தமிழ் அரங்கம்

Saturday, January 12, 2008

மோடிக்கு கருத்துச் சுதந்திரம்!

பி.இரயாகரன்
12.01.2007


தை சொல்வதற்கு, கேட்பதற்கு உங்களுக்கு வெட்கமாகவில்லை. இப்படி மோடிக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று கூறுவதே நகைப்புக்குரியது. ஒரு பார்ப்பனிய இந்துத்துவ பாசிட்டுக்கு எதிரான போராட்டம் என்பது, அவர்கள் முற்றாக அடக்கி ஒடுக்கப்படும் வரை நடத்தப்பட வேண்டும்.

இந்திய சமூக அமைப்பில் எத்தனை மனிதர்களுக்கு, இவர்கள் கருத்துச் சுதந்திரத்தை, வாழ்வுச் சுதந்திரத்தை மறுக்கின்றனர். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இப்படி எத்தனை எத்தனை கொடுமைகள்.

இதைத் தமது உரிமையாக கொண்டு செய்பவனுக்கு, காலாகாலமாக சுதந்திரம் மறுக்கப்பட்ட மக்கள் எந்தச் சுதந்திரத்தை தான் வழங்க முடியும். இவர்களுக்கு சுதந்திரம் என்பது, அந்த மக்களைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு தான். துக்ளக் கூட அதைத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்றது.

இவர்கள் தமது பார்ப்பனிய சாதிய வக்கிரத்தை, மனித சமூகம் மீது காறி துப்புகின்ற கடைந்தெடுத்த கொலைகார பாசிட்டுகள். பாசிட்டுகளுக்கு சுதந்திரம் என்றால், மனித குலத்தைப் பிளந்து அழிப்பதற்குத் தான். இதையே அனைத்து பாசிச வரலாறும் காட்டுகின்றது.

இந்த பாசிட்டுகளுக்கு கருத்துச் சுதந்திரம் பற்றி பேச முன், நீ உன்னைச் சுற்றிப் பார். இந்திய சமூக அமைப்பில் தீண்டதகாதவர்கள் எத்தனை விதமான சாதிய ஒடுக்கமுறைக்கு உள்ளாகின்றனர். இதை உருவாக்கி வைத்திருப்பவன் யார்.? நீ அல்லவா! உன் கூட்டமல்லவா!

இப்படிப்பட்ட ஒரு பார்ப்பனிய சாதிக் கட்சியின் பிரதிநிதி அல்லவா மோடி. தீண்டத்தகாதவன் சொந்த ஊர் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமைக் கூட மறுக்கின்ற போது, அது பற்றி பேச மறுக்கின்ற பாசிட்டுகளுக்கு என்ன தான் கருத்துச் சுதந்திரம். அந்த மக்களோ, தமது கருத்துச் சுதந்திரத்தை நினைத்தே பார்க்க முடியாது. அவர்களை அடித்து உதைக்கவே, இந்து பார்ப்பனிய பாசிட்டுகளான மோடிகள் அரசியல் செய்கின்றனர்.

மோடி போன்ற கொலைகார பாசிட்டுகள், ஆயுதமேந்திய அரசின் குண்டர்களின் பாதுகாப்பில், கருத்தைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் தீண்டத்தகாதவன், இவர்கள் பாதுகாத்து வைத்துள்ள சாதிய அமைப்பில் அதை நினைத்தே பார்க்க முடியாது. இன்று (குஜராத்தில்) முஸ்லீம் மக்களுக்கு அதை மறுப்பது அரங்கேறுகின்றது. இந்திய பார்ப்பனிய சாதிச் சமூக சட்ட அமைப்பில், மக்கள் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதை யார் மறுக்கின்றானோ, அவனுக்கு எதிராகப் போராடித்தான், இதைக் கோர வேண்டியுள்ளது. இது தான் உண்மை.

யார் இப்படி மனித குலத்துக்கு எதிராக இயங்குகின்றானோ, அவனுக்கு சுதந்திரத்தை மறுத்தேயாக வேண்டும். மதத்தின் பெயரால் ஒடுக்குபவனுக்கு, சாதியின் பெயரால் ஒடுக்குபவனுக்கு, மற்றவன் உழைப்பைச் சுரண்டித் தின்பவனுக்கு சுதந்திரம் என்பது, இதைச் செய்வதற்குத்தான். இதை மறுப்பது என்பது, மற்றவர் உரிமையை, சுதந்திரத்தை பாதுகாப்பது தான். இதை செய்வதற்கு உரிமை என்பது, மனித குலத்துக்கு எதிரானது.

ஒரு மனிதன் மனிதனாக, ஒரு சமூக உயிரியாக வாழமுடியாத வகையில், பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும், ஒரு கொலைகாரனுக்கு, வக்காலத்து வாங்குவதை மனிதனாக உள்ள எவராலும் சகிக்க முடியாது. அறிவு நேர்மை உள்ள ஒவ்வொருவனும் இதற்காக வெட்கப்பட வேண்டும். இதைச் செய்யமறுப்பவன், அந்த பாசிச கொலைகார பார்ப்பனிய சாதிய வக்கிரங்களுக்கு துணைபோபவன் தான்.



லுங்கி - நாடகம்

லுங்கி - நாடகம்

Friday, January 11, 2008

மோடியின் வருகை குறித்து ஒரு ஜனநாயக புலம்பல்

முஸ்லீம் மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவித்த, இன்று வரை அதற்காக ஒரு சிறு மண்ணிப்பு கூட கேட்காத காட்டுமிராண்டி மோடி சென்னைக்கு வர இருக்கிறான், சிறுபாண்மை மக்கள் மீதான வெறுப்பையும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அருவெறுப்பையும் கொண்டிருக்கும் இந்த பாசிச கிரிமினல், மலமள்ளினால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று பார்ப்பனீய திமிர் வழிய பேசியவன், அதனை கண்டித்து சில நாட்களுக்கு முன்பு நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.,


இந்த நிலையில் இந்த காட்டுமிராண்டி தமிழகம் வருவதற்கு புரட்சிகர, ஜனநாயக, தலித்திய, சிறுபாண்மையினர் அமைப்புகள் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.,


மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள் பிரச்சாரம், கண்டனம் என்று வீச்சாக இயங்கிக் கொன்டிருக்கின்றன. தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், த.மு.மு.க உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றினைந்து 'பாசிச எதிர்ப்பு முன்னனி' என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி போராட்டத்தை அறிவித்திருக்கின்றன.,


அப்பாவி மக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொண்று குவித்த கொலைகார கும்பலைச் சேர்ந்த மோடி தெஹல்கா என்ற ஆங்கிலப் பத்திரிக்கையால் சில நாட்களுக்கு முன்பு அம்பலப்படுத்தப்பட்டு அம்மணமாக நிறுத்தப்பட்டான்.


தெஹல்கா அவனை மட்டுமல்லாது அந்த இனப்படுகொலைக்கு உறுதுணையாய் இருந்த போலீசையும், நீதித்துறை கிரிமினல்களையும் சேர்த்தே நிர்வாணமாய் நிறுத்தியது, குற்றவாளிகளின் வாயிலிருந்தே ஒப்புதல் வாக்குமூலங்களை வீடியோ ஆதாரங்களாய் வெளியிட்டது. சட்டம், நீதி நிர்வாகம் எனும் அத்தனை துறைகளும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு பக்கபலமாய் நின்றதை உலமே பார்த்தது. இந்த நிலைமையில் மோடியின் உரிமை ப‌ற்றி சில‌ர் க‌வ‌லை ப‌ட‌த்தொட‌ங்கியிருக்கிறார்க‌ள்.,


இந்த நாட்டில் கோயில் கருவறைக்குள் சூத்திரர்களூம் பஞ்சமர்களும் சென்று வருவதற்கு இன்றும் உரிமையற்றிருக்கும் அவமானகரமான நிலையை பற்றி வாய் திற‌க்க‌ வ‌க்கில்லாத‌வ‌ர்க‌ள், இந்த காட்டுமிராண்டி மோடி த‌மிழ‌க‌ம் வ‌ராம‌ல‌ த‌டுக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன‌து உரிமை ப‌றிபோய்விடுமே என்று ப‌தைக்க‌ தொட‌ங்கியிருக்கிறார்க‌ள்


இந்த வகையில்தான் ரவி ஸ்ரீனிவாஸ் என்பவரும் “மோடியின் வருகை குறித்து” என்ற பதிவை போட்டிருக்கிறார்


//இந்திய குடிமகன் என்ற முறையிலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையிலும் சென்னைக்கு வருவதற்கும், பொது/தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.//


//அவரது செயல்கள், நிலைப்பாடுகளை ஏற்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. இது அடிப்படை உரிமைகள் சார்ந்த ஒன்று.//


என்றெல்லாம் மோடியின் உரிமைக‌ளை ப‌ற்றி ப‌ட்டிய‌லோடு தனது பதிவை தொடங்கும் ரவி, தடாரென்று ஒரு சம்மர் ஷாட் அடிக்கிறார்..


//எனவே அவரது வருகை என்னைப் பொறுத்தவரை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.//


'சரிதான் உரிமை இருக்கிறது' என்று நாம் அசருகின்ற நேரமாய பார்த்து ‘மோடி வருகை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல’ என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார், உரிமை இருக்கிறது என்பதற்காக எதிர்க்க கூடாது என்று சொல்வது என்ன வகை ஜனநாயகம் என்றுதான் தெரியவில்லை.,


பாஸ்போர்ட், விசா வைத்திருப்பதால் உலக பயங்கரவாதி புஷ்க்கு கூடத்தான் மற்ற நாடுகளுக்கு சென்று வர உரிமை இருக்கிறது. ஆனால் அவனுக்கு எங்கும் எதிர்ப்பு இல்லாமலில்லை., அவன் போகுமிடங்களில் மக்கள் திரண்டெழுந்து போராடுகிறார்கள், எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்., வெளியேறமாறு முழக்கமிடுகிறார்கள் ஆனால் அவனுக்கு செல்ல உரிமையிருக்கிறது என்பதற்காக அதனை எதிர்க்க கூடாது என்று எந்த ஜனநாயக காவலனும் விளக்கம் கொடுத்ததாக தெரியவில்லை.,


ஆனால் ர‌வி ஸ்ரீனிவாஸ் சொல்கிறார், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் உரிமைக‌ளை காட்டிலும் மோடியின் உரிமையே பெரிது அத‌னை காப்ப‌துதான் நாம் ஜ‌ன‌நாய‌க‌த்தை காக்கும் ஒரே வ‌ழி என்று ந‌ம‌க்கு போதிக்கிறார்.


ஒரு மாநிலத்தின் முதல்வனாகவே இருந்தாலும் அவன் கொலைகாரன், கிரிமினல் எனும் பட்சத்தில் மக்கள் போராடுவதற்கும் அவனுக்கு எதிராக தங்களது வலிமையான கண்டனங்களை தெரிவிப்பதற்கும் போதுமான உரிமை இருப்பதையே நாம் ஜனநாயகம் என்கிறோம் ஆனால் ரவி ஸ்ரீனிவாஸ் ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் மோடிக்கு உரிய வரவேற்பு அளிக்க வேண்டும், ‘வரக்கூடாது’ என்றெல்லாம் போராடக்கூடாது இதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் தருகிறார், அதாவது ஒரு கொலைகாரனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட அவன் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றுவதுதான் ஜனநாயகமாம்.,


க‌ருப்பு கொடிகாட்டுவ‌து கூட‌ ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌மாம், அது அந்த‌ நிக‌ழ்ச்சியை த‌டைப‌டுத்திவிடுமாம், அட‌டா, அந்த‌ நிக‌ழ்ச்சி இனிதே ந‌ட‌ந்தேற‌ வேண்டும் என்ப‌தில்தான் எவ்வ‌ள‌வு அக்க‌றை ர‌வி ஸ்ரீநிவாசுக்கு.,


இப்ப‌டி க‌ருப்பு கொடிகாட்டுவ‌து ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ம் என்ப‌த‌னால் ர‌வி ஸ்ரீநிவாஸ் மோடிக்கு க‌ருப்பு கொடியும் காட்ட‌மாட்டாராம், பூச்சென்டும் கொடுக்க‌மாட்டாராம், வேறு என்ன‌ செய்வார் என்று கேட்காதீர்க‌ள்? கேட்டால் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ம், வீட்டுல போய் மூக்கு பிடிக்க‌ தின்றுவிட்டு குப்புற‌ ப‌டுத்துக்கொள்வார், இதுதான் ஜ‌ன‌நாய‌த்தை காப்பாற்றும் வ‌ழி என்று ர‌வி ஸ்ரீநிவாஸ் க‌ண்டுபிடித்திருக்கிறார்.,


அதனால் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புப‌வ‌ர்க‌ள்(மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க‌ போய் க‌டைசியில ஜ‌னநாய‌க‌த்த‌ காப்ப‌த்துற‌ வேலைய‌ ந‌ம்ம‌ த‌லையில‌ க‌ட்டிட்டானுங்க, பலே கில்லாடிங்கதான்‌) வீட்டில் போய் பேசாமல் ப‌டுத்துக்கொள்ளுங்க‌ள், ஏற்க‌ன‌வே மோடியை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் தேச‌விரோதிக‌ள் என்று இல‌.க‌ணேச‌னால் ப‌ட்ட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்டிருக்கும் நிலையில், க‌ருப்பு கொடி காட்டி எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ விரோதிக‌ள் என்ற‌ ப‌ட்ட‌ம் கொடுக்கிறார் ர‌வி ஸ்ரீநிவாஸ்.


"வேண்டுமான‌ல் க‌ண் காணாத‌ இட‌த்தில் போய் உங்க ஆர்ப்பாட்டத்தை வ‌ச்சுக்கோங்க‌, இங்க‌ வ‌ந்து தொந்த‌ரவு ப‌ண்ணாதீங்க‌" என்று ந‌ம‌க்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் அடுத்த‌ வ‌ழியையும் சொல்லித்த‌ருகிறார் ர‌வி ஸ்ரீநிவாஸ், அதாவ‌து ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் ஆசை கொண்ட‌வ‌ர்க‌ள், மோடி சென்னைக்கு வ‌ந்தால், சென்னிம‌லையில் போய் க‌ருப்பு கொடி காட்ட‌ வேண்டும், திருச்சிக்கு வ‌ந்தால் திண்டிவ‌ன‌த்திற்கு போய் க‌ருப்பு கொடி காட்ட‌ வேண்டும் இதுதான் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்பாற்றும் வழி.


அவர் எதிர்ப்பு உள்ள மாநிலத்துக்கு வந்து செல்வதுதான் ஜனநாயகம் தழைத்திருப்பதற்கான நல்ல அறிகுறியாம்.. 3000 பேர் வெட்டியும், சிதைத்தும், கற்பழிக்கப்பட்ட பொழுதும் அதற்கு காரணமான இந்த கிரிமினலை எதிர்க்காமல், ஜனநாயகத்தை எப்படி தழைக்க வைப்பது என்றுதான் நாம் யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமாம்.


மோடியின் உரிமை பற்றி பேசும் இந்த சிறீநிவாஸ், இறந்து போன மக்களின் மூவாயிரம் மக்களின் உரிமை பற்றியும், அவர்களுக்கான நியாயம் பற்றியும் தனது பதிவில் எங்குமே வாய் திறக்கவில்லை.


இவ‌ர் ஜ‌ன‌நாய‌க‌ம் ஜ‌ன‌நாய‌க‌ம் என்று தொண்டை கிழிய‌ க‌த்தும் பொழுது, ஜ‌னநாய‌த்தை ப‌ற்றி தோழ‌ர்.லெனின் கூறிய‌துதான் நினைவுக்கு வ‌ருகிற‌து.


"ஜ‌ன‌நாய‌க‌ம் என்றால், ஒரு மார்க்சிய‌வாதி அது எந்த‌ வ‌ர்க்க‌த்துக்கான‌து என்று கேட்பான்"


பார்ப்பன பயங்கராவாதிகள், ஜனநாயகம் பாசிசம் என்று எந்த முகமூடி அணிந்து வந்தாலும் அவர்களுக்கு தோல்வியையே பரிசாய் கொடுப்போம்!!


பார்ப்பன பயங்கரவாதி காட்டுமிராண்டி மோடியையும் அவ‌ன‌து ப‌ரிவார கும்ப‌லையும் அடித்து விர‌ட்டுவோம்!!



நன்றி ஸ்டாலின்

இந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே(பாடல்)

இந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே

Thursday, January 10, 2008

ம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன் பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை

"மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது" என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ "வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது" என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.


சமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை "மரண வியாபாரிகள்" என்று விமர்சித்ததிற்காக சோனியாவை 'வெளி நாட்டுக்காரி' என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை 'இந்து பயங்கரவாதி' என்று சரியாகவே குறிப்பிட்டார். "அது பிரச்சாரம்-இது வியாபாரம்" என்கிறாரா கிருக்ஷ்ணசாமி? அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா?


இனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் "அமெரிக்காவில் கால் வைக்க கூடாது" என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் ?


2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். "கொலை வேறு வியாபாரம் வேறு" என்கிறாரா கிருஸ்ணசாமி?


கிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே "தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது" என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது "அதை கண்டு கொள்ள கூடாது" என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ 'வியாபாரத்தை இழக்க முடியாது' என்கிறார்.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா? காந்தி கொலையை நியாயப்படுத்தும் " நான் கோட்சே பேசுகிறேன்" என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும், நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.


இது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம்! காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.


மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மதவெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் !


இவன்
மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க. 10.12008


நன்றி அசுரன்

Wednesday, January 9, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...15.

பகை உணர்வின் வெறியாட்டம்



2002ல் நரோடா பாடியாவில் நடந்த அதி பயங்கரமான படுகொலைகளின் பின்னனியில் உள்ள உண்மைகள்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளில் அஹ்மதாபாத் காவல்துறையினர் வன்முறை கும்பலுடன் வஞசக நோக்கத்தோடு செய்துக் கொண்ட இரகசிய ஒப்பந்தங்களும் இன்னும் படுகொலைகளை மூடி மறைத்தலும், குல்பர்க் சமூக குடியிருப்பில், இரத்தத்தை உறையவைக்கும் விதத்தில் முன்னாள் காங்கிரஸ் MPயான இஹ்ஸான் ஜாப்ரி கை கால்கள் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட விபரங்கள், இம்மாபாதக செயல்களை எவர்கள் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து……

முஸ்லிம்கள் - வாழ்ந்திட அவர்களுக்குத் தகுதியில்லை


நரோடா பாட்டியாவில் இனஅழிப்பு கொலைகள் மிக துரிதமாகவும் அதே நேரத்தில் முழுமையாகவும் நடத்தப்பட்டது. குற்றவாளிகள் தணடிக்கப்படாததோடு இன்னும் அவர்களுடைய தவறுகளைப் பற்றி மனவேதனைப் பாடாதவாகளாகவும் இருக்கின்றனர்.

சபர்மதி விரைவு இரயில் துயர் சம்பவம் நடைபெற்றச் சிலமணி நேரங்களிலேயே, பாஜகவும் இன்னும் அதன் சார்பு அமைப்புகளான விஹெச்பி, RSS, பஜ்ரங்தள் ஆகியனவும் இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான இனஅழிப்பு படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன. சபர்மதி விரைவு இரயில் தீக்கிரையாக்கப்பட்ட மறுநாள், பிப்ரவரி 28, 2002ல் திகிலூட்டும் வகையில் குவியல் குவியலாக நடத்தப்பட்ட படுகொலைகளை அஹ்மதாபாத் கண்டது. ஆயுதங்கள் தாங்கிய காவி வெறியாட்டகாரர்கள் தெருக்களில் வலம் வந்தவர்களாக, அவர்கள் விரும்பியபடி முஸ்லிம்களை எரித்தல், கொள்ளையடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் போன்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழக் கூடிய அஹ்மாதாபத்தின் வெளிப்புற பகுதியான நரோடாவில் தான் அதிகமாக இரத்தம் ஓட்டபட்டது.

பாஜகவும், விஹெச்பி, மற்றும் பஜ்ரங்தள் ஆகியன மிக நேர்த்தியான முறையில் படுகொலைகளைச் செய்யும் குழுக்களை அமைத்து பிப்ரவரி 28 காலை 10 மணியிலிருந்து நன்கு இருட்டும் (இரவு) வரை திட்டமிட்டுப் படுகொலைகளை நடத்தினார்கள். துப்பாக்கிகள், சூலாயுதங்கள், வாள்கள் போக இன்னும் எவை எல்லாம் தாக்குவதற்கு பயன்படுத்தலாம் என்று உணரப்பட்டு குறைந்த நேரத்தில் கிடைக்கப் பெற்றனவோ, செங்கல் முதல் வாயு உருளைகள், எரிபொருள் நிரப்பப்பட்ட டாங்கிகள் வரை எவ்விதக் கட்டுபாடுகளும் இன்றி மிக எளிதாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு அவை கொண்டுச் செல்லப்பட்டன. அதிக எண்ணிகையிலான மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு எரிக்கப்படுவதற்கு முன், அதிகமானோர் குத்தப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இன்னும் துணடம் துண்டமாக வெட்டப்பட்டும், பிறகு எரித்தும் கொல்லப்பட்டார்கள்.

படுகொலைகள் நடைபெறும் போது வன்முறை வெறியாளர்களின் கைத்தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்க, ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் தொடராக பகிர்ந்து கொள்ளப்பட்டன. சூரியன் அஸ்தமித்திருக்க, முஸ்லிம்கள் வாழும் பகுதியான நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியன சடலங்களால் நிரப்பப்பட்ட மிகப் பெரிய வெறுமையான நிலமாக மாறியது. சிலமணி நேரத்திற்கு சற்று முன்னர் தான் மனிதர்கள் வாழும் வசிப்பிடமாக இருந்த இடம், காய்கறிகளைப் போல் நறுக்கப்பட்டதாகவும், கரிகளைப் போல எரிக்கப்பட்டதாகவும் படுகொலைகளுடைய கொடூரத்தின் உச்சத்தைச் சாட்சியாகக் காட்டும் விதத்தில் பிணங்கள் எங்கும் சிதறிக் கிடந்த கோர இடமாக காட்சியளித்தது.

நரோடா ஒரு பிரபல்யமான இடமல்ல, மாறாக ஓர் ஒதுக்குப்புறமான இடமாகும். இது உள்ளூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், அஹ்மதாபாத் காவல்துறை தலைமையகமான சாஹிப் பவுகிலிருந்து 4 கிமீக்கும் குறைவான தொலைவிலும் தான் அமைந்திருக்கிறது. உயிரை பறிக்கக் கூடிய பங்கர அபாயகரமான ஆயுதங்களைத் தாங்கிய வெறிபிடித்த வன்முறை கும்பல்கள், 10 மணி நேரத்திற்கும் மேலாகவே வெகு ஜாலியாய் படுகொலைகள் செய்திருந்தும், ஆட்சி நிர்வாகம் ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை; சட்டஒழுங்கைப் பலப்படுத்த படைகள் துரிதமாக அனுப்பப்படவில்லை; வன்முறை கும்பலை கலைப்பதற்கு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

நரேந்திர மோடி தான் இந்த இனஅழிப்பு படுகொலைகளுக்கு குற்றம்சாட்டப்பட வேண்டியவன் எனபதில் பொது மக்களுக்கு எவ்வித சந்தேகமுமில்லை. காவல் துறையினர் வன்முறை வெறியர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதாக இக்கொடியவர்களின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து உயிர் தப்பித்த அப்பாவிகள் மக்கள் உறுதிபட தெரிவித்தார்கள். அது இன கலவரமாதலால், வன்முறையாளர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தார்கள் என தந்திரமாக பதிலளித்தனர். அரசு தனது தரப்பில் எதையும் செய்யத் தவறியதையோ அல்லது தேவையான உத்தரவுகளை பிறபிக்கத் தவறியதையோ மறுத்தது. ஆண்டுகள் 5 ஆகியும், நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியவற்றில் நடந்த மனித இனப் படுகொலைகள் சம்பந்தமான வழக்கு விசாரணைகள் இன்னும் துவங்க வேண்டியதிருக்கிறது.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

Tuesday, January 8, 2008

வியாபாரமாகும் மரணங்கள்

பி.இரயாகரன்
08.01.2007

ரசியலில் இழிந்து போனவர்களும், மக்கள் விரோத அரசியலையே செய்பவர்களும், ஒன்றாக கூடி மரணங்களைக் கூட வியாபாரம் செய்கின்றனர். மரணித்தவரை விமர்சனமற்ற புனிதராக காட்டுவதன் மூலம், தமக்குத்தாமே புனித பட்டங்களைக் கட்டிக்கொள்ள முனைகின்றனர். தமது இழிவான, சீரழிவான, பிழைப்புவாத, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தைகளை, இதன் மூலம் கவர்ச்சிப்படுத்த முனைகின்றனர்.

ஒரு சமூக இயக்கத்தில், ஒருவனின் செயற்பாடு என்பது வெளிப்படையானது. இப்படியிருக்க, இந்த சமூக இயக்கத்துடன் எப்படி இணைந்து நின்றான் என்று அவர்களால் நேர்மையாக சொல்ல முடிவதில்லை. அதைச் சொல்லும் எந்த தகவலும், மரணத்தையே வியாபாரம் செய்பவர்களுக்கும் கூட கிடையாது. மாறாக பொய்யாக, பிழைப்புவாத புலமையைக் கொண்டு சிலாகிப்பதே இவர்களின் வியாபார அஞ்சலியாகின்றது. சொற்களைக் கொண்ட வெற்று வார்த்தைகளால், மரணித்தவரை மகுடம் சூட்டும் புல்லுருவித்தனமான அரசியல் தான், மரண நிகழ்வுகளின் போது அரங்கேறுகின்றது.

அண்மையில் பராவின் மரண நிகழ்வும் இப்படித் தான், இதற்குள் தான் நிகழ்ந்தது. கிறிஸ்துவ போதகர்கள், இலங்கை இந்திய அரசின் கூலிக்கும்பல்கள் உட்பட, போலி மார்க்சியவாதிகள் வரை, அவரின் மரணத்தை தமது சொந்த இழப்பு என்று ஒப்பாரி வைத்தனர். இப்படி பிழைப்புவாத சந்தர்ப்பவாத புலம்பல், ஒரு மனிதனின் மரணத்தைக் கூட வியாபாரமாக்கியது.

மனித சமூகத்தையே இழிவாடி வாழ்கின்ற பல பொறுக்கிகள், பொதுவாழ்வுடன் தொடர்புடையவர்களின் மரண நிகழ்வுகளில் கூடுகின்றனர். அங்கே அரோகரா போட்டு கும்பலாகவே சாமியாடுகின்றனர்.

ஒரு மரணமும் ஏற்படும் சோகமும், துயரமும் விற்பனைக்குரிய ஒரு சரக்கல்ல. ஆனால் அதை விற்பனைக்குரிய பொருள் என்று கூறுகின்ற வகையில் தான், அனைவரும் கூடி நின்று வியாபாரமாக்குகின்றனர்.

ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ், புளட் என்று, மக்களுக்கு எதிரான எல்லாக் கூலிக் குழுக்களும் பராவின் மரண நிகழ்வில் கூடினர். போட்டா போட்டி போட்டுக் கொண்டு, அஞ்சலிகள், மதிப்பீடுகள். வானொலியில் நேரடி ஒலிபரப்பு என்று, விதவிதமான எத்தனையோ அரசியல் நாடகங்கள்.

இவர்களுடன் இலக்கியம் என்ற பெயரில் இழிந்து போன கழிசடைகள் எல்லாம் சேர்ந்து, மரணத்தையே ஒரு முழு வியாபாரமாக நடத்தினர். இப்படி எந்த விமர்சனமும், சுயவிமர்சனமுமற்ற, மக்கள் விரோத அரசியல் அரங்கேறியது.

நாம் அவரைப் பற்றி எழுதிய போது, விமர்சனத்தையும் குறிப்பாக்கி சுட்டிக்காட்டிச் சென்றோம். அது அவர் பற்றிய முழுமையான விமர்சனமல்ல எனச் சிலர், எம்மிடம் விமர்சனத்தை வைத்துள்ளனர். நாம் சாதக பாதக அம்சங்களைப் பார்க்க முனைந்தோம். புலியல்லாத தளத்தில் இரண்டு படுபிற்போக்கான அரசியல் போக்கையும் எதிர் கொண்ட பரா, சந்தர்ப்பவாத நடுநிலை எடுத்து இருந்தார். தனக்கென்ற ஒரு தனித்துவமான அரசியலை முன்வைக்கத் தவறி அதே நேரம், முழுமையாக அப்போக்குகளை தழுவுவதை எதிர்த்து நின்றார். இதையே நாம் குறிப்பான விமர்சனம் மூலம், சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த வகையில் இது ஒரு மயக்கத்தையும், தெளிவற்ற மலினத்தையும் உருவாக்கிவிட்டதாக கருதுகின்ற விமர்சனம் இருக்கும் என்றால், அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

மரணம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பது இயற்கையானது. ஆனால் அதை பலரும் மறுத்து, அரசியல் வியாபாரமாகச் செய்கின்ற போது, எமது விமர்சனத்தின் வீச்சு போதாமை உணரப்படுகின்றது.

அவரின் மரண நிகழ்வே, அவரைப்பற்றி அம்பலமாக்கிவிடுகின்றது. அவருக்கு என்று ஒரு கருத்து இருக்கவில்லை. அவர் எல்லாமாக இருந்தார். மரணத்தினக் பின் அப்படித் தான் அரங்கேறியது. அவருக்கு பிடித்த கிறிஸ்துவ பாட்டு, அவருக்கு பிடித்த சினிமா பாட்டு, அவருக்கு பிடித்த நாட்டுப்புறப்பாட்டு எல்லாம் பாடினர். அவரின் இந்த விருப்பு சார்ந்த அரசியலுக்குள் கொண்டாடப்பட்டது. இதை செய்யும் உரிமையைக், கொண்டு, அவரவர் இதை அரங்கேற்றினர். கிறிஸ்துவ பாதிரியர் கூட பாட்டுப்பாடி, மரணத்தை வியாபாரமாக்கினார். இந்தப் பரா, எப்படி மார்க்கிசவாதியாக இருக்க முடியும்? சிவப்புக்கொடியை போர்த்துவதால், அவரின் செயற்பாடுகள் மார்க்சிமாகிவிடுவதில்லை.

இப்படித்தான் பராவின் அரசியல் என்பது, சந்தர்ப்பத்துக்கு ஏற்றது. தனக்கென்று ஒரு கொள்கையை முன்னிறுத்தி, அதற்காக அவர் உறுதியாக போராடியது கிடையாது. இதனால் அவர் கோட்பாடற்ற எல்லாமாகி, எல்லோருமாக்கினார். தனிப்பட்ட நட்பு முதன்மை பெற, அரசியலோ விபச்சாரமாகியது.

அவரின் தனிப்பட்ட பண்பு சார்ந்த நட்பான அணுகுமுறை, கடுமையான தர்க்கங்களின் பின் கூட அவருடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கியது. அந்தளவுக்கு அவரின் நட்பு சார்ந்த பண்பு பலமாக இருந்தது. கருத்து சார்ந்த வர்க்கப் பண்பு பலமற்றதாக இருந்தது. விளைவு பிற்போக்கு அரசியலுக்கு ஏற்ப அனைவரினதும் நண்பராகினார்.

புலம்பெயர் இலக்கிய சந்திப்புக்குரிய 20 ஆண்டு காலத்தின் மொத்த சீரழிவுக்கும், இவர் மிகமுக்கியமான பொறுப்பாளி என்பதே மற்றொரு உண்மை. அது எந்த மக்கள் இலக்கியத்தை படைத்ததும் கிடையாது. இலக்கியத்தின் பெயரில் கதைத்தும், குடித்தும், கூத்தடித்தும், கும்மாளமடிக்கும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகினர்.

இப்படி தமக்கென்று ஒரு சமூகப் பொறுப்பு சுமத்தப்பட்டு இருந்ததை அடியோடு நிராகரித்தனர். சமூக அக்கறை கொண்டோர், இவர்களால் எள்ளிநகையாடப்பட்டனர். இந்த 20 வருடத்தில் தான், பல தரப்பாலும் தமிழ் இனம் அழிக்கப்பட்டு, அவர்கள் சீரழிக்கப்பட்டு வந்தனர். இவர்களோ கண்ணை அந்த பக்கம் திறக்கவில்லை. அரசியல் பேசாத, பேசக் கூடாத இலக்கிய சந்திப்பாக்கினர்.

