தமிழ் அரங்கம்

Sunday, May 27, 2007

உளவு அமைப்புகள் தான் ரீ.பீ.சீயை இயக்குகின்றது

உளவு அமைப்புகள் தான் ரீ.பீ.சீயை இயக்குகின்றது.

பி.இரயாகரன்
27.05.2007


ந்தியாவின் உளவு அமைப்பான றோவினதும், அதன் கூலிக் குழுவாகவுள்ள ஈ.என்.டி.எல்.எவ் இன் வானொலி தான் ரீ.பீ.சீ. இதை வெளிப்படையாக அறிவித்து இயங்குவது தான் குறைந்தபட்ச நேர்மை. அதைவிடுத்து, அதை மக்களுக்கு மூடிமறைத்து நடத்தும் அரசியல் சதி நீண்டகாலத்துக்கு நீடிக்காது. சதிக் கும்பல் தான் ரீ.பீ.சீ.


இதன் பின் ஜனநாயகம், மக்களின் விடுதலை என்பது எல்லாமே, வடிகட்டிய பொய்யும் புரட்டும். இவையெல்லாம் தானாகவே அதற்குள்ளாகவே புளுத்து அம்பலமாகத் தொடங்கியுள்ளது.


இவர்கள் ரீ.பீ.சீ. ஊடாக ஜனநாயகம் மற்றும் மக்களின் விடுதலையின் பெயரில் சேகரிக்கும் பணம், ஊர் உலகத்தை ஏமாற்ற நடத்துகின்ற அரசியல் வித்தை. ஜெகோவா மதக்கும்பல் மக்கள் தரும் பணத்தில் தான், தாம் பத்திரிகை நடத்துவதாக கூறிக்கொண்டு, ஏகாதிபத்திய பணத்தில் மதவித்தை காட்டுவது போல் தான் இதுவும்.


ரீ.பீ.சீக்கு ஜனநாயக விரும்பிகள் பணம் கொடுக்க விட்டாலும் அது இயங்கும். ஜனநாயகத்துக்கு விரும்பிக் கொடுக்கும் பணம், அவர்களின் பொக்கற் செலவுக்குத் தான் உதவுகின்றது. ரீ.பீ.சீ க்கு இந்தியா இலங்கை உளவு அமைப்புகள் தான், காலத்துக் காலம் பணம் வழங்கியது. இதை நாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்து கூறவில்லை. ஜனநாயகத்துக்காக போராடுவதாக நம்பி ரீ.பீ.சீக்குள் நெருங்கி ஒட்டிக்கொண்டு இருந்த பலரால் இன்று வெளிப்படுத்தப்படுகின்றது. கருணா விவகாரத்தை அரசியலாக கொண்டு உருவான ஈ.என்.டி.எல்.எவ் இன் தீப்பொறி (அன்று இதே தீப்பொறி குழுவுக்கு எதிராக இயங்கியவர்களும், படுகொலைகளை நடத்தியவர்களும்), புளுத்துப்போய் கிடக்கும் ரீ.பீ.சீ. விவகாரத்தைக் மட்டும் கொண்டு வராது.


ரீ.பீ.சீ பின்னால் உள்ள சதி மற்றும் சூழ்ச்சியால் அதிருப்தியுற்று வெளியேறுபவர்கள் தான், சம்பவம் சம்பவமாக பலவற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். ராம்ராஜ்சின் சொந்த ஆடம்பர நலன்கள் பூர்த்திசெய்கின்ற வகையில் பணத்தைப் பெறுவதும், உளவு அமைப்புகளின் தேவையை பூhத்திசெய்கின்ற வகையில் செயல்படுவதும் படிப்படியாக அம்பலமாகி வருகின்றது.


தீவிரமான உள் முரண்பாட்டுடன் இவை படிப்படியாக மெதுவாக கசிகின்றது. ரீ.பீ.சீயில் இணைந்து இருந்தவர்களில் கணிசமானோர் விலகியிருப்பதும், அவர்கள் மற்றொரு வானொலி (வான்முரசு) ஒன்றைத் தொடங்க இருக்கும் செய்தியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தகவலின் சரி பிழைக்கு அப்பால், இது போன்றவறை ரீ.பீ.சீ ராம்ராஜ்சும், அவர் சார்ந்துள்ள ஈ.என்.டி.எல்.எவ் நபர்களும் செய்யக் கூடியவர்கள் என்பதை கடந்காலத்தில் நிறுவியவர்கள். அதற்கேற்ற அரசியலையும், நடைமுறையையும் இன்று கொண்டுள்ளார்கள் என்பது அரசியல் ரீதியாக உண்மையானவை என்பதால், இவை இதை நிறுவ போதுமானவை.


விடை காணமுடியாத பல கேள்விகள், ஆனால் நிச்சயமாக காலம் பதில் சொல்லும்.


1. ரீ.பீ.சீ நிதி எங்கேயிருந்து எப்படி வருகின்றது? (10000 பவுன் மாதம் தேவை என்று பாரிஸ் கூட்டத்தில் ராம்ராஜ் அறிவித்தவர்) மக்கள் அல்லாத வழியில் இருந்து பணம் நிச்சயமாக கிடைக்கின்றது.


2. ரீ.பீ.சீ கடந்தகால செயல்பாடுகளுக்கான பணம் தொடர்பான கணக்கு வழக்குகளை பகிரங்கமாக வைக்க முடியுமா? அங்கு அந்த பணத்துக்கு எந்த கணக்கு வழக்கும் கிடையாது. தனிப்பட்ட பணமாக, ஊதாரித்தனமாக மக்களிடம் இருந்து கிடைக்கும் பணம் கையாளப்பட்டது, கையாளப்படுகின்றது.


3. ரீ.பீ.சீ ராம்ராஜின் ஆடம்பரக் கார் உட்பட (சிறையில் இருந்து வந்த பின் வாங்கிய கார்), அவரின் மனைவியின் ஆடம்பரக் கார் வரையிலான வாழ்க்கைக்கு தேவையான பணம் எங்கிருந்து எப்படி கிடைக்கின்றது. ராம்ராஜ் ஊர் உலகத்தைச் சுற்றுவதற்கும் பணம் எங்கே இருந்து எப்படி வருகின்றது. உழைத்து வாழும் உங்களால் முடியுமா? நிச்சயமாக முடியாது.


4. இந்தியாவில் ராஜன் குழு ரீ.பீ.சீ ஈ.என்.டி.எல்.எவ் இன் வானொலி என்று இந்தியாவிடம் உரிமை கோரியதும், வரதராஜன் குழு அதை தமது என்று உரிமை கோரியதன் பின்னனியும் என்ன? குறிப்பாக அண்மையில் வானொலி மீதான தாக்குதலைத் தொடாந்து, தமது வானொலி டெல்லியில் பணம் கேட்ட போது அவர்கள் கூறிய பதில் என்ன?


5. இலண்டனில் றோவைச் சேர்ந்தவர்களுடன் ராமராஜ் உள்ளிட்ட சிவலிங்கம் நடத்திய அரசியல் சதிகள் என்ன?


6. ரீ.பீ.சீ அலுவலகத்தை சூறையாடியதன் பின், அதை பழுது பார்த்தவர்கள் யார்? புலியைச் சேர்ந்தவர்கள் பழுதுபார்க்க வந்த போது, அங்கு இருந்த ரீ.பீ.சீ ஆதரவாளர்களை வெளியேற்றிய மர்மம் தான் என்ன?


7. ராம்ராஜ் சுவிஸ் சிறையில் இருந்தபோது, (அதற்கான காரணத்தை இதுவரை தெரியப்படுத்தாமல்) வன்னியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் என்ன? அதன் பின் புலியை விமர்சிப்பதை மட்டுப்படுத்தக் கோரிய மர்மம் என்ன?


வன்னியுடன் நடந்த உரையாடல், கொழும்பில் வைத்து காணாமல் போன ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர் ஊடாக அல்லவா தொடங்கியது! பின் புலிகளின் முக்கிய நபர்களுடாக அல்லவா நடந்தது! அந்த உரையாடல் என்ன? அதன் பின் ராம்ராஜ்சுக்கு பெரும் தொகையான பணம் கைமாறப்பட்டதாக கூறப்படுகின்றது! ஏன்? எதற்கு? இதன் பின்னணியில் கருணா பற்றிய தகவல் புலிக்கு கைமாறப்பட்டதாக கருதப்படுகின்றது!


8. சுவிஸ் சிறையில் தொலைபேசி உரையாடலுக்கான பெரும் தொகைப்பணம் முதல் அங்கு செலவு செய்த கணக்கை பகிரங்கமாக காட்டமுடியுமா? நீங்கள் உழைத்தாலும் அந்தளவுக்கு செலவு செய்யமுடியாத மிகப்பெரிய தொகை.


9. ஜெயதேவன் உடனான முரண்பாடுகள் என்ன? இதன் அரசியல் சாரம் என்ன? அவரால் தொடங்க உள்ளதாக வெளிவரும் வானொலி (வான்முரசு) பெயர் உட்பட பல தகலல்கள் வெளிவந்துள்ளதே! ஏன் என்ன பிரச்சனை? உங்கள் ஜனநாயகத்தில் என்ன வேறுபாடு?


10. ராம்ராஜ் ஈ.என்.டி.எல்.எவ் இன் உறுப்பினர் என்பதும், அதன் சார்பில் இயங்குவதானே ரீ.பீ.சீ என்பதையும் ஜனநாயகத்தை விரும்புவர்களுக்கு மூடிமறைப்பது ஏன்?


11. அண்மையில் கருணா குழுவுக்குள்ளான முரண்பாட்டில் ஈ.என்.டி.எல்.எவ் க்கு சம்பந்தம் இருந்ததையும், அதை ரீ.பீ.சீ மூடிமறைத்ததும் உண்மையல்வா?. உளவு அமைப்புகளில் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. (பார்க்க தீப்பொறியை)


12 மெதுவாக வெளிவரும், ரீ.பீ.சீ க்கு தூசணத்தினால் வரும் தொலைபேசி உரையாடல் சத்தத்தை வானொலிக்கு நிறுத்திய பின் நீங்கள் அவர்களுடன் என்ன உரையாடுகின்றீர்கள்? ராம்ராஜ் அதை விடக் கேவலமாக தூசணத்தில் அவர்கள் வழியில் தொலைபேசியில் உரையாடுகின்றவர்கள், ஜனநாயகத்தை மீட்கப் போகின்றீர்கள்.! இதை நாம் கூறவிலை அதை நம்பிச்சென்ற ஜனநாயக சக்திகளே ஆச்சரியப்படக் கூடியளவுக்கு இப்படி நடந்த சம்பவங்களை கண்டு அதிருப்தியுடன் வெளிப்படுத்தியுள்ளனர்!


13. சுவிஸ் ஜெயிலில் இருந்து மீண்ட பின், பல புலிக் குடும்பங்களுடன் சேர்ந்து நடத்திய விருந்துகளின் அரசியல் பின்னணி என்ன?


14. ரீ.பீ.சீயுடன் நெருங்கி இருந்தவர்கள் முரண்பட்டவராக மாறிய போது, வழமை போல் பொம்புளை தொடர்பு பற்றி ரீ.பீ.சீயும், ஈ.என்.டி.எல்.எவ் பரப்பும் தொலைபேசி அவதூறுகளின் அரசியல் பின்னணி என்ன?


15. ராம்ராஜ்சுக்கும் இந்தியா உளவு அமைப்பான றோவுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அவரால் கூறமுடியமா? உங்களால் யாராலும் அதைக் கூறமுடியுமா?


இப்படி பற்பல. ரீ.பீ.சீ உள்ளார்ந்த சதிகள் பற்றியும், உள்ளார்ந்த நிதி மோசடி உட்பட பல தகவல்கள் கசிகின்றது. இந்த தகவல்களின் சரி பிழையை பரிசோதிப்பதற்குரிய அவசியம் கிடையாது. ரீ.பீ.சீ ராம்ராஜ் போன்றவர்கள் அப்படிபட்ட மோசடிக்காரர்கள். அத்துடன் சந்தர்ப்பவாதிகள். பணத்துக்காக யார் காலையும் நக்கும் அரசியல் வியாபாரிகள். கடந்த காலத்தில் இதை பலமுறை நிறுவியவர்கள். நிகழ்காலத்தில் அதை நிறுவி வருபவர்கள். இதை அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதை சொல்வதற்கு யாருக்கு எந்த துணிச்சலும் கிடையாது.


ஒரு ரவுடியாக வாழ்ந்த ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன், ரவுடித்தனம் மூலம் தான் புளாட்டில் இணைந்தவன். தொடர்ந்து இயக்கத்திலும் அதையே செய்தவன். இன்றும் அதையே செய்பவன். யாடிக்கு ஏற்ற மூடி தான் ரீ.பீ.சீ ராம்ராஜ். இவர்களிடம் எந்த அரசியல் நேர்மையும், கடந்த காலத்திலம் சரி நிகழ் காலத்திலும் சரி கிடையாது. இல்லை அவர்கள் நேர்மையானவர்கள் என்று சொல்லும் துணிவுள்ள அரசியல் நேர்மை யாரிடமும் எந்தக் கொம்பனிடமும் கிடையாது.


இப்படிப்பட்ட ரீ.பீ.சீ. புலிகளிடம் கணக்கு கேட்கின்றனர். உங்களால் முடியுமா? உங்கள் கணக்கு வழக்கை பகிரங்கமாக முன்வைக்க! ஜனநாயகத்தின் பெயரில் மக்களின் பணத்தை கணக்கின்றி ஊதாரித்தனமாகவே செலவு செய்கின்றனர். இதற்கு பெயர் மக்கள் வானொலி. மக்களால் நடத்தப்படும் வானொலி. புலிகளை விட மோசமான வழியில், மக்கள் ஜனநாயகத்தை நம்பி தரும் பணத்தோடு, உளவு அமைப்புகள் தரப்படும் பணத்தையும் கொண்டு அரசியல் மோசடி செய்வது நிகழ்கின்றது.


ரீ.பீ.சீ யால் தனது கடந்தகால வரவு செலவை வைக்கமுடியாது. படுமோசமான மோசடிகள், நபர்களுக்கு இடையிலான சதிகள், குத்துவெட்டுகள் பல அரங்கேறுகின்றது. ரீ.பீ.சீ வானொலி ஜனநாயகத்தை மீட்பதாக நம்பி சில அப்பாவிகள் கொடுக்கும் பணம் அதற்கு எதிராகவே பயன் படுத்தப்படுகின்றது. இந்தியாவின் உளவு அமைப்பான றோவின் செயல்பாட்டுக்கு ஏற்ப அரசியல் விபச்சாரம் செய்யப்படுகின்றது. காலம் அதை தெளிவாக அம்பலப்படுத்தும்.


ரீ.பீ.சீ பின்னால் ஓடுகாலியாக அரசியலை துறந்து ஓடிச் சென்றவர்களின், அதிருப்திகள், பையப் பைய வெளிவருகின்றன. பல இழிவான மோசடியான நடத்தைகள் மிகவிரைவில் சந்திக்கு வெளிவருவதை யாரும் தடுக்கமுடியாது.


ஜனநாயகம் என்ற பெயரில் பாவம் பல அப்பாவிகள். அரசிலை புரிந்து கொள்ள முடியாத ஏமாளிகள். பாவம் ரீ.பீ.சீக்கு பின்னால் அரோகரா போட்டு காவடி எடுக்கின்றனர்.


மிக விரைவில் வெளிவரவுள்ள 'ஜனநாயகத்துக்கு" கான புதிய வானொலி (வான்முரசு) வருகையை அடுத்து பல விடயங்கள் அம்பலமாகும். கருணாவின் மயக்கத்தில் சொக்கிக் கிடந்த பிரமைகளைக் களைய, பிள்ளையான் தேவைப்பட்டது போல், ரீ.பீ.சீ மயக்கத்தை களைய புதிய வானொலி முதல், அதிருப்தியான பல புலம்பல்கள், புறுபுறுப்புகள் பையப் பைய வெளிவருகின்றது.


புலியெதிர்ப்பு கும்பல் பற்றியும், அதில் குறிப்பாக ரீ.பீ.சீ பற்றியும், அதன் ஜனநாயகம் பற்றியிருந்த பிரமைகளை களைவது தமிழ் மக்களின் விடுதலைக்கு அவசியமான நிபந்தனைகளில் ஒன்று.


குறிப்பு: இந்த ஜனநாயக வேஷதாரிகளின் பின் புலப்படும் தகவல்கள் வரவேற்கப்படுகின்றது.


No comments: