தமிழ் அரங்கம்

Tuesday, July 3, 2007

சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

பி.இரயாகரன்
03.07.2007

வாழ்வில் இருந்த அன்னியமாகி நுகர்வு உலகில் சிக்கிவிடும் குடும்பப் பெண்ணால், நடைமறை வாழ்வில் திருத்தியை காணமுடிவதில்லை. அழகு, கவர்ச்சி, ஆடம்பரமுமே அனைத்துமாகி விட, பொருட்களுடனான வாழ்வில் வாழ்வை திருத்திபடுத்த அவளாளேயே முடியாது. இதன் விளைவு என்ன? தன்னை சுற்றி வாழ்வபவர்களின் குறைபாடாகவே அதைக் காண்பதுடன், அதற்குள்ளாகவே அவள் தன்னை ஒழுங்குபடுத்திய ஒரு மனநோயாளியாகி விடுகின்றாள்.

சமூகத்தின் தொடர்ச்சியின்மை எற்படும் போது, அது மிக மோசமான பாதிப்பை பெண்ணுக்கு எற்படுத்துகின்றது. தொடர்ந்து அந்த குடும்ப முழுக்க இந்த பாதிப்பு உருவகின்றது. இந்த வகையில் புலம்பெயர் சமூகங்கள், தனது சமூகத்துடனான சமூகத் தெடர்ச்சியற்று காணப்படுகின்றது. சந்தர்ப்பமும் சூழலும் இனைந்து, சமூகமாக, சமூகத்துடன் இனைந்து வாழ்கின்றதும், வழிகாட்டுகின்ற தொடர்பை இழந்துவிடுகின்றது. அதே நேரத்தில் சமூகத்தின் கூட்டுமனப்பாங்கையும், சமூக மனப்பாங்கையும், புலம்பெயா நாட்டில் உருவாக்கக் கூடிய எந்த ஆக்கப+ர்வமான முயற்சி உருவாகவில்லை. பொதுவான புலம்பெயர் தமிழரின் அரசியல் போக்கு, இதை மறுத்து நிற்பதும், புலம்பெயர் குடும்பத்தின் சிதைவுக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்;.
உண்மையில் முந்தைய தலைமுறை சார்ந்த, சமூகத்தின் வழிகாட்டலை சமூகம் இழந்து போனது. இந்த நிலையில் இலகுவாகவே, உலகமயமாதல் மந்தைக் கலச்சாரம் வெற்றிடங்களை ஆக்கிரமிக்கின்றது. இப்படியாக வீங்கி வெம்பி தள்ளும் உலகமயமாதல் நுகர்வுக்கலச்சாரம், வெற்றிடமான வீட்டினுள் அத்துமீறி புகுந்துவிடுகின்றது. உண்மையில் புதிய நிலைமை, புதிய சூழல், இதற்குள் குடும்பங்கள் சந்திக்கின்ற நெருகடிகள், அவை சரியான வழிகாட்டல் இன்றி அதுவும் தானகவே வீங்கி வெம்பத்தொடங்குகின்றது. இப்படியாக குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது தொலைக்கப்படுகின்றது.

சமூகம் ஆதாரமும், பரஸ்பரம் இணங்கிய வழிகாட்டலைக் கொண்ட சமூக அனுதபமுமற்ற விட்டில் ப+ச்சிகள் தான் இன்றைய குடும்பங்கள். சமூகமாக இணங்கி வாழமுடியாத நிலையே, எமது குடும்ப சூழல்கள். எங்கும் தனக்குள் தானே வீங்கி வெம்பிய தனிமனித சுயநலம் கொண்ட வாழ்வியல் கோலங்கள்.