மனித அவலம் நிறைந்த இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் இதற்கு எதிராக, என்ன பணியை சமூக அக்கறையுடன் ஆற்றினான் என்பது மிக முக்கியமானது. அது எதையும் இவர்கள் எடுத்த வைக்க முடியாது. படுபிற்போக்கான அரசியல் போக்குகளில் பின்னால் நிற்பது அல்லது வம்பளந்து பொழுதுபோக்குவதுமாக, புலியல்லாத அரசியல் தளத்தை சிதைத்தவர்கள் இவர்கள். உண்மையில் தமிழ் மக்களின் வாழ்வு மண்ணில் எப்படி பலரால் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டதோ, அதையே இவர்கள் அவர்களுக்கு சார்பாக கோட்பாட்டுத்தளத்தில் செய்தனர்.

புலியல்லாத இலக்கியம் என்பது படிப்படியாக மார்க்சியதுக்கும், இடதுசாரியத்துக்கும் எதிராக மாறியது. இலக்கியச் சந்திப்பும், அதன் வாரிசுகளும் வலதுசாரி கடைக்கோடியில் நின்று வம்பளந்தனர். இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தவர்கள், அரசு பணத்தை இதன் பெயரில் பெற்றவர்கள், பாலியல் ரீதியாக அதில் உள்ள பெண்களை புணர்ந்தவர்கள் முதல் குடியில் மிதப்பது வரை பலவாக அது சீரழிந்தது. இதை எல்லாம் பரா ஏற்றுக்கொண்டு, சகித்துக் கொண்டு, அதை அனுசரித்துக் கொண்டு, அதைக் கொண்டோடியவர். ஒரு சந்தர்ப்பவாதியாக பிழைப்புவாதியாகவே இருந்தவர். இதை எதிர்த்து, அவர் போராடவில்லை.

மார்க்சியத்தின் மீதான அவரின் விருப்பு என்பது, சந்தர்ப்பத்துக்கு ஆட்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தது. அனைத்தும் தனிப்பட்ட நட்புக்கு உட்பட்டதாகியது. வர்க்க அடிப்படையில், சமூகத்தை நிகழ்ச்சி நிரலை அணுகியது கிடையாது.

புலம்பெயர்வுக்கு முந்தைய அவரின் கடந்தகால தொழிற்சங்கச் செயல்பாடுகள், அனுபவங்கள் இடதுசாரி தன்மை வாய்ந்தவையாக இருந்தது. ஆனால் அது தொழிற்சங்கங்களின் தவறுகளை உள்ளடக்கியதே. அவருக்கு தெரிந்த இதை எங்கும் மீளமீள முன்வைக்கும் போது, அவரை இடதுசாரியாகவே எப்போதும் காட்டியது. இடதுசாரியம் மீது காறித்துப்பும் புலியல்லாத மாற்றுத்தளத்தில், பரா இதை மீளமீள முன்வைத்தது என்பது மட்டும் தான் அவரை மதிப்பதற்கு ஒரே அடிப்படையாக இருந்தது. அதற்கு வெளியில் அவருக்கு எதுவும் தெரியாது. மறுபக்கத்தில் அவரின் கருத்துக்களை வெறும் அலட்டலாகவே இலக்கிய குஞ்சுகள் எடுத்தனர். இன்று அவர்கள் தான், அவரை உச்சிமோந்து தமது அரசியலுக்கு ஏற்ப அவரை விற்பனை பொருளாக்கியுள்ளனர்.

இடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கவாதத்தை பரா முன்வைத்த போதும், அவர் மார்க்சிய அடிப்படையைப் புரிந்து கொண்டவரல்ல. அனுபவவாத அரசியலாகவே அது எப்போதும் வெளிப்பட்டு வந்தது. இதனால் இடதுசாரி சிந்தனை முறையில் நின்று, சமூகத்தை, சமூகப் போக்குகளை இனம் காணவும், வழிகாட்டவும் முடியவில்லை. இதனால் அவர் ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தியவரல்ல. தொழிற்சங்கவாத அணுகுமுறையுடன் கூடிய தனிப்பட்ட நட்பு அரசியலை முன்னெடுத்து, ஒரு சந்தர்ப்பவாதியாகினார். இதனால் தான் அனைவரும் அவரின் மரணத்தில், அவரவர்களுக்கெனப் புடுங்கிக் கொள்ளும் வேட்டையில் இறங்கினர்.

இதனால் அவருக்கு எத்தனையோ முகங்கள். வலதுசாரிகள் முதல் கொலைகாரர்கள் வரை, அவரைப் போற்றினர். இப்படி அவர் எல்லாமாகவும் இருந்தார். தனக்கென்று ஒரு வர்க்க அரசியலை மட்டும் அவர் கொண்டிருக்கவில்லை.

தோழர் கதிரவன் உரை

தோழர் கதிரவன் உரை

Monday, January 7, 2008

நிலவில் இந்தியன் :வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு!

ண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள். அறிவாளிகளின் கூடாரமான இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும் ஆண்டுக்கொரு முறை வாணவேடிக்கையை நடத்துகிறது. இஸ்ரோவின் ஓராண்டுச் செலவு ரூபாய் 4000 கோடி.

இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் 2 வெளிநாட்டு சோதனை விண்கோள்களையும், இரண்டு உள்நாட்டு விண்கோள்களையும் ஏவியது. அதில் எஸ்.ஆர்.வி.1 என்ற விண்கோள் விண்வெளியில் 12 நாட்கள் சுற்றிய பிறகு வங்காள விரிகுடாவில் இறக்கப்பட்டது. ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி அதையே மீட்டுக் கொண்டு வருவது என்பது ஒரு இமாலய வெற்றியாம். பல தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி இச்சாதனையை நிறைவேற்றியதாக இஸ்ரோவின் அறிவியலாளர்கள் பெருமைப்படுகிறார்கள்.

அமெரிக்கா இந்தச் சோதனையில் 12 முறை தோல்வியடைந்து 13ஆவது முயற்சியில் வெற்றியடைந்ததாம். இந்தியாவோ முதல் சோதனையிலே வென்றுவிட்டதாம். ஆனால் அமெரிக்காவின் சோதனைகள் தோல்வியடைந்தது 1960ஆம் ஆண்டு. இந்தியா அடைந்த வெற்றியின் பின்னே 47 ஆண்டுகள் இடைவெளி இருப் பது போகட்டும். இஸ்ரோவின் அறிவியலாளர்கள் ஒரு அறிவியாளன் என்ற முறையில் அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி — மிகுந்த செலவு பிடிக்கும் சோதனை என்றாலும் — சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதை நாமும் பாராட்டுவோம். ஆயினும் இந்த வெற்றியினால் என்ன பயன்?

விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்புவதற்கு இந்த வெற்றி ஒரு மைல் கல்லாம். அடுத்த ஆண்டு இஸ்ரோ 400 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் எனும் விண்கோளை நிலவுக்கு அனுப்பப் போகிறதாம். இன்னும் பத்தாண்டுகளில் நிலவுக்கு ஒரு இந்தியனை அனுப்ப முடியுமாம். இதற்கான உத்தேச செலவு மதிப்பீடு 10000 கோடி ரூபாய். இதற்கான மறைமுக நிறுவனச் செலவு இன்னும் சில ஆயிரம் கோடிகளைக் குடிக்கும்.

மூன்று டன் எடை கொண்ட விண்கோள், அதில் விண்வெளி வீரர்களுக்கான அறை, சேவை அறை, அவசரநிலை அறை போன்றவற்றை இந்தியா முழுவதும் உள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி நிலையங்களில் கட்டவேண்டும். மேலும் உயர் அழுத்த அதிர்வைச் சமாளிப்பதற்கான பயிற்சி, வீரர்களின் உடைகள், பாதுகாப்பு முறைகள், உடல் நலக் கண்காணிப்பு, உயிர்காக்கும் கருவிகள் முதலியனவற்றில் வீரர்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி பத்திரமாக உயிரோடு மீட்டுக் கொண்டு வர இத்தனை "பகீரதப் பிரயத்தனங்கள்' செய்தாக வேண்டும்.

பூமியில் இருக்கும் பல கோடி இந்தியர்களை மரணக் குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம். முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் இந்தியா டுடே போன்ற பிரச்சார பீரங்கிகள், இந்த வல்லரசு ஜம்பத்தை மட்டும் ஊதிவிடத் தவறுவதில்லை.

போதாக்குறைக்கு நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், ""குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்'' என்று சாமியாடி வருகிறார்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன? விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. நான் காசிக்குப் போயிருக்கிறேன், மெக்காவுக்குப் போயிருக்கிறேன் என்பது போல இந்தியனை நிலவுக்கு அனுப்பி விட்டோம் என்று வெட்டியாகப் பீற்றித் திரியலாம், அவ்வளவுதான்.

இப்படித்தான் 1960களில் அமெரிக்காவும், ரசியாவும் கெடுபிடிப் போருக்காக விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கின. யார் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்ற போட்டியில் பல மனித உயிர்களும் விரயமாக்கப்பட்டன. இது அறிவியலின் பால் உள்ள காதலால் நடக்கவில்லை என்பதுதான் முக்கியம். ஏகாதிபத்திய உலகில் தூய அறிவியல் காதல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா!

சோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். ஆயினும் இதற்கு முன்னும் பின்னும் அரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாக திரும்பி வருவோம் என்ற உத்தரவாதமில்லாமல் இருநாட்டு வீரர்களும் உற்சாகமின்றி மரணபயத்துடன் சென்றதை பி.பி.சி. ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது. சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்த சோவியத் யூனியன் இந்தப் போட்டியில் சிக்கித் தனது பொருளாதார வல்லமையை இழந்து திவால் ஆனது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. உலகைக் கொள்ளையடித்து உலையில் போட்ட இந்த ஆராய்ச்சியினால் என்ன பயன்? உலக மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நாசகார ஆயுதங்களை விண்ணில் சுற்றவிட்டதுதான் மிச்சம்.

70களில் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா, சோவியத் யூனியனை ஆயுதப் போட்டியில் வெல்வதற்காக தனது கவனத்தை நட்சத்திரப்போர் திட்டத்தின் மீது குவித்தது. இதன் செலவு மதிப்பீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். பின்பு ரசியா வீழ்ந்த பிறகு அந்தத் திட்டத்திற்கு அவசியமில்லாததால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் விண்வெளி ஆராய்ச்சி ஈராக்கிலும், ஆப்கானிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்குத்தான் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

அதிலும் அமெரிக்க விண்கோள்களின் உதவியுடன் ஈராக்கின் இராணுவ இலக்குகளை மட்டும் தாக்குவதாகக் கூறி மக்கள் குடியிருப்பில் குண்டு போட்டதுதான் அதன் தொழில்நுட்ப வெற்றி! இது போக இந்த விண்வெளி ஆராய்ச்சி வித்தைகள் ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை உற்பத்தி செய்ய மட்டும்தான் பயன்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் மேதைகள்தான் புளோரிடா மாநிலத்தை காத்ரினா சூறாவளி பிய்த்தெறிந்தபோது, மக்களைக் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்றார்கள்.

ரசியாவும் தற்போது பேருக்கு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பணம் சேர்ப்பதற்காக தலைக்கு 90 கோடி ரூபாய் என்று கட்டணம் வைத்து கோடீசுவர முதலாளிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. ரசிய விண்வெளிச் சாதனையின் இலட்சணம் இதுதான். சுரண்டலுக்கும், நாசகார ஆயுதங்களுக்காகவும் மட்டுமின்றி முதலாளிகளின் கேளிக்கைக்கும் விண்வெளி அறிவியல் பயன்படும் என்பது இதில் உள்ள செய்தி.

ஏகாதிபத்தியங்களின் இலாபவேட்டைக்காக மலிவான உழைப்பை விற்று கொத்தடிமைகளின் நாடாக மாறிவரும் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 65 சதவீதத்தை தனியார் முதலாளிகளிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடான சீனாவில் ஓராண்டில் நடக்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு வக்கற்ற சீன அரசு 2003இல் விண்வெளிக்கு ஒரு சீனவீரரை அனுப்பி இந்தச் சாதனையில் மூன்றாம் நாடாக மாறியிருக்கிறது. சீனாவும் நிலவுக்கு ஒரு வீரரை அனுப்பப் போகிறதாம். சீன கடற்கரைப் பெருநகரங்களில் நடக்கும் பேஷன் ஷோக்களில் அழகிகள் வாத்து நடை நடக்க, சீன வீரர் நிலவில் அன்ன நடை நடக்கப் போகிறார். கிராமப்புறங்களில் இருந்து துரத்தப்படும் சீன விவசாயிகள் நகரங்களை நோக்கி நாடோடிகளாய் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். நல்ல வளர்ச்சிதான்!

உலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது? நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் நிலவுக்கு இந்தியனை அனுப்புவது என்பது ஆபாசமன்றி வேறென்ன?

· அஜித்

Sunday, January 6, 2008

சங்கரமடத்தை விட்டு வாப்பா

சங்கரமடத்தை விட்டு வாப்பா

சந்ததியாரின் கண்ணைத் தோண்டியவர்கள் சக போராளிகளின் ஆணுறுப்பை அறுத்தவர்கள் மாநாடு

சந்ததியாரின் கண்ணைத் தோண்டியவர்கள் சக போராளிகளின் ஆணுறுப்பை அறுத்தவர்கள் மாநாடு


பி.இரயாகரன்
06.01.2007

ந்ததியாரின் கண்ணையே தோண்டி பின் அவரைக் கொன்றவர்கள், அவரின் உடலை சாக்கில் கட்டி கூவம் நதியில் போட்ட கொலைகாரர்கள் ஜெர்மனியில் கூடுகின்றனர். இப்படி புளாட் என்ற கொலைகார சதிக் கும்பல், தமது கொலைகளை தொடர்வதற்கு பெயர் சர்வதேச மாநாடு. இந்த மாதம் நடுப்பகுதியில், ஜெர்மனியில் இந்தக் கொலைகாரர்கள் கூடும் அறிவித்தலை விடுத்துள்ளனர். ஜெர்மனி பொலிசுக்கு தகவல் கொடுக்கும் ஆள்காட்டியின் ஏற்பாட்டில், இந்த மாநாடு.


இந்த புளட் இயக்கம், உமாமகேஸ்வரனுக்கு அடுத்து தலைமைப் பொறுப்பில் இருந்த சந்ததியாரை படுகொலை செய்த விதமோ வக்கிரமானது. அவரின் கண்ணை முதலில் தோண்டி எடுத்தபின், அவரை துண்டுதுண்டாக வெட்டியவர்கள், அவரின் உடலை கூவத்தில் போட்டனர். இந்த கொலைகாரக் கும்பல் தான்போடும் ஜனநாயக வேஷத்துக்கு ஏற்ப ஒரு மாநாடு. மானம்கெட்ட கொலைகார நாய்கள் கூடும் ஒரு இடம் தான், அது.

இந்த புளட் என்ற சதிகார கொலைக் கும்பல், உள் இயக்கத்தில் நடத்திய கொலைகளோ சில நூறு. அண்ணளவாக 500 பேர் புளட்டின் உள்ளியக்க படுகொலைக்கு பலியானவர்கள். (இதன் ஒரு பகுதியை விரையில் நாம் வெளியிட உள்ளோம். உங்களிடமும் இருக்கும் தகவல்களை தந்துவுதமாறு கோருகின்றோம்.) இதுவரை அப்படிக் கொல்லப்பட்டவர்களை, எந்த ஜனநாயகமும் மீட்டு எடுக்கவில்லை. மாறாக தாம் ஜனநாயகவாதிகள் என்று வேஷம் போடுவது மட்டும் தொடருகின்றது.

அன்று புளட் என்ற சதிக் கும்பல், சித்திரவதைக்கென்று ஒரு குழுவை நிறுவனப்படுத்தி வைத்து இருந்தது. சித்திரவதைக்கென்ற தனிமுகாங்கள், சித்திரவதைக்கென்று சிறப்பு ஏற்பாடுகள், கொல்வதற்கும் உடலை அழிப்பதற்கும் என்று வகைவகையான ஏற்பாடுகளையும், வழிமுறைகளையும் கொண்டிருந்தது.

யாரைக் கொல்ல இந்த ஏற்பாடுகள்? வேறு யாரையுமல்ல, சொந்த இயக்க உறுப்பினரைக் கொல்லத்தான். பின்தளத்தில் இந்த ஏற்பாட்டுடன் தான், உமாமகேஸ்வரன் புளட்டின் தலைவராக இருக்கமுடிந்தது. தளத்தில் இருந்து கொல்வதற்காகவே, பின்தளத்துக்கு பலரை பலவிதத்தில் கடத்திச்சென்றவர்கள். இந்த புளட்டின் தலைவர் வெறும் கொலைகாரன் மட்டுமல்ல. இயக்க பெண்களை பாலியல் ரீதியாக வளைத்துப் போட்டும், மிரட்டியும், ஆசை காட்டியும் அனுபவிப்பதில் கூட, அவர் தலைவர் தான். அவனின் பெயரால், அவனின் வழியில் ஜெர்மனியில் மாநாடு.

இவர்கள் தமது கடந்தகால செயலுக்காக மனம் வருந்தியது கிடையாது. இன்று வரை அதற்காக எந்த மன்னிப்பைக் கோரியதும் கிடையாது. ஏன் அதைச் செய்தோம் என்று, சுயவிளக்கம் கூட கிடையாது.

மாறாக இன்றும் அதே அரசியல், அதே வக்கிரம். இன்று இலங்கை அரசில் கூலிக் குழு. இதை எப்படி செய்வது என்பதை ஆராய மாநாடு. இப்படி இருக்க, தம்மைத் தாம் ஜனநாயகவாதிகள் என்கின்றனர். புலியை எதிர்ப்பதால், தாம் ஜனநாயகவாதி என்கின்றனர். இப்படித்தான் பலரும். அரசுடன் கூடி இயங்குவது தான், ஜனநாயகம் என்கின்ற அளவுக்கு இலங்கை அரசியலில் புழுத்துக்கிடக்கிற கூட்டத்தில் ஒன்று தான், இந்த சதிகாரப் புளட்.

புலியை அழிக்க, புலியைக் கொல்லுதல் என்பதே இவர்களின் ஜனநாயக வேலைத்திட்டமாகும். இப்படி புலியொழிப்பில் ஒரு கூலிக் குழுவாக செயல்படும் இவர்கள், மறுபக்கத்தில் கப்பம், கொள்ளை முதல் அனைத்து அடாவடித்தனங்களையுமே தமது ஜனநாயக நடைமுறையாக கொண்டவர்கள்.

1984-1986 காலகட்டத்தில் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை சந்ததியாருடன் நின்றது. கொலைகாரர்களும் ரவுடிகளுமான சிறுபான்மை உமாமகேஸ்வரனுடன் நின்றது. கொலைகள் மூலம் அமைப்பை அச்சுறுத்தி அடிபணியவைத்தன் மூலம், உமா கும்பல் தனது தலைமையைத் தக்கவைத்தது. மத்திய குழு உறுப்பினர்களைக் கூட, தமது சொந்த வதை முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கி செயல் இழக்கவைத்தனர்.

அதே நேரம் மத்திய குழுவின் பெரும்பான்மை, உமாமகேஸ்வரனை எதிர்த்தது. அதன் மக்கள் விரோத அரசியலை எதிர்த்து, சந்ததியார் தலைமையில் அணி திரண்டனர். உமாமகேஸ்வரன் தலைமையில் திரண்டு நின்ற கொலைகார கும்பலும் ரவுடிகளுமான ராஜன் மற்றும் மாணிக்கதாசன் கும்பல், தாம் அல்லாத மத்திய குழுவை படுகொலை செய்ய முயன்றது.

இந்தப் படுகொலையில் இருந்து தப்ப, பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்கள் தப்பியோடினர். இப்படித் தப்பியோடிய குழு தான் தீப்பொறியாயினர். இவர்கள் தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை மூலம் அறிமுகமாகினர். அவர்களின் ஒருவரான கேசவன்(நோபட்) எழுதிய நூல் தான், புதியதோர் உலகம் என்ற நாவல். இது அந்த கொலைகார புளட் என்ற கும்பலைப் பற்றியது. இந்த கொலைக்காரக் கும்பல் தான், ஜெர்மனியில் மாநாடு நடத்துகின்றனர்.

அன்று பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்கள் உயிருக்கு அஞ்சி தப்பி ஒடிய நிலையில், சந்ததியார் மட்டும் முன்னணி தலைவர் என்ற நிலையில் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று தப்பிச் செல்லவில்லை. அவரைக் ஏமாற்றி அழைத்துச்சென்ற கொலைகார சதிக் கும்பலான புளட்டோ, அவரின் கண்ணை முதலில் பிடுங்கி எடுத்த பின் படுகொலை செய்தது.

இப்படி படுகொலைகளே புளாட்டின் அரசியலாக மாறியது. இதில் இருந்து தப்பியவர்களுக்கு புகலிடம் கொடுக்கவோ, சந்ததியார் கொலையை அம்பலப்படுத்தவோ யாரும் கிடையாது. வலதுசாரி பாசிச சூழல் தான், எங்கும் எதிலும் காணப்பட்டது. இந்த நிலையில் என்.எல்.எவ்.ரி அமைப்புத் தான், அவர்களுக்கு புகலிடத்தை வழங்கியது. அவர்களைப் பாதுகாக்கவும், தங்கவும் இட ஏற்பாடுகளையும் செய்தது. அவர்கள் வெளியிட்ட தீப்பொறி மற்றும் புதியதோர் உலகம் என்ற நூலுக்கான ஒரு தொகைப் பணத்தையும் வழங்கியது. தீப்பொறி உறுப்பினர்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றதும் என்.எல்.எவ்.ரி தான். அவர்களின் புதியதோர் உலகம் நூல் உட்பட தீப்பொறி பத்திரிகையை, இலங்கைக்குள் எடுத்துச்சென்று கொடுத்ததும் என்.எல்.எவ்.ரி தான். என்.எல்.எவ்.ரி செயல்பாடுகள் இப்படி பல தளத்தில் நடந்தது.

இதன் பின் சந்ததியார் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு முழு மக்கள் முன்னும் மறைக்கப்பட்டது. இந்த நிலையில், அதையும் என்.எல்.எவ்.ரி தான் மிகப்பெரிய 1000 போஸ்ரர்கள் மூலம் தமிழ் மக்கள் முன் இந்தக் கொலையை எடுத்துச்சென்றனர். இப்படி கொலையெறியாட்டம் ஆடியவர்கள், இன்று ஜனநாயக வேஷம் போட்டு கூடுகின்றனர்.

மத்திய குழு உறுப்பினர்களுக்கும், இரண்டாவது தலைவரான சந்ததியாருக்கும் இது தான் கதை என்றால், சாதாரண உறுப்பினர்கள் கதையோ அதிபயங்கரமானது. மனநோய் பிடித்த புளட் கொலைகாரக் கும்பலால், அண்ணளவாக 500 பேர் இப்படிக் கொல்லப்பட்டனர். இந்த வகையில் புளட்டின், சவுக்கு தோப்பு வதை முகாம் புகழ் பெற்றது. பலர் இயக்கத்தில் இருந்து தப்பியோடத் தொடங்கினர். முழுமையாக கொலைகாரக் கும்பலான பரந்தன் ராஜன் மற்றும் மாணிக்கம்தாசன் கும்பல் இதன் மூலம் அதிகாரத்துக்கு வந்தது.

ஏன் பலரும் கொல்லப்பட்டனர். ஏன் தப்பியோடினர். இதற்கு புளட்டோ, அதில் இருந்து உருவான ஈ.என்.டி.எல்.எவ் வோ பதிலளிக்காது. இவர்களால் கொல்லப்பட்டவர்களும், இவர்களுக்கு அஞ்சியோடியவர்களும் கோரியதோ, மக்களின் அடிப்படை உரிமையைத் தான். இன்று வரை புளட்டோ, ஈ.என்.டி.எல்.எவ் வோ அதை மறுக்கின்றது. மக்களின் உரிமைகளை மறுப்பது தான், அதன் அரசியல். அதனால் தான் இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக அவை இன்றுவரை உள்ளது.

அன்று புளட்டின் போராட்டம் யாருக்கு, எதற்கு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 1978 - 1979 இல் புலியில் இருந்து பிரிந்தவர்கள் எழுப்பிய அதே கேள்வியைத் தான், இங்கு மீளவும் முன்வைத்தனர். போராட்டம் என்பது மக்களுக்கானது என்பதை அழுத்திக் கூறியவர்களை, அதை அமைப்பில் முன் வைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுத்து கொன்றனர்.

மக்களின் விடுதலை என்ற அடிப்படையில், மக்களின் சமூக பொருளாதார முரண்பாட்டைக் களையும் வர்க்கப் போராட்டத்தை அவர்கள் கோரினர். அதை அமைப்பில் பிரச்சாரம் செய்தனர். இதனால் இதற்கு எதிரானவர்கள், அவர்களை கொன்று போடுவது என்ற அடிப்படையில் தான், வதை முகாமை நிறுவி சித்திரவதை செய்து பின் கொன்றனர். இதில் இருந்து பலர் தப்பி ஒடினர்.

இப்படி புளட் என்ற சதிகார அமைப்பு சிதையத் தொடங்கியது. இதை சமாளிக்க நடந்த தளமாநாடு கூட, மக்களுக்காக போராடுவதை நிராகரித்தது. கொலைகாரக் கும்பலான ராஜன் மாணிக்கதாசனுக்கு இடையில் புதிதாக உருவாகிய அதிகார முரண்பாடே தளமாநாடாகியது. உமாமகேஸ்வரன் மாணிக்கதாசன், சோதீஸ்வரன், வாசுதேவா( பரமதேவாவின் அண்ணர்) போன்றவர்களுடன் சேர்ந்து ராஜனை எதிர்த்தான். தளமாநாட்டைப் பயன்படுத்திய ராஜன் - அசோக் ஈஸ்வரன், தீபநேசன், சிவராம், செந்தில், பாபுஜி, முரளி, ஜென்னி கும்பல், புதிய மக்கள் விரோத கும்பலாக கொலைகார ஈ.என்.டி.எல்.எவ் வடிகட்டினர்.

இப்படி சூழ்ச்சி மற்றும் சுத்துமாத்துகள் மூலம், தளமாநாட்டை தோற்கடித்தனர். அரசியல் போராட்டம் என்பது, ராஜன் உமா கும்பலின் மோதலாக மாறியது. அது துப்பாக்கி மோதல் வரை சென்றது. ரவடி ராஜனுடன் சேர்ந்து அசோக் எதிர்த்தரப்பை சுட்டக்கொல்ல முயன்ற போது, அசோக் காயமடையும் வரை மோதல் அரங்கேறியது.

இப்படி மக்களுக்கான அரசியல் என்ற பதாகை தூக்கியெறியப்பட்டது. அமைப்பு இப்படி கொலைகார சதிகார கும்பலுக்குள் முற்றாகவே சிதைந்து, சின்னாபின்னமாகியது. கொலைகாரர்களும், இதை பயன்படுத்திப் பிழைப்பவர்களுமோ இரண்டு பக்கத்திலும் எஞ்சினர். புலிகள் புளட்டை தடை செய்து ( சின்ன மென்டிஸ் போன்றோர்) சிலரைக்கொல்ல, அந்த இரண்டு கும்பலும் முழுமையாக இந்திய இலங்கை அரசின் கூலிக் குழுக்களாக சிதைந்தன.

இப்படித்தான் இவர்களின் மக்கள் விரோத வரலாறு நீண்டு கிடக்கின்றது. இன்று இதை மூடிமறைக்கவே, தமக்குத்தாமே சூட்டிக்கொள்வது ஜனநாயகவாதிகள் என்ற வேஷம்.

ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் இந்தியாவின் கைக் கூலிக் கும்பல், தீப்பொறி என்ற பெயரையே பயன்படுத்தி இணையம் நடத்துகின்றது. யாருக்கு எதிராக தீப்பொறி பத்திரிகை வந்ததோ, அந்தப் பெயரையே பயன்படுத்தி மக்களுக்கு எதிராக இயங்கும் இணையம். அதைவிட மூடிமறைத்து நடத்திய, லண்டன் ரீ.பீ.சீ என்ற வானொலி. ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஜனநாயக விரோதிகளாக இருப்பதில் உள்ள, வக்கிரமோ கடைகெட்ட தனமானது. இந்த ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் இந்தியக் கூலிக் குழுவாகி, இந்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து, 1987-1991 வரை பாரிய படுகொலைகளை மண்ணில் நடத்தியவர்கள் இவர்கள். புலியில் இருந்து வெளிவந்த கருணா, கூலிக் குழுவாக சீரழிந்த போது, அதனுடன் கூடி மனிதவேட்டை நடத்தியவர்கள். இப்படி இதன் மனித விரோத செயல்பாட்டுக்கு பல வரலாறுகள் உண்டு.

புளட் இலங்கை அரசின் கூலிக் கும்பலாக மாறியது. இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் இலங்கை அரசின் வளர்ப்பு நாயாக மாறிக் குலைத்தது. மாலைதீவினைக் கைப்பற்றும் சதிகார கூலிக் கும்பலாகவும் கூட மாறியது. வவுனியாவில் கப்பம், வரி, கடத்தல், கொலைகளை அரசியலாகக் கொண்டு, இலங்கை அரசின் ஒரு கூலிக் கும்பலாகவே இயங்குகின்றது.

இப்படி இயங்கும் இந்த இரண்டு கொலைகாரக் கும்பலும், புலம்பெயர் நாட்டில் ஜனநாயக வேஷம் கட்டி ஆடுகின்றனர். இதில் புளட் மாநாடு என்கின்றனர். என்ன மக்களின் விடுதலைக்காகவா மாநாடு? இல்லை, நிச்சயமாக இல்லை. மாறாக இலங்கை அரசுடன் சேர்ந்து, உலக ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து, எப்படி புலியை ஒழிப்பது என்பதை ஆராயும் சதி மாநாடு. இதுதான் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம். எந்த மக்களின் விடுதலைக்காகவுமல்ல. புலிகளின் பெயரில் எப்படி மக்களை ஒடுக்குவது என்பதைப் பற்றி சதிகாரக் கும்பல் கூடி ஆராயவுள்ளது.

இவர்கள் தமது அமைப்பில் இருந்த பலரைக் கொன்று போட்டவர்கள். பல நூறு மக்களை கொன்றவர்கள். இப்படிப்பட்ட பொறுக்கிகள் மையம் தான் புளாட்.

இவர்கள் மாநாடு எந்த தமிழ் மக்களைப் பற்றியும் அக்கறை கொள்ளப் போவதில்லை. அன்று இவர்களால் கொல்லப்பட்டவர்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்று இன்று சொல்பவர்கள் தான் இவர்கள். இன்றும் மக்களுக்காக போராடுபவர்களை கொல்லுகின்றனர். கொல்லத் தயாராகவே உள்ளவர்கள் இவர்கள். புளட்டில் இருந்தவர்களை அன்று ஏன் தாம் கொன்றோம் என்ற சொல்ல மறுப்பவர்கள். இன்றும் அதை சுயவிமர்சனம் செய்ய மறுக்கும் கொலைகாரர்கள் தான் இவர்கள்.

சுழிபுரத்தில் ஆறு இளம் புலிப் போராளிகளை அவர்களின் ஆணுறுப்புகளை அறுத்து கதறக்கதற கொலைசெய்து மணலில் புதைத்தவர்கள். கொலையுண்ட உடல்கள் வெளித்தெரிய வந்தவுடன் அவசர அவசரமாக தமக்கும் இக் கொலைக்கும் சம்பந்தமில்லை என மிரட்டும் அறிக்கைகளை வெட்கமின்றி வெளியிட்டனர். சங்கிலி என்ற கந்தசாமி தலைமையில் நடந்தேறிய மூர்க்கமான வெறித்தனமான ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொலை பற்றி இயக்கத்துக்குள் கேள்வியெழுப்பியவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இக்கொலைக்கு சாட்சி சொல்லக்கூடியவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு பின்தளம் கொண்டு செல்லப்பட்டனர். சில மத்திய குழு உறுப்பினர்கள் எதுவுமே தெரியாதவர்கள் தாங்களென வேசமிட்டனர். கொலை நடந்த சுழிபுரத்தில் இக் கோரக் கொலை நடந்தபோது அங்கு அந்நேரம் பாசறை வகுப்புகள் நடத்திய சிலருக்கு இக்கொலை பற்றித் தெரிந்தே இருந்தது.

திருகோணமலை புளட் உறுப்பினர்கள் அகிலன் செல்வன் கொலையானது இயக்க உறுப்பினர்களை திகில் கொண்டு அவர்களை உறைய வைத்தது. இக் கொலைகளுக்கு காரணகர்த்தாக்கள் யாரென்பதும் அவர்கள் ஏன் எவ்வாறு கொலைசெய்யபட்டனர் என்பதும் தெரிந்தவர்கள் தான் இன்றைக்கும் புளட்டில் ஜனநாயகம் பேசுபவர்களாக இருக்கின்றனர்.

இன்று இந்த கொலைகாரக் கும்பலை இனம் காண்பது, சமூக அக்கறையுள்ள அனைவரினதும் கடமையாகும்.