தமிழ் அரங்கம்

Saturday, January 7, 2006

மக்கள் படையும் புலிகளும்

மக்கள் படையும் புலிகளும் :
மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகள்


பி.இரயாகரன்
06.01.2006


நாம் ஏன் இவர்களை காடையர்கள் என்கின்றோம்? மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன், எந்த சமூக உறவுமற்றவர்கள் நடத்துவது காடைத்தனம் தான். இதை யாரும் தேசியம் என்று கூறமுடியாது. தமது அரசியல் என்ன, தமது நோக்கமென்ன எனக் எதுவும் கூறத் தெரியாதவர்கள், மக்களின் பெயரில் நடத்தும் அனைத்தும் சமூகவிரோதத் தன்மை கொண்டவையே. இவை காடைத்தனமாகவே எப்போதும் சமூக உள்ளரங்கில் அரங்கேற்றப்படுகின்றது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறும் வன்முறைகளும், படுகொலைகளும் மிகவும் இழிந்துபோன ஒரு சமூக பாத்திரத்தையே வகிக்கின்றன. மக்களின் பெயரில் நடத்தப்படும் தீயிடல், மனித கழுத்தை அறுத்தல் முதல் கிளைமோர் தாக்குதல் வரை அனைத்தும், காடைத்தனத்துக்கென பயிற்றப்பட்ட புலிகளால் தான் செய்யப்படுகின்றது. ஆனால் இதை புலிகள் மறுப்பதும், விதண்டாவாதமாக அறிக்கைகள் விடுவதும் அன்றாடச் செய்திகளாகின்றன. சமூகத்தையே பொய்களால் கற்பழிக்கின்றனர். சரி, ஏன் இந்த நடவடிக்கை எதையும் புலிகள் கண்டிப்பதில்லை. கருணாவுக்கு எதிராக படையெடுத்துச் சென்றவர்கள், ஆனால் இவர்களை ஒழிக்க "ஏகபிரதிநிதிகள்" முற்படவேயில்லை. இப்படி அம்பலமாகின்றது புலியின் அரசியல். இந்த நிலையில் உண்மையில் இதை மக்கள் தான் செய்கின்றனர் என்பதை, உலகில் யாரும் நம்புவது கிடையாது. புலிகள் கூட அதை நம்புவது கிடையாது. அப்படியானால் யாரை நம்பவைக்க முனைகின்றனர். இங்கு அரசியல் சூனியம் நிலவுகின்றது.

சர்வதேச சமூகம், இலங்கை அரசு, ஏன் தமிழ் மக்கள் கூட இதை மக்கள் செய்வதாக நம்புவது கிடையாது. யாருமே நம்பாத ஒரு செய்தியை சொல்லி, இந்த வன்முறைகளை நடைமுறைப்படுத்துகின்றனர் புலிகள். செய்திப் பத்திரிகை பொய்களால் நிறைந்து விற்பனையாகின்றது. முழுச்செய்தி அமைப்பைபும் பொய்களால் புணருகின்றனர். பொய், பித்தலாட்டம், மோசடி, முடிச்சுமாற்றி என, மனித குலத்தில் இழிந்து போன சமூக வடிவங்கள் மூலம் இவை அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றது. இது எடுத்துக் காட்டுவது, அரசியல் ரீதியான தொடர்ச்சியான புலியின் வங்குரோத்தைத் தான். இன்று மக்கள் தான் இதனைச் செய்கின்றனர் என்று யாரும் நம்பாத போது, இது ஒரு ஆய்வுக்குரிய விடயமல்லத்தான். எம்முன் இங்கு ஆய்வுக்குரிய விடையமாக இருப்பது, இதை மக்கள் போராட்டம் என்பது தான். இதன் மூலம் மக்கள் போராட்டம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கேடுகெட்ட மனிதவிரோத வன்முறைகளின் அரசியல் பண்பைத்தான்.

தாமே வலிந்து உருவாக்கிய தமது சொந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது, வக்கற்றுப் போன குறுகிய புத்தி கொண்ட தலைவர்கள், மக்களின் பெயரிலான நேர்மையற்ற வகையில் ஒரு அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தாம் வலிந்து உருவாக்கிய குறுகிய நலன்கள் சார்ந்த அரசியல் நலன்கள் நெருக்கடியில் சிக்கிவிடவே, மக்களை அதற்குள் மக்களின் பெயரில் பலியிட முனைகின்னர். நயவஞ்சகத்தின் ஒரு எடுத்துக்காட்டாக மாறி, மனிதத்துவத்தை புதைகுழியாக்குகின்றனர். மக்கள் எந்தளவுக்கு இழிநிலைக்கு தாழ்த்தப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அடிமைப்படுத்தப்படுகின்றார்களோ, அந்தளவுக்கு அவர்களின் பெயரால் எதையும் செய்துவிடுகின்றனர். ஒரு அராஜக சூழல் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றது. தமிழ்த் தலைவர்களின் சின்னத்தனங்களை, வக்கிரமாகவே சமூகத்தின் மீது புகுத்துகின்றனர்.

மக்கள் போராட்டம் என்ற பெயரில் வெளியில் இருந்து வரும் ஒரு சிறுகுழுவால், சிலவேளைகளில் 25, 50 பேர் கொண்ட குழுவால் முழு சமூகத்தையுமே அதிரவைக்கும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றர். கொலைவெறி கொண்டதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்பாடுகளை, மக்கள் போராட்டம் என்ற பெயரில் நடத்துகின்றனர். இந்த அராஜகத்தின் போது ஒருவர் கொல்லப்படும் போது, மக்கள் பெறுவது என்ன? மக்கள் தமக்குத் தானே விலங்கை பூட்டிக் கொள்வது தான். இது தான் மக்கள் போராட்டத்தின் முடிவாகின்றது.

வடக்குகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் நடவடிக்கை என்ற பெயரில், சிறுகும்பல் மக்களின் உள்ளார்ந்த சமூக நடவடிக்கைக்குள் பதுங்கிக் கொள்கின்றது. பின் அதற்குள் இருந்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். எதிரியால் சூழப்பட்டதும் மிகவும் நெருக்கமான அவர்களில் கால்களில் மிதிபடாமால் வாழும் மக்கள், தாமுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்றனர். இதைத்தான் இன்றைய தமிழ் தேசிய தலைவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய ஏகப்பிரதிநிதிகள், இதை மட்டும் தான் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருந்தனர். மக்கள் அவர்கள் சம்பந்தப்படாத இந்தப் போராட்டங்களில் இருந்து, அன்னியமாகி ஊமைகளாக நடைப்பிணமாக வாழ்கின்றனர். புலிகள் மக்களை கண்டு அஞ்சுவதால், அவர்களுக்கு வாய்பூட்டு போட்டு துப்பாக்கியால் தமிழ் மக்களை வேட்டையாடியும் கண்காணிக்கின்றனர். உண்மையில் மக்கள் புலிகளையும், புலிப் போராட்டங்களையும் வெறுக்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் நலனை முன்னெடுக்காத இப்போராட்டம், அவர்களின் வாழ்வை நாசமாக்கி வருகின்றது. யுத்த சூழலிலும், யுத்தமற்ற சூழலிலும் கூட, மக்களின் அன்றாட வாழ்வு அச்சத்துடனும், பீதியுடனும் மற்றவர்களைக் கண்டு அஞ்சி பயந்து வாழவேண்டிய அவலமான ஒரு நிலையில் வாழ்கின்றனர். கடவுளுக்கு பயந்து கையெடுத்து இரந்துவேண்டி காணிக்கையிட்டு கும்பிடுவது போன்று, ஆயுதம் ஏந்திய "ஏகபிரதிநிதி" புலிகளை இரந்து கையெடுத்துக் கும்பிடுவதுடன், அவர்கள் கேட்கும் காணிக்கைகளை கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் தமது வாழ்வையே அவர்களுக்காக அழித்து வருகின்றனர். மக்களின் உழைப்பை புடுங்குவதன் மூலம், சமூகத்தின் ஒரு பகுதி உழையாது வன்முறை கொண்ட கும்பலாகவே வாழத் தொடங்கியுள்ளது. இது இன்று மக்களுக்குள் புகுந்துகொண்டு கட்டவிழ்த்துவிடும் அராஜகத்தையே, மக்கள் போராட்டம் என்கின்றனர். உண்மையில் இந்த அராஜகம் மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. சிறிலங்கா இராணுவம் மீதான தாக்குதல் என்ற போர்வையில், மக்கள் மேலான அராஜகமாகவே இது திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பொதுவாக இத்தாக்குதல்கள் சிறிலங்கா இராணுவம் மேலானதாக காட்டப்பட்ட போதும், உண்மையில் பரந்துபட்ட மக்களின் மேல்தான் இந்த அராஜகம் கொடிய விலங்கிட்டுள்ளது. அராஜகம் சுற்றுவழிப் பாதையைக் கொண்டது. மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு சிறு கும்பல் நடத்தும் கண்மூடித்தனமான வன்முறையினால், மக்களின் துன்பம் என்றுமில்லாத வகையில் பெருக்கெடுக்கின்றது. மனிதத்துவம் சிதிலமடைகின்றது.

மக்களின் துன்பம் தான் புலிப் போராட்டத்தின் ஆன்மா என்பதே பிரபானிச சித்தாந்தமாகும். இதனால் மக்களை துன்பப்படுத்தும் வகையில், புலிகள் திட்டமிட்ட செயல்பாடுகளை எப்போதும் அமைத்துக் கொள்கின்றனர். இதற்கு ஈவிரக்கமற்ற எந்தவிதமான இழிந்துபோன காட்டுமிராண்டித்தனத்தையும் கூட செய்துவிடுகின்றனர். எதிரியிடம் மக்கள் துன்பப்பட்டால் தான், அவர்களுக்கு தேசிய போராட்ட உணர்வு வரும் என்பது பிரபானிச சித்தாந்தமாகும். மக்களை வதைத்து துன்பப்படுத்தும் வகையில், நடவடிக்கையை திட்டமிடுவதே புலியின் அன்றாட வழிமுறையாகும். பின் தயாரிக்கப்பட்டு தயாராக வைத்துள்ள சரக்கை காட்டி, பார் எதிரியை என்று கூறுவது அன்றாடச் செய்திகளாகின்றன. இதை ஆய்வு செய்து நியாயப்படுத்துபவர்கள் தமிழ் தேசிய ஆய்வாளராகின்றனர். மாமனிதனுக்குரிய தகுதியையும், தேசப்பற்றாளர் என்ற தகுதியையும் பொறுக்கித் தின்றே பெறுகின்றனர். இதன் மூலம் மக்களிடம் அன்னியமாகிய தமது குண்டர் படைச் செயல்பாட்டுக்குரிய ஆட்கள் கிடைப்பார்கள் என்ற தேசிய சித்தாந்தம், மக்களுக்கு கொடுப்பது துன்பத்தையும் அடிமைத்தனத்தையும் தான்.

உண்மையில் மக்களின் வாழ்வுடன் சாராத இந்த வன்முறையை யார், எப்படி நடத்துகின்றனர்? காடையர்களுக்கே உரிய உதிரி கும்பல்கள் நடத்தும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை மூலம், சூழலை வன்முறைக்குள்ளாக்குகின்றனர். வன்முறையைத் தொடங்கும் போது, விடுப்பு பார்க்கும் பார்வையாளர் கூட்டம் கும்பலாக கூடுகின்றது. அதை மக்கள் என்று காட்டியபடி, கும்பலில் இருந்தே கல் எறிந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதற்கென தயராக உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர், குறித்த அந்தச் சூழலில் கொலைவரை செய்து விடுகின்றனர்.

பொதுவாக பாடசாலைகளில் புகுந்து கொள்ளும் இந்த பயிற்றப்பட்ட வன்முறை கும்பல், மாணவர்களின் பெயரில் அனைத்தையும் செய்துவிடுகின்றனர். அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட இராசதுரை படுகொலையை இந்தப் பின்னனியில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. இராசதுரை கொலைக்கு எந்தக் காரணத்தையும் கொலையாளிகளும் சரி, அவர்களின் பினாமிகளும் கூட முன்வைக்க முடியாது போயுள்ளது. இந்த நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்று பார்த்தால், இன்றைய வன்முறையுடன் தொடர்புபடுத்தியே இதைக் காணமுடியும்.

அதிக உயர்தர மாணவர்களைக் கொண்ட, மிக முக்கியமான மையத்தில் உள்ள ஒரு பிரதான பாடசாலையினுள், வன்முறைக் குண்டர்களை இணைத்துக் கொள்வதற்கு அவர் அனுமதிக்கவில்லை என்பது மிக முக்கியமான காரணமாகும். மாணவர்கள் பெயரில் வன்முறைக் குண்டர்களை பதிவுசெய்ய மறுத்ததும், வன்முறையாளர்கள் பாடசாலையை மாணவர் உடையில் பயன்படுத்த மறுத்தமையும், இக் கொலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

மக்கள்படை என்ற பெயரில் செயல்படும் காடையர்களை, மக்களுடன் கலந்துவிட மறுக்கும் அனைத்தையும், சமூக விரோதமாக கருதிக் கொன்று விடுவதும் நிகழ்கின்றது. இதற்கு உரிமைகோராத மரணதண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பின் அதற்கு கடிவாளம் பூட்டி, பினாமிகள் மூலம் தூற்றப்படுவது நிகழ்கின்றது. கொலையாளிகள் தாம் ஏன் சுட்டோம் என்று, எந்த சுயவிளக்கத்தையும் கூறுவது கிடையாது. இதன் பின்னால் நக்கித் திரியும் லும்பன் வாழ்வு கொண்ட கும்பல் தான், நக்கியதுக்கு ஏற்ப தாம் விரும்பிய விளக்கங்களைத் தருகின்றனர்.

பேரினவாதம் தமிழ் மக்களின் பிரச்சனையையே, வெறும் புலிப் பிரச்சனையாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டது. இதை இனி தமிழ் மக்களின் பிரச்சனையாக, புலிகள் உள்ளவரை கொண்டுவரவே முடியாது. இந்த நிலையில் மக்களின் பெயரில் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், வெறும் புலிப்பிரச்சனையாக இருப்பதையும், மீண்டும் உலகை நம்பவைக்கும் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறிவருகின்றது. உண்மையில் இன்று இது ஒரு புலிப்பிரச்சனையாக மட்டும் இருப்பதைத் தான், அவர்களின் சொந்த நடவடிக்கைகள் எடுத்தக் காட்டுகின்றது. புலி நடத்தைகள், பேச்சவார்த்தை நிபந்தனைகள் என அனைத்தும் இதற்குள் மீண்டும் மீண்டும் புணரப்படுகின்றது.

மக்களின் பெயரில் புலிகள் நடத்தும் அராஜக வன்முறை நடத்தைகள், அரசியல் நேர்மையீனத்தில் இருந்தே எழுகின்றது. எதிரியை நேர்மையாக எதிர் கொண்டு, அதை மக்களுக்கு விளங்கப்படுத்தி, அவனை எதிர்க்க வக்கற்ற கோழைத்தனத்தின் விளைவே இவை. எப்போதும் எங்கும் பொய்யும் புரட்டும் அரசியலாகிவிடுகின்றது. உங்கள் மனச்சாட்சியிலேயே இதுவே எதிரொலிக்கின்ற போது, இதை உண்மையென்று உலகில் யாரும் நம்புவது கிடையாது. எந்தச் செய்தியும் பலத்த சந்தேகத்துக்கு உள்ளாகின்றது. கொலையை செய்துவிட்டு, அதற்கு தமது பக்க நியாயத்தைக் கூட கூறுவது கிடையாது. மாறாக கொல்லப்பட்டவன் தரப்பே கொன்றதாக கூறும் அத்திவாரமேயற்ற பொய் மூட்டைகளில் ஏறி நின்று, தமிழ் தேசியத்தை யாராலும் பாதுகாக்க முடியாது.

இவர்கள் செய்ததைக் கூட நியாயப்படுத்த முடியாத வகையில், அரசியல் வங்குரோத்து காணப்படுகின்றது. எங்கும் எதிலும் நேர்மையீனம் காணப்படுகின்றது. இன்று நடக்கும் பரஸ்பர எதிர் நடவடிக்கையில் மக்களுக்கு எதிராக எதிரி எதைச் செய்கின்றான் என்பதை கூட, கண்டறிய முடியாத நிலையை அடைந்துள்ளது. இதனால் எதிரி லாபம் அடைகின்றான். நடக்கும் கொலை யாரால் ஏன் என்ற கேள்வியும், காணமல் போவோர் யாரால் ஏன் என்ற சந்தேகமும் சமூகத்தில் ஏற்பட்டுவிட்டது. இரத்தக் கறைபடிந்த பினாமிகளும், அதையே கறந்து குடிக்கும் செய்தி ஊடகங்களும் பொய்யை ஆயிரம்தரம் மீண்டும் மீண்டும் சொன்னாலும், அதை நம்பவதற்கு என்று யாரும் கிடையாது. இதை பினாமிகளும், விசுவாசிகளும் கூட விதண்டாவாதத்துக்கு வம்பளப்பதே ஒழிய, இதை உண்மையாக அவர்கள் கூட நம்புவது கிடையாது.

அண்மையில் புங்குடுதீவில் நடந்த தர்சினி படுகொலை கூட, ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த உதிரிக் கும்பல் நடவடிக்கைக்கு உள்ளாகியது. 18.12.2005 இது அன்றாடச் செய்தியில் (17.12.2005 அல்லது 16.12.2005 அன்று சம்பவம் நடந்தது.) வெளியாகிய போதே, ஆச்சரியப்படத்தக்க வகையில் கற்பழிக்கப்பட்டதாகவும், அதன் பின் கொலை செய்து இராணுவம் வீசியதாகவும் அவசர அவசரமாக புலிகள் செய்தியாக்கினர். அவர்கள் சார்பு இணையமான நிதர்சனம் கொம் ஞாயிற்றுக்கிழமை -18 டிசெம்பர் 2005 "றாஜபக்ச பதவிக்கு வந்து 1 மாதத்தில் முதலாவது தமிழ் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் " என எழுதியது. மீண்டும் புதன்கிழமை- 21 டிசெம்பர் 2005 "ஸ்ரீலங்கா கடற்படையினரின் வெறியாட்டத்தில் உயிரிழந்த தர்மினி இளையதம்பியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று யாழ்ப்பாணம் ஸ்ரீ லங்கா காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை மருத்து பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என்ற செய்தி வெளியாகியது. இந்த அடிப்படையில் தான் தமிழ் ஊடகவியல் செய்திகள் கட்டமைக்கப்பட்டதும், வன்முறைகள் சிலரால் நடத்தப்பட்டதும், அறிக்கைள் கண்டணங்கள் என அனைத்தும் விடப்பட்டன.

இதில் பலத்த சந்தேகம், நம்பகத் தன்மை ஊகங்கள் என பலவுண்டு.

1. மருத்துவ அறிக்கை வரமுன்னமே கற்பழிப்பு நடந்தாக கூறியது எப்படி?


2. இரண்டாவது இராணுவம் மற்றும் கடற்படை மட்டும் தான் இதைச் செய்தது என எப்படி கூற முடியும்?


3. ஏன் தனிப்பட்ட பழிவாங்கலாக, இப்படி நடக்கமுடியாது?


4. வன்முறையைத் தூண்ட மக்கள் படை இதை ஏன் செய்திருக்க முடியாது?


இராணுவம் முதல் மக்கள் படை வரை இது போன்ற காடைத்தனங்களில் ஈடுபடும், ஆணாதிக்க மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். இங்கு இராணுவ கற்பழிப்புகள் ஒருபுறம் நிகழ்கின்றது என்றால், மறுபுறம் இது போன்றவை புலிகளாலும் செய்யப்பட்டுள்ளன. இன்று வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு செய்யக் கூடியவர்கள் யார் என்ற கேள்வியில், விடை அனைவருக்கும் தெரிந்ததுதான். வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற காடைத்தனங்களை திட்டமிட்டு தேசியத்தின் பெயரில் செய்யக் கூடியவர்கள் தான். இந்த விடையத்தில் பல தளத்தில் கேள்விகள் உள்ளன. அடிப்படையில் நேர்மையற்ற நடவடிக்கைகள் பெருகும் போது, அதுவே அரசியலாகின்ற போது, இது போன்றவற்றில் சந்தேகங்களை பல தளத்தில் விட்டுச் செல்லுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட படங்களில் கொலை செய்யப்பட்ட தரிசினியின் உடலில் உடுப்புகள் நேர்த்தியாக இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? பின்தங்கிய ஒரு கிராமம் ஒன்றில் கிணற்றில் இருந்து எடுக்கும் உடலைக் கூட படமெடுத்து, அதுவே புலியின் சொந்த அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது! ஆச்சரியப்படத்தக்கவகையில் இது திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியை இவைகள் விட்டுச் செல்லுகின்றது.

இந்த தரிசினியின் பின் வேறு பல அபிப்பிராயங்கள் புலிகள் அல்லாத தளத்தில் வெளியாகின்றன. அதில் கடற்படை ஒருவரிடம் நட்பு கொண்டிருந்ததாகவும் கூட செய்திகள் உள்ளன. அதுபோல் கடற்படையினருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின்றன. அவர்கள் வழமை போல் தேசத்தின் பெயரில் மக்களின் பெயரில் கொல்லும் நபர்கள், இதை ஏன் செய்திருக்கமுடியாது? அண்மையில் யாழ்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட "விபச்சாரி" யின் கதையை இது ஒத்தது. விடைதெரியாத கேள்விகள், சந்தேகங்கள் பல உண்டு.

உண்மைக்கும் நேர்மைக்கும் அருகதையற்ற நிலையில் எமது சமூக உள்ளது. எனக்கு நடந்த ஒரு உதாரணத்தை நான் இங்கு கூறமுடியும்;. நான் 1987ம் ஆண்டு உரிமை கோராத ஒரு நிலையில் கடத்தப்பட்டு, புலிகளின் வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன். காணமல் போன என் விடையத்தில், புலிகள் தாம் சம்பந்தப்படவில்லை என்று பல்கலைக்கழகத்தில் கூட அறிவித்தனர். இந்த நிலையில் காணாமல் போன என்னை, நான் சென்றுவரும் ஒரு வீட்டுக்கு அவர்கள் கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. புலிகள் தான் தாம், என்று உரிமைகோர முடியாத இவர்கள் என்ன செய்தார்கள். கை,கால், கண், வாய் என அனைத்தையும் கட்டி இரவு 12 மணிக்கு என்னை எடுத்துச் சென்றனர். தம்மை இனம் காணாத வகையில் மூகமூடிகளை, பொய்த் தலைமுடிகளை போட்டுக் கொண்டனர். அத்துடன் கறள் பிடித்த வாள் கத்தியுடன், இடுப்பில் ஆயுதத்தை மறைத்து வைத்தபடி என்னைக் கொண்டு சென்றனர். 10 மைல் தூரம் பிரயாணம் செய்த அவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு அன்று அகதிகளாக பல பத்து மக்கள் தங்கியிருந்தனர். அங்கு அவர்கள் தம்மை எனது இயக்கத்தின் பெயரில் அறிமுகப்படுத்தியதுடன், இயக்கத்தை நான் மோசடி செய்தாக கூறி அனைத்தையும் நடத்தி முடித்தனர்.

அடுத்த நாள் அச்சுற்றுவட்டாரத்தில் இச் செய்தி கதையாக பரவியது. மக்கள் மத்தியில் நான் காணமால் போனதற்காக எனது இயக்கமே காரணம் என்று புனையப்பட்டது. இதை மறுத்தவர்களுக்கு அவர்களே பதில் கூறினர். புலிகள் நவீன ஆயுதத்துடன் தான் வருவார்கள், வாள் கத்தியுடன் முகமூடியுடன் வரமாட்டார்கள் என்றனர். அத்துடன் இப்படி வரக் கூடியவர்கள் எமது இயக்கமே என்றனர். என்ன வக்கிரம். இப்படித்தான் அன்று முதல் இன்றுவரை நிகழ்கின்றது. நான் தப்பும் வரை இதுவே புலிப் பினாமியத்தின் செய்தியாகவும், நம்பகமான ஒன்றாகவும் கூட காட்டப்பட்டு இருந்தது. (இவைகளை உள்ளடக்கிய வகையில், வதைமுகாமில் எனக்கு என்ன நடந்தது என்பதை 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.) இப்படி புலிகளின் செயல்கள் எல்லாவகையான இழிவான மனித விரோதத் தன்மை கொண்டவை. எதையும் எப்படியும் செய்யக் கூடியவர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டுத் தான் இது. இதற்கு அண்மையில் நடந்த மற்றொரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.

இது அவர்களின் நேர்மையீனத்தையும், செய்திவெளியிடும் வக்கிரத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. புலியின் மக்கள்படையைச் சோந்த பொங்கு தமிழ் பினாமி பேராசிரியர் கணேசலிங்கம் 13 வயது குழந்தையை தொடர்ச்சியாக கற்பழித்த போது, இதே புலி நிதர்சனம் கொம் முதல் செய்தியை தந்தது. பின் தமது குண்டர் படையாள் என்று தெரிந்தவுடன் குத்துக்கரணம் அடித்து என்ன சொன்னது என்று பாருங்கள்.

"தமிழ் ஊடகங்களுடன் சேர்ந்து நிதர்சனம் விட்ட தவறுக்கு மனம் வருந்துகின்றது. வெள்ளிக்கிழமை 9 செப்ரெம்பர் 2005 - சிறுமி தற்கொலை முயற்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்று எமது செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக மனம் வருந்துகின்றோம். திட்டமிட்ட முறையில் முதல் தடவையாக யாழ் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளிநாட்டு உளவுச் சக்திகளினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், ஒரு சில விடயங்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் ஒரு அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்புகின்றோம்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்பகட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது."

" நீண்ட கால உறவு" என்றால் கணேசலிங்கம் தானே தொடர்ச்சியாக கற்பழித்து வந்தவன். " வெளிநாட்டு உளவுச் சக்தி" சதி, "பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பலவாக கூறும் நேர்மையற்ற வக்கிரம் வெளிப்படுகின்றது. இப்படி உண்மையை மூடிமறைத்து பொய்களால் புணர்ந்த போது, இந்த செய்தியின் உண்மைத் தன்மை என்ன. முன்பு மூன்று ஆணுடன் தொடர்பு கொண்டவர் என்று புலிகள் ரோச்சடித்து தொழில் செய்தவர்கள் போல் கூறுகின்றனர். இங்கு தரிசனி கற்பழிப்பு பற்றியும் ரோச்சடித்து நின்ற வகையில்தான் கருத்துக் கூறுகின்றனர்.

ஒரு 13 வயது சிறுமையைப்பற்றி எழுதும் இந்த சமூக விரோதக் ஆணாதிக்க காடையர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பல வருடமாக அந்த வீட்டில் வேலைகாரியாக மட்டுமின்றி, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர் அக் குழந்தை. 13 வயதை அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற அக் குழந்தை, சிறு வயதிலேயே அந்த வீட்டில் அடிமையாக்கப்பட்டவர். கல்வி மறுக்கப்பட்டு அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டவர். அந்த சிறு குழந்தையைத் தான் புலிகள் மறுபடியும் தமது சொந்த வக்கிரத்தால் புணர்ந்தனர். புலிகளா மற்றைய மூன்று ஆண் தொடர்பாளர்கள்? செய்தியை புணர்ந்த விதம் இப்படித் தான் இதைக் காட்டுகின்றது. இது தான் புங்குடுதீவு தரிசினிக்கும் நிகழ்ந்தது. ஏன் அந்தக் குழந்தை தற்கொலை செய்ய முயன்றது. ஆண்கள் பலர் கிடைக்காமையாலா! அந்தக் குழந்தை கற்பழிக்கப்பட்டவுடன், பூதக்கண்ணாடி கொண்டு தேடிய புலிகள், மூன்று ஆண்களுடன் தொடர்பு என்று எழுதுகின்றது. அந்த மருத்துவ அறிக்கை எங்கே? என்ன வக்கிரம். இப்படித் தான் அனைத்து செய்திகளும். கற்பழிக்கப்பட்ட தரிசினிக்காக புலம்பும் இதே செய்தி ஊடகம் தான், இதையும் செய்தியாக வெளியிட்டு தமிழ் மக்களையே புணர்ந்தது.

சரி சிறு குழந்தையை வீட்டில் வேலைக்கு வைத்திருப்பது எப்படி சரியாகும்?. தமிழீழத்தில் பிரபாகரனின் ஆட்சியில் ஏழைக் குழந்தைகளை வீட்டு வேலைக்காக வைத்திருப்பீர்கள். கற்பழித்துவிட்டு முன்னமே ஆண்களுடன் தொடர்பு என்று சொல்லுவீர்களோ! இப்படித் தான் புலிச் சட்டம் உள்ளது. உங்கள் தமிழீழத்தில் குழந்தைகளை பாலியல் பண்டமாக பயன்படுத்துவீர்கள். சரி நீங்கள் கூறுவது போல் அந்த குழந்தை மூன்று ஆண்களுடன் உறவு கொண்டது என்று வைத்துக் கொள்வோம், அப்படியாயின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் இப்படியான பெண்களுடன் உறவு கொள்ளாலாமோ! அதைத்தான் பிரபாகரனின் பிரபானிசம் வழிகாட்டுகின்றது. அதனால் தான் புலிப் பினாமித் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் வெட்கத்தை விட்டு, கோவணத்துடன் நீதிமன்றத்தில் படியேறி நின்று வழக்குரைத்தனர்.

இப்படி புணர்ந்து செய்திகளையும், தேசியத்தையும் வக்கிரப்படுத்தியவர்கள், நியாயப்படுத்தியவர்கள், அதையே வழக்காடியவர்கள், தரிசினியின் விடையத்தில் எப்படி நேர்மையாக செயல்படமுடியும். எல்லாவிதமான சந்தேகத்தையும் விட்டுச் செல்வதை, இது எந்தவித்திலும் தடுத்துவிடவில்லை. இதுபோன்றே மக்களின் பெயரில் நடத்தும் காடைத்தனங்கள் அனைத்தும், சிலர் மட்டுமே செய்கின்றனர். காடைத்தனத்தை செய்வதற்கு என பயிற்றப்பட்ட புலிகள், மக்களின் பெயரில் ஒரு காடையர் கும்பல் போல் மக்களுக்குள் நின்று வக்கரிக்கினர். உண்மை, நீதி, நியாயம் என எதுவுமற்ற வகையில், மக்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.


எதிரியின் அரசியல் ஆளுமைக்கு முன்னால், தலைகுனிந்து மண்டியிட்டு செல்லும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. எதிரியின் போலியான நயவஞ்சகமான அரசியலை எதிர்த்து, சரியான அரசியலை முன்வைத்து நேர்மையாக அவன் மண்கவ்வும் வண்ணம் போராடமுடியும். சமூக அறிவும் கல்வி அறிவுமற்ற ஒரு குறுகிய புத்திகொண்ட போராட்ட தலைமையினால் இதைச் செய்யமுடியாது. மக்களை மிக இழிவான வகையில், முரட்டுத்தனமாகவும், பலாத்காரமாகவும் தமக்கு பயன்படுத்தம் வகையில் அரஜாக சூழலுக்குள் தள்ளிச் செல்லுகின்றனர். இது அல்லாத வகையில் ஒரு போராட்ட சூழலை ஏற்படுத்த முடியாத ஒரு அரசியல் வறுமை கொண்ட தலைமை, இப்படித் தான் எம்மை வழிகாட்டுகின்றது.

ஒரு கட்டத்தில் மக்கள் படை என்ற பெயரிலான அறிவிப்பில், நாங்கள் 250 பேர் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியது. மக்கள் போராட்டம் என்ற பெயரில் யாழ்குடாவையே ஆட்டிபடைப்பவர்கள் 250 மக்கள் மட்டும் தான் என்பதை ஒத்துக் கொண்டனர். இந்த 250 குண்டர்களும், அராஜக வழியில் மக்களுக்குள் நின்று நடத்தும் வன்முறைக்கு தான் புலிகள் மக்கள் படை என்கின்றனர். இப்படித் தான் தாங்களே தமக்குள் பல பத்து படைகள். மக்களை அச்சுறுத்தவும், பீதியில் மக்களை உறையவைக்கவும் இந்த குண்டர் படைகள் தேவைப்படுகின்றது.

உண்மையில் புலிகள் என்ன செய்ய நினைக்கின்னர். மக்களின் இயல்பான வாழ்வை முடக்க விரும்புகின்றனர். கடந்த பத்துவருடமாக யாழ்குடாவில் இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவிய இணக்கமாக இணங்கி வாழும் சூழலை தகர்க்க விரும்புகின்றனர். இராணுவத்தை சீண்டுவதன் மூலம், இராணுவத்துக்கே உரிய மிருக வெறியை வன்முறையாக்கி, அதை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட விரும்புகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றால், இராணுவ வன்முறைதான் என்று கூற காரணங்களை தேடி வன்முறையை தூண்டுகின்றனர். இதில் சமாதானம், அமைதி ஒப்பந்தம் வேறு. அதற்கு தாம் விசுவாசமாக இருப்பதாக விளக்கம் வேறு வழங்குகின்றனர்.

இப்படிச் சொன்னபடி இராணுவ கெடுபிடியை உருவாக்கும் வகையில், வன்முறையைத் தூண்டும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்த நேர்மையிPமே சமாதான காலம் முழுக்க இருந்தது. ஆரம்பம் முதலே சில நூறு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டடனர். இதை என்றும் எங்கும் யுத்த நிறுத்த மீறலாக புலிகள் கூறுவது கிடையாது. மனிதவுயிர்கள் கொல்லப்பட்ட வரலாற்றில், கடத்தல் கைது என்று வன்முறை எகிறிக் குதித்தது. இராணுவம் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது. இராணுவ புலனாய்வாளர்கள் சில பத்து பேர் கொல்லப்பட்டனர். புலிகள் கொலைகளை மாபியாத்தனத்தில் செய்து வந்தனர். இந்த பேரினவாத சிங்கள இராணுவம், வன்முறையற்ற ஒரு பொது சூழலை தக்கவைத்தது. மக்கள் புலியைத் தான், தமது சொந்த இயல்பு வாழ்வுக்கு தடையானதாக எதார்த்தம் சார்ந்து கருதத் தொடங்கினார். புலிகள் தொடர்ச்சியாகவே கொலைகளைச் செய்து வந்தனர்.

இதன் பின்பாக புலியில் ஏற்பட்ட கருணா பிளவே, புலியின் மீதான எதிர்தாக்குதலை உருவாக்கியது. இதுவே கொலைகளை பரஸ்பரமாக்கியது. அது வரை (அமைதி சமாதானத்தின் பின்பாக) புலிகள் மட்டுமே கொலைகளை ஒருதலைப்பட்சமாக செய்து வந்தனர். அதுவரை எந்த புலி உறுப்பினரோ அல்லாத ஆதாரவாளரோ கொல்லப்பட்டனரா எனின், இல்லையென்று சொல்லுமளவுக்கு நிலைமை இருந்தது. புலிகள் மீதான கைதுகள் முதல் அனைத்தும் சமாதான ஒப்பந்த விதிக்கு புறம்பாக ஆயதங்களுடன் நடமாடியது போதே நிகழ்ந்தது. தாமே செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு புறம்பாக, கடல் மூலம் கப்பல்களில் ஆயுதம் கடத்திய போதே நிகழ்ந்தது. நிலைமை பொதுவாக இப்படித்தான் இருந்தன. இராணுவம் செய்த அனைத்தும் மக்களுக்கு பகிரங்கமாக தெரியக் கூடியதாக இருந்தது. புலிகள் செய்த அனைத்தும் இனம் தெரியாத நபர்களின் செயலாக கூறப்பட்டது. அவை அனைத்தும் புலிகளே செய்தமையால் தான், அவை அனைத்தும் இனம் தெரியாத நடவடிக்கையாகின. பின்னால் புலிகள் மீதான தாக்குதலை கருணா தரப்பு தொடங்கிய போது, புலிகள் அதை இனம் தெரியாத நடவடிக்கையாக கூறவில்லை. மாறாக ஒட்டுபடையின் நடவடிக்கையாக அதைக் கூறத் தொடங்கியது. உண்மையில் இனம் தெரியாதவை அனேகமாக அனைத்தும் புலிகள் செய்தவையே. மற்றவை புலியில் இருந்து பிரிந்த அதே அமைப்பைச் சேர்ந்த கருணா தரப்பு செய்தது. மிகப் பிந்தியவை (பெரும்பாலும் 2005 நவம்பர் டிசம்பரில் செய்தவை) இராணுவ தரப்பும், புலிகளும் போட்டிபோட்டு செய்கின்றன. பெரும்பாலானவை கொலைகள் பற்றிய அபிப்பிராயம் மற்றும் எதிர்வினை யார் செய்தது என்பதை தெளிவாக்குகின்றது. ஏன் கொலைக்கு எதிர்வினையாற்றிய வடிவம் கூட அதை பிரதிபலிக்கின்றது. இன்று தாம் செய்ததை எதிரி செய்ததாக காட்டுவது கூட நிகழ்கின்றது. பொதுவாக யுத்த நிறுத்த மீறல் என்று புகாரிட்ட போதும் கூட, யார் கொலையாளி என்பது உறுதி செய்தது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறும் புலிகள், தொடர்ச்சியான தம் தரப்பல்லாத கொலைகளை யுத்தநிறுத்த மீறலாகவோ, அதை கண்டிக்கவோ முன்வரவில்லை. கொலையை ஆதாரித்தே நின்றனர் என்றால், உண்மையில் அதை அவர்களே செய்தனர். இதுவே இன்று மக்கள் படை என்ற பெயரிலும், ஊர்பெயர் தெரியாத அனாதைப் படைகளின் பெயரிலும் புலிகள் தான் செயல்படுகின்றனர்.

அமைதி சமாதானம் என்ற ஒன்றைத் தாமே தெரிந்தெடுத்து கையெழுத்திட்டுவிட்டு, தொடர்ச்சியாக கொலைகளை செய்து வந்தனர். கடத்திச் சென்றனர். சித்திரவதைகளைச் செய்தனர். அச்சறுத்தல்கள் பலவற்றை செய்தனர். இவை யுத்தநிறுத்த மீறலாக இருந்த போதும் கூட, புலிகள் அதைச் செய்தனர். இந்த யுத்த நிறுத்தத்தை பதிவு செய்வதை தொழிலாக கொண்ட கண்காணிப்பக் குழுவிடம், இதைக் கூட பதிவு செய்ய முடியாத வகையில் பதிவிடங்களில் புலிகள் தமது சொந்த ஆட்களையே நிறுத்தியிருந்தனர். பின்னால் இதையும் கண்காணிப்பு குழு புரிந்து கொண்ட நிலையில், சில ஆயிரம் சம்பவங்கள் யுத்தநிறுத்த மீறலாக பதிவாகின. இவை பெருமளவில் (சில ஆயிரம்) புலிகளால் மீறப்பட்டவை. இதையும் தமிழ் மக்கள் தான் துணிச்சலுடன் முறையிட்டனர். ஆனால் எவையும் முழுமையாக (பல பத்தாயிரம்) பதிவாகவில்லை. பல நூறு கொலைகளில் குற்றவாளிகள் புலிகள் என்ற பதிவாகவில்லை. இப்படி மனிதவிரோத குற்றங்கள் அரங்கேறின. அமைதி சமாதானம் என்ற பெயரில், மக்களின் இயல்பு வாழ்வை நாசமாக்கிய யுத்த நிறுத்த மீறல்களை புலிகளே பெருமளவில் செய்தனர். நடத்த யுத்தநிறுத்த மீறல்களில் இனம்காணப்பட்டு உறுதிபடுத்தப்பட்டவைகளில், 90 சதவிகிதத்துக்கு மேலானவை புலிகளால் மீறப்பட்டவையே. மக்களின் இயல்புவாழ்வை இதுவே நாசமாக்கியது. இதைக் கண்காணிப்பு குழு அறிக்கைகள் உறுதி செய்கின்றன. இந்த அறிக்கையை தமிழ் மீடியாக்கள் வெளியிடுவதில்லை. உறுதிப்படுத்தப்படாத யுத்த நிறுத்த மீறல்களில் 99 சதவீதமானவை புலிகளால் செய்யப்பட்டவை. இதில் 300 மேற்பட்ட கொலைகளும் அடங்கும். கடத்தல் சித்திரவதைகள் எனறு நீளமான பட்டியல் உண்டு. இதைவிட பயத்தின் காரணமாக புகார் இடப்படாத யுத்த நிறுத்த மீறல்களில், 100 சதவீதம் புலிகளால் செய்யப்பட்டது. இது பல பத்தாயிரத்தைத் தாண்டும்.

புலிகளில் ஏற்பட்ட கருணா பிளவு, நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புலிகள் மேலான தாக்குதல் என்ற புதிய நிலை உருவாகியது. இதையே புலிகள் அரசு செய்ததாக, முதன்முதலாக குற்றம் சாட்டியது. இப்படி புலிக்குள் ஏற்பட்ட பிளவு நிலைமையை மாற்றியமைத்தது. மட்டக்களப்பு கருணா அணி மீது, புலிகள் இராணுவத் தாக்குதலை நடத்தியிருக்காவிட்டால், புலி மீதான வன்முறையும் நடந்து இருக்காது. இதில் வேடிக்கை என்னவென்றால் கருணா அணி மீது புலிகள் தாக்குதலை நடத்த, சிறிலங்கா இராணுவத்தின் உதவியை புலிகள் பெற்றுக் கொண்டது என்பதும் உண்மை. ஆனால் கருணா அணியின் மீதான அழித்தொழிக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பு இருந்தபோதும் கூட புலிகள் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இது எதிர்தாக்குதலை புலிக்கு மேலானதாக உருவாக்கியது. புலிகளின் வலிந்த தாக்குதல் தான், தம் மீதான எதிர் தாக்குதலாக மாறியது. புலிகள் ஒரு தலைப்பட்டசமாக கொன்று வந்ததன் விளைவு, எதிர் தாக்குதலாக மாறியது. புலியில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள், கருணா குழுவால் தான் கொல்லப்பட்டனர். அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்தேறியது. கருணா அணிக்கு என்று சுயாதீனமான செயல்பாட்டு வடிவம் காணப்படுகின்றது. கருணா தரப்பை இராணுவம் கைது செய்த சம்பவங்கள், சுட்டுக் கொன்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன. ஏன் இன்று புலிகளால் தேடி அழிக்கப்படும் கருணா தரப்பைச் சேர்ந்தோர் பலர், சாதாரணமாக வீடுகளில் சொந்த உழைப்பில் இருக்கும் போது நிகழ்ந்து வருவது இதற்கொரு சான்றாகும்.

மறுபக்கம் இராணுவம் மீது புலிகள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த நிலையில், அரசியல் ரீதியாக புலிகள் அடிசறுக்கிய படி இருந்தனர். புலிகள் இராணுவ நோக்கில் அனைத்தையும் எதிர்கொண்ட நிலையில், அரசியல் ரீதியாக பேரினவாதம் புலிகளை மண்கவ்வ வைத்தனர். புலிகளின் ஒவ்வொரு யுத்தநிறுத்த மீறலையும், பேரினவாதம் தனது வெற்றியாக கருதியது. அதை நடைமுறையில் வென்று காட்டியது. புலிகள் குறுகிய சுயநலத் தீர்வுகளை மையப்படுத்தி, முட்டையில் மயிர் புடுங்கிக் கொண்டிருந்த போது, எதிரி அரசியல் ரீதியாக பலமடைந்த வண்ணம் இருந்தான். உண்மையில் தமிழ் மக்களையும், சிறுபான்மை இனங்களையும் குறிப்பாக முஸ்லீம் மக்களையும் அரசியல் ரீதியாக பேரினவாதம் வெற்றி கொண்டுள்ளது. ஆட்சியேறிய தீவிர பேரினவாதம் முஸ்லீம் மற்றும் மலையக மக்களையும் கூட வெற்றி கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் தான் மக்களை திண்டு ஏப்பமிட்டு வந்த மலையகத் தலைமைகள், புலியின் வால்களை நக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லீம் தலைமைகள் செய்வதறியாது அரசியல் அனாதையாகின்றனர்.

பேரினவாதம் அரசியல் சூழச்சியால் முன்பைவிட பலமடைகின்றது. புலிகளின் குறுகிய இராணுவ பொருளாதார நலன்களுக்கு இடையில் பேரம் பேசுவதன் மூலம், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை பேரினவாதம் தட்டிக்கழிக்கின்றது. உண்மையில் மொத்த நிலைமையிலும் மக்கள் சார்பான நிலையை எடுப்பதன் மூலம் மட்டுமே, நிலமையை மாற்றி அமைக்கமுடியும். ஆனால் இந்த நிலையில் புலிகள், அனைத்தையும் தமது இராணுவ சப்பாத்துகளால் மிதிக்கின்றனர். குறுகிய இராணுவ குதர்க்க வாதத்தில் சமூகத்தையே சிதைத்து, அதில் தீர்வைக் காணமுடியும் என்பது பகற்கனவாகிக் கொண்டிருக்கின்றது. நேர்மையாக யுத்தத்தைக் கூட தொடங்க முடியாது வக்கற்றுப் போன அரசியல் சூனியத்தில் நின்று, கொக்கரிக்க முனைகின்றனர். அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம், யுத்தத்தைத் இராணுவம் தொடங்கும் என்று பகற்கனவே காண்கின்றனர்.

உண்மையில் பேரினவாத அரசு இதையும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு புலியை வெற்றி கொள்கின்றது. கண்காணிப்பு குழு கூறிய படி "இவர்கள் கிரிமினல்கள், இவர்களை பொலீசார் கைதுசெய்ய வேண்டும்" என்ற அடிப்படையில் இது தனிமைப்படுத்தப்படுகின்றது. கண்காணிப்புக் குழு நடக்கும் கண்ணிவெடித் தாக்குதலை "ஒரு கோழைத்தனமான செயல்" என்றும், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை "ஒரு சாத்வீகமான போராட்டம்" என கருதப்படமுடியாது எனவும், "இதன்போது அரச படைகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது" என்று குற்றம் சாட்டினர். இந்த காடையர்கள் தமக்கு குண்டெறிந்த நிலையைக் கூட கண்காணிப்புக் குழு சுட்டிக் காட்டியது. இவை எல்லாம் மக்களுக்கு எதிராக மாறிவிடுகின்றது. தமிழ் தேசியம் சிதைக்கபட்டுவிடுவதற்கு இட்டுச் செல்லுகின்றது. இதன் விளைவு என்ன? இது வெறும் கும்பல் நடவடிக்கை தான் என்பதை ஏகாதிபத்தியம் புரிந்துள்ளதுடன், இதை ஒடுக்க கோருகின்றது. இந்த நடவடிக்கைகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் என்பதால், இலகுவாக ஒடுக்க ஏகாதிபத்தியம் உத்தரவிடுகின்றது. இதன் மூலம் புலிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவை இனம் காணப்பட்ட சில உதிரி நடவடிக்கை என்பதால், இலகுவாக பேரினவாதம் கட்டுப்படுத்திவிடுவார்கள். கைது, துப்பாக்கிச் சூடுகள் மற்றும் காணாமல் போதல் மூலம் இதை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு காணாமல் போதல் என்பது அனேகமாக வெளித்தெரிவதில்லை. சமூகத்துடன் நேரடியாக உறவின்மையால், அவர்கள் எப்போது எங்கு காணாமல் போனார்கள் என்பதே மர்மமாகிவிடுகின்றது. புலிகள் காணாமல் போன தனது உறுப்பினரை தேடி உறவினரை அனுப்பும் வரை இது நிகழ்கின்றது. அண்மையில் யாழ் கோட்டை அருகில் கொல்லப்பட்ட 5 புலி உறுப்பினர்களின் பிணம் கூட அனாதையாகவே கிடந்த நிலையில், மக்கள் அதை தகனம் செய்யவில்லை. இந்த உதிரிக்குழுகள் தான், அதை பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டது. நிலைமை தெளிவாக புலிக்கு எதிராக மாறி வருகின்றது.

இந்த நிலையில் புலிகளின் விருப்புக்கு மாறாகவே, இராணுவ நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்திவிடுவார்கள். இதன் மூலம் புலிகளை மீண்டும் புதிய அரசியல் நெருக்கடிக்கு பேரினவாதம் இட்டுச் செல்லும். சண்டையை தொடங்க முடியாத நிலை மீண்டும் உருவாகும். உண்மையில் மக்களிடம் அன்னியமான உதிரியான மக்கள் படை இப்படிச் சிதைந்து போவார்கள். உதிரியான குண்டுகளை வெடிக்கவைக்கவே முடியும். கைது, காணாமல் போதல், துப்பாக்கிச் சூடுகள் இதையே உறுதி செய்கின்றன.

பேரினவாதம் அரசியல் ரீதியாகவே இதை அணுகி வெல்லுகின்றது. புலிகள் மீண்டும் புதைகுழியில் வீழ்கின்றனர். இந்த இடத்தில் மக்கள் பொங்கியெழுவதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று தமிழ்ச்செல்வன் கருத்துரைப்பது நிகழ்கின்றது. மக்களின் துன்பம் பற்றி மீண்டும் மூக்கால் சிணுங்கி அழுகின்றனர். இயல்பு வாழ்வு சிதைந்து போனதாக மீண்டும் புலம்புகின்றனர். இயல்பு வாழ்வை சிதைத்தவர்கள் (இயல்பு வாழ்வை சிதைத்த யுத்த நிறுத்த மீறல் எண்ணிக்கை ஒரு உதாரணம்), அதை மேலும் ஆழமாக சிதைக்க எடுத்த முன்முயற்சி இப்படித்தான் ஆகும். யுத்த சூழலையும் உருவாக்கி கெடுபிடியை எதார்த்தமாக்கி பின், இதை இயல்பு வாழ்வுக்கு பாதகமானதாக காட்டுவதே நிகழ்கின்றது. உண்மையில் அரசியல் செய்ய என்று வந்தவர்கள், அராஜகத்தை உருவாக்கியபின் பின்வாங்கினர். பின் சில உதிரிகளைக் கொண்டு காடைத்தனத்தை கட்டவிழ்த்துவிட்டனர். முடிவாக அந்த காடைத்தனம் ஒழிக்கப்படும் போது, மீண்டும் நிகழப் போவது அரசியல் சூனியம் தான்.

இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அரசியல் செய்ய சென்றவர்கள் என்ன அரசியலை செய்தார்கள். யாருக்காவது தெரியுமா! அராஜகமான சூழலை உருவாக்கி நிர்ப்பந்தம் கொடுத்து பணம் வசூலித்தவர்கள், மக்களை கண்காணித்ததும், தண்டித்ததுக்கும் அப்பால் எதையும் அரசியல் ரீதியாக செய்யவில்லை. இதன் போது ஒரு சில உதிரிகளை தமது அராஜக செயலுக்கு இணைத்துக் கொண்டதற்கு அப்பால், மக்களை எதிர்நிலைக்கு இட்டுச் சென்றனர். பத்து வருடமாக இராணுவத்துக்குள் வாழ்ந்த மக்களின் மனநிலைவை விட, புலிகளின் மூன்று அல்லது நான்கு வருட கால ~புலி அரசியல் நடவடிக்கையில் வாழ்ந்த மக்களின் மனநிலை சார்ந்த அனுபவம் மிகவும் துயரமானது. இது எதிரி சார்பாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகள் இதைத்தான் அரசியல் என்கின்றனர். மக்களை துன்புறுத்துவது தான் அரசியல் என்கின்றனர். இராணுவத்தை வலிந்து சீண்டுவதன் மூலம், மக்கள் மேல் பேரினவாத இராணுவத்தை பாய்ந்து குதறவைப்பதன் மூலம், மக்களை மீண்டும் தம்பக்கம் வென்றெடுக்கும் உத்தி வெற்றிபெற முடியாத முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.

கடந்த இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பேசி இணக்கம் காணப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் கிழத்தெறிந்தது பேரினவாதம் தான். அதே போல் புலிகளுடன் கடந்த வரலாற்றில் நடத்த பேச்சவார்த்தை அனைத்தையும் முதலில் முறித்தவர்கள் புலிகள் தான். இம்முறையும் அதை நோக்கியே முன்னேறுகின்றனர். எதிரியை எதிர்கொள்ள முடியாத தமது சிறுபிள்ளைத்தனமாக குறுகிய அரசியலால் தான் இந்த நிலை ஏற்படுகின்றது. எதிரி பேரினவாதியாக இருக்கும் வரை, அவனை பேச்சுவார்த்தையில் அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது இலகுவானது. ஆனால் பேரினவாதி ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒவ்வொரு விடையத்திலும் வெற்றி கொள்கின்றான். தமிழ் மக்களின் பாதுகாவலனாக கூறி வேஷம் போட முடிகின்றது. போராட்டம் மக்கள் விரோதத் தன்மை பெற்று அதுவே கூர்மையாகும் போது, எதிரி அதில் குளிர்காய்கின்றான்.

இந்த நிலையில் புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய நெருக்கடியில் இருந்து மீள, யுத்தத்தை வலிந்து திணிக்கின்றனர். இந்த வகையில் புலிகள் மிகப் பெரிய இராணுவத் தாக்குதலை நடத்திய போது கூட, இராணுவம் வரையறுத்த எதிர் வன்முறைக்கு அப்பால் நகரவில்லை. ஏன் புலிகள் கூறுவது போல், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேச சட்ட ஒழுங்கை, இராணுவம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட முனைகின்றது. இராணுவத்தை கொல்லும் போது, படுகொலைகளை நடத்தும் போது சட்ட எல்லைக்குள் இராணுவம் சுட்டுக் கொல்லும் உரிமையை இயல்பாக புலிகள் அங்கீகரித்துவிடுகின்றனர். கொலைகளுடன் தம்மை தொடர்பு படுத்துவதை மறுக்கும் புலிகள், அதை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கூறுவது இதைத் தான். ஆயத வன்முறையின் போது, மக்கள் ஒடி விடுகின்றனர். இராணுவம் சுலபமாகவே இன்று வேட்டையாடுகின்றனர்.

இராணுவம் ஆயுதம் ஏந்தியவர்களை (புலிகளை) மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் ஆயுதம் ஏந்தியவராக (புலிகளாக) காட்டி கொல்வது நிகழ்கின்றது. புலிகள் பாணியில் இராணுவமும் அரசியல் செய்கின்றது. புலிகள் பாணியில், புலிக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இனம் தெரியாத கொலைகள் இரண்டு பகுதியாலும் செய்வது இன்று அன்றாட நிகழ்வாகிவிட்டது. கொல்லப்படுவது சரியான அரசியலால் வழிநடத்தப்படாத அப்பாவி தமிழ் மக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பல அரசியல் குழுக்கள் மீதான புலிகளின் வலிந்த படுகொலைகள், படிப்படியாக எதிர் தாக்குதலாக மாறிவருகின்றது. தமிழ்பேசும் மக்களிடையே இருந்து குறுகிச் செல்லும் புலி அரசியல், தனக்கு எதிராக பல தளத்தில், பல களத்தில் எதிரியை உருவாக்கி வருகின்றனது.

இன்று இராணுவம் தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில், கொலையாளியை இனம் கண்டு குறிவைத்து தாக்கியழிப்பதில் வெற்றி வெற்று வருகின்றான்;. இராணுவம் தனது உத்தியை மாற்றிய போது, வேடிக்கை பார்ப்போர் யாரும் கூடுவதில்லை. இதனால் யார் அந்த மக்கள் படை என்பது தெளிவாக அம்பலமாகிவிடுகின்றது. அதனால் களத்தில் அல்லது படுகொலைகள் மூலம் மரணிக்கின்றனர். உண்மையில் அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாத அனாதைகளாகவே அவர்கள் மரணிக்கின்றனர்.

மறுபக்கம் மக்கள் அனாதைகளாக்கப்பட்டு மிருகத்தனமாக அவர்களின் மவுனத்தின் மேல் புணரப்படுகின்றனர். பேரினவாத இராணுவமும், புலிகளும் இதை செய்வதில், தமக்கு இடையில் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிவிடுகின்றனர். மக்களின் எதிர்காலம், தேசியத்தின் எதிர்காலம் அனைத்தும் புணரப்பட்டு சிதைக்கப்படுகின்றது.

31 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Sri Rangan said...

இரயா,இந்தக் கட்டுரையானது மிகவும் தர்க்கமாக எழுதப்பட்டுள்ளது.மிகச்சிறந்த தரவுகளைக்கொண்டு எழுதிவிடுகிற உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகும்.

இத்தகைய கட்டுரைகளைக் குறைந்த பட்சமாவது விமர்சனரீதியாக அணுகும் தன்மை பலருக்கு இருப்பதில்லை.அதனால் தேவையற்ற பிணக்காகக் கருதி மௌனித்துவிடுகிறார்கள்.

எனினும் தங்கள் கருத்துக்களின்பால் உந்தப்பட்ட சில வாசகர்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாது-ஜீரணிக்கமுடியாது திண்டாடுகிறார்கள் என்பதை இந்தத் தூஷண வாதியான குஞ்சாமணிப் பண்டிதரின் எழுதினூடாகப் பார்க்கிறோம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//VAISAVDEE RAJAGARAN

”YOU ARE WORKING 8 HOURS FOR YOUR FAMILY AND LIVING IN NICE WESTERN COUNTRY.”//

தன் உழைப்பையே தான் நம்பி வாழ்வது என்பது எப்படி இழிவானது என்பதை லும்பன் கொஞ்சம் விரிவாக விளக்க வேண்டும். எவருடைய இரத்தத்தையும் வியர்வையையும் அட்டை போல் உறிஞ்சாமல் தன் உழைப்பில் தான் வாழ்வது எப்படி தாழ்வாகும் ? எட்டு மணி நேர வேலை செய்யத்தான் வேணும். அதில் என்ன தவறு தன் உழைப்பில் தான் வாழாமல் ஊரான் வீட்டுச் சொத்தை சுருட்டி சுனாமியில் மக்களின் பிணத்தை காட்டி மக்களின் அவலத்தில் அள்ளிச்சுருட்டிய பணத்தில் அரசியல் அயோக்கியத்தனம் செய்பவர்களையிட்டு லும்பன் என்ன சொல்ல முடியும்.

//Living in a nice western country//
லும்பன் எங்கே வாழ்கிறார் தமிழில் எழுத வராததற்கு என்ன காரணமோ? மேற்குலக வாழ்க்கையை மேம்பட்ட வாழ்க்கையாக வருணிக்கும் லும்பனே தமிழீழ வாழ்க்கை என்ன தாழ்ந்ததோ ? அறியாதார் தெரியாதார் ஊரல்லார் உறவல்லார் யாராயிருப்பினும் தெருவில் அந்நியப் பிண ஊர்வலத்தைக் கண்டால் கூட மிதிவண்டியிருந்து இறங்கி வழிவிட்டோ நடைபாதையியிலிருந்தே ஒதுங்கியோ இறந்த மனிதனுக்கு மரியாதை செய்த எங்கள் தெருக்களிலே தெருநாய் போல் சுடப்படுகிறார்கள் உங்கள் தமிழீழத் “தேசத் துரோகிகள்” . பேச்சு மறுக்கப்பட்டவர்கள் தேசத்தில் சிந்தனைகளை சிறைப்பிடித்தவர்கள் துப்பாக்கிகளால் பேசும்போது துணிவு சாதாரண மக்களுக்கு உடனே வராது தான். அதனால் தான் “உனக்கென்ன துணிவு எங்கள் அரசியலைக் கேள்வி” கேட்க என்ற இறுமாப்பு கேள்வி வருகின்றது.
அடக்கப்பட்டதற்கெதிராக தமிழ்மக்கள் எழுந்ததால் தான் இன்று புலிகளின் இருப்பிற்கான அடிப்படையே எழுந்தது. அந்த அடிப்படை ஒன்றிலேயே இன்னும் அது உயிர்வாழ்கின்றது. அந்த அடிப்படை தகர்ந்து போகும் போக்கில் அவர்கள் தானே எழுந்து தங்களை ஏய்த்து அடக்கும் எந்தக் கையையும் முறிப்பார்கள். அந்த மக்களின் தைரியத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. அது எங்கிருந்தும் வரும். உலக மூலை முடுக்குகளிலெல்லாம் அகதிகளாய் தெருக்களியே கண்ணீர் சிந்தும் எந்தச் சீவனுக்கும் உரித்தான அடிப்படை உரிமை. நாட்டில் அடுத்த வேளைக்கு ஆக்குவதற்கு என்ன உண்டென்று அங்கலாய்க்கும் எங்கள் தொப்புள் உறவுகளுக்கும் தைரியம் தானே வரும்.
அந்த தொப்புள் கொடி உறவான லும்பனே உனக்கும் அப்போது தான் இன்னுமொரு பக்கம் பார்க்க தைரியம் வரும்.

இப்போதும் நேர்மையாய் சொந்த அடையாளத்துடன் கருத்திட தைரியமில்லாமல் இருப்பது ஏனோ?

//HOW DARE YOU CAN TALK ABOUT OUR POLTICIS AS SAID BEFORE YOU ARE ONE OF THE DIRTY POLITICIAN WITHOUT ANY PURPOSE

ALL YOU WANT TO DO IS JUST OPPOSE LTTE BECAUSE THEY KIDNAPPED YOU OTHER THAN THAT YOU DON'T HAVE ANY FUCKEN REASON//

தன் வாழ்வை மட்டும் நேசிப்போர் யாரும் மரணத்தை கூவியழைப்பதுண்டோ மனிதனே. புலிகளை விமர்சிப்பவர் பின்னால் மரண அச்சுறுத்தல் தொடரும் என்பது அன்றிலிருந்து இன்றுவரையான தொடர்கதை. விடயம் இப்படி இருக்க எதையும் விளங்காமல் உழைப்பின் ஊதியமான பிராங்கை இழுத்து உயிருக்கு சமப்படுத்தும் அறிவாளியே உன்னை என்ன சொல்ல.

//MOTHER FUCKERS THAT GIRL RAPED BY NAVY FUCKEN ASSHOEL YOU RAISE QUESTION ABOUT THAT RAPE ASSHOLE
CAN YOU FEEL ABOUT GIRLS PARENTS
CAN YOU FEEL THAT PAIN
WHAT HAPPEN IF YOU SISTER WERE RAPED BY NAVY OR ARMY?
I HAD LITTLE RESPECT FOR YOU BEFORE N SINCE TODAY YOU WILL SEE MY REAL FACE//

தாயைப்புணர்பவனே (நாகரீகமாக மொழி பெயர்த்தால்) – என்று இரயாகரனை தூசணத்தில் தாயையே கேவலப்படுத்தி விழிக்கும் கணத்திலேயே உன்னை நன்றாக வெளிப்படுத்தியிருக்கின்றாய் நன்றி. அந்த வரிகளுக்கப்பால் உனக்கென்ன தார்மீகம் உண்டு தர்சினியின் பெற்றோரின் கண்ணீர் பற்றிக் கதையாட.
புலிகளை நோக்கியும் கேள்விகள் எழுப்பியதால் வந்த கோபம் தான் உனது கோபமே தவிர தர்சினியின் பெற்றோருக்கும் தர்சினிக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்பதற்கல்ல. அவர்களுக்கு நடந்த அநியாயத்தின் பால் கோபம் வரவில்லை

//FUCKER GO AND WORK FUCKEN DISHWASHING JOB IN FRANCE MAKE SOME FRANKS AND COME BACK CRY ABOUT OUR TAMIL PEOPLE
I ALWAYS SAID THAT " YOU ARE ACT LIKE INNOCENT BUT YOU DON'T ASSHOLE"//

கோப்பை கழுவுவது ஒரு கவுரமான தொழில். தமிழீழத்தில் என்ன தொழில் அடிப்படையிலான சாதிப்பகுப்புகள் நீடிக்கும் போலிருக்கின்றது?

//I AM SHAME MY SELF YOU CALL YOUR SELF TAMILIAN
SINGALASE ARE MUCH BETTER THAN ASSHOLE LIKE YOU AND JANANYAGAM SRI RANGAN ALL THAMIL THUROKKEGAL//

நீ வெட்கப்படுவது நல்லது உன்னுடைய தூசணக் கொட்டுதலுக்காக

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Rayaagaran EPDP..
Good job man keep it up..
How is your Boss Devananda?

Anonymous said...

பாருங்கள் சிங்கள இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை,, தற்போதைய தமிழர்கள் தந்தை செல்வா காலத்து தமிழர்கள் என்று என்னிக்கொண்டு இருக்கிறார்கள் சிங்களப்பேரினவாதிகள்..

பாருங்கள்,, பொது இடத்தில் கதைத்துக்கொண்டு இருந்த 7 பல்கலைகழக மாணவர்வகளை பிடித்துச்சென்று ஒவ்வொர் ஒவ்வொருவராக வீதியில் படுக்க வைத்து காதுக்கு அருகில் மூளை சிதறும்படியாக சுட்டு இருக்கிறார்கள்,, 5 மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீதி 2 மாணவர்களும் சாவது உறுதியாகிவிட்டது எதற்கும் தப்பிக்க முயற்சித்துப்பார்ப்போம் என நினைத்து ஓடிய வேளை முதுக்குபுறத்தில் சுட்டு இருக்கிறார்கள்,,, அவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதில் பொலிஸ் அதிகாரி சிங்களமக்களின் காதுகளில் பூ சுற்றுகிறன் என்று நினைத்தோ என்னவோ, அந்த கொலைச்சம்பவங்களூக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என்று பொருள் பட கூறியுள்ளார்,, இந்த கேனை பொலிஸ் அதிகாரிக்கு தெரியாதா 2 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது? அல்லது அந்த பிறவிக்கு அந்த மாணவர்கள் உண்மைகளை சொல்லமாட்டார்கள் என்ற அகங்காரத்தில் தான் அப்படி செய்தாரா??

Anonymous said...

திருகோணமலையில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் இறுதி ஊர்வலம் இன்று வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.


பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் பங்கேற்று அரச பயங்கரவாதத்துக்குப் பலியான தங்களது மாணவச் செல்வங்களுக்கு இறுதி வணக்கத்தை கண்ணீருடன் செலுத்தினர்.



மாணவர்களின் உடல்கள் இன்று காலை அவர்களது வீடுகளிலிருந்து மதச் சடங்குகள் முடிவடைந்த பின்னர் சிறீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

கல்லூரி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மேடையில் மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி அதிபர் எம்.இராஜரட்ணம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மும்மதப் பிரதிநிதிகள் மாணவர்களின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்தனை நடத்தினர்.




அதன் பின்னர் கறுப்புக் கொடிகள், கண்டன பதாகைகள் கட்டப்பட்ட திறந்த லொறியில் மாணவர்கள் உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மடத்தடி சந்தியிலிருந்து திருகோணமலை இந்து சுடுகாட்டு மைதானம் வரை முக்கிய வீதிகளுடாக இந்த ஊர்வலம் சென்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.




கல்லூரி மைதானத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது 1 கிலோ மீற்றர் நீளத்துக்கு மக்கள் அணிவகுத்து நின்றிருந்தனர்.

மயான மையத்துக்கு ஊர்வலம் வந்தடையை ஒரு மணிநேரத்துக்கும் மேலானது. ஊர்வலப் பாதையில் குவிக்கப்பட்டிருந்த அனைத்து சிறிலங்கா படையினரும் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தனர்.

தமிழரங்கம் said...

நட்புடன் அனைவருக்கும்

திட்டுவது, தூசணத்தால் புணாந்ததெழுதுவது, அதைவிட்டாள் கருணாவின் ஆள், ஈ.பி.டி.பியின் ஆள், இந்தியக் கைக் கூலி என்று பலவாக கூறுவதினால் விடையம் சரியாகிவிடுவதில்லை.

நேர்மையாக விவாதியுங்கள். நாங்கள் சொன்னது தவறு என்றால், அதில் என்ன தவறு என்று ஆதாரபூர்வமாக முன்வையுங்கள். இது அறிவு. இது உண்மை. இதுவே நேர்மை. அதைச் செய்யுங்கள். அப்போது உங்களை நாங்கள் தலைவணங்குகின்றோம். உங்கள் கையில் பேனை உண்டு. சுயபுத்தியுள்ள மூளை உண்டு. எடுபிடியாக விசுவாசிப்பதை விடுத்து சுயமாக முடிந்தால் சிந்தியுங்கள். பூமியை உருண்டை என்று சொன்னதற்காகவும், சூரியனைச் சுற்றி பூமி சுற்றுகின்றது என்ற சொன்ன கலியோவுக்கு, கிறிஸ்துவ மத குண்டர்கள் வழங்கிய தண்டனை போல் மலட்டுக் கும்பலாக வக்கரிக்காதீர்கள். சொல்வதில் உண்மை உண்டா, அது மக்களுக்கு எந்த வகையில் சேவை செய்கின்றது என்று பாருங்கள்.

நாங்கள் புலியெதிhப்பு அணியை விமர்சிக்கும் போது புலிகள் மகிழ்வதும், புலியை விமர்சிக்கும் போது புலியெதிர்ப்பு அணி மகிழ்வது நடக்கின்றது. இரண்டையும் நாங்கள் வெறுக்கின்றோம். நாங்கள் மக்கள் நலன் சார்ந்த விடையத்தை முன்னிலைப்படுத்துகின்றோம். முடிந்தால் அதை நீங்கள் செய்யுங்கள். உங்களுடன் நாங்களும் கைகோத்துக்கொள்ள தயாராகவே உள்ளோம்.

விவாதிக்கப்பட்ட விடையத்தை விட்டுவிட்டு ஒடுவது உண்மையை புதைகுழிக்கு அனுப்பத்தான்;. விடையத்துக்கு வெளியில் அந்த கொலையை பார் என்று விவாதிப்பது அழகல்ல. இது விடையத்தை விட்டு தப்பியோடுவது. இலங்கையில் பேரினவாதம் தான் தமிழ் மக்களின் பிரதான எதிரி;. ஆயிரம் ஆயிரம் பேரை படுகொலை செய்துள்ளது. புலியைப் போல் இன்றைய துரோக இயக்கங்களும் பல நூறு கொலைகளைச் செய்தவர்கள் தான். இன்றும் செய்ய தயாராக உள்ளவர்கள் தான். இதனால் புலிகள் செய்வது நியாயமாகிவிடாது.

ஒரு படுகொலையை நாம் கதைக்கும் போது, அதை மட்டும் நாம் பேச முடியாது. கொலைகள் பரஸ்பரம் செய்யப்படுகின்றன. இதை நான் யுத்த முனையில் குறிப்பிடவி;லை. உரிமை கோரவே வக்கற்ற கொலைகள், இன்று அன்றாடம் இரண்டு பகுதியும் செய்கின்றது.

அனாமதேயம் பதிவு ஒன்றில் திருகோணமலை படுகொலை பற்றி குறிப்பிடும் போது, காதுக்குள் வைத்து தூப்பாக்கியால் சுட்டதாக கூறுகின்றது. இப்படி எந்த செய்தியும் வந்தது கிடையாது. இப்படி விவாதிக்க முடியாது.

திருகோணமலை படுகொலையில் மிக முக்கிய கேள்வி உண்டு. பல்கலைக்கழகத்தில் கற்றக் கொண்டு இருக்கம் மாணவர்களும் (கண்டி பல்கலைகழகத்தில் தற்போது பாடம் நடந்த கொண்டிருக்கும் காலத்தில்), பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களும் ஏன் சந்தித்து கொண்டனர்.

ஒன்று தாக்குதலுக்கா அல்லது ராக்கிங்கா. இதில் ஒன்று நடந்துள்ளது. தாக்கதலக்கு அல்ல என்பத பொதுவாக ஊகிக்க முடிகின்றது. ராக்கிங் என்றால் அவர்கள் மீது இராணுவமல்லாத தாக்குதலும் சாத்தியம். இதன் பின் அருகில் இருந்த இராணுவம் தாக்கியிருக்கும். தன் மீதான தாக்குதல் முயற்சியாக கருதி. ராக்கிங்கை எப்படி புலிகள் அனுகுகின்றனர் என்பதற்கு வரலாற்றில் நிறைய ஆதாரம் உண்டு. இப்படி பல சிக்கலான உண்மையென நம்பும் பொய்கள் மீது கேள்விக்குள்ளாக்கும் விடையங்கள் உள்ளன.

இராணுவம் திட்மிட்டு கொல்லுதல், கிராமங்களையே அழித்து தீயிடல் எல்லாம் நடந்தன, எதிர் காலத்திலும் அவை நடக்கும். ஏன் அம்பறையில் ஒரு பெண்ணின் கற்பழித்த பின், பெண்ணின் பாலியல் உறுப்பில் கிரனைட் குண்டை பொருத்தி வெடிக்கவைத்தது தான் இந்த இராணுவம். சந்திரிக்கா அது செல்லடியில் அப் பெண் கொல்லப்பட்டதாக கூட கூறியவர்தான். இராணுவம் கண்ட இடத்தில் காணுவதை எல்லாம் குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கும் இராணுவம் தான்.

அதனால் அனைத்தையும் இராணுவம் செய்தாக கூற முடியாத வகையில் சில நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 1985 இல் அநுதாரபுரத்தில் புலிகள் செய்த படுகொலையை மறுத்த புலிகள், புலிகள் பிரேமதாச உறவின் போது அதை தாம் செய்தாக கூறினார். இந்தியா சொன்னது (பணம் ஆயுதமும் கொடுத்து) அதனால் சுட்டோம் என்றனர். இப்படி பல வகையான சம்பவங்கள் கூறமுடியும்;.

மீண்டும் யுத்தத்துக்கு செல்லவேண்டும் என்று புலிகள் அடம்பிடிக்கும் வரை, எந்தவிதமான செயலையும் எப்படியும் ர்லிகள் செய்வார்கள்;. ஒரு நேர்மையான போராட்டத்துக்கு யாரும் இலகுவாக குற்றம் சாட்டமுடியாது. குற்றங்கள் பொய்யாகிவிடும். இங்கு பொய்களே போராட்டமாகி, போராட்டத்தில் அவை கறைபடிந்த கிடக்கின்றது. உண்மையைக் கண்டறிவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகின்றது.
பி.இரயாகரன்
08.12.2005

Anonymous said...

//திருகோணமலை படுகொலையில் மிக முக்கிய கேள்வி உண்டு. பல்கலைக்கழகத்தில் கற்றக் கொண்டு இருக்கம் மாணவர்களும் (கண்டி பல்கலைகழகத்தில் தற்போது பாடம் நடந்த கொண்டிருக்கும் காலத்தில்), பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களும் ஏன் சந்தித்து கொண்டனர்.

ஒன்று தாக்குதலுக்கா அல்லது ராக்கிங்கா. இதில் ஒன்று நடந்துள்ளது. தாக்கதலக்கு அல்ல என்பத பொதுவாக ஊகிக்க முடிகின்றது. ராக்கிங் என்றால் அவர்கள் மீது இராணுவமல்லாத தாக்குதலும் சாத்தியம்//

அண்ணாச்சி உங்க எழுத்துக்கள் புலிகளுக்கு எதிராக தான் இருக்கிறது. அதை பற்றி கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் மேற்சொன்ன மாணவர்களின் படுகொலை சம்பந்தமாக உங்கள் கற்பனை புனைவுகளை/அல்லது உங்களது பொய் பித்தலாட்டத்தையும் சொல்லவேண்டியது அவசியமாகிறது.

மணவர்கள் பலகலைகழக மாணவர்களுக்கு அங்கு என வேலை என்கிறீர்கள்??? நல்ல கேள்வி தான்.

அவர்கள் இன்னும் பலகலை கழகம் போகவில்லை. அதாவது இந்தவருடம் கடந்த வருட்ம் நடந்த பரீட்சையில் தேறியவர்களுக்கு இன்னும் பலகலைகழக கற்கை நெறி தொடங்கவில்லை. வெட்டுபுள்ளிகள் தான் வெளியாகியுள்ளன.

செய்திகளின் படி அவர்கள் கோனேஸ்வரா இந்துகல்லூரி மாணவர்கள் என்றே தெரிய வருகிறது.

புதினத்தில் இருந்து கீழ்வரும் பகுதி.

//படுகொலை செய்யப்பட மாணவர்கள் திருகோணமலை சிறீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் விவரம்:

1. சண்முகராஜா கஜேந்திரன்

2. லோகிதராஜ ரோகன்

3. தங்கதுரை சிவானந்தா

4. யோகராஜா ஹேமச்சந்திரா

5. மனோகரன் ராஜிகர்

படுகாயமடைந்த மாணவர்கள்:

1. யோகராஜா பூங்குழலோன் (சென். ஜோசப் கல்லூரி)

2. பரராஜசிங்கம் கோகுல்ராஜ் (சிறீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி)

மாணவர்கள் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து திருகோணமலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று மூடப்பட்டுள்ளன.


ஒரே ஒரு கேள்வி ஏன் மாணவர்கள் ஒன்றாக சென்றார்கள்?????/
உங்கள் ,பதின்ம வயதின் இறுதியில் நீங்கள் உங்கள் கல்லூரி நண்பர்களுடன் வெளியில் சென்றதே இல்லையா???
அல்லது எல்லவற்றையும் புலிகளுக்கு எதிராக திருப்பியே ஆக வேண்டு அம்மாணவர்கள் கூட்டமாக சென்றதற்கு உங்கள் கற்பனை/பொய் புரட்டுகட்டி புலிகள் மீதுபழி போடுகிறீகளா??/

இனி எந்த பதின்ம வயது மாணவர்கள் நட்பர்களுடன் குட்டாக செறாலும் அதற்கு உங்களிடம் ஒரு காரணம் இருக்கும் புலிகளுடன் அதற்கு முடிச்சு போட

வாழ்க உங்கள் புத்திசீவி தனமான ஆராய்ச்சிகள்.......

தொடருங்கள் உங்கள் மாரடிப்பை.......

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தமிழரங்கம் said...

நங்கள் கற்பனையில் உங்:களைப் போல் எதையும் திரிப்பதில்லை. செய்திகளில் வருவதை எடுத்து அதில் இருந்து விடையத்தின் உண்மைத்தன்மைகளை ஆராய முற்படுகின்றோம்;. புலிகளின் இணையமாக உள்ள நிதர்சனம் டொட்;கொமில் வந்த செய்தியை அப்பயே தருகின்றோம். மற்றும்படி மக்களை நேசிப்பதால் எம்மை நீங்கள் புலியெதிர்ப்பதாக கூறினால் அப்படியே அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இதேயே புலியெதிர்ப்பு அணி எம்மை புலி என்கின்றது. அதை அப்படியே ஏற்,க் கொள்வோம்.

நிதர்சனம்டொட்கொம் தரும் செய்தி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.

"மொறட்டுவை பல்கலைக்கழக மாணவன் கொலை - மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவ சமூகம் கவலை.

ஜ சனிக்கிழமைஇ 7 சனவரி 2006 ஸ
மொறட்டுவை பல்கலைக்கழக மாணவன் தங்கத்துரை சிவானந்தா, திங்கட்கிழமை இரவு 7.55 மணியளவில் திருகோணமலை பெரிய கடற்கரை காந்திசிலை அருகில் சிறீலங்கா இராணுவத்தால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர் மொறட்டுவை பல்கலைக்கழக கணிய அளவையில் பிரிவைச் சேர்ந்த முதலாம் வருட மாணவன் என்பதுடன் புதுவருட விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்கு சென்ற போதே இக் கொடுர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் 31 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற விரிவுரைகளில் பங்குபற்றிய பின்பே திருகோணமலை திரும்பினார் என்பதுடன் திங்கட்கிழமை விரிவுரைகள் இல்லாத காரணத்தினால், திங்கள் இரவே மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பவும் திட்டமிட்டிருந்தார். இது குறித்து மொறட்டுவை பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தமிழ் மாணவ பிரதிநிதிகளும் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்பு கொண்ட போது, தனக்கு உத்தியோக பூர்வ கோரிக்கை விடுக்கப்படும் பட்சதில் இம்மாணவனது பல்கலைக்கழக கல்விப் பதிவுகள் தொடர்பான விபரங்களை பல்கலைக்கழகம் உறுதிப்படுத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அப்பாவி மாணவனான இவர், விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என வெளியாகியிருக்கும் செய்திகள் கோபமூட்டுபவையாகவும், இவருக்கான அஞ்சலி நிகழ்வுகளை கூட பல்கலைக்கழகத்தில் நடாத்த முடியாத அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இவரது அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த மொறட்டுவை பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையிலான உறவு மேலும் விரிசலடைந்துள்ளது. இதற்குக்காரணம் தமிழ் மாணவ சமூகமானது பெரும்பான்மை சிங்கள மாணவர்களைக்கொண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்தி உடனடியாக ஒரு செய்தியையோ ஆவணத்தையோ வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. படுகொலை செய்யப்பட்ட மாணவன் எமது பல்கலைக்கழக மாணவன் இம்மாணவனுக்கு அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரும்புகின்றபோதிலும் நிர்வாக அழுத்தங்கள் காரணமாக நடாத்த முடியவில்லை இம்மாணவனுக்கு அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த அனுமதி வழங்கப்படுமிடத்து...."

பி.இரயாகரன்
08.1.2006

Anonymous said...

The execution style killing of five Tamil students, all under 20 years of age, on Monday at Dock Yard Road in Trincomalee town, was allegedly carried out by “a team of Police Special Task Force (STF) commandos,” said the Situation Report column of Sunday Times in its 8th January Sunday edition. The paper further said the deployment of the STF was ordered by “a retired police official who has now been named as an advisor in the Defence Ministry,” and the order was issued during the period “when Defence Secretary Gothabaya Rajapakse was away in India accompanying his brother, President Mahinda Rajapakse.”

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நிதர்சனம் தரும் செய்தி

பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சுட்டுக்கொலை.

ஞாயிற்றுக்கிழமை 8 சனவரி 2006 ஜ செனிவிரட்ண

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் இன்று பிற்பகல் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லபட்டடுள்ளார். சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இவருடைய வெதுப்பகத்திற்குள் பிரவேசித்த ஆயுதாரிகள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வெதுப்பக உரிமையாளர் பெயர் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.தாக்குதலை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களே நடத்தியிருப்தாக சந்தேகிக்கப்படுகிறது. இவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணமும் இதுவரை அறியமுடியவில்லை.

புதினம் தரும் தகவல்

பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவ உளவாளி சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை 8 சனவரி 2006இ 19:14 ஈழம் ஜம.சேரமான்ஸ

யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவ உளவாளியான சின்னராசா இராசையா (வயது 47) இன்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.
பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளரான சின்னராசா இராசையா மீது வெதுப்பகத்திற்குள் வலுவில் உள்நுழைந்த அடையாளம் தெரியாதவர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த வெதுப்பகம் சிறிலங்கா இராணுவத்தின் 52-4 ஆம் படையணியின் தலைமையகத்துக்கு 100 மீற்றர் அருகாமையிலும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது.
சின்னரா இராசையாவின் உடலை மந்திகையில் உள்ள பருத்தித்துறை அரச மருத்துவமனைக்கு சிறிலங்கா காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.
கடந்த 2 நாளில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்டுள்ள 3 ஆவது துப்பாக்கிச் சூடு இது. கடந்த வியாழக்கிழமை இரவு ஈ.பி.டி.பி. ஆதரவாளரான மதன் சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஐயாத்துரை பாஸ்கரன் ஆகியோர் பருத்தித்துறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//, காதுக்குள் வைத்து தூப்பாக்கியால் சுட்டதாக கூறுகின்றது. இப்படி எந்த செய்தியும் வந்தது கிடையாது. இப்படி விவாதிக்க முடியாது.//
அண்ணாச்சி என்ன செவது உங்கள் மரடிப்புக்கும் புரட்டுக்கும் சில தகவல்கள் செய்திகளில் வரவில்லை என்று சாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். எப்படியாவது புலிகள் தான் செய்தார்கள் என நிறுவ வேண்டிய அவசியம் உங்களுக்கு.

எதுக்கும் கீழே உள்ள செய்தியை வாசியுங்கள் அண்ணாச்சி.


Initially, the military maintained that the five Tamil youth had died when a grenade in their possession exploded accidentally. But medical examination of the bodies revealed that they had each been shot through the head.


by Amantha Perera

http://www.ipsnews.net/news.asp?idnews=31692

நீங்கள் ஒருவர் மட்டும் தான் அரிச்சத்திரனின் அடுத்தவரிசு போலவும் அனைத்து ஊடகங்களுக் பொய்யை புண்ர்ந்து எழுதுவதாகவும் சொல்லுகொள்ளும் உங்கள் அதிமேதமையை என்றும் பாராட்டவேண்டும்.

தொடர்ந்து மாரடியுங்கள்.

Anonymous said...

"yato" enpavate,unkal manach sadsijai thoddu sollungal,puli otu viduthalai pootada amaipputhan enru.kumpida kumpida thamilatai savaddi eduppathu eppothu puliya? elankai atasankama? thitumalai maanavatai suda puli armiku banam kodduthu nadaththijathka makkal mathiyil santhekam ullathai neer ariveeta?unkaluku viduthalai thevai enraal muthali konsamenumsinthijunkal. unkal moli,nilam ,enam vala vendum enral pulijai putinthu thooki erijunkal.kalam unkalukaka kathitupathu ellai.

ஈழநாதன்(Eelanathan) said...

ரயாகரன் உங்களின் நீண்ட கட்டுரை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.அது வீண்வேலை என நினைக்கிறேன் ஆனால் நிதர்சனம் பற்றிய உங்களின் தகவல்கள் இருவேறு இடங்களில் இருவேறுவிதமாக உள்ளன.

முதலில் கட்டுரையில் புலிகளின் ஆதரவு இணையத்தளமான நிதர்சனம் என்றும்.பின்னர் பின்னூட்டத்தில் புலிகளின் இணையத்தளம் என்றும் குறிப்பிடுகிறீர்கள்.

நிதர்சனம் என்பது புலிகளின் திரைப்படப்பிரிவினரின் பெயர் ஆனால் நிதர்சனம் இணையத்தளமானது அவர்களுடைய இணையத்தளம் அல்ல.நான் கூட வேண்டுமானால் சமர் என்றொரு இணையத்தளம் ஆரம்பித்து எதை வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கு நீங்கள் பொறுப்பாளியாக முடியுமா?

நிதர்சனம் இணையத்தளத்திற்கும் தங்களிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று புலிகளின் திரைப்படப் பிரிவைச் சேர்ந்த சேரலாதன் தெரிவித்திருக்கிறார்.இதையே சயந்தனும் ஒரு முறை சொன்னதாக நினைவு.

மற்றையது புலிகள் ஆதரவு இணையத்தளமென்ற கருத்து.

புலிகளுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள் என்பதற்காகவே அவர்களை புலிகளின் உத்தியோகபூர்வப் பேச்சாளர்களாகக் கொள்ளமுடியுமா?ஈ.பி.டி.பியினரின் கட்டுரை ஒன்றை உங்கள் இணையத்தளத்தில் பிரசுரம் செய்கிறீர்கள் என்று வைப்போம்.உங்களை ஈபிடிபி ஆதரவாளரான ரயாகரன் என்றழைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா.அல்லது உங்களை ஈபிடியின் உத்தியோகபூர்வப் பேச்சாளராகக் கொள்ள முடியுமா?

பொய்யும் புனைவுமாக செய்திகளைத் தருவதற்கு நிதர்சனத்திற்கு காரணம் இருக்கலாம்.ஆனால் புதினம்,தமிழ்நெட் போன்றவை இருக்க நிதர்சனத்தில் தான் ஆதாரம் தேடுவேன் என்று நீங்கள் சொன்னால் அதற்கும் காரணமிருக்குமென்று சந்தேகிக்கிறேன்

தமிழரங்கம் said...

நேர்மையும் நீதியுமற்ற உத்தமர்களே

எவ்வளவுதான் தேசியத்தின் பெயரில் தூசணத்தால் நீங்கள் புணாந்த போதும், மருத்துவ அறிக்கை என்ற ஒன்றை பார்க்க அனுப்பிய உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஆனால் இந்த அறிக்கையின் உண்மைத் தன்மை என்பது சந்தேகத்துக்குரியது. உதாரணத்துக்கு ஷஷபாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியலில் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்பகட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது.|| என்ற நிதர்சனம் டொட்கொம் அறிக்கை எம்முன் மருத்துவ அறிக்கையாக உள்ளது. எதையும் முழுமையாக உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு இடையில் கத்தோலிக்க மதகுருமார் மருத்துவ அறிக்கையை வெளியிடும்படி கேட்டள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன! அப்படியாயின் உங்கள் மருத்துவ அறிக்கை?

இதுவரை நீங்கள் குறிப்பிட்ட மருத்துவ அறிக்கை தமிழில்; வெளிவரவில்லை. என்? தாக்குதல் பற்றி செய்திகள் (புலி ஆதாரவு, புலியெதிர்ப்பு) அனைத்தும், துப்பாக்கி சூடு மட்டும் நடந்தாக குறிப்பிடவில்லை. அவர்கள் யாரும் காதுக்குள் வைத்து சுட்டதாக குறிப்பிடவில்லை. சுடப்பட்டவர்கள் தலையில் சுடப்பட்டு இருந்தாவும் கூட, எனது செய்தியிலும் வரவில்லை. புலிகள் இப்படி உத்தியோகபூர்வமாக கூறியதாக நாங்கள் கூறவில்லை. பெயர் ஊர் தெரியாத ஒருவர், காதில் சுட்டதாக கூறியதற்கு ஆதாரம் கிடையாது என்று கூறியிந்தேன். காதில் வைத்து சுட்டவர்களுக்கு தான் அந்த நினைவு எப்போதும் எங்கும் வரும்.

ஈழநாதன் அவர்களுக்கு

விமசிப்பது எப்படி வீண் வேலையாகும்?; அதைவிட்டுவிட்டு காதுக்குள் வைத்து சுட்டால் எல்லாம் சரிவரும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகின்றது. அது தான் தேசியத்தின் வழமையான தீர்வும், பதிலும். எங்கே எப்போது தமிழ் தேசியம் விவாதித்துள்ளது. மண்டையில் போடவதே அவர்களின் அரசியல் தீர்வு. அதையே நீங்கள் நினைப்பதில் என்ன தவறு.

மற்றும் நீPங்கள் நிதர்சணம் டொட்கொம் புலிகளினது அல்ல என்கின்றீர்கள். இப்படி நீங்கள் எப்படிக் கூறமுடியும்;? அவர்கள் இருவரும் கூறவத கூட உண்மையானதல்ல. நாங்கள் இரண்டு விதமாக பயன்படுத்தியுள்ளோம் என்கின்றீர்கள். இது மக்கள் படை மாதிரித் தான்;. புலிகள் வேறு மக்கள் படை வேறு என்ற மாதிரிதான்;. நீங்கள் இரண்டாக பயன்படுத்துவது மாதிரி, நாங்களும் இரண்டாகவே பயன்படுத்துகின்றோம். ஆனால் இரண்டும் ஒன்று தான்;. பினாமிகளாக இருப்பதுதான் இடைவெளி. உங்களுக்கு துணிவிருந்தால் நிதர்சணத்தின் பொய்யை, வக்கிரத்தை கட்டுரையாக்கி தொடர்ச்சியாக பதிவிட்டு விவாதியுங்களேன்;. தேசியத்தை இது கொச்சபை;படுத்துவதாக கூறி அம்பலப்படுத்துங்கள். புலியிடம் அதைச் செய்ய கோருங்கள். அதைதான் நீங்கள் முதல் செய்யவேண்டும். அதன் பின் இதை எங்களிடம் சொல்லுங்கள், அதில் தர்க்கம் உண்டு.

இன்று குறுந்தெசிய புலித் தேசிய கருத்துகளை தீர்மானிப்பதில், இந்த இரண்டு இணையமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முழு புலிக் கருத்துத் தளமும் இதை சார்ந்து வெளி வருகின்றது. வனோலிகள், தொலைக் காட்சிகள் கூட இதை அப்படியே மீண்டு வாந்தியெடுக்கின்றன.

பி.இரயாகரன்
10.01.2005

Anonymous said...

"tesija thalaivatum aduthavan kathalijai [mathivathani]punanthavarthane. athuthan thalaivatin valijil thondan aduthavan manaivijai vidu enkinraan.pulikale,ethai poola kilarivida vaikateer. naattam thanka maddeerkal.

ஈழநாதன்(Eelanathan) said...

ரயாகரன் விமர்சிப்பது வீண்வேலை ஏனென்றால் செவிடன் காதில் சங்கூதுவது ஏன் வீண்வேலையோ அப்படித்தான் இதுவும்.

நிதர்சனத்திற்கும் உங்கள் தமிழரங்கத்திற்கும் எந்தவித வித்தியாசமுமில்லை எனக் கருதுகிறேன்.நிதர்சனத்தின் பொய்களை கட்டுடைப்பதைவிட மாற்றுக்கருத்தாளர் என்ற பெயரில் ரோச்சடித்துப் பார்ப்பது பற்றியெல்லாம் பேசும் உங்கள் உண்மை முகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருதலும் தமிழ் வலைப்பதிவுகளில் உங்களை எதிர்கொள்ளுவதும் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.

தர்சினி கற்பழிக்கப்பட்டபோது புலிகள் ரோச்சடித்தார்களா என்று கேட்கும் உங்களை யோகேஸ்வரி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபோது நீங்கள் விளக்குப் பிடித்தீர்களா என்று கேட்க எவ்வளவு நேரம் ஆகும்.

திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அப்படி நடந்திருக்கலாம் இப்படி நடந்திருக்கலாம் என்று சாத்தியங்கள் கண்டுபிடிக்கும் நீங்கள் ராசதுரை கொல்லப்பட்டபோது மட்டும் அவர் ராணுவத்தாலோ அல்லது ராணுவக் குழுக்களாலோ கொல்லப்பட்டிருக்கும் சாத்தியத்தை ஏன் யோசிக்கவில்லை.

ரயா உங்கள் வயதுக்கும் எனது வயதுக்கும் நிறைய வித்தியாசமுண்டு என்னைப் பார்த்துத் துணிவிருந்தால் என்று கேட்கிறீர்களே அந்தத் துணிவிருப்பதால்தான் பெயரும் முகவரியும் படமும் போட்டு பதிவெழுதுகிறேன் துணிவில்லையென்றால் ஐரோப்பிய நாட்டில் ஒளிந்திருந்து ஜனநாயகம் பேசிக்கொண்டிருந்திருப்பேன்

உங்களிடமும் சிறீரங்கனிடமும் கொஞ்சமாவது நம்பிக்கை மிச்சமிருந்தது எனது காலத்தை வீணாக்காமல் அதைப் பொய்யாக்கியமைக்கு நன்றி(இதற்காக தனிப்பதிவெல்லாம் போட்டு விளக்கமளிக்கத் தேவையில்லை நன்றி வணக்கம்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தமிழரங்கம் said...

வணக்கம்

எனக்கு எதிராகவும், எனது குடும்பத்துக்கு எதிராகவும் புரித் தேசியத்தின் பெயரில் தூசணத்தால் பதிவிடுபவர்கள் எதிராக, அதே பாணியில் அதற்கு பதில் அளிப்பவர்கள் அதை தவிர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டுகின்றேன். முடிந்தால் கருத்தால் பதிலளியுங்கள். அது ஆரோக்கியமானது. தேசியத்தின் பெயரில் தூசணத்தாலான பதிவுகளை தொகுத்து, ஒரு பதிவு போட்டால் என்ன என்று யோசிக்கின்றேன். எமது தேசியம் எங்கே போகின்றது என்பதை அது புரியவைக்கும்.

தரிசினிக்கு கொலையை கற்பழிப்பை எதிர்ப்பதாக நினைத்து கருத்திடுபவர்கள், மற்றையை பெண்களை அதே வழியில் இழிவுபடுத்தும் இவர்கள் எப்படி நேர்மையாக தர்சினிக்க உண்மையாக இருப்பாhகள்;. உண்மையில் தரிசினி போன்றோரை கற்பழிப்போர் இராணுவத்தில் இருந்தாலும் சரி, மக்கள் படையில் இருந்தாலும் சரி, இந்த பதிவில் பெண்களை யார் எல்லாம் வன்முறைக்குள்ளாக்கின்றார்களோ, அவர்கள் தான் இது போன்றவறை செய்கின்றனர். ஒருபுறம் ஒரு பெண்ணின் மீதான வன்முறைக்கு எதிராக கூக்கூரல் இட்டுக் கொண்டு, அதே நேரம் மற்றைய பெண்ணிகள் மீது வன்முறை செய்வதாக கூறவது இங்கு நிகழ்கின்றது. பாலியல் வன்முறையாளன் இங்கும் உள்ளான்.

ஈழநாதனுக்கு

விடையத்தை விவாத எல்லைக்குள் நடத்த முனைய வேண்டும். எனது கட்டுரை தவறு இருப்பின், அலலது கேள்வியிருப்பின் அதற்குள் விவாதிக்க வேண்டும்;.
1. மக்கள் படையும் புலியும் ஒன்றா இல்லையா என்பதை தெளிவாக பதிலளிக்க வேண்டும்.
2. புலிகள் வன்முறையைத் துண்டும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்களா?
3.புலிகள் தாம் செய்வதை நேர்மையாக அறிவிப்பவாகளா?
இப்படி பலவற்றை நாம் கேட்கமுடியும்;

இப்படி நேர்மையாக பதிலளிக்கும் அரசியல் பலம் புலிகளிடம் இருந்தால், இந்தளவுக்கு மனித அவலம் நிகழாது. இந்தளவுக்க நாங்கள் விவாதிக்க வேண்டிய விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாம் புலிகளை ஆதாரிப்பவாகளாக அல்லது பங்களியாகவோ கூட நாம் இருந்திருக்கமுடியும்.

விவாதம் எனக்கும் உங்களுக்கும் இடையில் எங்கிருந்த தொடங்குகின்றது. நீங்கள் புலியுடன் எதோ ஒரு விதத்தில் இணைந்து நிற்கின்றிர்கள். நாங்கள் அப்படியல்ல. தேசியம் கூறுவது போல் துரோகி, எட்டப்பன், கருணாவின் ஆள், டக்கிளசின் ஆள் இப்படி எதையெல்லாம் கூட நீங்கள் எங்களுக்கு முத்திரை குத்தலாம்;.

ஆனால் நாங்கள் தமிழ் மக்களின் தேசியத்தை தெளிவாக உயர்த்துபவர்கள். புலிகள் அதற்கு துரோகம் செய்வதாக பல ஆதாரபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளோம். இயக்கங்களின் மக்கள் விரோத தன்மைக்கு எதிரான எனது போராட்டம், 1980 களில் தொடங்கியவன் நான்;. அந்தவகையில் புலிகள் படுகொலைகள் கூட்டம் கூட்டமாக தொடங்கும் வரை, அந்த மக்கள் மத்தியில் பல தளத்தில் தலைமை தாங்கியவன்;. நாங்கள் தவறு இழைக்காதவர்கள் அல்ல. எமது இணையத்தில் பாடல் மற்றும் உரைபகுதியில் ஒளி மற்றும் ஒலியில், அவைகள் பற்றி ஆதாரங்களைப் பார்க்க முடியும்;. புலிகளை ஆதாரிப்பது தான் தேசியம் என நீங்கள் கொண்டிருக்கும் வரையில், மற்றவர்களை ஆயுத வன்முறை மூலம் தீர்வு காணும் வரை, எமக்கு இடையில் நட்புரீதியான இணக்கத்தக்கு யார் தடையாக உள்ளனர். நான் அல்ல உங்கள் புலித்தேசியம் தடையாக உள்ளது.

நல்லதைச் செய்ய, நல்லதை நினைக்க, மக்களை நேசிக்க விரும்பும் ஒருவன், அதை நினைக்கும் யாருடனும் நட்பைக் கொள்ள முடியும்;. தேசியம் அதை நினைக்கவில்லை.

அடுத்து நீங்கள் நான் கூறியதை திரித்து விடுகின்றீர்கள். துணிவிருந்தால் என்ற உள்ளடகத்தை, உடல் வலு மற்றும் வயதுக்குள் விடைத்தை போட்டு குழைத்துட்ட விரம்புகின்றீர்கள்;. நான் கூறியது துணிவிருந்தால் நிதர்சனம் டொட்கொம்க்கு எதிராக அதன் பொய்க்கு எதிராக எழுதுங்கள் என்றே கேட்டு இருந்தேன்;. உண்மையான தேசியத்தை சிதைக்கும் அதன் அருவடித்தனத்தை அம்பலம் செய்து, உண்மையான தேசித்தை உயர்த்தக் கோரியிருந்தேன். காலை எழும்பியவுடன் வெளிவரும் அனைத்து செய்திகளும் இந்த நிதாசனம் டொட்கொம் செய்தியால் தான் சமூத்தையே வன்முறைக்குள்ளாக்கின்றது. எனது கட்டுரையை நீங்கள் தவறானது என்று கருதினால் கூட, அதை விட ஆபத்தானது, அபயமானது நிதர்சனம் டொட் கொம் செய்தி. எனது கட்டுரை கூட அதை ஆதாரமாக கொண்டு விளக்கியுள்ளது. எனது கட்டுரையை பத்துபேர் அதாவது நீங்களும் நானும், அந்த தூசணப் பேர்வழியும் தான் படிப்hர்கள்;. ஆனால் நிதர்சனம் டொட் கொம் பர லட்சக்கனக்கான மக்களுக்கு அன்றாடம் செல்லுகின்றது. எமது தவறுகள் என்று நீங்கள் கருதுவதை எழுதுவது போல், மற்றயவர் தவறுகளை நீங்கள் எழுதவதில்லை. குறிப்பாக புலித் தேசியத்தின் தவறுகள் பற்றி மௌனம்; தவறுகளை தவறு என்று எழுதுங்கள். அந்த துணிவைக் கோருகின்றேன்.

ஐரோப்பாவில் ஒளித்திருந்து ஜனநாயகத்துக்காக பதிவு போடுவதாக கூறுகின்றிர்கள். இது தான் ஜனநாயகத்தக்கு கதி என்றால், அதைத் தான் செய்ய முடியும் நண்பரே. வீம்புக்கு வன்னியில் நின்ற ஜனநாயகம் பேசமுடியும்! நீஙகள மக்களின் ஜனநாயகத்துக்காக துணிவிஐந்தால் கருத்திடுங்களே. அதை வன்னியிலும் செய்யுங்கள். அப்போது நாங்கள் உங்களுக்கு மண்டியிடத் தாயராக உள்ளோம்;.

நாங்கள் எதையும் புதிதாக கண்டுபிடித்து செய்தியிடவி;ல்லை. நடப்பதை தொகுத்து அதில் உள்ளவற்றை பதிவிடுகின்றோம். உங்களைப் போன்றவர்கள் கருதுவது போல், நாங்கள் புலிக்கு எதிரானவர்கள் அல்ல. மக்கள் தான் புலிக்கு எதிராக உள்ளனர். அதனால் தான் மக்களை கண்டு அஞ்சும் புலிகள், மக்களின் ஜனநாயகத்தை மறுதலிக்கின்றனர். ஒவ்வொரு மக்களும் புலிக்கு வெளியில் சிந்திக்கின்றனர். செயலற்ற விரும்புகினறனர். நாங்கள் செய்வதெல்லாம் அந்த மக்களின் குரலாக, அவர்கள் சொல்ல நினைப்பதை தொகுத்து முன்வைக்கின்றொம். வேறு எதையுமல்ல.
பி.இரயாகரன்
11.01.2006

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.