புலம்பெயர்ந்த ஆண்களை எடுத்தால், பெரும்பாலனவர்கள் இங்கு அவாகள் வரமுன்பு முன்பு எந்த மனித உழைப்பில் ஈடுபடாதவர்களாக இருந்தனர். புலம்பெயர் நாட்டு சூழல், அவாகள் உடனடியாக உழைப்பில் ஈடுபடவைத்தது. இப்படி அதிரடியாக தொடங்கிய வாழ்கையில் கிடைக்கும் பணத்தை, எப்படி எந்த வழியில் பயன்படுத்துவது என்பதில் எற்படும் தடுமற்றங்கள், ஆண்களைச் சுற்றிய பல சமூகச் சீராழிவுகளை உருவாக்கியது. இளமைக்கே உரிய பாலியல் கவாச்சி, ஆபாசம் போன்றவற்றில் எற்பட்ட நாட்டம் முதல், தன்னை மறந்து குடிபோதையில் கிடக்கும் எல்லைவரையில், அவர்களின் வாழ்க்கை சீராழிநத்து கிடந்தது. இந்த சீராழிவுகளில் இருந்து தப்பிபிழைத்தவர்கள் அரிதிலும் அரிது. சமூகத்தை வழிநடத்தக் கூடிய அறிவியல் அரசியல் அறநெறிகள் எமது சமூகத்திடம் காணமல் போனது. அனைத்தும் வன்முறை ஊடாக நோக்கப்பட்டது. அதற்குள் தீர்வுகள் தேடப்பட்டது. ஆண் பெண் உறவுகளில் எற்படும் இணக்கமற்ற நிலையை, வன்முறை மூலம் தீர்வுகாணும் அறநெறி தான் தெரிந்த ஒரு வழியாக இருந்தது. சாதாரணமாக கதைக்க பேசக் கூடத் தெரியாத சமூகமாக, மொழியை வன்முறை கொண்ட ஒன்றாக கரடுமுரடாக மாற்றிவைத்துள்ளது. சரியாக வழிகாட்டல் இன்றி, பிரச்சனைகள் வீங்கின.

இந்த நிலையில் தொழிலை பெறுவதில் இருக்கும் நெருக்கடிகள், புலம்பெயர்வால் எற்பட்ட குடும்ப பிரிவுகள், புலம்பெயர்வு எற்படுத்தி கடன் தொல்லைகள், தங்கி வாழ இடமின்மை, குடும்பத்தை முன்னேற்றுகின்றேன் என்று ஒரு தலைப்பட்சமாக கருதி வாழ்வையே அடமானம் வைத்த வாழ்கை முறைகள், குடும்ப உறுப்பினர்கள் சாத பணம் கேட்டு கொடுக்கும் தொலைகள் என்று பல, ஒருங்கே இனைந்து புலம்பெயர்ந்த ஆண்களின் இயல்பான வாழ்வியல் சார்ந்த உளவியலை அழித்தது. உண்மையில் ஆண்களில் விடலைப் பருவத்தில், வாழ்வுபற்றி அன்னியமாக்கலை உருவாக்கியது. பெரும் சுமையை, சுமக்க முடியாமல் நின்றவர்களையே அனைத்தையும் சுமக்கக் கோரியது. கொஞ்ச நஞ்ச சென்ரிமென்றும் சேர்ந்துவிட்டால், அவர்களாகவே மாடாகி மலடாகி விடுகின்றனர். இதை குடும்பக் கடமையாக கூறிக்கொண்டு, தனது வாழ்கையையே தனக்குள்ளாகவே தாமே அழித்தனர். இது பெரும்பலான ஆண்களின் கதை. எப்போதும் அங்கிருப்பவர் பணம் புடுங்கிகளாக இருக்க, இங்குள்ளவர்கள் கொடுப்பதும் அல்லது தப்பித்து செல்வதுமாக மாறினார். ஒரு கயிறு இழுப்பு அங்கமிங்குமாக நடந்தது. இதற்குள் பந்தம் பாசம், கடமை எல்லாம், பணத்தை வைத்து விலை பேசப்பட்டது.

மறுபக்கத்தில் பணம் புடுங்கிகளாகிவிட்ட குடும்ப உறுப்புகள், இளையவர்களின் பாலியல் பிரச்சனையை தீர்ப்பதில் ஒரு சமூகமாகவே அக்கறை கொள்ளவில்லை. அவர்களாக அதை தேடிக்கொண்டால் தான் உண்டு என்ற பொதுவான நிலை. இளம் வயதுக்கேயுரிய குறுக்கு வழியில் பாலியல் பிரச்னைக்கு வடிகாலைத் தேடினர். புலம்பெயர்ந்தவன் திருமணம் செய்தால் பணம் அனுப்பமாட்டார்கள் என்ற கருதிய எமது சுயநலம் சார்ந்த சமூக மனப்பாங்கு, அiயொட்டிய நடைமுறையும், புலம்பெயா ஆண்களின் திருமணத்தை திட்டமிட்டு தவிர்த்தனர். மருமகளை எதிரியாகவே கற்பனையில் உருவாக்கிக் கொண்டனர். இப்படி ஆணின் இயல்பான இயற்கையான வாழ்வில் பிரசனைகளை நலமடித்தன் மூலம், புலம்பெயர் ஆண்கள் சீராழிவுக்குள்ளனார்கள். இப்படி சமூகம் சார்ந்த பல நெருக்கடிகள். பெரும்பாலனவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியது. பலர் தம்மை மறந்து கிடப்பதையே விரும்பினர். பலர் முழுக் குடிகாராகினர்.

இதைவிட புலம்பெயர் நாட்டில் வாழ்வதற்கு எற்ற விசா இன்மையும், வாழ்வை திட்டமிட்டு வாழ முடியாமையும், அரஜாகத்தனமாக போக்கில் சீராழிதலே வாழ்க்கையாகியது. இப்படி தொடர்ச்சியான பற்பல விடையங்கள்.
இதில் இருந்து விடுபடவும், சூழல் சார்ந்த சந்தர்ப்பங்களும்,, குறுக்குவழியை நாடுவதை தீர்வாக்கியது. பலர் குடிகாரானர்கள். பலர் மீள முடியாத கடளாளியானர்கள். சிலர் மற்றவனை எமாற்றி தட்டி சுட்டித் தின்னம் பேர்வழியானர்கள். சிலர் குறுக்கு வழியில் சம்பதிக்க, குறுக்கே ஓடினார். இப்படிப் பற்பல வகையினராக, பல சீராழிவுகள் உருவானது. ஒரு சமூக அமைபினுள் இயங்க முடியாத வகையில் உள்ளுராகச் சிதைந்தனர். பணம் உள்ளவன் தனது நலம் கருதி அதற்குள் சமூகமாக கூட்டுதைத் தவிர, வேறு எதுவும் இந்த சமூகத்திடம் சொந்தமாக கிடையாது. இவர்களுக்கு தலைமை தாங்கிய அரசியலோ, சாடிக்கேற்ற முடியாகவே இருந்தது. சமூகத்தை ஒழுங்குபடுத்த, வழிகாட்ட, அதனிடம் சமூக சார்ந்த எந்த கண்ணோட்டமும் இருக்கவில்லை.

இப்படிப்பட்ட ஆண்களின் வாழ்வில் ஒரு குறுக்கிடகவே பெண்களின் இறக்குமதி அமைந்தது. அதையொட்டிய திருமணம் என்ற பந்தம், மெதுவாக ஆறயமர புகுந்து கொண்டது. ஆண்களின் அரஜாகமான வாழ்கை முறையில் ஒரு இனைப்பை, ஒரு ஒழுங்குபடுத்தலை எற்படுத்தும் கண்ணியாகவே பெண்ணின் வருகை அமைந்தது. ஆனால் அதை ஒருபோதும் பெண்ணால் உணரப்படவேயில்லை. அந்தளவுக்கு பெண்ணின் சமூக ஆற்றலும், அறிவு முதுர்சியும் இருக்கவில்லை. ஆனால் பெண்ணின் முதல் கடமை அதுவாகவே இருந்தது. பெண்ணின் தன் வருகையின் பின் கட்டியிருந்த விம்பமோ, மிதமிஞ்சி பணம் சார்ந்த போலியான கற்பனை உலகம். இது தகரும் வண்ணம் தான் திருமணங்களும், அதையொட்டிய அதிரடியான வாழ்வும் தொடங்கியது. ஒரு அதிர்த்தியுடன் தான் பெண்ணின் வாழ்க்கையே தொடங்கியது. இந்தப் பெண் எதிர்கொண்ட பிரச்சனைகளோ பற்பல.

1.ஆணின் உழைப்பை ஒழுங்குபடுத்த வேண்டியிருநத்து. கிடைக்கும் வருமானத்தை குறைந்தபட்சம் குடும்பத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து ஒழுங்குபடுத்தவேண்டிருந்தது.

2.ஆணின் தொடர்ச்சியான குடியை, புகைத்தலை, வீதி அரட்டையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

3.ஆணின் அராஜகமான வாழ்ககையை ஒழுங்குபடுத்தி, வீட்டுக்கு கணவன் ஒழுங்காக வருவதையும், நேரத்துக்கு வருவதையும், வீட்டில் குடித்தனம் நடத்தவதையும் உறுதிசெய்ய வேண்டிருந்தது.

4.வீட்டிற்கு வரும் கணவனுடன் பலவழிகளில் ஒரு தோமைமையை பெண் பேன வேண்டியிருந்தது.

5.ஆணின் வீங்கிவெம்பிய பாலியல் பிரச்சனைகள் சீராக்க வேண்டியிருந்தது.
6.ஆணின் ஊதாரித்தனமான கட்டுப்பாடற்ற செலவு முறைகளை கட்டுபடுத்தவும் அல்லது கஞ்சத்தனத்தை ஒழிக்கவும் வேண்டியிருந்தது.
இப்படிப் பற்பல. உண்மையில் ஆணின் வாழ்வை தன்னுடனான வாழ்வில் ஒழுங்குபடுத்துவதே, அவளின் முன் இருந்த பாரிய பிரச்னையாகும்;. இதை அவள் எந்த முன் உணர்வுமின்றியே, இதற்குள் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை காணப்பட்டது. உண்மையில் தன்னுடன் வாழ்தல் என்ற எல்லைக்குள், தவிர்க்க முடியாத நிலையில் பெண் இதைக் கோரினாள்.

போலியாக கோட்டும் சூட்டும் போட்டும், பட்டும் பகட்டுமாக நடக்கும் திருமண வாழ்கையோ ஒரு நாளுடன் முடிவடைகின்றது. கற்பiனான உலகத்தில் நடக்கும் திருமணங்கள், தனது சொந்த போலித்தனத்துடன் மினுக்கித் தான் அரங்கேறுகின்றது. இளமை, பாலியல் நாட்டம், பாலியல் ஆர்வம் போன்றவற்றுடன், இதையொட்டி அவர்களிடையே நிலவிய பரஸ்பர உணர்வுகள் இணங்கிப் போவது போல் தான் அனைத்தும் தோன்றியது.
இப்படித்தான் பெண்ணால் முதலில் உணரப்பட்டது. ஆனால் படிப்படியாக பாலியல் ஆர்வம் குறைய, இளமையின் மோகம் தனியா, இணங்கிப் போகும் பரஸ்பர போக்கில் வெடிப்பு எற்பட, இவை தமக்கு எதிரானதாக பார்க்கப்படுகின்ற உணர்வை உருவாக்கி விடுகின்றது. இப்படியாக போலியாக கட்டி வைத்திருந்த கற்பனை உலகம் கண்முன்னலேயே தகர்கின்றது. இந்த பிரச்னையை அறிவியல் பூர்வமாக அனுகப்படுவதில்லை. அழகு, கவர்ச்சி ஆடம்பரம், போலியான பகட்டுத்தனம் எல்லாம் மெதுவாக தமக்குள்ளேயே தானாக அம்பலமாகத் தொடங்குகின்றது. அத்துடன் பாலியல் வேட்கை ஊடாக இணக்கமாக இணங்கி அனுகப்பட்டவை, பின்னால் அது தணியும் போது அவை எதிரானதாக மாறுகின்றது.

உண்மையில் இந்த விடையங்களை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளும் அளவுக்கு வாழ்வுபற்றிய அறிவு இருவருக்குமே இருப்பதில்லை. அவர் அவர் நிலையை தக்கவைக்கவும், முரண்பாட்டை தனக்கு எதிரானதாக பாhக்கின்ற நிலையும் உருவாகின்றது. திருமணம் செய்ய வந்த பெண்களின் சமூக பாத்திரம் என்பது, ஆண்களை விடவும் வாழ்கை புரிவதில் முன் அனுபவமற்றது. ஆண்கள் உழைத்த வாழும் வாழ்வில், சமூகத்தின் பல்வேறு கோணங்களில், போக்குகளை முகம்கொடுத்த அனுபவம் பெற்றவராகவே காணப்பாடுகின்றனர். ஆனால் ஆண் சமூக ஒழுங்குள்ளாகாத அராஜகத்தன்மை கொண்ட லும்பன் தன்மை பொதுவில்; காணப்பட்டது. திருமணத்துக்காக வரும் பெண்கள் பேசியோ அல்லது காதலித்தோ வந்த சேரத் தொடங்கிய போது, இந்த சமூக அமைப்பை புரிந்து எதிர் கொள்ளக் கூடிய வாழ்வியல் அனுபவத்தை அவர்கள் கொண்டிருப்பதில்லை. அத்துடன் சூழலால் வழிகாட்டும் சமூகத் தொடர்பை துண்டித்தபடி வாழ்வுக்குள் வருகின்றனர்.

சினமா தனத்துக்குள் வாழ்கையை புரிந்து வருபவர்கள். இதன் விளைவு அவளின் நடத்தை, அவனின் நடத்தைக்கு பதிலடியாகவே அமைந்துவிடுகின்றது. இணக்கம் காணமுடியாத முரண்பாடுகளின் தொகுதிகளாகவே வாழத் தொங்குகின்றார்கள்;. சரியையும் பிழையையும் அறிவியல் ப+ர்வமாக அனுகவோ, தீர்க்கவோ, மற்றொரு தரப்புடன் இணைத்து தீர்வு காண்பது கூட, சாத்திமற்றவொன்றாகி, எலியும் பூனையுமாகிவிடுகின்றனர். சமூகத்தில் இருந்தும் தம்மை வெட்டிக்கொண்டு, குடும்பதிலும் தனிவுலகை கட்டிக்கொண்டு, தனி உலகில் தமக்குள் தாமே வாழத்தொடங்குகின்றனர்.

ஆணாதிக்க சமூகத்தில் அறிவியல் ரீதியாக மிக பின்தங்கிய நிலையில் வாழ்ந்த பெண்கள், புலம்பெயர் ஆண்களின் பிரச்னைகளை கையாளவும், வழிகாட்டவும் முடியாதவர்கள் என்பதை ஒவ்வொரு விடையத்திலும் நிறுவினர். எம் பெண்கள் உண்மையில் அடக்க ஒடுக்கமாக, எமது ஆணாதிக்க சமூக அமைப்பின் கண் அசைவுக்குள் வாழப்பழக்கப்பட்டவர்கள்.

இப் பெண் புலம்பெயர்ந்த போது, கிடைத்த திடீர் சுதந்திரமும், அதேநேரம் குடும்பம் என்றால் என்ன என்ற தெரியாத விட்டில் ப+ச்சிகாகவே வந்து வழத் தொடங்கினர். அவளுக்கும் கணவனுக்கும் இடையிலான பிளவுகள், சுதந்திரத்தின் எல்லையை முன்னெச்சரிக்கையுடன் சரியாக கையாள்வது என்பதற்கு பதிலாக, அதை தவாறாகவே புரிந்து கொண்டு தாறுமறாகவே பயன்படுத்தினர். குடும்பத்தின் அதிகாரம் பெண்ணின் கையில் சென்ற போது, கணவனை குடும்பத்துக்கு அன்னிமான ஒரு உறுப்பாகவே கருதுகின்ற நடைமுறைகள் முதல் குழந்தைகளையும் அதற்குள் திணித்துவிடுகின்றனர். குடும்ப அதிகாரம் என்பது குடும்ப நிர்வாகம் மூலமும், மொழி வன்முறை மூலம் பெண் பெற்றுவிடுகின்றாள்.

இதன் விளைவு கணவனை மட்டுமல்ல, குழந்தைகளையும் சாத திட்டித் தீர்க்கின்ற, அல்லது சாத குறை காண்கின்றதுமாகின்றது. பெண்ணின் வாழ்வே திருத்தியற்ற சாத புறுபுறுப்பாக மாறுகின்றது. இப்படிப்பட்ட குடும்பங்கள் தான் புலம்பெயர் மண்ணில் அதிகம்.

இந்த பெண்ணுக்கு இந்த வாழ்வியலைக் கற்றுக்கொள்ளவும், கற்றுக் கொடுத்தலும் என்பது, சினிமாவுலகமும் நாடாகவுலகமும் ஆகிவிடுகின்றதுது. பெண்ணின் வாழ்க்கையே சினிமாவாகி நாடகமாகிவிடுகின்றது. எல்லாமே பகட்டான போலித்தனமாகிவிடுகின்றது. பல கும்பத்தில் நடிப்பே வாழ்கையாகின்றது. குடும்பத்தில் இருப்பதே நடிப்பாகிவிடுகின்றது.
உண்மையில் இதன் பின்னனி என்ன? எமது சமூகம் கற்றுக்கொடுக்கும், கற்றுக்கொள்ளும் சமூகமாக மூன்று பத்து (30 வருடங்கள்) வருடங்காளாக இருக்கவில்லை. தமிழ் அரசியல் சூழல் அதற்கு எதிராகவே இருந்தது. இந்த அரசியல் வாழ்வின் எந்த அம்சத்தை கற்றுக்கொள்வதை, கற்றுக்கொடுப்பதை மறுத்தே வருகின்றது. அனைத்துக்கும் தீர்வாக வன்முறையை வைக்கின்றது. ஆண் பெண் உறவில் எற்படும் முரண்பாடுகளை தீர்க்க, இந்த அரசியல் வன்முறையின் வழிகளில் வன்முறையையே கையாளப்படுகின்றது. பிரச்சனையை புரிதல், அதைப் புரிந்து தீர்வு காணுதல், இணக்கத்தை காண முனைதல், பேசித் தீர்த்தல் என எதுவும், எம்மைச் சுற்றியுள்ள குடும்ப வாழ்வில் கூட அருகிப்போய்விடுகின்றது. மொழி வன்முறையில் தொடங்கி உடல் வன்முறையையே தீர்வாக கையாளப்படுகின்றது. முரண்பாட்டை தீர்ப்பதில் வன்முறையைத் தவிர வேறு மொழியே இருப்பதில்லை. இது எங்கள் அரசியல் வாழ்வில் மட்டுமல்ல, சதாரணமான குடும்ப வாழ்வில் கூட காணப்படுகின்றது.

எமது மண்ணில் பெண் வாழ்ந்த போது கூட, சமூகத்தின் பிரச்னைகளை வீட்டில் கூட பெற்றோர் குழந்தைகளுடன் கதைக்க முடியாத பாசிச அரசியல் சூழலில் சிக்கிய ஒரு சமுகமே தத்தளி;க்கின்றது. வெம்பி விடுகின்ற வரட்டு முதிர்வு உருவாகின்றது. உண்மையில் குழந்தைகள் சமூக அறிவற்ற, பாசிச எல்லைக்குள் தான் தாலாட்டி வளர்க்கப்படுகின்றனர். வாழ்கை என்றால் என்னவென்று தெரியாத ஒரு சூனியத்தில் வளந்தவர்கள் தான், இன்றைய தலைமுறையினர். சாதாரண பெற்றோரின் வாழ்க்கை சார்ந்த அறிவு கூட, பிள்ளைகளுக்கு கற்பிப்பதை தமிழ் பாசிச அரசியல் அனுமதிக்கவில்லை.
இப்படி வளர்க்கப்பட்ட பெண்களின் சமூக அறிவு என்பதே அறவே இல்லாது போனது. சினிமா, அதன் எல்லைக்குள் வாழ்வுபற்றி கற்பனையான பிரமிப்பான மதிபீடுகளையே பெற்று கொண்டனர். தன்னைத்தான் கவர்ச்சியான அழகான பாலியல் பண்டமாகவும், மனித உறவை ;இதற்கு உட்பட்ட ஒன்றாகவும் கருதுகின்ற வாழ்கையையே; கற்றுக்கொண்டனர். வாழ்வை அப்படித்தான் புரிந்து கொண்டனர். நிஜவாழ்விலோ அவர்கள் தோல்வி பெறுகின்றனர். நாடகம் மற்றும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பதை புரிந்து கொள்வதில்லை. சினிமாவை வாழ்கையாக கருதிய கற்பனையில் தான் வாழ்கின்றனர். சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி, அதற்கு எதிராகவே கற்பனையில் செயல்படுகின்றது. சினிமா அரசியல் என்பது, வாழ்க்கையை சினிமாவாக்குவதில்லை.

ஆகவே வாழ்வியல் பிரச்னைகளை இனம்காணுதல், அதை எப்படி தீர்த்தல் என்பதை இணக்கமான அறிவியல் பூர்வமான வகையில் இனம் காணும் வாழ்வியல் சூழலை அவளுக்கு எமது சமூகம் அனுமதிக்கவில்லை. ஏன் சினிமாவும் கூடவும் அதைச் செய்வதில்லை. வாழ்கையை விகாரமாகின்றது. வாழ்க்கையை நரகமாகின்றது. வாழவே தெரியாது சமூக அறிவற்ற விட்டில் பூச்சிகாளவே பெண்கள் பலியிடப்படுகின்றனர்.

(மற்றொரு தலையங்கத்தில் இவ் ஆய்வு தொடரும்)

இதை ஒட்டி எழுதி முதல்கட்டுரை
1.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

2.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

No comments: