தமிழ் அரங்கம்

Thursday, December 20, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...11_12

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...11


சட்டம் செய்த சதி





முயல்களோடு ஓடிக்கொண்டே, அதை வேட்டை நாயைக் கொண்டு வேட்டையாடுவதுப் போலப், பாதிக்கபட்டவர்களுக்காக வாதிடுகிற அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களுடைய அனுதாபங்கள் எல்லாம் குற்றவாளிகளின் மீதே திட்டமாக இருக்கிறது. அரசாங்கச் சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா, உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நானாவதி-ஷா ஆணையத்தையே சரிகட்டி நீதியை அழிக்க எத்தகைய நம்பிக்கையோடு இருந்தார்!.


மேலோட்டம்


சபர்மதி விரைவு இரயில் 'தீ'க்கு இரையாக்கப்பட்ட அந்த இரவிலேயே கலவரக்காரர்களைப் பாதுகாப்பதற்காக, வழக்கறிஞர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று சங்பரிவார முக்கியஸ்தர்களால் நியமிக்கப்பட்டது.


விஹெச்பி உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முக்கியமான வழக்கறிஞருமாகிய சேத்தன் ஷா என்பவனே நரோடா பாட்டியா படுகொலைகள் வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாட வந்த முதல் வழக்கறிஞர் ஆவான். மிக முக்கியமான, சிக்கலான வழக்குகளில் அரசு தரப்பு சார்பாக சங்பரிவார அபிமானிகள் ஆஜராவது வழக்கப்படுத்தப்பட்டதால், பின்னர் இவன் (சேத்தன் ஷா)குல்பர்க் சமூக படுகொலைகள் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டான்.


கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கபட்டப் பகுதிகளுள் ஒன்றான மேஃஸானா மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞராக, குஜராத் மாநில விஹெச்பி பொதுச் செயலாளரான திலீப் திரிவேதி நியமிக்கபட்டிருக்கிறான். குஜராத் முழுவதும் கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒழுங்குபடுத்தி நடத்துகிறவனும் இவனே.


சபர்கந்தாவில் அரசு தரப்பு வழக்கறிஞராக விஹெச்பி மாவட்டத் தலைவனான பாரத் பட் என்பவன் நியமிக்கபட்டிருக்கிறான். இவனால் முடிந்த அளவு குற்றவாளிகளுக்கு சிறந்த உதவிகளை செய்வதாக இவன் கூறுகிறான்



.


நானாவதி-ஷா ஆணையத்தில் மாநில அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா நீதிபதிகள் மேல் அவதூறான மதிப்பீடு செய்கிறான். அவனது அபிப்பிராயத்தின் படி, நானாவதி பணத்தாசையுடைவர் என்றும், ஷா அவர்கள்(சங்பரிவாரம்) மீது அநுதாபமுடையவர் என்பதாகும்.


நீதி - வஞ்சிக்கபட்டவர்களுக்கு மறைக்க(மறுக்க)ப்பட்டது


கலவரங்கள் நடப்பதற்கு முன்பே, வழக்கறிஞர்கள் மிக அதிகமான கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு வழக்குகளைச் சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை சங்பரிவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது.


நன்கு சோதித்து அறியப்பட்ட ஒரு திட்டத்தை வைத்து நடத்தபட்ட மனித வர்க்கத்தின் படுகொலை மட்டுமல்ல, இது ஒரு துயரமான முடிவுமாகும். ஹிந்துக்களில் எவர்கள் கலவரத்தினாலும், கொலைகளினாலும் குற்றம்சாட்டப் படுவார்களோ அவர்களுக்குச் சட்ட உதவிகள் அளிப்பதற்கான திட்டங்களையும் சூழ்ச்சிகளையும், கலவரங்கள் நடப்பதற்கு முன்பே விஹெச்பி வகுக்க ஆரம்பித்துவிட்டது.


தீமந்த் பட் மற்றும் தீபக் ஷா, இவ்விருவரும் வதோதரா பகுதி பாஜக உறுப்பினர்கள். பட் என்பவன் மஹாராஜா சயோஜிராவ் பல்கலைகழகத்தில் தலைமை கணக்காளனாக பணி செய்கிறான். ஷா என்பவன் பல்கலைகழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறான். இவ்விருவரும் தெஹல்காவிடம் சொல்லும் போது, சபர்மதி விரைவு இரயில் சம்பவம் நடந்த இரவில் சங்பரிவார் முக்கிய நபர்கள் ஒன்று கூடி கலவரக்காரர்களுக்கு எதிராக பதியப்படும் வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களின் கமிட்டி ஒன்றை நியமித்தார்கள்.




உண்மை நிலை என்னவென்றால், விஹெச்பியில் பதவியில் இருக்கக் கூடியவர்களே தனியாக பணியாற்றக் கூடிய வழக்கறிஞர்களாகவும் இன்னும் அரசு


வழக்கறிஞர்களாவும் என அதிக எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் இருந்தது அவர்களுடைய வேலையைச் சுலபமாக்கித் தந்தது. வதோதராவில் வழக்கறிஞர்களாக இருக்கும் ராஜேந்திர திரிவேதி, நீரஜ் ஜெயின் மற்றும் துஸார் வியாஸ் போன்ற அதிகமான வழக்கறிஞர்கள் பெயர்களை தீபக் ஷா கூறி, இவர்கள் எல்லோரும் முன்னேற்பாடுகளைக் குறித்து நடத்தபட்டச் சந்திப்பில் கலந்துக் கொண்டதாக கூறினான்.

RSS உறுப்பினாகளான நரேந்திர பட்டேல் மற்றும் மோகன் பட்டேல் ஆகியோர் தெஹல்காவிடம் சொல்லும் போது, கலவரத்திற்குப் பின் ஹிந்து கலவரக்காரர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதற்காக சபர்கந்தா மாவட்டத்தில் சங்கலன் என்ற பெயரில் ஒரு அமைப்பை RSS உருவாக்கியதாகச் சொன்னார்கள். தனியாகப் பணியாற்றிய விஹெச்பியை சார்ந்த அநேகமான வழக்கறிஞர்களே குற்றவாளிகளுக்காக வாதாடுகிறவர்கள் ஆனார்கள். இன்னும் அரசு தரப்பு வழக்கறிஞர்களோ விஹெச்பி உறுப்பினர்களாகவோ அல்லது சங்பரிவார அபிமானிகளாகவோ இருப்பதனால் கலவரக்கார வன்முறை குற்றவாளிகளுக்கு மறைமுகமான உதவிகளைச் செய்தனர்.


அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றங்களை முன்னெடுத்து வைத்து வழக்கைக் கொண்டுச் செல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு உள்ளபடியே உதவிகளைச் செய்தார்கள். எனவே, அநேகமான இடங்களில், வழக்கைத் தொடர்ந்தவருக்காக (பாதிக்கப்படவருக்காக) வாதிடும் வழக்கறிஞரும், எதிர் தரப்புக்கு (குற்றவாளிக்காக)வாதிடும் வழக்கறிஞரும் ஒரே பக்கத்திற்குச் சார்புடையவர்களாக, அதாவது கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் செய்தக் குற்றவாளிகளின் தரப்புக்கு ஆதரவாக இருந்தார்கள். அப்படியானால் முஸ்லிம் சமுதாயம் என்ன நம்பிக்கையோடு தங்களை வதைத்தக் கொடுமைபடுத்தியக் குற்றவாளிகள் தண்டனை அளிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியும்? முதலில் காவல்துறை தங்களது போலியான கண்துடைப்பு விசாரணைகள் மூலம் கலவரக்காரர்களின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். இப்பொழுது பாதிக்கபட்டவர்களுக்காக வாதாட வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அணி திரண்டு விட்டனர்.

விஹெச்பியின் செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடுடைய உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முன்னனி வழக்கறிஞருமான சேட்டன் ஷா, முதலில் நரோடா பட்டியா படுகொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்காகத் தான் ஆஜரானார். அரசாங்கம் பின்னர் அவரை, குல்பர்க் சமூக குடியிருப்பு படுகொலைகளுக்கான வழக்கில் அரசு தரப்பு (பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும்) வழக்கறிஞராக நியமித்தது. குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ளவர்களில் ஒருவனான பிரஹ்லட் ராஜு என்பவனை தெஹல்கா சந்தித்த போது கூறினான், அவன் கைது செய்வதிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தப் போது, எப்பொழுது காவலதுறையிடம் சரணடைய வேண்டும் என்பது பற்றிய ஆலோசனையை சேட்டன் ஷா அளித்ததாகக் கூறினான்


கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...12.


மேஃஸானா மாவட்டத்தில் குஜராத் மாநில விஹெச்பி பொது செயலாளரான திலீப் திரிவேதி, கிட்டத்தட்ட 1 டஜன் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கொண்ட அவனுக்குக் கீழே வேலை செய்யும் ஒரு வழக்கறிஞர் அணியை வழிநடத்தக் கூடிய மூத்த வழக்கறிஞனாக நியமிக்கப்பட்டான். மேஃஸானா, கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளுள் ஒன்றாகும்.

மேஃஸானாவில் குறிப்பாக இரண்டு வழக்குகள், விஸ்நகரில் நடந்த தீப்தா தர்வாஜா சம்பவமும் இன்னும் சர்தார்புரா சம்பவமும் - இங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கையாலும் மேலும் காட்டுமிராண்டித்தனமாக ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாகக் கொலைகள் செய்யப்பட்ட முறையால் - மனித சமுதாயத்தின் நெஞ்சத்தை உலுக்கியது. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர மனு தாக்கல் செய்யும் போது அதை எதிர்க்க வேண்டியது தான் இவரது(அரசு தரப்பு வழக்கறிஞர்) கடமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக குற்றவாளி ஜாமீனில் வெளிவர உதவியதற்காக சமுதாயத்தால் குற்றம் சாட்டப்பட்டு, கண்டிக்கப்பட்டான். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை குஜராத் உயர்நீதி மன்றத்திலும் இன்னும் உச்சநீதி மன்றத்திலும் முறையிட்டப் பின், கலவர வழக்குகளுக்காக ஆஜர் ஆவதிலிருந்தும் திரிவேதி நீக்கப்பட்டான். ஜுன் 15ம் தேதி 2007ல் திரிவேதியை மேஃஸானா நீதிமன்ற வளாகத்திலிருக்கும் அவனது அலுவலகத்தில் வைத்து பார்க்க தெஹல்கா சென்றது.


விஹெச்பியின் பொது செயலாளர் என்ற அந்தஸ்தின் காரணத்தால், குஜராத் வன்முறை கலவரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் இவன் தான் ஒருங்கிணைத்துள்ளான். தெஹல்கா பத்திரிக்கையாளர், திரிவேதியின் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போதே கலவரம் தொடர்பான வழக்குக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிந்துக்களில் இரண்டு பேர் உள்ளே வந்தனர். குற்றவாளிக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர் ஒருவரை அமர்துவது தொடர்பாக திரிவேதியின் உதவியை இவ்விருவரும் நாடினார்கள்.


தன்னைக் காண வந்தவர்களுக்குச் சரியான வழக்கறிஞரை பிடிக்க முயற்சி செய்யும் பொருட்டு சில வழக்கறிஞர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டான். அவர்களுடைய வழக்கிற்காக ஏற்கனவே வாதாடி வந்த ஒரு வழக்கறிஞர் நோயுற்று விட்டதால், வேறொரு புது வழக்கறிஞரை மீண்டும் கண்டுபிடித்து கொடுப்பது இவனது பொறுப்பாகி விட்டதாக அவ்விருவரும் அவனது அலுவலகத்தை விட்டுச் சென்றப் பிறகு திரிவேதி கூறினான்.


அரசு வழக்கறிஞர்களையும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களையும் ஒருங்கிணைப்பதிலிருந்து கலவரம் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணை செய்யும் காவல்துறையினருடன் பேசுவது வரை அனைத்தையும் இவன் ஒருவனே நிர்வகிக்க வேண்டியதிருப்பது குறித்து முணுமுணுத்துக் கொண்டான். அவன் மேலும் கூறும் போது, கலவரம் தொடர்புடைய மொத்தம் 74 வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றாவாளி எனத் தீர்ப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.


"ஒரு வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான் மேல்மூறையீடு செய்து நிரபராதி எனத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தேன்.....இரண்டாவது வழக்கில் மேல்மூறையீடு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எல்லோரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர். .. குற்றவாளி என்று கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது."


கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மேஃஸானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுபயங்கரமான கொள்ளைகள் மற்றும் கொலைகளைப் பற்றியத் தகவல்களை விவரிக்க ஆரம்பித்து விட்டான். சர்தார்புரா வழக்கு பற்றி இவன் (திலீப் திரிவேதி) கூறும் போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் பிணையில் ஏற்கனவே வெளியே வந்து விட்டதால் இந்தத் தடையைப் பற்றித் தான் கவலை படவில்லை என்பதாகக் கூறினான். இதன்பிறகு மேஃஸானா நீதிமன்றத்தில் சர்தார்புரா கலவரம் தொடர்பான வழக்கில் இவன் குற்றவாளிகளைப் பிணையில் விடுதலை செய்ய வைத்த போது, பாதிக்கப்பட்டவர்கள் எத்தகையக் கூக்குரல்கள் எழுப்பினார்கள் என்பது பற்றியும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை முதல் பக்கத்தில் இவ்வாறு பிணையில் விடுதலை செய்ததைப் பற்றி எழுதி தான் கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றாவாளிக்கு ஆதரவாக நடக்கிறவன் என்று குற்றம் சாட்டியதை எல்லாம் விவரித்துக் கூறினான்.


தனக்கு எதிரான குற்றசாட்டுகள் உண்மையாக இருந்தும் கூட இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்று சந்தோசத்துடன் திரிவேதி கூறி பெருமைபட்டுக் கொண்டான். கலவரத்திற்குப் பின்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு முகாமிட்டு தங்கி அரசு வழக்கறிஞர்கள், (சங்பரிவார) தொண்டர்கள் மற்றும் காவல் துறை அதிகரிகளுடன் சந்தித்து, கூட்டங்கள் நடத்தியதை அனைவரும் அறிவார்கள் என்றும் கூறினான்.


சபர்கந்தாவில் அரசு வழக்கறிஞரான பாரத் பட் என்பவனை தெஹல்கா சந்தித்தது. அவனும் விஹெச்பியின் மாவட்டத் தலைவராக உள்ளான். அவனால் முடிந்த அளவுக்குச் சிறந்த உதவிகளைக் குற்றவாளிகளுக்குச் செய்வதாகவும் பட் கூறினான். இந்த அரசு வழக்கறிஞர் சரியாக சொல்லப் போனால் தரகராக மாறிவிட்டான் என்று கூறவேண்டும். ஏனென்றால் நீதிக்குப் போராடுவதை விட்டு விட்டு நீதிமன்றத்திறக்கு வெளியே பாதிக்கபட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே சமரசம் செய்து தீர்த்து வைக்க முயற்சி செய்கிறான்.


நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

No comments: