தமிழ் அரங்கம்

Showing posts with label உயர்நீதி. Show all posts
Showing posts with label உயர்நீதி. Show all posts

Monday, April 13, 2009

போலீசின் நீதிமன்றத் தாக்குதல் பஞ்சு மிட்டாய் தீர்ப்பு

பிப்ரவரி 19 உயர்நீதி மன்றத் தாக்குலுக்கு எதிராக தமிழக வழக்குரைஞர்கள் ஒரு மாத காலமாக நடத்தி வந்த நீதிமன்றப் புறக்கணிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத் தாக்குதலுக்குப் பொறுப்பான இரு போலீசு அதிகாரிகளை (ராமசுப்பிரமணியம், விசுவநாதன்) தற்காலிகப் பணிநீக்கம் செய்வதாக, 18.3.09 அன்று முகோபாத்யாயா தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடுவதாக வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு 20.3.09 அன்று மாலை அறிவித்திருக்கிறது. புறக்கணிப்பு கைவிடப்பட்ட போதிலும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரையில் பிற வடிவங்களிலான போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டக்குழு கூறியிருக்கிறதே தவிர, என்ன விதமான போராட்டங்கள் நடத்தப்படும் என்பது குறித்து விளக்கவில்லை.

போராட்டங்களில் வெற்றிதோல்வி சகஜம்தான்; பிழைப்புவாத சங்கத் தலைமைகள் போராட்டத்துக்குத் துரோகமிழைப்பதும் சகஜம்தான். எனினும், இந்தத் தலைமையால் ஒரு தோல்வியை வெற்றியாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் இதனை ஒரு வெற்றி என்று நம்பவில்லை; எனினும், இந்த முடிவை எதிர்க்கவும் இல்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, March 21, 2009

தில்லை நடராசரின் ஆலயம்:தீட்சிதர்களின் ஆதிக்கம் தகர்கிறது!

நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டுள்ள இடைக்கால வெற்றியைக் கொண்டாடுவோம்.பிப்ரவரி 2, 2009 தமிழகத்தின் வரலாற்றில் இதுவொரு முக்கியமான நாள் என்றால், அது மிகையானதல்ல. அன்றுதான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்ப்பு வெளியானது.

தீட்சிதப் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராகத் தமிழக மக்கள் அடைந்த இந்த வெற்றி எளிதாகக் கிடைத்த ஒன்றல்ல. சிவனடியார் ஆறுமுகசாமியை முன்னிலைப்படுத்தி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்கள்; மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளை ஒருங்கிணைத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய பல்வேறு விதமான தெருப் போராட்டங்கள்; இப்போராட்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஊக்கம்; விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு தமிழின அமைப்புகளும், முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் திரு.வீ.வீ.சாமிநாதன், பா.ம.க.வின் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கொடுத்த ஆதரவு — ஆகியவற்றின் பின்னணியில்தான் இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது.

"எங்களின் கோயிலை நாங்கள் போனால் போகிறதென்று பக்தர்கள் வந்து வழிபடுவதற்கு அனுமதித்திருக்கிறோம்'' என்று தெனாவட்டாகப் பேசித் திரிந்த தீட்சிதர்களின் திமிரை, நடராஜர் கோயிலில் உண்டியல் வைக்கக்கூட அனுமதிக்காமல், இத்தனை ஆண்டுகளாகப் ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.