தமிழ் அரங்கம்

Monday, July 16, 2007

குடும்பங்களின் அதிகாரங்கள் வீங்கி வெம்பிய வடிவில், சமூகத்தின் சமூகத் தன்மையை சிதைகின்றது

குடும்பங்களின் அதிகாரங்கள் வீங்கி வெம்பிய வடிவில், சமூகத்தின் சமூகத் தன்மையை சிதைகின்றது

பி.இரயாகரன்
16.07.2007

குடும்ப அதிகாரம் என்பது அவசியமான எல்லைக்குள் மட்டுமானது. இது பரஸ்பரம் இணங்கியதாக, ஜனநாயகப் பண்பு கொண்டதாக அமைய வேண்டும். அதிகாரம்; என்பது சமூகபொருளாதார உறவை குறைந்தபட்சம் உள்ளார்ந்த சமூக அடிப்படையில் புரிந்த எல்லைக்குள் தான், அது வெற்றிகரமாக குடும்ப உறுப்புகளால் இணக்கமாக எற்றுக்கொள்ளப்படும்.

கும்பத்தின் அதிகாரத்தை பெண் பெறுகின்ற போது, அதை அனைவரும் எற்றுக்கொள்ளும் வகையில் கையாளும் அறிவுபூர்மான சமூக நடைமுறை இருக்கவேண்டும். அவசிமான அதிகாரத்தின் எல்லையை பெண் தெரிந்து இருக்கவேண்டும்;. இந்த வகையில் குடும்பத்தை பொறுமையான விட்டுக்கொடுப்புடன், புரிந்துணர்வுடன் அதைக் கையாளவேண்டும்;. எதையும் அறிவியல் ப+ர்வமாக விளக்கி, அதை எற்கவைக்கும் வகையில் அனுகவேண்டும்.

ஆனால் குடும்பங்களில் அப்படி நடப்பதில்லை. சட்டுப்பூட்டான அதிரடித் தீர்ப்புகள், முடிவுகள், உத்தரவுகள், அதிரடியான பதில்கள், குடும்பத்தின் இணக்கமான இசைந்த சமூக வாழ்வியலை எற்படுத்துவதில்லை. ஏன் இதை அப்பெண் உணருவதுமில்லை.

கணவன் என்ற உதாரணத்துக்கு அப்பால், குழந்தையுடனான பெண்ணின் உறவு இதை நன்கு விளக்குகின்றது. பெரும்பாலன குழந்தைகள் தாயின் சொல்லை கேட்காத நிலைக்குள் வாழ்கின்ற சூழலை, பெண் தானாகவே எற்படுத்திவிடுகின்றாள். உண்மையில் பெண் அல்லது தாய் தனது வார்த்தைக்குரிய சமூக (குடும்ப) மதிப்பை தானகவே வலிந்து இழக்கவைக்கின்ற வகையில், பெண்ணின் மொழி வன்முறை காணப்படுகின்றது. வார்த்தைகள் சமூக மதிப்புமிக்கன என்பது, அது மதிக்கப்பட வேண்டும் என்ற சமூக உணர்வின்றி, அவை தாறுமாறாக அள்ளிக் கொட்டப்படுகின்றது. இதுவே எமது பெண்களின் பொதுவானதும், துயரமானதுமான அனுகுமுiறாகும்.

குழந்தையுடனான தாயின் பாசம், பரிவு என தாய்மைக்குரிய சமூக மதிப்பீடுகள் அனைத்தும் தாயிடம் இருந்தும், திட்டுதல் நச்சரித்தல், பிழையை சாத கண்டுபிடித்தல் போன்றவையே பெண்ணின் மறுபக்கதிலான பொதுவான அனுகுமுறையாகும். சமூக ரீதியான வாழ்வியல் அழுத்தங்கள் இதைத் துண்டுகின்ற போதும், இதற்கு தான் பலியாவதையே பெண் அனுமதிக்கின்றாள்.

வெளி உலகுக்கு பகட்டாக காட்டி வாழமுனையும் பெண், வெளி உலகுடன் நளினமாக பண்பாக கதைக்க முனையும் பெண், சொந்த வீட்டில் அதை கையாள்வது கிடையாது. கணவனுடன் மட்டுமல்ல, குழந்தையுடன், ஏன் சொந்த பெற்றோருடனும், மொழி வன்முறையைக் கையாளுகின்றாள்;. அல்லது விடப்பிடியான வகையில் அழுது புலம்பியும், சினந்து கொட்டி சாதிக்கின்றாள்;. இணக்கமான இணங்கிய அறிவியல் தன்மை என்பது அனுகுமுறை ரீதியாகக் கூட அனுகுவது கிடையாது.

குடும்பத்தில் இழிவான வகையில், பண்பற்ற வகையில் பெண்களின் மொழியாடல் மற்றும் நடத்தைகள் உள்ளது. குடும்ப சூழலையே தனக்கு எதிரியாக கருதுகின்ற போக்கு, பெண்ணின் பண்பாகி விடுகின்றது. தனக்கு தவறானது எனக் கருதும் ஒரு விடையத்தை (உதாரணத்துக்கு குழந்தையின் சிறிய நடத்தை) விட்டுக்கொடுத்தல், கண்டு காணமல் போதல் என்பது, அறவே அற்றுப் போய்விடுகின்றது. பொறுமை இழந்து கொந்தளிக்கின்ற குடுகுடு வாழ்க்கை முறையே, பல பெண்களின் பொதுத் தன்மையாகி விடுகின்றது. சதா புறுபுறுத்துக்கொண்டு, திட்டிக்கொண்டும், கடுகடுத்த முகத்துடன், பல பெண்கள் தாமாகவே தம்மைத் தாம் சிதைகின்றனர். இயல்பாக அன்பாக குடும்பத்தின் எந்த உறுப்பினருடனும் கதைக்க கூட அவளால் முடிவதிலலை. அதிகாரமும், வெட்டொன்று துண்டொன்றாக எரிந்து விழ்வதே, குழந்தைகளுடனான பெண்ணின் பொதுவான அனுகுமுறையாகிவிடுகின்றது. குழந்தையுடனான பெண்ணின் அனுகுமுறை, குழந்தைக்கும் பெண்ணுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்க வைக்கின்றது. குழந்தை தாயின் சொல்லைக் கேட்பதையே மறுக்கின்றது அல்லது அலட்சியப்படுத்துகின்றது. தாயின் மனநிலைக்கு குழந்தை பழக்கப்பட்டு, அந்த பெண்ணின் உணர்ச்சியை செயலற்றதாகின்றது. தாய்யின் உணர்ச்சி என்பது, அhத்தமற்றதாகி விடுகின்றது. இதனால் தாய் மேலும் மூhக்கமாகிவிடுகின்றாள். இப்படி அவளே தனது உணாச்சி, உணர்வுகளை அர்த்தமிழந்து போகச் செய்கின்றாள்.

குழந்தையின் வயதும் அறிவும் அதிகரிக்க, அது பாரிய குடும்ப பிளவாகின்றது. பொதுவாகவே தாயின் சொல் கேட்கப்படுவது, அதன்படி நடப்பது என்பது அரிதாகின்றது. என் அவை பொதுவாகவே அலட்சியப்படுத்தப்படுகின்றது. வாத்ததைகளும் அதிகாரங்களும் அர்த்தமற்று, அவை பழக்கப்பட்ட ஒன்றாகிவிடுகின்றது. சந்தர்ப்பம், சூழல் சார்ந்து பாரிய எதிர்வினை அம்சங்களைக் கூட, குழந்தை தாய்க்கு எதிராக எற்படுத்திவிடுகின்றனர்.

மறுபக்கத்தில் இதே தாய் தனது கணவன் பற்றி சாத திட்டி தீர்ப்பது நிகழ்கின்றது. குழந்தைக்கு முன்னால் கூட தனது கணவன் வக்கற்றவனாக காட்டுகின்ற பெண்ணின் அனுகுமுறை, தந்தைக்குரிய மதிப்பை குழந்தை மறுப்பதை மிக இலகுவாக்கின்றது. தந்தையை மறுப்பதை, தாயைக்கொண்டு சாதிக்கும் எதிர்க் கலையை குழந்தை கற்றுக்கொள்கின்றது. தாய் மறுப்பதை தந்தையைக் கொண்டு சாதிக்கும் நுட்பத்தை தெரிந்து கொள்கின்றது. இதையும், இந்த நடத்தையும் உள்ளடங்கியதையே பெரும்பாலனவர்கள் ஒரு குடும்பம் என்கின்றனர்.

இப்படி பிழையான வடிவத்தில், பிழையான குடும்ப வடிவத்தில் குழந்தை வளர்க்கப்படுகின்றது. குடும்பத்தில் தந்தையை அல்லத தாயை மறுப்பது என்பது இலகுவான ஒன்றாகிவிடுன்றது. தந்தை பற்றி தாயின் மனநிலை, குழந்தை தனது தாய் மூலமே தந்தைக்கு எதிரான உணர்வைப் பெற்றுவிடுகின்றது. உண்மையில் குழந்தைகள் தாய் தந்தை கட்டுப்பாட்டுக்கு அப்பற்பட்ட ஒரு உலகத்தில் வாழ்கின்ற துரதிஸ்ட்டமே, பெரும்பாலன குடும்பங்களில் காணப்படுகின்றது. குழந்தையின் வயது அதிகரிக்க, அறிவு வளரவளர இது வெடிப்பாக்கி வெளிப்படுகின்றது.

இது குழந்தைக்கு மட்டுமல்ல பெரும்பாலன கணவன்மாரின் நிலை கூட இதுதான். பெண் சாத நச்சரிக்கும் முரண்பாடு, அதில் இருந்து தப்ப ஆண்கள் குடும்பதில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றான் அல்லது போதையில் மயங்கிக் கிடக்கின்றனர். இது ஒருபுறம். மறுபக்கம் ஆண் அதிக நேரம் வேலைக்குச் செல்லல் என்பதும், ஆணை குடும்பத்துக்கு வெளியில் அன்னியமாக்கின்றது. வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட குழந்தையுடன அன்னியமாதலை இதன் மூலமும் அடைகின்றாள்.

ஆண், பெண் முரண்பாட்டை பரஸ்;பரம் புரிந்துணர்வுடன் அனுகாது, மொழி வன்முறைக்குள் அனுகும் போது, அதுவே உடல் வன்முறையாகவும் மாறிவிடுகின்றது. இப்படி குடும்பத்தில் செயலற்ற உறுப்புகளையும் உருவாக்கிவிடுகின்றது. ஒருவரே எல்லாமாகிவிடுகின்றது. குடும்பத்தில் பொம்மை உறுப்புகள் இருப்பது இப்படித்தான். குடும்பத்தினுள் பாரிய அன்னியமாதலை உருவாக்கிவிடுன்றது. தமக்குள் மட்டுமல்ல, குழந்தை முதல் தனது சொந்த தாய் தந்தை என அனைத்துக் கூறையும் அன்னியமாக்கின்றது.

முதலாளித்துவ அமைப்பு உருவாக்கி வைத்துள்ள சட்டபடியான நிர்வாக ஒழுங்குக்குள் குடும்பங்கள் நிலைப்பதால், குடும்பத்தின் சட்டரீதியான குடும்பக் கடமைகளை பெரும்பாலன பெண்கள் கையாளுகின்றனர். இவைகளை கையாளும் பெண், இயல்பாக வீட்டின் அதிகாரத்தை, வீட்டின் அதிகாரமாகி விடுகின்றாள். ஆணின் ஆணாதிக்க அமைப்பு சார்ந்த அதிகாரம் என்பது, பண்பாடு காலச்சாரம் சார்ந்த சமூக கூறு சார்ந்தாக குறுகிவிடுகின்றது. வீட்டின் நிர்வாகம் முதலாக, ஏன் ஆணின் உழைப்பை கட்டுப்படுத்துவது வரை பெண் தான் தீர்மானிக்கின்றாள். குடும்பம் என்ற எல்லைக்குள், இவை இணக்கமான அவசியமான எலைக்குள் நிர்வாகிப்படுவதில்லை.

பெண் பெறும் அதிகாரம் கணவனை மறுக்க துண்டுதலாகின்றது. பெண் குடும்பத்தின் நிர்வாகியாகின்றாள். ஒருவிதத்தில் சமூகத்துடனான பெண்ணின் செயல்பாடு அதிகரிக்கின்றது. மறுபக்கதில் குடும்பத்தின் மகிழ்ச்சியை இழப்பதும் இங்கு இருந்து தொடங்குகின்றது. அதிகாரம் என்பது சரியாக அவசிமாக கையாள்படுவதில்லை. எமது போராட்ட வரலாறு, ராக்கிங், அரச நிர்வாகங்கள் எங்கும் இதை நாம் காணமுடியும்;. அறிவியல்பூர்வமற்ற அதிகாரம், வன்முறை கொண்ட சிதைவை உருவாக்கின்றது. பெண்கள் பெற்ற அதிகாரம் என்பது, பெரும்பாலும் சரியாக கையாளப்படுவது கிடையாது. சமூகத்தை அல்லது குடும்;பத்தை இணக்கபூர்வமாக இணங்கி தலைமை தாங்கத் தெரியாத எல்லையில், இந்த அதிகாரங்கள் தன்னை மட்டுமல்ல தன்னைச் சுற்றி உள்ளவர்களின் மகிழ்சியையும் கூட சிதைத்து விடுகின்றனர்.

பெரும்பாலன குடும்பங்களின் ஆண்கள் வெறுமையாக தலையாட்டும் பொம்மையாக்கப்பட்டுள்ளனர். மறுபக்கத்தில் சிறியளவில் பெண்கள் இப்படி உள்ளனர். தலையாட்டுவது அல்லது இனங்கிப் போவது என்பது, மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாhக்குமென்றால் கூட பரவயில்லை. மாறாக வெடித்து சிதறம் புறுபுப்புடன், மகிழ்ச்சியை இழந்த ஒரு அதிகார கொண்ட உத்தரவுக் கும்பங்களாகி விடுகின்றது.

சரி பிழைகளை, பரஸ்பரம் அறிவியல் ப+ர்வமாக கதைத்து தீர்ப்பது கிடையாது. ஒரு விடையம் மீதான அறிவின் அடிப்படையில் விவாதிக்கவோ, அதன் அடிப்படையில ஆலோசனை செய்வதோ கிடையாது. எப்போதும் மோசமான ஒருநிலை அடையும் போதுதான், பெண் ஆணிடம் அதை எடுத்துச் செல்லுகின்றாள்;. உண்மையில் அடுத்து என்ன செய்வது என்ற தெரியாத ஒரு நிலையில் இது நிகழ்கின்றது. அதுவரை மணைவி தான் நினைத்ததை மட்டும் செய்வது தான் நிகழ்கின்றது.

மனைவி தான் எடுத்த முடிவையே எற்றுக்கொள்ள வேண்டும் என்று வி;ப்பிடியான அழுங்கு பிடியான அனுகுமுறை காணப்படுகின்றது. இதை மறுப்பது, விவாதிப்பது, மற்றவரை தனக்கு எதிரானதாக காட்ட போதுமான சண்டைக்கு காரணமாகி விடுகின்றது. பெரும்பான ஆண்கள் சண்டைக்கு பயந்து மௌனமாக இணங்கிவிடுகின்றனர் அல்லது கண்டு காணமல் ஓதுங்கிவிடுகின்றனர்.

இப்படி குடும்பத்தில் சாத சண்டையை உருவாக்குவதில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகவே மாறியுள்ளது. குறிப்பாக குடும்பங்களின் அதிகாரங்களையும், முடிவுகளையும் தீhமானிக்கும் வகையில், பெண்கள், அதை மொழி வன்முறை மூலமும் சாதிக்கின்றாள். விடப்பிடியாக அழுது சாதிக்கும் குழந்தை போல், பெண் சினந்தும், அழுதும், மொழி வன்முறை மூலமும் சாதிக்கும் சூழலே குடும்பங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றது. மன அழுத்ததுக்கு உள்ளாகும் ஆண் மற்றும் குழந்தைகள் அதற்கு வி;ட்டுகொடுக்கின்றனர். எதையும் விவாதித்து எற்புடையதை எற்கும் மனப்பங்க்கும் என்பது, எமது வன்முறை சமுதாயத்தில் அறவே கிடையாது. இது குடும்ப மகிழ்ச்சியை சிதைப்பதில், குழப்பதில் ஆழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த விவாதம் சர்ச்சைக்குரியது, ஆனால் அவசியமான அடிப்படையான விவாதம்.

உண்மையில் நிர்வாக ரீதியாக, பொருளாதார ரீதியாக குடும்பத்தின் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பெண், மரபான ஆணாதிக்க பண்பாட்டு கலச்சார கூறுக்குள் அடிமையாக இருப்பது, முரண்நிலையின் இரு துருவங்களாக்கின்றது. பண்பாடும் கலச்சாரமும் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்துவதால், குடும்பத்தில் வழிநாடத்தும் பண்பை குழப்புகின்றது. பெண் அதிகாரமே குடும்பத்தில் ஆணையாக்கப்படுகின்ற அதேநேரம், ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெண் பற்றி ஆணாதிக்க நிலைக்குரிய சலுகையை அவள் கோருகின்றாள். முரண்நிலையில் இரு துருவங்கள், ஒரே நேரத்தில் எதிர்தெதிராகவே பிரதிபலிக்கின்றது.
மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அதிகாரம் சார்ந்த பண்பாட்டு கலச்சார ஆண் சார்ந்த ஒழுக்கவியலை, பெண்ணல் மீற முடிவதில்லை. இதனால் வெளிப்படையாக சமூகத்தின் முன் நல்ல நடிகையாக நடிக்க முனைகின்றாள்;. நிலப்பிரபுத்துவ பண்பாடு கொண்டவளாக, ஊர் உலகம் அதிராது கணவனுக்கு அடக்க ஒடுக்கமாக வாழ்வதாக காட்டுகின்ற படிமத்தை தக்கவைக்க முனைகின்றாள்;. ஆனால் வீட்டிலோ அது எப்போதும் கலைந்து கிடகின்றது. ஆணுக்கு அடக்க ஒடுக்கமாக வாழ்வதாக காட்டுகின்ற போலியான பெண்ணின் நடிப்புக்கு அப்பால், கணவனுக்கு மதிப்பே கொடுக்கப்படுவதில்லை. விவாவதமற்ற முடிவுகள் தான் பெண்ணால் திணிகப்படுகின்றது.

இது எப்படி எந்தத்தளத்தில் தொடங்குகின்றது என்றால் நுகர்வுக் கலச்சாரமே. இந்த இடத்தில் நுகர்வுக் கலாச்சாரம், ஆணை விட பெண்ணின் பண்பாட்டுத் தளத்தில் அதிகளவில் ஆதிகம் செலுத்தும் கூறாகிவிடுகின்றது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பில் பெண் அழகு பதுமையாக, கணவனுக்கு அலங்கரித்து காட்டினாள். இன்று பெண் கணவனுக்கு அல்ல, உலகத்துக்கே அதைக் காட்ட விரும்புகின்றாள். இப்படி முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்துக்குள், பெண்ணின் சிந்தனையும் நடைமுறையும் உள்ளது. இப்படி குடும்பத்தை அதற்குள் திணிக்க முனைகின்றாள்;. மறுபக்கத்தில் பெண் நம்பும் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ முறைக்கு இது முரணாக உள்ளது. இரண்டு தளத்தில் காலை வைத்தபடி, உருவாட முனைகின்றாள்.

ஒரு பெண் ஒரு மொடலிஸ்ராகவே அவளை அறியாது வாழ விரும்புகின்;றான். நேரத்துக்கு நேரம் நடை உடை முதல் ஒரே நிறத்திலான அணிகலங்கள் என்று, பலதளத்தில் பகட்டாகவே அதையே வாழ்கை முறையாக உருவாக்க முனைகின்றாள். ஒரு சீமாட்டியாக, கணவனை சீமானாக மாற்ற முனைகின்றாள்;. வீட்டுப் பொருட்களை அடிக்கடி மாற்றுவது, வீட்டை அடிக்கடி மாற்றி அமைப்பது, புது வண்ணம் பூசுவது, பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வங்குவது என்று சாத மண்டை போட்டு உடைகின்றாள். எப்படி சீமாட்டியாக இருப்பது என்று கனவு வாழ்வில், தனது மகிழ்ச்சியாக சொந்த வாழ்கையையே வாழாது சொதப்புகின்றாள்.

எல்லாவற்றையும் மாற்றவும், அழகுபடுத்தவும் முனைகின்ற மனைவி, அதை தனது அதிகாரம் மற்றும் நுகர்வுப் பொருளாதாhம் மூலம் திருத்தியற்ற வகையில் சாதிக்கின்றாள். இந்த நுகர்வு உள்ளடகத்தில் குடும்ப சூழலை மாற்றுகின்ற அல்லது மாற்ற முனைகின்ற பெண்ணின் முரண்பாடு எங்கே உருவாகின்றது என்றால், நுகர்வின் அடிப்படையில் தனது கணவனை மாற்ற முடிவதில்லை என்பதில் தான். அதாவது பாலியல் ரீதியாக அடிக்கடி ஆணை மாறி, பொருட்களைப் டீபால் நுகர முடிவதில்லை. எல்லாவற்றையும் அதிரடியாக காலத்துக்கு காலம் மாற்றி அமைப்பதையே தனது வாழ்வாக கொண்ட பெரும்பான்மையான பெண்கள், தனது கணவனை அப்படி மாற்ற முடிவதில்லை. பாலியல் நுகர்வில் கையாளும் கள்ள உறவு, இதை தீர்ப்பதில்லை.

இது பெண்ணைப் பொறுத்த வரையில், வெளித்தெரியாத பாரிய ஒரு முரண்பாடு. பெண்ணுக்குள்ளான கணவன் பற்றி மதிப்பிட்டில், இந்த நுகர்வுக் கூறே, அதை பற்றிய அபிராயமாகின்றது. கணவனை பொருட்களைப் போல், நிலப்பிரபுத்துவ உள்ளடகத்தில் வெளிவுலக்காக நடித்து வாழும் பெண்களால் மாற்றமுடிவதில்லை. உண்மையில் குழந்தைகளைச் சரி, பெற்றேரைச் சரி, கணவனைச் சரி, வெறும் பொம்மைகளாக, பொருட்களை போல் வைத்தவைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்றே பெண் விரும்புகின்றாள். வீட்டு அழகியல் பற்றிய பெண்ணின் கோட்பாடே இதுதான். இப்படி பொருள் பற்றி உள்ளார்ந்த மனப்பாங்கு. ஆகவே உயிர்வுள்ள குடும்ப அசைவுகளை வெறுக்கின்றது. உயிர்ருள்ள செயல்பாடுகள் தனக்கு எதிரானதாக, அழகியலற்றதாக கருதுகின்றனார். நுகர்வு சார்ந்து வெளிப்படும் சிந்தனை முறை, அனைத்தை மாற்றவும் நுகர்வும் இழிவாடவும் கோருகின்றது.
இதே சிந்தாந்தம் கணவனை மாற்றவும், பாலியல் நுகர்வை கணவனுக்கு வெளியில் நுகரவும் முடிவதில்லை. கலாச்சாரம், பண்பாடு என்ற நிலப்பிரபுத்துவ ஆணாதிக் சமூக ஒழுங்கில், அவள் வெளிவுலகுக்காக வாழ்வதால் எற்படும் இந்த மனிதச்சிதைவுகள், தடுமாற்றங்கள் குடும்பத்தின் சிதைவை அகலமாக்கின்றது. உண்மையில் இதை அவள் வெளிப்படையாக உணரவோ, கோரவோ வேண்டிய அவசிமின்றி இருந்த போது, எல்லாவற்றையும் மாற்றும் பெண்ணின் இந்த சொந்த முரண்பாட்டை பெண்ணால் விளக்க முடியாது. ஏன் அதை அவளால் உணரவும் கூட முடியாது.

பொருத்தமற்ற கணவன், தனக்கு எற்றவனாக மாற மறுக்கும் கணவன், என்று சாத நினைக்கும் பெண்ணின் அங்கலாய்புக்கு, எந்த வரையறையும் கிடையாது. ஒரு நேரத்தில், ஒரு காலத்தில் எற்புடையதாக இருந்த கணவன், மறுகாலத்தில் மறு நேரத்தில் எற்புடையதகாது போகின்றது. இது பெண் பற்றி கணவன் மதிப்பீட்டிலும்; கூட நிகழ்கின்து என்பது, ஓப்பிட்டளவில் குறைவானது. இந்த வரையறை சார்ந்த விடையம், ஒரு பெண்ணுடன் அல்லது ஒரு ஆணுடன் வாழமுடியாத சந்தாப்பம் மற்றும் சூழலை உள்ளடக்கியதல்ல.

உண்மையில் இப்படியாக பெண்ணின் குடும்ப அதிகாரம், இணக்கத்தின் எல்லைக்குள் கையாளப்படுவதில்லை. குடும்பத்தின் தலைமைத் தன்மையை பொறுப்பான விதத்தில், அப்பண்புக்குரிய அவசியம் கருதி செலுத்துவது கிடையாது. மாறாக அதிகாரத்தை மொழி வன்முறை ஊடாக பெண் திணிக்க முனைகின்றாள். கணவன், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் எடுதெறிந்து, அவ்யதிகாரம் மூலம் அனுகுகின்றது. இயல்பான ஆணாதிக்க சமூகத்தின் அதிகாரம் கொண்ட ஆண், பண்பாடு கலாச்சாரம் சார்ந்து நிலவுகின்ற அம்சங்கள் ஒருபுறம், மறுபகத்தில் குடும்ப அதிகாரத்தை கொண்டு பெண் சமூகத் தன்மையையே சிதைத்து விடுகின்றாள்.

ஆணாதிக்க அமைப்பில் ஆண் சமூகத் தன்மையை மறுப்பவனாக இருக்க, பெண் சமூகத்தன்மை தக்கவைத்துக் கொண்டவளாக வாழ்ந்தாள். இந்த ஆணாதிக்க நுகர்வு சமூக அமைப்பில், இருவருமே சமூகத் தன்மை மறுப்பவராகி நிற்கினர். சமூக உறுப்புகள் சமூகத்தில் இருந்தும் சிதிலமடைகின்றன. சொந்த குழந்தையைக் கூட வேண்ட வெறுப்பாக அனுகுகின்ற பண்பு, உயிரியல் சார்ந்த இயற்கைக்கே புறம்பானது. இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை அளிக்கும் தனிச்சொத்துரிமை கண்ணோட்டம், இன்று உயிரியலின் இயக்கைத் தன்மையை அழிகின்றது. பெண் தனது உயிரியல் தன்மையை இழந்து, பொருட்கள் உலகத்தில் நின்று குடும்ப அதிகாரத்தை வன்முறை மூலம் நிலைநிறுத்த முனைகின்றாள்.

குறிப்பு : இத்துடன் இக் கட்டுரை முற்றப்பெறுகின்றது. இது தனியான நூலாக உருவாக்கு முயற்சியின் பொது, இக்கட்டுரை திருத்தம் மற்றும் சேர்ப்புக்கு உள்ளாகும்;. உங்கள் அபிராயங்கள், கருத்துகள், சேர்க்க வேண்டிய விடையங்கள் வரவேற்க்கப்படுகின்றது.

1.போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

2.மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம

3.பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

4.சமூக வழிகாட்டலை இழந்து வெம்பும் குடும்பங்கள்

5.கணவன் மணைவிக்கிடையில் புரிந்துணர்வற்ற மொழி வன்முறை

6. பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகி

7.குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?

No comments: