தமிழ் அரங்கம்

Thursday, January 26, 2006

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

பி.இரயாகரன்
25.01.2006


திட்டமெதுவுமின்றி புலிகள் அன்றாடம் தாம் செய்தவற்றை, நியாயப்படுத்தி தாமே கூறுவதே புலிகள் அரசியலாகியது. திட்டமாக வெளியிடப்பட்டவை எவையும், அவர்கள் தமது சொந்த இயக்க நடைமுறையாக கொண்டது கிடையாது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், அவர்களாக வெளியிட்ட சொந்த வேலைத்திட்டம் எதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. இந்த வகையில் கட்டுரையில் சில பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளேன். அன்ரன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் இந்த வகையில் அமைந்ததே. புலிகள் தாம் செய்ததை நியாயப்படுத்த, தம்மை மறுக்கின்ற முரணை உள்வாங்கியதே இந்த நூல். உண்மையில் புலிகளின் லும்பன் தனமான நடத்தைகளுக்கு, அரசியல் முலாம் பூசுவதே புலியின் அரசியலாக உள்ளது. பாலசிங்கமே அதன் பிதாமகன். இந்த நூலின் முன்பகுதி மீதான, சுருக்கமான விமர்சனத்தை இக்கட்டுரை அவர்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலம் செய்கின்றது.

தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானித்ததும், தீர்மானித்துக் கொண்டிருக்கும் புலிகளின் நடவடிக்கைகளில் அன்ரன் பாலசிங்கத்தின் தலையீடே விசித்திரமானது. எப்போதும் புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல் வாதங்களை கண்டுபிடிப்பதைத் தான், அவரின் மதிநுட்பமாக புலிகள் காட்டிவந்தனர். இந்தப் போக்கே புலிகளின் இன்றைய அரசியலாகியது. லும்பன் தனத்தில் புலிகள் செய்வதை நியாயப்படுத்தும் அனைத்து வாதங்களும், இதற்குள் தான் மண்டிக் கிடக்கின்றது. புலிகளின் அன்றாட இராணுவ நடிவக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல், எந்த வித்திலும் மக்களின் சமூக பொருளாதார நலன் சார்ந்தவையாக என்றும் அமையவில்லை. மக்களின் சமூகப்பொருளாதார வாழ்வாதாரங்கள் சார்ந்த, அதற்கேற்ற இராணுவ வடிவங்கள் எதையும் புலிகள் என்றும் கொண்டிருக்கவில்லை. இதுவே இன்றைய எதார்த்தம்.

இந்த எதார்த்தம் ஆயிரக்கணக்கான மக்களின் தலைகளை உயிருடன் உருட்டிவிடுவதில் முடிகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், புலிக்கு இசைவானதாக்கி திரித்து விளக்குவதில் முடிகின்றது. தமிழ்மக்களின் நியாயமான போராட்டம் சிதைந்து சீரழிந்து அது என்னவென தெரியாது உருக்குலைந்து அழுகத் தொடங்கியுள்ளது. மக்களின் சமூகப் பொருளாதார நலன்கள் மறுக்கப்பட்டு, புலிகளின் நலன்கள் முதன்மைபெற்ற ஒரு அரசியல் வடிவமே வெம்பி வீங்கி காணப்படுகின்றது.

இதையே ~~விடுதலை என்ற பாலசிங்கத்தின் நூலின் முதல் கட்டுரை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. "எம்.ஜி.ஆரும் புலிகளும்" என்ற பாலசிங்கத்தின் முதல் கட்டுரை, எம்.ஜி.ஆர் என்ற நடிகனை, மக்கள் விரோதியை, காம வெறியனை, ஒரு ஊழல் பேர்வழியை நியாயப்படுத்துவதில் இருந்து அரங்கேறுகின்றது. அதே தளத்தில், தமது சொந்த கைக் கூலித்தனத்தை; சிறப்பாக எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த எம்.ஜி.ஆர் சினிமா என்ற விளம்பர கவர்ச்சி ஊடகம் ஊடாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்த ஒரு கைதேர்ந்த நடிகன். இவன் ஒரு மக்கள் விரோத பாசிட் கூட. தமிழக மக்களை அடக்கியாண்ட, அவர்களை சூறையாடிய ஒரு கொடுங்கோலன். இந்தக் கொடுங்கோலனை பற்றி புலிகளும், பாலசிங்கமும் கொடுக்கும் படிமமே விசித்திரமானது. பாலசிங்கம் கூறுகின்றார் "… இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர்… அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி" இதுதான் எம்.ஜி.ஆர் பற்றிய புலிகளின் சொந்த அரசியல் மதிப்பீடு. இந்த எம்.ஜி.ஆர் மக்களுக்காக என்னதான் செய்தான். சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல் முதல் சாராயம் காய்ச்சி கொள்ளையடிப்பது வரை அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக இருந்தவன். அரசு சொத்தையும், மக்களின் சொத்துகளையும் முறைகேடாக பயன்படுத்தியவன்;. பல மக்கள் போராட்டங்களை அடக்கியொடுக்கியவன். சில துப்பாக்கி சூட்டை போராட்டங்கள் மீது நடத்தி பலரைக் கொன்றவன். பல பத்தாயிரம் மக்களை போராட்டங்களின் போது கைது செய்து சிறைகளில் தள்ளி தாலியறுத்தவன்;. எம்.ஜி.ஆர் மோகன்தாஸ்சும் தேவாரமும் இணைந்து வடஆர்காடு, தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோதல் என்ற பெயரில் சுட்டு படுகொலை செய்த ஒரு பாசிட். இப்படி பற்பல.

இவனைத்; தான் புலிகள் ஒரு மாமனிதனாக, விடுதலை விரும்பியாக காட்டுகின்றனர். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது" என்கின்றனர். இப்படி புலிகள் ஒரு தலைப்பட்சமாக கூறுவது நிகழ்கின்றது. ஏன் இப்படி கூற முடிகின்றது என்றால் புலிகளின் குறித்த நலன் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து, ஒரு மக்கள் விரோதியை மக்களின் தோழனாக காட்டுகின்றனர். புலிகளுக்கு பணமும், அவர்களின் நடவடிக்கைகளை பினாமியாக ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை மாமனிதர்களாக காட்டுவதே புலிகளின் அரசியல். இதுவே இன்றைய புலிகளின் எதார்த்தப் போக்கும் கூட. அதன் அடிப்படையில் தான் எம்.ஜி.ஆரைப் புகழ்கின்றனர்.

புலிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கோடிக்கணக்கில் கொடுத்த பணம், இந்திய துறைமுகத்தில் இருந்து ஆயுதங்களை கடத்திக் கொடுத்த விவகாரம், மற்றைய இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்து புலிகளிடம் கொடுத்த நிகழ்ச்சி போன்ற பலவே, புலிகள் எம்.ஜி.ஆர் பற்றி கொண்ட அரசியல் நிலைப்பாட்டுக்கு காரணம். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதோ செய்தார் என்ற அடிப்படையில் புலிகள் புகழவில்லை. தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு, பொது அரசியல் நலனை திரித்து விடுவது நிகழ்கின்றது. இந்த அரசியல் வழியைப் போற்றி புகழ்வது நிகழ்கின்றது. நல்லதொரு உதாரணமாக, சிங்கள பேரினவாத கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தமிழக மக்கள் வழங்கிய நிதியை, புலிகளின் குறுகிய நோக்கத்துக்கு முறைகேடாக எம்.ஜி.ஆர் வழங்க முற்பட்டதும், அதை புலிகள் பெற்றுக் கொண்டதுமான நிகழ்வு எதைக் காட்டுகின்றது என்றால் மக்கள் விரோதத் தன்மையின் கூட்டுப் பண்பை வெளிப்படுத்துகின்றது. இந்த மோசடிக்காகவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கி, மருத்துவமனை ஒன்றை அமைக்க உள்ளதாக கூறி, உலகத்தை ஏமாற்றி நாலு கோடி ரூபா பணத்தை பெற்ற நிகழ்வையும், அந்த மோசடியையும் இந்த நூல் கூறத் தவறவில்லை. இது அம்பலமான போது, அதை திருப்பிக் கொடுத்தது ஒருபுறம் நிகழ, எம்.ஜி.ஆர் அதற்கு பதிலாக கறுப்பு பணமாக அதை வழங்கியதை இந்த நூல் சொல்லுகின்றது. இந்த மோசடிப் பணம் எங்கிருந்து எப்படி எம்.ஜி.ஆருக்கு கிடைக்கின்றது?.

ஏழைகளின் நண்பனாக நடித்தபடி மக்களின் பணத்தை கொள்ளை அடித்ததையும், சட்டத்துக்கு புறம்பாக பணமூட்டைகளின் பின்னால் பதுங்கிக் கிடந்த எம்.ஜி.ஆரின் வேஷம் அருவருக்கத்தக்கவை. இதை விமர்சனமின்றி புலிகள் புகழ்வது எதைத்தான் காட்டுகின்றது. ஆம் மக்களின் பணத்தை எப்படியும் சூறையாடி பயன்படுத்தலாம் என்ற புலிகளின் சொந்த சிந்தாந்தத்தையே நியாயப்படுத்துகின்றது. அன்று ஒரு நிதி மோசடிக்காக உருவான அதே புனர்வாழ்வுக்கழகம் தான், இன்று வரை புலிப் பினாமியமாக உலகெங்கும் அத்தொழிலை செய்கின்றது. மக்களுக்கான நிவாரணம் என்ற பெயரில் நடப்பது அப்பட்டமான ஒரு மோசடி. நூல் பெருமையாக பீற்றி ஒத்துக் கொள்வது போல், எம்.ஜி.ஆர் ஆசியுடன் தொடங்கிய மோசடி எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் சமூகப் பாத்திரம் பொதுவாழ்வில் கோமாளியாகவே இருந்தது. எதை எப்படி செய்வான் என்று யாரும் கூற முடியாத ஒரு பச்சோந்தியாகவே இருந்தவன். தற்புகழ்ச்சிக்காக தனக்குத் தானே நிறைய பட்டங்களை சூட்டிக் கொண்டவன். இதைத்தான் இன்று புலிகள் செய்கின்றனர். அரசு சொத்துகளை முறைகேடாக தனிப்பட்டவர்களுக்கு தாரை வார்த்தவன். பல நடிகைகளை மிரட்டி தனது வைப்பாட்டியாகவே வைத்திருந்தவன். அதற்காகவே தனது அதிகாரத்தையும், பணப்பலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தியவன். அவன் உருவாக்கிய வாரிசு பற்றி, மிகச் சரியாக புதியகலாச்சார இதழில் குறிப்பிட்டது போல் "ஒரு மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை. ஆங்கிலக் கான்வென்டிலிருந்து ஆணாதிக்கம் கோலோச்சும் கோடம்பாக்கம் திரையுலகிற்குள் திடீரெனத் திணிக்கப்பட்டு, அங்கே ஒரு அரைக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு, எம்.ஜி.ஆரின் பாசிசக் குரூரங்களை அனுபவித்து, பின்னர் அவற்றையே தானும் உட்கிரகித்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதை நெடியது." என்கின்றது. இதே குரூரங்கள் தான் எம்.ஜி.ஆரின் பண்பு.

தனக்கு பின்னால் ஒரு பொறுக்கி தின்னும் கூட்டத்தையே உருவாக்கி அதில் தன்னைத்தான் மிதப்பாக்கியவன். பெரியாரியவாதியாக கூறிக் கொண்டு, குறி கெட்ட அனைத்தையும் செய்த ஒரு ஏமாற்று பேர்வழி. மக்களுக்காக அழுவதற்காகவே தனது கண்கள் இரண்டிக்கும் "கிளிசரினை" விட்டு அழும், கைதேர்ந்த ஒரு நடிகனாகவே வலம்வந்தவன். தமிழீழப் போராட்டத்தை தனது சொந்த பிழைப்புவாத போட்டி அரசியலுக்கு ஏற்ப திறமையுடன் பயன்படுத்தியவன். அதில் புலிகள் இணைந்து கொண்ட நிகழ்வை, நியாயப்படுத்தும் அரசியல் விளக்கம் தான் பாலசிங்கத்தின் இந்தக் கட்டுரை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரமே ஏகாதிபத்திய சதி; தான். சோவியத் ஏகாதிபத்தியத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட உலகளாவிய முரண்பாட்டில், அமெரிக்கா சார்பாக இலங்கைப் பிரச்சனையில் களமிறக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசு சோவியத் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டிய காலத்தில், அது சார்பான தமிழ் இயக்கங்களை உருவாக்கியதுடன் இருந்தவற்றை வளர்த்தெடுத்தனர். இதனடிப்படையில் அமெரிக்காவும் தனது பங்குக்கு தனக்கேற்ற குழுக்களை வளர்த்தெடுக்க முனைந்தன. இதன் போதே எம்.ஜி.ஆர் என்ற நடிகனூடாக, புலிகளுக்கு தீனிபோட்டு வளர்த்தெடுக்கப்பட்டனர். இந்த உண்மையின் ஒரு பக்கத்தை மூடிமறைத்தபடியே இந்த நூல் வெளிக்கொண்டு வருகின்றது.

புலிகள் இயக்க வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய பணமும், ஆயுதங்களுமே மூலகாரணம் என்பதை இந்த நூல் ஒத்துக் கொள்கின்றது. தமிழ்மக்கள் தான் புலிகளை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர் என்று பின்னால் கூறுவது அபத்தமாகும். அன்னிய நிதிகளும், அன்னிய ஆயுதங்களும் தான், லும்பனான புலிகளைப் புலிகளாக்கியது. புலிகளின் அனைத்து நடவடிக்கையும் இதைத் தாண்டி நகரவில்லை. மக்களின் சமூக பொருளாதார உறவுக்கு வெளியில் இப்படிதான் புலிகள் உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். அவர்களின் எடுபிடிகளாக கூட இருந்தனர். 14.05.1985 இல் அனுராதபுரத்தில் அப்பாவி மக்கள் மேலான தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர். அன்று வில்பத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் இத் தாக்குதலை நடத்தியதன் பின்னனியில் இந்திய அரசு இருந்ததை, பின்னால் பாலசிங்கம் இந்தியாவுக்கு எதிரான பேட்டியொன்றில் குறிப்பிடுகின்றார். இந்த தாக்குதலை அந்தநேரம் புலிகள் மறுத்றுவிட்ட மறுப்பறிக்கையும், பின்னால் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதையும் நாம் எப்படிப் சுய அறிவுடன் புரிந்து கொள்வது.

முதலில் தாக்குதலை தாம் செய்யவில்லை என்றதும், பின் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதும் இங்கு அரசியல் நேர்மையற்ற போக்கை அம்பலமாக்குகின்றது. மறுபக்கத்தில் இந்த தாக்குதலை செய்ய புலிகள் எதை இலஞ்சமாக பெற்றனர் என்பது மர்மமாகவே உள்ளது. இப்படி சோரம் போகும் அரசியல் வழியும், பின் அதை நியாயப்படுத்தும் அரசியலும் தான் இன்று வரை புலி அரசியலாக உள்ளது. இதைத்தான் பாலசிங்கத்தின் இந்த கட்டுரை செய்கின்றது. தமிழ் மக்களின் போராட்டம் மக்கள் நலன் சாhந்ததாக அமையாத வரலாற்றுக்கு, இந்த இரண்டு பிரதான ஏகாதிபத்திய தலையீடும் முக்கியமான காரணமாகவே அமைகின்றது.

ஆனால் மக்களை ஏமாற்றவும், தம்மை மக்கள் நலன் சார்ந்ததாக காட்டவும் புலிகள் பின்நிற்கவில்லை. புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை உள்ளடங்கிய கொள்கை விளக்க நூலை (இது ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்தது.) "சோசலிச தமிழீழம் எனறே தலைப்பிடுகின்றனர். அதில் புலிகளின் அரசியல் இலட்சியம் என்ற பகுதியில் ~~தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு … அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். ஆனால் அதையா இன்று அவர்கள் கொண்டுள்ளனர்? அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ….ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்… " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கும் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. … வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு… பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி அந்த அறிக்கை நீண்டு செல்லுகின்றது.

இதை நாங்கள் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் அடிப்படையான ஆரம்ப அரசியல் ஆவணம் இப்படித் தான் சொல்லுகின்றது. இப்படித் தான் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டனர். இன்று இந்த இலட்சியத்தையே கைவிட்டுவிட்டனர். இன்று புலிகளில் உள்ள 99 சதவீதமானவர்களுக்கு தாங்கள் இப்படி ஒரு அரசியல் அறிக்கை விடட்தே தெரியாது. ஏன் பாலசிங்கத்துக்கே இது ஞாபகம் இருக்காது. மக்களின் நலன்களை கூறி இயக்கம் கட்டியவர்கள், அதை அப்படியே புதைகுழிக்கு அனுப்பினர். தமது சொந்த திட்டத்தை மட்டுமல்ல, அந்த கருத்தை கோரியவர்களையும் கூட புதைகுழிக்கு அனுப்பினார்கள். மக்கள் நலனை இந்த திட்டத்தின் ஒரு பகுதி தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதை கைவிட்ட அனைத்து செயல்பாடும் மக்கள் விரோதமானவையே. இன்று புலிகளின் திட்டத்தில் உள்ளவற்றையே வலியுறுத்தினால் கிடைப்பது மரணதண்டனை. புலியின் எதிரியாக, துரோகியாக, எட்டப்பனாக, கைக்கூலியாக பலவாக புலிகள் வருணிப்பது அன்றாட விடையமாகிவிட்டது. சொல்லப்போனால் முன்னைய புலிகளின் திட்டத்தை முன்னிறுத்தி போராட்டத்தைக் கோரினால் அல்லது போராடினால் அதற்கு பரிசாக கிடைப்பது மரண தண்டனைதான்;

இதனடிப்படையில் ஏற்பட்ட முரண்பாடுதான் புலிகளின் முன்னைய பிளவாகியது. அதை மறைக்க பாலசிங்கம் முனைகின்றார். அதை அவர் "இயக்கத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டதால் அவர் (உமாமகேஸ்வரன்) அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புளாட் என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்" என்று கூறுகின்றார். உண்மையில் உமாமகேஸ்வரன் இயக்கப் பிளவில் சம்பந்தப்படவேயில்லை. உமாமகேஸ்வரன் இயக்கத்தைவிட்டு பாலசிங்கம் கூறும் காரணத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தவர். அவர் தனிமனிதனாகவே வெளியேற்றப்பட்டு வெளிச் சென்றவர். உமாமகேஸ்வரன் புலிகளில் இருந்தது வரை, அவர்தான் அதன் தலைவராக இருந்தவர்.

இயக்கப் பிளவு பின்னால் ஏற்பட்டது. மேற்கூறிய கோட்பாட்டின் அடிப்படையில் பிளவாகியது. இந்தப் பிளவில் சுந்தரம், நாகராஜா வாத்தி, ஐயர், நெப்போலியன் … என இருபது பேரளவில் விலகினர். இதன் பின்பு இவர்கள் கூட குறிப்பிட்ட கோட்பாட்டில் இயங்காமல், பழையபடி புலிப் பாணியில் இயங்கியதால் பலர் (சுந்தரம் போன்றவர்களைத் தவிர) விலகினர். இதன் போதும் பின்புமே உமாமகேஸ்வரனை சுந்தரம் தன்னுடன் இணைத்துக் கொண்டவர். பழையபடி புலிப்பாணியில் இயங்கத் தொடங்கியது.

இங்கு ஒரு வரலாற்றையே பாலசிங்கம் திரித்துக் காட்டுவதுடன், முதல் பிளவை அரசியலுக்கு வெளியில் ஒரு பொம்பிளைப் பிரச்சனையாக காட்டமுனைகின்றார். அதனால் ஏற்பட்ட உடைவாக காட்டுவது நிகழ்கின்றது. இதை எம்.ஜி.ஆர் என்ற பொம்பளை பொறுக்கி அங்கீகரித்தாக, பாலசிங்கம் தானாகவே கூறுகின்றார். புலிகளில் ஏற்பட்ட பிளவு அரசியல் ரீதியானது. அந்த அரசியல் மக்கள் நலனை கோரியது. ஆனால் அது தொடர்நது அப்படி இயங்க முடியவில்லை. உண்மையில் புலிகள் வெளியிட்ட "சோசலிச தமிழீழம்" என்ற அரசியல் அறிக்கையின் உள்ளடகத்தை புலிகளே சமகாலத்தில் எப்படி மறுக்கின்றனர் என்பதற்கு பாலசிங்கமே இந்த நூலில் அதை தன்னையறியாமலேயே விளக்குகின்றார்.

அவர் அதை எம்.ஜி.ஆர்க்கு கூறும்போது "விடுதலைப் புலிகள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம்…. ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்" என்கின்றார். கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றால் எப்படி "சோசலிச தமிழீழம்" வரும். புலிகள் வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கப் போவதாக கூறிய இயக்கம். ஆனால் தாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். ஒன்றுக்கு பின் ஒன்று முரணாகவே மக்களையும் சமூகத்தை ஏமாற்றும் ஒரு அரசியல் மோசடியைத் தவிர, வேறு எதையும் இது கூற முனையவில்லை. ஏன் நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து விடுத்த கூட்டு அறிக்கையில் "தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிச புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்" தமது இலட்சியம் என்று கூறியே பிரபாகரன் கைnழுத்திட்டார். இன்றைய அரசியல் துரோகிகளும் அன்றைய விடுதலை இயக்கமும் கூடத்தான் கையெழுத்திட்டனர். இதே சமகாலத்தில் தான் பாலசிங்கம் தாங்கள் சோசலிச இலட்சியத்தை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். சாதி ஒழிப்பு, உழைக்கும் மக்களின் சுபீட்சம் என்று எதையும் பெற்றுத்தர புலிகள் போராடப் போவதில்லை என்பதையே பாலசிங்கம் இந்த நூலில் மூடிமறைத்து கூறுகின்றார். அவை மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் மோசடியான வார்த்தைப் பிரயோகங்களே என்பதைத் தான், முன்னைய தமது சொந்த அறிக்கையை மறுத்து கூறமுனைகின்றார். இப்படி நூற்றுக்கணக்கான எடுத்துக் காட்டுகளை புலிகளின் முன்னையதுக்கும் பிந்தியதுக்கும் இடையிலும், சமகாலத்திலும் எடுத்துக் காட்டமுடியும். ஒரு கட்டத்தில் இந்த மோசடியை எம்.ஜி.ஆரின் நிலையுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். "… நீங்கள் ஏழைகளின் துயர் துடைக்கத் தொண்டாற்ற வில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். எங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்று புல்லரிக்கும் வார்த்தைகள் மாயாஜாலத்தை அடிப்படையாக கொண்டது. எம்.ஜி.ஆர் எதை தனது மக்களுக்கு எப்படி செய்தாரோ, அதையே பிரபாகரன் எமது மக்களுக்கு செய்ய முனைகின்றார். இதைத்தான் பாலசிங்கம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றார். தமிழகத்தின் கதியே எமது கதி என்று பாலசிங்கத்தை விட யாரும் இதை திறம்பட விளக்கமுடியாது. தமிழகத்தில் சாதியம், ஆணாதிக்கம், சுரண்டலும் கோலோச்சும் வக்கிரமே, எமது போராட்டத்தின் இறுதி முடிவு என்பதைத் தான் இது பறைசாற்றி நிற்கின்றது.

பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அரசியல் வேறுபாட்டை விளக்குவதே, தாம் அறிவித்த சொந்த இலட்சியத்துக்கு முரணாது. பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அமைப்பு வேறுபாட்டை விளக்கும் போது "சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்க்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகள் இலட்சிய உறுதிப்பாடும் எவையும் மற்றைய அமைப்பினரிடம் காணமுடியாது" மற்றைய இயக்கத்தில் இருந்து புலிகள் இதனடிப்படையில் வேறுபடுவதாக கூறுவது, அரசியலின் செயலாற்றல் இல்லாமையின் ஒரு வெளிப்பாடாகும். இங்கு அவர்கள் தமது சிறப்பு தகுதியாக உயிரை அர்ப்பணிக்கும் இயல்பு என்ற பண்பு, போராட வந்த அனைத்து இயக்க உறுப்பினர்களினதும் பண்பாகவே இருந்தது. இதை புலிகள் உருவாக்கவில்லை. போராட வந்த மனிதர்களிடம் அது இருந்தது. அதனால் அவர்கள் போராட வந்தனர். அதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. புளாட்டுக்குள் நடந்த நூற்றுக்கணக்கான உட்படுகொலையின் (1983-1986) போது, உயிரைத் தியாகம் செய்யும் உன்னதமான பண்புடன், மக்களின் உயரிய நலனுக்காக அவர்கள் போராடி மரணித்தனர். இப்படி பல தளத்தில் பலர் புலிகளின் வரலாறு எங்கும், புலிகளின் மக்கள் விரோத போக்குக்கு எதிராகவும் மாண்டுள்ளனர். மக்களுக்காக போராடுவது இன்று பொதுவாக புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலில் காணமுடியாத ஒன்று. இலட்சிய மனப்பாங்குடன் போராட வந்த அனைவரும் தமது உயிரை தியாகம் செய்யும் உயர் பண்புடன் தான் போராடினர். எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழன் என்ற போராட்ட மரபை எப்படி எம்.ஜி.ஆர் தனது சொந்த பிழைப்புவாத அரசியலுக்கு குழிதோண்டி புதைத்து அதில் வக்கரித்து கிடந்தானோ, அதையே புலிகளும் செய்கின்ற ஒரு வரலாற்று சாட்சியாகவே இந்த நூல் உள்ளது.
24.08.2005

Wednesday, January 25, 2006

ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல்

ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல்

மனித நேயத்தை, மனிதத்துவத்தை விரும்பும் ஒருவனுக்கு இவை நிகழ்வது உண்டு. அற்பர்கள் முதுகுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு எறியும் அவதூறுகள், வரலாற்றின் குப்பையில் தான் வீழ்கின்றன. சிறிரங்கன் பற்றிய பதிவொன்று, மிகவும் கேடுகெட்ட வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. திண்ணையில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை தொடர்பான விடையமாக இருந்தது. சிறிரங்கன் திண்ணைக்கு குறித்த கட்டுரையை அனுப்பிய போது, அதில் பரமுவேலனின் பெயர் இல்லாமையை அடிப்படையாக கொண்டு, பரமுவேலனும் சிறிரங்கனும் ஒரே ஆட்கள் என்று கூறியதன் பின்னால், வக்கிரமான பதிவுகள் இடப்பட்டன.

சிறிரங்கனின் கருத்துகளை கருத்தாக எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைகள் எல்லாம், இதை ஏதோ ஒரு பெரிய விடையமாக ஊதிப்பெருக்கி வம்பளந்தனர். இந்தளவுக்கும் பரமுவேலன் எந்த ஆட்சேபனையும் இதில் எழுப்பவில்லை. சிறிரங்கன் பல்வேறு விடையங்களை பற்றிச் சொந்தமாக, சொந்தப் பெயரில் எழுதுபவர். அவர் ஒன்றும் பினாமியாக பதிவிடுபவரோ, எழுதுபவரோ அல்ல. தனக்கென்ற கருத்துதளத்தை தனது சொந்த ஆளுமையுடன் எழுத முற்படுபவர். அவரின் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதிக்க வக்கற்றவர்கள், இணைய விவாதத் தளத்தில் வம்பளக்கவே விரும்புகின்றனர். அறிவும் நேர்மையுமற்ற, சொந்தக் கருத்து வளமற்றவர்கள், எப்போதும் உருப்போடும் மதவாதிகள் போல, துப்பாக்கியின் பலத்தை நம்பி கருத்தையே விபச்சாரம் செய்ய விரும்புகின்றனர்.

இங்கு சிறிரங்கன் தெளிவாக விளக்கிய போது, அவர் விரும்பும் கட்டுரைகளை திண்ணைக்கு அனுப்பிய போதும், திண்ணையில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டுரையாளரின் பெயரை வெளியிடத்தவறிவிட்டனர். இப்படியான ஒரு காரணத்தைப் பற்றி அக்கறையின்றி பதிவிட முனைந்தவர்கள் அறிவோடு நேர்மையாக எதையும் எழுத முற்படவில்லை. சம்பந்தமில்லாத வகையில் சொந்த நேர்மையீனத்தை, ஒழுங்கீனத்தை வம்பளந்தனர்.

இரண்டாவது விடையமாக அப்படித்தான் பரமவேலனும் சிறிரங்கனும் ஒரே நபர்கள் என்று வைப்போம், அதில் என்ன தவறு காண்கின்றீர்கள். ஐயா தூற்றிய புண்ணியவான்களே, ஒழுக்கவாதிகளே அதில் என்ன தவறு உண்டு? ஒருவர் பல பெயரில் தளம் வைத்திருந்தால் தேசவிரோதக் குற்றமோ? தமிழ் மணம் அப்படி கூறுகின்றதோ!

ஒன்றுக்கு மேற்பட்ட தளம் வைத்திருந்தால், ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றில் கருத்திட்டால் நானும் தான் விமர்சிப்பேன். அப்படி இருந்தால் விமர்சிக்கலாமே ஒழிய தூற்ற முடியுமா!

இதைப் பற்றிப் பதிவிடப் போனவர்கள் அவரின் மணைவி, குழந்தைகள் எல்லோரையும் இழுத்து வைத்து விவாதிப்பதில் என்ன நேர்மை உங்களிடம் உண்டு. இங்கு அப்படி கூறுவதன் மூலம், மிரட்டும் வக்கிரம் அரங்கேறியது. பதிவுகளின் நல்லபிள்ளையாக வேஷம் போடுவதும், அனாமதேயங்களாக வேஷம் போட்டு வரும் போது தூசணம் முதல் சகல வக்கிரத்தையும் தமிழ் தேசிய மொழியில் கொட்டித் தீர்ப்பது எந்த வகையில் நேர்மையானது.

இதை புலித் தேசியத்தின் பெயரில் நிகழ்த்துவது அன்றாடம் நடக்கின்றது. தமிழ் மணம் அதை நன்றாகவே கண்டு உணருகின்றது. கருத்தால் எதிர்கொள்ள வக்கற்று, கருத்துத் தளத்தின் மீது துப்பாக்கி முனையை நீட்டியபடி, தமிழ் மணத்தில் வந்த வக்கரிப்பது தான் உங்கள் நீதியோ!

சிறிரங்கன் பல்வேறு சமூகம் சார்ந்த விடையங்களை விவாதிப்பவர். புலித் தேசியத்தை மட்டும் விமர்சித்தால் சீறிக் கொண்டு வரும் உங்கள் பின்னால் இருப்பது, உருப்போடும் மலிவு அரசியல் தான். அது தர்க்க ரீதியாக கூட பலமற்றது. சிறிரங்கனின் நேர்மையை, ஒழுக்கத்தை கேள்வி கேட்பது தவறல்ல, அதற்கு முன் அதை நீங்கள் நேரடியாக நேர்மையாக உங்களை அறிமுகப்படுத்திபடி கேளுங்கள். உங்களை நீங்கள் யார் என்று அறிமுகம் செய்தபடி கேட்பது தான் நேர்மை. அது தான் ஒழுக்கம். அதைவிடுத்து முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு தூற்றுவது தான் இன்றைய புலித் தேசியம் என்றால், அது தான் உங்கள் மனித நாகரீகமோ!

தமிழ் மணத்தில் புலித் தேசியத்தின் பெயரில் எத்தனை தூசணங்கள், எத்தனை வக்கிரங்களை அரங்கேற்றும் போது, அங்கு ஒழுக்கம் பற்றியும் நேர்மை பற்றியும் எதுவும் தெரியாத பூனைமாதிரி இருந்து பால்குடிப்பவர்கள், திடீர் என்று பாய்ந்து குதறுகின்றனர்.

குதறும் போது கூட அறிவு நேர்மை எதுவுமற்ற வக்கிரப் புத்தியைக் காட்டுகின்றனர். கார்ல் மார்கஸ் கூறியது போல் அற்பவாதிகள் சொந்தக் கருத்தற்றவர்கள் "தன்னுடைய மிகவும் முட்டாள்தனமான அற்பக் கருத்துரைகளையும், சாதாரணச் செய்திகளையும் தத்துவஞானிகளுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகின்றது" சொந்த வக்கிரங்களை, தாங்கள் அன்றாடம் உருப்போடும் வழிபாட்டு நம்பிக்கையை, தமது சொந்த அறிவிலித்தனத்தை, தலையில் சுமந்து வைத்துள்ள முட்டாள் தனத்தை எல்லாம் மூட்டைகட்டி குதியம் குத்துகின்றனர்.

சிறிரங்கனின் கருத்துக்களில் விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர் சமூகத்தை நேசித்து எழுதுகின்றார். மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்த முனைகின்றார். அவர் சமூகத்தின் பல்துறை சார்ந்து நின்று எழுத முனைகின்றார். அவரின் மனித நேயத்தை, மனிதப்பற்றை இழிவுபடுத்துகின்ற நீங்கள், எப்போதும் எல்லாவிடையத்திலும் அக்கறைப்படுபவர்கள் அல்ல. புலித்தேசியத்தின் விசுவாசிகளாக, உருப்போடப்பட்ட மதஉபதேசங்களைப் போன்று அற்ப மனிதர்களாக மட்டும் ஏன் நீங்கள் காட்சியளிக்கின்றீர்கள்.

Tuesday, January 24, 2006

உலக வர்த்தகக் கழக

உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம் :
மறுகாலனியாதிக்கத்தின் பிடி இறுகுகிறது

தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் இந்திய விவசாயமும், சிறுதொழிற்துறையும், வங்கி, காப்பீடு, கல்வி போன்ற சேவைத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது, தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகள் அனைத்திலும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த மாற்றங்கள்தான் திணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஏழை நாடுகளின் இம்மூன்று துறைகளையும் ஒரே அடியில், முற்றிலுமாகத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஏகாதிபத்திய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் முயன்று வருகின்றன.

கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் 2001ஆம் ஆண்டு நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் நான்காவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, இத்துறைகள் குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வர, ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகின்றன. ஏழை நாடுகளின் ஆளும் கும்பலுக்குச் சில சலுகைகளைக் கொடுப்பதன் மூலம், உடன்பாட்டைச் சாதித்துவிட ஏகாதிபத்திய நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சதித் திட்டத்திற்கு உலக வர்த்தகக் கழகம் சூட்டியுள்ள பெயர்தான் ''தோஹா வளர்ச்சி சுற்று பேச்சுவார்த்தை!''

இந்த நோக்கத்தை மையமாக வைத்து, மெக்சிகோ நாட்டில் உள்ள கான்கன் நகரில் 2003ஆம் ஆண்டு உலக வர்த்தகக் கழகத்தின் ஐந்தாவது அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிற்கு எதிராக உலகு தழுவிய அளவில் எழுந்த எதிர்ப்பாலும்; ஏழை நாடுகளைப் பிரித்தாளும் ஏகாதிபத்திய நாடுகளின் சதி வெற்றி பெற முடியாமல் போனதாலும்; ஏழை நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எதிர்பார்த்த சலுகைகள், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து கிடைக்காததாலும் இந்த ஐந்தாவது மாநாடு தோல்வியில் முடிந்தது.

இதன்பின், 2004 ஜூலையில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் கூட்டத்தில் ''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுவார்த்தைகள்'' குறித்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையே ஓர் சமரச உடன்படிக்கை ஏற்பட்டது.

இதன்படி, அரசாங்கம் நடத்தும் ஏலங்களில் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களைப் போல கலந்து கொள்ளும்படி, ஏழை நாடுகளின் அரசாங்கக் கொள்முதல் கொள்கையை மாற்றியமைப்பது

ஏழை நாடுகளின் எந்தத் தொழிலிலும் பன்னாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் மூலதனம் போடுவதற்கு முழுச் சுதந்திரம் அளிப்பது

ஏழை நாடுகளின் தொழிற் போட்டி சட்டத்தை மாற்றியமைப்பது ஆகிய அம்சங்களைப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்கிக் கொள்வது என்றும்; விவசாயம், தொழிற்துறை காப்பு வரிகள், சேவைத் தொழில் குறித்து மட்டும் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இச்சமரச ஏற்பாட்டின் பின், ஹாங்காங் நகரில் டிசம்பரில் மாதம் இரண்டாவது வாரம் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் ஆறாவது அமைச்சர்கள் மாநாட்டில், இந்த அம்சங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்களின் வேளாண் பொருட்களுக்குக் கொடுத்து வரும் ஏற்றுமதி மானியத்தை 2013ஆம் ஆண்டோடு நிறுத்திவிட வேண்டும்.

வேளாண் பொருட்கள் ஏழை நாடுகளில் அளவுக்கு அதிகமாக இறக்குமதியாகும் பொழுது, அல்லது அந்நாடுகளின் வேளாண் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள், வேளாண் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வையை உயர்த்திக் கொள்ளலாம்.

தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள், தீர்வைகளைக் குறைப்பதில் ஏழை நாடுகளுக்குச் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக, குறிப்பிட்ட சில உற்பத்திப் பொருட்களை, தீர்வை குறைப்பு வட்டத்துக்குள் கொண்டு வராமல் இருக்கும் சலுகை ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்.

இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அடுத்த ஆண்டிற்குள் முடிவு எடுக்கப்படும். தாவர வகைகள், நுண்ணுயிர்களின் மீது காப்புரிமை கோருவது; சேவைத் தொழிலைத் தாராளமயமாக்குவது குறித்து ஏழை நாடுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என இந்த ஹாங்காங் அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஹாங்காங் அறிக்கை உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள 149 உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பாக உலக வர்த்தகக் கழகத்தில் நடந்த விவாதங்களைக் காட்டி, உலக வர்த்தகக் கழகத்தை ஜனநாயக அமைப்பாகச் சிங்காரிக்கிறார்கள். ஆனால், ஏகாதிபத்திய நாடுகள் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் ஏற்றுமதி மானியத்தை 2010ஆம் ஆண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஏழை நாடுகளின் சாதாரண கோரிக்கையைக்கூட ஏகாதிபத்திய நாடுகள் விவாதத்தின் பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன.

ஐரோப்பிய யூனியன், தனது பொது விவசாயக் கொள்கையை 2013ஆம் ஆண்டில் பரிசீலிக்கும் வரை, மானியக் குறைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்திருந்தது. அமெரிக்கா, 2008 தொடங்கி 2013க்குள் தனது ஏற்றுமதி மானியத்தில் 53 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக, ''உலக வேளாண் வணிகத்தில் துணிச்சலான சீர்திருத்தங்கள்'' என்ற திட்டத்தில் அறிவித்திருந்தது. இதன்படிதான், ஏற்றுமதி மானியத்தை நிறுத்திக் கொள்ளும் இலக்காக 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன், கடந்த 200203ஆம் ஆண்டில் மட்டும் தனது நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், விவசாய கம்பெனிகளுக்கும் கொடுத்துள்ள மொத்த மானியம் 3,60,000 கோடி ரூபாய். இதில், ஏற்றுமதிக்காக கொடுக்கப்பட்ட மானியம் 15,750 கோடி ரூபாய்தான். அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் பல்வேறு விதமான மானியங்களில், 5 சதவீதம் கூடப் பெறாத இந்த ஏற்றுமதி மானியத்தை மட்டும்தான், 2013ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளன. மலையைக் கிள்ளி எலியைப் பிடித்த கதையாக, இந்த அற்பமான சலுகைதான் உலக வர்த்தக கழகத்தைச் சேர்ந்த 125 ஏழை நாடுகளுக்குக் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா, தனது நாட்டு பருத்தி விவசாயிகளுக்குக் கொடுத்துவரும் மானியத்தை மட்டும் 2008ஆம் ஆண்டு முதல் நிறுத்திக் கொள்வதாக, இம்மாநாட்டில் டாம்பீகமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் ''பெரிய மனதால்'' பலன் அடையப் போவது நான்கே நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகர்கள்தான்.

இது ஒருபுறமிருக்க, உலக வர்த்தகக் கழகத்தில் எவ்வளவுதான் சலுகைகள் வழங்கப்பட்டாலும், 40 மிகவும் வறிய ஏழை நாடுகளுக்கு, எந்தவொரு பலனும் கிட்டப் போவதில்லை என உலக வங்கியே வெளிப்படையாகக் கூறியிருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, தாராளமயத்தின் ஆதரவாளர்களோ, இந்த மாநாட்டு அறிக்கை ஏழை நாடுகளின் விவசாயிகளுக்கு சொர்க்க வாசலையே திறந்து விட்டதைப் போலப் பீற்றிக் கொள்கிறார்கள். ''சமனற்ற போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த கட்டாயத்தில் இருந்து இந்திய விவசாயிகள் தப்பித்து விட்டதாகவும்; அவர்கள் ஏற்றுமதி செய்வதற்குப் புதிய சந்தைகள் கிடைத்திருப்பதாகவும்'' இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தாராளமயத்திற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்டா பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள்? ஒரிசாவையும், மகாராஷ்டிராவையும் சேர்ந்த பழங்குடி இன மக்களும், அவர்களின் குழந்தைகளும் ஒருவேளை சோறுகூடக் கிடைக்காமல் பட்டினியால் செத்த பொழுது, அவர்களுக்கு ரேசன் அரிசியை இலவசமாகத் தர மறுத்தது, மைய அரசு. அதேசமயம் வெளிநாடுகளுக்கு மானிய விலையில் அரிசியையும் கோதுமையையும் ஏற்றுமதி செய்தது. அந்நியச் செலாவணிக்காக நடந்த அந்த வியாபாரத்தை நியாயப்படுத்துபவர்களால் மட்டுமே, ஹாங்காங் அறிக்கையைக் கொண்டாட முடியும்.

தாராளமயத்தின் பின் விவசாயத்தில் நுழைந்துள்ள ஐ.டி.சி. போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காகவே விவசாயம் செய்யும் புதுப்பணக்கார விவசாயிகள் இவர்களுக்குத்தான் ஹாங்காங் அறிக்கை இலாபகரமானதாக இருக்குமேயொழிய, கந்துவட்டிக்காரனிடம் கடன்பட்டு விவசாயம் செய்யும் சிறிய நடுத்தர விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பலனும் கிட்டப் போவதில்லை.

உலக வங்கியின் கட்டளைப்படி, கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியம் படிப்படியாக வெட்டப்பட்டு, ஏதோ பெயரளவிற்குத்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய மானியம் என்பதே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்ட நிலையில், அதில் இனியும் வெட்டுவதற்கு மிச்சம் எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான், இதுவரை மானியத்தை வெட்ட மறுத்துவந்த அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் 2013இல் ஏற்றுமதி மானியத்தை நிறுத்தும்பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் மானியத்தைக் குறைக்க வேண்டியதில்லை என்ற ''சலுகை'' வாரி வழங்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பே, இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, 1,429 வேளாண் பொருட்களை, எங்கிருந்து வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற ''சீர்திருத்தம்'' நம்நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தத் தாராள இறக்குமதி, ரப்பர், தேயிலை, காபி, பருத்தி, தென்னை, எண்ணெய் வித்துக்கள், பழங்கள், பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பல இலட்சக்கணக்கான விவசாயிகளைப் போண்டியாக்கி, அவர்களை விவசாயம் செய்ய முடியாமல் முடக்கிப் போட்டு விட்டது.

விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரும் வேலைவாய்ப்புகளை வழங்கிவந்த சிறு தொழிற்துறைக்குக் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளும், பாதுகாப்பும் தாராளமயத்தின் பின் நீக்கப்பட்டதால், இந்தியாவெங்கும் பல இலட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடிக் கிடக்கின்றன. இப்படி விவசாயமும், சிறு தொழில் துறையும் அரசால் கைவிடப்பட்டு, அழிக்கப்பட்ட பிறகு, தாராள இறக்குமதியில் இருந்து இத்தொழில்களைப் பாதுகாக்க உலக வர்த்தகக் கழகத்தால் சலுகைகள் வழங்கப்படுவது குரூர நகைச்சுவையாகத்தான் இருக்க முடியும்!

அதனால்தான், இந்த மாநாட்டை எதிர்த்து ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகளும், உழைக்கும் மக்களும், ''உலக வர்த்தகக் கழகம், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய பறவைக் காய்ச்சலைவிட மிகவும் அபாயகரமானது'' என முழக்கமிட்டார்கள்.

வெறும் மூங்கில் கழிகளைக் கொண்டு ஹாங்காங் போலீசாரோடு மோதிய தென்கொரிய நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ''நாங்கள் தீவிரவாதிகள் கிடையாது. எங்களின் வாழ்க்கை எப்படிச் சீரழிந்து போய்விட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம்'' என்றார்.

ஹாங்காங் நகரத் தெருக்களில் உலக வர்த்தகக் கழகத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள், சலுகைகள் கேட்டோ, அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளைத் திறந்துவிடக் கோரியோ போராடவில்லை. மாறாக, ஒரு மோசமான ஒப்பந்தத்தைவிட, ஒப்பந்தம் போடாமல் கலைவதே மேலானது என்று தான் அவர்கள் கோரினார்கள்.

''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தையின் தலையெழுத்து முடிந்துவிட்டது'' எனக் கை கழுவி விடப்பட்ட நிலையில், அதற்கு ஹாங்காங் ஒப்பந்தம் உயிர் ஊட்டியிருக்கிறது. உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்த உருகுவே சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு இணையாக, தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தை கருதப்படுகிறது. எனினும், இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே, ஹாங்காங் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறது, நயவஞ்சக காங்கிரசு கும்பல். இந்திய நாடாளுமன்றம், ஏகாதிபத்தியங்கள் ஆட்டிப் படைக்கும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.

காங்கிரசு கூட்டணியை முட்டுக் கொடுக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் ஹாங்காங் மாநாடு குறித்து வர்த்தக அமைச்சர் கமல்நாத்துக்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு, இன்னொருபுறம் அதை எதிர்த்து அறிக்கை போர் நடத்தும் பித்தலாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகளுக்கோ, உள்ளூர் பொறுக்கி அரசியலைவிட, ஹாங்காங் ஒப்பந்தம் ஒன்றும் முக்கியமான தலைபோகும் விசயமாகத் தெரியவில்லை.

1999ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் மூன்றாவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, உலக வர்த்தகக் கழகத்திற்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும், போலி கம்யூனிஸ்டுகள், தன்னார்வக் குழுக்கள், பின் நவீனத்துவவாதிகள், அராஜகவாதிகள் என்ற வானவில் கூட்டணியால்தான் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

''இந்த உலகம் விற்பனைக்கு அல்ல'' போன்ற கவர்ச்சிகரமான ஜனரஞ்சகமான முன் வைத்து இப்போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், உலக வர்த்தகக் கழகம் ஏழை நாடுகள் மீது திணிக்கும் மறுகாலனி ஆதிக்கத்திற்கான தீர்வை, இந்த ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள்ளேயே இவை தேடுகின்றன. இதன் காரணமாகவே, ஏழை நாட்டு விவசாயிகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள், ஒரு அடையாள எதிர்ப்பு என்பதைத் தாண்டி வளர்த்துச் செல்லப்படுவதில்லை. இது மட்டுமின்றி, ஏழை நாட்டு மக்களின் மறுகாலனி ஆதிக்கத்திற்கான எதிரான கோபத்தை மழுங்கடிக்கும் பாதுகாப்பு ''வால்வு''களாகவும் இப்போராட்டங்கள் மாறிவிடுகின்றன.

இதற்கு மாற்றாக, ''சோசலிசமே ஒரே தீர்வு'' என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டிப் போராடும் பொழுதுதான், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும்.
மு செல்வம்
நன்றி புதியஜனநாயகம்

Friday, January 20, 2006

இணங்க வைக்கும் பாலியல் வன்முறை

இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்

பி.இரயாகரன்
18.01.2006

பாரிசில் ஒரு பெண்ணை இணங்க வைக்கும் பாலியல் வன்முறை முயற்சி ஒன்று சந்திக்கு வந்துள்ளது. அதுவும் ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்ணியம் பேசிய ஒருவரால், தலித்தியம் பேசிய ஒருவரால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுவும் புலம்பெயர் இலக்கிய வட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் இதன் எதிர்வினையோ உப்புச்சப்பற்றது. ஏதோ கடமைக்கு கண்டிப்பதைத் தாண்டி, எதையும் இது வெளிப்படுத்தவில்லை. இந்தளவுக்கு சம்பந்தப்பட்ட அரவிந் அப்பாத்துரையை யாரோ ஒரு வழிப்போக்கன் போன்ற பாணியில், புலம்பெயர் இலக்கிய உலகம் கருத்துரைத்துள்ளனர். மானத்தை இழந்தவர்கள் எப்படி செயல்படுவார்களோ அப்படி ஒரு எதிர்வினை.

புலம்பெயர் இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலரும், தம்மை பெண்ணியல்வாதிகளாகவும், முற்போக்கு அரசியல்வாதிகளாகவும், தலி;த்தியல்வாதிகளாகவும், பலவாகவும் பல்வேறு வேஷம் போடுபவர்கள் பலரும் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் முழுமை

அர்விந் அப்பாதுரையின் பாலியல்...

தோழிகளே, தோழன்களே!

இந்த ஆணாதிக்க சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஒவ்வொரு மூலைகளிலும் ஒவ்வொரு கணங்களிலும் பெண்களின்மீதும் குழந்தைகள்மீதும் பாலியல் அத்துமீறல்களும் பாலியல் வன்முறைகளும் வதைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன் இப்பாலியல் வதைகள் தொடர்கின்றன.

தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரும் சட்ட ஆலோசரும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் 13, Rue de aqueduc, 75010 Paris, France என்ற முகவரியில் தனது மொழிபெயர்ப்பு அலுவலகத்தை நடத்தி வருபவருமான அர்விந் அப்பாதுரை தொடர்ச்சியாக பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறார் என்பதை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

அர்விந் அப்பாதுரையின் பாலியல் அத்துமீறல்களின் உச்சக் கட்டமாக 26.12.2005 அன்று இரவு 8.30 மணியளவில் அவரின் அலுவலகத்துக்கு மொழிபெயர்ப்பு உதவி கோரிச் சென்ற பெண்ணொருவர் மீது அவர் பாலியல் வன்முறைக்கு முயற்சித்துள்ளார். 15 நிமிடப் போராட்டத்திற்குப் பின்பு அப்பெண் அவரிடம் இருந்து தப்பித்து வந்ததுடன், இக்கொடுமையை அப்பெண் எமது தோழிகள் இருவர் மூலமாக எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

தனது மொழிபெயர்ப்பாளர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இவ்விதமான பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்தி வரும் அர்விந் அப்பாதுரையை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் நாங்கள் தயாராகவிருக்கிறோம். இக் கொடுஞ்செயல் குறித்து அர்விந் அப்பாதுரையின் சக மொழிபெயர்ப்பாளர்களும் நமது கலை இலக்கிய நண்பர்களும் சமூக அக்கறையாளர்களும் அர்விந் அப்பாதுரைக்கு தொடர்ச்சியான கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

இக் கண்டனத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் உங்களின் பெயர் இணைப்போடு பின்வரும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்."

இதன் கீழ் பலர் கையெழுத்திட்டுள்ளனர். நீண்ட இழுபறியூடாக, வாதப்பிரதிவாதங்களுக்கு ஊடாக, சிலர் கையெழுத்திட மறுத்த நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. சரி பேப்பரில் முண்டுவிழுங்கி புரட்சி செய்த நீங்கள், நடைமுறையில் இதை எப்படி எதிர் கொண்டீர்கள்.


ஏன் இதை பொலிசில் முறையிடவில்லை. சட்டப்படி இதை ஏன் நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லவில்லை.

சம்பந்தப்பட்ட நபரின் அலுவலகத்தின் உள்ளும், வெளியிலும் ஏன் ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. அத்துடன் சம்பந்தப்பட்டவர் அகதி அந்தஸ்து வழங்கு அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருப்பதால், அங்கு ஏன் ஆர்ப்பாட்டத்தைச் செய்யவில்லை.


பாரிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இந்த விடையத்தை (உதாரணமாக துண்டுப்பிரசுரம்) ஏன் எடுத்துச் செல்லவில்லை.


நீங்கள் ஒன்றாக கூடிக் குடித்து கூத்தடித்து கட்டிப்பிடித்து உருண்ட திரிந்த அரசியல் சீராழிவை, ஏன் நீங்கள் சுயவிமர்சனம் செய்யவில்லை.


சம்பந்தப்பட்ட நபர் முன்பும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிந்தும், ஏன் முன்பே இதை அம்பலம் செய்து அவருடன் இருந்த அரசியல் இலக்கிய மற்றும் கூடிக் குடிக்கும் உறவை முடிவுகட்டவில்லை.


இது போன்ற நபர்கள் புலம்பெயர் இலக்கிய உலகில், கொசுக்களாக உள்ள நிலையில், அதை இனம் கணமறுத்து கூட்டாக நீங்கள் ஒப்பமிட்டது ஏன்?




இப்படி பல கேள்விகள் இதன் பின் தொங்கிக் கிடக்கின்றது. இந்த கண்டன அறிக்கை சாதாரணமாக வெளியிடுவது போன்ற உள்ளடகத்தில் உள்ளது. இதை தமிழர்கள் எல்லோரிடமும் கேட்டிருந்தாலும், அவர்களும் கையெழுத்திட்டிருப்பார்கள்;. இதில் இருந்து மாறாக இலக்கியவாதிகள் மட்டும் கையெழுத்திடும் அளவுக்கு, இதில் விசேடமாக எதுவும் இருக்கவில்லை. ஆனால் இலக்கியவாதிகள் மட்டும் கையெழுத்திட்டனர். அதையும் ஒரு இணையத்தில் மட்டும் போட்டனர். இப்படிச் செய்ததன் மூலம் தம்மைத்தாம் புனிதமாக்கிக் கொண்டனர். நகைச்சுவையிலும் நகைச்சுவை. விடையத்தை அவருடன் தொடர்புடைய மக்களுக்கு மறைத்தனர். அத்துடன் அரவிந் அப்பாத்துரை இப்படி செய்ல்பட்டதற்கான சமூக காரணத்தை ஆராய்வதை மிக திட்டவட்டமாக மறுத்தனர்.

பாரிசில் நிதர்சினி என்ற குழந்தையை கற்பழித்து கொன்ற போது கண்டித்தவர்கள் யார்? யாழில் தரிசினி கற்பழிக்கப்பட்ட போது கண்டித்தவர்கள் யார்? அனைவரும் ஆணாதிக்கவாதிகள் தான். அங்கும் கண்டனம். இங்கும் அதே கண்டனங்கள். இயல்பான ஆணாதிக்க சமூக அமைப்பில், இதை ஆணாதிக்கவாதிகளே கண்டிக்கின்றனர். இது ஒரு விசித்திரமானது தான். இந்தியாவின் மலிவு வர்த்தக இதழ்களை வாசிக்கும் இலக்கிய வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை கண்டிக்கின்றனர். ஆனால் அந்த சஞ்சிகை ஆணாதிக்க வக்கிரத்தை உருவேற்று உள்ளடகத்தில் வெளிவருகின்றது. இதுவே இந்திய சினிமா. கண்டனங்கள் பொதுவான ஆணாதிக்க ஒட்டத்தில் அதன் போக்கில் வெளிவருகின்றன. அதையே இவர்கள் இலக்கியம் என்பார்கள். அர்விந் அப்பாத்துரையின் கதைகளை இவர்கள் வெளியிட்ட போது, அதன் உள்ளடக்கம் அப்படித்தான் இருந்தது.

இவர்கள் முதலில் எதை மறைக்க முனைகின்றனர். அர்விந் அப்பாத்துரையுடன் கொண்டிருந்த உறவை காட்டிக் கொள்வதை மறுக்கின்றனர். பாரிஸ் இலக்கிய சந்திப்பில் குஷ்புவுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவந்த போது, அதை கொள்கையாலும் நடைமுறையாலும் ஆதரித்த இரத்த உறவையும் திடீரென மூடிமறைக்கின்றனர். இவர்கள் தமக்கு இடையில் கொண்டிருந்ததே ஒரு இலக்கிய அரசியல் உறவாகும். இதையே இவர்கள் முதலில் மூடிமறைக்கின்றனர். யாழ் பல்கலைக்கழக பேராசிரியரும் பொங்கு தமிழ் ஊடக வன்முறையைத் தூண்டும் குழுவில் தலைமையிலும் இருந்த கணேசலிங்கம், ஒரு குழந்தையை கற்பழித்து வந்தது நிகழ்ச்சி, குழந்தையின் தற்கொலை முயற்சியினால் அது தெரிந்தபோது புலிகள் எதைச் செய்தனரோ அதையே இவர்கள் செய்கின்றனர்.

அவருடன் ஒன்றாக நாள் கணக்காக கூடிக்குடித்து இலக்கியம் செய்த அந்த அரசியல் விபச்சாரத்தை இவர்கள் சுயவிமர்சனம் செய்யவில்லை. ஏன் பாலியல் பற்றி கூடிக் கதைத்து இதை நியாயப்படுத்தும் தர்க்கவாதத்தை இவர்கள் சுயவிமர்சனம் செய்வில்லை. சம்பந்தபட்ட நபர் தனது இணங்க வைக்கும் நடத்தை சார்ந்த வன்முறை உள்ளடங்கிய முயற்சியை நியாயப்படுத்துவதாக அறிகின்றோம். இவர்களின் அரசியல் ரீதியாக, இலக்கியம் ரீதியாக, இவர்களின் அடிப்படை கோட்பாட்டு ரீதியாக அது சரியானது. இங்கு இணங்க வைத்தல் என்ற எல்லைக்குள், இந்த இலக்கிய உலகம் அதை நியாயப்படுத்துகின்றது.

சித்தாந்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக இணங்கவைக்கும் பாலியலை இவர்கள் அங்கீகரித்து, அதற்குள் விபச்சாரம் செய்கின்றனர். இதனால் தான் அவரின் பாலியல் வக்கிரத்தை இலக்கியம் என்ற பெயரில், பிரசுரித்து அதை கொண்டாடியவர்கள். இன்றும் அதை விமர்சிக்கவில்லை. இந்த இணங்கவைக்கும் வாழ்க்கையை கதையாகவே இவர் எழுதியவர்.

நான் சமர் 25 இல் இக்கதையை விமர்சித்து இந்த ஒழுக்ககேட்டின் விளைவைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று இவர்கள் பெயருக்கு கண்டனம் விடுகின்றனர். அன்று நான் "மக்களின் எதிரிகளை இனங் காண்போம்" என்ற தலைப்பில் அதை எழுதியிருந்தேன். அதை அன்று நான் "இருண்ட- இருள் வெளி" யில் -அனுபவம் தனிமை- என்ற சிறுகதையில், அர்விந் அப்பாத்துரையின் வக்கிரத்தைப் பார்ப்போம்.

" சினிமா எக்ஸ்பிரஸ் என்ற திரையுலக வாழ்க்கையை விமர்சனம் செய்யும் பத்திரிகையை புரட்டிப் பார்த்தால் கமல், ரஜனி, சிவாஜி, பாரதிராஜா, மற்றும் புதுமுகங்களின் புகைப்படங்களாவது அவள் கவனத்தை ஈர்த்தன. என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படிக்க அவளுக்கு ஆர்வமும் இல்லை, இஸ்டமும் இல்லை. .......... -ஏன் எனக்கு சத்தமாகப் பேசி நித்திரையைக் குழப்புபவர்களை (பக்கத்து அறையில்) போய் பார்த்து வாயை மூடுங்கள் என்று சொல்ல துணிச்சலில்லை- தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் -அடுத்தமுறை அப்படி நடக்கும் போது, நிச்சயமாக போய்ச் சொல்வேன்.- அப்படி பேசிக் கொண்டிருக்கும் நபர்கள் கெட்டவர்களாக இருந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டார்கள் என்றால்? விஜிக்கு பயமாக இருந்தது..... விஜியால் தூங்க முடியவில்லை. அத்துடன் டீவியில் பார்த்த ஆபாசக் காட்சிகள் வேறு அவளுக்கு காம உணர்ச்சியைக் கிழப்பிவிட்டிருந்தன. திடீர் என விசித்திரமான எண்ணங்கள் விஜியின் மனதில் தோன்றின. பக்கத்து ரூமில் பேசிக் கொண்டிருக்கும் மூன்று பேரோடும் உடலுறவு கொள்ள வேண்டும் எனும் ஆசை அவள் மனதில் தோன்றியது. எப்படி அவர்களைக் கேட்பது? மெல்ல கட்டிலில் இருந்து எழுந்தாள் கதவை திறந்து பக்கத்துக் கதவைத் தட்டினாள். அந்த அறை ஒரே புகைமூட்டமாக இருந்தது. ~என்ன வேண்டும் பெண்ணே?- என்றான் அவன். -உங்கள் மூன்று பேருடனும் உடலுறவு கொள்ள வேண்டும்- எனக் கூற விஜிக்குத் தைரியமில்லை"

என்று தொடர்கிறது கதை. இதை இலக்கியம் என்ற பெயரில், இணங்கிப் போகும் விருப்பம் என்ற பெயரில் அன்று இந்த விபச்சாரத்தை இருள்வெளியில் தொகுத்திருந்தனர். முதலில் பலாத்காரம் செய்துவிடுவார்கள் என்ற நினைப்பு, பின்னால் அவளின் விருப்பமாகவே வெளிப்படுகின்றது.

இங்கு எப்படி காமம் உணர்ச்சி வருகின்றது. தொலைக்காட்சி, நடிகர்களின் கவர்ச்சி இதைத் தூண்டுகின்றது. பக்கத்து அறையில் இருந்த மூன்று பேரும் கற்பழித்துவிடுவார்கள் என்ற பயம், அடுத்த நிமிடமே மூன்று பேருடனும் உறவு கொள்ள வேண்டும் என்று இணங்கிப் போகும் வக்கிரத்தையே, இலக்கியம் என்ற பெயரில் இந்தப் பன்றி அன்று எழுதியது. இலக்கியம் என்ற பெயரில் அதை அன்று தொகுத்தவர்கள், அதை வாசித்து வாழ்வை அதற்குள் இட்டுச் சென்றவர்கள் இன்றும் இலக்கியத்தின் பெயரில் கையெழுத்திட்டுள்ளனர்.

படத்தை பார்த்து காமத்தில் காமம் கொள்ளும் வக்கிரத்தை சொன்னதையிட்டு, பெண்கள் அன்றும் இன்றும் மௌனமாக அங்கீகரித்தனர். உங்கள் எழுத்துக்கள், சந்திப்புகள், அதற்குக் கூடிக் குலாவி சுகிக்கப் போன போதே, அர்விந் அப்பாத்துரை இணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தவறல்ல. குற்றவாளி அரவிந் அப்பாத்துரையல்ல. அவரை வழிகாட்டிய உங்கள் கோட்பாடுகளும், இலக்கிய விபச்சாரமும் தான் அதைத் தூண்டியது என்பது வெள்ளிடைமலை.

அன்று அப்பெண் மூன்று ஆணுடன் உடலுறவு கொள்ள எண்ணினாள் என்றால், நீலப்படக் காட்சியை அங்கீகரித்துள்ளது. அன்று அப்பெண் நீலப்படம் பார்த்ததுடன் ரஐனி, கமல் படத்தைப் பார்த்து ஏற்பட்ட அந்த வக்கிரமான காம உணர்ச்சியை இலக்கியத்தின் பெயரில் அன்று இவரால் கூறமுடிந்தது. பெண்கள் மீதான கொச்சைப்படுத்தலை, பெண்கள் தன்மானம், முதுகெலும்பு அற்றவர்களாக, பெண்களை நீலப்பட ஆணாதிக்க செக்ஸ் பிண்டமாக வருணித்து அலட்சியப்படுத்தியது. இந்த ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்திய போது அவர்களுக்கு அன்று கோபம் வந்தது. இலக்கிய இரசனை தெரியாதவன் என்றீர்கள்! பெண்ணின் சுதந்திரத்தில் தலையிடுவது என்றீர்கள்.

அன்றும், இன்றும் அப்படியே அவர் நடைமுறையில் செய்ய ஆசைப்படுகின்றார். அப்படியிருக்க இலக்கிய ஜம்பவான்களே, இப்ப ஏன் வேப்பிலை கட்டிக் கொண்டு சாமியாடுகின்றீர்கள். உங்கள் இலக்கியப் படி நடைமுறையில் இது தவறா? அவர் முயற்சி செய்து பார்த்திருக்கின்றார். நீங்கள் இதுவரை செய்யாததையா, அவர் புதிதாக செய்தார். உங்களில் எத்தனை பேர் இதையே தொழிலாக கொண்டவர்கள் உள்ளனர்! உங்களில் எத்தனை பேர் விபச்சாரிகளிடம் செல்லவே, இந்தியா முதல் பல நாடுகளுக்கு செல்லுகின்றீர்கள். மானம் கெட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து இலக்கியத்தின் பெயரில் கண்டிக்கின்றனர். நல்ல நகைச்சுவைதான். நீங்கள் அன்றாடம் நடைமுறையிலும் இலக்கியத்திலும் செய்ய முனைந்ததை, அவரும் நடைமுறையில் செய்ய முனைந்தார் அவ்வளவே. இலக்கியத்தில் இதை கூறுவது சரி, வாழ்வில் அல்ல என்ற தத்துவம் இங்கும் புளுக்கின்றது. உங்கள் இலக்கியமும், இலக்கிய இரசனையும், அதை நியாயப்படுத்தும் தத்துவங்களும் இதை கோருகின்றது. பின் ஏன் கண்டனங்கள், கோமளித்தனங்கள்.

குற்றவாளி அர்விந் அப்பாத்துரையல்ல. நீங்கள் தான், உங்கள் இலக்கியமும் இலக்கிய ரசனையும் தான். அர்விந் அப்பாத்துரை குறித்த பெண் தனக்கு இணங்கிப் போவாள் என்ற அனுமானத்தில், முயற்சி செய்கின்றார். ஒரு பெண்ணின் வெளிப்படையான சுதந்திரமான செயல்பாட்டை, தனக்கு இணங்கிப் போகும் நடைமுறையாக கருதி முயன்று பார்த்தார். இங்கு அவர் முயற்சி செய்து பார்க்கின்றார். இது இணங்கிப் போகும் எல்லைக்குள், அப்பெண்ணை கொண்டுவர முனைகின்றார். இணங்கிவிட்டால் அது பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை என்ற கோட்பாட்டு அடிப்படையில், அவரின் அத்துமீறல்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதைத் தான் அவர் உங்கள் கோட்பாட்டின்படி செய்தார்.

கண்டனத்தில் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் "ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன்.." திரிவதாக. என்ன மோசடி.

ஏன் வசதியாக வசதி கருதி சிலவற்றை மறந்து போகின்றீர்கள். இலக்கியவாதிகளே இலக்கியம் மூலம் பாலியல் வதைகளில் ஈடுபட முடியாதோ? கையெழுத்திட்ட சிலர், அதையே தொழில் முறையாக கொண்டு, இலக்கியம் பேசி செய்கின்றனர். மானம் கெட்டவர்களே! முற்போக்கு பேசி இதைச் செய்ய முடியாதோ? உங்கள் இலக்கிய வரலாற்றில் சிலர் இதைச் செய்திருக்கின்றார்கள், செய்கிறார்கள். இலக்கியத்தின் பெயரிலும், உலகம் முழுக்க பெண்கள் மீதான வன்முறை பற்றி பல வரலாறுகள் உண்டு.

நீங்கள் தர்க்கித்து பாதுகாக்கும் மற்றொரு வாதம், பெண் தானாகவே இணங்கிப் போனால் எல்லாம் சரி என்கின்ற ஒரு வாதம். என்ன பெண்ணியம்! என்ன அரசியல்! என்ன முற்போக்கு!

பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது. அர்விந் அப்பாத்துரை இணங்கி உறவு கொள்ள முயன்று தோற்றவர். இணங்க வைப்பதில் அவர் தொடர்ச்சியாக கையாண்ட வழியில் வெற்றி பெற்றதாக நம்பிய முயற்சியில் தோற்றபோதே, அதை தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள்.

இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான். இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில் இருந்து இணங்கிப் போவதில்லை. இப்படித் தான் இணங்கிப் போதல் என்பது, வாழ்வில் பல கோணத்தில் நிகழ்கின்றது.

சினிமாவில் நடிக்க இணங்கிப் போகும் நடிகைகள், வேலைக்காக உயர் அதிகாரியுடன் இணங்கிப் போகும் பெண்கள், வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்துபவர்களுக்கு இணங்கிப் போகும் அபலைகள், வீட்டில் பெரியவர்களுக்கு இணங்கிப் போகும் வீட்டில் உள்ள பெண்கள், சாமியாருக்கு இணங்கிப் போகும் பக்தியுள்ள பெண்கள், உயர்சாதிய நிலப்பிரவுக்கு இணங்கிப் போகும் தாழ்ந்த சாதிப் பெண்கள் அல்து கூலிப் பெண்கள், காதலனுக்கு இணங்கிப் போன காதலித்து கைவிடப்பட்ட பெண், இலக்கியத்தின் பெயரில் இணங்கிப் போன பெண், இப்படி இணங்கிப் போகும் ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் அபலைகளே. ஆணாதிக்கம் என்ற பலமான சமூக அமைப்பில், பலவீனமான பெண்கள் இணங்கிப் போனால் அல்லது இணங்க வைக்கப்பட்டால் அதற்கான சமூக காரணத்தை கேள்விக்குள்ளாக்காது நுகர விரும்புபவர்கள் தான், இந்த இலக்கியவாதிகள். உலகெங்கும் பலமுள்ளவர்கள் முன்னால், பெண்கள் இணங்கிப் போகின்றனர். இந்த ஆணாதிக்க அமைப்பின் கட்டமைப்பில் இப்படித்தான் உள்ளது. கணிசமான திருமணங்கள் கூட இணங்கிப் போகும் வடிவத்தில் நிகழ்கின்றன. இணங்கிப் போதல் கூட, காலத்தால் பெண் வன்முறை சார்ந்ததாக உணர்வதை நாம் கண்டுகொள்ள மறுக்கின்றோம். இது எமது அற்பத்தனமாகும். குறித்த காலத்தில் தமது அறியாமை, மற்றும் தமது பலவீனத்தை பயன்படுத்தி ஆண்கள் தமது பாலியல் வக்கிரத்தை தீர்த்ததை பல பெண்கள் காலத்தால் உணருகின்றனர். புலம்பெயர் இலக்கியத்தில் அப்படி பல பெண்கள் உணர்ந்தனர். இங்கு எதிர்மறையிலும் கூட பெண்கள் உணர்ந்துள்ளனர். இலக்கியத்தின் பெயரில் அரசியல் பெயரில் தவறாக வழிநடத்தப்பட்டு, தமது பாலியல் தேவையை ஆண்கள் நுகர்ந்ததை, காலத்தால் பல பெண்கள் உணருகின்றனர். பெண்களை தவறாக வழிநடத்தி, பெண்ணை இணங்க வைப்பது அன்றாடம் நடக்கின்றது. பெண்கள் காலத்தால் அனுபவத்தால் இதை உணர்ந்து கொள்கின்றாள். இதை தன் மீதான வன்முறையாகவே அவள் கருதுகின்றாள். இணங்கவைத்து காதலித்து கைவிடப்படும் ஒவ்வொரு பெண்ணும் கூட, இதை தெளிவாக உணருகின்றாள். இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிக பாரதூரமானது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. இலக்கியவாதிகள் தமது சொந்த சுயநலம் சார்ந்த கோட்பாட்டுக்கு இணங்க, கருத்தியல் ரீதியாக இணங்க வைக்கும் மோசடியான வன்முறையை ஆதரிக்கின்றனர்.

இணக்கம், இணங்கிப் போதல் போதையில், இசைவெறியில் கூட நிகழ்கின்றது. இதை டிஸ்கோவில் சாதாரணமாக காணமுடியும். இதுவே இலக்கியத்திலும்; நடக்கின்றது. இதற்கு வெளியில் குறிப்பாக ஒரு ஆணும் பெண்ணும் இணங்கி சேர்ந்து வாழும் போது, அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. இது இன்றி மனிதன் இல்லை. பொதுவாக இலக்கியம் மற்றும் அரசியல் பேசும் சிலர் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி, பெண்களை நுகரும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். முரண்பாட்டின் ஒரு தொங்கலில் தொடங்கி பெண்ணை தமக்கு இணங்க வைக்கும் நுகர்வுக் கண்ணோட்டத்துக்குள் கொண்டு வந்து, தமது தேவைக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்குகின்றனர். இதைத் தான் சாமிமாரும் செய்கின்றனர். மனிதனின் பலவீனங்கள் மீதான உளவியல் ரீதியான சிதைவை, தமது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துவது, சமூக இயக்கத்தில் பொதுவாக காணப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் என்ற கோட்பாட்டைக் கொண்டு, இதைத் தர்க்கரீதியாக இலக்கியவாதிகள் தமக்கு சார்பாக பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் தாங்களாக இயங்கி இணங்கிப் போதல் என்பது கூட ஆணாதிக்க பாலியலையே நியாயப்படுத்துகின்றது. பெண்ணின் அறியாமையை, ஆணாதிக்க அமைப்பின் பாதிப்பால் ஏற்படும் துயரத்தையும், அவர்களின் பலவீனத்தை இணங்கவைத்து பாலியல் ரீதியாக நுகர்வது ஆணாதிக்கம் தான். இதற்குள் ஒரு வன்முறை உண்டு. இலக்கியத்தின் பெயரில், வாழ்வு சார்ந்த ஒழுக்கம் பற்றி கேள்விகள் ஊடாக, பெண்ணை இணங்க வைத்து பாலியல் ரீதியாக உறவு கொள்வதும் பாலியல் வன்முறை தான்.

இணங்கவைத்தல் என்பது இந்த சமூக அமைப்பில் மோசடிகளால், நேர்மையீனத்தால், நயவஞ்சகத்தால், பலத்தால், அதிகாரத்தால், சமூக ஆளுமையால் எப்போதும் அப்பாவிகள் மீது பெருமளவில் நிகழ்கின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகள் அதிகளவில் இணங்க வைக்கும் இந்த வன்முறைக்குள் பாதிக்கப்படுகின்றனர். இது சந்தை முதல் பெண்ணின் உடலை நுகர்தல் வரை இதுவே இன்றைய எதார்த்தமாகும்.

ஒரு பெண் இணங்கிப் போதல் என்பது கவர்ச்சி, பின் தங்கிய அறிவியல், சமூகப் பார்வை இன்மை, பலவீனங்கள், சொந்த பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள், நம்பிக்கை மோடிகள் குறிப்பாக இதை தீர்மானிக்கின்றது. இதைச் சமூகம் பொதுவான நுகர்வு பண்பாடாக உருவாக்குகின்றது. திரும்பிய இடமெல்லாம் பாலியல் ஊடாகவே உலகம் காட்டப்படுகின்றது. பாலியலே முதன்மையான செய்தியாக, மனித இருத்தலின் மையக் கூறாக காட்டப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் இயல்பானதாக, நியாயமானதாக காட்டப்படுகின்றது. விளம்பரம் முதல் சினிமா வரை இதையே செய்தியாக காட்டுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நுகர்வின் எல்லைக்குள் இணங்கி உறவு கொள்வதை, இந்த புலம பெயர் இலக்கிய குஞ்சுகள் பெண்ணியம் என்கின்றனர். ஒரு பெண் இணங்கி சேர்ந்து வாழ்தல் என்பது வேறனாது. மாறாக வாழ்வுக்காக அல்லாது குறித்த உறவுக்காக உறவு கொள்ளும் நுகர்வு வேறு. இங்கு இணக்கம் என்பது ஏகாதிபத்திய நுகர்வுக்குட்பட்டது.

நாங்கள் பொருட்களை பயன்படுத்தும் போது, அது வாழ்க்கை பூராவும் பாவிக்கும் கண்ணோட்டத்தில் அதை நுகர்வது ஒருவகை. இதற்கு மாறாக கணநேரத்தில் நுகர்ந்த பின் அதை தூக்கி எறியும் கண்ணோட்டமும் உண்டு. இரண்டும் இந்த உலகில் உள்ளது. இதுவே பெண் பற்றிய ஆணின் பார்வையையும், ஆண் பற்றிய பெண் பார்வையையும் சரி, வாழ்வில் பாலியல் கருத்துகளையும் தீர்மானிக்கின்றது.

இணங்க வைப்பதற்காக அன்றாடம் மூளைச்சலவை செய்யும் ஆணாதிக்க ஆண்கள் சமூகம் தான் இது. தமிழ் மக்களை தேசியத்தின் பின் இணங்கவைக்க, எப்படி குறுந் தேசியம் முனைகின்றதோ, அப்படித்தான் இதுவும். இந்த முயற்சியில் பெண்கள் விழிப்புறும் போது, பலர் தோற்றுப் போகின்றனர். அர்விந் அப்பாத்துரையும் குறித்த பெண் இணங்கிப் போவாள் என்ற இலக்கிய ஜம்பவான்களின் கணிப்பீட்டுடன் முயன்றவர். அவள் மறுக்க, அதை வன்முறை என்று இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். இங்கு உங்களைப் போல் இணங்க வைப்பதில் அத்துமீறல் நடந்தது. அவள் மறுக்க, அவன் விட்டுவிடுகின்றான். கற்பழிக்க முனையவில்லை. இங்கு இணங்க வைப்பதில் ஒரு அத்துமீறல் இருந்துள்ளது. உங்கள் கோட்பாட்டுப்படி இணங்க வைப்பது வன்முறை இல்லை என்றால், இணங்க வைக்கும் அந்த முயற்சியும் வன்முறையல்ல. குறிப்பாக இதே அர்விந் அப்பாத்துரை இப்படி முன்பும் ஈடுபட்டவர் என்றால், அங்கு இணங்கிப் போகும் வழிமுறை வெற்றிபெற்றுள்ளது என்றே அர்த்தமாகும். அதனால் தான் அவருடன் நீங்கள் ஒன்றாக கூடி இலக்கியம் பேசியதுடன், கூடிக் குடித்தீர்கள்.

இங்கு ஆணாதிக்க அமைப்பு சார்ந்த இணங்க வைக்கும் கோட்பாட்டை, இந்த கண்டன அறிக்கை தனக்குள் ஆதரித்து நிற்கின்றது. அதனால் இணங்க வைப்பவர்கள் கையெழுத்திட முடிந்தது. மறுதளத்தில் இணங்க வைக்கும் முயற்சிகளின் போது பெண் பாதிப்படைகின்றாள். அவள் கொதித்துப் போகின்றாள். தனிப்பட்ட நம்பிக்கையை மோசடியாக பயன்படுத்திய போது, அந்தப் பெண்ணின் பாதிப்பு கடுமையானது.

இந்த வன்முறை முயற்சியை கண்டிக்கும் போது, ஆணாதிக்க அமைப்பின் நோக்கங்களை தோலுரித்துக் காட்டவேண்டும். "ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன்.." என்று விடையத்தை திரித்து மோசடி செய்வது நிகழ்கின்றது. ஏன் அர்விந் அப்பாத்துரை இப்படி செயல்பட்டார், என்ற அடிப்படையான காரணத்தை திட்டமிட்டு ஆராயவே மறுக்கின்றது. உங்கள் மனிதவிரோதக் கோட்பாடுகள் இதற்கு எப்படி துணை போனது என்பதையே, மூடிமறைக்கின்றது. இலக்கிய வட்டத்திற்குள்ளான இச் சம்பவத்தை கூட, அவர்கள் சொல்ல முற்படவில்லை. இங்கு தான் இந்த கண்டனத்தின் பின்னால் உள்ள வேஷம் அம்பலமாகின்றது. சமூகத்தின் பல கூறுகள் மீது வலிந்து கண்டனம் தெரிவித்தவர்கள், ஏன் இலக்கியத்தின் மீது முற்போக்கின் மீது இது போன்ற முயற்சிகளை கண்டிக்கவில்லை. மாறாக ஒப்புக்கு மாரடிக்கின்றனர். இந்த இலக்கியவாதிகளின் அன்றாட முயற்சிகளும் நடைமுறைகளும் இதற்குள் தான் உயிர் வாழ்கின்றது.

இந்த இலக்கியவாதிகளுடன் கூடித்திரிந்த போது அர்விந் அப்பாத்துரையின் அரசியல் என்னவாக இருந்தது. அதை அவர் எக்சில் 2 இல் எழுதியிருந்தார்.

"ஜாதி வேற்றுமை பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்து போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிமாணங்களிலும் பெண்ணியம் தலித்தியமும் வெவ்வேறு போராட்டங்கள்."

என்றார். இதை நாம் அன்றே விமர்சித்தோம். இவர் தன்னை ஒரு தலித்தியல்வாதியாக, பின்நவீனத்துவ வாதியாக காட்டியவர். புலம்பெயர் இலக்கியவாதிகளுடன் இப்படித் தான் புரண்டு எழுந்தவர். தனது மக்கள் விரோத எழுத்தை, கம்யூனிச விரோதமாக இவர்களுடன் கூடி எழுதிய அர்விந் அப்பாத்துரை

~~தத்துவரீதியில், கம்யூனிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ...... மார்க்சிய வாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்கு துணை நிற்கக் கூடும் இதைத் தவிர்த்து கம்யூனிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு -பூடகம்

என்கின்றார்.

இப்படி சுயநலம் கொண்ட ஒரு கம்யூனிச விரோதியாக இருந்ததை, நாம் அன்றே அம்பலம் செய்தோம். சொந்த ஏகாதிபத்திய ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்தை நியாயப்படுத்த, பெண்ணியத்தை திரிக்க வேண்டியேற்பட்டது. இதனால் கம்யூனிசத்தை ஒடுக்கவேண்டிய நிலையேற்பட்டது. அதை கோட்பாட்டு ரீதியாக கொச்சைப்படுத்த வேண்டிய நிலை எற்பட்டது. இதனால் புலம்பெயர் இலக்கியவாதிகளின் சஞ்சிகைளில் இவை வெளிவந்தன. கண்டன அறிக்கை இதை எதையும் பேசாது மூடிமறைக்கின்றது.

பெண்ணியம், பெண் தலித்தியம் என்று எல்லாம் கூறிக் கொண்டு என்ன செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதை இங்கு எதார்த்தத்தில் நாம் காண்கின்றோம். இலக்கியச் சந்திப்புகள் மற்றும் சமூக இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை, கடந்தகாலத்தில் நாம் நெருங்கிவைத்து அணுகிப் பாhக்கமுடியும். யார் இந்தக் கோட்பாடுகளை சொன்னாலும், தாம் தெரிவு செய்துகொண்டு ஆணுடன் இணங்கி வாழ்ந்தவர்கள் தவிர, இணங்க வைத்து நுகர்ந்த பெண்களின் குமுறல்களை இட்டு இதில் கையெழுத்திட்டவர்களுக்கு ஒரு துளி கூட அக்கறையிருப்பதில்லை. அங்கும் ஒரு மோசடி, கயமத்தனம், ஏமாற்றுதல் இருந்தது என்பதை, இந்த வன்முறை எதிர்ப்பாளருக்கு தெரிவதில்லை. ஆனால் இவை அனைத்தையும் முதுகுக்குப் பின்னால், அரட்டை அடிப்பவர்கள் தான் நீங்கள்.

குறிப்பாக அர்விந் அப்பாத்துரையுடன் இந்தப் பெண் இணங்கிப் போயிருந்தால், அது பெண்ணியம் என்பது இவர்கள் கோட்பாடு. இப்படி சோரம் போதல் கோட்பாட்டிலேயே உள்ளது. இந்த இலக்கிய வாதியான அர்விந் அப்பாத்துரையும் கூட ஒரு வன்முறை எதிர்ப்பாளாராக காட்டியவர். 3.10.1999 அன்று பாரிஸ் இலக்கிய கும்பல் நடத்திய வன்முறை ஒன்றின் போது, இவர் தனியாகவே அதை பற்றி திரித்து கண்டன துண்டுபிரசுரம் வெளியிட்டவர். பாரிசின் பல இலக்கிய முயற்சியில் இவர்தான் போசகர். இவரின் மண்டபம் இலக்கியவாதிகளின் தங்குமிடமாக இருந்தது. அண்மையில் குஷ்புவுக்கு ஆதரவாக இலக்கிய சந்திப்புச் சார்பாக அறிக்கை செய்தவர்களில் இவரும் ஒருவர். கணேசலிங்கத்தின் கற்பழிப்பை கண்டித்தவர்.

இப்படி மற்றைய இலக்கிய ஜம்பவான்களுக்கு குறைந்து நின்று குலைக்கவில்லை. நன்றாகவே குலைத்தவர். அவரின் கடந்தகால பாணியில் மற்றைய இலக்கியவாதிகள், வாலையாட்டியபடி விசுவாசமாக அவரைப் பார்த்து குலைக்கின்றனர். அவர் தம்முடன் இலக்கியத்தில் பெயரில் கூடிக் குலைத்ததையும், கூடிக் குடித்ததையும் மட்டும் மூடிமறைத்தபடி எதைத் தான் கண்டிக்கின்றனர்? தெரிந்தால் சொல்லுங்கள்.

Saturday, January 14, 2006

வாழ்வின் மீதான நம்பிக்கையை இழப்பவன்

வாழ்வின் மீதான நம்பிக்கையை
இழப்பவன் வெறும் சடலம் தான்.


பி.இரயாகரன்
14.1.2006

பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து கருத்து கூறுவது, பின் அந்த முயற்சிக்கு எதிராகவே கருத்து கூறுவது என்பது, மக்களின் முதுகில் குத்துவதாகும்.

உதாரணத்துக்கு அண்மையில் தமிழ்மணம் விவாதத் தளம் ஒன்றில் பதிவாகிய கருத்தில் "பெயரிலி, உங்களைப் புரிந்து கொள்கிறேன். உங்கள் நிலைமைதான் எனக்கும்! புலம்பெயர் படைப்பாளிகள் பலருக்கும் இதே நிலைதான். குறிப்பாகப் பார்த்திபன், அம்மா மனோ, தூண்டில் பத்திரிகைக் கடலோடிகள், மனிதம் பத்திரிகைக் குழு, போன்றவர்களிடமும் இதே கேள்வியும் விரக்தியுமே எஞ்சியுள்ளது. இரயா மட்டுமே தன்னளவில் பலதை அம்பலப்படுத்துகிறார். அவர் தனிமனிதன். என்ன செய்ய? என்னால் முடிந்தவரை குறைந்த பட்சம் மக்களின் அமைதிக்காகவாவது (ஜனநாயகச் சூழல்) எழுதுகிறேன். எம்மால் எதுவும் முடியாது! ஆனால் அரச ஆயுதக் குழுக்களின் அராஜகத்துக்கெதிராகவாவது குரல் கொடுப்போமேவென ஏதோ எழுதுகிறேன். இதுவொன்றுமே சரிவராது. பிறகெதற்கு எழுதி?." என்ற கருத்து பல தளத்தில் இன்று காணப்படுகின்றது.

தனிமனித அதிருப்திகள், எத்தனை நாளைக்கு இவை என்ற அங்கலாய்புகள். தனிமனிதர்களாக புளுங்கிப் போகும் அவலம். இந்த தர்க்கம் கூட சொந்த பூர்சுவா வாழ்வியல் நிலையில் இருந்து, தமது சொந்த நிலையை தக்கவைக்கும் ஒரு தர்க்கமாக சிந்தனைச் சிதைவாக ஏற்படுகின்றது. சுதந்திரம் ஜனநாயகத்தின் பெயரில் வாழ்வையே மிக கேவலமாக வாழவைக்கும் இந்த சமூக அமைப்பில், தமது சொந்த வாழ்வையே இதற்குள் வாழ்கின்ற மனிதர்கள் கூட இப்படி புலம்பவது கிடையாது. கையால் மலம் அள்ளும் தொழிலாளி, பலக்காரமாக பாலியல் ரீதியாக அன்றாடம் சுரண்டப்படும் ஒரு பெண், அன்றாடம் வாழவழியின்றி கையேந்தி பிச்சை எடுக்கும் ஒருவன், அடுத்த நேரத்துக்கு உண்பதற்கு வழி தெரியாத மனிதர்கள், தன் குழந்தைக்கு பால் இன்றி விழிக்கும் தாய்மை என்று மனித இனத்தின் சகல அவலத்தை சந்திப்பவர்கள் யாரும், இப்படி அவநம்பிக்கையுடன் சமூகத்தை அணுகுவது கிடையாது. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கணமும் போராடுகின்றான். இதில் இருந்து மாறுபட்டு, அவநம்பிக்கையுடன் சமூக தற்கொலையை ஊக்குவிக்கும் விதைகளை ஊன்றுகின்றோமே, அப்படியானல் நாம் யார்? நாம் எங்கே இருக்கின்றோம்? எமது சிந்தனை தான் என்ன? இப்படி வெளிப்படும் மனநிலை, அடிப்படையில் தனிமனித நலனை அடிப்படையாகக் கொண்ட பூர்சுவா குணாம்சத்தின் பிரதிபலிப்பு. இதில் இருந்து எமது சொந்த நிலையை தக்கவைக்க, அதை நியாயப்படுத்தி விடுகின்றோம்.

இப்படிச் சமூகத்தின் முன்னோடிகள் அழுது புலம்பும் போது, மக்கள் என்னதான் செய்வார்கள்! தாம் அழுது புலம்புவதற்கு நியாயம் கற்பிக்க, மக்களின் கையாலாகாத்தனத்தை பற்றி கருத்துரைப்பது அன்றாடம் நிகழ்கின்றது. மக்களினால் தான் தமக்கு இந்தக் கதி என்று கூறிக்கொள்வது நிகழ்கின்றது. இந்த நிலைக்கு நீங்களே காரணம் என்பதை, அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. மக்களின் இன்றைய அவலமான நிலைக்கு, நாங்கள் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வது கிடையாது. இந்த சமூகத்தின் அவல நிலைக்கான குற்றத்தை, எதிர்நிலைக்கு மாற்றுகின்றனர். இதன் மூலம் தமது சொந்த பூர்சுவா குணாம்சம் சார்ந்த வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தக்கவைக்கின்றனர்.

இவர்களை நம்பி காலைத் தூக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களுக்கு, பொறிக் கிடங்கை முன்னாள் காட்டுகின்றார்கள். இப்படி செய்யும் நீங்கள் யார்? அதை நீங்கள் ஒரு முறை திரும்பி பாருங்கள்! கண்ணாடி முன் நின்று உங்களைப் பாருங்கள். நீங்கள் என்ன செய்ய முனைகின்றீர்கள் என்பதையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்வதில் திருப்தியில்லை என்றால், என்ன தவறு செய்கின்றீர்கள் என்று பாருங்கள். அதைவிடுத்து சமூகத்தை குற்றம் சாட்டுவது அபத்தம். ஒரு செயல்பற்றிய தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். அது சமூகத்தில் என்ன விளைவை விளைவிக்கின்றது என்று பார்க்கவேண்டும். குடுகுடுப்பைக்காரன் போல் அவசரமாக உலகம் மாறிவிட வேண்டும் என்று நம்புவதும், கூறுவதும் பூர்சுவா குணவியல்பாகும். இதுவே கடந்தகால மற்றும் நிகழ்கால இயக்க அரசியலாகும்;.

நீங்கள் குறிப்பிட்ட பார்த்திபனை எடுங்கள். எல்லாவிதமான நம்பிக்கையையும் இழந்த பார்த்திபன், எதைத்தான் தான் வாழ்வில் அதற்கு பதிலாக சாதித்தார். மற்றொரு நம்பிக்கையை பெற்றாரா. இல்லையே. என்? என்ன நடந்தது? கடந்த இலக்கிய அரசியல் எல்லாம் எதற்காக இவைகள் என்று புளுங்கிய பார்த்திபன், அதைக் கைவிட்ட பின் எதைச் சாதித்தார்? அப்போதும் ஒன்றுமில்லை? இங்கு என்ன நடந்ததென அவர் கூட அதை தேடியது கிடையாது? இன்றைய தமிழ் மக்களின் அவலமான நிலை, இப்படித் தான் உருவானது. குற்றவாளிகள் நாங்கள்! எதிரிகள் அல்ல! மக்களின் எதிரிகள் எப்படி இருப்பார்களோ, அப்படித் தான் அவர்கள் இருக்கின்றார்கள்;. ஆனால் நாங்கள் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி மிக மோசமாக இருக்கின்றோம். இதன் மூலம் எதிரிக்கு அன்றாடம் துணை செய்கின்றோம்;. ஒரு பினாமியைப் போல், எம்மை அறியாமால் எதிரிக்கு கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்கின்றோம். மக்களின் எதிரி பல தளத்தில் உள்ளான். அது எமக்குள்ளும் கருத்தியல் தளத்தில் ஊடுருவுகின்றது.

மக்களின் விடுதலை என்பது அமைதியும் சமாதானமும் நிறைந்த உணர்வுடன் மக்களின் எதிரிகள் அனைவரும் வழங்கிவிடமாட்டார்கள். மக்கள் போராடும் ஜனநாயகத்தை எதிரி தங்கத்தட்டில் வைத்து வழங்குவதில்லை. இப்படி நினைப்பது பூர்சுவா மனப்பாங்காகும். இதுவே பூர்சுவா உளவியலாகும். நெருக்கடிகள் பலதளத்தில் பலவடிவில் வரும். இதை எதிர் கொள்ள முடியாது அங்கலாய்ப்பதே, பூர்சுவாவின் அற்ப சிந்தனையாகின்றது. இதுவே நிலைமையையிட்டு புலம்பத் தொடங்குகின்றது. அதை எதிர்கொள்ள வக்கற்று பினாற்றத் தொடங்குகின்றனர். இன்றைய நிலைமைக்கு நாங்கள் தான் காரணம் என்பதை, ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்தேயாகவேண்டும். செய்ய வேண்டிய, செய்யக் கூடிய நீண்டபணி உள்ளது. ஆனால் அதை மட்டும் நாம் செய்வதில்லை. மாறாக நாம் ஒரு கோட்டைக் கீறி வைத்துக் கொண்டு அதற்குள் நின்று ஊளையிடவே முனைகின்றோம்.

இப்படி கருத்தியல் ரீதியாக சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் போது என்ன தான் நடக்கின்றது. தன்னுடன் சிலரையும் அழைத்துச் செல்வது நிகழ்கின்றது. தற்கொலை செய்பவன்(ள்) என்ன மனநிலையில் என்ன மாதிரியான முடிவை எடுக்கின்றரோ, அதே முடிவைத்தான் இவர்களும் எடுக்கின்றனர். இங்கு இதற்கு இடையில் வேறுபாடு கிடையாது.

நீங்கள் கூறிய பாhத்திபன் இலக்கிய உலகில் அவர் இயங்க முடிந்த ஒரு தளத்தில், அவர் உயிருடன் இருந்தாரே ஒழிய நடைப்பிணமாகவல்ல. அன்று உயிருள்ள ஒரு மனிதனாக வாழ்ந்தார். பார்த்திபன் இப்படி தன்னையே அழித்து உயிருள்ள சமூகத்தில் இருந்து ஒதுங்கி "தற்கொலை" செய்திருக்காவிட்டால், சமகாலத்தில் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளனாக இருந்திருப்பார்.

இன்று இலக்கியம் செய்வோரை விட சமூகத்தின் உயிரோட்டத்தை உணர்வதில் மிகவும் துல்லியமாக புரிந்து செயல்பட முனைந்தவர். அவரின் சமூகத் தேடுதல் மூலம் அதை செய்திருக்கக் கூடிய சூழல் இருந்தது. ஆனால் என்ன நடந்தது. சொந்த பூர்சுவா மனநிலையில், அனைத்தையும் மீறி தனிமனித எல்லைக்குள் முடங்கி, தனக்குத்தானே "கயிற்றை" மாட்டிக் கொண்டு தொங்குகின்றார். ஒருபுறம் பாசிசம், மறுபுறம் இலக்கிய சீரழிவும் அது விதைத்த கருத்தும் மெதுவாக ஊடுருவி, இந்த பூர்சுவா மனநிலைக்கு இசைவாகி சமூகத்தின் போக்குக்கு ஏற்ப "தற்கொலைக்கு" இட்டுச் சென்றது. என்னத்தை சொல்லி, என்னத்தை எழுதி, யாருக்கு இவை பிரயோசனப்படுகின்றது என்ற பூர்சுவா குணாம்சமே புலம்பத் தொடங்கும் போது, அதிருப்தி நம்பிக்கையீனங்கள் முதுகைப்பிராண்டி பின்னால் இழுத்து வீழ்த்துகின்றது.

சுற்றி இருந்த இலக்கிய வட்டத்தின் சமூகச் சீரழிவு, அவர்கள் தமது சொந்த சீரழிவுக்கு ஏற்ப விதைத்த கோட்பாடுகள், தனிமனித வக்கிரங்கள், அவர்களை நம்பிய முயற்சிகள் என்று பலவும் இதற்கு துணைபோனது என்பது உண்மைதான்;. புலிபாசிசம் எதை ஒரு தளத்தில் செய்ததோ, அதை மறுதளத்தில் இலக்கிய சீரழிவுக் கோஸ்டியும் அதையே செய்தது. இதற்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் தான், தமது சொந்த அவநம்பிக்கையை ஒரு கருத்தாக கூறமுனைகின்றனர். ஒரு தனிமனிதனாக, ஒரு படைப்பாளியாக, ஒரு சமூக விஞ்ஞானியாக இருப்பதைத் துறப்பதே ஒரு சமூகத் துரோகத்தனமாகும். இன்றும் பார்த்திபனுடன் நேரடியாக உறவை வைத்திருப்பதால், அவர் மீதான விமர்சனத்தை செய்வதன் மூலம், பலரின் இன்றைய நிலையை நான் நேரடியாக விமர்சிக்க முனைகின்றேன்.

ஒரு கலிலியோ இந்த சமூகத்தின் உண்மைக்காக தனிமனிதனாக போராடவில்லையா? ஒரு டார்வின் தனிமனிதனாக போராடவில்லையா? இப்படி பலர் போராடவில்லையா? இந்த போராட்டத்தில் மரணிக்கவில்லையா? எவ்வளவு நெருக்கடிகள். தனிமனிதனான அவர்களைச் சுற்றி நடத்திய வன்மம் மிக்கத் தாக்குதல்கள். இப்படி வரலாற்றில் பதிவான பலரை நாம் காண்கின்றோம். ஆனால் நாம் மட்டும் அப்படி வாழமறுக்கின்றோம். ஏன் அப்படி பார்த்திபனால் போராடி வாழமுடியவில்லை.

எம்மைச் சுற்றியிருக்கும் சூழல் பாசிசமாக, இலக்கிய சீரழிவாக, பண்பாட்டுச் சிதைவாக, பற்பலவாக இருந்தன, இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இதை எதிர்த்து குறைந்த பட்சம் தனிமனிதனும் போராடமுடியும். எதை நோக்கிப் போராடுவது? என்ற தெளிவை அடைவதில் இருந்து இது தொடங்குகின்றது. மார்க்ஸ் சாப்பிடவே உணவின்றி சொந்தக் குழந்தைகள் மரணித்த போதும் கூட, பட்டினியுடன் எதைப் படைக்க முனைந்தார்? அவரின் முன்னால் இந்த பூர்சுவா வாழ்வியல் முறையே சிறந்த வாழ்வு என்ற ஒன்றை காட்டிய போதும் கூட, அவர் சமூகத்தில் உள்ள துன்பங்களைச் சுமந்தபடி போராடினரே ஏன்? மனித சமூதாயத்தின் விடுதலைக்காக அவர் போராடினார். உண்மையான நேர்மையான மனிதனின் கடமை இப்படி போராடுவது தானே ஒழிய, கோழையைப் போல் ஒடி ஒழிவதல்ல.

நாங்கள் சந்திக்கும் எமது நிலைமைகளை விட மோசமான கொடூரமான நிலைமைகள் ஊடாகவே, உலகில் பல ஆயிரம் மனிதர்கள் போராடினார்கள். நாங்கள் மட்டும் ஏன், இப்படி எமது பூர்சுவா மனநிலையை சமூக நிலையாக மாற்ற முனைகின்றோம்.

உங்கள் கருத்துகளைக் கண்டு யார் பயப்படுகின்றான்? நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி சிந்தித்ததுண்டா! மக்களின் எதிரியல்லவா பயந்து நடுங்குகின்றான். துப்பாக்கியும் கையுமாக அலையும் அந்த வெறிபிடித்த கும்பல் தான், உங்கள் கருத்தைக் கண்டு நடுங்குகின்றது. உங்கள் கருத்துகள் உண்மையாகும் போது, பொய்யர்கள் இப்படி வெறிபிடித்து அலைவார்கள். எத்தனை திட்டல்கள், எத்தனை தூசணங்கள், எத்தனை முத்திரைகள் முதல் மரணதண்டனை வரை பரிசளிக்கும் இந்த அமைப்பில், நாங்கள் நாங்களாகவே அவனுக்கு பணிந்துவிடுவது ஏன்? ஒரு பினாமியைப் போல், ஒரு கோழையைப் போல் நாங்கள் சிதைந்து போவது ஏன்? மக்கள் எதிரி எதைச் செய்ய விரும்புகின்றானோ, அதை நாங்களாகவே நிறுத்தி தற்கொலை செய்துகொள்வது ஏன்? குறைந்தபட்சம் உன் எல்லைக்குள் மக்களுக்காக போராடு! போராடி மடி. மக்கள் துன்பப்படும் போது, அதைக் கண்டுகொள்ளாது மலசலகூடத்தை நிரப்பும் வாழ்வை வாழ்ந்து என்ன தான் கிழிக்கின்றாய்? நாயைவிட கேவலமான இழிந்த வாழ்க்கை!

இன்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, அதைக் கண்டு கொதித்து பதிலளிக்கும் எதிரிகள் உண்மையில் யாரைக் கண்டு பயப்படுகின்றனர். கருத்தைச் சொல்பவனைக் கண்டு அல்ல, மக்களைக் கண்டு தான் பயப்படுகின்றார்கள். மக்கள் தெரிந்த உண்மைகளை ஒரு அரசியலாக புரிவதை தடுப்பதற்காக கருத்துச் சொல்பவனை அழிக்கின்றனர். அமெரிக்கா ஜனாதிபதி புஸ் முதல், புலி பிரபாகரன் வரை இதுதான் இவர்களின் நிலை. மக்களுக்காக போராடுவனை அழிப்பது, மக்களுக்கு உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவே. எதிர்கட்சியில் உள்ளவனை அழிப்பது, தனிப்பட்ட சொந்த அதிகாரத்துக்காகவே .நாங்கள் எம்மை நிறுத்திக் கொள்வது எதற்காக!

இங்கு தான் உனது போராட்டத்தின் சரியான தன்மை உறுதி செய்யப்படுகின்றது. நாம் மக்களுக்காக, அவர்களின் சொந்த விடுதலைக்காக சொல்ல வருவதை தடுத்து நிறுத்த முனையும் போது, நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை எதிரி தெளிவாக்குகின்றான். நாம் முன்னே கால்களை தூக்கி வைத்துள்ளோம் என்ற அரசியல் உண்மையை புரிந்து கொண்டு, செயல்பாட்டை மேலும் ஆழமாக்க வேண்டும்.

நாங்கள் ஒரு விடையத்தை மிகத் தெளிவாக புரிந்து கொண்டேயாக வேண்டும். மக்கள் தங்கள் சொந்த எதிரிகைளை, தமது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் ஊடாக தெளிவாக புரிந்துள்ளனர் என்பதை நாம் கண்டு கொள்வதில்லை. இது மிக முக்கிய தவறுக்கு எம்மை இட்டுச் செல்லுகின்றது. மக்கள் ஒவ்வொருவரும் யாரைக் கண்டு பீதியடைகின்றனர். யாரைக் கண்டு கதைக்க அஞ்சி நடுங்குகின்றனர். அதன் விளைவு எப்படிப்பட்டது என்பதை சொந்த வாழ்வில் புரிந்து செயலாற்றுகின்றனர். நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு மக்களும், யாரையெல்லாம் கண்டு அஞ்சுகின்றனர் என்பதையே. அவர்கள் தான் மக்களின் எதிரி. மக்கள் பீதியினால் மனதுக்குள் புளுங்குகின்றனர். மக்களுக்குத் தெரியும் எதிரியின் ஒவ்வொரு கால்களையும். இதைப் பற்றி மக்களுக்கு நாங்கள் புதிதாக ஒன்றும் சொல்லவேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு எதிரிகள் பற்றி புரியவைக்கவேண்டிய அவசியம் கிடையாது.

அப்படியாயின் பிரச்சனை எங்கே உள்ளது. இங்கு மக்கள் அங்கும் இங்குமாக நம்பிக்கையுடன் வாக்களிக்கும் மனநிலையில் ஊசலாடுகின்றனர். தப்பிச் செல்ல வழி தேடுகின்றனர். இதற்கான பாதை தெரியாது தனிமைப்பட்டு நிற்கின்றனர். செய்ய வேண்டிய பணி என்ன? மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்துக் காட்டுவதன் மூலம், மக்களை வழிகாட்டும் வகையில் அவர்களின் சொந்த அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தை நடத்தும் வகையில் உதவுவது. அதாவது அவர்களின் ஒரு அங்கமாக நாம் மாறுவதைத் தான் செய்ய வேண்டியுள்ளது. இது தான் எமது வரலாற்றுப் பணி.

மக்களை நாம் புரிந்து கொண்டு, நேசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்;. அவர்களின் உணர்ச்சிகளை, சிந்தனைகளை, விருப்பத்தை உயர்த்தி, அவர்களை ஒன்றுபடுத்தும் வகையில் நாம் நிகழ்ச்சியின் சாரத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும். அந்த மக்களின் தேவை நோக்கம் ஒன்றாக இருக்கும் போது, நாம் அதற்கு வெளியில் நின்று மற்றொன்றை பற்றி வம்பளக்க முடியாது. எமக்கு, மக்கள் முன்னால் வழிகாட்டி நிற்கின்றனர். மக்களை பின்பற்றி முன்னேறிச் செல்லவேண்டும். இன்று சொந்த தேவைக்காக தேசியத்தை பயன்படுத்துவதை, மக்களை பயன்படுத்துவதையும் கண்டிப்பாக இனம் கண்டு, அதை மக்கள் முன் போட்டுடைக்க வேண்டும்.

மக்கள் அடைந்த துன்பமோ, எங்களை விட அதிகமானது. சொந்த இரத்தத்தைக் கொட்டி, சொந்த உயிரைக் கொட்டி, சொந்த தொப்புள் கொடியை பலியிட்டு, சொந்த உழைப்பை இழந்து அவர்கள் பெற்று இருப்பது ஒரு அடிமை விலங்கைத் தான். அவர்கள் கண்ணீர் துளிகள் வெளிவரமுடியாத அளவுக்கு வற்றிவிட்டது. அந்த மக்களை நாயிலும் கீழாக மிதிக்கும் ஒரு பாசிசம், எம் மண்ணில் கொலுவீற்றுள்ளது. பேரினவாதம் ஒருபுறம், மறுபுறம் புலிப் பாசிட்டுகள். மறுபக்கம் மக்களின் மீட்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு மதபீடங்கள் தொடக்கம், கைக்கூலிகள், தன்னார்வக் குழுக்கள் இறுதியாக ஏகாதிபத்தியம் வரை மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்கின்றனர். நாங்கள் வாய்மூடி மௌனவிரதம் இருக்கின்றோம். இதில் சிலவற்றை மட்டும் பேசியே வம்பளக்கின்றோம்.

இவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தரப்போகிறார்கள். அடிமைத்தனத்தையும், ஆறு அடி சவப்பெட்டியில் மரணித்துப் போகும் அஸ்தமத்தையும் விரைவாக்குகின்றனர். மக்கள் தமக்கு நன்கு தெரிந்த எதிரியை எதிர்கொள்ளத் தெரியாது நிற்கும் நிலையில், அதை வழிகாட்டி அழைத்துச் செல்வதுதான் எம்முன்னுள்ள ஒரேயொரு பணியாகும்.

Saturday, January 7, 2006

மக்கள் படையும் புலிகளும்

மக்கள் படையும் புலிகளும் :
மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகள்


பி.இரயாகரன்
06.01.2006


நாம் ஏன் இவர்களை காடையர்கள் என்கின்றோம்? மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன், எந்த சமூக உறவுமற்றவர்கள் நடத்துவது காடைத்தனம் தான். இதை யாரும் தேசியம் என்று கூறமுடியாது. தமது அரசியல் என்ன, தமது நோக்கமென்ன எனக் எதுவும் கூறத் தெரியாதவர்கள், மக்களின் பெயரில் நடத்தும் அனைத்தும் சமூகவிரோதத் தன்மை கொண்டவையே. இவை காடைத்தனமாகவே எப்போதும் சமூக உள்ளரங்கில் அரங்கேற்றப்படுகின்றது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறும் வன்முறைகளும், படுகொலைகளும் மிகவும் இழிந்துபோன ஒரு சமூக பாத்திரத்தையே வகிக்கின்றன. மக்களின் பெயரில் நடத்தப்படும் தீயிடல், மனித கழுத்தை அறுத்தல் முதல் கிளைமோர் தாக்குதல் வரை அனைத்தும், காடைத்தனத்துக்கென பயிற்றப்பட்ட புலிகளால் தான் செய்யப்படுகின்றது. ஆனால் இதை புலிகள் மறுப்பதும், விதண்டாவாதமாக அறிக்கைகள் விடுவதும் அன்றாடச் செய்திகளாகின்றன. சமூகத்தையே பொய்களால் கற்பழிக்கின்றனர். சரி, ஏன் இந்த நடவடிக்கை எதையும் புலிகள் கண்டிப்பதில்லை. கருணாவுக்கு எதிராக படையெடுத்துச் சென்றவர்கள், ஆனால் இவர்களை ஒழிக்க "ஏகபிரதிநிதிகள்" முற்படவேயில்லை. இப்படி அம்பலமாகின்றது புலியின் அரசியல். இந்த நிலையில் உண்மையில் இதை மக்கள் தான் செய்கின்றனர் என்பதை, உலகில் யாரும் நம்புவது கிடையாது. புலிகள் கூட அதை நம்புவது கிடையாது. அப்படியானால் யாரை நம்பவைக்க முனைகின்றனர். இங்கு அரசியல் சூனியம் நிலவுகின்றது.

சர்வதேச சமூகம், இலங்கை அரசு, ஏன் தமிழ் மக்கள் கூட இதை மக்கள் செய்வதாக நம்புவது கிடையாது. யாருமே நம்பாத ஒரு செய்தியை சொல்லி, இந்த வன்முறைகளை நடைமுறைப்படுத்துகின்றனர் புலிகள். செய்திப் பத்திரிகை பொய்களால் நிறைந்து விற்பனையாகின்றது. முழுச்செய்தி அமைப்பைபும் பொய்களால் புணருகின்றனர். பொய், பித்தலாட்டம், மோசடி, முடிச்சுமாற்றி என, மனித குலத்தில் இழிந்து போன சமூக வடிவங்கள் மூலம் இவை அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றது. இது எடுத்துக் காட்டுவது, அரசியல் ரீதியான தொடர்ச்சியான புலியின் வங்குரோத்தைத் தான். இன்று மக்கள் தான் இதனைச் செய்கின்றனர் என்று யாரும் நம்பாத போது, இது ஒரு ஆய்வுக்குரிய விடயமல்லத்தான். எம்முன் இங்கு ஆய்வுக்குரிய விடையமாக இருப்பது, இதை மக்கள் போராட்டம் என்பது தான். இதன் மூலம் மக்கள் போராட்டம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கேடுகெட்ட மனிதவிரோத வன்முறைகளின் அரசியல் பண்பைத்தான்.

தாமே வலிந்து உருவாக்கிய தமது சொந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது, வக்கற்றுப் போன குறுகிய புத்தி கொண்ட தலைவர்கள், மக்களின் பெயரிலான நேர்மையற்ற வகையில் ஒரு அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தாம் வலிந்து உருவாக்கிய குறுகிய நலன்கள் சார்ந்த அரசியல் நலன்கள் நெருக்கடியில் சிக்கிவிடவே, மக்களை அதற்குள் மக்களின் பெயரில் பலியிட முனைகின்னர். நயவஞ்சகத்தின் ஒரு எடுத்துக்காட்டாக மாறி, மனிதத்துவத்தை புதைகுழியாக்குகின்றனர். மக்கள் எந்தளவுக்கு இழிநிலைக்கு தாழ்த்தப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அடிமைப்படுத்தப்படுகின்றார்களோ, அந்தளவுக்கு அவர்களின் பெயரால் எதையும் செய்துவிடுகின்றனர். ஒரு அராஜக சூழல் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றது. தமிழ்த் தலைவர்களின் சின்னத்தனங்களை, வக்கிரமாகவே சமூகத்தின் மீது புகுத்துகின்றனர்.

மக்கள் போராட்டம் என்ற பெயரில் வெளியில் இருந்து வரும் ஒரு சிறுகுழுவால், சிலவேளைகளில் 25, 50 பேர் கொண்ட குழுவால் முழு சமூகத்தையுமே அதிரவைக்கும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றர். கொலைவெறி கொண்டதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்பாடுகளை, மக்கள் போராட்டம் என்ற பெயரில் நடத்துகின்றனர். இந்த அராஜகத்தின் போது ஒருவர் கொல்லப்படும் போது, மக்கள் பெறுவது என்ன? மக்கள் தமக்குத் தானே விலங்கை பூட்டிக் கொள்வது தான். இது தான் மக்கள் போராட்டத்தின் முடிவாகின்றது.

வடக்குகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் நடவடிக்கை என்ற பெயரில், சிறுகும்பல் மக்களின் உள்ளார்ந்த சமூக நடவடிக்கைக்குள் பதுங்கிக் கொள்கின்றது. பின் அதற்குள் இருந்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். எதிரியால் சூழப்பட்டதும் மிகவும் நெருக்கமான அவர்களில் கால்களில் மிதிபடாமால் வாழும் மக்கள், தாமுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்றனர். இதைத்தான் இன்றைய தமிழ் தேசிய தலைவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய ஏகப்பிரதிநிதிகள், இதை மட்டும் தான் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருந்தனர். மக்கள் அவர்கள் சம்பந்தப்படாத இந்தப் போராட்டங்களில் இருந்து, அன்னியமாகி ஊமைகளாக நடைப்பிணமாக வாழ்கின்றனர். புலிகள் மக்களை கண்டு அஞ்சுவதால், அவர்களுக்கு வாய்பூட்டு போட்டு துப்பாக்கியால் தமிழ் மக்களை வேட்டையாடியும் கண்காணிக்கின்றனர். உண்மையில் மக்கள் புலிகளையும், புலிப் போராட்டங்களையும் வெறுக்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் நலனை முன்னெடுக்காத இப்போராட்டம், அவர்களின் வாழ்வை நாசமாக்கி வருகின்றது. யுத்த சூழலிலும், யுத்தமற்ற சூழலிலும் கூட, மக்களின் அன்றாட வாழ்வு அச்சத்துடனும், பீதியுடனும் மற்றவர்களைக் கண்டு அஞ்சி பயந்து வாழவேண்டிய அவலமான ஒரு நிலையில் வாழ்கின்றனர். கடவுளுக்கு பயந்து கையெடுத்து இரந்துவேண்டி காணிக்கையிட்டு கும்பிடுவது போன்று, ஆயுதம் ஏந்திய "ஏகபிரதிநிதி" புலிகளை இரந்து கையெடுத்துக் கும்பிடுவதுடன், அவர்கள் கேட்கும் காணிக்கைகளை கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் தமது வாழ்வையே அவர்களுக்காக அழித்து வருகின்றனர். மக்களின் உழைப்பை புடுங்குவதன் மூலம், சமூகத்தின் ஒரு பகுதி உழையாது வன்முறை கொண்ட கும்பலாகவே வாழத் தொடங்கியுள்ளது. இது இன்று மக்களுக்குள் புகுந்துகொண்டு கட்டவிழ்த்துவிடும் அராஜகத்தையே, மக்கள் போராட்டம் என்கின்றனர். உண்மையில் இந்த அராஜகம் மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. சிறிலங்கா இராணுவம் மீதான தாக்குதல் என்ற போர்வையில், மக்கள் மேலான அராஜகமாகவே இது திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பொதுவாக இத்தாக்குதல்கள் சிறிலங்கா இராணுவம் மேலானதாக காட்டப்பட்ட போதும், உண்மையில் பரந்துபட்ட மக்களின் மேல்தான் இந்த அராஜகம் கொடிய விலங்கிட்டுள்ளது. அராஜகம் சுற்றுவழிப் பாதையைக் கொண்டது. மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு சிறு கும்பல் நடத்தும் கண்மூடித்தனமான வன்முறையினால், மக்களின் துன்பம் என்றுமில்லாத வகையில் பெருக்கெடுக்கின்றது. மனிதத்துவம் சிதிலமடைகின்றது.

மக்களின் துன்பம் தான் புலிப் போராட்டத்தின் ஆன்மா என்பதே பிரபானிச சித்தாந்தமாகும். இதனால் மக்களை துன்பப்படுத்தும் வகையில், புலிகள் திட்டமிட்ட செயல்பாடுகளை எப்போதும் அமைத்துக் கொள்கின்றனர். இதற்கு ஈவிரக்கமற்ற எந்தவிதமான இழிந்துபோன காட்டுமிராண்டித்தனத்தையும் கூட செய்துவிடுகின்றனர். எதிரியிடம் மக்கள் துன்பப்பட்டால் தான், அவர்களுக்கு தேசிய போராட்ட உணர்வு வரும் என்பது பிரபானிச சித்தாந்தமாகும். மக்களை வதைத்து துன்பப்படுத்தும் வகையில், நடவடிக்கையை திட்டமிடுவதே புலியின் அன்றாட வழிமுறையாகும். பின் தயாரிக்கப்பட்டு தயாராக வைத்துள்ள சரக்கை காட்டி, பார் எதிரியை என்று கூறுவது அன்றாடச் செய்திகளாகின்றன. இதை ஆய்வு செய்து நியாயப்படுத்துபவர்கள் தமிழ் தேசிய ஆய்வாளராகின்றனர். மாமனிதனுக்குரிய தகுதியையும், தேசப்பற்றாளர் என்ற தகுதியையும் பொறுக்கித் தின்றே பெறுகின்றனர். இதன் மூலம் மக்களிடம் அன்னியமாகிய தமது குண்டர் படைச் செயல்பாட்டுக்குரிய ஆட்கள் கிடைப்பார்கள் என்ற தேசிய சித்தாந்தம், மக்களுக்கு கொடுப்பது துன்பத்தையும் அடிமைத்தனத்தையும் தான்.

உண்மையில் மக்களின் வாழ்வுடன் சாராத இந்த வன்முறையை யார், எப்படி நடத்துகின்றனர்? காடையர்களுக்கே உரிய உதிரி கும்பல்கள் நடத்தும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை மூலம், சூழலை வன்முறைக்குள்ளாக்குகின்றனர். வன்முறையைத் தொடங்கும் போது, விடுப்பு பார்க்கும் பார்வையாளர் கூட்டம் கும்பலாக கூடுகின்றது. அதை மக்கள் என்று காட்டியபடி, கும்பலில் இருந்தே கல் எறிந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதற்கென தயராக உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர், குறித்த அந்தச் சூழலில் கொலைவரை செய்து விடுகின்றனர்.

பொதுவாக பாடசாலைகளில் புகுந்து கொள்ளும் இந்த பயிற்றப்பட்ட வன்முறை கும்பல், மாணவர்களின் பெயரில் அனைத்தையும் செய்துவிடுகின்றனர். அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட இராசதுரை படுகொலையை இந்தப் பின்னனியில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. இராசதுரை கொலைக்கு எந்தக் காரணத்தையும் கொலையாளிகளும் சரி, அவர்களின் பினாமிகளும் கூட முன்வைக்க முடியாது போயுள்ளது. இந்த நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்று பார்த்தால், இன்றைய வன்முறையுடன் தொடர்புபடுத்தியே இதைக் காணமுடியும்.

அதிக உயர்தர மாணவர்களைக் கொண்ட, மிக முக்கியமான மையத்தில் உள்ள ஒரு பிரதான பாடசாலையினுள், வன்முறைக் குண்டர்களை இணைத்துக் கொள்வதற்கு அவர் அனுமதிக்கவில்லை என்பது மிக முக்கியமான காரணமாகும். மாணவர்கள் பெயரில் வன்முறைக் குண்டர்களை பதிவுசெய்ய மறுத்ததும், வன்முறையாளர்கள் பாடசாலையை மாணவர் உடையில் பயன்படுத்த மறுத்தமையும், இக் கொலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

மக்கள்படை என்ற பெயரில் செயல்படும் காடையர்களை, மக்களுடன் கலந்துவிட மறுக்கும் அனைத்தையும், சமூக விரோதமாக கருதிக் கொன்று விடுவதும் நிகழ்கின்றது. இதற்கு உரிமைகோராத மரணதண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பின் அதற்கு கடிவாளம் பூட்டி, பினாமிகள் மூலம் தூற்றப்படுவது நிகழ்கின்றது. கொலையாளிகள் தாம் ஏன் சுட்டோம் என்று, எந்த சுயவிளக்கத்தையும் கூறுவது கிடையாது. இதன் பின்னால் நக்கித் திரியும் லும்பன் வாழ்வு கொண்ட கும்பல் தான், நக்கியதுக்கு ஏற்ப தாம் விரும்பிய விளக்கங்களைத் தருகின்றனர்.

பேரினவாதம் தமிழ் மக்களின் பிரச்சனையையே, வெறும் புலிப் பிரச்சனையாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டது. இதை இனி தமிழ் மக்களின் பிரச்சனையாக, புலிகள் உள்ளவரை கொண்டுவரவே முடியாது. இந்த நிலையில் மக்களின் பெயரில் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், வெறும் புலிப்பிரச்சனையாக இருப்பதையும், மீண்டும் உலகை நம்பவைக்கும் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறிவருகின்றது. உண்மையில் இன்று இது ஒரு புலிப்பிரச்சனையாக மட்டும் இருப்பதைத் தான், அவர்களின் சொந்த நடவடிக்கைகள் எடுத்தக் காட்டுகின்றது. புலி நடத்தைகள், பேச்சவார்த்தை நிபந்தனைகள் என அனைத்தும் இதற்குள் மீண்டும் மீண்டும் புணரப்படுகின்றது.

மக்களின் பெயரில் புலிகள் நடத்தும் அராஜக வன்முறை நடத்தைகள், அரசியல் நேர்மையீனத்தில் இருந்தே எழுகின்றது. எதிரியை நேர்மையாக எதிர் கொண்டு, அதை மக்களுக்கு விளங்கப்படுத்தி, அவனை எதிர்க்க வக்கற்ற கோழைத்தனத்தின் விளைவே இவை. எப்போதும் எங்கும் பொய்யும் புரட்டும் அரசியலாகிவிடுகின்றது. உங்கள் மனச்சாட்சியிலேயே இதுவே எதிரொலிக்கின்ற போது, இதை உண்மையென்று உலகில் யாரும் நம்புவது கிடையாது. எந்தச் செய்தியும் பலத்த சந்தேகத்துக்கு உள்ளாகின்றது. கொலையை செய்துவிட்டு, அதற்கு தமது பக்க நியாயத்தைக் கூட கூறுவது கிடையாது. மாறாக கொல்லப்பட்டவன் தரப்பே கொன்றதாக கூறும் அத்திவாரமேயற்ற பொய் மூட்டைகளில் ஏறி நின்று, தமிழ் தேசியத்தை யாராலும் பாதுகாக்க முடியாது.

இவர்கள் செய்ததைக் கூட நியாயப்படுத்த முடியாத வகையில், அரசியல் வங்குரோத்து காணப்படுகின்றது. எங்கும் எதிலும் நேர்மையீனம் காணப்படுகின்றது. இன்று நடக்கும் பரஸ்பர எதிர் நடவடிக்கையில் மக்களுக்கு எதிராக எதிரி எதைச் செய்கின்றான் என்பதை கூட, கண்டறிய முடியாத நிலையை அடைந்துள்ளது. இதனால் எதிரி லாபம் அடைகின்றான். நடக்கும் கொலை யாரால் ஏன் என்ற கேள்வியும், காணமல் போவோர் யாரால் ஏன் என்ற சந்தேகமும் சமூகத்தில் ஏற்பட்டுவிட்டது. இரத்தக் கறைபடிந்த பினாமிகளும், அதையே கறந்து குடிக்கும் செய்தி ஊடகங்களும் பொய்யை ஆயிரம்தரம் மீண்டும் மீண்டும் சொன்னாலும், அதை நம்பவதற்கு என்று யாரும் கிடையாது. இதை பினாமிகளும், விசுவாசிகளும் கூட விதண்டாவாதத்துக்கு வம்பளப்பதே ஒழிய, இதை உண்மையாக அவர்கள் கூட நம்புவது கிடையாது.

அண்மையில் புங்குடுதீவில் நடந்த தர்சினி படுகொலை கூட, ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த உதிரிக் கும்பல் நடவடிக்கைக்கு உள்ளாகியது. 18.12.2005 இது அன்றாடச் செய்தியில் (17.12.2005 அல்லது 16.12.2005 அன்று சம்பவம் நடந்தது.) வெளியாகிய போதே, ஆச்சரியப்படத்தக்க வகையில் கற்பழிக்கப்பட்டதாகவும், அதன் பின் கொலை செய்து இராணுவம் வீசியதாகவும் அவசர அவசரமாக புலிகள் செய்தியாக்கினர். அவர்கள் சார்பு இணையமான நிதர்சனம் கொம் ஞாயிற்றுக்கிழமை -18 டிசெம்பர் 2005 "றாஜபக்ச பதவிக்கு வந்து 1 மாதத்தில் முதலாவது தமிழ் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் " என எழுதியது. மீண்டும் புதன்கிழமை- 21 டிசெம்பர் 2005 "ஸ்ரீலங்கா கடற்படையினரின் வெறியாட்டத்தில் உயிரிழந்த தர்மினி இளையதம்பியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று யாழ்ப்பாணம் ஸ்ரீ லங்கா காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை மருத்து பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என்ற செய்தி வெளியாகியது. இந்த அடிப்படையில் தான் தமிழ் ஊடகவியல் செய்திகள் கட்டமைக்கப்பட்டதும், வன்முறைகள் சிலரால் நடத்தப்பட்டதும், அறிக்கைள் கண்டணங்கள் என அனைத்தும் விடப்பட்டன.

இதில் பலத்த சந்தேகம், நம்பகத் தன்மை ஊகங்கள் என பலவுண்டு.

1. மருத்துவ அறிக்கை வரமுன்னமே கற்பழிப்பு நடந்தாக கூறியது எப்படி?


2. இரண்டாவது இராணுவம் மற்றும் கடற்படை மட்டும் தான் இதைச் செய்தது என எப்படி கூற முடியும்?


3. ஏன் தனிப்பட்ட பழிவாங்கலாக, இப்படி நடக்கமுடியாது?


4. வன்முறையைத் தூண்ட மக்கள் படை இதை ஏன் செய்திருக்க முடியாது?


இராணுவம் முதல் மக்கள் படை வரை இது போன்ற காடைத்தனங்களில் ஈடுபடும், ஆணாதிக்க மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். இங்கு இராணுவ கற்பழிப்புகள் ஒருபுறம் நிகழ்கின்றது என்றால், மறுபுறம் இது போன்றவை புலிகளாலும் செய்யப்பட்டுள்ளன. இன்று வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு செய்யக் கூடியவர்கள் யார் என்ற கேள்வியில், விடை அனைவருக்கும் தெரிந்ததுதான். வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற காடைத்தனங்களை திட்டமிட்டு தேசியத்தின் பெயரில் செய்யக் கூடியவர்கள் தான். இந்த விடையத்தில் பல தளத்தில் கேள்விகள் உள்ளன. அடிப்படையில் நேர்மையற்ற நடவடிக்கைகள் பெருகும் போது, அதுவே அரசியலாகின்ற போது, இது போன்றவற்றில் சந்தேகங்களை பல தளத்தில் விட்டுச் செல்லுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட படங்களில் கொலை செய்யப்பட்ட தரிசினியின் உடலில் உடுப்புகள் நேர்த்தியாக இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? பின்தங்கிய ஒரு கிராமம் ஒன்றில் கிணற்றில் இருந்து எடுக்கும் உடலைக் கூட படமெடுத்து, அதுவே புலியின் சொந்த அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது! ஆச்சரியப்படத்தக்கவகையில் இது திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியை இவைகள் விட்டுச் செல்லுகின்றது.

இந்த தரிசினியின் பின் வேறு பல அபிப்பிராயங்கள் புலிகள் அல்லாத தளத்தில் வெளியாகின்றன. அதில் கடற்படை ஒருவரிடம் நட்பு கொண்டிருந்ததாகவும் கூட செய்திகள் உள்ளன. அதுபோல் கடற்படையினருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின்றன. அவர்கள் வழமை போல் தேசத்தின் பெயரில் மக்களின் பெயரில் கொல்லும் நபர்கள், இதை ஏன் செய்திருக்கமுடியாது? அண்மையில் யாழ்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட "விபச்சாரி" யின் கதையை இது ஒத்தது. விடைதெரியாத கேள்விகள், சந்தேகங்கள் பல உண்டு.

உண்மைக்கும் நேர்மைக்கும் அருகதையற்ற நிலையில் எமது சமூக உள்ளது. எனக்கு நடந்த ஒரு உதாரணத்தை நான் இங்கு கூறமுடியும்;. நான் 1987ம் ஆண்டு உரிமை கோராத ஒரு நிலையில் கடத்தப்பட்டு, புலிகளின் வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன். காணமல் போன என் விடையத்தில், புலிகள் தாம் சம்பந்தப்படவில்லை என்று பல்கலைக்கழகத்தில் கூட அறிவித்தனர். இந்த நிலையில் காணாமல் போன என்னை, நான் சென்றுவரும் ஒரு வீட்டுக்கு அவர்கள் கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. புலிகள் தான் தாம், என்று உரிமைகோர முடியாத இவர்கள் என்ன செய்தார்கள். கை,கால், கண், வாய் என அனைத்தையும் கட்டி இரவு 12 மணிக்கு என்னை எடுத்துச் சென்றனர். தம்மை இனம் காணாத வகையில் மூகமூடிகளை, பொய்த் தலைமுடிகளை போட்டுக் கொண்டனர். அத்துடன் கறள் பிடித்த வாள் கத்தியுடன், இடுப்பில் ஆயுதத்தை மறைத்து வைத்தபடி என்னைக் கொண்டு சென்றனர். 10 மைல் தூரம் பிரயாணம் செய்த அவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு அன்று அகதிகளாக பல பத்து மக்கள் தங்கியிருந்தனர். அங்கு அவர்கள் தம்மை எனது இயக்கத்தின் பெயரில் அறிமுகப்படுத்தியதுடன், இயக்கத்தை நான் மோசடி செய்தாக கூறி அனைத்தையும் நடத்தி முடித்தனர்.

அடுத்த நாள் அச்சுற்றுவட்டாரத்தில் இச் செய்தி கதையாக பரவியது. மக்கள் மத்தியில் நான் காணமால் போனதற்காக எனது இயக்கமே காரணம் என்று புனையப்பட்டது. இதை மறுத்தவர்களுக்கு அவர்களே பதில் கூறினர். புலிகள் நவீன ஆயுதத்துடன் தான் வருவார்கள், வாள் கத்தியுடன் முகமூடியுடன் வரமாட்டார்கள் என்றனர். அத்துடன் இப்படி வரக் கூடியவர்கள் எமது இயக்கமே என்றனர். என்ன வக்கிரம். இப்படித்தான் அன்று முதல் இன்றுவரை நிகழ்கின்றது. நான் தப்பும் வரை இதுவே புலிப் பினாமியத்தின் செய்தியாகவும், நம்பகமான ஒன்றாகவும் கூட காட்டப்பட்டு இருந்தது. (இவைகளை உள்ளடக்கிய வகையில், வதைமுகாமில் எனக்கு என்ன நடந்தது என்பதை 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.) இப்படி புலிகளின் செயல்கள் எல்லாவகையான இழிவான மனித விரோதத் தன்மை கொண்டவை. எதையும் எப்படியும் செய்யக் கூடியவர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டுத் தான் இது. இதற்கு அண்மையில் நடந்த மற்றொரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.

இது அவர்களின் நேர்மையீனத்தையும், செய்திவெளியிடும் வக்கிரத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. புலியின் மக்கள்படையைச் சோந்த பொங்கு தமிழ் பினாமி பேராசிரியர் கணேசலிங்கம் 13 வயது குழந்தையை தொடர்ச்சியாக கற்பழித்த போது, இதே புலி நிதர்சனம் கொம் முதல் செய்தியை தந்தது. பின் தமது குண்டர் படையாள் என்று தெரிந்தவுடன் குத்துக்கரணம் அடித்து என்ன சொன்னது என்று பாருங்கள்.

"தமிழ் ஊடகங்களுடன் சேர்ந்து நிதர்சனம் விட்ட தவறுக்கு மனம் வருந்துகின்றது. வெள்ளிக்கிழமை 9 செப்ரெம்பர் 2005 - சிறுமி தற்கொலை முயற்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்று எமது செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக மனம் வருந்துகின்றோம். திட்டமிட்ட முறையில் முதல் தடவையாக யாழ் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளிநாட்டு உளவுச் சக்திகளினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், ஒரு சில விடயங்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் ஒரு அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்புகின்றோம்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்பகட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது."

" நீண்ட கால உறவு" என்றால் கணேசலிங்கம் தானே தொடர்ச்சியாக கற்பழித்து வந்தவன். " வெளிநாட்டு உளவுச் சக்தி" சதி, "பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பலவாக கூறும் நேர்மையற்ற வக்கிரம் வெளிப்படுகின்றது. இப்படி உண்மையை மூடிமறைத்து பொய்களால் புணர்ந்த போது, இந்த செய்தியின் உண்மைத் தன்மை என்ன. முன்பு மூன்று ஆணுடன் தொடர்பு கொண்டவர் என்று புலிகள் ரோச்சடித்து தொழில் செய்தவர்கள் போல் கூறுகின்றனர். இங்கு தரிசனி கற்பழிப்பு பற்றியும் ரோச்சடித்து நின்ற வகையில்தான் கருத்துக் கூறுகின்றனர்.

ஒரு 13 வயது சிறுமையைப்பற்றி எழுதும் இந்த சமூக விரோதக் ஆணாதிக்க காடையர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பல வருடமாக அந்த வீட்டில் வேலைகாரியாக மட்டுமின்றி, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர் அக் குழந்தை. 13 வயதை அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற அக் குழந்தை, சிறு வயதிலேயே அந்த வீட்டில் அடிமையாக்கப்பட்டவர். கல்வி மறுக்கப்பட்டு அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டவர். அந்த சிறு குழந்தையைத் தான் புலிகள் மறுபடியும் தமது சொந்த வக்கிரத்தால் புணர்ந்தனர். புலிகளா மற்றைய மூன்று ஆண் தொடர்பாளர்கள்? செய்தியை புணர்ந்த விதம் இப்படித் தான் இதைக் காட்டுகின்றது. இது தான் புங்குடுதீவு தரிசினிக்கும் நிகழ்ந்தது. ஏன் அந்தக் குழந்தை தற்கொலை செய்ய முயன்றது. ஆண்கள் பலர் கிடைக்காமையாலா! அந்தக் குழந்தை கற்பழிக்கப்பட்டவுடன், பூதக்கண்ணாடி கொண்டு தேடிய புலிகள், மூன்று ஆண்களுடன் தொடர்பு என்று எழுதுகின்றது. அந்த மருத்துவ அறிக்கை எங்கே? என்ன வக்கிரம். இப்படித் தான் அனைத்து செய்திகளும். கற்பழிக்கப்பட்ட தரிசினிக்காக புலம்பும் இதே செய்தி ஊடகம் தான், இதையும் செய்தியாக வெளியிட்டு தமிழ் மக்களையே புணர்ந்தது.

சரி சிறு குழந்தையை வீட்டில் வேலைக்கு வைத்திருப்பது எப்படி சரியாகும்?. தமிழீழத்தில் பிரபாகரனின் ஆட்சியில் ஏழைக் குழந்தைகளை வீட்டு வேலைக்காக வைத்திருப்பீர்கள். கற்பழித்துவிட்டு முன்னமே ஆண்களுடன் தொடர்பு என்று சொல்லுவீர்களோ! இப்படித் தான் புலிச் சட்டம் உள்ளது. உங்கள் தமிழீழத்தில் குழந்தைகளை பாலியல் பண்டமாக பயன்படுத்துவீர்கள். சரி நீங்கள் கூறுவது போல் அந்த குழந்தை மூன்று ஆண்களுடன் உறவு கொண்டது என்று வைத்துக் கொள்வோம், அப்படியாயின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் இப்படியான பெண்களுடன் உறவு கொள்ளாலாமோ! அதைத்தான் பிரபாகரனின் பிரபானிசம் வழிகாட்டுகின்றது. அதனால் தான் புலிப் பினாமித் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் வெட்கத்தை விட்டு, கோவணத்துடன் நீதிமன்றத்தில் படியேறி நின்று வழக்குரைத்தனர்.

இப்படி புணர்ந்து செய்திகளையும், தேசியத்தையும் வக்கிரப்படுத்தியவர்கள், நியாயப்படுத்தியவர்கள், அதையே வழக்காடியவர்கள், தரிசினியின் விடையத்தில் எப்படி நேர்மையாக செயல்படமுடியும். எல்லாவிதமான சந்தேகத்தையும் விட்டுச் செல்வதை, இது எந்தவித்திலும் தடுத்துவிடவில்லை. இதுபோன்றே மக்களின் பெயரில் நடத்தும் காடைத்தனங்கள் அனைத்தும், சிலர் மட்டுமே செய்கின்றனர். காடைத்தனத்தை செய்வதற்கு என பயிற்றப்பட்ட புலிகள், மக்களின் பெயரில் ஒரு காடையர் கும்பல் போல் மக்களுக்குள் நின்று வக்கரிக்கினர். உண்மை, நீதி, நியாயம் என எதுவுமற்ற வகையில், மக்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.


எதிரியின் அரசியல் ஆளுமைக்கு முன்னால், தலைகுனிந்து மண்டியிட்டு செல்லும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. எதிரியின் போலியான நயவஞ்சகமான அரசியலை எதிர்த்து, சரியான அரசியலை முன்வைத்து நேர்மையாக அவன் மண்கவ்வும் வண்ணம் போராடமுடியும். சமூக அறிவும் கல்வி அறிவுமற்ற ஒரு குறுகிய புத்திகொண்ட போராட்ட தலைமையினால் இதைச் செய்யமுடியாது. மக்களை மிக இழிவான வகையில், முரட்டுத்தனமாகவும், பலாத்காரமாகவும் தமக்கு பயன்படுத்தம் வகையில் அரஜாக சூழலுக்குள் தள்ளிச் செல்லுகின்றனர். இது அல்லாத வகையில் ஒரு போராட்ட சூழலை ஏற்படுத்த முடியாத ஒரு அரசியல் வறுமை கொண்ட தலைமை, இப்படித் தான் எம்மை வழிகாட்டுகின்றது.

ஒரு கட்டத்தில் மக்கள் படை என்ற பெயரிலான அறிவிப்பில், நாங்கள் 250 பேர் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியது. மக்கள் போராட்டம் என்ற பெயரில் யாழ்குடாவையே ஆட்டிபடைப்பவர்கள் 250 மக்கள் மட்டும் தான் என்பதை ஒத்துக் கொண்டனர். இந்த 250 குண்டர்களும், அராஜக வழியில் மக்களுக்குள் நின்று நடத்தும் வன்முறைக்கு தான் புலிகள் மக்கள் படை என்கின்றனர். இப்படித் தான் தாங்களே தமக்குள் பல பத்து படைகள். மக்களை அச்சுறுத்தவும், பீதியில் மக்களை உறையவைக்கவும் இந்த குண்டர் படைகள் தேவைப்படுகின்றது.

உண்மையில் புலிகள் என்ன செய்ய நினைக்கின்னர். மக்களின் இயல்பான வாழ்வை முடக்க விரும்புகின்றனர். கடந்த பத்துவருடமாக யாழ்குடாவில் இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவிய இணக்கமாக இணங்கி வாழும் சூழலை தகர்க்க விரும்புகின்றனர். இராணுவத்தை சீண்டுவதன் மூலம், இராணுவத்துக்கே உரிய மிருக வெறியை வன்முறையாக்கி, அதை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட விரும்புகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றால், இராணுவ வன்முறைதான் என்று கூற காரணங்களை தேடி வன்முறையை தூண்டுகின்றனர். இதில் சமாதானம், அமைதி ஒப்பந்தம் வேறு. அதற்கு தாம் விசுவாசமாக இருப்பதாக விளக்கம் வேறு வழங்குகின்றனர்.

இப்படிச் சொன்னபடி இராணுவ கெடுபிடியை உருவாக்கும் வகையில், வன்முறையைத் தூண்டும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்த நேர்மையிPமே சமாதான காலம் முழுக்க இருந்தது. ஆரம்பம் முதலே சில நூறு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டடனர். இதை என்றும் எங்கும் யுத்த நிறுத்த மீறலாக புலிகள் கூறுவது கிடையாது. மனிதவுயிர்கள் கொல்லப்பட்ட வரலாற்றில், கடத்தல் கைது என்று வன்முறை எகிறிக் குதித்தது. இராணுவம் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது. இராணுவ புலனாய்வாளர்கள் சில பத்து பேர் கொல்லப்பட்டனர். புலிகள் கொலைகளை மாபியாத்தனத்தில் செய்து வந்தனர். இந்த பேரினவாத சிங்கள இராணுவம், வன்முறையற்ற ஒரு பொது சூழலை தக்கவைத்தது. மக்கள் புலியைத் தான், தமது சொந்த இயல்பு வாழ்வுக்கு தடையானதாக எதார்த்தம் சார்ந்து கருதத் தொடங்கினார். புலிகள் தொடர்ச்சியாகவே கொலைகளைச் செய்து வந்தனர்.

இதன் பின்பாக புலியில் ஏற்பட்ட கருணா பிளவே, புலியின் மீதான எதிர்தாக்குதலை உருவாக்கியது. இதுவே கொலைகளை பரஸ்பரமாக்கியது. அது வரை (அமைதி சமாதானத்தின் பின்பாக) புலிகள் மட்டுமே கொலைகளை ஒருதலைப்பட்சமாக செய்து வந்தனர். அதுவரை எந்த புலி உறுப்பினரோ அல்லாத ஆதாரவாளரோ கொல்லப்பட்டனரா எனின், இல்லையென்று சொல்லுமளவுக்கு நிலைமை இருந்தது. புலிகள் மீதான கைதுகள் முதல் அனைத்தும் சமாதான ஒப்பந்த விதிக்கு புறம்பாக ஆயதங்களுடன் நடமாடியது போதே நிகழ்ந்தது. தாமே செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு புறம்பாக, கடல் மூலம் கப்பல்களில் ஆயுதம் கடத்திய போதே நிகழ்ந்தது. நிலைமை பொதுவாக இப்படித்தான் இருந்தன. இராணுவம் செய்த அனைத்தும் மக்களுக்கு பகிரங்கமாக தெரியக் கூடியதாக இருந்தது. புலிகள் செய்த அனைத்தும் இனம் தெரியாத நபர்களின் செயலாக கூறப்பட்டது. அவை அனைத்தும் புலிகளே செய்தமையால் தான், அவை அனைத்தும் இனம் தெரியாத நடவடிக்கையாகின. பின்னால் புலிகள் மீதான தாக்குதலை கருணா தரப்பு தொடங்கிய போது, புலிகள் அதை இனம் தெரியாத நடவடிக்கையாக கூறவில்லை. மாறாக ஒட்டுபடையின் நடவடிக்கையாக அதைக் கூறத் தொடங்கியது. உண்மையில் இனம் தெரியாதவை அனேகமாக அனைத்தும் புலிகள் செய்தவையே. மற்றவை புலியில் இருந்து பிரிந்த அதே அமைப்பைச் சேர்ந்த கருணா தரப்பு செய்தது. மிகப் பிந்தியவை (பெரும்பாலும் 2005 நவம்பர் டிசம்பரில் செய்தவை) இராணுவ தரப்பும், புலிகளும் போட்டிபோட்டு செய்கின்றன. பெரும்பாலானவை கொலைகள் பற்றிய அபிப்பிராயம் மற்றும் எதிர்வினை யார் செய்தது என்பதை தெளிவாக்குகின்றது. ஏன் கொலைக்கு எதிர்வினையாற்றிய வடிவம் கூட அதை பிரதிபலிக்கின்றது. இன்று தாம் செய்ததை எதிரி செய்ததாக காட்டுவது கூட நிகழ்கின்றது. பொதுவாக யுத்த நிறுத்த மீறல் என்று புகாரிட்ட போதும் கூட, யார் கொலையாளி என்பது உறுதி செய்தது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறும் புலிகள், தொடர்ச்சியான தம் தரப்பல்லாத கொலைகளை யுத்தநிறுத்த மீறலாகவோ, அதை கண்டிக்கவோ முன்வரவில்லை. கொலையை ஆதாரித்தே நின்றனர் என்றால், உண்மையில் அதை அவர்களே செய்தனர். இதுவே இன்று மக்கள் படை என்ற பெயரிலும், ஊர்பெயர் தெரியாத அனாதைப் படைகளின் பெயரிலும் புலிகள் தான் செயல்படுகின்றனர்.

அமைதி சமாதானம் என்ற ஒன்றைத் தாமே தெரிந்தெடுத்து கையெழுத்திட்டுவிட்டு, தொடர்ச்சியாக கொலைகளை செய்து வந்தனர். கடத்திச் சென்றனர். சித்திரவதைகளைச் செய்தனர். அச்சறுத்தல்கள் பலவற்றை செய்தனர். இவை யுத்தநிறுத்த மீறலாக இருந்த போதும் கூட, புலிகள் அதைச் செய்தனர். இந்த யுத்த நிறுத்தத்தை பதிவு செய்வதை தொழிலாக கொண்ட கண்காணிப்பக் குழுவிடம், இதைக் கூட பதிவு செய்ய முடியாத வகையில் பதிவிடங்களில் புலிகள் தமது சொந்த ஆட்களையே நிறுத்தியிருந்தனர். பின்னால் இதையும் கண்காணிப்பு குழு புரிந்து கொண்ட நிலையில், சில ஆயிரம் சம்பவங்கள் யுத்தநிறுத்த மீறலாக பதிவாகின. இவை பெருமளவில் (சில ஆயிரம்) புலிகளால் மீறப்பட்டவை. இதையும் தமிழ் மக்கள் தான் துணிச்சலுடன் முறையிட்டனர். ஆனால் எவையும் முழுமையாக (பல பத்தாயிரம்) பதிவாகவில்லை. பல நூறு கொலைகளில் குற்றவாளிகள் புலிகள் என்ற பதிவாகவில்லை. இப்படி மனிதவிரோத குற்றங்கள் அரங்கேறின. அமைதி சமாதானம் என்ற பெயரில், மக்களின் இயல்பு வாழ்வை நாசமாக்கிய யுத்த நிறுத்த மீறல்களை புலிகளே பெருமளவில் செய்தனர். நடத்த யுத்தநிறுத்த மீறல்களில் இனம்காணப்பட்டு உறுதிபடுத்தப்பட்டவைகளில், 90 சதவிகிதத்துக்கு மேலானவை புலிகளால் மீறப்பட்டவையே. மக்களின் இயல்புவாழ்வை இதுவே நாசமாக்கியது. இதைக் கண்காணிப்பு குழு அறிக்கைகள் உறுதி செய்கின்றன. இந்த அறிக்கையை தமிழ் மீடியாக்கள் வெளியிடுவதில்லை. உறுதிப்படுத்தப்படாத யுத்த நிறுத்த மீறல்களில் 99 சதவீதமானவை புலிகளால் செய்யப்பட்டவை. இதில் 300 மேற்பட்ட கொலைகளும் அடங்கும். கடத்தல் சித்திரவதைகள் எனறு நீளமான பட்டியல் உண்டு. இதைவிட பயத்தின் காரணமாக புகார் இடப்படாத யுத்த நிறுத்த மீறல்களில், 100 சதவீதம் புலிகளால் செய்யப்பட்டது. இது பல பத்தாயிரத்தைத் தாண்டும்.

புலிகளில் ஏற்பட்ட கருணா பிளவு, நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புலிகள் மேலான தாக்குதல் என்ற புதிய நிலை உருவாகியது. இதையே புலிகள் அரசு செய்ததாக, முதன்முதலாக குற்றம் சாட்டியது. இப்படி புலிக்குள் ஏற்பட்ட பிளவு நிலைமையை மாற்றியமைத்தது. மட்டக்களப்பு கருணா அணி மீது, புலிகள் இராணுவத் தாக்குதலை நடத்தியிருக்காவிட்டால், புலி மீதான வன்முறையும் நடந்து இருக்காது. இதில் வேடிக்கை என்னவென்றால் கருணா அணி மீது புலிகள் தாக்குதலை நடத்த, சிறிலங்கா இராணுவத்தின் உதவியை புலிகள் பெற்றுக் கொண்டது என்பதும் உண்மை. ஆனால் கருணா அணியின் மீதான அழித்தொழிக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பு இருந்தபோதும் கூட புலிகள் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இது எதிர்தாக்குதலை புலிக்கு மேலானதாக உருவாக்கியது. புலிகளின் வலிந்த தாக்குதல் தான், தம் மீதான எதிர் தாக்குதலாக மாறியது. புலிகள் ஒரு தலைப்பட்டசமாக கொன்று வந்ததன் விளைவு, எதிர் தாக்குதலாக மாறியது. புலியில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள், கருணா குழுவால் தான் கொல்லப்பட்டனர். அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்தேறியது. கருணா அணிக்கு என்று சுயாதீனமான செயல்பாட்டு வடிவம் காணப்படுகின்றது. கருணா தரப்பை இராணுவம் கைது செய்த சம்பவங்கள், சுட்டுக் கொன்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன. ஏன் இன்று புலிகளால் தேடி அழிக்கப்படும் கருணா தரப்பைச் சேர்ந்தோர் பலர், சாதாரணமாக வீடுகளில் சொந்த உழைப்பில் இருக்கும் போது நிகழ்ந்து வருவது இதற்கொரு சான்றாகும்.

மறுபக்கம் இராணுவம் மீது புலிகள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த நிலையில், அரசியல் ரீதியாக புலிகள் அடிசறுக்கிய படி இருந்தனர். புலிகள் இராணுவ நோக்கில் அனைத்தையும் எதிர்கொண்ட நிலையில், அரசியல் ரீதியாக பேரினவாதம் புலிகளை மண்கவ்வ வைத்தனர். புலிகளின் ஒவ்வொரு யுத்தநிறுத்த மீறலையும், பேரினவாதம் தனது வெற்றியாக கருதியது. அதை நடைமுறையில் வென்று காட்டியது. புலிகள் குறுகிய சுயநலத் தீர்வுகளை மையப்படுத்தி, முட்டையில் மயிர் புடுங்கிக் கொண்டிருந்த போது, எதிரி அரசியல் ரீதியாக பலமடைந்த வண்ணம் இருந்தான். உண்மையில் தமிழ் மக்களையும், சிறுபான்மை இனங்களையும் குறிப்பாக முஸ்லீம் மக்களையும் அரசியல் ரீதியாக பேரினவாதம் வெற்றி கொண்டுள்ளது. ஆட்சியேறிய தீவிர பேரினவாதம் முஸ்லீம் மற்றும் மலையக மக்களையும் கூட வெற்றி கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் தான் மக்களை திண்டு ஏப்பமிட்டு வந்த மலையகத் தலைமைகள், புலியின் வால்களை நக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லீம் தலைமைகள் செய்வதறியாது அரசியல் அனாதையாகின்றனர்.

பேரினவாதம் அரசியல் சூழச்சியால் முன்பைவிட பலமடைகின்றது. புலிகளின் குறுகிய இராணுவ பொருளாதார நலன்களுக்கு இடையில் பேரம் பேசுவதன் மூலம், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை பேரினவாதம் தட்டிக்கழிக்கின்றது. உண்மையில் மொத்த நிலைமையிலும் மக்கள் சார்பான நிலையை எடுப்பதன் மூலம் மட்டுமே, நிலமையை மாற்றி அமைக்கமுடியும். ஆனால் இந்த நிலையில் புலிகள், அனைத்தையும் தமது இராணுவ சப்பாத்துகளால் மிதிக்கின்றனர். குறுகிய இராணுவ குதர்க்க வாதத்தில் சமூகத்தையே சிதைத்து, அதில் தீர்வைக் காணமுடியும் என்பது பகற்கனவாகிக் கொண்டிருக்கின்றது. நேர்மையாக யுத்தத்தைக் கூட தொடங்க முடியாது வக்கற்றுப் போன அரசியல் சூனியத்தில் நின்று, கொக்கரிக்க முனைகின்றனர். அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம், யுத்தத்தைத் இராணுவம் தொடங்கும் என்று பகற்கனவே காண்கின்றனர்.

உண்மையில் பேரினவாத அரசு இதையும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு புலியை வெற்றி கொள்கின்றது. கண்காணிப்பு குழு கூறிய படி "இவர்கள் கிரிமினல்கள், இவர்களை பொலீசார் கைதுசெய்ய வேண்டும்" என்ற அடிப்படையில் இது தனிமைப்படுத்தப்படுகின்றது. கண்காணிப்புக் குழு நடக்கும் கண்ணிவெடித் தாக்குதலை "ஒரு கோழைத்தனமான செயல்" என்றும், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை "ஒரு சாத்வீகமான போராட்டம்" என கருதப்படமுடியாது எனவும், "இதன்போது அரச படைகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது" என்று குற்றம் சாட்டினர். இந்த காடையர்கள் தமக்கு குண்டெறிந்த நிலையைக் கூட கண்காணிப்புக் குழு சுட்டிக் காட்டியது. இவை எல்லாம் மக்களுக்கு எதிராக மாறிவிடுகின்றது. தமிழ் தேசியம் சிதைக்கபட்டுவிடுவதற்கு இட்டுச் செல்லுகின்றது. இதன் விளைவு என்ன? இது வெறும் கும்பல் நடவடிக்கை தான் என்பதை ஏகாதிபத்தியம் புரிந்துள்ளதுடன், இதை ஒடுக்க கோருகின்றது. இந்த நடவடிக்கைகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் என்பதால், இலகுவாக ஒடுக்க ஏகாதிபத்தியம் உத்தரவிடுகின்றது. இதன் மூலம் புலிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவை இனம் காணப்பட்ட சில உதிரி நடவடிக்கை என்பதால், இலகுவாக பேரினவாதம் கட்டுப்படுத்திவிடுவார்கள். கைது, துப்பாக்கிச் சூடுகள் மற்றும் காணாமல் போதல் மூலம் இதை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு காணாமல் போதல் என்பது அனேகமாக வெளித்தெரிவதில்லை. சமூகத்துடன் நேரடியாக உறவின்மையால், அவர்கள் எப்போது எங்கு காணாமல் போனார்கள் என்பதே மர்மமாகிவிடுகின்றது. புலிகள் காணாமல் போன தனது உறுப்பினரை தேடி உறவினரை அனுப்பும் வரை இது நிகழ்கின்றது. அண்மையில் யாழ் கோட்டை அருகில் கொல்லப்பட்ட 5 புலி உறுப்பினர்களின் பிணம் கூட அனாதையாகவே கிடந்த நிலையில், மக்கள் அதை தகனம் செய்யவில்லை. இந்த உதிரிக்குழுகள் தான், அதை பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டது. நிலைமை தெளிவாக புலிக்கு எதிராக மாறி வருகின்றது.

இந்த நிலையில் புலிகளின் விருப்புக்கு மாறாகவே, இராணுவ நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்திவிடுவார்கள். இதன் மூலம் புலிகளை மீண்டும் புதிய அரசியல் நெருக்கடிக்கு பேரினவாதம் இட்டுச் செல்லும். சண்டையை தொடங்க முடியாத நிலை மீண்டும் உருவாகும். உண்மையில் மக்களிடம் அன்னியமான உதிரியான மக்கள் படை இப்படிச் சிதைந்து போவார்கள். உதிரியான குண்டுகளை வெடிக்கவைக்கவே முடியும். கைது, காணாமல் போதல், துப்பாக்கிச் சூடுகள் இதையே உறுதி செய்கின்றன.

பேரினவாதம் அரசியல் ரீதியாகவே இதை அணுகி வெல்லுகின்றது. புலிகள் மீண்டும் புதைகுழியில் வீழ்கின்றனர். இந்த இடத்தில் மக்கள் பொங்கியெழுவதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று தமிழ்ச்செல்வன் கருத்துரைப்பது நிகழ்கின்றது. மக்களின் துன்பம் பற்றி மீண்டும் மூக்கால் சிணுங்கி அழுகின்றனர். இயல்பு வாழ்வு சிதைந்து போனதாக மீண்டும் புலம்புகின்றனர். இயல்பு வாழ்வை சிதைத்தவர்கள் (இயல்பு வாழ்வை சிதைத்த யுத்த நிறுத்த மீறல் எண்ணிக்கை ஒரு உதாரணம்), அதை மேலும் ஆழமாக சிதைக்க எடுத்த முன்முயற்சி இப்படித்தான் ஆகும். யுத்த சூழலையும் உருவாக்கி கெடுபிடியை எதார்த்தமாக்கி பின், இதை இயல்பு வாழ்வுக்கு பாதகமானதாக காட்டுவதே நிகழ்கின்றது. உண்மையில் அரசியல் செய்ய என்று வந்தவர்கள், அராஜகத்தை உருவாக்கியபின் பின்வாங்கினர். பின் சில உதிரிகளைக் கொண்டு காடைத்தனத்தை கட்டவிழ்த்துவிட்டனர். முடிவாக அந்த காடைத்தனம் ஒழிக்கப்படும் போது, மீண்டும் நிகழப் போவது அரசியல் சூனியம் தான்.

இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அரசியல் செய்ய சென்றவர்கள் என்ன அரசியலை செய்தார்கள். யாருக்காவது தெரியுமா! அராஜகமான சூழலை உருவாக்கி நிர்ப்பந்தம் கொடுத்து பணம் வசூலித்தவர்கள், மக்களை கண்காணித்ததும், தண்டித்ததுக்கும் அப்பால் எதையும் அரசியல் ரீதியாக செய்யவில்லை. இதன் போது ஒரு சில உதிரிகளை தமது அராஜக செயலுக்கு இணைத்துக் கொண்டதற்கு அப்பால், மக்களை எதிர்நிலைக்கு இட்டுச் சென்றனர். பத்து வருடமாக இராணுவத்துக்குள் வாழ்ந்த மக்களின் மனநிலைவை விட, புலிகளின் மூன்று அல்லது நான்கு வருட கால ~புலி அரசியல் நடவடிக்கையில் வாழ்ந்த மக்களின் மனநிலை சார்ந்த அனுபவம் மிகவும் துயரமானது. இது எதிரி சார்பாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகள் இதைத்தான் அரசியல் என்கின்றனர். மக்களை துன்புறுத்துவது தான் அரசியல் என்கின்றனர். இராணுவத்தை வலிந்து சீண்டுவதன் மூலம், மக்கள் மேல் பேரினவாத இராணுவத்தை பாய்ந்து குதறவைப்பதன் மூலம், மக்களை மீண்டும் தம்பக்கம் வென்றெடுக்கும் உத்தி வெற்றிபெற முடியாத முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.

கடந்த இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பேசி இணக்கம் காணப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் கிழத்தெறிந்தது பேரினவாதம் தான். அதே போல் புலிகளுடன் கடந்த வரலாற்றில் நடத்த பேச்சவார்த்தை அனைத்தையும் முதலில் முறித்தவர்கள் புலிகள் தான். இம்முறையும் அதை நோக்கியே முன்னேறுகின்றனர். எதிரியை எதிர்கொள்ள முடியாத தமது சிறுபிள்ளைத்தனமாக குறுகிய அரசியலால் தான் இந்த நிலை ஏற்படுகின்றது. எதிரி பேரினவாதியாக இருக்கும் வரை, அவனை பேச்சுவார்த்தையில் அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது இலகுவானது. ஆனால் பேரினவாதி ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒவ்வொரு விடையத்திலும் வெற்றி கொள்கின்றான். தமிழ் மக்களின் பாதுகாவலனாக கூறி வேஷம் போட முடிகின்றது. போராட்டம் மக்கள் விரோதத் தன்மை பெற்று அதுவே கூர்மையாகும் போது, எதிரி அதில் குளிர்காய்கின்றான்.

இந்த நிலையில் புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய நெருக்கடியில் இருந்து மீள, யுத்தத்தை வலிந்து திணிக்கின்றனர். இந்த வகையில் புலிகள் மிகப் பெரிய இராணுவத் தாக்குதலை நடத்திய போது கூட, இராணுவம் வரையறுத்த எதிர் வன்முறைக்கு அப்பால் நகரவில்லை. ஏன் புலிகள் கூறுவது போல், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேச சட்ட ஒழுங்கை, இராணுவம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட முனைகின்றது. இராணுவத்தை கொல்லும் போது, படுகொலைகளை நடத்தும் போது சட்ட எல்லைக்குள் இராணுவம் சுட்டுக் கொல்லும் உரிமையை இயல்பாக புலிகள் அங்கீகரித்துவிடுகின்றனர். கொலைகளுடன் தம்மை தொடர்பு படுத்துவதை மறுக்கும் புலிகள், அதை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கூறுவது இதைத் தான். ஆயத வன்முறையின் போது, மக்கள் ஒடி விடுகின்றனர். இராணுவம் சுலபமாகவே இன்று வேட்டையாடுகின்றனர்.

இராணுவம் ஆயுதம் ஏந்தியவர்களை (புலிகளை) மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் ஆயுதம் ஏந்தியவராக (புலிகளாக) காட்டி கொல்வது நிகழ்கின்றது. புலிகள் பாணியில் இராணுவமும் அரசியல் செய்கின்றது. புலிகள் பாணியில், புலிக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இனம் தெரியாத கொலைகள் இரண்டு பகுதியாலும் செய்வது இன்று அன்றாட நிகழ்வாகிவிட்டது. கொல்லப்படுவது சரியான அரசியலால் வழிநடத்தப்படாத அப்பாவி தமிழ் மக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பல அரசியல் குழுக்கள் மீதான புலிகளின் வலிந்த படுகொலைகள், படிப்படியாக எதிர் தாக்குதலாக மாறிவருகின்றது. தமிழ்பேசும் மக்களிடையே இருந்து குறுகிச் செல்லும் புலி அரசியல், தனக்கு எதிராக பல தளத்தில், பல களத்தில் எதிரியை உருவாக்கி வருகின்றனது.

இன்று இராணுவம் தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில், கொலையாளியை இனம் கண்டு குறிவைத்து தாக்கியழிப்பதில் வெற்றி வெற்று வருகின்றான்;. இராணுவம் தனது உத்தியை மாற்றிய போது, வேடிக்கை பார்ப்போர் யாரும் கூடுவதில்லை. இதனால் யார் அந்த மக்கள் படை என்பது தெளிவாக அம்பலமாகிவிடுகின்றது. அதனால் களத்தில் அல்லது படுகொலைகள் மூலம் மரணிக்கின்றனர். உண்மையில் அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாத அனாதைகளாகவே அவர்கள் மரணிக்கின்றனர்.

மறுபக்கம் மக்கள் அனாதைகளாக்கப்பட்டு மிருகத்தனமாக அவர்களின் மவுனத்தின் மேல் புணரப்படுகின்றனர். பேரினவாத இராணுவமும், புலிகளும் இதை செய்வதில், தமக்கு இடையில் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிவிடுகின்றனர். மக்களின் எதிர்காலம், தேசியத்தின் எதிர்காலம் அனைத்தும் புணரப்பட்டு சிதைக்கப்படுகின்றது.