தமிழ் அரங்கம்

Saturday, October 14, 2006

வர்க்க இன பிரதேச சாதிவாதக் கல்வியின் போக்கு-பகுதி ஆறு

வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு -பகுதி ஆறு

பகுதி ஒன்று பகுதி இரண்டு

பகுதி மூன்று பகுதி நான்கு

பகுதி ஐந்து பகுதி ஆறு

பகுதி ஏழு

<

ர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி பெற்றது. இன்று இலங்கையில் மொத்தமாக 10 590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10 042 ஆகும். இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும். மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர்.


இலங்கையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 80 000 யாகும். 1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் 42 லட்சமாகும். இதில் 1 முதல் 5ம் வகுப்புவரை 19 லட்சம். 6 முதல் 11 வரை 21 லட்சம். 12 முதல் 13 வரை 2 லட்சமாகும். ஆரம்பபாடசாலையில் (கல்வி (1-5)) 8 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. இடைநிலைக் கல்வியில் (6 முதல்11) 25 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. உயர் கல்வி வயது எல்லையில் மூன்று சதவீதமான மாணவர்களே கல்வி கற்கின்றனர். இவை இனம் கடந்த நிலையில் இலங்கையில் கல்வியின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது. மொத்த ஆசிரியர்களில் ஆரம்ப பாடசாலையில் 80 சதவீதமும், இடைநிலைப் பாடசாலையில் 60 சதவீதமும் மொத்தத்தில் 70 சதவீதம் ஆசிரியர் தொழிலில் பெண்கள் உள்ளனர். உயர் கல்வியை நோக்கிச் செல்லச் செல்ல பெண்களின் எண்ணிக்கையிலும் கூட வீழ்ச்சி ஏற்படுத்துகின்றது. ஆணாதிக்க அமைப்பும் கூட பொதுவாக இலங்கையில் பெண்களின் கல்விக்கு தடையாகவே உள்ளது.


1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுதியில 73 சதவீதமானவர்கள் தனியார் அல்லது உயர்தர பாடசாலையைச் சேர்ந்தவர்கள். 18 சதவீதமானவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள். இவர்களும் உயர்ந்தர பாடசாலைகளின் பழைய மாணவர்களாவர். 1983 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராய்ந்த போது, 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து, பல்கலைக்கழகம் தெரிவானோர் 39.2 சதவீதமட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படுவதையும், 17.6 சதவீதமான மேட்டுக் குடியில் இருந்து 60.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை காட்டுகின்றது. கல்வி உயர்குடிகளின் பிடியில் இருப்பதையும், தேசிய இனப் போராட்டங்கள் இதற்குள் நிகழ்வதையும் காட்டுகின்றது.


கல்விக்கான செலவு தேசிய வருமானத்தில் 2.9 வீதமே ஒதுக்கப்படுகின்றது. இந்த செலவில் 76 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்துக்கும், 16 சதவீதம் நலனளித்தல் சேவைக்கும், 7 சதவீதம் பயணத்துக்கும், 1 சதவீதம் தராதர மேம்பாட்டுக்கும், ஒரு சதவீதமே கற்பிக்கும் உபகரணத்துக்கும் செலவு செய்யப்படுகின்றது. கல்விக்கு ஒதுக்கும் பணம் முதல் அது செலவு செய்யப்படும் வடிவம் வரை ஒட்டு மொத்த மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. உயர்கல்வியில் சிலரை உருவாக்கும் வகையில் கல்விக்கான நிதியொதுக்கீடு காணப்படுகின்றது. ஒரு சிலருக்கு வெளியில் உள்ளவர்களின் கல்வியின் தரத்தை இழிந்த நிலையில் நிலை நிறுத்தி, கூலிகளாக சேவை செய்ய கல்வி கோருகின்றது. சாதாரண பாடசாலையை விட உயர்தரப் பாடசாலைகள் 300 சதவீதம் அதிகரித்த நிதியுதவிகளைப் பெறுகின்றன. உயர் அதிகார வர்க்கத்தையும், சமூக அந்தஸ்துக்குரிய சமூக பிரிவுகளையும் உருவாக்கும் வகையில் கல்வி திட்டமிடப்படுவதையே, இலங்கையின் ஆளும் வர்க்கம் தனது கொள்கையாக கொண்டு இருக்கின்றது. இதை தமிழ் குறுந் தேசியமும் உயர்த்தும் அதே நேரம் தலையில் வைத்து கூத்தாடுவதிலும் பண்பாட்டு தன்மை கொண்ட தமிழ் தேசிய வெறியாக காணப்படுகின்றது.


1984 இல் 146 977 ஆசிரியராக இருந்த நிலை 1994 இல் 1 67 579 ஆகியது. சம்பளச் செலவு 120 கோடியால் அதிகரித்தது. பணவீக்கத்தை ஏற்படுத்திய பின்பு 1995 இல் 45 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதன் மூலம் செலவு 280 கோடியால் அதிகரித்தது. ஆனால் தேசிய ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படவில்லை. பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இது பூசிமெழுகப்பட்டது. அதேநேரம் இந்த ஆசிரியர் நியமனம் கூட இனவாத அடிப்படையில் சிங்கள இனத்துக்கே வழங்கப்பட்டது. ஆசிரியர் நியமனம் பற்றாக்குறை சார்ந்த இடங்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர். அதாவது 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை காணப்படுகின்றது. இதுவே 1971க்கும் 1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. முஸ்லீம் மக்களுக்கு வழங்கிய விதிவிலக்கான ஒரு சலுகையாக இருந்த போதும், இன அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் முஸ்லீம் மக்களின் கல்வி நிலையை மேம்படுத்தவில்லை. சிங்கள சமூகம் அதிக சலுகைகளை தொடர்ச்சியாக பெற்று வந்தன. இதை தமிழ் இன அடிப்படையில் பொதுமைப்படுத்திய போது இனவாதத்தின் அடிப்படை வெளிப்படுகின்றது. ஆனால் இந்த பொதுமைப்படுத்தலின் உள்ளே பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக, சிறுபான்மை ரீதியாக ஆராயும் போது இந்த இடை வெளி மேலும் அகலமாகின்றது. வெறுமனே இதை இன அடிப்படையில் புரிந்து கொண்டு தீர்க்கமுடியாது. அப்படி இனத் தேசியவாத அடிப்படையில் தீர்க்க எடுக்கும் முயற்சி, யாழ் சமூகத்தின் மிதமிஞ்சிய சலுகைகளை பெறுவதையே அடிப்படையாகக் கோருவதாகும். தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு என்பது பின்தங்கிய தமிழ் மாவட்டங்கள், சாதிகள், சிறுபான்மை இனங்கள் என்று அடிப்படையில் தான் காணப்படுகின்றது. யாழ்குடா நாட்டில் அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் எண்ணிக்கை காணப்படுகின்றது.


அண்மைக் காலங்களில் ஏற்படும் சில நெருக்கடிகள் கூட, இனவாத எல்லையில் புரிந்து கொண்டு விளக்குவது கூட யாழ் மேலாதிக்க தன்மைக்கு கவசமிடுவதாகும். யாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 1 84 350யாகும. 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் காணப்படுகின்றது. இதிலும் கிளிநொச்சியின் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட பின்தங்கிய பகுதி என்பதால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இன்றைய யாழ்குடாநாட்டில் உள்ள நெருக்கடிகள் யாழ் பூர்சுவா சமூக கண்ணோட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றது. அதிக பணம் சேகரிக்கவும் மேற்கு பற்றிய காலனித்துவ அடிமைப்புத்தியும் இணைந்தபோது, மேற்கு நோக்கிய ஆசிரியர்களின் புலம்பெயர்வு செயற்கையான பற்றாக்குறைக்குள் யாழ்குடாவை நகர்த்தியது. அத்துடன் மேற்கு நோக்கி நகரும் திருமணங்களும், பிள்ளைகளை நோக்கி புலம் பெயரும் பெற்றோர்களும் ஆசிரியராக இருக்கும் எல்லா நிலையிலும், செயற்கையான நெருக்கடிக்கு கம்பளம் விரிக்கின்றது. இதை தேசியம் பொதுமைப்படுத்துகின்றது. அதற்கு பின்தங்கிய மாவட்ட நெருக்கடிகளை யாழ் தேசியம் தனக்கு சாதகமாக்குகின்றது. தேசியம் பின் தங்கிய மக்களின் நலனில் இருந்து தேசியத்தை பொதுமைப்படுத்தத் தவறி குறுந்தேசியமாகியது. பின் தங்கிய தமிழ் மாவட்ட மற்றும் சிறுபான்மை தமிழ் இனங்களின் நிலைமையை கிடைத்த புள்ளிவிபரத் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.


தொடரும்

யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

1. வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்- பகுதி எட்டு
2. யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும் -பகுதி ஒன்பது

பகுதி ஒன்று பகுதி இரண்டு

பகுதி மூன்று பகுதி நான்கு

பகுதி ஐந்து பகுதி ஆறு

பகுதி ஏழு

ல்வியைப் போல் வேலை வாய்ப்பு பிரச்சனைகளையும் முன்வைத்தே தமிழ் தேசியம் தன்னை முன்னிலைப்படுத்தியது. அனைவருக்கும் வேலை வழங்கு என்ற அடிப்படையான கோசத்துக்கு பதில், சிலருக்கான வேலையில் அதிகம் எமக்கு வேண்டும் என்ற இன அடிப்படைவாதமே இந்த தேசிய பிரச்சனையில் மையமான கோசமாகியது. தேசியத்தை கட்டமைக்கும் போது தமிழ் மக்கள் என்ற பொதுமைப்படுத்தல் ஊடாகவே, தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டினார்கள். தமிழ் மக்களிடையே உள்ள பின்தங்கிய பிரதேசங்கள், சிறுபான்மை இனங்கள், தாழ்ந்த சாதிய மக்களின் விகிதத்துக்கு ஏற்ப, அவர்களின் வேலை வாய்ப்பு பற்றி மூச்சுவிடவில்லை. இங்கும் கல்வியைப் போல் யாழ் உயர் வர்க்கங்களின் ஆதிக்கத்தைக் கோரினார்களே ஒழிய, அனைத்து தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தவில்லை. வேலைவாய்ப்பை குறிப்பாக காட்டி முன்னிலைப்படுத்திய எமது தேசிய போராட்டம், பின்வரும் அடிப்படையான வழிகளில் பிற்போக்கான அம்சத்தை தேசியத்தில் வளர்த்தெடுத்தது.

1.தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தவறாக இதன் மூலம் இனம் காட்டி இதை முன்னிலைப்படுத்தியது.

2.தமிழ் மக்களின் வேலை வாய்ப்பில் யாழ் அல்லாத மக்களின் நலனை மூடிமறைத்ததுடன், அவர்களுக்காக போராட தயாரற்று இருந்தது.

3.அனைத்து மக்களுக்கும் வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கு என்று கோரிப் போராட மறுத்தது.

4.வேலையில் காணப்படும் அதிகார வர்க்கப் போக்கை மாற்ற கோரியிருக்க வேண்டும். (இந்த அதிகார வர்க்கப் போக்கு ஒட்டு மொத்த இலங்கையில்; தமிழர்கள் ஆதிக்கத்தில் இருந்த போது, யாழ் உயர் குடிகள் மற்றும் உயர் வர்க்கங்கள் அல்லாத மற்றைய மக்களின் மேல் முறைகேடாகவே அதிகாரத்தைக் கையாண்டனர். இது சாதி, பிரதேசவாதம், இனவாதம் என்ற அனைத்துத் துறையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனவாத விரிவாக்கத்தில் இதன் பங்கு கணிசமானது.)

இதை அடிப்படையில் தமிழ் தேசியம் மறுத்து, யாழ் ஆதிக்க பிரிவுகளின் நலன் சார்ந்து குறுந்தேசிய போராட்டமாகியது. தேசியத்துக்கான யுத்தம் தொடங்கியதில் இருந்து, சிங்களம் ஆட்சி மொழியாகியதில் இருந்தும், ஆங்கில அறிவுபெற்ற யாழ் தமிழரின் உத்தியோகங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டது. இது யுத்த சூழலுக்குள் ஆழமான வேலை இழப்பை தமிழர் தரப்பில் சந்தித்துள்ளது. வேலையில் இருந்தோர் கூட நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வு (இது இனவாதப் போக்கு முகம் கொடுக்க முடியமாலும் ஒருபுறம் நிகழ மறுதளத்தில் குட்டி பூர்சுவா வர்க்க நலன் சார்ந்தும் நடந்தது.), தமிழரின் வேலை வாய்ப்புகள் சமகாலத்தில் குறைந்து செல்கின்றது. இவை அனைத்தையும் வரலாற்று ரீதியாக ஆராய்வோம்.

யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

லங்கையில் மக்கள் தொகையில் சிங்களவர் 72 சதவீதமாகவும், இலங்கைத் தமிழர் 11.2 சதவீதமாகவும், மலையகத் தமிழர் 9.3 சதவீதமாகவும், முஸ்லீம்கள் 7.1 சதவீதமாகவும், ஏனையோர் 0.5 சதவீதமாகவும் இருந்த போதும், உயர் வர்க்க தமிழர்களின் அரசு வேலை வாய்ப்புகள் மொத்த மக்கள் தொகையில் ஆராயும் போது ஒரு சமூகத்தின் அதிகாரத்தை தெளிவாக்குகின்றது. இதைத் தனியாக ஆராய்வோம்.

மருத்துவதுறையையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1870

8.7

-

-

91.3

1907

24.6

14.7

-

60.7

1910

21

28

-

51

1920

31

36

-

32

1925

42.5

30.8

-

26.7

1930

47

33

-

19

1935

55.1

25.8

-

19.1

1936

59.4

33.3

-

7.3

1956

54.1

38.1

1.5

6.3

1962

53.4

41.1

2.1

3.5

குடியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1870

7

-

-

-

1907

33.3

16.7

-

50

1925

43.6

20.5

-

35.9

1935

40.0

33.3

-

27.3

1936

59.5

26.7

-

13.8

1956

57.1

29.4

1.7

11.8

1962

73.7

17.9

2.3

6.0

1975

81.3

15.9

2

0.8

பொது துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

பறங்கியர்

1907

20

10

70

1910

24

16

60

1920

26.8

17

56

1925

32.2

7.1

60.1

1930

28.1

29.6

42

1935

34.3

28.6

37.1

1936

32.2

25.4

22.4

நீதித் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1935

26.7

33.3

-

40

1936

49.1

26.4

-

26.5

1956

57.6

30.3

6.1

6.1

1962

60.3

26.4

10.2

2.6

1973

77.6

18.8

3.3

0

பொறியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1956

42.1

47.7

1.9

8.4

1962

49.6

44.2

1.5

4.7

கணக்காளர் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்

பறங்கியர்

1956

35.8

60.2

0

3.9

1962

38.6

60.2

0

1.2

அரசு சேவையில் 1921 இல் சிங்களவர் 46 சதவீதமும் தமிழர் 31.6 சதவீதமாக காணப்பட்டனர். 1946 இல் நிர்வாக சேவை அரைப்பகுதியையும் நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கினையும் தமிழர்கள் கொண்டிருந்தனர். நடைமுறை ரீதியாகவே 11.2 சதவீதமான தமிழ் மக்களினதும் அதிலும் குறிப்பாக யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த மேட்டுக் குடிகளின் அதிகாரத்தைக் காட்டுகின்றது. யாழ் குடா நாட்டில் 40 சதவீதமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்த யாழ் மேட்டுக்குடிகள் பெண்களையும் அடக்கியொடுக்கியபடி தான் உயர் சாதிய வரிசைப்படிகளில் நின்றே பிரிட்டிஸ்சாரின் கைக் கூலிகளாகி இலங்கையையே ஆண்டனர். யாழ் மேட்டுக்குடி பண்பாட்டுக் கலாச்சார கூறில் மிக மோசமான ஆதிக்க பிரிவாக திகழ்ந்தமையால் இலங்கையில் அனைத்து மக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகினர். சொந்த தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் சொந்த இன பிரதேச மக்களாலும் சிறுபான்மை இனங்களாலும் பெரும்பான்மை இனங்களாலும் வெறுக்கப்படுமளவுக்கு ஒரு ஆளும் பிற்போக்கு வர்க்கமாக திகழ்ந்தனர். சுதந்திரத்துக்கு முன்பாக நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருந்த இந்த ஆங்கிலம் கற்ற தமிழ் மேட்டுக் குடிகள் எப்படி இலங்கையில் நீதியாக நிர்வாகம் செய்திருப்பார்கள் இன்று எம் மக்கள் முதல் சிறுபான்மை இனங்களையும் அப்பாவி சிங்கள மக்களையும் ஆயுதமுனையில் அடக்கியாளும் போது எமது மூதாதையர்கள் பண்பாட்டு கலாச்சார அதிகார வடிவங்கள் மூலம் இலங்கையையே அடக்கியாண்டனர். இங்கு மனிதத்துவம் நீதி ஜனநாயகம் என்பதெல்லாம் சொந்த வர்க்கத்துக்கானதாகவே இருந்துள்ளது.

ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 இல் ~~இப்பாழாய்ப்போன டொனமூர் அரசியல் அமைப்பு வருவதற்கு முன்னர் அரைகுறை அறிவு படைத்த சிங்களவர் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தார்கள் என்று கூறுமளவுக்கு அதிகாரத்தை இலங்கை முழுவதும் யாழ் மேட்டுக்குடிகள் கொண்டிருந்தனர். சுதந்திரத்துக்கு முன் பின் தமிழரின் அதிகாரத்துவ பங்கு எப்போதும் இலங்கையில் உச்சத்தில் இருந்துள்ளது. இந்த அதிகாரத்தை தக்கவைக்கவே ஐp.ஐp.பொன்னம்பலம் 50 க்கு 50 என்ற கோரிக்கையை மேட்டுக் குடிகள் சார்ந்து தமிழ் தேசிய இனவாதியாகவே முன்வைத்தார். மேட்டுக் குடிகளின் அதிகாரத்தை மற்றைய மக்களுடன் ஜனநாயக பூர்வமாக பகிர்வதை மறுத்த தமிழ் மேட்டுக்குடிகள் அதைத் தக்கவைக்கவே இனவாதத்தை தமிழ் காங்கிரஸ் மூலம் அன்று முன்வைத்தனர். இலங்கையில் இனவிகிதம் கடந்த நிலையில் பல்வேறு துறைகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாக அல்லது அதற்கு சற்றுக்குறைவான அதிகார பீடங்களில் யாழ் மேட்டுக் குடி தமிழரின் ஆதிக்கத்தில் இருந்தது. இது பிரிட்டிஸ்சாருக்கு குண்டி கழுவி விடுவதன் மூலம் நக்கிப் பெறப்பட்டது. சிங்கள மக்களின் காலனித்துவ எதிர்ப்பை ஒடுக்கவும் தமிழரின் கைக்கூலித்தனமே பிரிட்டிஸ்சாரின் காலனித்துவ நீடிப்புக்கு அத்திவாரமாகியது. அதாவது பிரிட்டிஸ்சார் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டனர். சிங்கள மக்களின் நீடித்த காலனித்துவ எதிர்ப்புக்கு அவர்களின் நிலப்பிரபுத்துவ சொத்துரிமை சார்ந்த சுய உற்பத்தி ஒரு காரணமாகும். பிரிட்டிஸ்சாரின் கீழ் கூலி வேலை செய்வதை இழிவாகக் கருதி அதை எதிர்த்து நின்றனர். இதனால் இலங்கையை முழுமையாக ஆங்கிலேய காலனித்துவவாதிகள் பிடித்த பின்பும் இரண்டு எழுச்சிகளை கண்டி சிங்கள மக்களால் நடத்த முடிந்தது. இதற்கு எதிராக செயற்பட்ட யாழ் மேட்டுக்குடிகள் காலனித்துவத்தை தொடரவும் அதன் மூலம் இலங்கையையும் அயல் நாடுகளையும் சுரண்டவும் உலகளவில் செல்வாக்கு மண்டலங்களை பேணவும் யாழ் மேட்டுக்குடியின் கைக் கூலித்தனம் முண்டு கொடுத்தது என்றால் மிகையாகாது. இந்த கைக்கூலிகள் மூலம் காலனித்துவத்தை கட்டி பாதுகாக்க அதற்கு காலனித்துவக் கல்வி அவசியமாகியது. இந்த வகையில் காலனித்துவம் நவீன பாடசாலைகள் யாழ் குடா நாட்டில் உருவாக்கியது.

இதன் தொடர்ச்சியில் இலங்கையில் 1911ம் ஆண்டில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும் கரையோரச் சிங்களவர் 3.5 சதவீதமாகவும் கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும் இருந்தனர். இது காலனித்துவ நோக்கத்தையும் கல்வியின் பிரிட்டிஸ்சார் மையப்படுத்தி முன்னுரிமை கொடுத்த பிரதேசத்தையும் தெளிவாக காட்டுகின்றன. அதே நேரம் இதற்கு இசைவாக 1911 ம் ஆண்டில் அரசு வேலைகளில் தமிழர் 5.1 சதவீதமும் கரையோர சிங்களவர் 3.6 சதவீதமும் கண்டிச் சிங்களவர் 1.3சதவீதமாக இருந்தனர். காலனித்துவ கல்வி அது சார்ந்த அதிகாரத்துவம் யாழ் மேட்டுக்குடியின் கையில் குவிந்ததை இது காட்டுகின்றது. கல்வியுடன் தொடர்புடைய தமிழ் அதிகார வர்க்கம் ஒரு ஆளும் வர்க்கமாக உருவானது. இந்த வர்க்கம் தனது இழிந்த மனித விரோத நடத்தைகளை ஆதாரமாகக் கொண்டே இலங்கையை அடக்கியாண்டது. இந்த அதிகாரத்துவம் சுதந்திரத்தின் போது உச்சத்தில் இருந்தது. சுதந்திரத்தின் பின்பும் இனவிகிதத்தை விட அதிகமான அதிகாரத்துவ மையங்களில் வீற்றிருந்தனர். 1970 வரையிலும் இனவிகிதத்தை தாண்டியே இலங்கை அதிகார வர்க்கத்தில் தமிழர் இன விகிதத்தை கடந்து இருந்தனர். இதை கீழ் தொடர்ந்து வர உள்ள புள்ளிவிபரமும் தெளிவாக நிறுவுகின்றது. இந்த அதிகார வர்க்கத்தை உருவாக்கிய காலனித்துவ கல்வியே இன்றைய இன தமிழ் தேசிய சிக்கலுக்கு மையமான கூறாகியது. பெரும்பான்மை இனம் அதிகாரமிழந்த ஒரு பிரிவாக இருந்தமையால் சிங்கள இனவாதத்தை முன்வைப்பது சிங்கள தலைவர்களிடம் ஒரு போக்காக மாறியது. இதை தமிழ் தலைமைகளும் சரி சிங்கள தலைமைகளும் சரி எதிர் நிலை இனவாதத்தை ஊற்றி வளர்த்து இன்றைய நிலைக்கு இட்டுச் செல்வதில் பரஸ்பரம் ஒரு முனைப்புடன் போட்டியிட்டனர். தமிழ் தலைமை இலங்கை அதிகார வர்க்கத்தின் தமிழ் இன ஆதிக்க விகிதத்தை பாதுகாக்கவும் சிங்கள தலைமை சிங்கள இன அதிகாரத்தை நிறுவவும் நடத்திய போராட்டம் இனமோதலாக இனவழிப்பாக வளர்ச்சி பெற்றது. காலனித்துவம் இதில் குளிர் காய்ந்தது. பிரித்தாளும் இனக் கண்ணோட்டத்தை பிரிட்டிஸ்சார் முன்வைத்து தமிழ் அதிகார வர்க்கத்தை உருவாக்க கல்வியை ஒரு தலைபட்சமாக யாழ் தமிழருக்கு சலுகையாக வழங்கியது. இதன் போக்கு மிக மோசமான இன ஒடுக்குமுறையை சிங்கள இனவாதம் தமிழ் மக்கள் மேல் இன்று கையாண்ட போதும் இன்று வரை யாழ் மேலாதிக்கத்தை கல்வியில் நிறுவ முடிகின்றது.

காலனித்துவ காலத்தில் பிரிட்டிஸ்சார் திட்டமிட்டு இனப்பிளவை வித்திட்டு பிரித்தாண்ட போக்கில் அதன் கைக்கூலிகளாக இருந்த தமிழ் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை மற்றும் சுரண்டலின் தொடர்ச்சியே இலங்கையில் இனப்பிளவுக்கு வித்திட்டது. இந்த தமிழ் பிரிவு அரசியல் அதிகாரத்தில் இருந்து சுருட்டுக் கடை ஈறாக சிங்கள மக்களை படுமோசமாக சுரண்டிக் கொழுத்தது. இதற்கு எதிராக குறுந்தேசிய சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள பிரிவுகள் வளர்ச்சி பெற்றது. காலனித்துவத்தையும் அதன் தொங்கு சதைகளையும் எதிர்ப்பதற்கு பதில் தமிழர்களை எதிர்த்தே தனது தேசியத்தை சிங்கள குறுந்தேசியம் கட்டமைத்தது. அதாவது இன்று தமிழ் குறுந்தேசியம் எப்படி நவகாலனித்துவ மற்றும் மறுகாலனித்துவ முயற்சியை எதிர்க்காது ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக சிங்கள மக்களை எதிராகக் காட்டி தமிழ் இனவாதிகளாக தம்மை நிலை நிறுத்துகின்றனரோ அதேபோல் அன்று தமிழ் மக்களை எதிரியாகக் காட்டியே சிங்கள இனம் தனது சிங்கள குறுந் தேசியத்தைக் கட்டமைத்தது.

சிங்கள இனவாதிகள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பை நடைமுறைப்படுத்தினர். இது சுதந்திரத்துக்கு முன் பின்னிருந்தே இது தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்ததால் அதிகாரத்தில் கிடைத்த வசதிகள் அனைத்தையும் இன அழிப்புக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்டனர். இன அழிப்பை தொடங்கிய போது பலவீனமான இனப்பிரிவுகள் மேலும் பலவீனமான மக்கள் கூட்டங்கள் மேலும் இன அழிப்பு தொடங்கப்பட்டது. இதற்கு தமிழ் கைக்கூலிகள் மற்றும் அறிவித்துறையினரின் நடவடிக்கைகள் ஊக்கியாக இருந்தது. ஒன்று நேரடியாக அவர்களின் முயற்சிக்கு ஒத்துழைத்தனர். இரண்டாவதாக சொந்த சுயநலத்திற்காக சிங்கள மக்களை சூறையாடினர். மூன்றாவதாக பலவீனமான தமிழ் மக்களையிட்டு தமிழ் உயர்பிரிவுகள் கொண்டு இருந்த இழிவான கண்ணோட்டம் அழிப்பை ஊக்கியாக்கியது. இந்தப் போக்குகள் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. இதை தெளிவாகவே பண்டாரநாயக்கா 1939ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசும் போது ~~நாவலப்பிட்டி சிங்கள மகாசபா பொன்னம்பலத்திற்கு ஒரு சிலை எடுக்க வேண்டும். நாவலப்பிட்டியில் சிங்கள மகாசபாவின் கிளையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் பொன்னம்பலத்திற்கு நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம். என்றார். தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாத முயற்சிகளே சிங்கள இனவாதத்துக்கு அன்று தீனியாக அமைந்தது. சிங்கள இனவாதம் தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாதத்தின் மேலும் தமிழ் அதிகார வர்க்க மக்கள் விரோத நடத்தைகளில் இருந்தும் தன்னை கட்டமைத்தது. பெரும்பான்மை இனம் சார்ந்த சிங்கள இனவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தமிழர்களை எதிரியாகச் சித்தரிக்க தயங்கவில்லை. சிறுபான்மையினத்தினை ஒடுக்குவதில் தன்னை சிங்களமயமாக்கியது. அரசு நிர்வாகத்தில் தனது அதிகாரத்தை நிறுவுவதில் இனவாத அடிப்படையையே தனது கொள்கையாகக் கொண்டது. இதில் தமிழ் முஸ்லீம் மலையக தேசிய தலைவர்கள் முதல் போலி இடதுசாரிகள் ஈறாக கூட்டு அரசு அமைத்தே நடைமுறைப்படுத்தினர். இலங்கையை ஆட்சி செய்த அதிகார வர்க்கம் எப்படி தமிழரின் இனவாதிகள் கையில் இருந்து சிங்கள இனவாதிகளின் கைக்கு மாறியதை கீழ் உள்ள புள்ளி விபரம் தெளிவாக்குகின்றது. இலங்கையை நிர்வாக ரீதியாக ஆண்டவர்கள் முதல் அரசதுறையில் வேலை வாய்ப்பை பெற்ற தமிழர்களின் பங்கை இனவாத நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வந்ததையும் நாம் பார்ப்போம்.

1950 சதவீகிதத்தில்

1965 சதவீகிதத்தில்

1970 சதவீகிதத்தில்

இலஙகை நிர்வாக சேவை

30

20

05

எழுதுவினையர்

50

30

05

நிபுணத்துவ சேவை

60

30

10

ஆயுதப்படை

40

20

01

தொழிலாளிகள்

40

20

05

இது சுதந்திரத்துக்கு பின் திட்டமிட்ட வகையில் இனவாதம் கட்டமைக்கப்பட்ட வடிவத்தைக் காட்டுகின்றது. இந்த வரலாற்று காலகட்டத்தின் தொடர்ச்சியில் தமிழ் தேசியவாதிகள் முதல் எல்லா சிறுபான்மை இனப்பிரதிநிதிகளும் இந்த பச்சை இனவாத அரசுக்கு முண்டு கொடுக்க தயங்கவில்லை. இதில் போலி இடதுசாரிகள் படிப்படியாக இணைந்து கொண்டு, இதை ஊக்குவித்தனர். போலி இடதுசாரிகள் பாராளுமன்ற வழியில் சிங்கள வாக்குகளை பெற்று பாராளுமன்ற கதிரைகளில் சுகம் காண இனவாதத்தை ஆயுதமாக்கி இனவாதிகளாக மாறினர். இலங்கையில் முற்போக்கு நடவடிக்கையாக வருணிக்கப்படும் அனைத்து தேசியமயமாக்கல் நடவடிக்கையின் பின்னும் இனவாதம் அங்கு கொழுவேற்றது. அரசமயமாக்கல் நடத்திய இனவாதிகள் அதை போலி இடதுசாரிகளின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்திய அதே நேரம், அரசுதுறையை சிங்கள இனவாதமாக்குவதில் வெற்றி கண்டனர். இதற்கு போலி இடதுகள் ஆசி வழங்கினர். இலங்கையில் நிர்வாக மற்றும் ஆளும் அதிகார வர்க்கத்தை சிங்கள இனவாதமாக்குவதின் மூலம் அதை சமூக மயமாக்கியுள்ளது. இது தமிழரின் வேலை வாய்ப்பை முற்றாகவே மறுத்துவிடுகின்றது. ஏதாவது தமிழருக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக வெளிப்படுவது கல்வித்துறை சார்ந்து மட்டுமேயாகும்.

1956க்கும் 1970க்கும் இடையில் 189000 பேர் அரசு கூட்டுத்தாபனத்தில் வேலை வழங்கப்பட்டது. இதில் 99 சதவீதமானவர்கள் சிங்களவராவர். 1948 இல் அரசாங்க பொதுச் சேவையில் 82 000 பேர் இருந்தனர். இதில் 30 சதவீதமானோர் தமிழராவர். இதில் பெரும்பான்மையானவை யாழ் மேட்டுக்குடியினராவர். 1970 இல் 2 25 000 வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போது அரசு கூட்டுத் தாபனத்தில் தமிழர் சதவீதம் 6 சதவீதத்தால் குறைவடைந்தது. 1971க்கும் 1974 க்கும் இடையில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது அதில் சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. அரசுத்துறையில் திட்டமிட்ட இனவாதம் அடிப்படை கொள்கையாக இருந்தது.

1972 இல் அரசதுறையில் வேலை பெற்றோர்

சனத்தொகை

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்.

1971 இல் சனத் தொகை

72.0

20.5

7.5

நிர்வாகம் நிபுணத்துவம் தொழில்நுட்பம்

67.7

28.5

3.8

இடைத்தரங்கள்;

81.2

15.3

3.5

ஆசிரியர்

81.5

11.6

6.9

சிற்றூழியர்

86.4

10.6

3.0

தொழிலாளர்

85.5

11.6

2.9

ஏனைய பிரிவுகள்

82.6

12.9

4.5

அரசாங்க வேலை வாய்ப்புகள் 1977-1981க்கு இடைப்பட்ட கால கட்டத்தில்

மொத்த வெற்றிடம்

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்

எழுதுவினைஞர்

9965

9326 (93.6)

492 (4.9)

147 (1.5)

ஆசிரியர்

29 218

25 553 (87.6)

2084 (7.1)

1581 (5.3)

மொத்தம்

39 183

34879 (87.6)

2576 (6.6)

1728 (5.8)

அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1980 இல் வேலை செய்வோர். இங்கு தமிழர் என்பது மலையக தமிழரை உள்ளடக்கியது. 1981இல் சனத்தொகை கணக்கெடுப்பில் 74 வீதம் சிங்களவரும் 12.7 வீதம் இலங்கைத் தமிழரும் 5.5 மலையகத் தமிழரும் 7 வீதம் முஸ்லீம்களும் 0.8 சதவீதம் ஏனையோருமாவர்.

மொத்தம்;

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்;

ஏனையோர்

அரசுதுறை

3 68 849

84.34

11.61

3.33

0.72

கூட்டுறவுத்துறை

2 28 531

85.75

10.67

2.56

1.03

மொத்தம்

5 97 380

84.88

11.25

3.03

0.84

1980 ஆண்டு அரசுதுறை வேலை வாய்ப்பு

தொழில்

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்

தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில்

82

12

6

நிர்வாக உத்தியோகம்

16

3

ஏனைய தொழில்கள்

84

12

4

1980ம் ஆண்டு அரசு கூட்டு ஸ்தாபனங்களில் வேலை வாய்ப்பு

தொழில்

சிங்களவர்

தமிழர்

ஏனையோர்

தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில்

82

13

5

நிர்வாக உத்தியோகம்

83

14

3

ஏனைய தொழில்கள்

85

11

4

அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1985லான வேலை செய்வோர்.

மொத்தம்;

சிங்களவர்

இலங்கைத் தமிழர்

மலையகத் தமிழர்

முஸ்லீம்;

ஏனையோர்

அரசுதுறை

4 06 359

85.64

9.9

0.25

3.44

0.9

கூட்டுறவுத்துறை

3 22 617

85.54

9.38

1.25

2.35

1.48

மொத்தம்

7 28 976

85.8

9.67

0.64

2.95

1.14

அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1990லான வேலை செய்வோர்.

மொத்தம்;

சிங்களவர்

இலங்கைத் தமிழர்

மலையகத் தமிழர்

முஸ்லீம்;

ஏனையோர்

அரசுதுறை

1 98 425

91.2

5.9

0.1

2.0

0.3

மாகாணத்துறை

2 22 584

87.7

7.1

0.2

4.6

0.4

கூட்டுறவுத்துறை

2 79 584

88.1

8.2

0.5

2.2

1.0

மொத்தம்

7 00 593

88.8

7.2

0.3

2.9

0.8

வெளிநாடுகளில் இலங்கை தூதரகங்களில் 1994 இல்.

மொத்தம்

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்

ஏனையோர்

தூதுவர்கள்

32

65.6

9.4

18.8

6.2

ஏனைய ஊழியர்கள்;

216

88.4

4.2

6.0

1.4

1994 இல் இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை வாய்ப்பு பகிரப்பட்ட விதம்.

பிரிவு

ஜனத் தொகை விகிதாசாரம்

அரசு துறையில் வேலைகள்;

மாகாணசபையில் வேலைகள்

அரசு உதவி பெறும் வேலைகள்;

சிங்களவர்

73.9

91.2

87.7

88.1

இலங்கைத் தமிழர்

12.7

5.9

7.1

8.2

மலையகத் தமிழர்

5.5

0.1

0.2

0.5

முஸ்லீங்கள்

7.0

2.0

4.6

2.2

ஏனையவர்கள்;

0.9

0.8

0.4

1.0

இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் சிறுபான்மை இனங்கள் வேலை இழப்பை ஆராய்வோம்.

1980

1985

1990

சிங்களவர்

84.8

85.8

88.8

தமிழர்

11.25

9.67

7.2

மலையகத் தமிழர்

-

0.64

0.3

முஸ்லீம் மக்கள்

3.03

2.95

2.9

ஏனையோர்

0.84

1.14

0.8

அரசு மற்றும் கூடடுறவுத்துறையில் மொத்த வேலைகள்

597 380

728 976

700 593

1980 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தால் இன அடிப்படையிலாக தொழில்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையைப் பார்ப்போம். இங்கு தமிழர் என்பது மலையகம் உள்ளிட்டது. மலையர், பறங்கியரும், மற்றவர்களும் உள்ளடக்கப்படவில்லை.

அரசு துறையில் சதவீகிதத்தில்

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்

மொத்த வேலை

உயர்தொழில் நுட்பம் ஏனையவை

82.4

12.11

5.09

141387

நிர்வாக முகாமைத்துவம்;

81.3

15.54

1.91

3705

எழுதுவினையர் அது தொடர்பானதும்;

83.7

13.21

2.16

72997

விற்பனையாளர்

83.1

14.81

2.19

2094

சேவைத்துறை

86.9

9.01

2.43

27428

விவசாயம் மிருக வளர்ப்பு காட்டு தொழில் மீன்பிடி வேட்டை

73.2

21.09

4.98

2930

உற்பத்தி போக்குவரத்து எநதிர இயக்குநர்கள்

85.5

11.05

2.32

100841

மற்றவர்கள்

93.8

3.28

1.29

17467

மொத்தம்

84.3

11.43

3.33

368849

மக்கள் தொகை

73.98

18.16

7.12

100

கூட்டுத்தாபன வேலை சதவீகிதத்தில்

சிங்களவர்

தமிழர்

முஸ்லீம்

மொத்தம்

உயர்தொழில் நுட்பம் ஏனையவை

75.5

21.33

1.87

10801

நிர்வாக முகாமைத்துவம்

83.3

12.51

2.33

5448

எழுதுவினையர் அது தொடர்பானதும்

86.5

9.92

2.32

72323

விற்பனையாளர்

87.2

8.31

2.15

1022

சேவைத்துறை

87.6

8.39

2.93

13240

விவசாயம் மிருக வளர்ப்பு காட்டுதொழில் மீன்பிடி வேட்டை

60.8

35.81

1.15

7458

உற்பத்தி போக்குவரத்து எநதிர இயக்குநர்கள்

88.0

8.36

2.83

115735

மற்றவர்கள்

69.7

26.27

2.59

2504

மொத்தம்

85.74

10.66

2.55

228531

இனவாதம் கூர்மையடைந்ததன் விளைவை நாம் மேலே காண்கின்றோம். படிப்படியாக இனவிகிதத்துக்கு கீழாக அனைத்து சிறுபான்மை இனங்களும் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை இழந்து செல்லுகின்றன. மாறாக பெரும்பான்மை இனம் அதிக சலுகை பெற்று வருகின்றது. அத்துடன் உலகமயமாதல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் தனியார் மயமாக்கலையும், வேலை நீக்கத்தையும் கோருகின்றது. இதனால் வேலை வாய்ப்பு வேகமாக குறைந்து செல்லுகின்றது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனங்களை விட அதிக சலுகைகளை இனவாத அரசிடம் தொடர்ந்து பெறுகின்றது. உலகமயமாதலின் விளைவை சிறுபான்மை இனங்கள் மேல் இனவாத அரசு சுமத்துவதன் மூலம், ஒட்டுமொத்த சமூக நெருக்கடியில் இருந்து அரசு தப்பிச் செல்லுகின்றன. இந்த நிலையில் தேசிய இனங்களுக்கிடையில் ஐக்கியப்பட்ட நாட்டில் ஒன்றாக வாழ்வதற்காக, குறைந்த பட்சம் இனவிகித அடிப்படையில் வேலை வாய்ப்புகள் பகிரப்பட முடியாத உலகமயமாதல் நிபந்தனை உள்ளது. அரசு துறையில் வேலை வாய்ப்பை குறைக்கக் கோரும் நிபந்தனையும், வேலை நீக்கக் கோரும் நிபந்தனையும், அரசுதுறையில் தமிழருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை வழங்குமளவுக்கு, உலகமயமாதல் சகாப்தத்தில் நிலவும் சமூக அமைப்பால் சாத்தியமில்லை. தமிழருக்கு இனவிகித அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வந்தால், சிங்கள மக்களை வேலையில் இருந்து நீக்கவேண்டும். உண்மையில் இனப்பிரச்சனையை இந்த உலகமயமாதல் நிபந்தனைக்குள், ஜனநாயக கோரிக்கையின் அடிப்படையில் தீர்க்க முடியாது. மாறாக ஐக்கியப்பட்ட ஒரே நாட்டில் தீர்க்க இரண்டு தரப்பும் உடன்பட்டால், தமிழரும் சிங்களவரும் இணைந்து மலையக மற்றும் முஸ்லீம் மக்களுக்கு, மற்றும் யாழ் அல்லாத பிரதேசத்துக்கும் நியாயமாக கிடைக்க வேண்டியதை சூறையாடியே அமைதியை ஏற்படுத்துவர். இதையே தமிழ் குறுந் தேசியம் தனது அரசியலாக ஆணையில் வைத்துள்ளது. வேறு எந்த வழியிலும் தீர்க்க முடியாது.

இதை நான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமாயின் 1981 ஆண்டு சனத் தொகை அடிப்படையில், 1990ம் ஆண்டில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் உள்ள வேலை செய்வோரை இனவிகித அடிப்படையில் பகிரப்பட வேண்டுமாயின் என்ன நடக்கும் எனப் பார்த்தாலே போதும். 1981ம் ஆண்டு மக்கள் தொகையடிப்படையில் சிங்களவர் 74 சதவிகிதமும், தமிழர் 12.7 சதவிகிதமும், முஸ்லீம்கள் 7 சதவிகிதமும், மலையகத்தார் 5.5 சதவிகிதமாகவும், ஏனையோர் 0.8 சதவிகிதமாகவும் இருந்தனர். 1990 இல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் மொத்தமாக வேலை செய்தோர் அண்ணளவாக 700593 பேராவர். இதில் சிங்களவர் 622126 பேரும், தமிழர் 50442 பேரும், முஸ்லீம்கள் 20317 பேரும், மலையகத்தார் 2101 பேரும், ஏனையோர் 7005 பேரும் வேலை செய்தனர். ஆனால் இன விகித அடிப்படையில் வேலை செய்திருக்க வேண்டியவர்கள் சிங்களவர் 518438யும், தமிழர் 88957யும், முஸ்லீம்கள் 49041யும், மலையகத்தார் 38532யும், ஏனையோர் 5604ம் ஆகும். இனவாதத்தால் இதில் உள்ள இடை வெளியை சிங்களவர் 103688 கூடுதலாகவும், தமிழர் 38533 குறைவாகவும், முஸ்லீம்கள் 28724 குறைவாகவும், மலையகத்தார் 36431 குறைவாகவும், ஏனையோர் 1401 அதிகமாகவும் காணப்படுகின்றனர். அதாவது இனவிகிதத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமாயின் சிங்களவர் 103688 பேரின் வேலையை பறிக்கவேண்டும். இது மொத்தமாக வேலை செய்வோரில் 14.8 சதவிகிதமாகும். இது சாத்தியமில்லை. மற்றொரு வழியில் வேலை செய்யும் சிங்களவர் எண்ணிக்கையை இனவிகிதமாக்கி, சிங்களவர் அல்லாதவருக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதாயின் மொத்த வேலைசெய்வோரை 840710 யாக அதிகரிக்க வைக்க வேண்டும் இது மேல் அதிகமாக சிறுபான்மை இனங்களுக்கு 140117 வேலை வாய்ப்பை அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வழங்க வேண்டும். இதுவும் இந்த உலகமயமாதல் சமூக அமைப்பில் சாத்தியமில்லை.

தமிழீழம் கிடைக்குமாயின் கூட இது சாத்தியமில்லை. யாழ் அல்லாத பிரதேசத்துக்கு பிரதேச ரீதியில் பெரும் தொகையான வேலை வாய்ப்பை தமிழீழம் வழங்காது மட்டுமின்றி வழங்க முடியாது. தமிழீழம் உலகமயமாதலை ஆதரிப்பதாக பிரகடனம் செய்கின்றது. உண்மை யதார்த்தத்தில் வெட்ட வெளிச்சமாக எம்முன் உள்ளது. சிங்கள, தமிழ் ஆளும் வர்க்கங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள், சாதிய ரீதியாகவும், சிறுபான்மை இனங்களையும், பிரதேசங்களையும் சூறையாடியே இன ஒற்றுமையை அல்லது இனப் பிளவை வித்திடுகின்றன.

Wednesday, October 11, 2006

இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு

வருகிறது சிறப்புப் பொருளாதார மண்டலம் (SENs) இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு

""வாங்கண்ணா, வாங்க! அதிருஷ்டம் உங்களை அழைக்கிறது!'' இது, சிறிது காலத்திற்கு முன்பு தடைசெய்யப்படும்வரை எங்கெங்கும் ஒலித்த லாட்டரி சீட்டு வியாபாரிகளின் குரல் அல்ல. மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சரான கமல் நாத், லாட்டரி சீட்டு வியாபாரிகளையே விஞ்சும் வகையில் இப்படி அறைகூவி அழைக்கிறார். உழைக்கும் மக்களாகிய நம்மை அவர் அழைக்கவில்லை. தரகுப் பெருமுதலாளிகளையும், நிலமுதலைகளையும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளையும்தான் அவர் இப்படி அறைகூவி அழைக்கிறார்.


""தலைவா, இது உங்களோட சமஸ்தானம்; இங்க நீங்க உங்க இஷ்டப்படி ராஜ்ஜியம் நடத்தலாம்; நாங்க எந்தக் கேள்வியும் கேட்கமாட்டோம்; வாங்க தலைவா, வந்து உங்க தொழில நடத்துங்க!'' என்று காலில் விழாத குறையாக தனது எஜமானர்களை உபசரித்து அழைக்கிறார் கமல்நாத். தமது பகற்கொள்ளைக்கும் ஆக்கிரமிப்புக்கும் ஆதிக்கத்துக்கும் காங்கிரசு கூட்டணி அரசு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதைக் கண்டு பூரித்துப் போகும் ஏகாதிபத்தியவாதிகள், ""எங்க காட்டுல மழை பெய்யுது; எங்க கோட்டையில் கொடி ஏறுது'' என்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கும்மாளமடிக்கின்றனர். நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கூறுபோட்டுக் கொடுக்கும் இந்தத் திட்டத்தையே காங்கிரசு கூட்டணி அரசு, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) என்றழைக்கிறது.


""செஸ்'' என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones - SEZs) எனும் திட்டம், கடந்த 2000வது ஆண்டில் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு கடந்த ஜூன் 23, 2005இல் அரசுத் தலைவரின் அங்கீகாரத்துடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நான்குநேரியிலும் குஜராத்தில் பாசிட்ராவிலும் முதன்முதலாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. தற்போது சென்னை எண்ணூரில் 2,500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு டிட்கோ, சிப்காட் ஆகிய அரசுத் துறை நிறுவனங்களோடு அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டுச் சேர்ந்து தொழில் தொடங்க முன்வந்துள்ளது. இது தவிர, மும்பையில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மாண்டமாகவும், அரியானா மாநிலத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் இத்தகைய மண்டலங்கள் நிறுவப்படவுள்ளன.


சென்னையில் ஏற்கெனவே மெட்ராஸ் ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலம் (""மெப்ஸ்''), மகிந்திரா சிட்டி ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை தவிர, சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, மதுரை ஆகிய இடங்களிலும் இத்தகைய மண்டலங்களை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரால் போலி கம்யூனிஸ்டுகள் முதல் அனைத்து மாநில முதல்வர்களும் வேகவேகமாக இத்தகைய மண்டலங்களை நிறுவ முயற்சித்து வருகின்றனர். ஏறத்தாழ ஒரு நாளைக்கு ஒன்று என்ற வேகத்தில் நாடெங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக ""பிசினஸ் அண்டு எக்கானமி'' என்ற ஆங்கில வாரப் பத்திரிகை குறிப்பிடுகிறது. அந்நிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்து, தொழிலும் வர்த்தகமும் வேலைவாய்ப்பும் பெருகி, நாட்டை வல்லரசாக மாற்றுவதற்கான ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்பதாக ஆட்சியாளர்கள் சித்தரிக்கின்றனர்.


ஆனால், இது நாட்டை வல்லரசாக்க ஆட்சியாளர்கள் மூளையைக் கசக்கிக் கண்டுபிடித்துள்ள புதிய திட்டம் அல்ல. பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றிக் கவர்ச்சிகரமாக வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுதான். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களின் (Export Processing Zones) புதிய பரிமாணம்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்!


1980களில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல ஏழை நாடுகளில் இத்தகைய மண்டலங்கள் உருவாகி, இன்று 116 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்கள் பெருகி விட்டன. இப்படி எல்லா நாடுகளும் ஏற்றுமதி மண்டலங்களைப் பெருக்கத் தொடங்கியதும், ஒவ்வொரு நாடும் ஏகாதிபத்திய முதலீட்டாளர்களுக்குச் சலுகை மேல் சலுகைகளை வாரியிறைத்து முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றன. இவ்வாறு வளர்ந்துவரும் போட்டியைச் சமாளிக்கவும், அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தி அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் 1980களின் இறுதியில் உருவாக்கப்பட்டவைதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். மற்ற நாடுகள் சில சலுகைகளைத் தருவார்கள்; நாங்கள் ஒரு சமஸ்தானத்தையே அமைத்துத் தருகிறோம் என்று சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய இம்மண்டலங்கள்தான், உலகமயச் சூழலில் வளர்ச்சிக்கான ஒரே வழி என்பதாக முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் காட்டுகின்றனர். ஒரு காலத்தில் சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சென்ஷென், இன்று பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீட்டைப் பெற்றுள்ள மாபெரும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வளர்ந்துள்ளது. இதேபோல சீனாவின் ஷாங்காய், காண்டன், ஹாங்காங் ஆகிய நகரங்களின் வளர்ச்சியைக் காட்டி, சீனாவைப் போல அன்னிய முதலீட்டைப் பெருமளவில் குவித்து, சீனாவைப் போலவே இந்தியாவையும் "வல்லரசாக' மாற்ற, அதேபாணியில் உருவாக்கப்பட்டவைதான் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.


இந்தியாவில் உருவாக்கப்படும் இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அன்னிய நிறுவனங்களும் அமைத்துக் கொள்ளலாம் என்று தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ், டாடா, மஹிந்திரா, ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம், சஹாரா, யுனிடெக், அடானிஸ், டி.எல்.எஃப் ஆகிய பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளன. நாடெங்கும் 94 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அடுத்த 18 மாதங்களில் செயல்பட ஆரம்பித்து விடும் என்றும்; நாடெங்கும் மொத்தமாக 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும் என்றும் மைய அரசு கூறி வருகிறது.


முந்தைய ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேறுபட்டவை; இதன் பெயரிலேயே இப்போது பொருளுற்பத்தி என்ற வார்த்தை நீக்கப்பட்டு விட்டது. அதாவது, பொருளுற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் இங்கு தொழில் நடத்தலாம். எல்லா சலுகைகளும் இந்நிறுவனங்களுக்குத் தரப்படும். இதனாலேயே வீட்டுமனைத் தொழில், அடுக்குமாடி கட்டிடத் தொழில், மருத்துவமனைகள், பேரங்காடிகள் (""ஷாப்பிங் மால்'') முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களும் அன்னிய ஏகபோக நிறுவனங்களும் இத்தகைய மண்டலங்களை அமைக்கப் படையெடுக்கின்றன. இவற்றுக்காகவே விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்குக் கையகப்படுத்தப்படுகின்றன. டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 4.20 லட்சம் ஏக்கர் நிலங்கள், ஒரு சதுர மீட்டர் ரூ. 50 வீதம் விவசாயிகளிடமிருந்து அரசால் பறிக்கப்பட்டுள்ளன; ஆனால், சந்தை விலையோ இதைவிட பலமடங்கு அதிகமானதாகும்.

இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் நடத்தும் தரகுப் பெருமுதலாளித்துவ அன்னிய ஏகபோக நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்; அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 50% வரி விலக்குத் தரப்படும். கச்சாப் பொருட்கள், மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முழுமையான சுங்க வரி விலக்கு, சிறுதொழில்களுக்கென ஒதுக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை இங்கு தயாரித்துக் கொள்ள தாராள அனுமதி, உள்நாட்டுச் சந்தையிலிருந்தே வாங்கப்படும் உதிரி பாகங்களுக்கு மத்திய கலால் வரியிலிருந்து முழுமையான விலக்கு, மத்திய விற்பனை வரி ரத்து, உற்பத்திப் பொருட்களை மற்ற நிறுவனங்களிடம் துணை ஒப்பந்த முறையில் தயாரித்துக் கொள்ளவும், ஒப்பந்த மறையில் தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளவும், பெண்களை இரவு நேர வேலைகளில் பணியமர்த்திக் கொள்ளவும் தாராள அனுமதி எனக் கணக்கற்ற சலுகைகள் வாரியிறைக்கப்பட்டுள்ளன.


ஆட்சியாளர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால், அதன் மூலம் 1,00,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடு நாட்டுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்யப் போகும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இறக்குமதி வரிச் சலுகையின் மூலம் மட்டும் மைய அரசுக்கு 90,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி விற்பனையைத் தொடங்கு முன்பே, தங்களின் முதலீட்டில் ஏறத்தாழ 90 சதவீதத்தை வரிச் சலுகையாகத் திரும்ப எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். உமியைக் கொண்டு வந்தவன் அவலைத் தின்னப் போகும் அநியாயத்தைத்தான் நாடு சந்திக்கப் போகிறது.


இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இந்தியத் தொழிற்சங்க சட்டங்கள் எதுவும் செல்லாது; தொழிற்சங்கங்களும் இங்கு நுழைய முடியாது; தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரளவோ போராட முடியாது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் "அன்னியர்கள்' நுழையவும் முடியாது. உதாரணமாக, ஓசூர் தொழிற்பேட்டையிலுள்ள ஒரு சிறுதொழில் நிறுவனத்துக்குள் நுழைய ஒருவர் அனுமதி பெறவேண்டும்; ஆனால், தொழிற்பேட்டைக்குள் நுழையவே அனுமதி பெற வேண்டும் என்றால், அது இந்திய நாட்டைச் சேர்ந்த பகுதியா அல்லது வேறு நாடா என்று சந்தேகம் வந்துவிடும். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும், அவை அன்னிய பிரதேசங்கள்; தனி சமஸ்தானங்கள் என்கிறது அரசு. இந்தியக் குடிமகனாக இருந்தாலும், இந்த சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி அதாவது, ""விசா'' வாங்க வேண்டும்!


"அன்னிய' குறுக்கீடுகளற்ற இந்த சமஸ்தானத்திற்கு 1000 ஏக்கருக்கும் குறையாமல் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனும் விதியின் நோக்கமே, அது நிலக்கொள்ளைக்கான ஏற்பாடுதான் என்பதைக் காட்டுகிறது. ஏற்கெனவே மும்பை சாண்டாகுரூசில் 93 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2002ஆம் ஆண்டில் இயங்கிய ஏறத்தாழ 197 நிறுவனங்கள் இப்போது ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் இல்லாமல், படிப்படியாகக் குறைந்துவிட்டன. 93 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்ட இத்தகைய மண்டலங்களே தொழில் வளர்ச்சியின்றி முடங்கிக் கிடக்கும்போது, 1000 ஏக்கருக்கு மேல் நிலத்தைக் கொடுப்பது ஏன்? பிலிப்பைன்ஸ், மலேசியா, பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, சிறீலங்கா, வங்கதேசம் என உலகின் பல நாடுகளில் இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அதை இந்தியாவில் நிறுவுவது ஏன்? விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலம் தரகுப் பெருமுதலாளிகளும் அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கொள்ளையடிப்பதற்காகவே இத்தகைய மண்டலங்களை நிறுவுவதில் ஆட்சியாளர்கள் போட்டி போடுகின்றனர்.


சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கச் சுற்றுச்சூழல் பசுமையானதாகவும், தொழிற்சாலைகளுக்கும் அடிக்கட்டுமான சேவைகளுக்கும் தண்ணீர் வசதி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று ஏகாதிபத்தியவாதிகள் விதித்துள்ள நிபந்தனையை ஆட்சியாளர்கள் விசுவாசமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்பகுதியில் நிலத்தடிநீரை வரைமுறையின்றி உறிஞ்சவும், மூல வளங்களைக் கட்டுப்பாடின்றி அள்ளிச் செல்லவும் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இம்மண்டலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போகும்; பின்னர் அந்த நிலங்களும் மானாவாரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு அவையும் இக்கொள்ளையர்களால் சூறையாடப்படும்.


மேலும், இம்மண்டலங்களில் விவசாயத்தை வர்த்தகமாக்கும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. தனி சமஸ்தானத்தில் இயங்குவதாலும், கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாததாலும், இந்நிறுவனங்கள் செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கி நாட்டையும் மக்களையும் கொள்ளையடிக்க முடியும். ஏற்கெனவே அர்ஜெண்டினாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இத்தகைய நிறுவனங்கள் செயற்கையான உணவுப் பஞ்சத்தை உருவாக்கிச் சூறையாடியுள்ளன.


ஏற்கெனவே தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயம் நாசமாக்கப்பட்டு, விவசாயிகள் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து முற்றாக வெளியேற்றும் ஆக்கிரமிப்புப் போரை சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஆளுங் கும்பல் தொடுத்துள்ளது. நாட்டின் அரைகுறை சுயாதிபத்திய உரிமையையும் ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்துவிட்டு மறுகாலனிய சுருக்கை வேகமாக இறுக்கி வருகிறது காங்கிரசு கூட்டணி அரசு. அன்று ஒரு கிழக்கிந்திய கம்பெனி வந்து நாட்டைக் காலனியாக்கியது என்றால், இன்று நூற்றுக்கணக்கான அன்னிய ஏகபோகக் கம்பெனிகள் படையெடுத்து வருகின்றன. இந்தக் காலனிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஒரிசாவின் பழங்குடியின மக்கள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகிறார்கள். இன்று, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.


பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்கும் யூதக் குடியேற்றம், ஈழத்தை ஆக்கிரமிக்கும் சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றுக்கும், விவசாய நிலங்களையும் புறநகர் சேரிப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் வேறுபாடில்லை. மறுகாலனிய ஆக்கிரமிப்பு எனும் உள்நாட்டுப் போரை நம்மீது பிரகடனம் செய்திருக்கிறார்கள் எதிரிகள். போரை, போரினால் எதிர்கொள்வதைத் தவிர வேறென்ன வழி இருக்கிறது?


கவி


Tuesday, October 10, 2006

தி.மு.க. அரசின் இலவசத்திட்டங்கள் : நீதி மர்மம் என்ன?

தி.மு.க. அரசின் இலவசத்திட்டங்கள் : நீதி மர்மம் என்ன?

தேர்தல் முடிவுகளைக் கேட்ட மறுவினாடியே, தமது வாக்குறுதிகளை மறந்து விடுவதையும், மழுப்புவதையும் ஓட்டுக் கட்சிகளிடம் இதுவரை கண்டுவந்த அரசியல் நோக்கர்கள், இப்போது தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள், பேச்சுக்களைக் கண்டு மயக்கங் கொள்கிறார்கள். கருணாநிதி இப்போது நெஞ்சுயர்த்திச் சொல்கிறார், ""தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதிகள் தரப்பட்டன. அவற்றில் 62 வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தேவையில்லாத 74 வாக்குறுதிகளில் 45 வாக்குறுதிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டிலேயே மூன்றில் இரண்டு பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம்.'' கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; விவசாயக் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி உத்திரவு போட்டார்.


இவை தவிர, தி.மு.க. தேர்தல் அறிக்கையின் நட்சத்திர வாக்குறுதிகளான ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலப்பட்டா, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஆகியன தி.மு.க. வழக்கமாகக் கொண்டாடும் முப்பெரும் விழா நாட்களில் தொடங்கப்பட்டு விட்டன. 24,949 ஏழை விவசாயிகளுக்கு 26,321 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. 25,245 வண்ண வானொளிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. பத்து இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வரும் ஜனவரி பொங்கல் முதல் இலவச எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் அமலாகும் என்று மு.க. அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப மாதம் ரூ. 150 முதல் 300 ரூபாய் வரை உதவித் தொகை அக்டோபர் முதல் வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.


ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்ட அரசு ஊழியர் வேலை நிறுத்தத் தடைச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவை நீக்கப்பட்டன. அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது. உழவர் சந்தை, ஏழைகள் திருமண உதவி போன்றவை மீண்டும் கொண்டு வரப்பட்டன. பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், கிராமநல ஊழியர்கள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைகள் கொடுக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர் வேலை வாய்ப்புகள் மீண்டும் ஏற்படுத்தப்படுகின்றன. பல ஆயிரம் பேருக்கு இதனால் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுதிப்படுத்தப்படுவதோடு இளைஞர் சுய உதவிக் குழுக்களும் நிறுவப்பட்டு விரிவுபடுத்தப்படுகிறது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பல உரிமைகள் பலன்கள் மீண்டும் நிலைநாட்டப்படுகின்றன.


எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களைக் குறிவைத்துதான் இலவசகவர்ச்சித் திட்டங்களை கருணாநிதி அரசு விரைந்து செயல்படுத்துகிறது என்றபோதும், அவை குறைபாடுகள் நிறைந்தனவாக உள்ளன என்றபோதும், தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையையும், கட்டுமான மறுசீரமைப்பையும் செய்யும்படி உத்தரவிடும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலுள்ள உலக வர்த்தகக் கழகம் , உலக வங்கி , மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் ஆதிக்கத்தின் கீழ் இவ்வாறு இலவச கவர்ச்சித் திட்டங்களை எப்படிக் கொண்டுவந்து செயல்படுத்த முடிகிறது? இந்தக் கேள்விதான் அரசியல் பார்வையாளர்கள் பலரையும் மயக்கங் கொள்ளச் செய்கிறது.


உண்மை விவரங்களைத் தொகுத்தும் பகுத்தும் பார்த்தால், இந்தக் கேள்வி ஒன்றும் எளிதில் விடைகாண முடியாதவாறு சிக்கலானதில்லை. தரிசு நிலங்களைக் கண்டறிந்து, மேம்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் அதே கருணாநிதி அரசுதான், ஒவ்வொன்றும் குறைந்தது 1000 ஏக்கர் பரப்புக்கும் மேலான விவசாய நிலங்களைக் கொண்ட சிறப்புப் பொருளார மண்டலங்களை தமிழகத்தின் நான்குநேரி, சென்னை எண்ணூர், திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, மதுரை ஆகிய இடங்களில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து வருகிறது. ஏற்கெனவே சென்னை தாம்பரத்தில் உள்ள சென்னை பொருளுற்பத்தி மண்டலம் (""மெப்ஸ்'') மற்றும் செங்கை அருகே உள்ள மகிந்திரா சிட்டி போன்றவை தாம் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். விவசாய விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியும் அரசு தரிசு நிலங்களை வளைத்துப் போட்டும் உருவாக்கப்படும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் நிலம், நீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அந்நிய பன்னாட்டுத் தொழில் கழகங்களும், உள்நாட்டு ஏகபோக தரகு முதலாளிகளும் தாராளமாகக் கொள்ளையடிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. தொழில், உற்பத்திப் பெருக்கம், வேலை வாய்ப்புகளுக்கானவை என்று கூறிக் கொண்டாலும், அந்நிய உள்நாட்டு ஏகபோகங்கள் வீடுவீட்டுமனைத் தொழில், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பேரங்காடிகள், கணினிகளை வைத்து அந்நிய தொழில் வர்த்தக வங்கிகளுக்கான விவர வேலைகள் (பி.பி.ஓ. மற்றும் கால் சென்டர்) நடத்திக் கொள்ளையடிப்பதும் பெருமளவு நடக்கவுள்ளன.


நிலச் சீர்திருத்தத்தை அமலாக்கும் புரட்சி செய்து விட்டதாகப் பீற்றிக் கொள்ளும் "இடது சாரிகள்' ஆளும் மேற்கு வங்கம், கேரளா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதும், விவசாயிகளிடையே அதற்குக் கடும் எதிர்ப்பும் போராட்டங்களும் வெடிப்பதும் நடக்கின்றன. அவற்றையும் மீறி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படுவதில் 10 சதவீதத்துக்கும் மேலாக விவசாய விளைநிலங்கள் இருக்கக் கூடாது என்ற வரம்பையும் உலக வங்கி நிர்பந்தத்தால் மத்திய அரசு நீக்கிவிட்டது. ஆனால், இங்கே தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவும் தி.மு.க. அரசின் விரைவான முயற்சிக்கு ஒரு சிறு முணுமுணுப்போ, எதிர்ப்போ இல்லை, இதில் கருணாநிதி ஜெயலலிதா, போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நாளுக்கு ஒன்று வீதம் கருணாநிதியும், மாறனும் அந்நிய பன்னாட்டு கழகங்கள் மற்றும் டாடா, ரிலையன்ஸ், அம்பானி போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளிகளையும் வரவேற்று தொழில்கள் வர்த்தகங்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடுகின்றனர்.

கருணாநிதி அரசு ஒருபுறம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை மேம்படுத்தி இலவச நில ஒதுக்கீடு; மறுபுறம், ஏராளமான விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தி சகல வசதிகளோடு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்து அந்நிய மற்றும் உள்நாடு ஏகபோகங்களுக்குத் தாரை வார்ப்பது எனும் இவ்விரண்டைப் பார்க்கும்போது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று நாடகமாடுகிறதோ அல்லது நிலமளிப்பு உட்பட பல கவர்ச்சி இலவச திட்டங்கள் மூலம் அந்நிய உள்நாட்டு ஏகபோகங்களுக்குச் சேவை செய்வதை மூடி மறைத்து திசை திருப்ப எத்தணிக்கிறதோ என்று பலவாறு எண்ணத் தோன்றும்.


ஆனால், கருணாநிதி கட்சியும் அரசும் அறிவித்துச் செயல்படுத்தும் இலவசகவர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே உலகவங்கி, ஐ.எம்.எஃப்., உ.வ.கழகம் ஆகியவை மூலம் ஏகாதிபத்தியங்கள் புகுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையின் திருத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள்தாம். மலிவான, திறன்மிக்க உழைப்பாளர்களை உருவாக்கும் மனிதவள, இயற்கை வள மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுண்பொருளாதாரத் திட்டங்கள் ஆகிய வகையினங்களில் மறுகாலனியாக்கக் கொள்கைகளைத்தான் கருணாநிதி அரசு தனது சொந்தப் பங்களிப்புகளாகப் பீற்றிக் கொள்கின்றது. இத்தகைய கொள்கைகளை முழுக்கவும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை வைத்துச் செயல்படுத்த முயன்று தோற்றுப்போய், இப்போது அரசு மூலமாக கொண்டு வரப்படுகின்றன. மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சுனாமி வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ஜெயலலிதா காலத்திலேயே இவ்வாறு வாரி இறைக்கப்பட்டது. மறுகாலனியாக்கத் திட்டங்களை தமது அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் ஜெயலலிதாவை கருணாநிதி விஞ்சி விட்டார் என்பதுதான் உண்மை.

Sunday, October 8, 2006

பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வி

பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்- பகுதி ஏழு

பகுதி ஒன்று பகுதி இரண்டு

பகுதி மூன்று பகுதி நான்கு

பகுதி ஐந்து பகுதி ஆறு

பகுதி ஏழு


1995 இல் திருகோணமலையில் கல்வியின் நிலை



இனம்

மாணவர்கள்

ஆசிரியர்கள்

பாடசாலைகள்

ஆசிரியர் மாணவர் வீகிதம்

மாணவர்பாடாசாலை

வீகிதம்

தமிழ்

30 224

1267

90

23.85

335

சிங்களம்

22 661

1576

67

14.37

338

முஸ்லிம்

34 810

1038

79

33.53

440



தீவிர இனவாதத்தால் சூறையாடப்படும் திருகோணமலையில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சலுகைளை நாம் மேலே தெளிவாக காண்கின்றோம். அதிலும் முஸ்லீம் மக்கள் கல்வியில் சந்திக்கும் நெருக்கடி தமிழ் மக்களை விட அதிகமாக இருப்பதை இது காட்டுகின்றது. உயர்தரபாடசாலைகளை யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு மாணவர்கள் எண்ணிக்கை திருகோணமலையில் 6596 யும், யாழ்ப்பாணத்தில் 4940 யாகவும் காணப்படுகின்றது. ஒரு விஞ்ஞான ஆசிரியருக்கு யாழ்ப்பாணத்தில் 527 மாணவராக இருக்க திருமோணமலையில் 1118 யாக காணப்படுகின்றது. இது இனம் மற்றும் சிறுபான்மை இனம் என்று பிரிகின்ற போது ஆழமான கல்விப்பிளவை ஏற்படுத்துகின்றது. ஆனால் தமிழ் தேசியம் இந்த அடிப்படை விடையத்தையிட்டு என்றுமே போராடவில்லை. ஏன் என்பது தமிழ் தேசியத்தின் பிற்போக்குத் தன்மை துல்லியமாக நிர்வாணமாக்குகின்றது.


முஸ்லீம் மற்றும் மலையக தமிழ் மக்களின் கல்வி இலங்கையில் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. 1981-82 கல்வி ஆண்டில் மருத்துவ துறைக்கான விகிதம் சிங்களவர் 72.4யும், தமிழர் 25.3யும் பெற்ற அதேநேரம், முஸ்லீம் உள்ளிட்ட மலையகத்தைச் சேர்ந்தோரும் 2.3சதவீதத்தை பெற்று புறக்கணிப்புக்குள்ளாகி காணப்படுகின்றனர். இங்கும் யாழ் சமூகமே அதிகரித்த இடங்களை பெறுகின்றது. 1969-70 இல் மருத்துவ துறைக்கு தெரிவான முஸ்லீம்களின் எண்ணிக்கை 0.9சதவீதமாகும். 1979-81 இலங்கையில் முஸ்லீம் டாக்டர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம் மட்டுமேயாகும். கல்வியின் மிக மோசமான பாதிப்பை மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் சந்திக்கின்றனர். அதன் தொடர்ச்சியில் பின் தங்கிய தமிழ் மாவட்டங்கள் சந்திக்கின்றன. ஆனால் தமிழ் தேசியம் இதையிட்டு மூச்சுக் கூட விடவில்லை. இதை பூசிமொழுகியே போராட்டத்தை யாழ் நலன்களை பேணும் போராட்டமாக்கியது. இது ஒரு சமூகத்தின் அனைத்து துறையிலும் பொதுவாக பொருந்தும் வகையில் கையாளப்பட்டது. இந்த சமூக புறக்கணிப்பு வர்க்கம், இனம்,பிரதேசவாதம், சாதியம் என்ற அடிப்படையில் கையாளப்பட்டது. இதை இலங்கையை ஆளும் வர்க்கங்களும், தமிழ் தேசியத்துக்கு தலைமை தாங்கிய வர்க்கமும் திட்டமிட்டே இன்று வரை தனது பொதுக் கொள்கையாகக் கொள்கின்றது. இதனால் சமூகப் பிளவுகள் ஆழமாகின்றன.


இனவாதம் திட்டமிட்டு செய்யும் மொழி ரீதியான ஒடுக்குமுறையும், தமிழ் தேசியத்தின் குறுந்தேசியவாதமும் முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் சமாந்தரமாக செயற்படுகின்றது. இது தமிழ்மொழிக் கல்விக்கு எதிராக மாறுகின்றது. 1991 இல் முழு நாட்டிலும் 44 775 முஸ்லீம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது மொத்த முஸ்லீம மாணவர்களில் 13.05 சதவீதமாகுமளவுக்கு இனவழிப்பு விரிவாகியுள்ளது. தமிழ் தேசியம் இவற்றை எல்லாம் தமிழ் இனம் என்ற அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக்குரிய போராட்டத்தை கைவிட்டு, முஸ்லீம் மக்களை எதிரியாகக் காட்டி ஒடுக்கும் போது, தேசிய அழிப்புக்கு துணைபோவது தான் நிகழ்ந்தது, நிகழ்கின்றது. இதைத்தான் அன்று மலையக மக்களுக்கு எதிராக ஐp.ஐp. பொன்னம்பலமும் செய்தார். இதைத்தான் இன்று தமிழ் தேசியம் தமிழ் என்று பொதுமைப்படுத்தியபடி, மற்றைய சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்றது. இது தமிழ்தேசிய அடிப்படைக்கு எதிரானதாகவே இருக்கின்றது. இந்த யாழ் தேசியம் எப்படி தேசியத்தில் பிற்போக்காகவும், ஏகாதிபத்திய வாலாகவும் நீடிக்கின்றது என்பதற்கு அண்மைய அறிவிப்பு ஒன்று தெளிவாக வெளிப்படுத்தியது. அண்மையில் யாழ் உயர்தரப் பாடசாலை ஒன்றில் அனைத்துப்பாடத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்க தொடங்கியுள்ளது. இந்த யாழ் மேட்டுக்குடிகளின் ப+ர்சுவாதனத்தையும், ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தையும் தமிழ் தேசியம் மௌனமாக அங்கீகரிப்பதுதான், இதில் வேடிக்கையான உண்மையாகும். இந்த அறிவித்தலையிட்டு தமிழ்தேசியத்தின் எந்த தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல் கூட எழவில்லை. ஒரு மொழி அழிவுக்கு வித்திட்டுள்ள சவாலை தேசியம் அங்கீகரித்து ஆதரிக்கின்றது. இந்த யாழ் தேசியம் சொந்த மொழிக்கே எதிரானதாக இருப்பது தெளிவாகின்றது.


1998 இல் பொதுவாக இலங்கையில் 124 மாணவருக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் இருக்க, இது மலையகத்தில் 500க்கு ஒன்றாக உள்ளது. மலையகத்தில் பாடசாலை கல்வி நிர்வாகிகள் 118 பேர் தேவையாக இருக்க, வெறுமனே ஒன்பது பேரே உள்ளனர்.


தமிழ் தேசியம் தனது பொதுமைப்படுத்தலூடாக யாழ் தேசியத்தை உயர்த்தி, தனது நலன்களையே தக்கவைக்கின்றனர். இதற்காக மலையக மக்கள் பலியிடப்படுகின்றனர். இதை தெளிவுபடுத்தும் வகையில் 1998 இல் உயர் கல்விகான க.பொ.த (உ.த) பரீட்சையில் 180 000 பேர் பங்குகொண்டனர். இதில் மலையக மக்கள் 1000 முதல் 1500 பேரை பரீட்சை எழுதினர். க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 1996இல் 5 லட்சம் மாணவர்கள் அமர்ந்தனர். இதில் மலையக மாணவர்கள் வெறுமனே 3000 பேர் மட்டுமே. சமூகத்தின் பிரச்சனைகளை தமிழ் தேசியம் என்ற பொதுமைப்படுத்துபவர்கள், அந்த மக்களுக்காக போராடவும் அவர்கள் உரிமையை கோரவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்ததில்லை, இருக்கப்போவதில்லை.


12 பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயிலும் 33 000 மாணவர்களில் மலையக மாணவர்கள் எண்ணிக்கை 200 க்கும் குறைவாகவே உள்ளனர். இது மொத்த மாணவரில் 0.5 சதவீதமாகும். மலையக மக்கள் இன விகிதாசார அடிப்படையில் வருடம் 540 பேருக்கு பல்கலைக்கழகம் கிடைக்க வேண்டும். இந்த அவலத்தை தமிழ்தேசியம் பிரித்தெடுத்துக் காட்டி அவர்களுக்காக போராடவில்லை. மாறாக தமிழ் என்ற பொதுமைப்படுத்தி பின் இன விகிதாசார குறைவுகளையும் சுட்டிக்காட்டி, யாழ் நலனை மறைமுகமாக கோருகின்றது. மலையகத்தின் கல்வி அவலம் நிலவுகின்ற அளவுக்கு நிலவும் சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழலை மாற்றி அமைக்க, தேசியம் மூச்சுக் கூட விடவில்லை. இதுவே யாழ் தேசியத்தின் பொதுக் கொள்கையும் கூட.


மலையகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது ஒருவிதியாக உள்ளது. மத்திய மாகாணத்தில் ஆசிரியர் தேவை 5220 யாக இருக்க, 1930 ஆசிரியர்களே உள்ளனர். மாணவர் ஆசிரியர் விகிதம் நுவரெலியாவில் 45க்கு ஒன்றாகவும், கண்டியில் 34 க்கு ஒன்றாகவும், மாத்தறையில் 32 க்கு ஒன்றாகவும், மாகாணத்தின் சராசரியாக 24க்கும் ஒன்றாகவும் உள்ளது. இந்த சராசரியை விரித்துப் பார்த்தால் சிங்கள ஆசிரியர்களின் அதிகரித்த எண்ணிக்கையும், மலையக மாணவர்களின் மேல் திட்டமிட்ட இன ஒழிப்பும் தெளிவாகவே அம்பலம் செய்கின்றது. ஆனால் தமிழ் தேசியம் இதைப் பற்றி அக்கறைப்பட்டதில்லை. தமிழ் தேசியத்தை பற்றி பீற்றும் தமிழர் ஆசிரியர்சங்கம், ஊளையிட்டுக் கூறும் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை பொதுமைப்படுத்தி யாழ்மையவாதத்தை உயர்த்துகின்றனர். தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை என்பது உண்மையில் மலையகத்தில் ஆழமாகவும் அகலமாகவும் செறிந்துள்ளது. இந்தப் பற்றாக்குறையை தமிழ் தேசிய இனப்பிரச்சனையூடாக தீர்க்க முடியாது. தேசியம் யாழ் மையவாதமாக இருப்பதால் இதை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தும். அரசு துறையில் உள்ளவர்களை வேலையை விட்டு நீக்க கோரும் உலகவங்கியும் உலகமயமாதலும், தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க தடையாக இருக்கும். அத்துடன் அதிகளவில் காணப்படும் சிங்கள ஆசிரியரை குறைக்க முடியாத இனவாதம் புரையோடிப்போயுள்ளது. இந்த நிலையில் தமிழ் குறுந் தேசியம் தனது ஏகாதிபத்திய உலகமயமாதல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, மலையக மக்களின் கல்விக்காக எதையும் செய்யப்போவதில்லை. மாறாக உலகமயமாதல் நிபந்தனைகளை மண்டியிட்டு செயல்படுத்துவார்கள்.


தமிழ் குறுந் தேசியத்தின் பொதுமைப்படுத்தலுக்கு பின்னால் உண்மையை தெளிவாக புரிந்து கொள்ள மேலும் விரிவாக பார்ப்போம். மலையக தமிழ் ஆசிரியர்கள் 9228 பேர் பற்றாக்குறையாக இருக்க, 5433 பேரே உள்ளனர். திட்டமிட்ட இன அழிப்பிலும், வர்க்க ஒடுக்குமுறையிலும் தமிழ் தேசியம் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்றதையே வரலாறு காட்டுகின்றது. மலையக தமிழ் பாடாசாலையில் பட்டதாரி ஆசிரியர்கள் 7 சதவீதமாக இருக்க, இது சிங்கள பகுதியில் 25 சதவீதமாகவும், முஸ்லீம் பாடசாலையில் 17 சதவீதமாகவும் காணப்படுகின்றது. மலையக பாடசாலையில் பயிற்றப்படாத ஆசிரியர் தொகை 55 சதவீதமாக உள்ளது. சிங்கள பாடசாலையில் 19.3 மாணவருக்கு ஒரு ஆசிரியரும், முஸ்லீம் பாடசாலையில் 20 பேருக்கு ஒருவரும், மலையகதமிழ் மாணவருக்கு 37 பேருக்கு ஒரு ஆசிரியரும் காணப்படுகின்றனர். 1994 இல் ஆசிரியர் மாணவர் விகிதம் சிங்கள மொழிப் பாடசாலையில் 18 க்கு ஒன்றாகவும், தமிழ்மொழிப் பாடசாலைகள் 43க்கு ஒன்iறாகவும், தமிழ் முஸ்லீம் மொழிப் பாடசாலைகள் 21க்கு ஒன்றாகவும் உள்ளது.


1996 ம் ஆண்டு மதிப்பீடுகளின் படி 72சதவீதமான சிங்கள ஆசிரியர்கள் பட்டதாரிகள் அல்லது பயிற்றப்பட்டவர்கள். இது முஸ்லீம் பாடசாலைகளில் 72யாகவும், மலையக தமிழ் பாடசாலைகளில் 45 சதவீதமாகவும் உள்ளது. இந்த அவலத்தை மாற்ற போராடாத தமிழ்தேசிய வரலாற்றுத் தலைவர்கள், இதைப் பாதுகாக்க மலையகமக்களின் "கூலி" வாழ்கையை மாற்றக் கூடாது என்பதில் தொடர்ச்சியான வரலாற்றுக் காலகட்டத்தில் கவனமாக இருந்தனர். இதற்காக சிங்கள இனவாதிகளுடன் தோளோடு தோள் நின்றனர். இந்தக் "கூலி"களின் கல்வியை பறித்த பின்பு தான், தமிழ் தேசியம் திறமை பற்றி பீற்ற முடிகின்றது.


மலையக மாணவர்களின் கல்வியை சூறையாடியவர்கள் அதை எப்படி செய்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம். மலையகத்தில் உயர்தர வகுப்புக்கு செல்வோர் சிங்கள மாணவர்கள் 5.6 சதவீதமாகவும், முஸ்லீம மாணவர்கள் 4.9 சதவீதமாகவும், மலையக தமிழ் மாணவர்கள் 0.8 சதவீதமாகவும் உள்ளனர். இலங்கையில் க.பொ.த. (உ.த) உயர் கல்வி கற்கும் 93937 மாணவர்களில் 616 அதாவது 0.04 சதவீதமட்டுமே மலையக மாணவர்கள். இதை மேலும் விரிவாக ஆராயின்



கற்கை நெறிமலையக மாணவர் எண்ணிக்கைசதவீதத்தில்இலங்கையில் மொத்த மாணவர் எண்ணிக்கை

விஞ்ஞானம்

90

0.46

19 446

கலை

220

0.47

46 441

வர்த்தகம்

306

1.09

28 050

மொத்தம்

616

0.65

93 937



வர்க்க ரீதியாகவும் இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வெட்டு முகத்தை நாம் மேல் காண்கின்றோம். ஆனால் அவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு போராடவும், குரல்கொடுக்கவும் தயாரற்ற தேசியத்தை நாம் காண்கின்றோம் இந்த குறுந் தேசியத்தை நாம் ஈவிரக்கமற்ற வகையில எதிர்த்து போராட வேண்டியதையே எமக்கு இது தெளிவாக புகட்டுகின்றது.

Thursday, October 5, 2006

பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்- பகுதி ஐந்து

பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்- பகுதி ஐந்து

பகுதி ஒன்று பகுதி இரண்டு

பகுதி மூன்று பகுதி நான்கு


ரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க வேண்டும் என்பதே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும். இதுவே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியாக வழிநடத்தியிருக்கும். தரப்படுத்தலை எந்தவகையில் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


1. இனவாத இனப்பிளவை கொண்டுவரும் தரப்படுத்தும் முறையை எதிர்த்து, பல்கலைக்கழக தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கு என்ற கோரியிருக்க வேண்டும்.


2. பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை உயர்த்தக் கோரியிருக்க வேண்டும்.


3. இலங்கை தேசிய வளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கு ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை கோரியிருக்க வேண்டும்.


4. உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துக்கான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இணைந்த அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் கல்வியை முன்வைத்து இருக்கவேண்டும்.


5. முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில் பின் தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில் சமூக பொருளாதார சூழலை உருவாக்க போராடியிருக்க வேண்டும்.


இந்த கோரிக்கை தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் கூட இதுவே பொது கோசமாயிருக்க வேண்டும்.


1. இனம் சார்ந்த இனவாத அடிப்படையிலான தரப்படுத்தல் முறையை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


2. பிரித்தாளும் குறுகிய இன அரசியலை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


3. இன ஐக்கியத்தை இனம் கடந்து முன் வைத்திருக்க வேண்டும்.


4. இன அடிப்படையிலான சமுதாயத்தின் திட்டமிட்ட பிளவுகளை வரலாற்று ரீதியாக அடையாளம் காட்டி, அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


5. ஆதிக்க வர்க்கங்களின் இன வர்க்க நலன்களையும் நோக்கத்தையும், தெளிவுபடவே இனம் காட்டி அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும்.


ஆனால் இதை தமிழ் மக்களும் சரி, சிங்கள மக்களும் சரி செய்யவில்லை. இலங்கையில் எந்தக் கட்சியும் இதை முழுமையாக கொண்ட போராட்டத்தை நடத்தவில்லை. கட்சிகள் இந்த பிளவில் குளிர்காய்பவர்களாக இருந்ததால், இந்த பிளவை வீங்கவைத்தனர். இதன் எதிர்நிலைத் தன்மையில் ஒருபுறம் சிங்கள மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. மறு தளத்தில் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இன அடிப்படைவாதம் சமூகங்களை இனங்களாகப் பிளந்து படிப்படியாக ஒரு யுத்த தன்மைக்குள் நகர்த்தின. இதனால் தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் முந்திய சிங்கள இன நிலைக்கு தாழ்ந்து மறுக்கப்பட்டதுடன், தமிழரின் வாழ்வு மறுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த காலகட்டம் என்பது, ஒரு வரலாற்று நீட்சியாக இருந்துள்ளது. ஆனால் இதை மறுத்த தமிழ் தேசியம் தமிழர்கள் தமது ஒடுக்குமுறையை பல்கலைக்கழக அனுமதியில் இருந்து விளக்கியதில் இருந்தே, போராட்டத்தில் பிற்போக்கான கூறு வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தது. சிங்கள இனவாத அரசு தரப்படுத்தலை கொண்டு வந்த போது, இனவாதமே அதன் அடிப்படையாக இருந்தது. இதை தமிழர்கள் அதே இனவாதத்துடன் உள்வாங்கி எதிர்த்தது என்பது, எமது போராட்டத்தின் ஒரு திசைவிலகல்தான். உண்மையில் ஜனநாயகபூர்வமாக சிந்திப்பவன் ஒட்டு மொத்தமாக சகல மாணவர்களையும் இனம் கடந்து பார்த்திருக்க வேண்டும். அதை குறுந் தமிழ் தேசியம் ஒருநாளும் செய்யவில்லை.


உண்மையில் பல்கலைக்கழக அனுமதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை எல்லையற்றது. 1942 இல் பல்கலைக்கழகத்தில் ஒட்டு மொத்தமாக கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கை 904யாக இருந்தது. இது 1988-89 இல் 29781 யாக மாறியது. 1998 இல் இது 32000 மாக மாறியது. ஆனால் பல்கலைகழக அனுமதி கோரி 1960 இல் 5277 பேர் விண்ணப்பித்தனர். 1969-70 இல் 30445 பேர் விண்ணப்பித்தனர். இது 1995 இல் 70 000 மாக மாறியது. ஆனால் பல்கலைக்கழக அனுமதி 1960 இல் 1812 பேருக்கும், 1969-70 இல் 3451 பேருக்குமே, 1995 இல் 8000 பேருக்கே கிடைத்தது. பல்கலைக்கழக தகுதியுடைவர்களில் கிடைக்கும் எண்ணிக்கை ஆழமாக குறைந்து வருகின்றது. பல்கலைக்கழகம் செல்லும் தகுதி உடையவர்களில் பல்கலைக்கழகம் செல்வது 1970 இல் 34 சதவீதமும், 1975 இல் 26 சதவீதமும், 1980 இல்12 சதவீதமும், 1991 இல் 15.5 சதவீதமும், 1993 இல் 14.6 சதவீதமாகவும், 1995 இல் 11.4 சதவீதமாகவும் குறைந்து செல்லுகின்றது. பல்கலைக்கழகம் செல்ல தகுதி உடையவர்கள் கல்வி மறுக்கப்பட்டு, கற்ற கல்விமுறைக்கு சம்பந்தம் இல்லாத சமூக உழைப்புடன் தொடர்பற்ற வகையில் சமுகத்தில் வீசப்படுகின்றார்கள்.


பல்கலைக்கழகம் செல்லத் தகுதியுடையோரில் பல்கலைக்கழகம் செல்வோர்.


1948

22.4

1958

28.0

1970

10.9

1949

24.0

1959

30.0

1971

-

1950

30.3

1960

34.3

1972

10.8

1951

28.1

1961

37.0

1974

11.2

1952

25.6

1962

21.4

1975

8.4

1953

24.1

1963

22.4

1976

7.8

1954

29.5

1964

20.6

1977

5.9

1955

31.3

1965

20.3

1978

6.7

1956

35.1

1966

11.6

1979

6.4


உண்மையில் பல்கலைக்கழக தகுதியுடைய அனைத்து மாணவருக்கும் பல்கலைக்கழகம் அனுமதி மறுக்கப்படுகின்றது. தகுதியுடைய மிகக் குறைந்த சிலருக்கே அனுமதி என்ற நிலையில், இதில் இனவாதம் புகுத்தப்பட்டது. தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்குமாயின், தரப்படுத்தல் என்ற முறையே அர்த்தமற்றதாகிவிடும். அண்ணளவாக 9 முதல் 10 மடங்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுப்புக்குள்ளாகிய நிலையில், இதை திசை திருப்பவே இனவாத மோதலை திட்டமிட்டு உருவாக்கியதை, இலங்கை வரலாறு மீண்டும் ஒருமுறை காட்டுகின்றது. தகுதியுடைய பல்கலைக்கழக கல்வி மறுக்கப்பட்ட மாணவர் நலனுக்காக யாரும் போராடத் தயாராக இல்லை. இது தமிழ் சிங்கள இனம் கடந்து ஒரே நிலையில், ஒரேவிதமான முடிவுகளையே கொண்டிருப்பது இதன் சாரமாகும். உண்மையில் பல்கலைக்கழக தகுதி உடையவர்களில் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கில் தமிழரும் இருந்தனர் சிங்களவரும் இருந்தனர். ஆனால் தேசியவாதிகள் தத்தம் தரப்பில் இதையிட்டு மூச்சுக் கூட விடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இந்த தேசியம் உண்மையில் போராடத் தயாராக இருக்கவில்லை.


இது ஒருபுறம் மறுக்கப்பட மறு தளத்தில் பொதுவாகவே கல்வி மறுக்கப்படுகின்றது. இலங்கையில் 1995 இல் உயர்கல்வி 2 முதல் 5 சதவீதமானவருக்கே கிடைத்தது. மிகுதி மாணவர்களுக்கு அது திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றது. அண்ணளவாக 14 சதவீதமான குழந்தைகள் பாடசாலை செல்லும் வயதில் சேரிகளிலும் தொழில் நிலையங்களிலும் அடிமைகளாக வாழ்கின்றனர். அடிப்படையான தேவையை நிறைவு செய்யும் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழல் இன்மையால், கல்வி கற்போரும் தமது கல்வியை தொடரமுடியாத சூழலில் சிதிலமடைகின்றனர். 1987 இல் 389 577 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை. அவர்களை எந்த விதமான கல்வி தொடர்ச்சியுமின்றி வீதியில் வீசியெறியப்பட்டனர். இதே ஆண்டில் 112 577 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றிய போது 6143 மாணவருக்கு மட்டுமே பல்கலைக்கழக அனுமதிகிடைத்தது. மிகுதியானவர்கள் சமூக வெற்றிடத்தில் தள்ளப்பட்டனர்.


இலங்கையின் சமூகப் பொருளாதார பண்பாட்டு நிலமை மக்களிடையில் பிளவுபட்டு இருப்பதால், ஒட்டு மொத்த மாணவர் சமூகமே பாதிக்கப்படுகின்றது. 1991, 1992, 1993 இல் இல் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையை ஆராயின் 10 முதல் 17 சதவீதமானோர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 23 முதல் 42 சதவீதமானவர்கள் 20க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர் 53 முதல் 73 சதவீதமான மாணவர்கள் 40 க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர். அதாவது 1991 இல் 38000 பேர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 86000 பேர் 100 க்கு 20 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 150 000 பேர் 100 க்கு 40 குறைவான புள்ளிகளையே பெற்றனர். முரண்பாடு கொண்ட சமூகப் பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் மாணவர்களின் கல்வித் தரத்தை மிக மோசமாக பாதிப்பதை இது காட்டுகின்றது.


வாழ்க்கையோடு தொடர்பற்ற வகையில் திணிக்கப்படும் கல்வி மற்றும் உயர்ந்த அந்தஸ்தை நோக்கிய கனவுடன் திணிக்கப்படும் கல்வி முறை பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றது. 1990 இல் வந்த தொடர் பத்து ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் 10 சதவீதமானவர்கள் (1995 இல் 55000 பேர்) ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. 70 சதவீதமானவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் சித்தியடையவில்லை. 1995 இல் 15 சதவீதமானவர்கள் மட்டுமே க.பொ.த உயர்தர வகுப்புக்கு செல்லும் தகுதியை அடைந்தனர். 1995 இல் 12000 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. ஆண்டுக்கு 200 கோடி செலவில் வழங்கப்படும் இந்த ஏகாதிபத்தியக் கல்வியின் கதி இது. க.பொ.த பரீட்சைக்கு பங்கு கொள்ளும் 170 000 மாணவர்களில் 8 முதல் 9 ஆயிரம் பேர் வேலையற்றவராக மாறுகின்றனர். 1960 தொடங்கிய வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் எமது கல்வி அமைப்பு, இன்று 16 முதல் 17 ஆயிரம் பட்டதாரிகளை வேலையற்றவராக்கி விடுகின்றனர். இன்று 170 000 மாணவர்கள் பல்கலைக்கழக பரீட்சையில் பங்கு கொள்ளும் அதே நேரம், 70000 பேர் பல்கலைக்கழக தகுதியை பெற்ற போதும் அதில் 8000 பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.


இந்த தகுதி பெற்றோரில் பல்கலைக்கழகம் செல்வோர் குறைந்து வருகின்றனர். உயர் கல்வி வயது எல்லையான 19-23 வயதுடைய 2 சதவீதமானவர்களே உயர் கல்வியைப் பெறுகின்றனர். இது தென்னாசியாவில் 5 சதவீதமாகவும், தூரகிழக்கு நாடுகளில் 8 சதவீதமாகவும், மேற்கில் 20 முதல் 30 சதவீதமாகவும் உள்ளது. 40 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் 1.2 கோடி மாணவர்கள் பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்றனர். 2000ம் ஆண்டில் 30 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களிடையே 22 சதவீதமானவர்கள் உயர்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். லுக்சம்பேர்க்கை எடுத்தால் 80 சதவீதமானவர்கள் பட்டப்படிப்பை முடிக்கின்றனர்.


இலங்கையில் அடிப்படைக் கல்வியை பெறுவோரில் கல்வித்தரமும், அதன் தொடர்ச்சியும் மிக மோசமாக அடிபாதாளத்தில் காணப்படுகின்றது. எமது தேசிய போராட்டம் கல்வியை முன்னிலைப்படுத்தி தொடங்கியபோது, அனைத்து மாணவர்களின் கல்வி மீது தன்னை ஆயுதபாணியாக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் உயர் அந்தஸ்துகளை உடைய மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத் துறை சார்ந்து கிடைக்கும் 500 உயர் கல்வியை மையமாக வைத்தே, குறுந் தேசியத்தை உயர்த்தினர். இதற்கு சாதகமாக மருத்துவர், பொறியியல் கனவுகளுடன் கற்று வந்த மாணவர் சமூகத்தையும், ஒட்டு மொத்த சமூக கண்ணோட்டத்தையும் குறுந் தேசிய இனப் போராட்டத்தின் பால் இழுக்க முடிந்தது. பல்வேறு சமூகத்துறை சார்ந்த குறுகிய கண்ணோட்டம் குறுந்தேசிய இனப் போராட்டமாகியது.


ஒட்டு மொத்த மாணவர்களின் எதிர்காலம், சமூகத்தில் வடிகட்டப்பட்ட பின் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடங்கி இதன் சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் என்ன என்பதையிட்டு குறுந் தேசியப் போராட்டம் அக்கறைப்படவேயில்லை. இதற்கு எதிரான சமூக கண்ணோட்டத்தை கொண்டு கோசம் போட்டவர்கள், கல்வி தொடர முடியாத சமூகநிலமைகளை கவனத்தில் எடுத்து அதற்கு எதிராக போராட முன்வரவில்லை. கிரிக்கட் போட்டியில் சிறு எண்ணிக்கையானோர் விளையாட, வேலை வெட்டி இல்லாதவர்கள் நாள் கணக்காக சுற்றி நின்று வம்பளப்பது போல், மாணவர் சமூகத்தில் ஒரு சிலரை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வடிகட்டல் ஊடாக சிலரை மையப்படுத்தி சமூக கண்ணோட்டம் நீடிக்கும் போது, உண்மையில் கல்வி தரம் என்பது ஆதாள பாதாளத்தில் வீழ்ச்சி காண்பது தவிர்க்கமுடியாது. கல்வி என்பது சமூகத் தளத்தில் மனிதனின் வாழ்வியலுடன் எந்த விதத்திலும் தொடர்பற்றதாக உள்ளவரை, அறிவற்ற மூடர்களாக சமூகம் உருவாகின்றது. அதில் இருந்து உருவாகும் போராட்டம் முட்டாள் தனத்தையும் மக்கள் விரோதத்தையும் ஆதாரமாக அடிப்படையாகக் கொள்கின்றது.


இலங்கை ஒரு விவசாயநாடு. ஆனால் எத்தனை பேருக்கு அதில் பட்டத்தை பெற முடிகின்றது. இது போல் மீன் பிடி தொடங்கி தேசிய உற்பத்தி மேல் நாம் ஆராயின் எமது கல்வியின் கோமாளித் தனத்தையும், தேசியத்தின் ஏகாதிபத்திய தன்மையையும் புரிந்து கொள்ளமுடியும். இந்தத் தொழில்கள் இழிவாக்கப்பட்ட போது, அந்த பட்டங்கள் கூட இழிவாகவே தீட்டுப்படுகின்றது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு தேவையான மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கே இந்தக் கல்வி ஆதாரமாகின்றது. இலங்கையில் பல்கலைக்கழகம் சென்ற இந்த பிரிவுகள், நாட்டை விட்டுச் சென்று விடுவது வெட்டவெளிச்சமாகும். ஆனால் எமது தேசியம் இந்த வட்டத்துக்குள் நின்று இதை மையமாக வைத்தே சுழல்கின்றது.


இதை உயர் வர்க்கங்கள் தமது நலனில் இருந்து ஒட்டு மொத்த சமூகத்துக்கும் கட்டமைக்கின்றனர். தரப்படுத்தலுக்கு முன் இலங்கையில் மருத்துவம் பொறியியல் மற்றும் விஞ்ஞானத்தில் யாழ் குடா நாடு 50 சதவீதத்தை கைப்பற்றிய போது, கலைத்துறையில் 5 சதவீதத்துக்கு குறைவாகவே பல்கலைக்கழகம் சென்றனர். யாழ் சமூகத்தின் பூர்சுவா கண்ணோட்டம் கலைத்துறையை இழிவாக்கி அதைத் தீட்டாக்கியதன் விளைவே இது. இதைப் பார்ப்போம்.


69-7

70-71

71-72

73

74

75

76

77

78

சிங்களம்

89.1

89.7

92.7

91.8

86.0

85.6

86.3

85.8

83.3

தமிழ்

6.9

7.0

4.7

5.9

10.0

10.1

8.6

9.2

15.3

இந்த நிலையில் கல்வி தொடரமுடியாத குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலைமையை இட்டு, இந்த தமழ் தேசிய உயர் வர்க்கம்என்றுமே கவலைப்பட்டது கிடையாது. இதை வகுப்பு ரீதியாக பாடசாலையை விட்டு விலகியதை ஆராய்வோம்.


1

2

3

4

5

6

7

8

1972

-

5.3

5.3

6.4

7.3

9.3

4.7

8.4

1973

3.9

4.3

9.81

10.9

13.2

13.5

11.8

14.1

1975

2.2

5.2

11.2

11.2

12.4

12.4

12.0

12.0

1976

6.8

2.3

5.5

7.4

10.2

7.5

6.3

13.9


தமழ் தேசிய உயர் வர்க்கம் தனது நலனில் இருந்து தொடங்கிய தேசிய போராட்டம் கூட, அதன் எல்லைக்குள் தான் இன்று வரை தன்னை தகவமைத்துள்ளது. அனைத்து மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்க தவறிய எமது குறுந்தேசிய இனப் போராட்டம், குறுகிய சமூக நலன்களில் இருந்தே தனது கோரிக்கைகளை முன்வைக்கின்றது. தமிழ் தேசிய வாதிகள் மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களும் இதையே சிங்கள மக்கள் மேல் திணிக்கின்றனர். இவர்களுக்கு இடையில் இதில் கொள்கை வேறுபாடு கிடையாது. ஆக மக்களை கொள்ளையிட்டு பிரதேசங்களை யார் ஆள்வது என்பதே குறுந்தேசியத்தின் மையமான பிரச்சனை. தேசியத்தில் மக்களின் நலன் என்ன என்பது பற்றி அக்கறை கிடையாது. இதனால் மாணவர் சமூகத்தையிட்டு இந்த தேசியம் பழைய அதே கொள்கையையே கடைபிடிக்கின்றது. மறுதளத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கே இந்தக் கதியுள்ள போது, பாடசாலை செல்ல முடியாதவர்கள் நிலையை நாம் கற்பனை பண்ணத் தேவையில்லை. இலங்கையில் கல்வியை பெற முடியாதவர்கள் முதல் எத்தனை சதவிகிதம் மாணவர்கள் கல்வியை பெறுகின்றனர் என பார்ப்போம்



கல்வி மட்டம்

1971

1971

1981

1981

ஆண்

பெண்

ஆண்

பெண்

பாடசாலை செல்லாதோர்

12.1

12.4

6.0

4.2

1 முதல் 5 வரை சித்தியடைந்தோர்

15.6

10.4

9.4

4.9

6 முதல் 10 வரை சித்தியடைந்தோர்.

61.4

58.0

72.7

67.6

க.பொ.த சாதாரண வரை சித்தியடைந்தோர்.

9.9

18.0

9.8

19.6

க.பொ.த உயர்தரம் வரை சித்தியடைந்தோர்.

0.7

1.0

1.7

3.3

பட்டப்படிப்பும் அதற்கு மேலும்

0.3

0.6

0.1

0.4



இலங்கையில் கல்வி கற்க முடியாத சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகளை அடைப்படையாக் கொண்ட குழந்தைகளையிட்டு, தமிழ் தேசியம் சரி சிங்கள தேசியம் சரி அல்லது இலங்கையில் எந்தக் கட்சியும் கூட அக்கறைப்படவில்லை. பாடசாலை செல்பவர்கள் கூட உண்மையில் இயந்திரமாக செல்லுகின்றனரே ஒழிய, கல்வி மீதான சழூக ஆர்வம் அல்ல. சமுதாயத்தின் இழிந்துபோன சமூகக் கண்ணோட்டம் கல்வியில் பாரிய விளைவை ஏற்படுத்துகின்றது. இது கல்வி தரத்தை வீழ்த்துவதுடன், தொடர்ச்சியான கல்வி முடக்கப்படுகின்றது. இதனால் க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் சித்தி பெறுவதில்லை. 20 சதவீதமான மாணவர்களே அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றுகின்றனர். அனைத்து மாணவர்களில் 12 சதவீதமானவர்கள் மொத்தத்தில் அதே வகுப்பை மீண்டும் படிக்கின்றனர். உண்மையில் இலங்கையில் மாணவர்களின் கல்வி என்பது, 99 சதவீதம் மறுக்கப்படுகின்றது. சிலரை உருவாக்கும் கல்வி மூடிமறைக்கவே கல்வியில் இனவாதம் புகுத்தப்பட்டது. ஒட்டு மொத்த மாணவர் பிரச்சனையை குறுகிய இனவாத எல்லைக்குள் சிதைத்ததன் மூலம், மாணவர்களின் முதுகில் ஆளும் வர்க்கங்களும் கட்சிகளும் சவாரி செய்ய முடிந்தது, முடிகின்றது. இதையே தமிழ் தேசியமும் மறு தளத்தில் செய்தது. அனைத்து மாணவர்களின் நலன்களில் இருந்து இந்த தேசிய பிரச்சனையை இரு பகுதியுமே அணுகவில்லை, அணுகப்போவதுமில்லை. இதனால் இந்த தேசியம் என்பது சிலரின் நலனையும், சில வர்க்கத்தின் நலனையும், சில பிரதேசத்தின் நலனையும், உயர் சாதியின் நலனையும் பிரதி பலிப்பதால், யாழ் நலன்கள் சார்ந்த குறுந்தேசிய இனப் போராட்டமாக சீரழிந்தது.


அனைத்து மாணவர்களின் நலனை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கோரிக்கையை முன்வைத்து போராடியிருக்க வேண்டும். இனவாத பிளவுக்கான தரப்படுத்தல் முயற்சியை இதனடிப்படையில் முறியடித்திருக்க வேண்டும். மற்றைய தமிழ் பிரதேச மணவர்களுடன் இணைந்து, பிரதேச வாதத்தை தகர்த்திருக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லீம், மலையக மக்களுடன் நேசக்கரம் நீட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் எதிரிடையாக சென்றோம். யாழ் மேலாண்மையை நிறுவவும், அதிக பல்கலைக்கழக அனுமதியையே நாம் கோரினோம். நாம் இன்று தமிழ் ஈழத்தைப் பெற்றாலும் கூட, இன்று இருக்கும் பல்கலைகழக அனுமதியைக் கூட பெறமுடியாது. இன்று உள்ள தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பல்கலைக்கழகம் செல்வார். தேசிய தேவைக்கு ஏற்ற கல்விக்கு பதில், ஏகாதிபத்திய உற்பத்தி மற்றும் கைக்கூலிக்கு ஏற்ற கல்வியே எமது தேசிய கல்வியாக உள்ளது. இதுவே புலிகளின் தேசிய கொள்கையும் கூட. எமது ஆயுதப் போராட்டம் வித்திட்டு வளர்ந்த முறையே பிற்போக்கானதாகும். குறுந்தேசிய யாழ் மையவாத உயர் கைக்கூலிகளின் நலன்களை பிரதிபலிக்கும் போராட்டமாகவே பரிணமித்தது. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைகள் பல இருந்தது, இருக்கின்றது. அதில் கல்வியும் ஒன்று.


1969இல் போட்டி பரீட்சை மூலம் தெரிவான 27.5 சதவீதமான தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை 1974 இல் 7 சதவீதமாக குறைந்தது. இதை மாவட்ட ரீதியாக பங்கிடப்பட்டது. 1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் இது எந்த விதத்திலும் யாழ் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மாணவர்களின் சதவிகிதத்துக்கு மேலாகவே, பல்கலைக்கழக அனுமதியை யாழ் மாணவர்கள் பெற்றனர். இது எந்த பாதிப்பையும் இனவிகிதம் சார்ந்து யாழ்குடாநாட்டை பாதிக்கப்படவில்லை.


உண்மையில் யாழ் அல்லாத தமிழ் மாணவர்களே தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டனர். தரப்படுத்தல் அவர்களில் சிலருக்கு சலுகை வழங்கிய போதும், இனவிகிதாசாரம் சார்ந்து பாரிய இழப்பை தொடர்ந்தும் சந்தித்தனர். கல்விக்கான சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழல் அவர்களுக்கு எதிராக இருந்தது. இது யாழ் உயர் பிரிவுகளின் (இது வர்க்கம், சாதி, பிரதேசவாதம்) தொடர்ச்சியான ஒடுக்குமுறையாலும், சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறையாலும் ஏற்பட்டது. தமிழ் மக்களின் கல்வி சார்ந்த பிரச்சனை என்பது யாழ்குடா அல்லாத பிரதேசங்களிலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களினதும், முஸ்லீம் மாணவர்களினதும், மலையக மாணவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகளை, சிங்கள இனவாதிகள் முதல் தமிழ் குறுந்தேசியவாதிகளும் திட்டமிட்டு மறுத்து வந்தனர். இதற்கு யாழ் சமூகம் சார்ந்த தேசியம், தமிழ் மக்கள் என்ற பொதுமைப்படுத்தல் ஊடாக அந்த மக்களின் நலனை இனவாத அமைப்புக்குள்ளேயே சூறையாடியதும், அந்த மக்களை இழிவுபடுத்தி ஒடுக்கியதும் ஒரு முக்கியமான தேசிய இன அடிப்படையாகும். இனமாக தேசியமாக பொதுமைப்படுத்தும் போது அந்த மக்களின் நலன்களை கவனத்தில் எடுக்க வேண்டும். மாறாக பொதுமைப்படுத்திய இனக் குறுந்தேசிய அடிப்படையில் அந்த மக்களை சூறையாடும் யாழ் மையவாத நலன்கள், அந்த மக்களை இன எல்லைக்குள் ஒடுக்கி வைத்துள்ளது. இதை ஆதாரமாக ஆராய்வதன் மூலம் இதை தெளிவாக்கலாம.


தொடரும்