடம் கொட்டித் தீர்க்கப்படுகின்றது.

தமிழச்சிக்கு நடந்தது இதில் இருந்து வேறுபட்டது. அரசியல் ரீதியாக நடக்கின்றது. ஆளும் வர்க்க, கருத்து தளத்தின் இயலாமையில் இருந்து வக்கிரமாகி கொட்டுகின்றது. அவர் இதன் பின்னணி பற்றி எதையும் தெரிவிக்கவில்லை என்ற போதும், இந்த வக்கிரம் என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தின் கடைகெட்டுப்போன போன உதிரி பொறுக்கிகளின் மானம் கெட்ட ஒழுக்கமாகின்றது. இது போன்ற வம்புகளால் தான், முன்பு இதே பாரிசில் நிதர்சினி படுகொலையும், கற்பழிப்பும்; நடந்தது.

தான் ஒரு ஆண் என்ற அகங்காரத்துடன், தன்னால் எந்தப் பெண்ணையம் எப்படியும் இழிவுபடுத்த முடியும் என்ற ஆணாதிக்க திமிர். இந்த இழிவை வாழ்வாக கொண்டவர்களின்;, இழிவான பண்பாடற்ற காடடு;மிராண்டி நடத்தைகள் இவை. இந்த அற்பர்கள் தம்மை இந்த சமூகத்தின் முன் மூடிமறைத்துக் கொண்டு, இயங்குகின்ற கோழைகள். ஆனால் இவர்கள் தான் புரையோடிப்போன இந்த அமைப்பின், முதுகெலும்புகளாக, வாழ்வில் நடித்துக்கொண்டும் இருப்பவர்கள்.

தமிழச்சிக்கு எதிராக மூன்று பிரதானமான போக்கில் இருந்து, இந்த இழிவாடல் மிரட்டலும்; விடப்பட்டு இருக்கும்.

1. பெரியார் இந்து மதம் தொடர்பான கருத்துக்களையும், மற்றைய அவரின் கருத்துகளையும் தொடர்ச்சியாக வெளியிடும் தமிழச்சி செயலை சகிக்க முடியாதவர்கள் செயலாக அமையலாம்.
2. அண்மையில் பாரிஸ்சில் நடைபெற்ற தேர் தொடர்பாக வெளியிட்ட துண்டுப்பிரசுரம், அது பற்றி பிரச்சாரத்தையும் கண்டு குலைக்கும் கூட்டம்
3. புலிகளுக்கு எதிராக, அவர் வெளியிட்ட சில கருத்துகள்

இந்த மிரட்டல் பின்னணியில் இதில் ஒன்று முதன்மை காரணமாக இருக்கும். ஆனால் இந்த மூன்று போக்கும், இந்த சமூக அமைப்பில் இழிந்து சீரழிந்து கிடக்கின்றது. அவர்களின் எதிர் ஆயுதம் என்பது அறிவு அல்ல. மாறாக அந்த அமைப்பின் இழிவான, கேவலமான குறுக்கு வழிகள் தான். அதிலும் ஒரு பெண், தனது சொந்தப் படத்தைப் போட்டு, இந்த அமைப்பின் சீர்கேட்டை அதன் இழிவை அம்பலமாக்குவதை, ஆணாதிக்கமுடைய இந்த இழிவான அமைப்பால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதை கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளும், கருத்தியல் ஆண்மை அதனிடம் கிடையாது.

ஆகவே ஆண் பெண் என்ற வேறுபாட்டை உருவாக்கியதன் மூலம் கிடைத்த, ஆணாதிக்க மேன்மையைக் கொண்டு மிரட்டுகின்றது.

பெண்களை பெண் அடையாளம் மூலம் இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது, பாலியல் ரீதியாக மிரட்டுவது, பாலியல் ரீதியாக உரசிபார்ப்பது, பாலியல்; ரீதியான நுகர முனைவது, இந்த அமைப்பில் சர்வசாதாரணமாகிவிட்டது.

பெண் என்பவள் பாலியல் நுகர்வுப்பண்டம் என்பதே, தமிழ் ஆணாதிக்க அமைப்பில் புளுத்துவிடடது. பாரிஸ் லாச்சப்பலின் வீதிகள் தோறும் இந்த கும்பலைச் சேர்ந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக, வீதிகளில் வீணிவடிய காற்சட்டையை திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர். எந்த பெண்ணும் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்ல முடியாது. ஒரு ரவுடித்தனத்துடன் பாலியல் வக்கிரத்தை தீர்க்க முனைகின்ற பொதுஅவலமே அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. லாச்சப்பலுக்கு எந்த பெண்ணும் சுதந்திரமாக செல்ல முடியாது. தமிழ் பாடசாலைகள் கூட இதை அங்கீரித்து, அனுசரித்து இதற்குள் இயங்குகின்றது.

இப்படி பட்டப்பகலில் லாச்சப்பலில் இந்த நிலை நீடிக்கும்; போது, கம்யூட்டர் மூலமும் தொலைபேசி மூலமும் இதுவே நடக்கின்றது இந்த அசிங்கம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, பயங்கரமானது. சம்பந்தப்பட்ட பெண், அந்தக் குடும்பதின் உளவியல் அவலம் கடுமையானதும், சித்திரவதையை கொண்டதுமாகும்;.

இந்த இழிவான சமூகத்தை வழிநடத்தும் அரசியல் பிரிவினரே நேரடியாக களமிறங்கி, மூகத்தை மூடிக்கொண்டு பாலியல் வக்கிரத்தை தமிழச்சிக்கு எதிராக கொட்டுகின்றனர். இந்த ஈனச்; செயலை எதிர்த்து, தமிழச்சி எதிர்கொள்ளும் திறன் பெண்களுக்கே முன்மாதிரியானது.

எந்தப் பண்பாடுமற்று, நாகரிகமற்று காற்சட்டை போட்டு திரிகின்ற இந்த மூகமுடிக் கும்பலை, அதை அனுசரிக்கும் இந்த சமூக அமைப்பை எதிர்த்து நிற்பது, போராட்டத்தின் ஒரு கூறாகிவிடுகின்றது.

Thursday, October 4, 2007

உறங்காத கனவுகள்

(1.2.2007 அன்று தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற ""கவிதை முற்றம்'' எனும் நிகழ்ச்சியில் ""உறங்காத கனவுகள்'' எனும் தலைப்பில் தலைமை தாங்கி வாசித்த கவிதை)


உறங்காத கனவுகள்


வாயும், வயிறும் வளர்த்து நிதம்

வலியப் புகழ் தேடித் திரியும் சிலர் முற்றத்திலோ

போயும் போயும் பொழிந்தோம், என

காயும் நிலவின் வான்பழி மட்டுமல்ல?

வெறும் வித்தகக் கவிஞன் என்ற வீண்பழியும்

வாரா வண்ணம்,

விளங்கட்டும் கவிமுற்றம்


நாம் வர்ணித்து காட்டுவோம் என்பதற்காக

வந்து போகவில்லை நிலவு,

விண்மீன்கள்சிணுங்கும் இரவோடு சிற்றினம் சேராமல்

சுயநலத்தில் ஒதுங்கும் போக்கோடு

ஓரிடத்தில் உறையாமல்

பொதுவில் உலகுக்கு முகம் காட்டும்

தன்னைப் போல உன்னையும் எதிர்பார்த்தே

ஒவ்வொரு நாளும் வருகிறது நிலவு!

வர்ணித்துக் காட்டாதே! வாழ்ந்து காட்டு!


கண்களால் காணும் கனவுகளை விடவும்

நீங்கள் கவிதைகளால் கண்ட கனவு தகுதியானது

ஏன் தெரியுமா?

கனவுகளில் நாம் சிந்திப்பதில்லை.

அனுபவிக்கிறோம்,

உங்கள் கவிதைகளில் (அனுபவிக்க மட்டுமல்ல)

சிந்திக்கிறோம்!


உறக்கத்தில் அமைதியாகக் கண்ட கனவையே

பலருக்கு, ஒழுங்காகச் சொல்லத் தெரிவதில்லை.

இதில் உறங்காத கனவுகளை

இந்த ஊரே சொல்லும்படி

என்னமாய்ச் சொன்னீர்கள்! நன்றி கவிஞர்களே!


உறக்கம் கிடக்கட்டும்

சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போதே

எதையும் விளங்கிக் கொள்வதில்லை!

பாக்கி கடன் அடைக்க முடியாமல்

குடும்பத்துடன் விவசாயி

பாலிடால் குடித்து சாவதைப் பார்த்தபிறகும்

நோக்கியா வந்ததனால்

நாடு முன்னேறிவிட்டது, என்று யாராவது சொன்னால்

ஆமாம், ஆமாம் என்று

வேகமாய் தலையாட்டும்

சில விளங்காத ஜென்மங்கள்.

இப்படியொரு சூழ்நிலையில்...

உறங்காத கனவுகளின் உணர்ச்சிகளை

நம் நரம்புகளில் ஊட்டிவிட்ட

மனிதக் கவிதைகளை

மனதாரப் பாராட்டுவோம்!

இது நிலா முற்றம்

குழந்தை தாய்க்கு சோ×ட்டுதல் போல

இங்கே குறைகளும் கூட அழகாகும்.

சிதறிய பருக்கையில் உணர்ச்சியின் பசிகள்

பவுர்ணமி முகத்தில் ஒப்பனை எதற்கு?

பசப்பாத உணர்ச்சிகளுக்கு பஜனை எதற்கு?


பொய்நேர்த்தி காட்டாத

உங்கள் செய்நேர்த்திக் கனவுகளோடு

சேர்ந்து கொள்கிறேன், நானும்...


படுத்தால் கனவு பிடுங்குதென்று

பலர் சொல்லக் கேட்டதுண்டு

படுத்துத் தூங்கினால்

விழுந்து பாம்பு புடுங்குது

விழித்து எழுந்தால்

ப.சிதம்பரம் போட்ட பட்ஜெட் புடுங்குது

பாதை தேடி, பலர் விழிகள் நடுங்குது.


சிலர் விழித்திருந்தாலோ! வில்லங்கம்

கனவு கண்டாலோ விபரீதம்

காந்தி சுதந்திரமாய் விழித்திருந்தபோது

ஆட்டுப் பால் காலியானது

அவர் கனவுகண்ட சுதந்திரத்தால்

சாணிப்பால் நம் வாயில் போனது


அம்பானிகள் கண்ட கனவில்

பி.எஸ்.என்.எல்.லின் விழிகள் பிதுங்குது

களவாடிய அரசுப் பணத்தை

கனவிலேயே கழித்துக் கொள்ளச் சொல்லி

"ரிலையன்சின் ரிங்டோன்'

தேசத்துக்கே பழுப்புக் காட்டுது.


வால்மார்ட்டின் வர்த்தகக் கனவில்

இந்தியச் சில்லறை வணிகம் செத்து மிதக்குது.

கோக்பெப்சியின் கனவு

பல குரல் வளையெங்கும் ஓடுது.

எங்கள் பட்டுப்போன வாய்க்கால் கனவு

எலி செத்து நாறுது!

கனவுகளில் வரும் அபத்தங்களைவிடவும்

சிலர் நினைவுகளில் செய்யும் அபத்தங்கள்

நீடித்த வியப்பளிக்கும்!

இரவு உணவின்றி படுக்கப் போவோர்

இந்தியாவில் இருபது சதவீதம்!

பிறப்பது பெண்பால் என்றால்

கருவினை கருக்கிடும் கள்ளிப்பால்.

மீறிப் பிறந்தாலும் ஊறாது தாய்ப்பால்.

ஊட்டச்சத்தின்றி உயிர்ப்பலிகள்.

உறுப்புகள் விற்று... பொறுப்புகள் சுமக்கும் குடும்பங்கள்.

இவ்வளவு பிணங்களும்... கண்களை மறைக்க

இதோ... இந்தியா வல்லரசாகப் போகிறது என்று

சிலர் பீதியூட்டும் அபத்தங்களை

கனவிலும் யாராவது காண முடியுமா?


கனவான்களே! கலாம்களே!

காலந்தோறும் நீங்கள் கண்ட கனவால்

கடைசியில் எங்கள் கிட்னியும்

கழண்டு போனது.

இதயமும் வறண்டு போனது.


இரவுகள் பொதுவாய் இல்லாத நாட்டில்

கனவுகள் பொதுவாய் எப்படி இருக்கும்?


ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும்

பிட்சா கார்னர்களுக்கும்

இரவு சம்பாதித்துக் கொடுக்கிறது.

நடைபாதை இரவுகளோ

சில்லிடும் பனியின் கொலைக்கரத்தால்

சில ஏழைகளின் உயிரையும்

செலவு செய்து விடுகிறது.


இழவு வீட்டுக்குச் சென்று வரும் வழியில்

குளத்தின் பனிக்குள்

உறையும் நிலவைப் பார்த்து, நீரைத் தொட்டு

நடுக்கும் நடுத்தர வர்க்க இரவு

அறுக்கும் வயலின்

கொதிக்கும் சுனையுடன், உடல் சுடச் சுட

உழவன் குளத்தில் இறங்கும் வேகத்தில்

பனிக்கும் குளிர்விட்டுப் போகும்

நீரைப் பழிக்கும் உழைப்பின் வியர்வை இரவு!


தங்க நாற்கரச் சாலையில்

தடம் குலுங்காமல் விரைகின்றன.

பன்னாட்டுக் கம்பெனிகளின் கனவுகள்

கண்ட்டெய்னர், கண்ட்டெய்னராக...

எங்களூர் கப்பிச் சாலையில் கால் இடறி

தயிர் விற்பவள் தடம் புரண்டு

மண்பானைக் கனவுகள்... மண்ணாய் போகுது!

தரையும் தாரை வார்க்கப்படும் நாட்டில்

புவியீர்ப்பு விசை கூட

பொதுவாய் இருக்குமா என்ன?


இனி கனவுகள் கூட

உனக்கு உரிமை இல்லை.

கண்டமெல்லாம் அமெரிக்காவின் வசம்

வெறும் "காண்டம்' மட்டுமே

இந்திய இளமைக்கு கைவசம்.


நீ ஒரு மாணவனா?

உனது கல்விக்கான மானியத்தை

வெட்டச் சொல்லுது

உலகவங்கியின் கவுச்சிக் கனவு.

அறிவார்ந்த நம் தொழில்நுட்பக் கனவுகளை

தனது காலடியில் போடச் சொல்லி

விழிகளை உருட்டுது அமெரிக்கத் தினவு.

நீ ஒரு விவசாயியா?

உனக்கான இலவச மின்சாரம், நீர்

அனைத்தையும் நிறுத்தச் சொல்லி

உனது கண்களை பறிக்கிறது

உலக வர்த்தகக் கழகத்தின் கனவு!

மண்ணை அகழ்ந்து

நாம் புதைத்து வைத்த இரத்தக் கனவுகளை

அன்னிய டப்பா உணவில்

அடைக்கப் பார்க்குது

இனி நம் அன்னையின் கருவிலும்

அன்னிய மூலதனம்!


பழுப்பு நிலக்கரி கனவுகளுக்காக

பாதாளத்தில் மண் சரிந்து

மூடிய விழிகள் எத்தனை? எத்தனை?

வழுக்கும் கிரானைட் வார்த்து எடுக்க

உயிர் வழுக்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?

பரந்து கிடக்கும் மின்சாரம், தொலைபேசி இழைகளுக்குள்ளே

இறந்து துடிக்கும் தொழிலாளர் உயிரணுக்கள்

ஒன்றா? இரண்டா?

மயங்கி விழும் உனக்கு ஒரு சோடா கொடுக்க

மைல் கணக்கில் இயங்கிடும் மிதிவண்டியே

இரும்புக் குரலில் என்னைவிட்டுவிடு

போதும் எனக் கதற

உயிர் மூச்சுக் கொடுத்து தொழிலாளி

உருவாக்கிய சந்தைகள் எத்தனை?

சத்தமில்லாமல் அத்தனையையும்

தட்டிப் பறிக்க வரும் மறுகாலனி ஆதிக்கத்தை

உங்கள் உறங்காத கனவுகள்

ஒழிக்காமல் விடுமா என்ன?

நீங்கள் மண்ணைக் கிளப்பிடும் காற்று

எதிரிகளின்

கண்ணை உறுத்தட்டும் உங்கள் கனவுகள்!


மாறாக!

இரண்டு ரூபாய் அரிசியில் கிறங்கி...

இலவச டி.வி.யில் மயங்கி...

இழிவுகளோடு உறங்கி..னால்

என்ன கனவு வரும்?

""கூட்டணி வைத்து பல பாம்புகள் துரத்தும்

நாயும் கூட கேவலம் பேசும்

பன்றிகள் பக்கத்தில் நிற்க அருவருத்து ஓடும்,

எதிர்ப்புணர்வே இல்லாததைப் பார்த்து

எறும்புகள் மண்ணை வாரித் தூற்றும்...''

இனியாவது அடிமைக்கனவைக் கலைப்போம்

விடுதலைக் கனவுகள் விதைப்போம்

கனவு காணும் மனிதர்களாக மட்டுமல்ல

கனவுகள் நம்மை காணத் துடிக்கும்...

மனிதர்களாக இருப்போம்!

Wednesday, October 3, 2007

ம.க.இ.கவின் நிலைப்பாடு என்பது சர்வதேசியமே

பிஇரயாகரன்
13.07.2007

ர்வதேசியம் உலகளவிலானது. உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும். அவர்களின் விடுதலைப் போராட்டங்களை மட்டும் ஆதரிக்கும். பிற்போக்கானதும், மக்களுக்கு எதிரான எதையும் ஆதரிக்காது. இரண்டு முரண்பட்ட பிரிவில் ஒன்றைச் சார்ந்து நிற்க வேண்டிய அவசியம், கட்டாயம் அந்த வர்க்கத்துக்கு கிடையாது. அது தனக்கு என்ற சொந்த அரசியல் நிலைப்பாட்டை கொண்டது. இரண்டு மோதுகின்ற பிரிவுகள் பிற்போக்கான கூறாக இருந்தால், இரண்டையும் எதிர்க்கும். மாறாக மக்களைச் சார்ந்து நிற்கும். தேர்தலில் வாக்குப் போடுவது போல் ஒன்றைத் தெரிவது கிடையாது.

ஆம் இல்லையென்று நீதிமன்ற மொழியில் பதிலளிப்பதில்லை. அதாவது சமூக விளைவுகளை கருத்தில் கொள்ளாது, நீதிமன்ற தீர்ப்பு போல், மலட்டுத் தீர்ப்பு வழங்குவதில்லை. ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நலன்கள் தான், அந்த ஒடுக்கப்பட்ட அமைப்பினதும் நிலைப்பாடாகின்றது.

தமிழ்மணத்தில் தேசிய அரசியல் புரளி கிளப்பி நிற்பவர்கள், வழமைபோல் புலிகள் என்று அதற்குள் தமது புரட்சியை பற்றி சவடால் அடிக்கின்றனார். அவர்கள் நீதிமன்ற மொழியில் பதில் கேட்கின்றனர்.

''1. தனி தமிழீழம் உருவாகுவதை ஆதரிக்கின்றீர்களா? - ஆம், இல்லை என்று ஏதாவது ஒரு பதில், ஆம் என்றால் அடுத்த கேள்விக்கு போகவே வேண்டாம், இல்லை என்றால் அடுத்த கேள்விக்கு போங்கள்

2. இலங்கையின் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன? தமிழர்கள் கொல்லப்படுவதை எப்படி தடுப்பது? தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் எப்படி சிங்கள பேரினவாத அடக்கு முறையிலிருந்து உயிர் பிழைப்பது?" என்கின்றனர். ஆகவே புலிகளை ஆதரியுங்கள் என்கின்றனர். இது தான் இந்த புரட்சி பேசும், புரளிகளின் நிலைப்பாடு.

இதற்கு நாம் பதில் அளிக்க முன், தேசிய புரட்சி பேசும் நீங்கள் வசதியாக வசதி கருதி மறந்த விடையத்துக்கு பதிலளியுங்கள். காஸ்மீர் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? பஞ்சாப் முன்னைய போராட்டம், அசாம் போராட்டம் பற்றிய நிலைப்பாடு என்ன? ஆதரிக்கின்றீர்களா எதிர்கின்றீர்களா? இதே இலங்கை நிபந்தனை தான் அங்கேயும் இருந்தது, இருக்கின்றது. சிங்கள இராணுவம் போல், இந்திய இராணுவம் அந்த மக்களைக் கொல்கின்றது.

பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு எப்படி காஸ்மீரைப் பார்க்கின்றதோ, அப்படித்தான் தமிமீழத்தையும் பார்க்கின்றது.

தமிழீழத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற கேள்விக்கு, பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் விடை தெளிவானது. ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் அதன் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் ஆதரிப்பதும், அல்லாதபோது அதை எதிர்ப்பதும் என்பதே, பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கடமை. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும், அதை நோக்கிய திசையில் கருத்துரைப்பதுமே பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய நிலைப்பாடாகும்.

இதற்கு அப்பால் குறித்த நிலையில் அது சாத்தியமா இல்லையா என்பது இரண்டாவது விடையமாக உள்ளது. பாட்டாளி வர்க்கம் தரகு முதலாளிகளின் தலைமையிலான போராட்டத்தை ஆம் என்று சொல்லி ஆதரிப்பதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்தை மட்டும் தான் ஆதரிக்கும். இல்லாதபோது அதற்காக, அது போராடும்.

ஆம் என்று கூறக் கோருவதே பாசிசம். இதைத் தான் புலி கூறுகின்றது. அனைவரும் தமது நிலைக்கு கீழ் வரக்கோருகின்றது, இல்லாத போது கொல்லுகின்றது. இதே பாசிசத்தைத் தான், இந்த தேசிய புரளிப் பேர்வழிகள், சுற்றி வளைத்து சர்வதேச இயக்கங்கள் மீது முன்வைக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய நலனைக் கூட முன்னெடுக்காத யாரையும் நாம் ஆதரிப்பதில்லை. புலிகள் தமிழ் மக்களின், ஒடுக்கப்பட்ட நலனை பிரதிபலிப்பதில்லை. பேரினவாதம் தமிழ் தேசத்தின் சமூக பொருளாதார கூறை நசுக்குகின்றது. அதைப் புலிகள் எதிர்ப்பதில்லை. மாறாக புலிகள் சேர்ந்தே ஒடுக்குகின்றது.

சிங்களப் பேரினவாதம் எதை தமிழ் மக்களுக்கு மறுக்கின்றது என்ற கேள்வியை புலித் தமிழ் தேசியம் எழுப்புவதில்லை. புலிகள் தமது குறுகிய யாழ் மேலாதிக்கம் தனது சொந்த நலனை முன்வைக்கின்றது.

புலிகள் தரகு முதலாளிய ஏகாதிபத்திய நலனைப் பேணிக்கொள்ளும், பாசிச மாபியாக் கும்பலாகிவிட்டது. அது மக்களின் விடுதலையை முன்வைக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலை என்ன என்பதை புலிப்பாசிட்டுகள் போல், புரளிப் பேர்வழிகள் பேச மறுக்கின்றனர்.

தமிழ் மக்களை ஒடுக்கு முறைக்குள்ளாக்கும் பேரினவாத அரசும் சரி, யாழ் மேலாதிக்க புலிப் பாசிசமும் சரி, தமிழ் மக்களுக்கு எதிரானது.

இந்த பேரினவாத அரசினதும், புலி இயக்கத்தினதும் மக்கள் விரோத ஒடுக்குமுறையை எதிர்ப்பதே பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமை. இதற்கு மாறாக தமிழ் மக்கள் தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடும் அனைத்து முயற்சிகளையும், சர்வதேசியம் ஆதரிக்கும். அது தனித் தமிழீழமாக இருந்தாலும் சரி, ஒன்றிணைந்த புரட்சியாக இருந்தாலும் சரி. இதை அந்த மக்கள் தான், சொந்த வழியில் நின்று தீர்மானிக்க முடியும்.

மக்கள் தாம் தமது விடுதலைக்கான வழியில் தமிழீழத்துக்காக போராடினால் அதை ஆதரிக்கும். இல்லை என்றால், மக்களுக்கு எந்த விடுதலை கிடையாது என்றால், அதை எதிர்க்கும். மக்களின் அதிகாரம் தான் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு.

இன்று அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் குரல்கள் இல்லை என்பதும், அதைப் புலிப் பாசிட்டுகள் கொன்று அழித்து வருகின்றனர். ஏன் என்றால் அந்த மக்களின் விடுதலைக்கான குரல்களாய், அதற்காக போராடுவதால் தான் கொல்லப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் சிறு குரலைக் கூட கேட்கக் கூடாது என்ற, புலிப் பாசிசத்தின் நிலையை நாம் ஆதரிப்பதில்லை. அது வைக்கும் தனது பாசிச தமிழீழத்தை ஆதரிப்பதில்லை.

சிங்கள பேரினவாத அரசு கொன்று போடும் தமிழ் மக்களுக்கு தீர்வு என்ன? நல்ல கேள்வி. தமிழ் மக்களை அரசு மட்டுமல்ல, புலியும் தான் கொல்லுகின்றது. இந்த ஒநாய்களை ஆதரித்து வளர்ப்பதல்ல. தமிழ் மக்கள் தமது விடுதலைக்காகவும், தம்மைப் பாதுகாக்கவும் புலியை எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டும் தான், சிங்கள பேரினவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க முடியும். தமிழ் மக்களைப் பேரினவாதம் கொல்வது என்பது, புலிகள் இருப்புக்கான புலிகளின் அரசியல் உத்தியாகவும் உள்ளது. பேரினவாதம் தமிழ் மக்களைக் கொன்றால் தான், புலிகளின் இருப்பு சாத்தியமானது. தமிழ் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக கொல்லப்படுகின்றனரோ, அதையே புலிகள் விரும்புவதே அவர்களின் அரசியல்.

இந்த வகையிலும், இதுவல்லாத வகையிலும் புலிகளே தமிழ் மக்களைக் கொன்று போடுகின்றனர். மக்களின் எந்த சுய செயல்பாட்டையும் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழ் மக்கள், தாம் போராடாமல் தமது விடுதலையை அடையமுடியாது. தம் மீதான அரசு மற்றும் புலிப் படுகொலையை தடுத்து நிறுத்தமுடியாது. இந்த நிலைப்பாடு தான் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும். அதை மட்டும் தான் ஆதரிக்கும்.


Tuesday, October 2, 2007

மக்கள் தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல...

பி.இரயாகரன்
18.02.2007

இந்த உண்மை புலியெதிர்ப்பு கும்பலுக்கு கசப்பான ஒன்று. இதனால் மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்று காட்டுவதே புலியெதிர்ப்பு எடுபிடி பேர்வழிகளின் சுத்துமாத்து அரசியலாகும். இந்த மோசடியை உண்மையானதாக காட்ட மக்களையும் கருணா கும்பலையும் ஒன்றாக காட்டுவதே இவர்களின் அரசியலாகும். அதை அவர்கள் 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும் அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்.." என்றவாறாக தமது பலியெதிர்ப்பு அரசியல் நிலைக்கு ஏற்ப கயிறு திரிப்பதே இவர்களின் அரசியல் சாரமாகும் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல என்பதை எப்படி புலிகளும் அதன் பினாமி எழுத்தாளர்களும் மறுக்க முனைகின்றனரோ அதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்ய முனைகின்றது.

இந்த வகையில் தேனீ இணையத்தில் எஸ்.மனோரஞ்சன் என்ற புலியெதிர்ப்பு பினாமி எழுதிய 'கருணா அம்மான் உடைத்ததால் மட்டும் அது மண்குடம் ஆகிவிடுமா என்ன? மக்களை நேசிக்கும் அரசியலும், ஆயுதமுமே புலிகளை தோற்கடிக்கும்!" என்ற கட்டுரை அதையே தான் செய்ய முனைகின்றது. கருணா கும்பல் மேல் கட்டிய ஓளிவட்டம் அனைத்தும் நிர்வாணமாகின்ற ஒரு நிலையில் தம்மையும் தமது மக்கள் விரோத பாசிச அரசியலையும் நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு மூடிமறைத்த பாசிச புலம்பலைத் தான் இக்கட்டுரை மூலம் செய்ய முனைகின்றது. புலிகளை விட எந்தவிதத்திலும் கருணா கும்பல் மக்களுக்கான ஒரு நடத்தையை கொண்டிருக்கப் போவதில்லை. இந்த உண்மையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW) சொல்லித் தெரிய வேண்டிய அவலம் ஒருபுறம். இதற்கு வெளியில் சொந்தமாக எந்த அரசியல் சரக்கும் கிடையாது. மறுபுறத்தில் மக்கள் விரோத இந்த அரசியல் மோசடிகள் மூடிமறைப்புகள் அம்பலமாகும் போது, விழுந்துகட்டி அதை விமர்சிப்பதாக ஆடிப்பாடிக் கொண்டே பாதுகாப்பது மற்றொரு சதியாகும்.

புலியெதிர்ப்பில் முகிழ்ந்து அதுவாகவே அனைத்தையும் சிந்தித்து, கருணா கும்பலின் நாய்களாக குலைத்தவர்கள், மீண்டும் வாலாட்டுவதைத் தான் இந்தக் கட்டுரை மீண்டும் செய்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு HRW) அறிக்கையை, தேனீ தவிர்ந்த மற்றைய புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்கள் பிரசுரிக்கவில்லை. இது முன்னைய காலத்திற்கும் முரணானது.

புலிக்கு எதிரான அனைத்தையும் வாந்தியெடுக்கும் இந்த புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்கள், இதை திட்டமிட்ட வகையில் இம்முறை தமிழ் மக்களுக்கு இருட்டடிப்பு செய்தனர். நாங்கள் புலிகள் வழியில் தான் செயல்படுவர்கள் என்பதையே இப்படியும் நிறுவினர். இந்த நிலையில் மூடிமறைக்கப்பட்ட கட்டுரையைக் கொண்டு, எஸ்.மனோரஞ்சன் கட்டுரை மயில் இறகு கொண்டு கருணாவை தடவி ஆசீர்வதிக்க முனைகின்றது. அந்த விசுவாசத்துடன் தான் 'கருணா அம்மான்" என்று அவருக்கு 'மேதகு" மரியாதை கொடுத்து புலம்புகின்றது.

ஒரு பாசிட்டு, கடைந்தெடுத்த ஒரு சமூக விரோதப் பொறுக்கி, இவருக்கு புலிகள் வழங்கிய முன்னைய 'அம்மான்" மதிப்பூடாகவே கூடி வக்கரிக்கின்றனர். இந்த கருணா என்ற பாசிட்டு, பேரினவாதிகளின் கூலிக் கும்பல், 'ஜனநாயக" சக்தியுடன் இணைத்துக்கொள்ள அழைக்கின்றனர். இவர்களின் 'ஜனநாயகம்" எப்படிப்பட்டது என்பது இதில் இருந்தே தெரிகின்றது. இந்த புலியெதிர்ப்பு தேனீக் கும்பல் 'ஜனநாயக" சக்தியுடன் இணைத்துக்கொள்ள வழங்கும் ஆலோசனை என்ன?

'ஆகவே கருணா இன்று கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சில உடனடிப் பிரச்சினைகள் இருக்கின்றன.

1.முதலாவது, சிறார்களை பலவந்தமாகப் பிடிப்பதை உடனடியாக நிறுத்துவது.
2.இரண்டாவது, கட்சிக்கு (பாசிச நடவடிக்கைக்கு இது நாம்) பணம் தேவை என்பதற்காக தமிழர்களைக் கடத்தி பணம் பறிப்பதை நிறுத்துவது.

3.மூன்றாவது, ரி.ஆர்.ஓ (வுசுழு) நபர்களைக் கடத்திய சம்பவத்தில் (இதைக் கருணா குழு செய்திருந்தால்) பிரதானமாக நடந்ததாக கூறப்படும் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் பற்றிய விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது." என்கின்றார். 'ஜனநாயக சக்திகளின் விமர்சனங்களை உள்வாங்குவது கருணா அணியினருக்கு நிட்சயம் பலம் சேர்ககும்" என்கின்றார்.

என்ன அரசியல்! இதை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். இதுவே இவர்களின் புலுடா. இது அம்பலமாவதை பின் போட்டு கணிசமாக குறைக்குமே ஓழிய, மக்கள் இயக்கமாகி விடாது. நன்கு தெரிந்த இந்த சம்பவங்கள், ஒரு அரசியலின் விளைவு. ஒரு பாசிச அரசியல் வழிமுறையில், இவை போன்றன உதிரியான சில்லறை விடையங்கள். ஏகாதிபத்தியத்துக்கும் அதன் எடுபிடிகளுக்கும் இவை பெரிய விடையங்கள். இதை நிறுத்துவதாக நடிப்பது, மோசடி செய்வது அனைத்தும் கடைந்தெடுத்த பாசிச வழிகாட்டலாகும்.

புலிகள் கூட இதே வழியை அடிக்கடி கையாண்டவர்கள். பேச்சுவார்த்தை, சிறுவர் விடுவிப்பு என்று பற்பல அரசியல் மோசடியைச் செய்தவர்கள். இவ்வாறே கருணாவையும் செய்யக் கோரும் ஆலோசனைகள் இவை. இவர்கள் கவனமாக திடட்மிட்டு தவிர்த்துக் கொள்வது, அவர்கள் கொண்டுள்ள பாசிச அரசியலை கேள்விக்குள்ளாக்குவதைத் தான். அதாவது மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியலுக்கு மாற்றான, மக்கள் விரோத அரசியலை ஆணையில் வைப்பதை இவர்கள் மறுப்பதில்லை. அது தான் இவர்களை ஒரு புள்ளியில் ஒன்றுபடுத்துகின்றது.

இந்த புலியெதிர்ப்பு எஸ்.மனோரஞ்சன் வகையறாக்கள், ஜனநாயகத்தின் பெயரில் பாலில் நஞ்சைக் கலந்து குழந்தைக்கு கொடுக்கும் இழிபிறவிகளாகவே ஒன்றுபட்டு நிற்கின்றனர். 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்." எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் என்பதையே இப்படி தெளிவுபடுத்துகின்றனர். இந்த கட்டுரையின் மொத்த சாரமும், இதற்குள் தான் புற்றெடுக்கின்றது.

கருணாவின் கையில் இருக்கும் ஆயுதம் தான் புலிகளின் அரசியலை தோற்கடிக்கும் என்பது கடைந்தெடுத்த கருணா கும்பலின் மோசடியுடன் கூடிய எடுபிடித்தனமாகும். புலிகளை மக்கள் எப்போதோ தோற்கடித்துவிட்டனர். அதில் கருணா கும்பலும், உங்களைப் போன்ற அரசியல் பினாமி பொறுக்கிகளும் சவாரி விடுகின்றனர்.

மக்கள் தான் புலியைத் தோற்கடித்தனரே ஒழிய, கருணா என்ற மற்றொரு பாசிட்டல்ல. கருணா என்ற பாசிட் புலிகளுடன் தொடர்ந்து இருந்து இருந்தாலும், புலியின் தோல்வி எப்போதோ நிகழ்ந்துவிட்டது. மக்கள் தான் அவர்களை தோற்கடித்தவர்கள். இந்த கருணா கிழக்கு மக்களின் நண்பன் அல்ல. புலியைப் போல், ஒரு மக்கள் விரோதி. கிழக்கு மக்களின் முதல் தரமான எதிரி. பேரினவாதத்துடன் சேர்ந்தியங்கும் ஒரு கூலிக் கும்பல். பேரினவாதத்தின் துணையில் ஒரு கூலிக் கும்பலாக அரசியல் செய்பவர். இப்படிப்பட்டவரை 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்," என்று கூறி, காதுக்கே துணிந்து பூவைக்கும் ஒரு மோசடி. இப்படி புலியெதிர்ப்பு சூழ்ச்சிகளால் சமூகத்தை காயடித்து மலடாக்குகின்றனர். இதை எந்த மக்கள் நலன் சார்ந்த ஒருவனாலும் செய்யமுடியாது.

சரி கருணா எடுபிடிகளே! எந்த வகையில்? எப்படி? மக்களை இந்த கருணா கும்பலை நேசிக்கின்றது.? உங்களால் அதை ஒருநாளும் எடுத்துக் காட்டமுடியாது. சரி மக்கள் கருணா கும்பலை எந்தக் காரணத்தில் எப்படி நேசிக்கின்றனர். எடுத்துக்காட்டுங்கள். அது உங்களால் ஒருநாளும் முடியாது. பேரினவாதத்தின் கூலிப்படையால், பாசிட்டுகளால் எப்படித் தான் மக்களை நேசிக்க முடியும்? மக்களை நேசிப்பதற்கு, இந்தக் கும்பல் கொண்டுள்ள அந்த மக்கள் அரசியலில் என்னதான் இருக்கின்றது?

சரி 'கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்கவல்லது." என்கின்றீர்களே, புலி அரசியலில் இருந்து கருணாவின் அரசியல் எந்த வகையில் வேறுபட்டது. ஒரு புள்ளியில் கூட வேறுபாட்டைக் காட்டமுடியாது. மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியாத இந்த கும்பலும், இதற்கு எடுபிடி வேலை செய்யும் உங்கள் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமானவை. உங்கள் 'ஜனநாயகம்" என்ன என்பதற்கு, விளக்கம் தரமுடியாத ஓட்டைச் சிரட்டைகள் தான். இது கருணா போன்ற பாசிசக் குண்டர்களின் பின்னால் நின்று, அதை வடிகட்டி தேடுவதும், விளக்குவதுமே உங்கள் 'ஜனநாயகம்". மக்கள் கருணாவின் பின் நிற்பதாக காண்பதுவும், கருணாவின் ஆயுதம் தான் புலிகளை தோற்கடித்தது, தோற்கடிக்கும் என்ற கூறுவதும் கடைந்தெடுத்த பாசிசமாகும். புலிகள் எல்லாவற்றையும் ஆயுதம் ஊடாக காண்பது போல், இந்த புலியெதிர்ப்பு எல்லாம் கருணாவின் ஆயுதம் மூலம் விளக்குவது நிகழ்கின்றது. மக்களே புலிகளை தோற்கடித்தனர் என்ற அரசியல் உண்மையை மறுப்பது இதன் சாரமாகும். மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர் என்ற அரசியல், கருணாவை நேரடியாகவே தூக்கியெறியும்.

இதை காணாது இழிந்து போன இந்தக் கூலிக் கும்பலால், நாய் வாலுக்கு மட்டை வைத்துக் கட்டி அதை ஒருநாளும் நிமிர்த்தமுடியாது. சுற்றிவளைத்து நிமிர்த்துவதாக குலைப்பதே இந்த புலியெதிர்ப்பு அரசியலின் பினாமித்தனமாகும். இந்த பாசிட்டுகள் புலியின் வாலாக, அதன் கோவணமாக இருப்பதுடன், எந்த விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் செய்தது கிடையாது. கருணா என்ற தனிமனிதன் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது சொந்த தனிப்பட்ட முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு புலிகளைப் பிளந்தவர். அதை மூடிமறைக்க பிரதேச ரீதியான முரண்பாட்டை காட்டிப் பிழைக்கும் ஒரு பொறுக்கி. இந்த பொறுக்கி அரசியலைக் கொண்டு, எதையும் மக்களுக்காக செய்யப் போவதில்லை.

முதலில் ஒரு பாசிச இயக்கத்தில் இருந்து உடைந்து வெளிவருபவர்கள் செய்து இருக்க வேணடியது என்ன?

1. கடந்த காலத்தை விமர்சன ரீதியாக அணுகுவது. அதாவது நாங்கள் என்ன செய்தோம்? அவை எப்படி மக்களுக்கு எதிராக இருந்தது? இதை நாங்கள் எப்படி களைய வேண்டும்? இவைகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்யவேண்டும் சாராம்சத்தில் இது விமர்சனம் சுயவிமர்சனம் கூட. இதை இந்தக் கும்பல் செய்தது கிடையாது. மாறாக அதை நியாயப்படுத்தி, அதே வழியில் தொடருகின்றது.

2. மக்கள் என்றால் என்ன? அதை நாங்கள் முன்னர் எப்படி பார்த்தோம், இப்போது எப்படி பார்க்கின்றோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

3. மக்களை நாங்கள் எப்படி அணுக வேண்டும்? எந்த வகையில் இணைந்து நிற்க வேண்டும்? இவைகளை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.

4. மக்களுக்கான அரசியல் என்ன? மக்களின் பிரச்சனையாக எவற்றை இனம் காண்கின்றோம்? அதை எப்படி நாம் நடைமுறைப்படுத்த உள்ளோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக முன்னைய அரசியலில் இருந்து எப்படி வேறுபடுகின்றோம் என்பதை, தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

5. மக்களின் எதிரிகள் யார் யார்? அவர்களே எமது எதிரி என்று கூறியிருக்க வேண்டும்

6. மக்களின் எதிரி புலிகள் மட்டுமல்ல. பேரினவாத அரசு என்பதை பிரகடனம் செய்து இருக்க வேண்டும். அந்தவகையில் எதிரிக்கு எதிராக மக்களுடன் இணைந்து நிற்கவேண்டும். இப்படி மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை, நடைமுறையை வெளிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இதைவிடுத்து புலிகளைப் போல் பாசிச சதிகார சூழச்சிகர அரசியல் எடுபிடிகளாக வாழ்வதே, கருணா கும்பலின் அரசியலாகிவிட்டது.

இப்படி மக்கள் விரோத பாசிச அரசியலை ஆணையில் வைத்து குலைக்கும் யாழ் மேலாதிக்க கிழக்கு கோவணம் நாற்றத்தால் நாறுகின்றது. தேனீ கட்டுரையாளர் செய்த அரசியல் மோசடி, இந்த கிழக்கு கோவணத்தை கழுவிக்கொடுப்பது தான். உண்மையில் கருணா கும்பலை பாதுகாக்க முனையும் ஒரு சூழ்ச்சி தான் இந்தக்கட்டுரை. அந்த வகையில்

1. கருணா கும்பல் பேரினவாத இராணுவத்துடன் சேர்ந்து ஒரு கூலிக் கும்பலாக இயங்குவதை விமர்சிக்கவில்லை.

2. அந்த கூலி பாசிசக் குண்டர்களின் மக்கள் விரோத அரசியலைக் கண்டிக்கவில்லை.

3. மக்களின் சமூக பொருளாதார அரசியலின எதிரியான கருணா கும்பலின், அரசியல் தளத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை.

4 .கருணா மற்றும் புலிகளுக்கு இடையில் எந்த வேறுபாடுமற்ற அரசியலை கண்டிப்பதில்லை

இப்படி ஒரு மூடு மந்திரத்தை கொண்டுதான், கருணா கும்பலை பின்பக்கத்தால் பாதுகாக்க முனைகின்றனர்.

கருணா என்ற தனிமனித விருப்பங்கள் அல்ல, கருணா கும்பலின் நடத்தைகள். அது, அது கொண்டுள்ள அரசியலின் விளைவாகும். கருணா குழுவுக்கு எஸ்.மனோரஞ்சன் விடுக்கும் அதே வேண்டுகோள், புலிக்கும் பொருந்திவிடுமல்லவா! எப்படி புலிக்குள் வைத்து கருணா நடத்தைகளை நியாயப்படுத்த முடியுமோ, அதேபோன்று புலிகளை பேரினவாத தளத்தில் வைத்து நியாயப்படுத்த முடியும். வெளிப்படையான இந்த உண்மையை, ஒரு தலைப்பட்சமாக கருணாவுக்கு மட்டும் சாதகமாக முன்வைப்பது, அவர்களின் அரசியல் நேர்மையை சந்திக்கு இழுக்கின்றது.

இந்த புலியெதிர்ப்பு தேனீயில் எஸ்.மனோரஞ்சன் புலுடா விடுவது, பின் சுயபுராணமாக ஒப்பாரி வைப்பதமாக புலம்புகின்றார். 'புலி எதிர்ப்புவாதமும் ஒரு பிழைப்பு வாதம் என்று ஒரு குற்றச்சாட்டுண்டு. அக்குற்றச்சாட்டு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பதும் எமக்குத் தெரியும். புலிகள் தவறு, ஆகவே மற்றெல்லாம் சரி, என நாம் வாதிடுவதும் அவற்றை நியாயப்படுத்தவதும் ஒரு காரணம். புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்கள் எமது அரசியலில் மக்களின் நலனை மறந்து போய் நாங்களும் இன்னொரு விதத்தில் ‘குட்டிப் புலி’ அரசியலையே செய்ய முனைவது அடுத்த காரணம்." இப்படிக் கூறியபடி "குட்டிப் புலி" அரசியலையே இந்த கட்டுரையிலும் செய்கின்றனர். இதை விட வேறு என்ன தான், உங்கள் கும்பலிடம் மாற்றாக அரசியல் ரீதியாக உண்டு. இதைத்தான் சுற்றி வளைத்து, இந்தக் கட்டுரையிலும் முன்வைக்கபட்டுள்ளது. இதைத் தானே கருணா கும்பலுக்குமான ஆலோசனையாக வைக்கின்றீர்கள்.

உண்மையில் கருணாவின் அரசியலுக்கு ஏற்ற மூடிதான் நீங்கள்.

அற்பர்களின், அற்பத்தனங்கள் தான் இவை. கேடுகெட்ட மனித விரோதத்தின் முழு முகங்களும் வெளிப்படுகின்றது. இப்படி பாய் விரிப்பதால் தான், உங்கள் விபச்சாரமே அடங்கிக்கிடக்கின்றது. இப்படி பாயை விரித்துவிட்டு, ஏறி அமர்ந்து விபச்சாரம் செய்யும் போது 'கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்." என்கின்றனர்.

அதே புலியெதிர்ப்பு, அதே சவடால், சொந்தமாக மக்களுக்காக எதையும் சிந்திக்க முடியாத மலட்டுத்தனம், விபச்சாரமாக ஒப்புப்பாடுகின்றது. முன்னுக்கு பின் முரணாக உளறுவதன் மூலம், ஏதோ கருணாவை விமர்சித்ததாக காட்டிக் கொண்டு, கருணாவின் வாலில் பிடித்து ஊருகின்றனர்.

ஏதோ தாங்கள் நேர்மையாக இருப்பதாக நடிக்கின்றனர். 'சில கேள்விகளும் எம் நோக்கி எழுப்பப்படுகிறது. கருணா எதற்காக அரசியல் செய்கிறார்? அவரது கட்சியின் எதிர்காலம் என்ன? நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்? இன்று ஏன் கட்டாயம் அதை ஆதரிக்க வேண்டும்? இவை சில முக்கிய கேள்விகளாகும்." என்கின்றா. இப்படி முக்கிமுனங்கிய விடையம், ஐயோ புலி என்று பாடுவதைத் தாண்டியதல்ல.

மக்களைப் பற்றி பேச வக்கற்று, அந்த மக்களுக்காக குரல்கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம், ஜனநாயக வாதிகள் என்று கூறிக்கொள்வது ஒரு சொல் மேலான மோசடிதான். வடக்கு மேலாதிக்கத்தின் கிழக்கு கோவணங்களே!

புலியெதிர்ப்பு கோவணங்களே

'கருணா எதற்காக அரசியல் செய்கின்றார்?" சொல்லுங்களேன்? என்ன அரசியல் செய்கின்றார்? கூற முடியுமா? ஏன் புலுடா?

'அவரது கட்சியின் எதிர்காலம் என்ன?" என்று கவலைப்படும் நீங்கள், மக்களின் எதிர்கால அரசியல் என்ன என்று, கவலைப்பட்டது உண்டா?

'நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்?" என்று புலியெதிர்ப்பில் புலம்பும் நீங்கள், புலிகளை தோற்கடித்த அந்த மக்களை நீங்கள் எப்போதாவது ஆதரித்ததுண்டா?

கருணாவை 'ஏன் கட்டாயம் ..ஆதரிக்க வேண்டும்?"என்ற உங்கள் புலியெதிர்ப்பில் குலைக்கும் நீங்கள், மக்கள் ஏன் எந்த வகையில் எப்படி ஆதரிக்க வேண்டும் என்று ஏன் சொல்ல முடிவதில்லை?

எல்லாம் புலியெதிர்ப்பு மூட்டைக்குள் நின்று கொறித்தபடி, மக்களை எட்டி உதைக்க முனைகின்றனர். இந்த மோசடிகள் அசாதாரணமானது. 'கருணாவினால் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையிலேயே பிரபாகரனின் புலிகள் இருக்கின்றனர். கிழக்கைச் சேர்ந்த பல மூத்த புலி உறுப்பினர்கள் ஒத்தாசையாக இருந்தும் வடக்கைச் சேர்ந்த புலிகளின் எந்தத் தளபதியாலும், கருணாவின் மொழியில் சொன்னால், பிரபாகரனின் தொந்தி வளர்ந்த தளபதிகளால் கிழக்கில் தற்போது நின்றுபிடிக்க முடியவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது கருணா புலிகளை விட்டு ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களுடன் பிரிந்தது மட்டுமன்றி, இன்று தனியாக ஒரு படையணியாக நின்று புலிகளுடன் மோதுவது. இரண்டாவது கிழக்கு மக்களின் கணிசமானளவு ஆதரவை வன்னிப் புலிகள் இழந்தது." எப்படிப்பட்ட ஒரு மோசடி. மக்களை எட்டி உதைக்கும் ஒரு மோசடி. இராணுவ ரீதியான யுத்த தளத்தில், கருணா கும்பல் புலிகளை தோற்கடிக்கவில்லை. மாறாக பேரினவாதம் தான் அதை செய்கின்றது. அதன் எடுபிடிகள் தான் கருணா கும்பல். ஐந்தாம் படையாகத் தான, இந்த கும்பல் செயல்படுகின்றது. இந்த கும்பலுக்கு என்று, பேரினவாத அரசியல் வழிக்கு வெளியில், தனியான சுயமான அரசியல் இராணுவ வழிகள் கிடையாது. இந்தியாவினதும், இலங்கை அரசினதும் வளர்ப்பு வேட்டை நாய்களாக, களத்தில் மக்களை புலிகளின் பெயரில் வேட்டையாடுகின்றது. அவ்வளவு தான் இதன் அரசியல்.

கிழக்கில் புலிகள் தோற்றார்கள் என்றால், இதற்கு காரணம் வெறும் கருணா அல்ல. மாறாக மக்கள் புலிகளை தோற்கடித்துவிட்டார்கள். இது கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் தான். புலிகள் மக்கள் ஆதரவை முழுமையாக இழந்துவிட்டனர். எல்லாவிதமான நம்பிக்கைகளையும், அசாதாரணமான கற்பனைகளும் கூட, சிதைந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றது. புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் என்றுமில்லாத வகையில் சிதைந்து மீளமுடியாத நிலையை அடைந்துவிட்டது. இதை பயன்படுத்தி பேரினவாத இராணுவம் கிழக்கில் புலிகளை ஒழித்துக்கட்டுகின்றது. அடுத்து வடக்கு நோக்கி அது நகரும்.

புலிகள் அன்றாடம் ஒவ்வொரு விடையத்திலும் தோற்கின்றனர். இதுவே மேலும் மேலும் மக்களுக்கு எதிராக மூர்க்கமாக பாய்கின்றது. இதைப் பயன்படுத்தி புலிகளை தோற்கடித்தவராக காட்டிக்கொண்டு, சில வில்லன்கள் கதாநாயக வேஷத்தில் பொறுக்கித்தனமான வகையில் வெளிப்படுகின்றனர். இந்த வகையிலான ஒரு புலுடாப் பேர்வழிதான் கருணா. அவன் கும்லும் அதற்கு காவடி எடுத்தாடும் அரோகராப் பேர்வழிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். புலிகளை தோற்டித்த அந்த கருணாவின் இராணுவ வெற்றிகள் எங்கே எப்போது நடந்தது? ஐயா புண்ணியவான்களெ, யாருக்கு புலுடா விடுகின்றீர்கள்.

உண்மை வேறுவிதமானது. மக்கள் தோற்கடிக்காத ஒன்றை, யாரும் தோற்கடிக்கமுடியாது. மக்கள் விரோதியான கருணா கும்பலும் இதை செய்யமுடியாது. மக்கள் புலிகளை தோற்கடித்த நிலையில், அந்த வெற்றிடத்தில் ஒட்டைச் சட்டியை ஒட்டுவது பொறுக்கித்தனம். இப்படிப்பட்ட பொறுக்கி அரசியல் பேர்வழிகளின் பின்னால் நக்கித்திரிவது எடுபிடி அரசியலாகின்றது.

இந்த அரசியல் எடுபிடித்தனம் கருணாவை விமர்சிப்பதாக காட்டிக்கொண்டு, நடத்தும் அரசியல் பித்தாலாட்டமானது, மோசடித்தனமானது. 'கருணாவை அழித்துவிட்டு, அவரினதும் அவரது கட்சியையும் அதன் அரசியலையும் அழித்துவிடும் நோக்கில் நடத்தப்படும் சேறடிப்புக்களை கருணா கவனத்திற் கொள்ள தேவையில்லை. அவற்றின் உள்நோக்கம் யாவரும் அறிந்ததே. அவை பலமுகங்களுடன் வரும், சில வேளை தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களின கருத்து என பல வேஷங்களோடும் வரும்." எப்படிப்பட்ட பாசிட்டுகள் இந்த 'ஜனநாயகவாதிகள்" என்பதை இதன் மூலம் கூறிக்கொள்கின்றனர். மனித விரோதிகளால் தான், இதை இப்படிக் கூற முடிகின்றது?. '..தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களின கருத்து.." என்று கோரினால், அதை மறு என்று கூறுகின்ற புலியெதிர்ப்பு பாசிச போக்கிரிகள் தான் இவர்கள். மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் எதுவும் புலிக்கு சார்பானது என்பது இவர்கள் சுற்றி வளைத்து கூறும் அரசியலாக உள்ளது. இவைகளே புலிகளின் அரசியலை அனாதையாக்கும் என்று, அன்று புலிகள் கூறியவர்கள். இன்று இது கருணா கும்பலின் பாசிச அரசியலை அனாதையாக்கும் என்று புலியெதிர்ப்பு கும்பல் கூறி அதை மறுக்கின்றது. அதே புலி அரசியல்? ஆனால் அதை நாகரிகமாக மூடிமறைத்து செய்யக் கோருவதே, இவர்களின் 'ஜனநாயகமாக" உள்ளது. உள்ளடகத்தில் பாசிசம் இப்படி மூடிமறைத்து நிற்கின்றது.

Monday, October 1, 2007

புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்...

பி.இரயாகரன்
15.10.2006

லங்கையில் அன்றாடம் என்னதான் நடைபெறுகின்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புலிகள் அன்றாடம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். தாமே வலிந்து தேர்ந்த தமது சொந்த அழிவில், அவர்களே அரசியல் அனாதையாக மிதக்கின்றனர். மார்க்சியவாதிகளைத் தவிர இந்த அரசியல் நிலையை யாரும் எதிர்வுகூறவில்லை. இதற்கு வெளியில் யாரும் இப்படி நடக்கும் என்று, கற்பனை பண்ணியது கூட கிடையாது. புலியின் சொந்த அழிவில் பிற்போக்கு புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலிக்கு நிகராகவே அதே அரசியலுடன் பவனிவருகின்றனர். இந்த புலியெதிர்ப்பு பிற்போக்கு கும்பல்கள், ஏகாதிபத்திய கால் தூசுகளை நக்குவதாலே வயிறுமுட்டி வீங்கிநிற்கின்றன. இந்தக் கும்பலுக்கு துணையான பேரினவாத சக்திகள், ஏதோ தம்மால் தான், தமது அரசியல் போராட்டத்தால் தான் புலியின் அழிவு நடப்பதாக காட்டமுனைகின்றனர். மொத்தத்தில் புலியின் அழிவு, புலியல்லாத தரப்பின் பிற்போக்கு அரசியலால் தான் நிகழ்வதாகவே காட்டுகின்ற போக்கு எங்கும் எதிலும் தலைகாட்டுகின்றது. ஆனால் புலியின் அழிவு புலியின் சொந்த பிற்போக்கு அரசியலால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதுவே உண்மை.


இந்த புலி அழிவு நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பல மாறுதலுக்கு உள்ளாகுகின்றது. புலியின் அழிவை வேகப்படுத்தக்கூடிய வகையில், திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை மறுபுறம் சண்டை. இதில் எந்தக் தேர்வும் புலியின் அழிவை மையப்படுத்தி நிற்கின்றது. இதற்கப்பால் மூச்சுவிடவே முடியாத வகையில் அன்றாடம் தொடர் கொலைகள். புலிகள் ஒன்று இரண்டு என்று தொடங்கியதை, ஏன் அதை நான்கு ஐந்தாகவே புலிகளின் பெயரில் நடத்துவோம் என்று பேரினவாதமும் சேர்ந்து நடத்துகின்றது. கடத்தல்கள் காணாமல் போதல் என்று மனித அவலம் தொடருகின்றது. எல்லாம் இனம் தெரியாத நபர்களின் கொலைகள், கடத்தல்கள் என்றாகி விட்டது. மக்கள்படை முதல் எல்லாளன படை வரை காணாமல் போய்விட்டது. ரயர் எரிப்பு முதல் தடி பொல்லுகளுடன் திரிந்த காடையர்களின் அடாவடித்தனங்கள் எல்லாம் நின்று போய்விட்டது. கலாச்சாரம் பேசி பொல்லுகளுடன் திருத்தித் திரிந்த அராஜகக் கும்பல், எங்கு போனார்கள் என்று தெரியாது போய்விட்டனர். இப்படி மொத்தத்தில் அரசியல் அனாதைகளான புலியின் செயல்பாடு, எங்கும் எதிலும் சாவடிக்கப்படுகின்ற நிலை தொடருகின்றது.


இந்த நிலையில் மனிதவுரிமை என்றால் என்னவென்று எதுவும் தெரியாத பிழைப்புவாத துரோகக் கும்பல்கள், இதை தீர்ப்பதாக கூறிக்கொண்டு பலர் உலகமெங்கும் அடிக்கடி விமானம் ஏறிப் பறக்கின்றனர். ஏகாதிபத்தியம் கூறுவதுதான், இவர்களின் மனிதவுரிமை பற்றிய எல்லைக்கோடு. ஏகாதிபத்திய அகராதியை புரட்டிக்கொண்டும், தலைமாட்டுக்குள் அதை செருகி வைத்தபடி, விமானங்களில் உயரப் பறக்கின்றனர். உலகின் பல பாகத்தில் தமது மக்கள் விரோத நிலையை தக்கவைக்க கூட்டங்கள், சதிகள், இரகசிய சூழ்ச்சித் திட்டங்கள், ஏகாதிபத்திய மக்கள் விரோத நாசகாரர்களுடன் சேர்ந்து சதியாலோசனைகள். இப்படி எங்கும், எல்லாவிதத்திலும் அமர்க்களமான சதிகள், காய் நகர்த்தல்கள், சுத்துமாத்துக்கள். அனைத்துமே புலிகளின் பெயரில் எப்படி மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையிடுவது, சூறையாடுவது, சுரண்டுவது என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நின்று விசுவாசமாக குலைக்கின்றனர். இதற்கு வெளியில் புலியெதிர்ப்பு பேசும் எந்த நாய்களும், சுயமாக குலைக்கவில்லை. ஏகாதிபத்திய காலை நக்கியபடி தான், விசுவாசமாகவே வாலையாட்டிக் கொண்டு குலைக்கின்றனர்.


அன்றாடம் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?


வழமையான நிலைமைக்கு தலைகீழாகவே இன்று நிலைமை காணப்படுகின்றது. புலிகளுக்கு பதில் பேரினவாத அரசே, கடந்த இரண்டு மாதமாக வலிந்த ஒருதலைப்பட்சமாக முன்னேறிய ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். இது கடந்தகால நிலைமைகள் எல்லாவற்றையும் விட, புதியதொரு நிலைமையாகும். வழமையாக புலிகள் தான் ஒருதலைபட்சமாக இப்படி செய்பவர்கள்.


ஆனால் புலிகளுக்கு எதிரான கடும் கண்டனங்கள் விமர்சனங்கள் போல் அல்லாது அரசின் இந்த தாக்குதல்கள் அங்கீகாரம் பெற்று நிற்பதும், மறைமுகமாக அவைகளை ஊக்கப்படுத்தி நிற்பதும் பொதுவான போக்காகவுள்ளது. புலிகள் தனிமைப்பட்ட நிலையில், இந்த நிலைமையைச் சொன்னாலே நம்ப மறுக்கின்ற நிலைமைக்குள், அவர்கள் எல்லாத் தளத்திலும் சீரழிந்து நம்பகத்தன்மையற்றவராக காணப்படுகின்றனர். உண்மையையும் பொய்யையும் திரித்து, அதை ஊடகவியல் விபச்சாரம் மூலம் விபச்சாரம் செய்வதன் மூலம், தம்மைத்தாம் அம்மணமாக்கி நிற்கின்றனர்.


பேரினவாத சிங்கள அரசு புலிக்கு எதிராக முன்னேறிய வலிந்த தாக்குதலை இன்று அதிகப்படுத்தியுள்ளது. இது அம்பலமாகாது, எதிர்மறையில் புலிகள் மீதே இது குற்றம் சாட்டுவதாக அமைந்துவிட்டது. இதற்கான முழுப் பொறுப்பும் புலிகளையே சாரும். இது நரி வருது நரி வருது என்ற கதை போல், உண்மையில் நரி வந்த போது அதை யாரும் நம்புவதில்லை. நரி துணிவாக அடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைiயை தான் இன்று புலிகள் சந்திக்கின்றனர்.


கடந்தகாலத்தில் எல்லா அமைதி முயற்சியையும் யுத்த முனைப்பு மூலம் சிதைப்பதிலும், எல்லாவிதமான குழப்பதையும் புலிகளே முன்முயற்சியெடுத்து நடத்தினர். ஆனால் அதை அரசின் மீது, ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டினர். இதை உலகம் ஏற்றுக்கொண்டது கிடையாது. புலிகளின் வால்களும், அதன் பின் தின்று கொழுக்கும் நக்கித் தின்னும் கும்பலும் மட்டுமே, அதை தமது பிழைப்புக்காக மட்டும் ஓப்புவித்தனர். ஆனால் அவர்களுக்கும் தெரியும் அதுவும் பொய்யென்று. உண்மையான விசுவாசத்துடனோ, உண்மையான கோட்பாட்டு அடிப்படையோ இன்றி வீம்புக்கே ஒருதலைபட்சமாக ஊளையிட்டனர்.


இப்படி புலிகளின் கடந்தகாலம் அம்பலமாகி நிற்கின்ற ஒரு நிலையில், வழமை போல் இம்முறையும் புலிகளே ஒருதலைப்பட்சமாக வலிந்து தாக்கத் தொடங்கினார். அரசியல் பேச்சுவார்த்தையில் தோற்ற புலிகள், அதை ஒருதலைப்பட்சமான வலிந்த இராணுவ அரங்கில் வெல்ல நினைத்தனர். கடந்த புலிகளின் 'மாவீரர்"தின உரையைத் தொடர்ந்து, புலிகள் ஒரு தலைப்பட்சமாக இராணுவத்தை தாக்கத் தொடங்கினர். மக்கள் படை என்ற பெயரிலும், மக்களே அதைச் செய்கின்றனர் என்றும் கூறினர். புலிகள் கூற்றை உலகம் மீண்டும் நம்பியது கிடையாது. ஏன் அவர்களே அதை நம்பியது கிடையாது. உலகில் யார் நம்பினார்கள் என்றால் ஒருவருமில்லை.


இதன் விளைவு என்ன? மாவீரர் தின உரையின் பின்பாக அண்ணளவாக இராணுவத் தரப்பில் 1000 பேர் கொலலப்பட்டனர். இதேயளவு எண்ணிக்கையில் புலிகளும் கொல்லப்பட்டனர். இதே அளவுக்கு மக்களின் அவலமும், காணாமல் போதல் என்று மற்றொரு பக்க அழிவும் நிகழ்ந்த வண்ணமுள்ளது. மாவீரர்தின உரையும், அதைத் தொடர்ந்து அதிகளவில் இராணுவம் இறந்தனர். ஆனால் இன்று அதிகளவில் புலிகள் இறக்கின்ற எதிர்மறை போக்கு, நிலமையை தலைகீழாக்கியது. இரண்டு இராணுவங்கள் என்ற வகையில், ஒன்று மற்றொன்றின் மீதான தாக்குதலை நடத்துவது அல்லது அழிவுகளை ஏற்படுத்து என்பது ஒருதலைப்பட்சமாக ஒரு பகுதியினருக்கு சொந்தமானதாக மட்டும் அமையாது. ஆனால் பொதுவான மொத்த அரசியல் இராணுவ நோக்கில் புலிகளின் தோல்வி என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.


புலிகளின் அரசியல் தோல்வியைத் தொடர்ந்து இராணுவ தோல்விகள், இதில் இருந்து மீள மீண்டும் பேச்சுவார்த்தையை நோக்கி ஒடுகின்றனர். எங்கே என்று தெரியாத புள்ளியை நோக்கி அங்குமிங்குமாக அலைபாய்கின்றனர். என்னசெய்வது என்று தெரியாது, நோக்கே அற்ற நோக்கை கனவாக விதைக்கின்றனர். பிரச்சாரத்துக்காக சிலதை செய்து, அதை வெற்றியாக காட்டுகின்றனர். (உதாரணத்துக்கு 11.10.2006 முகமாலை தாக்குதல். இது புலிகளின் இராணுவ ரீதியான தொடாச்சியான தோல்வியையும், அதன் அரசியல் உள்ளடகத்தையும் மறுதலித்துவிடாது.)


மாவீரர் தின உரையைத் தொடர்ந்து ஒரு வலிந்த தாக்குதலைத் தொடுத்தவர்கள், எல்லை மோதலை வலிந்து திணித்தனர். மாவிலாறு அணைக்கட்டை மூடியதும், பின்னால் முதூர் மீதான தாக்குதல் மூலம் வலிந்து ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்தினர். இந்தப் பின்னணியைத் தான் பேரினவாதம் பயன்படுத்திக்கொண்டு, புலிகளை அழிக்கத் தொடங்கினர். புலிகள் வலிந்து தாக்குகின்றார்கள் என்று கூறிக் கொண்டு, தானே தான் விரும்பிய இடத்தில் தாக்குகின்ற நிலைக்கு முன்னேறியது. புலிகளின் வழமையான செயல் வடிவத்தை தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். வலிந்து புலிகளின் எல்லைகளை தாக்கி, புலிப் பகுதிகளை பிடிக்கின்றனர் அல்லது பெருமளவில் புலிகளை அழிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தக் கூடிய உளவியல் பலத்தை புலிகள் இழந்துவிட்ட நிலையில், திடீர் அதிரடித் தாக்குதல் மூலம் மிதக்க முனைகின்றனர்.


இந்த நிலையில் புலிகளினுள் சல்லரித்துப் போன உணர்வுகள், போராட்டத்தின் நின்று பிடிக்கும் அனைத்து மனவாற்றலையும் இழந்து நிற்கின்றனர். நான் முன்பு குறிப்பிட்டது போல் ('அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?") உளவியல் ரீதியாக, போராடும் தார்மிக பலத்தை புலி உறுப்பினர்கள் இழந்து இழிந்து விட்டனர்.


இவைகள் புலிகளின் தொடர்ச்சியான இராணுவ தோல்விகளுக்கு வழிகாட்டுகின்றது. பெருமளவில் விட்டில் ப+ச்சியாக பலியாகின்றனர். வடக்குகிழக்கின் இராணுவ எல்லைகளில் புலிகளின் தோல்விகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. இதிலிருந்து மீள்வதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு சில வெற்றிகள் எப்போதும் மாற்று அல்ல. தோல்வி என்பது புலி உறுப்பினர்களின் மக்கள் விரோத உளவியலில், அவர்களின் இந்த இருப்பில் இருந்தே தோன்றுகின்றது.


இந்த தோல்வி மனப்பான்மையை பேரினவாதம் பயன்படுத்தி, வலிந்த ஒரு முன்னேறிய ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்துகின்றனர். இன்றைய 90 சதவீதமான தாக்குதல்களை பேரினவாதமே நடத்துகின்றது. மணலாறு சம்பவத்துக்கு முன்னம் 90 சதவீதமான தாக்குதலை புலிகளே நடாத்தினர். ஆனால் இன்று புலிகள் வலிந்து தாக்குவதாக கூறிக்கொண்டு, இதை இராணுவம் செய்கின்றனர். புலிகள் தான் இன்றும் வலிந்து தாக்குவதாகவும், இதை உண்மையானதாகவும் உலகுக்கு காட்டிவிடுகின்றனர். புலிகளின் கடந்த செயல்பாடுகளும், அதை மறுத்துவந்த ஒருதலைப்பட்சமான பொய், இன்று அதுவே அவர்களுக்கு எதிராகவே மாறி நிற்கின்றது.


அரசியல் தோவ்வியும் அதைத் தொடர்ந்த இராணுவ தோல்வியும், புலிகளை மீண்டும் பேச்சவார்த்தைக்கு செல்ல வைக்கின்றது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வதன் மூலம், இதில் இருந்து ஏதோ ஒருவகையில் தப்பிப்பிழைக்க முடியும் என்று நம்புகின்றனர். இதனால் பேச்சுவார்த்தையை நோக்கி வலிந்து ஒடுகின்றனர். பேரினவாதம் இதை மேலும் நுட்பமாகவே கையாள முனைகின்றது. ஒருபுறம் பேச்சுவார்த்தை மறுபுறம் தாக்குதல் என்ற உத்தியை பேரினவாதம் கையாளுகின்றது. இதையே முன்பு புலிகள் கையாண்டனர். இன்று இதை அரசு கையாளுகின்றது.


குறிப்பாக பேரினவாதிகளின் உடனடி நோக்கம் கிழக்கை முழுமையாக புலிகளிடமிருந்து விடுவிப்பதே. இதை தடுக்கத் தான் புலிகள் வடக்கில் வலிந்து மோத முனைகின்றனர். புலிகள் கிழக்கில் நிலைகொள்ள பேச முனைகின்றனர். கிழக்கை மீட்கும் பேரினவாத முயற்சி முழுமையாக உடனடியாக சாத்திமில்லை என்றால், புலிகளை அழித்தொழித்து ஒரு பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லும் வகையில் தாக்குதலை நடத்துகின்றனர். இதன் மூலம் கருணா தரப்பை புலிகளின் பிரதேசத்தில் ஆழ ஊடுருவி, புலிகளின் செயல்பாட்டை முடக்கிவிட முனைகின்றது. இதில் படிப்படியாக பேரினவாதம் வெற்றி பெற்று வருகின்றது.


கிழக்கில் புலிகளின் பலத்தை சிதைக்கும் வகையில், புலிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் பயன்படுத்தியது. தமிழ் மக்களின் வாழ்விடங்களை அழித்தொழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதியாக்கி, அவர்களை தமிழ் மக்கள் வாழும் மற்றொரு செறிந்த பிரதேசத்துக்குள் அனாதைகளாக தள்ளிவிடுவதை செய்கின்றது. இதன் மூலம் மூன்று இனவாத இலாபத்தை பேரினவாதம் அறுவடை செய்கின்றது.


1. குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் இருந்து நிரந்தரமாகவே தமிழ் மக்களின் குடியிருப்பை அகற்றி, அதை துப்பரவு செய்கின்றது. அதாவது அப் பிரதேசத்தை தமிழ் மக்களின் வாழ்விடம் அற்ற ஒரு சூனிய பிரதேசமாக்கி அதை பேரினவாதம் திட்டமிட்டு அபகரிக்கின்றது.


2. இரண்டாவதாக இதன் மூலம் புலிகளின் இருப்புக்கான சமூக கட்டுமானத்தை இல்லாததாக்கி, அப்பிரதேசத்தை புலியிடமிருந்து விடுவிக்கின்றது.


3. அகதியாகிய மக்கள் நாளை மீளவும் குடியேறாத வண்ணம், அவ் அகதிகளை பராமரிப்பதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளது. மக்களைப் பஞ்சை பரதேசிகளாக வீதி வீதியாக அலையவிட்டு, ஒரு சமூகமாக கூடி வாழும் சமூக அடிப்படையையே திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. அகதியாகக் கூட கூடி ஒரு சமூகமாக வாழக் கூடாது என்ற நாசிய உத்தி கையாளப்படுகின்றது. இதன் மூலம் அவ் அகதிகள் எதிர்காலத்தில் சொந்த மண்ணுக்கு மீளத் திரும்புவதை இல்லாததாக்குகின்றது.


அனைத்தும் புலிகளின் வக்கிரமான இராணுவ அரசியல் வக்கிரத்தின் மூலம் பேரினவாதம் வெற்றிகரமாக இலாபம் சாதிக்கின்றது. அகதியாகும் மக்களுக்கு கோடிகோடியாக சேர்த்த பணத்திலிருந்து ஒரு துளிதன்னும் போய் சேர்ந்துவிடுவதில்லை. அதுவும் கிழக்கு என்றால், நாம் அதைச் சொல்லத் தேவையில்லை. தமிழ் மக்கள் தமது சமூக இருப்பையே இழந்து, நாயிலும் கீழாக கேவலமாக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். இதைத் தடுத்து நிறுத்தும் உணர்வு எம் சமூகத்திடம் கிடையவே கிடையாது. இதுவே கிழக்கின் இன்றைய நிலை.


பேரினவாதத்துடன் கூடிக்குலாவி விபச்சாரம் செய்யும் கருணா என்ற பாசிச புலிக் கும்பல்


இந்த நிலையில் தனிமனித முரண்பாட்டுக்குள், தமது மக்கள் விரோத அரசியலுக்குள் புலிகள், கருணா என இரண்டு தரப்பும், பாய் விரித்து விபச்சாரம் செய்கின்றனர். இரண்டுக்கும் அதன் செயல்பாட்டுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. மக்களை இழிவாக கருதும் இரு கும்பலும், மக்களை தமது சொந்த தேவைக்கு பயன்படுத்தும் மக்கள் விரோத ஓட்டுண்ணிகள் தான்.


இவை எல்லாமே வெட்டவெளிச்சமாகவே அம்பலமாகின்றது. திடீர் ஜனநாயகம் பேசிய கருணா, புலிகள் போன்ற மற்றொரு புலிக்கு நிகரான கொலைகாரக் கும்பல்தான். பேரினவாதத்தின் கைக்கூலிக் கும்பலாக, இந்தியாவின் எடுபிடிகளாகி அவர்களால் வளர்க்கப்படுகின்றனர். இதை அவர்களே தமது சொந்த உளறல்கள் மூலம் அம்பலமாக்கிவிடுகின்றனர். அண்மைய வாகரை மீதான தாக்குதலில் இரண்டு தரப்பும், நாம் தான் தாக்கினோம் என்று ஒரே பிணத்தை காட்டி இருவரும் தாக்குதலை உரிமை கோரிய போதும், அவர்கள் மீளவும் ஒருமுறை அம்பலமாகினார்கள். இரண்டு தரப்பும் தாங்களே அனைத்தும் என்ற போது, கடந்தகாலத்தில் நாம் சொன்னவை மீளவும் உறுதியாகியுள்ளது.


கிழக்கு மக்கள் என்று போலியாக நீலிக்கண்ணீர் வடித்து புலம்பும் புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்களும் சரி, கொலைகளுக்கு எதிராக தாம் குரல் கொடுப்பதாக கூறும் புலியெதிர்ப்புக் கும்பலும் சரி, கருணாவை தலைக்கு மேல் உயர்த்தி கிழக்கின் விடிவெள்ளியாக காட்டியவர்கள் எல்லோரும், கமுக்கமாகவே பதுங்கிக் கிடக்கின்றனர். நாங்கள் அன்று இந்த பாசிச மக்கள் விரோத கோமாளியை பற்றிச் சொன்னபோது, திமிரெடுத்தவர்கள், இன்று தமது பாசிச கையை பிசைந்தபடியே அதை ஒழிக்கின்றனர்.


புலிகளைப் போல் கிழக்கின் விடிவெள்ளியாக தம்மைத் தாம் மகுடம் சூட்டிய கருணா தரப்பும், அப்பட்டமான பாசிச கொலைக்காரக் கும்பல்தான். புலிகளைப் போல் சிறுவர்களை கடத்துவது முதல், கொலைகைள் செய்வது வரை, ஏன் மக்கள் வாழ்வை சூறையாடுவது வரை கைதேர்ந்த புலி வாரிசுகள் தான். கிழக்கில் நடக்கும் உதிரிக்கொலைகள் முதல் கொழும்பில் நடக்கும் கடத்தல்கள் கொலைகள் என எல்லாமே, கருணாதரப்பின் பங்கு எத்தனை சதவீதம் என்பதில் மட்டும் தான், அவர்கள் புலிகளுடன் முரண்படலாம். ஆனால் தொழில் ரீதியாக, அரசியல் ரீதியாக இருவருமே பாசிச மாபியாக் கும்பல்கள் தான்.


கிழக்கு மக்களுக்கு அவர்கள் காட்டும் விடிவு தான் என்ன? அவர்களின் வாழ்வுக்கு என்ன தீர்வைத்தான் வைக்கின்றனர். புலியைப் போன்று அதே அரசியல் மாபியாக் கும்பல் வாழ்வுக்கும், வழிக்கும் அப்பால் எதுவுமில்லை. இதை அவர்கள் அன்றாடம் நிறுவி வருகின்றனர். புலிகளை விட மேலதிக தகுதியாக, இலங்கை அரசின் கைக்கூலி கொலைகாரக் கும்பல் தான் தாங்கள் என்பதையும் நிறுவிவிட்டனர். இவர்களுக்கு ஓளிவட்டம் காட்டிய ரீ.பீ.சீ நரிக் கும்பல் முதல், புலியெதிர்ப்பு நாய்கள் வரை இதற்கு முழுப்பொறுப்பாகும். புலிக்கு மாற்று கருணா தரப்பு என்று எத்தனை ஆய்வுகள், அறிக்கைகள், கொள்கை விளக்கங்கள். அந்த கொலைகார நபர்களை முன்னிலைப்படுத்தி பேட்டிகளை ஒளிபரப்பியவர்கள், வெளியிட்டவர்கள், இந்த புலியெதிர்ப்பு பாசிச கும்பல்தான். இப்படி கேடுகெட்ட நாய்களாக குலைத்தவர்களின நாய் வேஷம் அம்பலமாகும் போது, வாலை சுருட்டி கமுக்கமாக குண்டிக்குள் செருகியபடி நரியாக ஊளையிடுகின்றனர்.


இப்படி கொலைகளும், கடத்தலும், கொள்ளையுமாக, ஒரு கூலிக் கும்பலாக இழிந்த மட்டக்களப்பு கருணா மைந்தர்கள், கிழக்குக்கு எப்படி எதை விடிவாக காட்டுவார்கள். புலிகளில் இருந்து எந்தவிதத்தில் எப்படி வேறுபடுகின்றனர். தம்மளவில் கூட வேறுபாடு எதையும் கொண்டிருக்கவில்லை. இதை நாங்கள் கடந்த காலத்தில் தெளிவாக கூறியவர்கள். இப்படி பல அரசியல் உண்மைகள் ஜனரஞ்சகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதவாழ்வு சார்ந்த உண்மை, அனத்தையும் நிர்வாணமாக்கிவிடுகின்றது. ஊடகவியலை புலிகளும், புலியெதிர்ப்புக் கும்பலும் கைப்பற்றி வைத்துக் கொண்டு நடத்துகின்ற ஊடக வக்கிரத்தில், தமது பாசிச மக்கள் விரோத உண்மையை மூடிமறைக்கலாம். ஆனால் வரலாறு அப்படி அல்ல! உண்மை நடைமுறை சார்ந்த எல்லா பொய்களையும் அம்பலப்படுத்திவிடுகின்றது.


புலிகள் அல்லாத மக்கள் விரோத மாற்றுக் குழுக்கள் மீதான ஏகாதிபத்திய திடீர் கருசனைகள்


இந்த நிலையில் மக்கள் விரோத பாசிச ஜனநாயகவாதிகள் மீதான ஏகாதிபத்திய அக்கறை அதிகரித்துள்ளது. இந்தியா இலங்கை அரசில் கைக்கூலிகளை தமிழ் மக்களின் மாற்றுக் கருத்தாக காட்டுகின்றதும், அவர்களுக்கு மகுடம் சூட்டுகின்றதுமான போக்கு அதிகரிக்கின்றது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள் என்று புலிகள் கூற, மறுபக்கத்தில் மாற்றுக்கருத்தின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று இந்த கைக்கூலிக் கும்பல் ஓலமிடுகின்றது. புலியெதிர்ப்புக் கும்பல் இதன் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஓடுகின்றது.


இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு கும்பலை தமது கைக்கூலிக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் சதி ஆலோசனைகளை பேச்சுவார்த்தையின் பெயரில் நடத்துகின்றனர். இந்த வகையில் பல சந்திப்புகள், அழைப்புகளையும், சர்வதேச கைக்கூலி விருதுகளையும் வழங்குகின்றனர். புலிகள் மீதான அழித்தொழிப்பை செய்கின்ற நிலை உருவாகும் பட்சத்தில், மாற்று புலியெதிர்ப்பு எடுபிடிகள் தயாராகவே உள்ளனர். அது டக்கிளஸ் தேவானந்தாவாகவும் இருக்கலாம், ஆனந்தசங்கரியாகவும் இருக்கலாம், கருணாவாகவும் இருக்கலாம், வரதராஜப்பெருமாளாகவும் இருக்கலாம் அல்லது ரீ.பீ.சீ கும்பலாகவும் இருக்கலாம். எல்லோரும் தயாராகவே பையித்தியம் பிடித்த நிலையில் விசர் நாய்கள் போல், நாக்கைத் தொங்கவிட்டபடி அலைகின்றனர். அந்த வகையில் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை தொடர்ச்சியாக பெரும் தொகை செலவில் கையாளுகின்றனர். அவர்களை தமது தீவிரமான விசுவாசமான கைக்கூலியாக மாற்றுகின்ற அரசியல் தயாரிப்புக்குள் உள்ளகப்படுகின்றனர்.


இதை ஊக்கப்படுத்திய பணமுடிப்புகள் முதல் பலவகையான பொருளாதார இராணுவ உதவிகள் இக் குழுக்களுக்கு வாரி வழங்கப்படுகின்றது. புலிகளை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அதையும் செய்தபடி, மறுபக்க சீரழிவையும் புகுத்துகின்றனர். அவர் அவர் சொந்த வர்க்க அரசியலைப் பயன்படுத்தி, இந்த சீரழிவுக்கு ஏற்ற வகையில் காய் நகர்த்துவது துல்லியமாக இன்று அரங்கேறுகின்றது. சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைவரையும், புலியெதிர்ப்பில் பண்படுத்தி அதை ஊக்கப்படுத்துகின்றனர்.


இப்படி சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைத்து அரசியலும் துரோகத்தனமானது. அதை மக்களுக்கு எதிராக முன்னெடுப்பவர்கள் அனைவரும், மக்களின் துரோகிகள் தான். இதற்கு மாற்று வழிகளை இந்த புலியெதிர்ப்பு பாசிச கைக்கூலிக் கும்பல் தரமுடியாது. புலியைச் சொல்லி ஒப்பாரி வைப்பதே, இவர்களின் பாசிச புலியெதிர்ப்பு அரசியலாகும்.


இம்மாதிரியான மக்கள் விரோத துரோகிகளையும், கைக்கூலிகளையும் ஒருங்கிணைத்த ஒரு புலியெதிர்ப்பு செயல்பாட்டை நோக்கி நகர்த்துவதில் ஏகாதிபத்தியம் முனைப்பாக உள்ளது. இதற்கான முன்முயற்சிக்கு இந்தியா தலைமை தாங்குகின்றது. புலியை ஒழிக்க இலங்கையின் பிரதான இரு பேரினவாத கட்சிகளை இணைத்தது போல், புலியெதிர்ப்புக் தமிழ் கும்பல்களை ஏகாதிபத்திய கைக் கூலி அரசியல் வரையறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இதற்கு நேரெதிராக புலிகள் சாரைப் பாம்பினைப் போல் அடிக்க அடிக்க வலுவிழந்து துடித்தபடி ஊர்ந்து தப்பிவிட முனைகின்றது.


பேரினவாதிகளுக்கு இடையிலான பாசிசக் கூட்டு


புலியழிப்பில் முகிழ்ந்த இந்த பாசிக் கூட்டு, அவர்கள் தாமாக தேர்ந்து செய்து கொள்ளப்பட்டவையல்ல. இதற்கு ஏகாதிபத்தியம் துணை நிற்க, இந்தியா முன்னின்று இதை உருவாக்கியது. இதன் அரசியல் மூலம் புலிஅழிப்பும், புலியெதிர்ப்புமாகும். இந்த அரசியல் போக்கு பலமாகி வருகின்றது. இதற்கு பின்னணியில் ஏகாதிபத்திய அனுசரணையும், ஆலோசனையும், ஊக்கப்படுத்தலும், பலமான வழிகாட்டலும் வழங்கப்படுகின்றது.


புலி அழிப்பு, புலியெதிர்ப்பு பலமான ஸ்தாபன வடிவமும், கோட்பாட்டு அடிப்படையையும் பெற்று வரும் நிலையில், புலிகள் தரப்பு பலவீனமாகி வருகின்றது. புலிகள் என்றுமில்லாத அளவில் அம்பலமாகி வருகின்றனர். தார்மிக ஆதரவுகளை இழந்து வருகின்றனர். தூசணம் மட்டும் பேசக் கூடிய ஒரு லும்பன் கும்பலின் ஆதரவுடன், பிழைப்புவாத பொறுக்கிகளின் அனுசரணையுடன், மக்களின் உழைப்பை தட்டிப்பறித்து வாழ்கின்ற சமூக விரோதிகளின் துணையுடன் தங்கி வாழும் ஒரு மாபியாக் குழுவாகவே புலிகள் மாறிவிட்டனர்.


இந்த நிலையில் பேரினவாத சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ய+.என்.பிக்கும் இடையிலான கூட்டு சதி முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. பேரினவாத அரசு இயந்திரமும், அதற்கு துணையான பேரினவாத பிரதான எதிர்கட்சியும் ஒன்றிணைந்து, தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களின் தலைவிதியை நசுக்கி ஏகாதிபத்தியத்துக்கு மேலும் சேவையாற்ற சங்கற்பம் பூண்டு நிற்கின்றனர்.


புலிகள் மீது என்றுமில்லாத ஒருமித்த தாக்குதலையும், அரசியல் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. புலிகளின் பாசிச மாபியாத்தனத்தின் மீது இந்த பாசிச பேரினவாத கூட்டணி செழிக்கவுள்ளது. தமிழ் மக்களுக்கு என்று தாம் விரும்பும் ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலம், புலியை தனிமைப்படுத்தும் உத்தியை வேகமாக முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ஆதரவை முழுமையாக பெற்றுவிடவும், புலியை மேலும் அரசியல் ரீதியாக பிளந்தும், புலியல்லாத மற்றொரு குழு மூலம் தீர்வை அமுல்படுத்தி, புலியை சின்னாபின்னமாக்கி அழிக்கும் உத்தி நடைமுறைக்கு வரவுள்ளது. இதை நோக்கி இந்தக் கூட்டு முயற்சி அமைந்துள்ளது. புலிகளை அழித்தொழித்தலையே தனது வேலைத் திட்டமாக கொண்டு, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதையே உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களின் தேசிய கோரிக்கை, அதன் உள்ளார்ந்த சாராம்சத்தை இல்லாதொழிக்கும் புலிகளின் பாசிச மாபியாத்தனத்துக்கு நிகராகவே, இந்தக் கூட்டும் நாட்டை ஏகாதிபத்தியத்திடமும் இந்தியாவிடமும் மறுகாலனியாக்கும் முயற்சியில் முக்கி முனைகின்றது. இந்த வகையில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ள மறுகாலனிய அரசியல், தமிழ்மக்கள் மீது தாம் விரும்பிய ஒரு இனவாத தீர்வை திணிப்பதாகும். இதன் மூலம் ஏகாதிபத்திய ஆதரவுடன், தமிழ் மக்களின் உரிமையை புலிகளின் பாசிச மாபியாத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்குவதே, இவர்களின் உள்ளாhந்த வேலைத்திட்டமாகவுள்ளது.


நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடல்


நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடலே, அமைதி சமாதானத்தின் மற்றொரு தடைக்கல்லாகியுள்ளது. இது மக்களுக்கு எதிரானதாக, மக்களின் அவலத்தை கோருவதாக அமைந்துள்ளது. சரி நோர்வேக்கு சமாதானத்தில் என்ன தான் அக்கறை?


உண்மையின் உண்மையான அக்கறை வடகிழக்கின் வளங்கள் மீதானதே. ஓப்பந்தம் கையெழுத்தானவுடன் நான் எழுதிய கட்டுரையில், இதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருந்தேன். மன்னார் கடல் படுக்கையில் உள்ள எண்ணெய், புத்தளம் 25000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கைக்கு நோர்வே 40 கோடி ரூபாவை முதலிட்டது. இப்படி நோர்வே இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தான், சமாதான நாடகத்தை இலங்கையில் அரங்கேற்றியது. மற்றும் வள்ளம் கட்டுதல், கடல் சார்ந்த நோர்வே கழிவுகளை வடக்கில் கொண்டு வந்து கொட்டுதல், மீன்பிடி, உல்லாசத்துறை என்று மிகப்பெரிய கனவுடன் நோர்வே பாசிச ஆட்டம் போட்டது.


இப்படி வடக்கிழக்கைச் சுரண்ட, வடகிழக்கில் அதிகாரத்தை தக்கவைக்க முனையும் புலிகளுடன் ஊடல் செய்யத் தொடங்கினர். ஏகாதிபத்திய சதி மரபுக்கு இணங்க நோர்வே செயற்பட்டது. பணத்தைக் கொடுத்தும், ஆசைகாட்டியும் புலிகளை சிதைத்த அதே நேரத்தில், இணக்கமான ஒரு ஏகாதிபத்திய பாசிச அக்கறையுடன் ஊடல் செய்து, வடகிழக்கை தனது சுரண்டலுக்கு சாதகமான ஒரு புனித ப+மியாக்க முனைந்தனர். இக்காலத்தில் வடகிழக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பெருமளவு நிதியை வாரிவழங்கினர்.


நோர்வேயின் சமாதான முயற்சி இலங்கையையும், வடக்குகிழக்கில் அதிகமாக சுரண்டுவதையும் அடிப்படையாக கொண்டது. இது உண்மையான சமாதானத்துக்கு பதில், நேர்மையற்ற உள்நோக்கம் கொண்ட சமாதான முயற்சியாக மாறியது. இதற்காக நோர்வே பிரதிநிதிகளும், சமாதான நடிகர்களும், அவர்கள் எடுபிடிகளும் அங்குமிங்குமாக பறந்து திரிந்த விமானச் செலவு மட்டும் பல நூறு கோடி பெறுமதியானது. உள்நோக்கம் கொண்ட சமாதான நடிகர்களின் நாடகங்கள், புலிகளுடன் இணக்கமான ஒரு பாசிச சமரசத்தை ஏற்படுத்தவே முனைந்தது. புலிகளின் துணையுடன் வடகிழக்கை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டு, எல்லாவிதமான மனித உரிமை மீறலுக்கும் செங்கம்பளம் விரித்தனர்.


புலிகளுக்கு அதிகளவிலான சலுகைகள், இலஞ்சங்கள் வழங்கியதுடன், மனித உரிமை மீறலுக்கு ஏற்ற ஓளியைப் பாய்ச்சினர். புலிகள் நோர்வேயின் துணையுடன் தொடர்ச்சியாக பெருமளவில் மனித உரிமை மீறலை செய்ததுடன் அதற்கு நோர்வேயின் வழித்துணையையும் பெற்றுக்கொண்டனர். புலிகளின் மனித உரிமை மீறலை திரித்து, அதை மூன்றாவது தரப்பே செய்வதாக வலிந்து கூறினர். இப்படி ஆயிரக்கணக்கான மனித உரிமை மீறலுக்கு, நோர்வே புலிகளுக்கு துணை நின்றனர். அமைதி சமாதான காலத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவர் கொல்லப்பட்டனர்.


இப்படியான படுகொலைகள் முதல் எத்தனையோ சம்பவங்கள் மீது கருத்து சொல்ல மறுத்தனர். நோர்வேயும் கண்காணிப்புக் குழுவும் சேர்ந்து நடத்திய அப்பட்டான மனித உரிமை மீறல்கள் தான் இவை. அதற்கான முழுப்பொறுப்பும் அவர்களைச் சாரும். தங்கள் கடமையையே செய்ய மறுத்த இவர்கள், எப்போதும் கருத்துக் கூறும் போது இரண்டு பக்கத்தின் இரண்டு சம்பவத்தையும் சமப்படுத்தி, இரண்டையும் ஒன்றாக குற்றம் சாட்டும் (புலி) யுத்தியைக் கையாண்டனர். இப்படி மனித உரிமை மீறலுக்கு துணைபோனார்கள். சம்பவங்கள் மீது காலம் கடந்த நிலையில், அவை நீர்ந்துபோன ஒரு சூழலில், தமது சொந்த இழுபறி ஊடாக மக்களின் காதுகளில் ப+வைப்பதையே நோர்வே திட்டமிட்டு செய்தது, செய்து வருகின்றது. இப்படி மனித உரிமை மீறல்கள் அங்கீகாரம் பெறுகின்றது.


உண்மையில் நோர்வே வடக்கு கிழக்கில் புலிகளுடன் சேர்ந்து, சுரண்டலுக்கு ஒரு சாதகமான சூழலுக்காக மொத்த மக்களின் அவல வாழ்வின் மீது நோர்வே மிதக்கின்றது. இந்த நிலையில் நோர்வேயின் போக்கை அம்பலப்படுத்த முடியாத நிலையில், பேரினவாத அரசும் கூட மனிதவுரிமை மீறல் ஊடாக மிதந்து கிடந்தனர். பேரினவாத ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் நோர்வேயின் சுரண்டும் நலனை விமர்சிக்காது, புலிக்கு சாதகமான பக்கத்தை மட்டும் எதிர்த்தனர். இதன் மீது தமது பேரினவாத கூச்சலையிட்டனர், இடுகின்றனர்.


நோர்வே இந்தியாவை பின்தள்ளிவிட்டு ஒரு இணக்கப்பாட்டை நடத்துவதன் மூலம், அதிக சுரண்டலை நடத்தமுடியும் என்று கருதி செயற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் தலையீடு அதிகரித்துள்ள ஒரு நிலையில், நோர்வே சமாதானத்தின் பெயரில் நகர்த்தும் சுரண்டல் நலனை தகர்ப்பதில் இந்தியா குறிப்பாக காய்நகர்த்தி வருகின்றது. இந்த வகையில் மன்னார் எண்ணை வயல்களை சுரண்ட நோர்வே பெற இருந்த உரிமையை, இலங்கை ஊடாக இந்தியா அண்மையில் இரத்து செய்தது. இந்த சுரண்டல் ஒப்பந்தை கிழித்து எறிந்ததன் மூலம், இந்தியா நேரடியாகவே அந்த உரிமத்தைப் பெற்றுக்கொண்டது. அதேபோல் சீனாவும் அதன் மீதான உரிமத்தை பெற்றுக் கொண்டது. இந்த உரிமை மாற்றம் எந்தவிதமான வர்த்தக முறைகளுக்கும் ஊடாக நடைபெறவில்லை.


மாறாக நேரடியாகவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் எண்ணை படிமங்கள் மீது சீனா மற்றும் இந்தியாவும் பெற்றுக்கொண்ட உரிமை, படிப்படியாக நோர்வேயை அதன் சுரண்டல் நலனில் இருந்து வெளியேற்றி வருகின்றது. அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக புலிகளை கையாளும் நிலைக்குள், இந்தியா மற்றும் சீனாவினது தலையீடு அதிகரித்து வருகின்றது. நோர்வை இதன் மூலம் ஒரங்கட்டப்பட்டு, வடகிழக்கில் அதிக சுரண்டல் நலன் என்பது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தான் மறுபேச்சுவார்த்தை என்ற மீள் கூத்தை நோர்வே முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.


மீள் பேச்சுவார்த்தையும் சர்வதேசமும்


முதன் முதலாக புலிகள் எதிர்பாராத ஒரு பேச்சுவார்த்iயை மேசையில் சந்திப்பார்கள். நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட, புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையாகவே இவை அமையும். புலி லூசுக் கூட்டம் பல்லைக்காட்டி, இதை எதிர் கொள்ளமுடியாது திணறும். இதை முன்கூட்டியே எடுத்துக் கூறக் கூடிய அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.


இந்த வகையில் பேரினவாதம் இராணுவ ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலமடங்கு முன்னேறித் தாக்கும். அதை நோக்கி அரசு தயாரிப்புடன் கூடிய ஒரு அம்பலப்படுத்தலை செய்யவுள்ளது. புலிகளுக்கு சவால்விடும் வண்ணம் பேரினவாதம் களத்தில் செயற்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் வைக்கும் ஒரு தீர்வை புலிகள் ஏற்க மறுத்தால், அதை புலிகள் அல்லாதவர்கள் மூலம் அமுல் செய்யும் பிரகடனங்களைக் கூட விடுக்கும் நிலைக்கு பேரினவாத அரசு முதல் முறையாக முன்னேறுகின்றது. இந்த தீர்வை சர்வதேச ரீதியாக அரசு அங்கீகாரம் பெற்று அதை அமுல் செய்வதன் மூலம், புலிகளையே மூச்சுத் திணறடிக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ரீதியாக தமது நிலையை பேரினவாதம் மேலும் பலப்படுத்திவிடுகின்ற சூழல் நெருங்கிக் காணப்படுகின்றது. பேரினவாத அரசின் முடிவை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை அங்கீகரிக்க வைப்பதன் மூலம், புலிகளை அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக தனிமைப்படுத்தி விடுவதே, இந்தப் பேச்சுவார்த்தையில் நடக்கவுள்ள அரசியல் மூலவுபாயமாகும். புலிகளின் இறுதிக்காலம் இப்படி பல வழிகளில் அரங்கில் நுழைகின்றது. புலிகளின் சொந்த அரசியல் இராணுவ வழிகளில், தாமே வலிந்து தமக்குரிய அழிவை நிர்ணயித்து, அதை நோக்கி தாவிச் செல்லுகின்றனர். அதை யாரும் இனியும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் மக்கள் பெறப்போவது புலிகளின் அடிமைத்தனத்துக்கு பதில், மீளவும் பேரினவாத அடிமைத்தனத்தைத் தான்.


"அற்புத"மான பாசிச அலட்டல்...

பி.இரயாகரன்
16.04.2007


"ணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" என்ற தலைப்பில், தமிழ் மணத்தில் அற்புதன் என்ற, 'அற்புத"மான புலிப் பாசிட் எம்மீது தனது புலிப் பாய்ச்சலை நடத்தியுள்ளது. அந்த புலிப் பாசிச பாய்ச்சலின் உள்ளடகத்தைப் பார்ப்போம்.


'மாக்சியப் பண்டிதர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் தங்களைத் தாங்களே மகிடம் இட்டுக் கொண்டு இணையத்தில் மாக்சியம், புலிப்பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதியஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் மனநோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும், கீழ் இணைத்துள்ள, இதயச் சந்திரன் வீரகேசரியில் எழுதி உள்ள எதிர்வினை பொருந்தும். கொழும்பில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அரச ஊதுகுழல் ஆன தினகரனில் வந்த ஒரு பந்தி எழுத்துக்கு, எதிர்வினையாக என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வாறான ஒரு கட்டுரை சி.சிவசேகரத்தால் எழுதப்பட்டு இணையத்தில் பல பெயர்களில் பதிவிடும் ஒரு இணையப் போலிப் புரட்சியாளர் ஒருவரால் படி எடுத்துப் போடப் பட்டிருந்தது."


இவர் குறிப்பிடும் சிவசேகரம், இதயச்சந்திரன் பற்றி விவாதத்துக்குள் செல்வது அவசியமற்றது. இதயச்சந்திரன் விவாதம் உப்புச்சப்பற்றது. புலிப் பாசிசத்துக்கு குடைபிடிக்கும் நாயுண்ணிகளின் வெற்று அலட்டல். பத்திரிகைளை மிரட்டி அடிபணிய வைத்து, மாற்று விவாதங்களை அடக்கியொடுக்கியபடி, புலிகளின் எடுபிடிகள் மட்டுமே குலைக்க முடியும் என்ற நிலையில், பாசிசக் அலட்டல் அது. இந்த பாசிச அலட்டலுக்கு பின்னால் இருப்பது, வெற்று வேட்டுத்தனம். இந்த அலட்டலை விடுத்து 'அற்புத"மான இந்த பாசிச அலட்டலைப் பாhப்போம்.


'மாக்சியம், புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் மன நோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும்" பதிலளிக்கின்றாராம்.


சரி எப்படி? அதை மட்டும் அவர் சொல்ல மாட்டார். தலைவரின் மாவீரர் தின செய்திக்காக, வாயைப் பிளந்து திருவிழாவுக்காக காத்து நிற்கும் கூட்டம் போல், இவர் சொல்லும் வரை நாம் தவம் இருக்கவேண்டியது தான். இதற்கெல்லாம் அர்த்தம் தெரிந்த அற்புதமே, முடிந்தால் உங்கள் புலியின் நுண் மார்க்சிய வழியில் இதை விளக்குங்களேன். இதற்கு பதில் வழமையான புலி நுண் மார்க்சிய அரசியல் வழியில், துப்பாக்கிக் குண்டை பரிசாக தருகின்ற வழியில் பதிலளித்துவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றோம்.


உங்களுக்கு நன்கு தெரிந்த ஆனால் எமக்கு தெரியாத இவற்றை விளக்கி, சரியான வழியில் எம்மை வழிகாட்டிச் செல்லுங்களேன். ஏன் அதை செய்ய முடிவதில்லை. இப்படி செய்திருந்தால், இலங்கையில் பல பத்தாயிரம் உயிர்களை புலிகள் பலி கொண்டிருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஏன் அதை மட்டும் செய்ய முடிவதில்லை. 'மார்க்சியம், புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம்" தெரிந்து போராடியவர்களை வேட்டையாடிய புலிகளின் பாசிச வண்டவாளத்தை தண்டவாளத்தில் நிறுத்தி, இணையத்தில் ஓட்டமுடியாது.


நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் எமக்கு மனநோய் என்று. நல்லது அப்படியே வைத்துக் கொள்வோம், மனநோயற்ற நீங்களாவது சுயபுத்தியுடன் இதை விளக்குங்களேன். பொத்தாம் பொதுவிலான அலட்டல், வெற்றுத்தனமான காழ்ப்பை அடிப்படையாக கொண்ட அவதூறுதான் இது.


'தமிழ் ஈழமக்கள் இந்தப் போலிப் புரட்ச்சியாளர்களின் போலித் தனங்களை நன்கு அறிவார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டு இணையத்தில் இவ்வாறு புரட்சிகரப் படங்காட்டிக் கொண்டிருக்கும் இவர்கள் பற்றிய புரிதலை இடதுசாரிச் சிந்தனை உடைய தமிழ் நாட்டுத் தோழர்களிடம் அம்பலப்படுத்துவதற்காக இந்தப்பதிவு இங்கு இடப்படுகிறது."


நல்லது தமிழ் நாட்டு இடதுசாரிகளுக்கு தெரியப்படுத்த முனையும் நீங்கள், மேலுள்ளவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். முடிச்சுமாற்றி தொழிலைச் செய்வதை விடுத்து, அது பற்றிய விளங்கங்கள் தான் தேவை. அவர்கள் அதை வெற்றிடத்தில் புரிந்தகொள்ள முடியாது. சரி 'தமிழ் ஈழமக்கள் இந்தப் போலிப் புரட்ச்சியாளர்களின் போலித் தனக்களை நன்கு அறிவார்கள்" ஆகாகா அற்புதம். பெயருக்கு ஏற்ப அற்புதம். புரட்சி பேசும் நீங்கள், உங்களுடைய புரட்சி என்ன என்றாவது சொல்லுங்கள். பிரபாகரன் மாவீரர் தினத்தில் அலட்டும் போது சொன்னால் தான் அதுவும் தெரியும். அதுவும் அவர் கழித்த மலத்துக்குள் புழுக் கிண்டித் தேட வேண்டிய பரிதாபம் தமிழ் இனத்துக்கு. அந்தளவுக்கு வெற்று வேட்டுத்தனமும், மக்கள் விரோதமும் பொங்கிவழியும். சரி எல்லாம் தெரிந்த புண்ணியவானே, உங்கள் புரட்சி என்ன? பாசிச மரமண்டைகளே அதையாவது சொல்லுங்கள். நாங்கள் போலிகள் என்று நீங்கள் கூறுவது போலவே இருக்கட்டும், போலியற்ற நீங்கள் மக்களுக்காக எதை எப்படி செய்கின்றீர்கள். அதையாவது சொல்லுங்களேள். உங்கள் புரட்சிகர தத்துவம் என்ன நடைமுறை என்ன விளம்புங்கள். மக்களை மாபியா பாணியில் சுரண்டும் திருட்டுக் கூட்டத்தை பற்றி நாம் பேசுகின்றோம் என்பதை மறக்க வேண்டாம். மண்டையில் போட்டும், மிரட்டியும், மக்களை அடக்கி ஆள்வதுதான் புரட்சியோ! தெரியாமல் தான் கேட்கின்றோம், தெரிந்தால் சொல்லுங்களேன்.


'புலிகள் மேல் உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வே இவர்களின் இந்த மன வியாதிக்கான அடிப்படை. மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. சுத்தியலையும், சிவப்பு அட்டைப் புத்தகங்களையும் காட்சிப்படுத்துவது தான் மாக்சிசம் என்றும், சீனாவில், ரசியாவில் நடந்தது தான் புரட்சி என்றும், மாக்சிசத்தை அறிவியல் அடிப்படையில் அணுகாமல் அதனை ஒரு மதத்தைப் போல் அணுகும் இந்தப் போலிச் சித்தாந்திகள் வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கப் போவதில்லை."


நல்லது, தனிப்பட்ட காழ்ப்புணர்வை என்ன என்ன என்று இனங்காட்டுங்களேன். வெற்று சொற்களுக்கு வெளியில் அதை செய்யும் அரசியல் அருகதை கூட பாசிட்டுகளுக்கு கிடையாது. நாங்கள் எழுதிய கட்டுரைகளில், அதை எடுத்துக்காட்டுகளேன். நாங்கள் புலியை மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை அரசு முதல் உலகம் வரை எதிர்த்து எழுதுகின்றோம். அங்கும் மனநோய் முற்றி, தனிப்பட்ட காழ்ப்பு தான் என்றால் அதையும் விளக்கமாய் சொல்லிவிடுங்கள். அர்த்தம் தெரிந்த நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதைவிடுத்து பல்லிளித்து விளம்பர பாணியில் அரசியல் செய்யும் தமிழ்செல்வன் போல், மூடிமறைத்து சித்த விளையாட்டில் ஈடுபடுகின்றீர்கள். இந்த வக்கிரத்தை பார்ப்பனியம் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கின்றது என்றால், புலிப் பாசிட்டுக்களான நீங்களுமா!


'மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது." நல்லது மக்களின் அபிலாசைகள் என்ன? அதையாவது சொல்லுங்கள். சொல்லுக்கு வெளியில், இதையும் தலைவரிடம் கேட்கவேண்டுமோ! மக்களின் அபிலாசைக்காக போராடும் புலிகள் என்கின்றீர்கள், அதை எப்படி எங்கே நடைமுறைப்படுத்துகின்றார்கள்? தெரிந்தால் அதையாவது சொல்லுங்கள்.


'சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது." இது தவறு தான். சித்தாந்தமும் நடைமுறையும் ஒன்றிணையவேண்டும் என்பதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் அதை புலிகள் எப்படி செய்கின்றார்கள்? அதை முதல் உலகறிய சொல்லுங்கள். மக்களின் அபிலாசைகளை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம், அச்சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட நடைமுறையை புலிகளின் பாசிச வழியில் ஒளிவீசிக் காட்டுங்களேன். ஏனிந்த வார்த்தைப் புலம்பல். புரட்சிகரமான சொற்களை நாம் முன்வைக்கின்றோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டு, வெளிப்படும் அவதூறோடான உங்கள் காழ்ப்பு, எமக்கு மனநோயில்லை என்பதையும், தனிப்பட்ட காழ்ப்புமல்ல என்பதையும் நிறுவுகின்றது. நடைமுறையுடன் இணைத்தல் என்பது, வரலாற்றுக்குரிய ஒன்று தான். படுகொலையும், காட்டுமிராண்டித்தனமும் புலி புரட்சியாக நிலவுகின்ற ஒரு நிலையில், நீங்கள் உங்கள் பாசிச வழியில் எம்மை நோக்கி கேள்வி எழுப்பி விடுவது இலகுவானது. படுகொலையும், காட்டுமிராண்டித்தனமுமற்ற அரசியல் வழியில் நின்று, இதைச் சொன்னால் அது நியாயம். அதை முதலில் செய்யுங்கள். கொலைகார கும்பலின் பக்கப்பாட்டுக்கு ஏற்ப, கும்மியடிக்கும் நீங்கள் எல்லாம் நடைமுறை பற்றி பேச வருகின்றீர்கள். இந்த மனித விரோத மாபியா பாசிசச் செயல்களை அம்பலப்படுத்தி போராடுவது, மரணத்துக்கு ஒப்பானது. அதுவே எமது இன்றைய நடைமுறை.


'அண்மையில் மயூரன் தனது வலைப் பதிவில், சரிநிகரில் இருந்து படி எடுத்து நேபாள மாவோக்களின் தலைவர் பிரச்சண்டாவின் பேட்டியை இணைத்திருந்தார். (Prachanda: Our Revolution Won ஆங்கில மூலம்)
பிரச்சண்டா இந்த வரட்டுச் சித்தாந்த குழுவாதத்தை வெகுவாக விமர்சித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது."


பிரச்சண்டா பேட்டி, அதன் உள்ளடக்கம், அதில் உள்ள அரசியல் நேர்மை, புலியின் பாசிசத்தில் ஒரு சதவீதத்துக்கு கூட பொருந்தது. அவர் வரட்டுச் சித்தாந்தம் என்று கூறுவது சரியானது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது. அவர் கோட்பாட்டை விட்டுச் செல்லவில்லை. அவரின் கருத்து வெளிப்படுத்தும் உள்ளடக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கான எதார்த்தம் சார்ந்து வெளிப்படுகின்றது. அவர் மக்களை ஏமாற்ற முனையவில்லை. புரட்சியின் முதல் கட்டத்தில் உள்ள, பல்வேறு வர்க்கத்தின் நலன்களை சரியாகவே உயர்த்துகின்றார். பிரதான எதிரி, அதாவது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை தனிமைப்படுத்தி ஒடுக்குவதில் உள்ள, அவரின் பொது அணுகுமுறை மிகச்சரியானது. புலிகளைப் போல் எதிரியல்லாத யாரையும் எதிரியாக்கவில்லை. மக்களை நண்பர்களை, புரட்சிகர சக்தியாக முன்னிலைப்படுத்துகின்றார். இந்த வகையில் ஒரு நேர்மையான ஐக்கிய முன்னணிக்காக உழைக்கின்றார்.


அவர் எம்மை விமர்சிக்கின்றார் என்ற உங்கள் கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது. அதை எப்படி எந்த வகையில் என்று நிறுவவேண்டும். அவர்கள் உங்களைப் போன்றவர்களின் வங்குரோத்துச் செயலை, பொது உலகில் அம்பலப்படுத்தகின்றனர். உலகுக்கு வழிகாட்ட போவதாக சூளுரைத்துள்ளார். அவர் உலக மக்களை நம்புகின்றார். புலிப் பாசிச மாபியாக்கள் போலல்ல. உங்கள் இந்த குருட்டுத்தனமான வாதத்தின் நோக்கம், புலிகளை ஆதரிக்காவிட்டால் வரட்டுவாதி என்பது, ஆதரித்தால் வரட்டுவாதியல்ல என்பதே உங்கள் புலிக் கண்டுபிடிப்பு. அதை அவர் வரட்டுவாதமாக குறிப்பிடவில்லை.


'21 ஆம் நூற்றாண்டுக்கான நடைமுறை மாக்சிசம் பற்றியும் கலப்புப் பொருளாதாரம் பற்றியும் அவர் பேசி இருந்தார். போன நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ரசியப் புரட்சியோ அன்றி சீனப் புரட்சியோ இந்த நூற்றாண்டுக்கும், எங்கும், எப்போதும் பொருந்தும் என்று எதிர்பார்ப்பது அறிவிலித்தனம். ஒவ்வொரு போராட்டத்தின் அக மற்றும் புற நிலைகளும் சர்வதேச சூழலும், பூகோள அரசியலும் வேறுபடுகிறது. மாற்றாக மாக்சிசத்தின் அடிப்படைகளைப் புரிந்து, சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் ஏகாத்திபதிய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக இயங்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளான புலிகளின் அரசியலை இவர்கள் இன்னும் உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளவில்லை, அவ்வாறான புரிதல் ஏற்படாததற்கான அடிப்படைக் காரணம் இவர்களின் சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுமே."


பிரச்சண்டாவுக்கு ஒரு பாசிச பொழிப்புரை. மாவீரர் தின உரைக்கு பொழிப்புரை சொல்லிப் பிழைக்கும் கூட்டம், பிரசண்டாவுக்கு பொழிப்புரை. பிரசண்டா பெயரிலும் மானம் கெட்ட நாய்ப் பிழைப்பு.


'21 ஆம் நூற்றாண்டுக்கான நடைமுறை மாக்சிசம் பற்றியும் கலப்புப் பொருளாதாரம் பற்றியும் அவர் பேசி இருந்தார்."


மார்க்சிசம் நடைமுறை நாட்டுக்கு நாடு மட்டுமன்றி, காலத்துக்கும் ஏற்பவும் அதை கையாளுகின்ற வடிவங்களும் மாறும். புரட்சிகர சூழல், வர்க்கங்களின் நிலை, மாறுபட்டதாக உள்ள நிலைமையில், கம்யூனிசத்தை நோக்கிய பயணம் நேர்கோட்டு வழியில் ஒரு சீராக செல்வது கிடையாது. ஒரே மாதிரியான, ஒரே வடிவிலான புரட்சிகள் சாத்தியமில்லை. புரட்சிகள் இயந்திரமாக, இயந்திரகதியில் உற்பத்தி செய்வதில்லை. வர்க்க போராட்டத்தின் உள்ளடக்க விதிகளும், சுரண்டல் பற்றிய சித்தாந்தமும், சுரண்டல் உள்ளவரை மாறிவிடுவதில்லை. மாக்சியம் புதிய உலக நிலைமைகளையும், மாற்றத்தை உள்வாங்கி வளர்த்தெடுக்கப்படுகின்றது. 'கலப்புப் பொருளாதாரம்" பற்றிய அவரின் கருத்து மிகச் சரியானது. இது இப்போது தான் முதல் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டதல்ல. சீனா, சோவியத் எங்கும் இந்த முறை புரட்சியில் கையாளப்பட்டு இருக்கின்றது. நேபாளக் கம்யூனிஸ்ட்டுகள் நிலப்பிரத்துவ வர்க்கங்களை தூக்கியெறியும் போராட்டத்தில், அதற்கு எதிரான அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணியை மேலிருந்து கட்டியுள்ளது. இது புதிய ஜனநாயக புரட்சிக்கு முந்தைய, ஜனநாயக புரட்சிக்குரிய கட்டத்தை அடிப்படையாக கொண்டது.


இந்தவகையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை அவர் தெளிவாக முன்வைக்கின்றார். பாட்டாளி வர்க்க புரட்சி வேறு. இதில் இருந்தும் சோசலிச புரட்சி வேறு. இதில் இருந்தும் புதிய ஜனநாயக புரட்சி வேறானது. புரட்சியின் வௌவேறு காலகட்டமும், வௌவேறு வர்க்கங்களின் அணி சேர்க்கையை இனம் காண்பதில் தான், இந்த வெற்றி அடங்கிக் கிடக்கின்றது. இதில் ஜனநாயக புரட்சிக்குரிய குறிப்பான வர்க்க சூழல் சார்ந்து, அதை தெளிவாக முன்வைக்கின்றார். இதில் எந்தத் தவறுமில்லை. இதை மார்க்சியத்துக்கு எதிரானதாக திரிக்க முடியாது. அவர் இதை முன்னெடுப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்காகத் தான். அதை அவர் கைவிட்டால், அதாவது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒழித்து நிலத்தை மறுபங்கிடுவதைக் கைவிடுவாரேயானால், அவர் வரலாற்றில் மார்க்சியத்துக்கு துரோகத்தை இழைத்து மக்களின் முதுகில் குத்துவார்.


'மாக்சிசத்தின் அடிப்படைகளைப் புரிந்து, சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் ஏகாத்திபதிய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக இயங்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளான புலிகளின் அரசியலை இவர்கள் இன்னும் உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளவில்லை, அவ்வாறான புரிதல் ஏற்படாததற்கான அடிப்படைக் காரணம் இவர்களின் சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப் புணர்வுமே."


என்கின்றார்.


அதாவது புலிகளை மார்க்சிய சக்திகள் என்கின்றார். 'ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக" செயற்படுகின்றனராம். உலகத்தை முட்டாளாக கருதுகின்ற குதர்க்கம். இப்படிக் கூறுவதற்கு உள்ள துணிச்சல் தான், பாசிசத்தின் திமிர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, மக்களுக்கு தெரியாமல், நுண் என்ற மாய மந்திரத்தின் துணையுடன் போராடுகின்றனராம். அதுவும் இந்த அற்புதத்துக்கு தெரிந்துவிடுகின்றது.


நுண் தளத்தில் மக்களுக்கு தெரியாது, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனராம். முக்கியமாக மக்களுக்கு அவை தெரியக்கூடாது. யார் போராடுவது என்றால், எல்லாம் வல்ல தலைவர் மட்டும். அவர் நுண் தளத்தில் சொன்னால், மக்கள் வேத வாக்காக கருதி, ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவார்களாம். புலுடா விடுவதில் மகாகெட்டித்தனம் என்ற நினைப்பு இவர்களுக்கு.


'சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுமே." இந்த நுண் அரசியலை புரிந்து கொள்ளத் தடை என்கின்றார். ஐயா அதை ஊர் அறிய, நீங்கள் புரிந்து கொண்ட, அந்த நுண் தளத்தைச் சொல்லுங்கள். உங்களுக்கு அவை தடையல்லவே. ஏன் சொல்ல முடிவதில்லை. 'பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்"


சுய அறிவற்ற கூட்டம், தலைவரின் மாவீரர் தின செய்தியில் ஏதும் வருமா என்று நம்பி நிற்கும் பிழைப்புவாத கூட்டத்துக்கு, எதைத்தான் சுயமாக மக்கள் சார்பாக காட்டமுடியும். பொறுக்கி நக்குகின்ற கூட்டம், எங்கேயாவது குண்டு வெடித்தால், பத்து இராணுவம் செத்தால் அதை கொண்டு உருவாடுகின்ற கூட்டம், மக்களைப்பற்றி எதைத்தான் கூறமுடியும். அதை அரசியலாக கொண்டு, பேசித் திரியும் கூட்டம், எதைத்தான் இந்த நுண் தளத்தில் கூறமுடியும். தமிழ் மக்களை நலமடித்து விட்டு, இப்படி வள்ளென்று குலைக்க முடிகின்றது.


'இந்த வரட்டுச் சித்தாந்திகளின் அரசியல் மலட்டுத் தனமே, இவர்களால் ஒரு மக்கள் மயப்பட்ட பரந்துபட்ட வெகுசன அமைப்பை கட்டி எழுப்ப முடியாதற்கான அடிப்படைக் காரணம். வெறுமையாக புரட்சிகரச் சொற்களை உமிழும் இவர்கள் உண்மையில் மாக்சிசத்தை ஒரு நடைமுறைச் சித்தாந்தமாக அன்றி, உச்சாடனம் செய்யும் மந்திரமாகவும், மாக்சையும், லெனினையும், மாவோவையும் கடவுளர்களாகவும், அவர்களின் கூற்றுக்களை எதுவித விமர்சனமும் அற்ற வேத வாக்குகளாகவும் கருதிக் கொண்டதன் வெளிப்பாடே அன்றி வேறொன்றும் இல்லை. இவர்களின் அரசியல் என்பது சொன்னதை மீள ஒப்புவித்தல் என்பதுடன் மட்டுமே நின்று விடுகிறது. ஒரு சித்தாந்ததை அதன் நடை முறையுடனும் அது கூறப்பட்ட காலப்பகுதியின் அக, புற நிலைகளுடனும் இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படை அதன் தர்க்கமும், சிந்தனையுமே அன்றி வெறும் சொல்லாடல்கள் அல்ல. பிரச்சண்டா குறிப்பிடுவது போல் மக்கள் அமைப்பொன்றை நிறுவததற்கு ஒரு அடிப்படை வேண்டும். அந்த அடிப்படை மக்கள் மத்தியில் இருக்கும் பிரதானமான ஒடுக்குமுறையின் எதிர் நிலையாகவே அமைய முடியும். அரசியல் யதார்த்தம் என்பதுவும் நுண் அரசியல் என்பதுவும் அதுவே. நேபாளத்தில் நிலவுடமை அடிப்படையிலான மன்னர் புரட்சியே பிரதானமான ஒடுக்குமுறைக் கருத்தியலாக இருக்கிறது. சிறிலங்காவில் அது சிங்களப்பவுத்த பேரினவாதமாக இருக்கிறது. ஒரு மக்கள் மயப்பட்ட அரசியல் இயக்கம் இந்தப் பிரதான முரண்பாட்டை அடிப்படையாக வைத்தே கட்டி எழுப்பப்படமுடியும்."


பாவம் பிரசண்டா. ஒரு வலதுசாரி கொலைகார பாசிட்டுகள், ஒரு இடதுசாரி ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை கூறி நக்கலாமென்று தெரிந்திருக்க நியாயமில்லை தான.


'இவர்களின் அரசியல் என்பது சொன்னதை மீள ஒப்புவித்தல் என்பதுடன் மட்டுமே நின்று விடுகிறது." சொன்னதை மீள ஒப்புவிப்பவர்கள் யார்?. சுயசிந்தனை அற்று, மக்களை சிந்திக்கவே கூடாது என்று நலமடித்தவர்கள் யார்? தலைவர் சொன்னதை தவிர, யாரும் வேறுவிதமாக சிந்திக்க கூடாது. புலிகளை சொன்னதைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. இது தான் புலிகளின் நுண் புரட்சியாக்கும்.


'இந்த வரட்டுச் சித்தாந்திகளின் அரசியல் மலட்டுத் தனமே, இவர்களால் ஒரு மக்கள் மயப்பட்ட பரந்துபட்ட வெகுசன அமைப்பை கட்டி எழுப்ப முடியாதற்கான அடிப்படைக் காரணம். வெறுமையாக புரட்சிகரச் சொற்களை உமிழும் இவர்கள் உண்மையில் மார்க்சிசத்தை ஒரு நடைமுறைச் சித்தாந்தமாக அன்றி, உச்சாடனம் செய்யும் மந்திரமாகவும்,"


இதுதான் கட்டி எழுப்ப முடியாததற்கு காரணம் என்கின்றார். எதைக் கட்டியெழுப்ப என்பது சூக்குமம். புலிகள் மாற்றுக் கருத்தை அங்கீகரித்து, குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை அங்கீகரித்தா உள்ளனர்! இவர் என்ன தான் கூறுகின்றார்? இப்படியான நிலையில் செயற்படாமல் இருக்கின்றனர் என்று கூற வருகின்றாரா? வெகுஜன அடிப்படையை கட்டியெழுப்பும் தடைக்கு, எமது வரட்டுவாதமே காரணம் என்கின்றார். இதை புலிகள் தடுக்கவில்லை என்கின்றாரா?. ஒரு பாசிட்டின், வடிகட்டிய முட்டாளின் உளறல் இது. இவை எல்லாவற்றையும் செய்யமுயன்றவர்கள் 5000 பேரை கொன்ற திமிர் தான் இப்படி இணையத்தில் குலைக்க வைக்கின்றது.


எத்தனை எத்தனையோ முரண்பட்ட மனிதர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கும்பல், எம்மைப் பார்த்து 'இணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" எனக் கிண்டல் அடிக்கின்றது. இன்னும் கொல்லும் வெறி அடங்காத இரத்தம் வழியும் பாசிச திமிருடன், வம்பளக்க வருகின்றது. நாம் நாளை இதே காரணத்துக்காக கொல்லப்படலாம். அந்த உணர்வுடன் தான், நாம் உங்களை எதிர்கொள்கின்றோம். உங்கள் வம்புகளை, உங்கள் பாசிச வக்கிரங்களை எதிர்த்து நாம் போராடுகின்றோம் என்றால், அதுவே தான் இன்றைய நடைமுறை. இதில் மரணம் தான் எமக்கு முன்னால் உள்ளது. இது ஒரேயொரு வழிப்பாதையூடாக உள்ளதென்பதை, நாம் புரிந்தே தாம் எழுதுகின்றோம்.


'புலிகள் மேலான காழ்ப்புணர்வே இவர்களை அண்மையில் பிரன்சு அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி எழுத வைத்துள்ளது. ஒருபுறத்தில் புலிகளை ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளாச் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் அந்த ஏகாதிபத்தியக் கூட்டின் புலிகள் மீதான, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதான நடவடிக்கைகளை ஆதரித்தும் இவர்களால் எழுதமுடிவது இவர்களின் அரசியல் வங்குரோத்துத் தனத்தின் உச்சக்கட்டம். ஏகாதிபத்தியங்களின் உண்மையான அடிவருடிகள் யார் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாக்சிய முத்திரை குத்தல்களுக்கு அப்பால் சென்று தோழர்கள் இவர்களின் போலித் தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்."


நல்லது நுண் அரசியல் புலிவாதியே. 'இவர்களை அண்மையில் பிரன்சு அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி எழுத வைத்துள்ளது" என்கின்றீர்கள். பிரஞ்சு அரசின் ஜனநாயக விரோத செயல் என்று எதை குறிப்பிடுகின்றீர்கள்! அவர்கள் கைதைச் செய்தவர்கள், அந்த அமைப்பை தடை செய்யவில்லையே, ஏன்? அதன் செயற்பாட்டை முடக்கவில்லையே ஏன்? எங்கு எப்படி ஜனநாயக விரோதம் உள்ளது? அதை ஒருக்கால் ஊரறிய சொல்லுங்களேன்! அவர்கள், அவர்களது நாட்டின் சட்ட எல்லைக்குள், இதை நுட்பமாக கையாளுகின்றனர்.


புலிகள் பாரிசில் நடத்தியது என்ன? ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், அதை சதா மூச்சுக்கு மூச்சு ஒடுக்குபவர்கள் எதை செய்திருப்பார்கள்? அனைத்தும் வெளிப்படையானது. ஒரு சட்ட எல்லைக்குள் இயங்கத் தெரியாதவர்கள். பாசிச வழிகளில், ஜனநாயகத்தை முழுங்குபவர்கள். அவர்களின் மொழிகள், ஆணைகள், அடி உதை மிரட்டல் ஏன் மரணம் வரை அனைவருக்கும் தெளிவானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, நாம் நிற்பதை இது தடுத்துவிடாது. நாளை எம் மீது தாக்குதலை அவர்கள் நடத்தினாலும், நாம் இந்த நாட்டின் சட்டப் பாதுகாப்பை கோருவதை, இந்த நாடு ஏகாதிபத்தியம் என்பதால் தடுத்து விடமாட்டது. நாங்கள் ஒரு சட்ட அமைப்புக்குள் நீதியைக் கோருவோம்.


அது ஒரு ஏகாதிபத்தியமாக இருந்தாலும், அந்த நாட்டில் வாழும் மனித உரிமையை மறுப்பதை நாம் ஆதரிக்கமுடியாது. ஒரு நாட்டின் சட்டம் அங்கீகரிக்கும் எல்லைக்குள், அதை மீறுபவனுக்கு எதிராக அந்த சட்ட வடிவங்களில் போராடுவது தவிர்க்க முடியாதது. புலிகளை நாம் ஆதரிக்க வேண்டும் என்றால், மனித உரிமைகளை புலிகள் அங்கீகரிக்கவேண்டும்.


சட்டப்படியாக இயங்க வேண்டும். மாறாக மாபியாத் தளத்தில் இயங்கும் ஒரு குழுவை, விடுதலை இயக்கமாக நாம் அங்கீகரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் நீதி எவ்வளவு முக்கியம் என்பதே, மிக முக்கியமானது. ஒருவன் பாதிக்கப்பட்டடிருந்தாலும் கூட, அதற்காக குரல் கொடுப்பது மார்க்சியம். இதே பாரிசில் சபாலிங்கம் கொலை, நாதன் கஜன் கொலை, லட்சுமி வீடு புகுந்து சூறையாடல், குகநாதன் மீதான் கொலை மிரட்டல், சோபாசக்தி மீதான மிரட்டல், எத்தனை எத்தனையோ உண்டு.


இதையெல்லாம் கொலைவெறியுடன் ஆதரிக்கும் நீங்கள், நுண் அரசியல் வழியில் இதை புலிகள் செய்வதாக மார்பு தட்டுவது எமக்கு கேட்கின்றது. எமது மரணம் தான் இதற்கு பரிசென்றால், நாம் அந்த மரணத்தை உங்களின் நுண் அரசியலுக்காக முத்தமிடத் தயாராகவே உள்ளோம.

புலியிசம் என்பது என்ன.....

பி.இரயாகரன்
13.06.2007

டுகொலை, கொள்கை கோட்பாடற்ற மாபியாத்தனம். தாம் ஏன், எதற்காக, எந்த இலட்சியத்துக்காக, எப்படி போராடுகின்றோம் என்பதை சொல்ல முடியாத கும்பல். இவர்களுக்கும் மனித குலத்துக்குமான உறவு என்பது, கடைந்தெடுத்த பாசிசம்.


இவர்களின் மொழி படுகொலை தான். இதுவல்லாத வேறு எந்த ஒரு அரசியலும் கிடையாது. அதனிடம் அரசியல் தர்க்கம் கிடையாது. விவாதிக்கும் அரசியல் நேர்மை கிடையாது. இலட்சியம் என்பது வெறும் கோசமாக மாறிவிட்ட நிலையில், மக்களை வெறும் மந்தைகளாக மாற்றிவிட்ட நிலையில், அடக்குமுறையைத் தவிர அதனிடம் ஒரு அரசியல் மொழி இருப்பதில்லை.

இப்படிப்பட்ட அரசியல் அனாதைகளின் இருப்பு என்பது, அரசியல் படுகொலைகள் மூலம் தம்மை தக்கவைப்பது தான். இப்படி 10000 க்கு மேற்பட்ட தமிழர்களை இனம் கண்டு கொன்றதன் மூலம் தான், புலியிசம் இன்று வரை நீடிக்கின்றது. அதுமட்டுமல்ல ஊர் உலகத்தில் உள்ள இலங்கைத் தமிழரை எல்லாம் புலிகளின் அதிகாரத்தின் முன் நிறுத்தினால், மற்றொரு 10000 பேரை உடனடியாகவே கொல்லும் ஒரு பட்டியலையும் வைத்துள்ளனர். அந்தளவுக்கு மக்களுக்கு எதிரான செயல்பாடுகள், வீங்கி வெம்பி காணப்படுகின்றது. உண்மையில் இதற்குள் அதன் தர்க்கம், அதன் அரசியல் எல்லாம். இதுவே சாரமாகி புலியிசம் உயிர்வாழ்கின்றது.

இதை செய்வதற்கும், நியாயப்படுத்துவதற்கும் அது கையாளும் தர்க்கம் என்பது, இழிவானதும் கேடுகெட்ட துரோக வழிகளுமே. எடுத்த எடுப்பில் துரோகி, எட்டப்பன், பொம்பளைப் பொறுக்கி, நிதி மோசடிக்காரன், கைக் கூலி என்று முத்திரை குத்தி கட்டமைப்பதே புலியிச அரசியல். புலியின் அரசியலே இதுதான். இதற்கு வெளியல் அ, ஆ எதுவும். தெரியாது. அவர்கள் கட்டமைக்கின்ற அவதூறுகளுக்கு அரசியல் அடிப்படைகள், ஆதாரங்கள் எதையும் முன்வைப்பதில்லை. மாறாக பொய்யும் புரட்டும், கற்பனையும் புளுகும், அதர்மமான வழிகளில் வரலாற்று மோசடி செய்து விதம் விதமாக கட்டமைப்பதே அவர்களின் பாசிச மொழி.

உண்மையில் இதை கேட்பவன் மந்தையாகவும், கேள்வி கேட்கும் ஆற்றலற்ற மலட்டுக் கூட்டமாகவும், விசுவாசமே அறிவாகவும் கொண்ட சைக்கோக்களாக வைக்கப்படுகின்றனர். உள்ளடக்கத்தில் அரை லூசுகள். எந்த சொந்த உணர்வு அற்றவர்கள். வெறியேற்றப்பட்டு முறுக்கிவிடப்பட்டால் சுழலும் பொம்மை இயந்திரங்கள். சுய ஆற்றலற்றது. சுய அறிவற்றது. சுய புத்தியற்றது.

கற்றல், கற்பித்தல், கேட்டல், கேட்டவற்றை விவாதித்தல் என அனைத்தும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அப்படி இருந்தால் மட்டும் தான், தேசியம் என்று ஊட்டப்படுகின்றது. இதை கடைப்பிடிக்கின்ற அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக, அதையே பெருமையாக மாற்றிவிடுவதே புலியிசம்.

ஒன்றையே கேட்கவும், அதையே மீள ஓதவும் தூண்டப்படுகின்றது. மற்றையவற்றை பார்க்காமல் கேட்காமல் இருக்கவும் கூடிய, பண்ணை மந்தைகளாக வேலியிட்டு அடைக்கப்படுகின்றனர். இவர்கள் தான் புலி விசுவாசிகள்.

இவர்கள் தம் விசுவாசத்தை சந்தேகிக்க முடியாது. இதன் மேல் அறிவியல் பூர்வமாக, எதையும் உணர்ந்து செயல்படுவது கிடையாது. உண்மையில் மனித அறிவுக்கும், புலி விசுவாசத்துக்கும் இடையில் எந்த உறவும் இருப்பதில்லை. எதிர்நிலை மனப்பாங்கே உண்டு. அறிவு என்பது புலிக்கு எதிரான துரோகம் என்பதே, இவர்களின் அகராதி கூறுகின்றது. சமூதாயத்தின் கருத்தை கேட்காத வண்ணம், இவர்களின் சொந்தக் காது இறுக அடைக்கப்பட்டு, கண் கட்டப்பட்டு, வாய் பொத்தப்பட்ட நிலையில் தான், புலி விசுவாசிகள் கூட்டம் உருவாக்கப்படுகின்றது. கத்து என்றால் அது கத்தும், அழு என்றால் அழும். சிரி என்றால் சிரிக்கும். இதற்கு வெளியில் அதனிடம் எந்த உணாச்சியும் கிடையாது.

இந்தக் கூட்டத்துக்கு சில வான வேடிக்கைகள் போதும். இதன் மூலம் விசுவாசத்தின் பலனை அடைந்ததாக அவர்களை நம்ப வைக்க முடியும். இப்படிபட்ட அற்புதமான புலியிசம் தான், எமது சமுதாயத்தில் இன்றுவரை ஆதிக்கம் வகிக்கின்றது.

உண்மையில் தமிழ் தேசிய போராட்டத்தின் சரியான தேசியக் கூறுகள், எந்த எதிரியையும் அரசியல் இராணுவ கூறுகளில் வெல்லப் போதுமானது. படுகொலைகளுக்கு பதில், அவதூறுகளுக்கு பதில், பாசித்துக்கும் மாபியாத்தனத்துக்கும் பதில், உயர்வான மனித விழுமியங்களைக் கொண்டது. அந்தளவுக்கு தமிழ் தேசியம் மக்களின் வாழ்வை அடிப்படையாகவும், அவர்களின் சமூக பொருளாதார கூறுகளைக் கொண்டது. அது கொண்டுள்ள அரசியல் சாரம், அதன் அரசியல் தர்க்கம், மனித குலம் சார்ந்தது. மனிதக் கூட்டுறவை உருவாக்கும் அடிபடையில் மிகப்பலமானது. அதன் உண்மையான தர்க்கமும் சாரமும், படுகொலையையோ, பாசிசத்தையோ மாபியாத்தனத்தையோ அடிப்படையாக கொண்டதல்ல. மாறாக அது தன்னளவில், அதன் உண்மை மிகப்பலமானது. எந்த எதிரியையும் வெற்றிகொள்ளக் கூடியது.

புலிகள் இதை மறுக்கின்றமையால் தான், பாசிசமும், மாபியாத் தனமும் அவசியமாகின்றது. தமிழ் தேசிய அரசியலைக் கைவிட்டு, படுகொலையை தனது மொழியாக்குகின்றது. தன்னைச் சுற்றி அறிவற்ற கூட்டத்தை, பினாமிகளை, பிழைப்புவாதிகளை உருவாக்கிக் கொள்கின்றது. அறிவுக்கு பதில் அரை லூசுகளைக் கொண்ட லும்பன்களை, சமூக அறிவியல் மேதைகளாக புழுக்கவைக்கின்றது.

இப்படி இதை வழிநடத்தும் பாசிட்டுகள். அதற்கேற்ற பினாமிக் கூட்டங்கள். இதற்கு பின்னால் சில லுர்சுகள். அதற்கு ஏற்ற பன்னாடைகள். இதுவே எங்கும் நிரம்பிய புலியிசம். இதுவே புலியிசத்தின் தாற்பரியம். வேடிக்கை என்னவென்றால், பாசிட்டுகளைத் தவிர, மற்றவர்கள் தம்மை தாம் மறைத்துக்கொண்டு, ஊர் பெயர் தெரியாத பெயர்களில் சந்தர்ப்பவாதிகளாக இருந்தபடி பிழைப்பதும், ஊளையிடுவதும்.

அரை லூசுகளாக, அதற்கேற்ற பன்னாடைகளாக, அவதூறுகளை புனைவதும் புணர்வதுமாக இவர்கள் அரசியல் வாழ்கின்றது. அறவியல் பூர்வமாக, அரசியல் ரீதியாக விவாதிக்க வக்கற்று விடுகின்றனர். சொந்த இலட்சியத்தைக் கூட, கருத்தியல் ரீதியாக வைக்க முடியாதளவுக்கு லூசுக் கூட்டமாகிவிடுகின்றது. குறைந்த பட்சம் ஒரு விடையத்தை விளங்கிக்கொள்ளும் மனித ஆற்றல், மனித அறிவு, மனித நேர்மை எதுவுமற்றவர்களாகி விடுகின்றனர். மாறாக மோசடிகள், அறிவின்மையும், அயோகியத்தனமும், ஒழுக்கக்கேடும் கொண்டு புலித் தேசியத்தையே விபச்சாரம் செய்பவர்களாகிவிடுகின்றனர்.

தமிழ் தேசியம் என்றால் என்னவென்று அறிவியல் பூர்வமாக, விளக்க முடியாதவர்கள் இவர்கள். அதை காட்டுமிராண்டித்தனமான வழிகளில், முடிவாக படுகொலை மூலம் பதிலளிப்பவர்கள். இதுதான் இவர்களின் தேசியம். இதனால் இது தமிழ் தேசியமல்ல, புலியிசமாகின்றது. புலித் தேசியத்தை புலியிச பாசிச வழிகளில், மற்றவன் மீது கொத்திக் கிளறுவது, நலமடிப்பதுமே இவர்களின் உயர்ந்தபட்ச ஊடக வரையறை.

தமிழ் மக்கள் என்று இவர்கள் கூறும் அந்த மக்களின் சமூக பொருளாதா அரசியல் வாழ்க்கையையே நலமடித்து, அதை அறுப்பவர்கள் இவர்கள். இவர்கள் கூறும் அந்த தமிழ் மக்களுக்கு அடிப்படையான ஜனநாயக உரிமையை வழங்க முடியாது என்பவர்கள் தான், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்கின்றனர். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்றவர்கள் தான் இந்தப் புலிகள். இவர்கள் தான் தமிழ் மக்களுகாக போராடுகின்றனர். தமிழ் மக்கள் இவர்களைத் தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் அடிப்படை மனித உரிமைகளையும், அவர்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வையும் மறுப்பவர்கள். அதை குழிதோண்டிப் புதைக்கும் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும், எந்த அரசியல் பொருளாதார ஒட்டுறவும் கிடையாது. மக்களுடனான உறவின் மொழி காட்டுமிராண்டித்தனமான பாசிச உறவே.

இந்த தமிழ் மக்கள், தமக்கான அடிப்படை உரிமையைக் கோரினால் கிடைப்பதோ அவதூறுகளும், பட்டங்களும், மரணங்களும். விதவிதமான பட்டங்கள். விதவிதமான படுகொலைகள். இதுதான் புலியிசம். இது தான் பிரபானிசம்.

துரோகி, பொம்பளைப் பொறுக்கி, எட்டப்பன் என்று நீண்ட பட்டியல். இதையும் தாண்டினால் பச்சைத் தூசணம். முடிவாக படுகொலை. இதுதான் எமது தேசத்தின் புலியிசத்தின் அரசியல் வரலாறு. பேரினவாதத்தின் நுகத்தடியின் பின்னால் கட்டமைக்கப்பட்ட, தமிழ் மக்களின் வரலாறு இப்படித்தான் உள்ளது.

குறிப்பு : அண்மையில் எனக்கு எதிராக சில லூசுகள் இப்படித்தான் பொங்கினர். அதன் அறிவியல், அதன் நேர்மை, அதன் சாரம் அனைத்தையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Sunday, September 30, 2007

புலிகளின் நிதர்சனம் டொட் கொம்மின் அசிங்கம்

பி.இரயாகரன்
30.09.200


னது கட்டுரை ஒன்றுக்கு நடந்த கதை, நான் எழுதிய மற்றொரு கட்டுரையின் உதாரணமாகிவிடுகின்றது. 28.09.2007 அன்று நிதர்சனம் டொட் கொம் எனது கட்டுரை ஒன்றை எடுத்து பிரசுரித்துள்ளது. அதன் பின்னணியைப் பார்ப்போம்.

1. கட்டுரையில் புலிக்கு எதிரான பகுதி நீக்கப்பட்டு, அதை தமக்கு மட்டும் சார்பாக மாற்றி பிரசுரமாகியுள்ளது. பார்க்க : http://www.nitharsanam.com/?art=24465

2. எங்கே இந்தக் கட்டுரையை எடுத்தோம் என்ற மூலம் இன்றி அது நிதர்சனத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதான வகையில் பிரசுரமாகியுள்ளது. ஏதோ தமக்கு நான் எழுதியதாக காட்டுகின்ற மாயையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். பார்க்க எனது கட்டுரையை : http://www.tamilcircle.net/unicode/general_unicode/214_300/244_general_unicode.html

இப்படித் தான் புலிகளின் ஊடகவியல் இயங்குகின்றது. புலிக்கு எதிரான பகுதியை நீக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால், அவர்கள் இரண்டு விடையத்தை நேர்மையாகச் செய்திருக்க முடியும்.

1. புலிகள் சுயவிமர்சனம் செய்து, நடைமுறை ரீதியாக தம்மை மாற்றிக்கொண்டு இதை இல்லாததாக்குவது.

2. இல்லையேல் புலி பற்றிய எமது விமர்சனம் தவறு என்றால், அதை விமர்சிப்பது. அந்த சுதந்திரம் உங்களிடம் உண்டு.

வெட்டியும் ஒட்டியும் அதை தமக்கு சார்பாக திரிப்பது, புலிகள் பற்றிய எமது விமர்சனத்தை தொடர்ச்சியாக உறுதி செய்து நிற்கின்றது.

எனது பெயரில் வெளி வந்த, எமது இணையத்தில் வந்த கட்டுரையில், சில பகுதிகளை நீக்கி சேர்த்து தமக்கு சார்பாக மாற்றுவது தான் புலி ஊடகவியலாகின்றது. இது போல் புலியெதிர்ப்பு தேனீயும் செய்துள்ளது. நான் எழுதிய முஸ்லீம் மக்கள் பற்றிய எனது கட்டுரையை அவர்கள் பிரசுரித்த போது, வேறு ஒருவரின் பெயரில் அதை வெளியிட்டது.

இப்படி தமிழ் மக்களுக்கு உண்மைகளைச் சொல்லும் எம்மை மறைத்தும் திரித்தும் தான், தமது மக்கள் விரோதத் தன்மையைப் பலப்படுத்திக் கொள்கின்றனர். இப்படி போக்கிரி ஊடகவியல் மூலம், மக்களுக்கு உண்மைக்கு பதில் பொய்யைப் புனைந்து விடுகின்றனர்.