தமிழ் அரங்கம்

Tuesday, June 2, 2009

புலத்துப் புலிகள் பினாமிகளுக்கு லாடம் கட்டி ஓட்டும், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் கூத்து

உழைத்து வாழும் தமிழனை, உழைத்து வாழும் ஐரோப்பியனுக்கு எதிராக தேர்தலில் வாக்களிக்கக் கோரும் புலத்துப் புலியிசம், தமிழ் மக்களுக்கே எதிரானது. ஐரோப்பிய மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் ஏகாதிபத்திய நலனுக்கு சார்பானது. இதுதான் புலத்து வலதுசாரிய புலியிசமாகும்.
தமிழன் ஒருவன் வென்றால், தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பான். இந்த அடி முட்டாள் தனத்தை கொண்டு தமிழனை ஏமாற்றி தின்னும் கூட்டம் இருக்கும் வரை, இது போன்ற மக்கள்விரோதக் கூத்துகளும் தொடர்ந்து அரங்கேறும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குரல் ஒலித்தால், தமிழனுக்கு விடிவு வந்துவிடுமா!? ஐ.நாவில் குரல் கொடுத்த தமிழன் என்று, எத்தனை கதைகளை, எம் அவலமான இன வரலாறு கண்டிருக்கின்றது. இப்படி பலர் பிழைக்க, ஒரு இனம் ஏமாற்றப்பட்டது. மக்கள் தாமே தமக்கானதை தீர்மானிக்க முடியாத வண்ணம், ஏமாற்றுவது தான் இதில் உள்ள அரசியல் உள்ளடக்கம்.

இதற்கமைய புலிப் பினாமிகளை ஐரோப்பிய தேர்தலில் நிறுத்தி, அழகு பார்க்கும் புலத்துப் புலிகள். ஏதோ தமிழ் மக்களுக்காக அந்த தனிமனிதர்கள் உழைப்பார்கள் என்று கூறி, பிரிட்டன் மற்றும் பிரான்சின் தேர்தல் கூத்தில் களமிறங்கி கதைகள் பல சொல்லுகின்றனர்.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

1 comment:

WE WILL COME BACK said...

ARE YOU SRILANKAN GOVT PAID PERSON?
INDIAN CRICKET TEAM IF THEY PALAYED AGAINST ENGLAND, YOU CAN SUPPORT TO INDIA....WHO THOSE LIVE IN ENGLAND BUT WE CAN NOT SUPPORT TO OUR PEOPLE BECOME POLITICIAN AND WE APPEALED ALL THE POLITICIANS ALL OVER THE WORLD...TO SAVE OUR PEOPLE FROM YOUR SLAUGHTERS AND YOUR FRIEND SRILANKAN SLAUGHTERS..DO YOU KNOW THAT YOU NOT KNOW!