தமிழ் அரங்கம்

Tuesday, July 8, 2008

அம்மணமானது இந்திய தேசியம்!

இந்த ஒப்பந்தத்திற்கும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிறார், மன்மோகன் சிங். ஆனால், ஒப்பந்தம் குறித்து இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த அமெரிக்காவின் அரசுச் செயலரும், 123 ஒப்பந்தத்தின் சூத்திரதாரியுமான நிக்கோலஸ் பர்ன்ஸ், ""இந்தியா, ஈரானுடனான தனது பொருளாதார உறவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; உலகம் மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள இத்தருணத்தில், சர்வதேச சமூகத்தோடு இணைந்து இந்தியா செயல்பட வேண்டும்'' என அறிவுரை வழங்கியிருக்கிறார். (தி ஹிந்து, 7.08.07, பக்:10).

ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படையணியில் சேர்ந்து விடுங்கள் என்ற நெருக்குதலைத் தவிர, இந்த அறிவரைக்கு வேறு பொருள் கிடையாது; இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து போடப்பட்டுள்ள ஹைட் சட்டமோ, ""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு இசைவாக இருக்க வேண்டும்'' என நிபந்தனை விதிக்கிறது.
... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

நாமக்கல் சிபி said...

விரிவாக அறியத்தந்தமைக்கு நன்றி!