தமிழ் அரங்கம்

Sunday, December 21, 2008

மக்களைப் பற்றிப் பேசும் துரோகத்துக்காக போராடி மரணிப்போம்

தமிழ் மக்களைப் பற்றி பேச மறுப்பதையே, தியாகம் போராட்டம் என்கின்றனர். ஒரு இனத்தை இன்று அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும், இதைத்தான் கூறுகின்றனர். இதைத்தான், இன்று புலிகள் முதல் பேரினவாதம் வரை கூறுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது, தேசியம், யுத்தம் பற்றி மட்டும் பேசக் கோருகின்றனர்.

தமிழ் மக்களை யார் எப்படி கொடுமைப்படுத்தினாலும், அதைப் பார்க்காது இருப்பதே தேச நலன் என்கின்றனர். எதையும் பக்கச்சார்பாக பேசவும், ஒன்றையொன்று மூடிமறைத்தும் பேசுவதே மனித சுதந்திரத்தின் அடிப்படைகள் என்கின்றனர்.

தேசியம் மற்றும் யுத்தம் என்ற பெயரில், தமிழ் மக்கள் மேல் திணித்துள்ள கொடுமைகளையும் கொடூரங்களையும் பேசுவது இன்று துரோகமாக உள்ளது. அந்த வகையில் நாம் தொடர்ந்தும் மக்களைப்பற்றி பேசுவதால், துரோகிகளாகவே உள்ளோம்.

எம்மை என்ன செய்யக் கோருகின்றனர். ஒன்றில் பேரினவாதத்தை ஆதரி அல்லது புலிப் பாசிசத்தை ஆதரி என்கின்றனர். நாம் இவ் இரண்டையும் மறுப்பதால், இவர்கள் முன் துரோகியாக மாற்றப்பட்டுள்ளோம்.

எமக்கு வெளியில் பேரினவாத தமிழின அழித்தொழிப்பு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: