தமிழ் அரங்கம்

Monday, June 22, 2009

நாடாளுமன்றமா? லயன்ஸ் கிளப்பா?


அத்வானி, மாயாவதி, ஜெயலலிதா ஆகியோரின் பிரதமர் கனவு கானல் நீராகிவிட்டது. மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கிய ‘மார்க்சிஸ்டு’ கட்சி அதன் கோட்டையிலேயே கலகலத்து விட்டது. 200 தொகுதிகளில்தான் வெற்றிபெறும் எனக் கணிக்கப்பட்டிருந்த காங்கிரசு கூட்டணி 262 தொகுதிகளில் வென்றிருக்கிறது. தொங்குநிலை நாடாளுமன்றமும் குதிரை பேரமும்தான் தேர்தலின் முடிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, காங்கிரசு கூட்டணி நிலையான ஆட்சியை எளிதாக அமைத்துவிட்டது.

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தலைவிரித்தாடின. இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலத்தீன் அமெரிக்க மக்கள், தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல்களில் ‘இடதுசாரி’ கட்சிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி வருகின்றனர். இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐரோப்பிய மக்கள் முதலாளித்துவம் ஒழிக என முழங்கி வருகின்றனர். ஆனால், இந்தியாவிலோ தனியார்மயத்திற்கு மாற்று வேறில்லை எனக்கூறி வரும் மன்மோகன் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த “வரலாற்றுப் பிழை”க்கு யாரைப் பொறுப்பாக்குவது?

No comments: