தமிழ் அரங்கம்

Friday, December 29, 2006

போலி கம்யூனிஸ்டுகளின் இழிந்தநிலை

பார்ப்பன பக்தியுடன் மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகளின் இழிந்தநிலை



""முதலில் நான் ஒரு பிராமணன்; ஒரு இந்து. பிறகுதான் கம்யூனிஸ்ட்'' இப்படி பகிரங்கமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், மே.வங்க "இடது முன்னணி' அரசின் போக்குவரத்து விளையாட்டுத்துறை அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். நீண்ட காலமாகக் கட்சிப் பணியாற்றிவரும் அனுபவமிக்க தோழர் என்று சி.பி.எம். கட்சியினரால் குறிப்பிடப்படும் முக்கிய புள்ளி.



அவர் முதலில் பிராமணராம்; இந்துவாம்! பிறகுதான் கம்யூனிஸ்டாம்! ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் இப்படி வில்லங்கமாகப் பேசுகிறாரே என்று நீங்கள் முகத்தைச் சுழிக்கலாம். ஆனால், விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. இந்த பிராமண "கம்யூனிஸ்டு' பிர்புமிலுள்ள தாரா பீடக் கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டுள்ளார். பூசைத்தட்டில் பூசாரிக்குக் காணிக்கையாக ரூ. 501 போட்டுள்ளார். பல்வேறு பூசைகளுக்கு தலா ரூ.301 வீதம் ""மொய்'' வைத்துள்ளார். பூசை முடிந்து வெளியே வரும்போது பக்திப் பழமாகி ""ஜெய்தாரா, ஜெய்தாரா'' என்று மெய்யுருகிப் பாடியுள்ளார்.



சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜோதிபாசு, ""சுபாஷ் சக்ரவர்த்திக்கு வயதாகி விட்டது. அதனால் மரண பயம் வந்து தாராமாதாவைப் பார்க்கச் சென்றுள்ளார்'' என்று கேலியாக இந்நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டாரே தவிர, அவர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதைப் பற்றியோ, நான் ஒரு பார்ப்பான் என்று பகிரங்கமாக அறிவித்ததைப் பற்றியோ வாய் திறக்கவில்லை. சி.பி.எம். கட்சியின் மே.வங்க மாநிலச் செயலரான பிமன்போஸ், ""மார்க்சிஸ்டுகளும் இரத்தத்தாலும் சதையாலுமான மனிதப் பிறவிகள்தானே!'' என்று மகத்தானதொரு அறிவியல் கண்டுபிடிப்பை முன் வைத்து, சுபாஷின் செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கிளம்பினார். பின்னர், ""கட்சி ஊழியர்களின் சித்தாந்த விலகலானது, கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் எதிரிகளுக்கே சாதகமாகிப் போகும்'' என்று சுபாஷின் பெயரைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக உபதேசித்தார். சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பினாய்க் கோனார், சுபாஷ் விவகாரத்தை மாநிலக் கமிட்டியில் விவாதித்து, ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தேவையா என்று பரிசீலிப்போம் என்று கூறி, ஆளாளுக்கு இதுபற்றி பேசக்கூடாது என வாயடைத்தார்.



இப்படி இந்த விவகாரம் சூடேறிக் கொண்டிருந்த போதிலும், தான் தவறிழைத்துவிட்டதாகக் கூட திருவாளர் சுபாஷ் கருதவில்லை. ""நான் இந்து கோயிலுக்கு மட்டுமின்றி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கிறேன். மார்க்சிய தத்துவத்தை பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; இதனால்தான் சி.பி.எம். கட்சி மூன்று மாநிலங்களுக்கு வெளியே வளரவில்லை'' என்று ஒரே போடாகப் போட்டார். அதாவது, கட்சி ஊழியர்கள் பக்தியோடு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்யாததால்தான் சி.பி.எம். கட்சி வளரவில்லை என்றார். இதுவும் போதாதென்று ஜோதிபாசுவை ""கலியுகக் கண்ணன்'' என்று புகழ்ந்து தள்ளினார்.



சுபாஷின் உளறல்களால் நிலைமை விபரீதமாவதைக் கண்ட ஜோதிபாசு, ""சுபாஷûக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது (பைத்தியம் பிடித்துவிட்டது)'' என்று சாடினார். ஆனாலும் பூணூலிஸ்டு சுபாஷ் அசரவில்லை. ""மனநிலை பிறழ்ந்துவிட்ட ஒருவரை கம்யூனிஸ்ட் கட்சியில் எப்படி வைத்துக் கொள்ள முடியும்?'' என்று எதிர்வாதம் செய்தார். அதாவது, ""முடிந்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கிப் பார்!'' என்று பகிரங்கமாகச் சவால் விட்டார்.



அப்புறம் என்னதான் நடந்தது? சி.பி.எம். கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டத்தில் சுபாஷை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அவர் கோயிலுக்குப் போயிருக்கக் கூடாது; பூசை செய்திருக்கக் கூடாது என்று சொல்லி இந்த விவகாரத்தை கமுக்கமாக முடித்துவிட்டார்கள். பூணூலிஸ்டு சுபாஷûம் கோயிலுக்குப் போனது தவறுதான் என்று "சுயவிமர்சனம்' செய்து கொண்டு விட்டாராம்! அதுசரி; நான் முதலில் பார்ப்பான்; அப்புறம்தான் கம்யூனிஸ்டு என்று அறிவித்தாரே, அதுபற்றி என்ன விமர்சனம்? என்ன நடவடிக்கை? ஒன்றும் இல்லை. முடிந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கிப்பார் என்று கட்சியையே மிரட்டி சவால் விட்டாரே, அதற்கு என்ன நடவடிக்கை? அதற்கும் எந்த நடவடிக்கையுமில்லை. ஏன்?

தனது பேரனுக்கு பார்ப்பன சனாதன முறைப்படி பூணூல் கல்யாணம் நடத்தினார், சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சோமநாத் சட்டர்ஜி. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கட்சி. இப்போது அவரை நாடாளுமன்ற அவைத் தலைவராக்கி கௌரவித்துள்ளது. எனவே, பார்ப்பனியத்தோடு சங்கமித்தால்தான் உயர்பதவி கிடைக்கும்; அதுதான் கட்சியில் முன்னேறுவதற்கான வழிமுறை என்பதைப் புரிந்து கொண்ட சுபாஷ் ஐயர், தைரியமாக ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்று அறிவிக்கிறார்.



கேரளத்தில் 1988ஆம் ஆண்டில் நடந்த சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாட்டில், அப்போதைய கட்சிப் பொதுச்செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடை கலியுகக் கண்ணனாக்கி ""கட்அவுட்'' வைத்து அசத்தியது அக்கட்சி. பார்ப்பன அடிப்படையிலான இத்தகைய தனிநபர் வழிபாட்டை நம்பூதிரிபாடு கூட எதிர்க்கவில்லை. யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் சுபாஷ் ஐயர், அதேவழியில் ஜோதிபாசுவை கலியுகக் கண்ணனாகச் சித்தரித்து துதிபாடுகிறார்.



மே.வங்க சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ""கணசக்தி''யும் தமிழகத்தின் தீக்கதிரும் ஜோதிடம், ராசிபலன் முதலானவற்றோடு நவராத்திரி தீபாவளி கார்த்திகை பொங்கல் சிறப்பிதழ்களை வெளியிட்டு பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நிற்கிறது. சுபாஷ் ஐயரோ, ஒருபடி முன்னே சென்று கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்கிறார்.



இந்நிலையில் சுபாஷ் மீது நடவடிக்கை எடுத்தால், கட்சியிலுள்ள "பூணூலிஸ்டு மார்க்சிஸ்டு'கள் கலகம் செய்வார்கள்; நீ மட்டும் யோக்கியமா என்று அம்பலப்படுத்தி விடுவார்கள் என்று கட்சித் தலைமைக்குத் தெரியும். சுபாஷ் ஐயருக்கும் தெரியும். எனவேதான் கட்சித் தலைமை இந்த விவகாரத்தைப் பூசி மெழுகுகிறது.



இந்தியாவில் மறுகாலனியாக்கமும் பார்ப்பனியமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். பார்ப்பன எதிர்ப்பையும் மறுகாலனிய எதிர்ப்பையும் தனித்தனியாகப் பிரித்துப் போராட முடியாது. பார்ப்பன எதிர்ப்பின்றி ஏகாதிபத்திய எதிர்ப்போ, ஜனநாயகப் புரட்சியோ சாத்தியமில்லை. ஏற்கெனவே மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் மறுகாலனியாக்கத்துடன் சமரசம் செய்து கொண்டு "புரட்சி' செய்து வருகிறார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டார்ச்சார்யா. மத நல்லிணக்கம் என்ற பெயரில் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ள சி.பி.எம். கட்சியின் மே.வங்க அமைச்சரான சுபாஷ் ஐயர், ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்று அறிவித்து "புரட்சி' செய்கிறார். அடடா! மறுகாலனியாக்கமும் பார்ப்பனியமும் கை கோர்த்துக் கொண்டு நடத்தும் "புரட்சி' எப்படி முன்னேறுகிறது பாருங்கள்!



குமார்





Sunday, December 24, 2006

சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

பி.இரயாகரன்
24.12.2006


ரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.


புலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ் காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.


தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையும் எப்படி நாங்கள் ஏமாற்றி மோசடி செய்தோம் என்பதை, பாலசிங்கம் தனது மனைவி மூலமான நூலில் ஒரு சாட்சியமாக முன்வைத்து அதை அம்பலமாக்கியுள்ளார். "ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்சிய லெனினிச தத்துவங்களை பயன்படுத்தினார்கள்.",1 ,என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளனர். புலிகளால் வெளியிடப்பட்டதும், பாலசிங்கம் தனது சுயசரிதையாக தனது மனைவி மூலம் வெளியிட்ட இந்த நூலில் இதைக் குறிப்பிடுகின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணயம் மார்க்சிய லெனினியத்திலேயே இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இக் கூற்று, அதை தாம் கைவிட்டு நிராகரித்திருப்பதையும் தெளிவாக ஒத்துக்கொள்கின்றது. இதை பாலசிங்கம் தனது மனைவியூடாக சொல்லியுள்ளது தான், இதில் உள்ள சிறப்பு. இங்கு ,நியாயப்படுத்தல் என்பது, சாராம்சத்தில் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதாகும். இன்று இந்த சுயநிர்ணயத்தை புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அணியும் கூட முன்வைப்பதில்லை,


தேசியம், சுயநிர்ணயம் என்பது இன்று புலிகளைப் பொறுத்தவரையில், வெறும் வார்த்தைகள் தான் என்பதை புலிகள் பாலசிங்கம் மூலம் தெளிவாக்குகின்றனர். தேசியத்தையும், சுயநிர்ணயத்தையும் தமது பாசிச நலன் சார்ந்த தமது தேவைக்கு பயன்படுத்தினர், பயன்படுத்துகின்றனர் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் உண்மையானதே. இதேபோல் தான் புலிகளுடனான சொந்த தியாக, தமிழ், தமிழ் தேசியம் என அனைத்தையும் புலிகள் பயன்படுத்துகின்றனர். நாளை எல்லாவற்றையும் எமது சுயநலத்துக்காகத்தான் செய்தோம், நியாயப்படுத்தினோம் என்றால், அது ஆச்சரியமானதல்ல. இன்றுபோல் அன்றும் நாலு நாய்கள் இதையும் நியாயப்படுத்தவே செய்யும்.


ஒரு எதிர்ப்புரட்சியை பாலசிங்கத்தின் வரலாற்றின் தொடர்ச்சியில் நாம் காணமுடியும். தமிழ் மக்களின் போராட்டத்தையே புலிகள் போராட்டடமாக்கி, அதை காலத்துக்கு காலமும், சந்தர்ப்பத்துக்கு ஏற்பவும் திரித்துப் புரட்டியதைத் தான், பாலசிங்கம் புலிகளில் இருந்து செய்தவர். துயரம் தோய்ந்த தமிழ் மக்களின் வரலாறு, புலிகளை எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றது. தேசம், தேசியம், சுயநிர்ணயம் என எந்த மண்ணாங்கட்டியும் அவர்களின் அரசியலில் கிடையாது.


புலிகள் என்ற பெயரில், பிரபாகரனின் தனிப்பட்ட விருப்பங்கள் தேசியமாகியது. இதற்கு மேல் பூச்சு அடிக்கும் வேலையைத் தான், பாலசிங்கம் செய்தார். பிரபாகரனின் சொந்த மன வக்கிரங்கள் தான், புலிகளின் செயலாகியது. இதை பாலசிங்கத்தின் குடும்பத்தை தவிர, வேறு யாராலும் இதை அனைவரும் ஏற்கும்படி சிறப்பாக சொல்லமுடியாது. "பிரபாகரன் அவர்கள் தமது பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்தால், அவர் ஒரு துறவிக்கான கோலத்துடனேயே வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி நடந்தால், அனைத்து போராளிகளும், அப்போதும் சரி, இப்போதும் சரி உணர்ச்சியற்ற மலடர்களாகவும் மனவிரக்தி பிடித்தவர்களாகவும் வாழவேண்டியிருக்கும்"1 ஒரு சர்வாதிகாரி பற்றி, ஒரு சர்வாதிகார பாசிச இயக்கம் பற்றிய, ஒரு தெளிவான துல்லியமான சித்திரம். இது தான் புலி. இதற்கு வெளியில் புலிக்கு வேறு முகம் கிடையாது. மக்கள் நலன், தேசியம், சுயநிர்ணயம் என எதுவும் இதற்குள் கிடையாது. பிரபாகரன் விரும்பம், நோக்கம், நடைமுறை எதுவும், இதற்குள் துளியளவும் கூட கிடையாது.


இன்றைய ஒவ்வொரு அரசியல் கொலையும், தனிப்பட்ட பிரபாகரனின் வக்கிரமான சிந்தனையின் எல்லைக்கு உட்பட்டதே. பிரபாகரன் திருமணம் செய்த சந்தர்ப்பதை எடுத்துப் பாருங்கள். அன்று பல்கலைக்கழக உண்ணாவிரதம் நடக்காமல் இருந்திருந்தால், அவர்களை புலிகள் கடத்தாமல் விட்டிருந்தால், கடத்தியவர்களை பிரபாகரன் தன் வீட்டில் கொண்டுவராமல் விட்டிருந்தால், மதிவதனி பிரபாகரனை காதலிக்காமல் விட்டிருந்தால், நிச்சயமாக பிரபாகரன் திருமணம் செய்யும் சந்தர்ப்பம் இருந்திருக்காது.


அப்படியான ஒரு நிலையில் இயக்கத்தின் உள்ளான பாலியல் வெளிப்பாட்டுக்கு, மரணதண்டனை தானே பதிலாக கிடைத்திருக்கும். பாலியல் வெளிப்பாடு துரோகமாகவும், இயக்க கட்டுப்பாட்டை மீறுவதாகவும் காட்டி அவை தண்டனைக்கு உள்ளாகியிருக்கும். இன்றுவரை அதை பாட்டுப்பாட தயாராகவே புலிகள் இருந்திருப்பர். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது. இதை நியாயப்படுத்துவது தான் பாலசிங்கத்தின் "தேசிய குரலாக" இருந்தது. இப்படிப்பட்ட நியாயப்படுத்தலைத் தான் பாலசிங்கம் செய்தவர். ஒரு சர்வாதிகாரி தன் சொந்த தனிமனித வக்கிரத்தையே புலி இயக்க விதியாக்கி, அதை தமிழ் மக்களின் விடுதலையாக காட்ட, பாலசிங்கம் அதற்கு ஒளிவட்டம் கட்டி ஆடியவர்.


இந்த "தேசியகுரல்" பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவின் எல்லை என்ன? மனைவி அடேல் "பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது". இவை காரணமாகவே திரு.பிரபாகரின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது."1என்கின்றார். பாலசிங்கம் தனது மனைவி மூலம் இந்த உண்மையை புட்டு வைக்கின்றார். அதிகார ஆசை பிரபாகரனுக்கு மட்டும் இருக்கமுடியும். இதை மீறி அதிகாரம் பற்றி சிந்தித்தால், அவருக்குரிய தண்டனை துரோகமும் மரணமும் தான். பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னான அரசியல் கூத்துகள், புலிகளின் கண் அசைவுடன் தொடர்புடையது. அவர்கள் பாலசிங்கத்தை நிராகரித்தால், பாலசிங்கத்தின் ஆளுமை என்று நம்பும் அனைத்தும் பூச்சியம் தான். இது ஆண்டல் பாலசிங்கத்துக்கு நன்கு தெரியும். அதனால் தான் பாசிட்டாகவே சதா ஆடிக் கொண்டிருந்தார்.


விடுதலைப் போராட்டம், மக்கள் போராட்டம், தமிழ் தேசியம், தமிழ் உணர்வை எல்லாம், எவ்வளவுக்கு எவ்வளவு இழிவாக்க முடியுமோ, அந்தளவுக்கு அதை பாலசிங்கம் காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக செய்தார். அதையே புலிகள தமது தத்துவம் என்றனர். இதனால் அவரை "மதியுரைஞர்" என்றனர்.


ஆனால் மக்கள் தமது சொந்த விடுதலைப் போராட்டத்தை, புலிகளிடம் இழந்து நிற்கின்றனர். சுயநிர்ணயம் என்று எதையும் பேசமுடியாத நிலைக்கு பாசிட்டுகளின் காலுக்கு கீழ் இழிந்து தாழ்ந்து போனார்கள். தமிழ் இனம் தனது மடியிலே துன்ப துயரத்தை ஒரு சுமையாக சுமந்து நிற்கின்றனர். சிங்களப் பேரினவாதமோ, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையே, தொடர்ந்தும் மறுத்து நிற்கின்றது. அதேநேரம் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கை பயன்படுத்தி, தமிழ் மக்களையே பிரிந்து சின்னாபின்னமாக்கியுள்ளது. தேசியவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தவறியதன் விளைவு, வடக்கு கிழக்குக்கு இடையிலான தமிழ் மக்களின் பிளவை ஆழமாகி வருகின்றது. இதை பேரினவாதம் தன்னால் முடிந்தளவுக்கு அகலமாக்கி வருகின்றது.


இப்படி தமிழ் இனத்தின் அடிப்படை சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை, புலிகள் சுயநிர்ணயத்தை கைவிட்டது மட்டுமின்றி, அதையும் ஒடுக்குகின்றனர். இப்படி சுயநிர்ணயத்தை இழிவாடி தேசியத்தை கைவிட்டவர்கள், இறுதியாக இனம் என்ற அடிப்படையையும் கைவிட்டு, கொள்கை கோட்பாடு அற்ற ஒரு பாசிச மாபியா இயக்கமாகவே மாறிவிட்டது. எஞ்சி நிற்கும் சம காலத்தில் முன்னுக்கு பின் முரணாகவே கருத்துரைக்கும் அளவுக்கு, புலிகளின் சீரழிவும், சிதைவும் ஒருங்கே நிகழ்கின்றது.


இதற்குரிய தத்துவ விளக்கத்தை காலத்துக்கு காலம் கொடுத்து வந்தவர் அன்ரன் பாலசிங்கம். இப்படி பாலசிங்கத்தின் வாழ்வு புலிகளுடன் பின்னிப்பிணைந்து வந்துள்ளது. நடந்து கொண்டிருக்கும் புலிகளின் சொந்த அழிவை வழிகாட்டிய ஒரு தத்துவ மேதை, அதை அந்த பாசிட் பார்க்க முன் மரணித்தது, துரதிஸ்டவசமானது தான். புலிகளில் ஒரு பாசிட்டாக, அதன் சித்தாந்தவாதியாக இருந்ததன் மூலம், ஆயிரம் ஆயிரம் மக்களின் மரணங்களுடன் பாலசிங்கத்தின் வரலாறு பதியப்படுகின்றது.


இந்த பாலசிங்கம் யார்?


ஒரு திரொஸ்கியவாதி. இப்படி மார்க்சியத்தை கழுவேற்றிய திரொக்சிய அரசியலையே அவர் கற்றவர். இந்த அடிப்படையில் தான் புலிகள் என்ற வலதுசாரி இயக்கத்தில் இணைந்தவர். இவர் இணைந்த இயக்கம், தனிநபர் பயங்கரவாதத்தையே தனத அரசியல் செயல்பாடாக கொண்டு இயங்கியது. கொலை, கொள்ளை, சாகசம், தலைமறைவை அடிப்படையாக கொண்ட ஒரு இயக்கம் தான் புலிகள். இதுதான் அதன் நடைமுறைத் தந்திரம். புலி அரசியல் என்பது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பின்னாலான ஒரு அரசியலற்ற கூலி இராணுவக் கும்பல்.


இதை பாலசிங்கம் அழகாகக் கூறுகின்றார். ,"... சில பேர் என்னிடம் கேட்டார்கள், செலவநாயகம் ஐயாவும் இதைத்தான் கேட்டார். சமஷ்டியை அவங்கள் கொடுக்கவில்லை. பிறகு நீங்கள் ஏன் இதைக் கேட்கிறியள் என்று. அவர்கள் ஏமாற்றி விட்டால், என்ன செய்வீர்கள் என்று. நான் சொன்னன் ஏமாற்றட்டும், அதைத் தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். செல்வநாயகத்தார் என்ன வைத்திருந்தார். அவர் அகிம்சையை ஆயுதமாக வைத்திருந்தார். நங்கள் பீரங்கிகளை அல்லவா வைத்திருக்கின்றோம்"3 தமிழர் விடுதலை கூட்டணியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட ஒரு கூலிக் கும்பல், காலம்கடந்தும் அரசியல் ரீதியாக எதையும் மாற்றிவிடுவதில்லை.


இப்படி உண்மையை பளிச்சென வெகுளித்தனமாக பாலசிங்கம் போட்டு உடைக்கின்றார். அகிம்சை அல்லது ஆயுதம், இது தான் கூட்டணியையும் புலிகளையும் வேறுபடுத்துகின்றது. இதைவிட வேறு எதுவும் அரசியல் ரீதியாக அல்ல. மக்களின் நலன்களில் இருந்து அல்ல. ஆயுதமும் அது சார்ந்த அதிகாரமும் வரும் போது, தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்க கண்ணோட்டமும், குணாம்சமும் மக்கள் விரோத போக்கை பண்பியல் ரீதியாக வளர்ச்சி பெறவைக்கின்றது.


இந்த இயக்கம் அன்று முதல் இன்று வரை அரசியலை ஆணையில் வைத்தது கிடையாது. அரசியல் என்பது, இவர்களால் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. அதை வெட்டி வேலையாக கருதினர், கருதுகின்றனர். ஒரு இயக்கத்தில் அரசியல் என்பது, முரண்பாட்டையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவே கருதி அதை வெறுத்தனர். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துக்கு தத்துவம், தத்துவ மேதை அவசியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டது என்ன? தமது தனிநபர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் ஒரு லுங்கி தேவைப்பட்டது. அந்த லுங்கி தான் பாலசிங்கம். புலிகளின் தனிநபர் பயங்கரவாத செயலை நியாயப்படுத்தி அறிக்கை தயாரிக்கவும், அதை துண்டுபிரசுரமாக விடவும், இவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட தேவைப்பட்ட ஒரு லுங்கி தான், இந்த பாலசிங்கம். ஒரு சமூக பொறுக்கிக்கே உரிய பண்பும், ஆணாதிக்க வக்கிரத்தை அரசியலாக துப்பும் வக்கிரமும் ஒருங்கு சேர, எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் பந்சோந்தியாக, முள்ளந்தண்டற்ற ஒரு மண்புழுவான பாலசிங்கம் புலிக்கு பொருத்தமாகிப் பொருந்திப்போனது வரலாற்றின் சதிதான்.


பாலசிங்கம் இல்லையென்றால் புலிகளில்லை. பிரபாகரன் ஒரு தனிமனித சூக்குமவாதி என்றவகையிலும், சந்தேகவாதி என்பதாலும், சமூகத்தின் முன் ஊன்றுகோல் இன்றி செயல்பட முடியாதவர் என்பதாலும், பொது அரங்கிலான மாற்றங்களை உள்வாங்கிச் செல்லும் தலைமைத்துவ தகுதி அவருக்கு இருக்கவில்லை. அதை பாலசிங்கம் தான் நிறைவேற்றினார். இந்த வகையில் தான், பாலசிங்கத்தின் தனித்துவமான பங்கு முக்கியமானதாகின்றது.


இப்படி புலிகளுடன் ஒன்றாகிப் போன பாலசிங்கம் ஒரு அரசியல் தத்துவ மேதையல்ல. அவர் உச்சரிக்கும் மார்க்சியம், திரோக்கியத்தில் இருந்து அதன் சொந்த மார்க்சிய விரோத சீரழிவுக்கு ஏற்ப பொறுக்கியவர். அவரே திரொஸ்கியத்தை கைவிட்ட பின், தான் ஒரு நவமார்க்ஸ்சிட் என்று தனது மனைவி மூலம் ஓத்துக்கொள்கின்றார். அதே நோக்கில் புலிகளிலும் பயன்படுத்தியவர். அவற்றை அவரின் கடந்தகாலம் ஊடாக தெரிந்த கொள்வது அவசியம்.


பாலசிங்கம் வீரகேசரி பத்திரிகையில் ஒரு செய்தியாளராகத் தான் தன் வாழ்வை தொடங்கியவர். இதன் பின் பிரித்தானியத் தூதரகத்தில் ஒரு மொழிபெயார்ப்பாளனாக வேலை செய்தவர். அதைப் பயன்படுத்தி லணடன் சென்றவர். இக்காலத்தில் பௌத்த கோட்பாடுகளை உள்வாங்கி, அது தொடர்பாக உரை நிகழ்த்தியவர் கூட.


லண்டனில் தான் அவர் திரோஸ்கியானார். இக்காலத்தில் தான் "Tamilnations self determination" என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். இந்த நூலை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (socialist equality party , என்ற பேரில் இலங்கையிலும் லண்டனிலும் இயங்கும் உலக திரொக்சியக் கட்சி") பிரத்தானியக்கிளையே ,WRP (workers revolutionary party)2 அச்சிட்டு வெளியிட்டது. இப்படி திரோக்சிட்டுகளின் துணையுடன் தமிழ் தேசியத்தை உச்சரித்தவர். இந்த நூல் தான், புலிகளின் தத்துவ ஆலோசகராக வர வழியை ஏற்படுத்தியது. இந்த ஆங்கில திரொக்சிய நூல் தான், புலிகளின் "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" என்று கொள்கை பிரகடனமாக பின் வெளிவந்தது. இந்த பாலசிங்கத்தின் நூல் தான், புலிகளின் ஒரேயொரு கொள்கைப் பிரகடன நூலாகும். இந்த நூலின் உள்ளடக்கத்தை புலிகளிடம் இனம் காணமுடியாது. இதை அமுல்படுத்தக் கோரினாலே, அது மரண தண்டனைக்குரிய துரோகமாகும். இந்த நூலுடன் தான் புலிகளின் தத்துவவாதியானார் பாலசிங்கம்.

பாலசிங்கத்தின் மனைவி அடேல் "தத்துவம் உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற மார்க்சிய தத்துவ சிந்தனைக் கீற்று, பாலசிங்கத்துக்கு பிடித்திருந்தது"1 என்கின்றார். வெறும் பிடிப்புத்தான். இப்படிப்பட்ட பாலசிங்கம் மார்க்சிய சமூக மாற்றத்தை எதிர்த்து, நடைமுறையில் ஒரு வலதுசாரியாக வாழ்ந்தவர். இவர் "மார்க்சின் சமூக தத்துவத்தையும் சிக்மன்ட் பிராய்டின் உளவியல் தரிசனத்தையும் இணைத்து இழைக்க முனைந்தார்"1 என்கின்றார். அது ஒரு மோசடிக்காரன் மட்டும் செய்யக் கூடிய ஒரு செயல். இப்படி முரணாகவே சிந்தித்தவர்கள் "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" , என்ற நூலில் எழுதிய சுயநிர்ணயம் வெறும் நியாயப்படுத்தல் தானே ஒழிய நடைமுறைக்கு அல்ல. "தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்."1 இப்படி மக்களை ஏமாற்றும் தனது வாழ்க்கையையே நியாயப்படுத்துவதில் தான், அவரின் தத்துவ விரசல் காணப்பட்டது. இந்த பாலசிங்கம் மாக்சிய-லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை விளக்கியவர், இதன் பின் அவரே சுயநிர்ணய உரிமை மறுப்பாளரானார்.


அதை அவரே கூறகின்றார். "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்று ஐ.நா.சாசனத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து புதிய அர்த்த பரிமாணத்துடன் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடைந்து வரும் கோட்பாடு. முன்பு ஒரு சர்வதேச சட்டரீதியாக இருந்தது. இப்போது அனைத்துலக மக்களுக்கும் பொருத்தமான ஒரு மனித உரிமையாக இந்தக் கோட்பாடு விளங்குகின்றது" இப்படி வேறு யாராலும் கூறமுடியாது. முன்பு மாக்சிய-லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை கண்டவர், இன்று உலகமயமாதல் எல்லைக்குள், ஐ.நா.சாசனத்தில காண்கின்றார். இப்படி தான் புலியின் அரசியல் சீரழிந்தது. சொந்த தேசிய விடுதலைப் போராட்டத்தையே, சொந்த தியாகத்தையே இப்படி யாரும் இவ்வளவு நேர்த்தியாக கேவலப்படுத்தி ஏகாதிபத்தியத்துக்கு மொத்தமாகவே விற்கமுடியாது. இதை அனைத்துலக மனிதவுரிமை என்பதன் மூலம், அனைத்துலகமும் சுரண்டும் உரிமையை புலிகள் அங்கீகரிக்கின்றனர். ஐ.நாவின் உலக அகராதியிலும், புலிகளின் தேசிய அகராதியிலும், மனிதவுரிமை ஒன்றுபட்டுள்ளது. இது உள்ளடக்கத்தில் மக்களை சூறையாடுவதுதான். இது தான் சுயநிர்ணயம் என்றே புலிகள் வக்காலத்து வாங்குகின்றனர்.


முன்பு இது அனைத்துலக மக்களுக்கு பொருத்தமில்லாததாக இருந்ததாகவும், இன்று பொருத்தமாக மாறி உள்ளதாகவும் கூறுவது, உள்ளடக்கத்தில் சுயநிர்ணயம் உலகமயமாகி விட்டது என்பதை கூறி துரோகத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார். முன்பு நாடுகளுக்கு ஒரு சட்ட ரீதியான தேசிய வரையறையாக இருந்தது மாறி, உலகமயமாதல் என்ற அனைத்து மக்களையும் உள்ளடக்கியதே தேசியம் என்ற விளக்கத்தை வைக்கின்றார். நாட்டை ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கும் உரிமைக்கு இவர் தத்துவ விளக்கம் தருகின்றார்.


தமிழ் மக்களின் சுயநிர்ணத்தை தமது சொந்த பாசிச வலது குழுவுக்கு இசைவாக விளக்கம் கொடுத்து, முடிந்தவரை அதை அவர் காட்டிக் கொடுக்கின்றார். தமது சுயநிர்ணயக் கொள்கை என்பது, உலகமயமாதல் தான் என்பதை வலியுறுத்தி, ஏகாதிபத்தியத்திடமே விசுவாசமாக வாலாட்டத் தயங்கவில்லை. இதற்கு சொந்த மக்களையும், தேசிய நலன்களையும் விற்றுவிடவும் பின் நிற்கவில்லை. புலிகளிடம் அமெரிக்கா உங்கள் பொருளாதார கொள்கை என்ன என்று கேட்ட போது, பாலசிங்கம் அசகு பிசகாது, ஐயா நாங்கள் உங்களின் கொத்தடிமைகள் என்றார். அதை அவர் "தாராள ஜனநாயக பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கைக்கே நாம் ஆதரவானவர்கள் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்"3 என்றார். எப்படிப்பட்ட தமிழ் தேசியம்! எப்படிப்பட்ட தேசிய விடுதலை! எப்படிப்பட்ட சுயநிர்ணயம்? அனைத்து தியாகத்தையும், புலிகளால் மட்டும்தான் மொத்தமாக விற்கமுடியும். தமிழ் மக்களின் விடுதலையை திறந்த பொருளாதார கொள்கையாக உள்ள உலகமயமாதல் எப்படி ஏற்படுத்தும். யாருக்காவது அறிவும், நாணயமும் இருந்தால் கூறுங்கள்.


இதை மக்களுக்கு சார்பான கொள்கை என்றும் உலகில் யாராலும் நிறுவமுடியாது. கோட்பாட்டளவில், நடைமுறையில் இதன் விளைவு என்பது, நாட்டை மறுகாலனியாக்குவதே ஒழிய, வேறு எதுவுமல்ல. இங்கு இதை முன்வைக்கும் புலிகளின் பாத்திரம் என்னவாக இருக்கும். ஏகாதிபத்திய உலகமயமாதல் கொள்கையை அமுல்படுத்தும் தரகராக மாறி, மக்களை அடக்கியொடுக்குவதைத் தாண்டி, எதையும் மக்களுக்காக அவர்கள் செய்யமுடியாது. உலகமயமாதல் தான் எமது கொள்கை என்று, பிரபாகரனும் தனது அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக்குகின்றார்.


இதற்கு வெளியில் புலிகளிடம் ஒரு தனியான சொந்தப் பொருளாதாரக் கொள்கை எதுவும் கிடையாது. தனது பாசிச கட்டமைப்பில் புலிகள் என்ற குழு செய்ய விரும்புவது, தாராள பெறுமானங்களைக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல் செய்வதைத் தான், சுயநிர்ணய உரிமை என்கின்றனர். இதைத் தான் அவர்கள் தமிழ் தேசியம் என்கின்றனர். மக்கள் என்றும், தியாகம் என்றும் போடும் எல்லாவிதமான அரசியல் கூத்துகளின் மொத்த விளைவு, உலகமயமாதல் கொள்கையை அமுல் செய்யும் அதிகாரத்தை புலிகள் தம்மிடம் தரக் கோருவது தான். இந்த வெட்டி வேலையைத் தான் சுயநிர்ணயம் என்கின்றனர்.


இந்தக் கோட்பாட்டை வரவேற்ற அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் "இலங்கையின் நண்பர்கள் அதிகளவு தாராள சிந்தனையுடன் செயல்படும் நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதே எனது அபிப்பிராயமாகும். வட கிழக்கின் அபிவிருத்தியடையாத பகுதிகளுக்கே தமது பணம் சென்றடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்."3 என்றார். ஒரு தேசத்தின் அனைத்துவிதமான மனித உரிமைகளையும் புலிகள் அமெரிக்காவின் தாராள பொருளாதார நலனுக்கு தாரைவார்க்க, ஒரு தேசத்தை மிக இழிவாக அவர்களால் எள்ளிநகையாட முடிகின்றது. உலகமயமாதலுக்கு வாலாட்டி வள்ளென்று விசுவாசமாக குலைக்கும் புலிகள் "திறந்த பொருளாதாரக் கொள்கை"3 யைத்தான், தமிழ் மக்களின் தமிழ் தேசியம் என்கின்றனர் புலிகள். எவ்வளவு பெரிய துரோகம்.


இப்படி பாலசிங்கம் புலியின் துரோக நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போது, அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் "..புலிகளின் பொருளாதாரக் கொள்கை என்ன? சகலவற்றையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்களா? இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து வட, கிழக்கை தனிமைப்படுத்தி அங்கு சர்வாதிகாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்று அவர்கள் கருதுகிறார்களா? இதற்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள் இணங்கமாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன்."3 என்றார். இதற்குள் தெளிவாகவே அமெரிக்காவின் புலிகளுடனான, அடிப்படை முரண்பாட்டை தெளிவுபடுத்திவிடுகின்றார். இதற்கு வெளியில் புலிக்கும் அமெரிக்காவுக்கும் முரண்பாடு எதுவும் கிடையாது. இப்படி திறந்த பொருளாதார கொள்கையை(கொள்ளையை) ஏற்றுக்கொள்ளும் இருவருக்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாட்டையும், மக்கள் விரோதத்தில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்பதையும் காணமுடிகின்றது.,


இந்தக் கட்டமைப்பை தாண்டி, எதையும் தமிழ் மக்களுக்காக புலிகள் ஏற்படுத்திவிட முடியாது. உலகமயமாதல் அமைப்புக்குள், அதற்குள் இணங்கிச் செல்லும் எல்லைக்குள் தான் புலிகளின் போராட்டம் நடக்கின்றது. இது அமெரிக்காவின் கொள்கை மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் கொள்கையும் கூட. புலிகளின் அரசியலை இதைத் தாண்டி, எதையும் சொந்தமாக நகர்த்த முடியாது. இந்த வகையில் தான் தேசம், தேசியம், சுயநிர்ணயம் பாலசிங்கத்தின் வழிகாட்டலின் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து வந்தது.


புலிகளின் வரலாற்றை அவர்களின் சொந்த குப்பைத் தொட்டியில் இருந்து தேடும் போது, எவ்வளவு பெரிய மோசடிக்காரர்கள் என்பதைக் காணமுடியும். இதற்கு ஏற்ற கோயபல்ஸ் தான் பாலசிங்கம். 1981 இல் பிரபாகரன் எழுதிய கவிதையில் ,


"---


நாம் செல்லும் இடமெல்லாம் ,


எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்,


மக்களிடம் உள்ள , பிரதேசம் சாதி,


மதமென்னும் பேய்களும்,அலறி ஓடுகின்றன,


எமது படையணி விரைகின்றது,…, ,


எமது தேசத்தை மீட்க,


நாம் செல்லும் இடமெல்லாம் ,


காடுகள் கழனிகள் ஆகின்றன,


வெட்டிப் பேச்சு வீரர்கள்,


மிரண்டோடுகின்றனர்..!,


உழைப்போர் முகங்களில் ,


உவகை தெரிகிறது,


ஏழைகளின் முகங்களில்,


புன்னகை உதயமாகின்றது."


,4, ,


என்ன புல்லரிக்கும் வார்த்தை ஜாலங்கள். இயக்க தலைவரின் பெயரில் இது பதிவாகியுள்ளது. பொதுவாக பாலசிங்கமே பிரபாகரனின் கருத்துக்கள் பலவற்றை எழுதியவர் என்ற வகையில், ஒரு இனத்தை இருவரும் சேர்ந்து இழிவாக எள்ளிநகையாடினர். இந்த கவிதை வரிகளிலுள்ள ஏதாவது ஒன்றை புலிகள் செய்துள்ளனரா? தலைவருக்காக உயிரையே விடத் தயாராக உள்ள நீஙகள், தலைவரின் இந்தக் கூற்றுக்காக போராடி உயிர் விடுவீர்களா? இனப்பற்றாளர்களே எங்கே உங்கள் கைகளை இதற்காக உயர்த்துங்கள்! யாரை ஏமாற்றுகின்றீர்கள்?


சமூகம் இனமாக, மதமாக, சாதியாக, பிரதேசமாக, கருத்தாக பிளந்து சின்னாபின்னமாகி வருகின்றது. தமிழ் மக்களின் வறுமை, இயலாமை, நடைப்பிண வாழ்க்கை, அச்சம் கலந்த பீதி, வாழ வழியற்று கையேந்தும் நிலைமை இது தான் புலிகள் மக்களுக்கு கொடுத்த விடுதலை. எந்த மனித அவலத்தைத் தான், புலிகள் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை. வாழ்வு மீதான நம்பிக்கை, ஊக்கம் எதுவும் மக்கள் மத்தியில் கிடையாது. நடைப்பிண வாழ்க்கை. மனிதனுக்குரிய அனைத்தையும் அழித்து விட்டார்கள். இக் கவிதை 1981 இல் எழுதியது என்பதால், 25 வருடம் கழித்து 2006 இல் இறுதியில் எமது தேசத்தின் நிலைதான் என்ன? சமூகம் பல கூறுகளாக, துண்டு துண்டுகளாக பிளந்துகிடக்கின்றது. புலிகள் அதற்கு எண்ணை ஊற்றி மோதவிட்டனர், மோதவிட்டுள்ளனர். முதலில் முஸ்லீம் மக்களை எதிரியாக்கியவர்கள், இன்று கிழக்கு மக்களை எதிரியாக்குகின்றனர். இதன் விளைவால் கிழக்கை முற்றாகவே பேரினவாதத்திடம் இழந்து வருகின்றனர்.


மீளமுடியாத இந்த தோல்விகள் இராணுவ ரீதியான பேரினவாத நடவடிக்கைகளால் உருவாகவில்லை. புலிகளுக்குள்ளான ஜனநாயக இன்மையால் ஏற்பட்ட பிளவும், அதைக் கையாண்ட விதமும் முதன்மையானது. தமிழ் மக்கள் என்ற அடிப்படை நலனில் இருந்து சிந்திக்க தெரியாத கோயபல்ஸ்சுகள், ஒரு இராணுவவாதியை வழிகாட்ட முற்பட்டதன் மொத்த விளவு இது. இதுவே சாதியாக, மதமாக பிளவுறும் ஒரு நிலையை நோக்கி, போராட்டம் ஆழமாக சிதைந்து வருகின்றது.


ஒரு சமூகத்ததை எந்தளவுக்கு இழிவாக்கி இழிவுபடுத்த முடியுமோ, அந்தளவுக்கு பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றி ஒளிவட்டம் கட்டித்தான் பாலசிங்கத்தால் குழிபறிக்க முடிந்தது. இந்த ஒளிவட்டம் குறுகிய பாசிசத்தால் வக்கிரம் கொண்டது. அதை பாலசிங்கம் குடும்பத்தால் தான் அழகாக கூறமுடிகின்றது. ,"பிரபாகரனைப் பொறுத்த வரையில் துப்பாக்கிகளில் தான் நாட்டம் உண்டு",1, இதற்குள் தான் அவரின் அனைத்து ஆளுமையும், சிந்தனையும். இது தான் அவரின் எல்லையாகின்ற போது, பாசிசத்தைத் தவிர வேறு எதையும் மக்களுக்காக அவரால் கொடுக்க சிந்திக்க முடியாது. இதற்கு வெளியில் அவரின் நாட்டம் என்ன? ,"பிரபாகரனுக்கு அவனுடைய போராளிகளுக்கும் ஆங்கிலப் படங்கள் தான் பிடிக்கும். குறிப்பாக போர்ப் படங்கள்"1 வேறு ,"சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படையில் இன்பங்களில் ஒன்று என்பதும்",1, "அவருடைய அணிகலன் கச்சிதமாக இருக்கும் ஆடை புனைவது பிரபாகரன் அவர்களுக்கு ஒரு நிகழ்வு",1 ,வேறு என்ன தான் இருக்கும். ,"நீண்ட தாடியுடனோ, அழுக்கான உடைகளுடனோ ,, நடமாடவில்லை. அப்படிப்பட்ட தோற்றம் பிரபாகரனுக்கு சகிக்க முடியாத ஒன்று",1, இப்படி உள்ளவர்கள் எப்படி மக்களுக்காக போராடமுடியும். இப்படிப்பட்ட பிரபாகரனும் பின்னால் நின்று பாலசிங்கம் ஒளிவட்டம் கட்ட, தமிழ் மக்கள் கையேந்துவதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது.


பிரபாகரன் இப்படி வாழ்வதற்கு, அவரின் கவிதை வரிகள் போல் மக்கள் வாழ்ந்தார்களா? மக்கள் தலைவர்கள் யார்? ஸ்ராலின் 1930ம் ஆண்டில் போட்ட மழைக்கோட்டையே அவர் தனது மரணம்வரை போட்டவர். மாவோ போராட்ட காலத்தில் போட்ட உடுப்புகள் பினாட்டாகி தனது ஆயுள் தெரியாது உருண்டு கிடந்தது. வியட்நாம் தந்தை கோசிமின் நாட்டின் தலைவரான போது, போட்ட உடுப்பைத் தவிர மாற்று உடுப்பின்றிய நிலையில் மற்றொரு தோழரின் உடுப்பை இரவல் பெற்று பதவி ஏற்றவர். மாவோ ஆட்சி ஏறிய பின் வடகொரிய யுத்த முனைக்கு மகனை அனுப்பியவர். அதில் அவரின் மகன் கொல்லப்பட்டார். ஸ்ராலின் மகன் இரண்டாவது உலகப் போர் முனையில் சண்டையில் ஈடுபட்ட போது, கிட்லரால் கைது செய்யப்பட்டு பேரம் பேசும் பொருளாகிய போது, ஸ்ராலின் அதை நிராகரித்தார். இதனால் அவரின் மகன் கொல்லப்பட்டார். புலித்தலைவர்கள் போல் யுத்த முனைக்கு வெளியில், மக்களுக்கு வெளியில் அவர்கள் வாழவில்லை. மக்களின் அனைத்து துன்ப துயரங்களிலும் பங்காளியாக இருந்து, மக்களின் உண்மையான தலைவர்களாக இருந்தனர்.


இதற்கு மாறாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் வசனத்தில் மக்களை ஏமாற்றி தாம் மட்டும் வாழமுனைகின்றனர்.


"உழைப்போர் முகங்களில்,


உவகை தெரிகிறது,


ஏழைகளின் முகங்களில்,


புன்னகை உதயமாகின்றது.",4, இதை மக்களின் வாழ்வாக உருவாக்கிப் போட்ட சுவையாக உண்ண முடிகின்றது. கச்சிதமாக ஆடை அணிய முடிகின்றது. நீங்கள் சொல்லுங்கள். மக்கள் நலன் சார்ந்த ஒரு படத்தை பார்க்கும், சமூக ரசனை கிடையாது. வாழ்க்கைக்கு உதவாத மனித வாழ்வை இழிவாடுகின்ற, அமெரிக்க கொலிவூட் வக்கிரங்களில் மூழ்கி எழுகின்றனர். இவர்கள் எப்படி சமூகத்தைப் பற்றி நேசிக்கவும், சிந்திக்கமுடியும்.


பாலசிங்கம் குடும்பம் இதையும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றனர். ,"சோஷலிச தத்துவம் மட்டில் பல போராளிகளுக்கு உள்ளார்ந்த பற்று இருந்தது. ஆனால் யாரும் மார்க்சிய நிலைப்பாட்டை என்றும் தழுவியதில்லை. மாக்சிய புரட்சியாளர்கள் என்ற அந்த மாமூல் தோற்றம் கூட இல்லை",1, தத்துவ பற்றும், தோற்றமும் எப்படித்தான் இருக்கமுடியும். அவை பிரபாகரனுக்கு பிடிக்காத ஒரு விடையம். இதை மீறினால் தண்டனை மரணம் வரை உண்டு. அதையும் நாம் கூறத் தேவையில்லை. "அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை.",1 ,எதைப்பற்றி தான் அவர் அலட்டிக் கொள்வார். சுவையான உணவு, கச்சிதமான உடை, ஆயுதம், சண்டை (ப் படம்) இப்படி ஒரு தனிநபரை சுற்றி உருவான இயக்கம், மக்கள் பற்றி எதையும் அலட்டிக் கொள்வதில்லை. இந்த பாசிச மாபியா இயக்கத்துக்கு, பாலசிங்கம் கோயபல்ஸ்சாக இருந்தவர்.


கருணாவின் பிளவை அடுத்து கோயபல்ஸ் பாலசிங்கம் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்றப்படுபவர் பிரபாகரன். --- பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாத தொன்று அபாண்டமானது."10 இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்க பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதாகும். சமூகத்தில், சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை, உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் ,சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டது தானே. இதுதான் எதார்த்த உண்மை. இந்த எதார்த்தம் உண்மையாக இருக்கும் போது, அதை விரட்டிவிட்டதாக கவிதைபாடும் பிரபாகரன், மக்களை ஏமாற்றியதும் ஏமாற்றவதும் உண்மைல்லவா!


"மக்களிடம் உள்ள,


பிரதேசம் சாதி,


மதமென்னும் பேய்களும்,


அலறி ஓடுகின்றன"


,4, என்றவர் ,


பாலசிங்கம் கூறுவது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட"10 போராட்டம் என்பது, இவற்றைக் களையாது தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாக கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, மதவாத, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. காலாகாலமாக யாழ் மையவாதத்தால் இவை கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன் பிரதிநிதியாக புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் உள்ளனர். அதற்கு பாலசிங்கம் கோயபல்ஸ்சாக விளக்கமளித்தவர்.


இதே பிரபாகரன் 1992 இல் தனது மேதினம் செய்தியில் "போராட்டப் பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறு தோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்கின்றார். இப்படி கூறியவர், அந்த தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் தொண்டைக் குழியை வெட்டியவர்கள். பிரபாகரன் கீழ்வாழும் தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் இன்றைய நிலை என்ன? "தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்றவர், உண்மையில் அதற்கு வெளியில் நின்று செயற்படுவதையும், தமிழ் பாட்டாளி வேறு, நாங்கள் வேறு என்பதையும் அவராகவே உணர்த்தி நிற்கின்றாh. இந்த வகையில் தமிழ் பாட்டாளி வர்க்கத்தையே உதைத்து சுரண்டி வந்தவர்கள், தமது சொந்த அரசியல் திட்டத்தில் என்ன சொல்லுகின்றனர்.


அந்த திட்டத்துக்கு அழகாகவே "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி",6,, என்று இந்த பாசிட்டுக்கள் தலைப்பிட்டனர். அதில் "தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்றனர். இப்படி மக்களை ஏமாற்றி மோசடி செய்ய, பொய்கார கோயபல்ஸ்சுகளால் மட்டும் தான் முடியும்.,


இந்த கோயபல்ஸ் பாசிச கும்பல் அதனுடன் மட்டும் தமது மோசடியை நிறுத்தவில்லை. "தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே"6 தமது இலட்சியம் என்றனர். அதுவே "தமிழீழத் தாகம்"6 என்றனர் "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும" ஆட்சியாக அமையும் என்றனர். மேலும் அவர்கள் "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்"6 என்றனர். அத்துடன் விட்டார்களா "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்"6 என்றனர். இப்படி புலிகள் சொன்னார்கள். ஒரு போராட்டத்தை இப்படிச் சொல்லி மோசடி செய்தவர்கள் யார்? ஒரு கணம் சுயமாக உங்களால் சிந்திக்க முடியமா?


எவ்வளவு பெரிய அரசியல் மோசடி. மக்களின் கழுத்தை அறுத்து எறிந்த வரலாறு இது. சுயநிர்ணயயுரிமைப் போராட்டத்தை மோசடி செய்துள்னனர். இன்று இதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. பேசுபவர்களை அவர்கள் உயிருடன் விடுவதில்லை. அன்று மக்கள் பற்றி பேசுவதற்கு இருந்த குறைந்தபட்ச அக்கறை, இன்று இந்த பாசிட்டுகளிடம் கிடையாது. இதற்கு வழிகாட்டிய கோயபல்ஸ் பாலசிங்கம் எவ்வளவு பெரிய பொய்யனாக, ஒரு மோசடிக்காரனாக இருக்கின்றான். இதைத் தான் நாசி கோயபல்ஸ் செய்தான். ஈழத்து கோயபல்ஸ்சாக பாலசிங்கம் செயல்பட்டார் என்பதோடு, தமிழ் மக்களின் மேலான அரசியல் படுகொலைகள் மூலம் தத்துவவாதியானவர்.


தமிழ் சமூகத்தையும் உலகத்தையும் ஏமாற்றுவதில் தான் அவரின் போக்கிரித்தனமே இருந்தது. தமது பாசிச அரசியலை மற்றொரு பாசிட்டான எம்.ஜி.ஆர்க்கு பாலசிங்கம் எடுத்துக் கூறுவதே பாசிட்டுகளுக்கேயுரிய ஒரு தனி அழகு. "விடுதலைப்புலிகள் கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம். ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்"7 என்றார் இந்த ஈழத்து கோயபல்ஸ். அத்துடன் விடவில்லை "நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்"7 என்றார். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்துக் காட்டி, மக்களை வாழ்வில் ஏமாற்றினார். நாங்கள் போராட்டத்தில் நடித்து நடைமுறையில் ஏமாற்றுகின்றோம் என்கின்றார். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது"7 இப்படி இரண்டு பேரின் பாசிச நோக்கமும் உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான் ஒன்று என்பதை கூறி கோடிக்கணக்கில் அதற்காக எம்.ஜி.ஆர்ரிடம் பணம் வாங்க முடிந்தது. எம்.ஜி.ஆருக்கு "இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர்", அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி",7, இப்படிச் சொல்லித் தான் பணம் பெற்றார்கள். எம்.ஜி.ஆர் அப்பன் உழைத்த காசிலேயா உங்களுக்கு பணம் கொடுக்க முடிந்தது? இல்லை மக்களை கொள்ளையிட்ட காசில் தான், இரண்டு பாசிட்டுகளும் ஒன்றாக வண்டில் இழுக்க முடிந்தது. இப்படி மக்களை ஏமாற்றுவது தான் இவர்களின் குறிக்கோளாக இருந்தது. மக்களை மாயாஜாலத்தில் தள்ளி, ஏமாற்றுவதே இவர்களின் கூட்டுக் கொள்கையாக இருந்தது. ஏமாற்றல், மோசடி, பொய், புனைவு, மாயாஜாலம், இழிவு, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், இழிவான பாலியல் இரசனை என்று, மனிதத்துவத்தை இழிவுபடுத்தி விடுகின்றனர். பின் இவற்றை கூட்டியள்ளி, தமிழ் மக்களின் மேல் ஒரு பாசிசத்தின் குரலாக அறைந்தவர் தான் இந்த ஆன்ரன் பாலசிங்கம்.


இது அம்பலமாகும் போது ஆன்ரன் பாலசிங்கம் பாசிசத்துக்குரிய கொலை எச்சரிக்கையை தமிழ்மக்களை நோக்கி விடுகின்றாh. அவர் வடக்கில் ஆற்றிய உரை ஒன்றில் "யாழ்ப்பாண புத்திஜீவிகளான நடுத்தர வர்க்கத்தரான நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனின் அங்கிருந்துதான் அதிக விமர்சனம் வருகின்றது",8 ,என்றார். தாம் சொல்வதைத் தவிர, நீங்கள் எதை விமர்சிக்க கூடாது. இதை மீறிய போது, மரணத்தைத் தான் புலிகள் பரிசாக அளித்தனர், அளிக்கின்றனர். மறுபக்கத்தில் இதே பாலசிங்கம் கூறுகின்றார் மாற்றுக் கருத்துடையோர் ,".. தமிழர் தாயகத்தில் அரசியல் பணியில் ஈடுபடும் உரிமை உண்டு என்பதை நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம்",9, என்கின்றார். மாற்றுக்கருத்துடையோர் அரசியல் செய்ய முன்னம், அவர்கள் தமிழ் மண்ணில் உயிருடன் வாழமுடியாது. 30-06-86 இல் இந்தியாரூடே (ஆங்கிலம்) வெளியீட்டில் பிரபாகரனை நோக்கி ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது. "தமிழீழத்துக்கு எந்த மாதிரியான அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?" என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவர் "மக்களால் ஆதரிக்கப்படும் ஒரே ஒரு அரசியல் கட்சியே அங்கு இருக்கும். பல கட்சி ஜனநாயகத்தை நான் விரும்பவில்லை." என்றார். ஆதரிப்பதும் அவரே, ஆள்பவரும் அவரே. இப்படி ஒரு சர்வாதிகாரி, ஒரு பாசிட் முன்வைக்கும் தேசியம் மக்களுக்கானதல்ல. அதே 1986 இல் இந்த பாசிட்டுகள் தமது பாசிசத்தையே துண்டுப்பிரசுரமாக வெளியிட்டவர்கள். அதில் மக்களின் அடிப்படை உரிமைகள் "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்"10 என்றவர்கள். இதில் வாக்களிக்கும் உரிமை உள்ளடங்கத்தான்.


இவர்கள் எந்த மக்களுக்காக எப்படி போராடுவாhகள்? இவர்கள் ஒரு மோசடிக்காரர்கள். நேர்மையற்றவர்கள். தமது அரசியல் துரோகத்தை ஒன்றுக்கு பின் ஒன்றாக கோயபல்ஸ் பாணியில் புலம்புபவர்கள். உதாரணமாக பாலசிங்கம் "இந்த அரசு அமெரிக்காவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்தியாவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்த அரசு சர்வதேச நாடுகளுடன் உடன்பாடுகள், ஒப்பந்தங்களை செய்கின்றது. ஒருபுறம் வர்த்தக ஓப்பந்தங்கள், பொருளாதார ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றது. எதற்கு? புலிகள் இயக்கத்தை சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது. இது எங்களுக்குத் தெரியும்....",10 ,என்கின்றார். இதே பாலசிங்கம், கருணாவின் பிரிவை அடுத்து கருணாவுக்கு பதிலளித்த போது "சர்வதேச உதவியோடு சிங்களவர்கள், முஸ்லிம்கள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்குமான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனருத்தாரணம் தொடர்பான பாரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியும்."10 என்கின்றார் "தேசிய குரல்". முந்தையதுக்கு முரணாக பிந்தையது வரும். இப்படித் தான், "தேசியத் தலைவர்" தேசத்தை தேசியத்தை வெல்வார் என்கின்றனர். இஸ்ரேல் என்பர், சிங்கப்பூர் என்பர், அனைத்தும் கனவுகளில் கற்பனையில் சிந்தித்து அதில் சஞ்சரிக்கின்றனர்.


"தேசிய குரல்" பாலசிங்கம் "புலிகள் இயக்கத்தை சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது" என்று கூறிய அதேநேரம், அண்மையில் நவீன பாலசிங்கமாகி பிரபாகரன் அறிக்கைகளை எழுதும் பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் "பிரிட்டன், அமெரிக்கா, ஐப்பான் உட்பட பல நாடுகள் புலிகளோடு உறவு வைப்பது தான் சரியானதென்று இப்போது தீர்மானித்துள்ளன. புலிகளோடு உறவு வைப்பதுதான் தெற்காசியச் சமநிலையைப் பேணுவதற்கான சரியான வழி என்பதனையும் பல நாடுகள் இப்போது நன்கு உணர்ந்துள்ளன.",10, என்கின்றார். யாரை ஏமாற்ற இவையெல்லாம். இது தான் புலிகள். இதே பாலகுமார் "...ஈராக் மீதான அமெரிக்கா யுத்தம் எமக்கு ஒரு பாடம். எனவே, மக்களாகிய நீங்கள் எமது தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்துவதற்கான சகல நடவடிக்கையையும் நாம் மேற்கொள்வோம்",10, எப்படி சுட்டிக் காட்டுவது. தங்கள் சொந்த மரணங்கள் மூலமா?


இதை சுட்டிக் காட்டுவது மக்களின் உரிமைகளில் ஒன்று. ஆனால் அது ,"புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்"10 என்று சொன்னவர்கள் நாங்கள் அல்ல, நீங்களே. அதன்படி இதற்கு மரணதண்டனையை தீர்வாக்கி, அதை செய்து வருபவர்கள் யார்? நீங்கள் தான். "தேசத்தின்குரல்" கோயபல்ஸ் புலம்பெயர் சமூகம் பற்றி கூறும் போது "வடலிப் பக்கம் மலக்கழிவிற்காக ஒதுங்கியவர்கள் கொமோட் மலசல கூடம் தேவை என்று கோருபவர்கள் இவர்கள்."2 என்றவர். இதற்கு முரணாகவே 2006ம் ஆண்டு மாவீரர்தின செய்தியில் பிரபாகரன் "தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்."11 என்ன மோசடி. இவை எல்லாம் எதற்காக. புலம்பெயர் தமிழனின் பணத்துக்காக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, தமிழ் மக்களின் அழிவின் மீது தாம் மட்டும் வாழ்வதற்காகத் தான்.


இதே பிரபாகரன் 1992 இல் தனது மேதினம் செய்தியில் "போராட்டப் பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறு தோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்றவர். இன்று அந்த வர்க்கத்தின் நிலையை நாம் பார்க்கின்றோம். இதே நிலை தான் புலம்பெயர் தமிழனுக்கும், தமிழக மக்களுக்கும் நிகழும். இது பொருந்தாது என்றால் ஏன்? எத்தனை வரலாற்று ஆதாரங்களையும், மோசடிகளையும் நாம் காட்டமுடியும்.


புலிகளின் தலைவர் பிரபாகரனை "எமது சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் போராக வீசிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புயல் எமது மண்ணில் காலம் காலமாக நிலைத்திருந்த பழைமைவாத விருட்சங்களை வேரோடு பிடுங்கி வீழ்த்தி வருகிறது. எமது மனக்குகையில் குடியிருந்த மூட நம்பிக்கைப் பேய்கள் விரட்டப்பட்டு வருகின்றது. எமது சமூகக் கருத்துலகில் புதிய பார்வை மலர்கிறது. புதிய விழிப்புணர்வு தோன்றி வருகின்றது. சமூக உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது",13 , என்றார். இது நிகழ்ந்ததாக யாராவது காட்ட முடியுமா?


இதற்கு மாறாக அவரின் வழிகாட்டி பாலசிங்கம் தமிழ் மக்களை ஏமாற்ற முடிகின்றது. தமது பாலியல் வக்கிரத்தில் தான் தமிழ் மக்களை உற்சாகப்படுத்த முடிகின்றது. 2000ம் ஆண்டு மாவீரர் தின உரையும் பாலசிங்கத்தின் பொழிப்புரையும் "... எமது தேசத்தின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் வாசற்படியை அண்மித்து நிற்கின்றன. யாழ்ப்பாணத்தின் கழுத்தைத் திருகிய படி குடாநாட்டை வன்னி மாநிலத்துடன் துண்டித்து..." நிற்கின்றான் என்கின்றார் பிரபாகரன். அன்ரன் பாலசிங்கம் யாழ்ப்பாணம் மீதான புலிகள் தாக்குதல் நடத்த முன்முயற்சி எடுத்ததை அடுத்து, உலக நாடுகளிடம் சிங்கள இனவெறி அரசு கையேந்திய நிகழ்ச்சி பற்றி " யாழ்ப்பாணத்தை பிடித்து தனியரசாக அமையப் போகின்றது" முடிவில்லாத புளுடா அரசியல். தமிழீழம் யாழ்ப்பாணம் என்கின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் யாழ்ப்பாண மையவாதமாக இருப்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. சரி அந்த யாழ்ப்பாண தனியரசு எப்படி என்கின்றார் பாலசிங்கம்? அது "சந்திரிக்கா தனது மடியில் பல்வேறு தேள் மற்றும் கொடுக்கனை கட்டிவைத்துள்ளார்" அது தான் அவரின் யாழ்பாணத்து தமிழீழம். இந்த யாழ்ப்பாணத்துக்கு சந்திரிக்காவின் மடியில் "சின்ன சின்ன ஆசைகள் எனக்கும் உண்டு" என்றவர். இவர் 2005 பொழிபபுரையில் கருணாவை நோக்கி "பாலியல் இயக்கம்", தொடங்க கோரியவர். வேறு எப்படித்தான் இந்த கோயபல்ஸ்சால் மக்கள் அரசியல் செய்யமுடியும்!


இவர் எப்படிப்பட்ட ஒரு தத்துவஞானி. சிங்கள இனவெறி பிரதமர் உரைகள் பற்றி குறிப்பிடும்போது "கிராமப்புறத்தான்" என்றார். சிங்கள மக்கள் பற்றி குறிப்பிடும் போது "மோட்டுச் சிங்களவன்" என்றார்."சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை"

, என்றார். ஆனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கோயபல்ஸ் பாலசிங்கம் "அங்கே பொறிகள் இருக்கும். சதி வலைப் பின்னல்கள் இருக்கும். என்ன மாதிரி பாலசிங்கத்தை மடக்கலாம். புலிகளை என்ன மாதிரி அவர்களது இலட்சியத்திலிருந்து திருப்பி வேறு பாதையில் கொண்டுபோகலாம் என்று சதிகள் இருக்கும். இவைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை என்றால் சாதாரண விடயம் அல்ல. சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள்." என்றார். ,"மோட்டுச் சிங்களவன்", ,"சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை" என்றவர் இப்படி ஒன்றுக்குபின் ஒன்றாக முரணாக கூற முடிகின்றது என்றால், பாசிட்டுகளின், அந்திம காலத்தின் ஒரு உளறலாகவே வெளிவருகின்றது. இந்த மக்கள் விரோத பாசிட்டுகளைப் புரிந்து கொள்ளாது, அதனுடன் சேர்ந்து கூத்து அடிப்பவர்களை அப்பாவிகள் என்பதா? சதிகாரர்கள் என்பதா? மோசடிக்காரர்கள் என்பதா? பிழைப்புவாதிகள் என்பதா? நீங்களே முடிவு செய்யவேண்டும்.

1. சுதந்திர வேட்கை - அடேல் பாலசிங்கம்


2. தேனீ - புலியெதிர்ப்பு இணையம்


3. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை - பி.இரயாகரன்


4. எரிமலை ஆகஸ்ட் 1991 - புலிகளின் பத்திரிகை


5. எரிமலை ஆகஸ்ட் 1993 - புலிகளின் பத்திரிகை


6. சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி - புலிகளின் அரசியல் அறிக்கை


7. விடுதலை - பாலசிங்கம்


8. உதயன், - புலி ஆதாரவு இணையம்


9. வீரகேசரி - பத்திரிகை


10. www.tamilcircle.net


11. புதினம், - புலி ஆதரவு இணையம்


12. போரும் சமாதானமும், - பாலசிங்கம்


13. எரிமலை ஆடி 1993 - புலிகளின் பத்திரிகை






Saturday, December 23, 2006

புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது அவதூறு

புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது அவதூறு

ஐயோ நாங்கள் ஐனநாயகவாதிகள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நேர்மை உண்டு என்ற புலியெதிர்ப்பு கும்பல் புலம்புவது வழமை. ஆனால் நடைமுறையில் அதை மருந்துக்குக் கூட காணமுடியாது.


இந்தக் கும்பல் எனது கருத்துக்களை எதிர்கொள்ள முடியாது திணறுகின்றனர். அவதூறை அள்ளிக் கொட்டுகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட இணையம் தான் நெருப்பு டொட் கொம். புலிக்கு நிதர்சனம் போல், புலியெதிர்ப்புக்கு நெருப்பு. கருணாவின் நெருக்கமான உறவுடன் இது இயங்குகின்றது.


புலியெதிர்ப்பு அணியின் பரஸ்பர இணைய இணைப்புக்கு உள்ளானதே இந்த இணையம். இந்த புலியெதிர்ப்பு கும்பல் எனது கருத்துக்கு பதிலளிக்க வக்கு கிடையாது. அதானல் அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால் அவதூறில் இறங்குகின்றனர்.


எனது கருத்தை எதிர்கொள்ள, அவதூறு மட்டும் தான் அவர்களின் ஒரே ஆயுதம். இந்த வகையில் "அண்ணன் றஜாகரனுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்!"(வாசகர்களுக்காக கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது) என்ற ஒரு அவதூற்றை 05.03.2006 இல் நெருப்பில் வெளியிட்டனர்.


'அண்ணை கோவியாதைங்கோ அண்ணை! அண்ணை மன்னிச்சுடுங்கோ அண்ணை!"


என்று இவ் அவதூற்றுக்கு பதிலாக நான் எழுதிய கட்டுரைக்கு பதிலே இல்லை.


இந்த நிலையில் மீண்டும் ஒரு அவதூற்றை 23.12.2006 ஒரு புலிப் பினாமியுடன் சேர்த்து வாரி இறைக்கின்றனர். 'லண்டன் ஒரு பேப்பரும்! அருணாச்சலம் ரவியின் தகிடுதித்தங்கள்!" என்ற அவதூறில் ( இக்கட்டுரையையும் கீழே காண்க ) , என்னையும் சேர்த்து தூற்றுவதையே, அவர்கள் தமது ஜனநாயக அரசியல் என்று பீற்ற முனைகின்றனர்.


லண்டன் ஒரு பேப்பர் ரவி ஒரு புலிப்பினாமி. அவர் பற்றி எமது விமர்சனம் ஒன்று


'மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்"


என்ற தலைப்பில் முன்பே எழுதியிருந்தோம்.


எமது விமர்சனங்களை பார்வையிடும் வண்ணமும், புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் அவதூற்றை படிக்கும் வண்ணமும், அவை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.


எமது பதில், எமது விவாதம் எதையும் கருத்தில் எடுத்து விவாதிக்கும் எந்த நேர்மையும், இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளுக்கு கிடையாது என்பதையே, நாம் மீண்டும் தெளிவாக பிரகடனம் செய்கின்றோம். அவதூற்றைத் தவிர, வேறு எந்த சமூக கண்ணோட்டமும் இவர்களிடம் கிடையாது.


(05.03.2006) நெருப்பின் அவதூறுக்கு எனது பதில்


101. அண்ணை கோவியாதைங்கோ! அண்ணை! அண்ணை மன்னிச்சுடுங்கோ! அண்ணை!


அருணாச்சலம் ரவி மீதான எனது விமர்சனம்


096. மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நெருப்பின் அவதூறுகள் (இது தான் புலியெதிர்பு அணியின் ஜனநாயகம்)


1.'லண்டன் ஒரு பேப்பரும்! அருணாச்சலம் ரவியின் தகிடுதித்தங்கள்! (23.12.2006)


நேற்று!.


இந்தியாவின் கைக்கூலியென கூட்டணிக்குத் துரோகிப் பட்டம்


இன்று!


இந்தியாவிடம் மடிபிச்சையேந்தி கூட்டமைப்பு டெல்லிக்கு ஓட்டம்


நாளை!


லண்டன் ஒரு பேப்பருக்கும் இரவிக்கும் வரப்போகுது பலத்த நட்டம்


லண்டனில் இருந்து வெளியாகும் ஓசிப் பத்திரிகையான ஒரு பேப்பர் வெளியிடுபவர்கள் பற்றி திடுக்கிடும் பல தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதில் சம்பந்தப்பட்ட அனைவரினதும் முக்கியமாக இரவி என்பவரது தகிடுதித்தங்கள் பல எமது கைக்கு வந்துள்ளது. அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து வரும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கும் அவரது மனைவியார் மங்கையர்கரசிக்கும் எதிராக எழுதிவருவது கடைத்தெடுத்த அயோக்கியத்தனம்.


அமிர்தலிங்கத்துக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதாக கத்திக் குளறும் இரவி முதலில் புலிகளிடம் கேட்கவேண்டிய நிறைய கேள்விகளில் ஒன்று, ஏன் கூட்டமைப்பினரை இந்தியாவுக்கு போய் வாகரையில் தமக்கு அடிக்கவேண்டாமென இலங்கைக்கு சொல்லச்சொல்லி அனுப்பியது என்பதாகும்.


இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு உழைத்த அமிர்தலிங்கம் அவர்களை இந்திய கைகூலியென சொன்ன புலிகள் அவருக்கு தூரோகிப்பட்டமும் மரண தண்டனையும் கொடுத்தனர். இன்று உலக நாடுகளால் புலிகள் அரசியல் துரோகிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டதால் தமது கைக்கூலிகளான கூட்டமைப்பை எந்தவித வெட்கமும் இல்லாமல் இந்தியாவிடம் மடிப்பிச்சை கேட்டு டெல்லிக்கு ஒன்றுக்கு இரண்டு முறை காவடி தூக்கி ஓடச்சொன்னனர். நிலைமை இப்படி இருக்க லண்டனில் புலிகளின் பினாமிகள் தாங்கள்தான் என தம்பட்டம் அடிக்கும் ஒரு வலது குறைந்த கோஸ்டியான ஒரு பேப்பரும் அதில் தான் ஏதோ தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆசீர்வாத செய்தியோடு லண்டன் வந்ததாக கதை அளக்கும் படுமோசமான பொ. பொறுக்கி இரவியின் விசமும் கசமும் நிறைந்த வார்த்தைகள் ஒரு சாதாரண தமிழனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.


ஓசிப்பேப்பர் அடிச்சமா.. அதுக்கு அட்வேட் கேட்டமா.. வந்த காசை பங்கு போட்டமா.. என்று இருக்காமல் எங்களுக்கு புலி, தேசம், விடுதலை, தமிழீழம்..துரோகம்.. என்று கதை அளக்காமல் இருந்தால் ஓரு பேப்பரும் நல்லது… இரவிக்கும் நல்லது.. இல்லையேல் கைவசம் எம்மிடம் மருத்து உண்டு.


அருணாச்சலம் இரவி என்ற இவர் ஜ.பி.சி. வானொலியுடன் இணைந்து கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்திவந்தவர். இவரும் இவரது நண்பருமான பிரான்ஸில் வசிக்கும் றஜகரன் என்பவரும் இணைந்து தமிழீழ போராட்டத்திலேயே மிகப்பெரிய வங்கிக்கொள்ளையான ஹற்றன் நஷனல் வங்கியில் 5,6 கோடி ரூபாய்களை கொள்ளையிட்டு அதில் 5,6 சதத்தைக்கூட தமிழீழ போராட்டத்திற்கு வழங்காமல் அதனை சுறுட்டிக்கொண்டு லண்டன், பிரான்ஸ் நாடுகளிற்கு தப்பியோடிவந்தவர்கள் ஆவர்."



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



'இந்த வகையில் நெருப்பு கொம் 05.03.2006 அன்று எனக்கு எதிராக அவதூறு ஒன்றைக் கட்டமைத்தது. மாற்றுக் கருத்துக்காக புலம்பியழும் புலியெதிர்ப்பு நடிகர்கள், நியத்தில் எனது கருத்தை மாற்றுக்கருத்தாக ஆய்வு செய்ய முடியாது போகின்றது. எழுதுவதை நிறுத்தக் கோரும் இவர்கள், ~~ஜனநாயக வேஷம் வேறு போடுகின்றனர்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


"ஜனநாயக" (நாய்) வேஷம் போட்டு வெளியிடும் தமது சொந்த அவதூறில் நெருப்பில் வெளியிடப்பட்ட முன்னைய மற்றுமொரு அவதூறு


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


2 "அண்ணன் றஜாகரனுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்! (05.03.2006)


(முன்னாள் என்.எல்.எப்.ரி உறுப்பினர், சமர் மற்றும் தமிழ்சுற்று இணையத்தள ஆசிரியர்.)


அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவாகள், ஐரோப்பாவில் மிகச்சிலரே. நீங்கள் ஒரு சுத்தமான மார்க்சியர் என்பதனடிப்படையில், உங்களைப் பொறுத்தளவில் உங்களுக்கத்தெரிந்த மார்க்சியத்திற்கப்பால் வேறெந்த மனுதர்மமோ, நியாயமே, தத்துவங்களே இருக்க முடியாதுதான். அண்ணா!


உங்களைப்போல் சாதி, மத, இன, தத்துவ, அரசியற் சுத்தம் கடைப்பிடித்தோர் அனைவரும் மனிதகுலத்தின் அழிவிற்கே வழி வகுத்தனர். க்pட்லர், பொல்பொட், பிரபாகரன், என மனித குல அழிவிற்கு இட்டுச்சென்றோர் பட்டியல், வரலாற்ரில் தொடர்ந்த வண்ணமுள்ளது.


இன்று பிரபாகரனின் இடத்தில் நீங்கள் இருந்தால், அவர் செய்வது போல்தான் நீங்களும் நடந்து கொண்டிருப்பீர்கள். ஓர் வித்தியாசம், அவர் தமிழ்தேசியமென்ற பெயரால் கொடூமையிழைக்கிறார், நீங்கள் தமிழ்தேசியத்துடன் மார்க்சியத்தையும் பயன்படுத்தி உங்கள் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப்படுத்துவீர்கள் நியாயப்படுதினீர்கள். (உங்களுக்கு இது ஒன்றும் புதிதல்லவே)


இதை நான் ஏன் சொல்லுகிறொனென்றால், அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக்கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள். இத் தீர்ப்புகளுக்கு எந்த விதமான ஆதாரங்களையும் நீங்கள் முன் வைப்பதில்லை. உங்களுக்கு இம் மனிதர்கள் மீது, உங்கள் தீர்ப்பை செயற்படுத்தும் வாய்ப்பு மட்டும் இருக்குமானால், இவர்களில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.


ஏந்த வித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், உடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடயவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது. ஏனெனில் உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச்சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே.. இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது, நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகிPனீர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே.


இன்று வரையும் இதைப்பற்றி ஒருவருக்கும் நாம் பகிரங்கப்படுத்தியது கிடையாது. (உங்கள் உறவினர் காலம் சென்ற நண்பன் கலைச்செல்வனைத் தவிர. அவர் பகிரங்கமாக உங்களை கொலைகாரன் என அழைத்தர் நாம் பலர் கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்துள்ளோம், அதனால் இன்று எல்லாம் இழந்து மன அழுத்தத்துடன் அகதிகளாயுள்ளேம். ஏம்மைப் போன்று தான் நீங்களும் எனும் புரிந்துணுர்வில் தான் நாம்மிற் பலர் உங்களை பகிரங்கப்படுத்தியது கிடையாது. அது மட்டுமல்ல எங்களைப்போன்று, உங்களுக்கும் குழந்தைகளும் குடும்பமும் உண்டு என்ற மனிதாபிமானத்தில்தான்.


ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவனத்தில் கொண்டது கிடையாது. இனியாவது மனிதவிழுமியங்களையும், மனிதாபிமானத்தையும் கருத்திற் கொண்டு உங்கள் விமர்சனத்தை நாகரீகமான மொழியில் முன்வைக்குமாறு வேண்டுகிறேன். அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளது அண்ணே.


புரிந்துணுர்வையும் மனிதாபிமானத்தையும் எதிர்பாற்கும் தம்பி


சுந்தரமூர்த்தி சகாதேவன்(சின்னத்தேவா-ஒட்டி)


தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான்!

தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான்!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதில் ஊழலும், மோசடிகளும் புழுத்து நாறுவதை தலைமைக் கணக்கு அதிகாரியின்
அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டி விட்டது.


பொதுத்துறையைச் சூறையாடுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருப்பதுதான் தனியார்மயமாக்கம்; தரகுப் பெருமுதலாளிகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கொள்ளைக்காக நாட்டின் பொதுச் சொத்தைக் கூறுபோட்டு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்ப்பதுதான் தனியார்மயமாக்கம். இந்த உண்மையை நாட்டுப் பற்றாளர்களும் புரட்சிகரஜனநாயக சக்திகளும் சொன்னால், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பழமைவாதிகள் மக்கள் விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்; தனியார்மயத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால், இப்போது இந்திய அரசின் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியே, தனியார்மயம் என்றால் பொதுச் சொத்தைச் சூறையாடுவதுதான் என்று தனது அறிக்கையில் நிரூபித்துள்ளார்.


கடந்த ஆகஸ்ட் இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி (இஅஎ)யின் அறிக்கையானது, 1999 முதல் 2003ஆம் ஆண்டு வரை 9 அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்ட விவகாரத்தைத் தணிக்கை செய்து, அதில் நடந்துள்ள மோசடிகள், சதிகள், ஊழல், தில்லுமுல்லுகளை வெளிக் கொணர்ந்துள்ளது. இந்தக் காலத்தில் பதவியிலிருந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சியாளர்கள் விதிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் மீறி அவசர அவசரமாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ற முறைகேடுகளையும், தர குப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கோடிகோடியாய் ஆதாயமடைந்துள்ளதையும், நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை புட்டுப் புட்டு வைத்துள்ளது. இந்த அறிக்கையை முழுமையாக வெளியிடப் பக்கங்கள் போதாது என்பதால், சுருக்கமாக வகைமாதிரிக்கு ஒரு சில மோசடிகளை மட்டும் பார்ப்போம்.


அரசுத்துறை நிறுவனமான மாடர்ன் ஃபுட்ஸ், நல்ல இலாபத்தில் இயங்கி வந்த மிகப் பெரிய ரொட்டி தயாரிப்பு நிறுவனமாகும். 2000ஆவது ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியில் இந்த நிறுவனம், பன்னாட்டு ஏகபோக கம்பெனியான யுனி லீவருக்கு விற்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மையமான சொத்துக்களை மதிப்பீடு செய்வதில் பல தில்லுமுல்லு மோசடிகள் நடந்துள்ளன. குறிப்பாக, இந்நிறுவனத்துக்குச் சொந்தமான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தாவிலுள்ள நகர்ப்புற நிலங்கள் குறைமதிப்பீடு செய்யப்பட்டு, அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இவற்றை வீட்டுமனைகளாக்கி விற்று யுனிலீவர் நிறுவனம் கோடி கோடியாய் ஆதாயமடைந்துள்ளது. ஊழியர்களை வேலை நீக்கமோ, ஆட்குறைப்போ செய்யக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி மாடர்ன் ஃபுட்ஸ்ஐக் கைப்பற்றிய யுனிலீவர் நிறுவனம், பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. மாடர்ன் ஃபுட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு, விற்பனைக்குப் பிந்திய இழப்புகளை ஈடுசெய்ய 17.48 கோடி ரூபாய் தரவேண்டும் என்று யுனிலீவர் நிறுவனம் கோரியதை எவ்விதப் பரிசீலனையும் இன்றி பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டது. இதில், ரூ.12.64 கோடியை அந்நிறுவனத்துக்கு பா.ஜ.க. அரசு செலுத்தி விட்டது. எஞ்சிய தொகையை எப்போது செலுத்துவது என்பது பற்றி பரிசீலனையில் உள்ளது.


அலுமினிய உற்பத்தியில் ஈடுபட்டு வந்த அரசுத்துறை நிறுவனமான ""பால்கோ''வின் பங்குகள் ஸ்டெர்லைட் என்ற தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்துக்கு 2001ஆம் ஆண்டில் விற்கப்பட்டன. பால்கோவின் மையமான சொத்துக்களை குறைமதிப்பீடு செய்து அவசர அவசரமாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சி விற்பனை செய்துள்ளது. பால்கோவுக்குச் சொந்தமான நிலங்களும் வீட்டுமனைகளும் மதிப்பீடு செய்வதிலிருந்தே நீக்கப்பட்டு, குத்துமதிப்பாக விற்கப்பட்டுள்ளன. விற்பனைக்குப் பிந்திய இழப்பீடுகளை ஈடுசெய்ய ரூ. 16.72 கோடி தரவேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் கோரியதை பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக அறிவித்தது.


இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு 2001ஆம் ஆண்டில் தாரை வார்க்கப்பட்டது. தொலைதொடர்புத் துறைக்கு அவசியமான சி.டாட் ஸ்விட்சுகளைத் தயாரித்துவரும் முக்கிய நிறுவனமான இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ், விற்கப்படும்வரை நல்ல இலாபத்தை ஈட்டி வந்த அரசுத்துறை நிறுவனமாகும். இமாச்சல் ஃப்யூச்சர்ஸ் நிறுவனம் மட்டுமே அதன் பங்குகளை வாங்க முன்வந்தது. வேறு போட்டியாளர்களே இல்லாதபோதிலும், விதிமுறைகளை மீறி அந்த நிறுவனத்திடமே அற்ப விலைக்கு பங்குகள் விற்கப்பட்டன. ரூ. 55 கோடிக்கு பங்குகள் விற்கப்பட்ட பிறகு, விற்பனைக்குப் பிந்திய இழப்பீடாக அந்நிறுவனம் ரூ. 56.49 கோடி தரக் கோரியது. இதை பரிசீலிப்பதாக பா.ஜ.க. கூட்டணி அரசு ஏற்றுக் கொண்டது. அதாவது, பங்கு விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ரூ. 55 கோடி. விற்பனைக்குப் பிந்திய இழப்பீட்டுக்காக இமாச்சல் ப்யூச்சர்ஸ் நிறுவனத்துக்கு அரசு தரப்போவது ரூ. 56.49 கோடி. தனியார்மயத்தால் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அனைத்தும் இப்படி மீண்டும் தனியார் முதலாளிகளால் பறித்துக் கொள்ளப்படுவதோடு, கூடுதலாக ரூ. 1.5 கோடியை இழந்து அரசு நட்டப்படவுள்ளது என்று அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இதுதவிர சென்னையிலுள்ள இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவன நிலத்தின் மதிப்பு மிகமிகக் குறைவாக மதிப்பிடப்பட்டுத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. சென்னை சார் பதிவாளர் அலுவலக விதிகளுக்கு எதிராக, வேண்டுமென்றே நிலத்தின் மதிப்பு மிக அற்பமாகக் குறிப்பிடப்பட்டு அவசரமாக விற்கப்பட்டுள்ளது.


அனைத்துலகத் தொலைதொடர்புக்கும், இணையதள சேவைக்கும் ஒரே ஏகபோக அரசுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (வி.எஸ்.என்.எல்)டின் பங்குகள் தரகுப் பெருமுதலாளியான டாடா நிறுவனத்துக்கு 2002ஆம் ஆண்டில் விற்கப்பட்டன. வெளிநாடுகளுக்கான தொலைபேசி சேவை மூலம் இலாபகரமாக இயங்கி வந்த இந்த நிறுவனம், டாடாவின் ஆதாயத்துக்காகவே தனியார்மயமாக்கப்பட்டது. பங்குகளை விற்பதற்கு முதல் நாளன்று வி.எஸ்.என்.எல். நிறுவனம், வருவாய்த் துறைக்கு எதிரான வரிவருவாய் வழக்கின் மூலம் ரூ.1400 கோடி ஆதாயமடைந்திருந்தது. இந்தத் தகவலை பங்கு விற்பனை அமைச்சகம் பங்குகளை வாங்குவோருக்குத் தெரிவித்து, சற்று தாமதித்து விற்பனை செய்திருந்தால் இன்னும் அதிக விலைக்கு பங்குகளை விற்றிருக்க முடியும். வரிவருவாய் வழக்கின் மூலம் கிடைத்த இந்த ஆதாயத் தொகை வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சொத்து மதிப்பில் சேர்க்கப்படாமல் அவசர அவசரமாக பங்குகள் விற்கப்பட்டுள்ளன.


அதாவது, வி.எஸ்.என்.எல். பங்கு விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 1439.25 கோடி. பங்கு விற்பனையின்போது, வி.எஸ்.என்.எல். இன் சொத்து மதிப்பில் சேர்க்கப்படாத, வரி வருவாய் வழக்கில் கிடைத்த ஆதாயத் தொகை ரூ.1400 கோடி. ஆக, வி.எஸ்.என்.எல். பங்கு விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த நிகர வருவாய் வெறும் 39.25 கோடி மட்டுமே. இந்த மோசடியை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.


இதுதவிர, வி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குச் சொந்தமான 1230 ஏக்கர் நிலத்தில் 773 ஏக்கர் உபரி நிலம் என்றும் அதற்குத் தனியாக விலை நிர்ணயம் செய்து சொத்து மதிப்பில் சேர்த்து, அதன்பிறகு பங்குகளை விற்க வேண்டும் என்றும் தொலைதொடர்பு அமைச்சகம் வி.எஸ்.என்.எல். பங்குகளை விற்பதற்கு 10 நாட்கள் முன்னதாகவே பங்கு விற்பனை அமைச்சகத்திடம் பரிந்துரைத்தது. ஆனால், பா.ஜ.க. அரசின் பங்கு விற்பனை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, இந்த உபரி நிலத்துக்கு சல்லிக்காசு கூடப் பெறாமல் டாடாவுக்குத் தாரை வார்த்துள்ளார். இந்த உபரி நிலத்தின் மீது டாடா உரிமை கொண்டாட அனுமதிப்பது முறைகேடானது என்றும் பங்கு விற்பனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த உபரி நிலத்தின் மூலம் எவ்வித வருவாயும் அரசுக்குக் கிடைக்காமல் போயுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி சமர்ப்பித்துள்ள அறிக்கை.


அரசுத்துறை நிறுவனமான பாரதீப் பாஸ்பேட்ஸ்இன் பங்குகள் 2002ஆம் ஆண்டில் ரூ. 151.70 கோடிக்கு ஜுவாரி மாரோக் பாஸ்பேட் என்ற தரகு முதலாளித்துவ நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. விற்பனைக்குப் பிந்திய இழப்பீடாக அந்த நிறுவனம் ரூ. 151.55 கோடி கோரியுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட பா.ஜ.க. அரசு, பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது தனியார்மயமாக்கலால் அரசுக்குக் கிடைத்த வருவாய் அனைத்தும் இப்படி மீண்டும் பங்குகளை வாங்கிய முதலாளிகளுக்கே திருப்பிக் கொடுப்பது பேரிழப்பாகும் என்று சாடுகிறது தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை.


இவை எல்லாவற்றையும் விட அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் துத்தநாக தொழிற்சாலையின் பங்குகளை விற்றதில், வெளிப்படையாகவே மோசடிகளும் சூறையாடல்களும் நடந்துள்ளன. துத்தநாக தொழிற்சாலை 2002ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. தொடக்கத்திலேயே பேரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்ததும், தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணையில் இறங்கி அடுக்கடுக்காக பல மோசடிகள் நடந்துள்ளதை அம்பலப்படுத்தினர். துத்தநாக நிறுவனத்தின் சொத்துக்களைப் பற்றி மிகக் குறைவாக மதிப்பீடு செய்த அரசின் ஆலோசக நிறுவனமான ""பரிபாஸ் ஈக்விடீஸ் லிமிடெட்'', விற்பனை முடிந்த மறுநிமிடமே மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் முதலாளிகளும் பா.ஜ.க. ஆட்சியாளர்களும் பேர ஏற்பாட்டுக்காக உருவாக்கிய பினாமி நிறுவனம்தான் இது என்று நிரூபணமானது. மேலும், இந்தப் பேரம் பற்றியோ, துத்தநாக நிறுவனத்தின் சொத்து மதிப்பீடு பற்றிய அறிக்கைகளோ, ஆவணங்களோ நிதியமைச்சகத்திடம் இல்லை. அத்தனையும் திட்டமிட்டே பா.ஜ.க. ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு விட்டன.


இவைதவிர, கம்ப்யூட்டர் மெயின்டனன்ஸ் கார்ப்பரேஷன், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 19 பெரும் ஓட்டல்களை விற்ற விவகாரம் என அடுக்கடுக்காக அரசுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதையும், அதில் நடந்துள்ள மோசடிகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை.


மோசடிகளையும் சூறையாடல்களையும் பற்றிப் பட்டியலிட்டுள்ள போதிலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிமுதல் செய்யவோ தணிக்கை கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டி பரிந்துரைகளைக் கூறுவதுதான் இந்த அமைப்பின் பணி. முதலாளித்துவ அரசியலமைப்பு முறைக்கே உரித்தான, பரஸ்பர சோதித்தலும் அதிகார சமநிலையும் என்ற ஏற்பாட்டின்படி, அதிகாரவர்க்கம் அரசாங்கத்தினிடையே ஜனநாயகம், சிறந்த நிர்வாகம் என்ற கொள்கையை செயல்படுத்துவதன் பேரில் உருவாக்கப்பட்டுள்ளது தணிக்கை கட்டுப்பாடு அதிகாரிகள் என்ற அமைப்பு.


எனவேதான், தணிக்கை கட்டுப்பாடு அதிகாரியின் அறிக்கை எனும் பல் பிடுங்கப்பட்ட பாம்பு சீறுவதைப் பார்த்து, முந்தைய பா.ஜ.க. ஆட்சியாளர்களும் தரகுப் பெருமுதலாளிகளும் கைகொட்டிச் சிரித்து ஏளனம் செய்கின்றனர். முதலாளிகள் பொதுச் சொத்தைச் சூறையாடுவதற்கென்றே உருவாக்கப்பட்ட பங்கு விற்பனைத் துறையின் முன்னாள் பா.ஜ.க. அமைச்சரான அருண்ஷோரி, ""இந்த அறிக்கையானது குறுகிய பார்வை கொண்டது; நடைமுறைக்கு ஒவ்வாத பரிந்துரைகளைக் கூறுகிறது; இப்படி முட்டுக்கட்டைகள் போட்டால் பங்கு விற்பனை எனும் அரசின் கொள்கையைச் செயல்படுத்தவே முடியாமல் போய்விடும்'' என்று மிரட்டுகிறார். அதாவது, தனியார்மயமாக்கம் என்பது அரசின் கொள்கை; தனியார்மயம் என்றால் பொதுச் சொத்தைச் சூறையாடுவது; சூறையாடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் விதிமுறைகளும் ஒழுங்குகட்டுப்பாடுகளும் போட முடியுமா? அப்படிப் போட்டால் அரசின் கொள்கையை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பதுதான் "தேசபக்த' பா.ஜ.க.வின் "அறிவுஜீவி' அருண்ஷோரி எழுப்பும் கேள்வி.


அரசாங்கத்தின் பொதுச்சொத்தை சுருட்டிக் கொண்டால், முன்பெல்லாம் அதற்குப் பெயர் ஊழல். இப்போது அதற்குப் பெயர் தனியார்மயம். இதுதான் அரசின் கொள்கை. முதலாளிகள் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்வதுதான் அரசின் கொள்கையா என்று நீங்கள் சந்தேகப்படலாம். சந்தேகமே வேண்டாம்; இதுதான் அரசின் கொள்கை என்கிறது உச்சநீதி மன்றம். அரபிக் கடலில் உள்ள 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பன்னா, முக்தா எனும் இரு எண்ணெய் வயல்களை வெறும் 12 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் என்ரான் கூட்டணிக் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததற்கு எதிராக நடந்த வழக்கில், இது அரசின் கொள்கை என்று தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது, உச்சநீதி மன்றம்.


தனியார்மயமாக்கம் என்பது இலஞ்சமயமாக்கம்தான் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார ஆய்வாளரான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தனது ""உலகமயமாக்கமும் அதன் அதிருப்திகளும்'' நூலில் குறிப்பிடுகிறார். நரசிம்மராவ் மன்மோகன் சிங் ஆட்சியில் தனியார்மயத்தைத் தொடங்கி வைத்து முதலாளிகளின் கொள்ளைக்கு சேவை செய்து இலஞ்சமயமாகிய காங்கிரசுக் கட்சி, கோடீசுவர கட்சியாகியது. இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தி, இலஞ்ச ஊழலில் பா.ஜ.க. ஊதிப் பெருத்தது. தனியார்மயமாக்கலால் பல்லாயிரம் கோடிகள் ஏப்பம் விடப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்திலோ அதற்கு வெளியிலோ இவ்விரு கட்சிகளும் வாய் திறக்கவில்லை.


இப்போது பா.ஜ.க.வுக்குப் போட்டியாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம், தேசிய அலுமினிய நிறுவனம் ஆகிய அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சித்து வரும் காங்கிரசு கூட்டணி அரசு, இவையெல்லாவற்றையும் விஞ்சும் வகையில் முதலாளிகள் சூறையாடுவதற்காகவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை வேகமாக நிறுவி வருகிறது. இந்நிலையில் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதாலோ அல்லது போலி கம்யூனிஸ்டுகள் கோருவது போல மையப் புலனாய்வுத் துறை மூலம் உயர்மட்ட விசாரணை நடத்துவதாலோ தனியார்மயம் என்னும் பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திடமுடியாது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாக்கம்தான் அரசின் கொள்கையாக உள்ள நிலையில், பொதுச் சொத்தைச் சூறையாடி, தொழிலாளர்களின் வேலையைப் பறித்து, விவசாயிகளைத் தற்கொலைச் சாவுக்குத் தள்ளியுள்ள மறுகாலனியாக்கத்துக்கும், அதைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் எதிராக நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டுப் போராடி, உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவுவதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?


அன்பு



Wednesday, December 20, 2006

ஈரோஸ் மார்க்சிய இயக்கமல்ல, ஒரு கூலிக் குழு

ஈரோஸ் மார்க்சிய இயக்கமல்ல, ஒரு கூலிக் குழு, சந்தர்ப்பவாதிகள்

பி.இரயாகரன்
20.12.2006


ழத்து மானுட துன்பவியல் என்பது, மரணித்தவரை போலியாக போற்றுவதாகின்றது. மனித இனத்துக்கு கேடு இழைத்தவர்களை எல்லாம், சமூக கதாநாயகராக வரலாற்றின் முன் காட்ட முனைகின்றனர். இப்படி அண்மையில் பாலசிங்கம் போல் மரணித்த இரத்தினசபாபதியின் மரணத்தை, புலியெதிர்ப்புக் கும்பல் தங்களது இழிந்து போன அரசியல் விபச்சாரத்துக்காக உச்சிமோந்தனர். ரீ.பீ.சீ துயரத்தின் பெயரில், முன்னாள் இன்னாள் ஈரோஸ் எடுபிடிகளைக் கொண்டு, அரசியல் விபச்சாரத்தையே அரற்கேற்றினர்.


இவர்கள் எல்லாம் மானம் கெட்டவர்கள். எந்த ஒரு சுயவிமர்சனமும் கிடையாது. தமிழ் இனம் விடுதலையின் பெயரில் இன்று சந்திக்கும் இழிநிலைக்கு செல்ல, நாங்கள் எப்படி பங்காளியாக இருந்தோம் என்ற, எந்தவொரு மீள்பார்வையும் கிடையாது. தமிழ் இனம் இன்று சிதைந்து செல்லும் வரலாற்றுக்கு காரணமான காரிய காரணங்களையே, மீளவும் போற்றுவது நிகழ்கின்றது. இதன் மூலம் புல்லுரூவிகள், அரசியல் பிழைப்பு நடத்துவதே அரங்கேறுகின்றது. புலியெதிர்ப்பின் பின்னால், இதற்கு பவுடர் ப+சி சிங்காரிக்க வைத்து, தம்மைப் போல் மக்களையும் விபச்சாரத்தை செய்ய கோருகின்றனர்.


மனித அவலங்களை எல்லாம் மூட்டையாக கட்டி, தமது சொந்த மடியில் வைத்துள்ள, தமிழ் இனத்துக்கு என்ன நடந்தது? இவைகளை புலிகளால் மட்டுமே நடந்தாக காட்டுவது என்பது, மோசடிக்காரர்களின் நடத்தை நெறியாகும். புலிகள் அல்லாத மற்றவர் தரப்பினால் தமிழ் இனம் சிதையவில்லையா, சீரழியவில்லையா? நீங்கள் சொல்லுங்கள்!


தமிழ் மக்களின் அவலங்கள் அனைத்தும், பேரினவாதத்தால் தான் என்கின்றனர் புலிகள்.. புலியெதிர்ப்புக் கும்பல் தமிழ் இனத்தின் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் புலிகள் என்கின்றனர். தமிழ் மக்களின் துன்பத்துக்கு காரணம் நாங்கள் அல்ல என்று சொல்வதே, இவர்களின் தன்முனைப்பாக தம்மைத்தாம் நியாயப்படுத்துகின்ற ஒரு இழிவான அரசியலாகவுள்ளது. இதைத் தான் அவர்கள் தத்தம் ஜனநாயகம் என்கின்றனர்.


சரி மக்களுக்கு எதைப் பெற்றுக்கொடுக்க இதை சொல்லுகின்றீர்கள் என்று கேட்டால் எம்மைப் பார்த்து முறைக்கின்றனர். ஆக மிஞ்சினால் மக்களுக்கு சமாதானம் என்கின்றனர். அதைப் புலிகள் தமிழீழத்தில் என்கின்றனர். புலியெதிர்ப்பு அணி ஒரு அரசியல் தீர்வு மூலம் புலியை அழித்தல் என்கின்றனர். இப்படி ஆளுக்குயாள் சமதானம் பற்றியும், தீர்வு பற்றியும் பிதற்றுகின்றனர். பாவம் மக்கள். இப்படி ஒரு அரசியல் விபச்சாரத்தை கொடிகட்டிப், பறக்க விடுகின்றனர்.


இப்படி அரசியல் ரீதியாக எப்போவோ செத்துப் போன இரத்தினசபாபதியை, மறுபடியும் அவரின் பிணத்தையே தூக்கி நிமிர்த்தி அரசியல் ரீதியாக உயிர்கொடுக்க முனைகின்றனர்.


'ஈழத்து தந்தை", 'ஈழத்து பிதா" என்றெல்லாம் புலிக்கு போட்டியாக பட்டம் கொடுத்து தலைகுப்புற மக்களை வீழ்த்த முனைகின்றனர். ஈழப்போராட்டத்தின் முன்னோடி என்கின்றனர். மார்க்சியத்தை ஈழப் போராட்டத்தில் முன்வைத்ததில் முதன்மையானவர் என்கின்றனர். இப்படி பற்பல. கற்பனைக்கு எட்டிய வகையில் புகழ்ந்து மேய்கின்றனர். மேய்ந்தவர்கள் எல்லாம், தம்மை மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொள்கின்றனர். ஏகாதிபத்திய துணையுடன், புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுவிக்கும் அரசியல் விபச்சாரம் தான், இவர்களின் மார்க்சியமாக உள்ளது. இப்படி கடந்தகாலம் முதல் சோடை போனவர்கள், உப்புச் சப்பற்ற சொற் சிலம்பங்கள் மூலம், வரலாற்றை மட்டுமல்ல எதார்த்த உலகத்தை காலுக்கு கீழ் போட்டு மிதிக்கின்றனர்.


இரத்தினசபாபதியின் தனிப்பட்ட அரசியல் வாழ்வும், அவரின் தலைமைத்துவ பண்பு பற்றிய விமர்சனங்கள் கூட கடுமையானவை. இருந்தபோதும், அவர் அரசியலில் அனாதையாகிப் போனதால், அவை அவசியமற்ற ஒன்றாகவுவுள்ளது.


மாறாக நிகழ்காலத்திலும், கடந்தகால அதே அரசியலை முன்வைத்து பிழைக்க முனையும் நாய்கள் குலைப்பதால், அந்த அரசியல் போக்கு மீது விமர்சனம் அவசியமாகின்றது. பிரதானமானதும் மையமானதுமான அரசியல் விடையங்கள் மீது மட்டும் நாம் குறிப்பாக பார்ப்போம்.


1. ஈரோஸ் தங்களை மார்க்சிய இயக்கமாக காட்டிக்கொண்டனர். ஆனால் அவர்கள் தனிநபர் பயங்கரவாத இயக்கமாக, ஒரு பாசிச இயக்கமாக, மார்க்சியத்துக்கு எதிரான இயக்கமாக இருந்தனர்.


2. ரூசிய சமூக ஏகாதிபத்தியத்தை சோசலிச நாடாகக் கூறிக்கொண்டு, அவர்களின் எடுபிடி அரசியலை நடத்தினர். ரூசியாவின் ஆசிய ஏஜண்டாக செயற்பட்ட இந்தியாவின், கூலிக் குழுவாக செயற்பட்டது. அந்தளவுக்கு ஈரோஸ் அரசியல் மக்கள் விரோதத் தன்மை கொண்டதாக இருந்தது. இதற்கு சிவப்பு வண்ண மார்க்சிய முலாம் அடித்தனர். ஆசிய பிராந்தியத்தின் பேட்டை ரவுடியான இந்தியா, ஆசிய மக்களின் விடுதலைக்கு எதிரான மிகப்பெரிய ஒரு சக்தி. குறிப்பாக இந்திய மக்களுக்கு எதிரான சக்தி. இதன் பின்னால் ஒரு மார்க்சிய இயக்கம் என்று கூறிக்கொள்பவர்கள், ஒரு கூலிக் குழுவாக மட்டும் தான் இருக்க முடியும்.


3. இயக்க மோதல்களின் போது, மக்களின் ஜனநாயக போராட்டங்களில் சந்தர்ப்பவாத நிலை எடுத்தனர். எப்போதும் பிற்போக்கை ஆதரித்தனர். கொள்கை ரீதியாக இயக்க மோதலை சாதகமாக கொண்டு, அவர்கள் அழியும் போதும் தமது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் கனவுடன் சந்தர்ப்பவாதிகளாக காத்துக்கிடந்தனர்.


இந்த வகைகளே பிரதான போக்காக ஈரோசின் அரசியல் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரிந்த அனைத்துக் குழுவிலும் இவ் அரசியல் சாரம் காணப்பட்டது.


ஈரோஸ் படித்த பாசிட்டுகளைக் கொண்ட சந்தர்ப்பவாத கூலிக் குழு


ஈரோஸ் ஒரு பாசிச இயக்கமே. தனிநபர் பயங்கரவாத இயக்கமே. அவர்களின் இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தோல்வி பெற்ற போது, இலகுவாக புலிகளுடன் ஒன்று கலக்க முடிந்தது என்றால், அது ஒரு மார்க்சிய இயக்கமல்ல என்பதால் தான்.


கொழும்பில் குண்டு வைத்தது முதல் (உதாரணம் ஆனை மார்க் சோடாக் கம்பனி), தேயிலையில் சையனட் கலந்தது அல்லது கலந்துள்ளதாக மிரட்டியது வரை, ஈரோஸ்சின் தனிமனித பயங்கரவாத செயல்பாடுகள் பலவற்றை உலகம் அறிந்தது. தனிமனித படுகொலை பட்டியல் நீண்டே உண்டு. தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் நெப்போலியனை கொன்றவர்கள். மலையகத்தில் மக்கள் மத்தியில் வேலை செய்வதாக கூறிக் கொண்டு, சென்ற ஈரோஸ், அவரின் படுக்கையை பகிர்ந்தபடி, அவரை படுக்கையில் வைத்து கொன்றவர்கள். இப்படி கொலைகள் ஏராளம்.


ஒரு மார்க்சிய இயக்கம் மக்கள் மத்தியிலான அனைத்து முரண்பாட்டின் மீதும் இயங்குதலாகும். உழைப்பு சுரண்டப்பட்ட நிலையில் வாழும் மக்களை அணி திரட்டுதலாகும். அவர்களை ஆயுதபாணியாக்கி, அவர்களின் அதிகாரத்தை நிறுவுவதாகும். இதற்கான அரசியல் பணி, அதற்கான முனைப்பு ஈரோஸ் அமைப்பிலேயே காணமுடியாது.


படித்த பாசிச கும்பலின் சதிக்குழு தான் ஈரோஸ். புலிக்கு நிகராக தனிநபர் அழிப்பு, குண்டுவைப்பில் ஈடுபட்ட, இந்தியக் கைக்கூலி இயக்கம் தான் ஈரோஸ். இந்தியாவின் அரவணைப்பில் வளாந்த ஒரு கூலிக் குணடர் படைதான். இந்தியா எதை விரும்புகின்றதோ, அதை வாலாட்டி செய்யும் எல்லைக்குள் அவர்களிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதம் அவர்களிடம் பெற்றவர்கள். இவர்கள் மக்களின் எதிரியாகவே செயற்பட்டவர்கள்.


இப்படி உருவான கூலிக் கும்பல்களும், மக்கள் விரோதிகளும் மக்கள் மேல் வன்முறையை ஏவினர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் ஜனநாயக போராட்டங்களை 1984 முதல் 1986 வரை தொடர்ச்சியாக நடத்தினர். இதன் போது ஈரொஸ் இயக்கம் அதை எதிர்த்து நின்றது அல்லது அதில் கலந்து கொள்ளாது ஒதுங்கி நின்றது. சந்தர்ப்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப நடந்தனர்.


இந்தப் போராட்டங்களை முன்னின்று எடுப்பது என்பது, இவர்களின் மார்க்சியத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இப் போராட்டங்களை குழிபறிக்க இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செயல்பட்டனர். மக்களை அணிதிரட்டுவது இவர்களின் சோவியத் சார்பு அரசியலுக்கு எதிரானது. இந்த வகையில் சதிக் குழுவாகவே செயல்பட்டவர்கள்.


மறுபக்கத்தில் இயக்க மோதல்கள் உச்சத்தை எட்டிய போது, மதில் மேல் பூனையாக காத்துக்கிடந்தனர். புலிகளின் பின்னால் கூடுதலாக சாய்வு காட்டியபடி, இயக்க மோதலில் ஒன்றையொன்று வெல்ல முடியாது என்பது இவர்களின் அரசியல் கணிப்பீடு. அதாவது இயக்க மோதல் ஒன்றையொன்று அழித்து பலவீனமாகும் போது, நாம் பலமாக இருந்து அவர்கள் மீது அதிகாரத்தை நிலை நாட்டுதல் என்ற கொள்கைக்கு அமைவாக காத்துக் கிடந்தவர்கள் தான் இவர்கள்.


மண்ணில் மனிதவிரோத பாசிச வெறியாட்டங்கள் நடந்த போது, இந்தப் மார்க்சிய புளுடாப் பேர்வழிகள் மதில் மேல் பூனை போல் காத்துக் கிடந்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள். படித்த பாசிட்டுகள். தனிமனித பயங்கரவாத சதிக் கும்பல் தான் ஈரோஸ். மார்க்சியத்தை பயன்படுத்தி, அதைக் கொண்டு மனித விரோதத்தையே அரங்கேற்றிய அன்னிய கைக்கூலிகள்.


Tuesday, December 19, 2006

சந்தி சிரிக்கும் ஆயுத பேர ஊழல்கள்

சந்தி சிரிக்கும் ஆயுத பேர ஊழல்கள்

தீவிரவாதம், தேசப் பாதுகாப்பு என்ற தேசபக்தி பஜனை, இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை மூடி மறைக்கும் திரையாகப் பயன்படுகிறது.


""கார்கில் போரையொட்டி இஸ்ரேல் நாட்டிடமிருந்து பாரக் ஏவுகணை வாங்கியதில் முறைகேடுகளும், ஊழலும் நடந்திருப்பதாக''க் குற்றஞ் சுமத்தியுள்ள மையப் புலனாய்வுத் துறை, இந்த ஏவுகணை ஊழல் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்; (முன்னாள்) சமதா கட்சியின் தலைவர் ஜெயா ஜெட்லி; அக்கட்சியின் பொருளாளர் ஆர்.கே.ஜெயின்; மற்றும் முன்னாள் கப்பற்படை தளபதி சுசில்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.


ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு புதியதல்ல. தெகல்கா.காம் என்ற இணையதளப் பத்திரிக்கை, (இப்பொழுது தெகல்கா வாராந்திர பத்திரிகையாக வெளிவருகிறது) பா.ஜ.கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது இராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடுகளும், இலஞ்சஊழலும் புழுத்து நாறுவதை ஒளிப்பேழை படமாகவே எடுத்து அம்பலப்படுத்தியது.


ஜெயா ஜெட்லி, இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் அதிகாரப்பூர்வ பங்களாவிலேயே பேரம் பேசி, தெகல்கா நிருபர்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தான் சொல்வதாகக் கூறி, நிருபர்களை வழி அனுப்பி வைத்து, பொறியில் மாட்டிக் கொண்டார். தெகல்கா ஊழல் என அறியப்பட்ட இந்த இராணுவ பேர ஊழல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை மட்டுமல்ல, பா.ஜ. கட்சியையும் சந்தி சிரிக்க வைத்தது.


ஊழல் அம்பலமான பிறகு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் வேறு வழியின்றிப் பதவி விலகினார். எனினும், வழக்கம் போலவே விசாரணைக் கமிசன் நாடகம் நடத்தப்பட்டு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிரபராதி என அறிவிக்கப்பட்டபின், அவர் மீண்டும் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டார்.


தெகல்கா.காம் அம்பலப்படுத்தியிருந்த 14 பேரங்களில், தற்பொழுது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று பேரங்கள் தொடர்பாக மையப் புலனாய்வுத் துறையின் விசாரணை நடத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலொன்றுதான், பாரக் ஏவுகணை வாங்கியதில் நடந்துள்ள ஊழல்.

தெகல்கா.காம் அம்பலப்படுத்தியிருந்த இராணுவ பேர ஊழல்களை விசாரிக்க, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், வெங்கடசாமி கமிசன் நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த நீதிபதி மைய அரசு தனக்குச் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறி பதவி விலகினார். அதன் பின்னர் புக்கன் என்ற நீதிபதி விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார். இவர் அளித்த அறிக்கையை காங்கிரசு கூட்டணி ஆட்சி வெளியிடவில்லை.


எனினும், புக்கன் கமிசன் தன்னை நிரபராதியாக அறிவித்துவிட்டதென்றும்; எனவே இந்த வழக்கே மோசடியானது என்றும் பெர்னாண்டஸ் கூறி வருகிறார். மேலும், ""இந்திரா ராஜீவ் குடும்பத்து ஊழலை அம்பலப்படுத்துவதில் தான் முன்னணியில் நின்றதால், தன்னைப் பழிவாங்குவதற்காகப் போடப்பட்டுள்ள வழக்கு இது; இராணுவத் தளபதிகளின் நிர்பந்தத்தினால்தான் பாரக் ஏவுகணையை வாங்கச் சம்மதித்தேன்; பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் கூட, இந்த ஏவுகணையை வாங்கலாம் என சிபாரிசு செய்திருந்தார்'' எனத் தன்னை நியாயவானாகக் காட்டிக் கொள்ள பல சாட்சியங்களைச் சந்திக்கு இழுத்து வந்துவிட்டார்.


ஆனால், மையப் புலனாய்வுத் துறை தனது விசாரணை அறிக்கையில், ""அப்பொழுது இந்திய அரசுக்கு அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல்கலாம், கடற்படைத் தளபதியாக இருந்த சுசில்குமாருக்கு எழுதிய கடிதத்தில் (23.6.99) இசுரேலிடமிருந்து இரண்டு பாரக் ஏவுகணைகளை இறக்குமதி செய்யும் கடற்படையின் திட்டத்தை எதிர்த்திருக்கிறார். ஆனால், இந்த எதிர்ப்பை மீறித்தான் பெர்னாண்டஸ், தளபதி சுசில்குமாரின் திட்டத்துக்கு 28.6.99 அன்று ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.''


""அப்பொழுது இராணுவ அமைச்சகத்தின் செயலாளராக இருந்த டி.ஆர். பிரசாத் என்ற அதிகாரியும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை கமிட்டியின் முடிவை மறுத்துள்ளதோடு, அடுத்துவரும் அரசாங்கம் இம்முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என 30.8.99 அன்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்பொழுது காபந்து அரசாங்கத்தின் இராணுவ அமைச்சராக இருந்த பெர்னாண்டஸ் இதையும் மீறித்தான் பாரக் ஏவுகணைகளை இறக்குமதி செய்வதற்கு 2.3.2000 அன்று ஒப்புதல் கொடுத்துள்ளார்'' எனக் குறிப்பிட்டுள்ளது.


மேலும், சமதா கட்சியின் பொருளாளர் ஆர்.கே. ஜெயின் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ""பாரக் இராணுவ பேரத்தை முடிப்பதில் ஜெயா ஜெட்லியும், ஜார்ஜ் பெர்ணாண்டசும் 3% கமிசன் பெற்றதாகவும்; தனக்கு அரை சதவீதமே கமிசன் கிடைத்ததாகவும்'' கூறியுள்ளதை சி.பி.ஐ., பெர்னாண்டசுக்கு எதிரான சாட்சியமாகக் குறிப்பிடுகிறது.


சி.பி.ஐ, ஆர்.கே.ஜெயினை மிரட்டி ஒப்புதல் வாங்கியிருப்பதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாதிடலாம். ஆனால், தெகல்கா.காம் விரித்த இரகசியப் பொறியில் மாட்டிக் கொண்ட ஆர்.கே.ஜெயின், சிரித்தபடியே, பாரக் ஏவுகணை பேரத்தில் ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தாவிடமிருந்து எத்தனை கோடி ரூபாய் கமிசனாகப் பெற்றுக் கொண்டு, அப்துல் கலாமை மீறி, எப்படி காரியத்தைச் சாதித்துக் கொடுத்தோம் என்பதை விலாவாரியாக விவரிப்பதைத் திரைப்படமாகவே பார்க்கலாம்.


பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் பொழுது, கார்கில் போரைக் காட்டி அவரே அவசரமாக 35 இராணுவத் தளவாடப் பேரங்களுக்கு அனுமதி கொடுத்ததாகவும், அவற்றுள் தற்பொழுது 20 பேரங்கள் சி.பி.ஐ.யின் விசாரணையின் கீழ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் தலைமைக் கணக்கு அதிகாரியும் இப்பேரங்கள் சிலவற்றில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.


ஆக.99 டிச.99க்கு இடைபட்ட காலத்தில் 402.76 கோடி ரூபாய் பெறுமான வெடிமருந்துப் பொருட்கள் ரசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ""சரக்கைப் பெறுவதற்கு முன்பே சோதித்துப் பார்க்க வேண்டும்'' என்ற விதி இந்த இறக்குமதிக்காகவே தளர்த்தப்பட்டு, பரிசோதனையின்றி வெடி பொருட்கள் இறக்குமதியாகியுள்ளன. ""கார்கில் போர் மற்றும் விஜய் நடவடிக்கையையொட்டி இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த வெடிகுண்டுகளுள் பெரும்பாலானவை இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே காலாவதியாகிப் போனவை'' எனக் குறிப்பிட்டுள்ள தலைமை கணக்கு அதிகாரி, இந்த முறைகேட்டை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார்.


""டி72'' இரக பீரங்கிகளுக்குத் தேவைப்படும் குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஜூன்'99 அன்று இராணுவ அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 116.83 கோடி ரூபாய் பெறுமான இந்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த தலைமை கணக்கு அதிகாரி, ""இந்த வெடிகுண்டுகள் உள்நாட்டில் உள்ள இராணுவத் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்படும் பொழுது, இக்குண்டுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? டி72 இரக பீரங்கிகளை மலைப்பகுதிகளில் பயன்படுத்த முடியாது. உண்மை இவ்வாறிருக்க, மலைப் பகுதியில் நடந்த கார்கில் போரைக் காட்டி டி72 இரக பீரங்கிகளுக்குக் குண்டுகள் வாங்க வேண்டியதன் மர்மம் என்ன?'' என்ற இரு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.


41.95 கோடி ரூபாய் பெறுமான 208 தொலைநோக்கிகள் வாங்கிய பேரத்திலும், ""இத்தொலைநோக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கக் கூடிய தொழில்நுட்பம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் இருக்கும் பொழுது, தொலைநோக்கிகளை இசுரேலிடமிருந்து இறக்குமதி செய்திருப்பதைப் பற்றியும், கார்கில் போர் முடிவடைந்த பிறகு, தொலை நோக்கிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசரம் பற்றியும்'' தலைமை கணக்கு அதிகாரி ஆட்சேபணைகளை எழுப்பியிருக்கிறார்.


ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாடறிந்த ஓட்டுக்கட்சி தலைவர் என்பதால், அவர் சம்மந்தப்பட்டுள்ள பாரக் ஏவுகணை ஊழல் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்திருக்கிறது. ஆனால், தலைமை கணக்கு அதிகாரியால் சுட்டிக் காட்டப்படும் ஆயிரக்கணக்கான முறைகேடுகள் ஊழல்கள் கோப்புகளுக்குள்ளேயே சமாதியாகி விடுகின்றன.


---


1,125 கோடி ரூபாய் பெறுமான பாரக் ஏவுகணை ஊழல் வழக்காகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, இதைவிடப் பெரிய இரண்டு மோசடிகள், முறைகேடுகள் இராணுவத்தில் நடந்திருப்பதும் தற்பொழுது கசியத் தொடங்கியிருக்கிறது.


""அடுத்த 20 ஆண்டுகளில் கப்பற்படைக்கு என்னென்ன ஆயுதத் தளவாடங்கள் தேவைப்படும்? இராணுவ ரீதியாகப் பலவீனமான இருக்கும் பகுதிகள் எவை? அப்பகுதிகளை எப்படி பலப்படுத்துவது?'' என்பது போன்ற அதிஉயர் இராணுவ இரகசியங்களாகக் கருதப்படும் தகவல்கள், இராணுவ உயர் அதிகாரிகளாலேயே கடத்தப்பட்டு, ஆயுதத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும்; ஆயுத விற்பனை தரகர்களுக்கும் விற்கப்பட்டு வரும் ஒற்று வேலை, இராணுவத்தின் மேல்மட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. ""போர் அறை கசிவு வழக்கு'' எனக் கூறப்படும் இந்த உளவுவேலை பற்றிய விசாரணை மிகவும் கமுக்கமாக நடத்தப்பட்டு, கப்பற்படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தில் கூட விசாரிக்கப்படாமல் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


மே 2005இல் நடந்து முடிந்த இந்த விசாரணை வேலைநீக்கம் பற்றிய தகவல், அடுத்த இரண்டு மாதங்கள் கழித்துதான் முதலாளித்துவ பத்திரிகைகளில் வெளிவந்தது. ""இந்த உளவு வேலை யாருக்காக நடந்து வந்தது? கடத்தப்பட்ட அதிஉயர் இராணுவ இரகசியங்கள் யார் யாருக்கு விற்கப்பட்டன? போன்ற கேள்விகள் எழுப்பப்படாமலேயே, இராணுவ விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாகப் பத்திரிகைகள் குற்றம் சுமத்தின.

ரவி சங்கரன், குல்புஷன் பாராஷர், அபிஷேக் வர்மா என்ற மூன்று ஆயுதத் தரகர்கள் இந்த உளவு வேலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என ""அவுட் லுக்'' ஆங்கில வார இதழ் கடந்த ஆண்டே அம்பலப்படுத்தி எழுதியது.


ரவி சங்கரனும், குல்புஷன் பாராஷரும் தங்களின் கப்பற்படை பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆயுதத் தரகர்களாக மாறியவர்கள். இதைவிட ஆர்வமூட்டும் அம்சம் என்னவென்றால், ஆயுதத் தரகன் ரவிசங்கரன், தற்பொழுது கப்பற்படைத் தளபதியாக இருக்கும் அருண் பிரகாஷின் மனைவியின் சகோதரி மகன். காங்கிரசு கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினரான வீணா வர்மாவின் மகன்தான் அபிஷேக் வர்மா. அருண் பிரகாஷ் கப்பற்படைத் தளபதியாகப் பதவியேற்றவுடன், அவரின் வீட்டில் நடத்தப்பட்ட விருந்துக்கு, குல்புஷன் பாராஷருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரவிசங்கரனும், குல்புஷன் பாராஷரும் இணைந்து பல நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர். இதுபோல, அபிஷேக் வர்மா வேலை செய்துவரும் ""அட்லஸ்'' குழுமத்தில், குல்பூஷன் பாராஷர் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறான்.


முதலாளித்துவப் பத்திரிகைகள் அம்பலப்படுத்திய இந்தத் தொடர்புகள் பற்றி இராணுவம் வாய் திறக்க மறுத்து ஒதுக்கித் தள்ளியது. அதேசமயம், வேலை நீக்கம் செய்யப்பட்ட காஷ்யாப் குமார் என்ற கப்பற்படை அதிகாரி, தனது வேலை நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ""இந்த உளவுவேலையில் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டினருக்கும் தொடர்புண்டு'' என இராணுவம் ஒத்துக் கொண்டது. ஆனாலும், இராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ""கடத்தப்பட்ட தகவல்கள் வெறும் வர்த்தக ரீதியானவைதான்; இந்தக் கடத்தலை அரசுக்கு எதிரான சதியாகப் பார்க்க முடியாது'' எனக் கூறிப் பூசி மெழுகினார்.


மே 2005இல் அம்பலமான இந்த உளவு வேலை பற்றிய விசாரணை, ஒன்பது மாதங்கள் கழித்து, பிப்.2006இல் தான் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்விசாரணையை மந்தமாகவே நடத்தி வரும் சி.பி.ஐ., ஆயுதத் தரகர்கள் ரவிசங்கரன், குல்புஷன் பாராஷர், அபிஷேக் வர்மா மற்றும் விமானப் படையைச் சேர்ந்த கமாண்டர் எஸ்.எல். சுர்வே, கமாண்டர் விஜிந்தர் ரானா, வி.கே.ஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் லெப்டிணென்ட் கர்னல் எஸ்.எஸ்.சௌத்ரி; மேஜர் தேவேந்தர் வர்மா, மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளான ஆர்.எஸ்.துதானி, பி.எஸ்.மெஹ்ரா, ஹெச்.எல்.பாட்டியா ஆகியோர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.


குற்றவாளிகளைத் தப்பவிடவும், ஆதாரங்களை அழித்துவிடும் நோக்கத்திற்காகவும்தான் வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்பட்டதாக முதலாளித்துவப் பத்திரிகைகளே இராணுவத்தின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளன. குறிப்பாக, கப்பற்படையின் தளபதி அருண் பிரகாஷின் உறவினரான ரவிசங்கரன், சி.பி.ஐ. கைக்கு வழக்கு போகும் முன்பே ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டான். ""இண்டர்போல்'' போலீசுக்குத் தெரிவித்தப் பிறகும் ரவிசங்கரனைப் பிடிக்க முடியவில்லையாம்! குல்புஷன் பாராஷர் மீது சந்தேகப்படுவது இராணுவ அமைச்சரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, பாராஷர் இலண்டனுக்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டான். பாராஷரின் வெளிநாட்டுப் பயணம் சுமுகமாக முடிந்த பிறகுதான், சி.பி.ஐ. அவனைக் கைது செய்தது. பாராஷரின் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாததுதான் இத்தாமதத்திற்குக் காரணம் என மழுப்புகிறது சி.பி.ஐ. வழக்கு பதிவாகி ஒன்பது மாதம் கழித்த பிறகுதான் அபிஷேக் வர்மா கைது செய்யப்பட்டான்.


மது, மாது, விலை உயர்ந்த, நவீனமான பரிசுப் பொருட்கள் இந்த இலஞ்சத்தின் மூலம்தான் பல இராணுவ உயர் அதிகாரிகளை ஆயுதத் தரகர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர்; கிட்டதட்ட 7,000 கோப்புகள் இரகசியமாகக் கடத்தப்பட்டுள்ளன. எனினும், இராணுவ உயர் அதிகாரிகள் தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும்; தங்களின் விசாரணை பற்றிய தகவல் ஆயுதத் தரகர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாகவும் சி.பி.ஐ. பகிரங்கமாகவே குற்றஞ் சுமத்துகிறது.


இராணுவத்தின் உயர் மட்டத்தில் நடந்துவரும் இந்த உளவு வேலை, தேசத்தின் இறையாண்மைக்கும், தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என சி.பி.ஐ கூறுகிறது. ""தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகள்'' மீது தடா, பொடா போன்ற பாசிசச் சட்டங்கள் பாய்கின்றன. ஆனால், அதே குற்றத்தைச் செய்துள்ள இராணுவ அதிகாரிகள், ஆயுதத் தரகர்கள் மீதோ அரசு நிர்வாக இரகசியச் சட்டம் (Oஞூஞூடிஞிடிச்டூ

குஞுஞிணூஞுt அஞிt) என்ற உளுத்துப் போன சட்டம்தான் பாய்ந்திருக்கிறது.


---


பிரான்சு நாட்டைச் சேர்ந்த தாலெஸ் என்ற ஆயுத விற்பனை நிறுவனத்திடமிருந்து ஏழு ""ஸ்கார்பீன்'' இரக நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் ஒப்பந்தமொன்று சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை வங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பொழுதே மைய அரசின் கண்காணிப்பு கமிசனின் தலைவராக இருந்த என்.விட்டல், 7.5.2002 அன்று பாதுகாப்புத்துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், இந்த பேரத்தில் இடைத் தரகர்கள் இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியதோடு, வெளிப்படையான டெண்டர் விடப்படவேண்டும் எனக் கோரியிருக்கிறார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த நீர்மூழ்கிக் கப்பலின் விலை அதிகம் என 5.1.05 அன்று இராணுவ அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பேரம், காங்கிரசு கூட்டணி ஆட்சியில் பல்வேறு தடங்கல்களையும் தாண்டி கையெழுத்தாகியுள்ளது.


""18,000 கோடி ரூபாய் பெறுமான இந்த பேரத்தில் 4 சதவீத கமிசன் கைமாறியிருக்கிறது; கப்பற்படை இரகசியங்களைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அபிஷேக் வர்மாவிற்கும், தாலெஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ழான்பால் பெர்ரியருக்கும் தொடர்பிருக்கிறது'' என அவுட் லுக் வார இதழ் பல கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதற்கு ஆதாரமாக, கப்பற்படையைச் சேர்ந்த எட்டு உயர் அதிகாரிகளுக்கும் அபிஷேக் வர்மாவிற்கும் இடையேயான இரகசிய தொடர்பையும்; அபிஷேக் வர்மாவிற்கும், தாலெஸ் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் இடையே இப்பேரம் தொடர்பாக நடந்துள்ள மின்னணு கடிதப் போக்குவரத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது.


இந்த பேரத்தின் பின்னுள்ள ஊழலை அம்பலப்படுத்தி வரும் ""அவுட்லுக்'' இதழுக்கு எதிராக, அபிஷேக் வர்மாவும், தாலெஸின் தலைமை நிர்வாக அதிகாரி ழான் பால் பெர்ரியரும் இணைந்து வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதி மன்றம், ""இந்தக் கட்டுரைகள் நம்பத் தகுந்ததாக உள்ளன'' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், கப்பற்படையோ, அவுட்லுக் வெளியிட்டுள்ள ஆதாரக் கடிதங்கள் அனைத்தும் மோசடியாக ஜோடிக்கப்பட்டவை எனக் கூறி வருகிறது.


அதேசமயம், வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்ட ஆயுதத் தரகன் ரவிசங்கரன், ""இக்கடிதங்கள் உண்மையானவைதான்; ஆனால், இக்கடிதத்தில் குறிப்பிடப்படும் மற்றொரு ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தாவின் பெயரை மட்டும் அவுட்லுக் இதழ் மறைத்து விட்டிருப்பதாக''க் கூறியிருக்கிறான். மேலும், ""தாலெஸின் புதிய ஆயுதத் தரகன் அபிஷேக் வர்மாவிற்கும்; பழைய ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தாவிற்கும் இடையே நடக்கும் வர்த்தகப் போட்டியினாலும்; ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் நிறுவனமான ஹெச்.டி.டபிள்யூவிற்கும், தாலெஸிக்கும் இடையே நடக்கும் போட்டியினாலும் தான் ""ஸ்கார்பீன்'' நீர்மூழ்கி கப்பல் பேரம் அம்பலப்பட்டு விட்டதாக'', இதன் பின்னுள்ள இரகசியத்தையும் போட்டு உடைத்துள்ளான். கப்பற்படையின் போஃபர்ஸ் என அழைக்கப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பேரம் தொடர்பான உண்மைகள் ஆட்சி மாறினால்தான் முழுதாகத் தெரியவரும் போலும்!


----


இராணுவத்தில் நடக்கும் இலஞ்ச ஊழல்கள், அதிகார முறைகேடுகள்; அதன் மூலம் இராணுவ அதிகாரிகள் அடிக்கும் பல கோடி ரூபாய் கமிசனோடு ஒப்பிடும் பொழுது, அரசியல்வாதிகள் பெறும் கமிசன் சுண்டைக்காய்தான். போஃபர்ஸ் ஊழல், கார்கில் ஊழல் போன்ற மறைக்கவே முடியாத ஒன்றிரண்டு ஊழல்கள்தான் அம்பலமாகிறதே தவிர, மற்றவை ஊசி முனை அளவு கூட வெளியே தெரிவதில்லை. 1989க்குப் பிறகு இராணுவத்தில் நடந்த ஆயுத பேரங்களைப் பற்றிய தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை வெளியிடப்படாமல் அரசாங்கம் முடக்கி வைத்திருப்பதில் இருந்தே இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

அம்பலமாகும் பெரிய ஊழல்கள்கூட இராணுவத்தில் ஏற்பட்டுள்ள கறை, அரசியல்வாதிகளின் குறுக்கீடு எனப் பூசி மெழுகப்படுகிறதே தவிர, மற்ற துறைகளைவிட, ஊழல் புழுத்து நாறும்துறை இராணுவம்தான் என அம்பலப்படுத்தப்படுவதில்லை.


இராணுவத்தில் நடக்கும் ஒவ்வொரு ஆயுத பேரத்திலும் இடைத் தரகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் கமிசன் கிடைக்கிறது. அதனால்தான், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுள் பலரும் ஆயுதத் தரகு நிறுவனங்களுக்கு முதலாளி ஆகிவிடுகிறார்கள். பாரக் ஏவுகணை பேரத்தில் ஆர்.கே.ஜெயினுக்கு கமிசன் கொடுத்த ஆயுதத் தரகன் சுரேஷ் நந்தா, ஓய்வுபெற்ற கப்பற் படைத் தளபதி நந்தாவின் மகன்.


பல ஏழை நாடுகளில், இலஞ்ச ஊழலில் திளைத்துப் போன இராணுவத் தளபதிகளைத்தான், ஏகாதிபத்தியங்கள் சர்வாதிகாரிகளாகத் திணிக்கின்றன. இந்தோனேஷியாவின் சுகர்டோ, சிலியின் பினோசெட், பெருவின் பிஜுமோரி, பனாமாவின் நோரிகோ, பாக்.இன் முஷாரப் எனப் பல நாடுகளை இதற்கு உதாரணம் காட்டலாம். இந்தியாவிலோ இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின் காங்கிரசு, பா.ஜ.க. மூலம் அரசியலில் ஒட்டிக் கொள்கிறார்கள். மாநில கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.


தீவிரவாதம், பாகிஸ்தான் என்ற பூச்சாண்டிகளைக் காட்டி, இராணுவத்தில் நடக்கும் எதையும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்ற கருத்து திட்டமிட்டே பரப்பப்படுகிறது. மன்மோகன் சிங்கை சமீபத்தில் சந்தித்த முப்படைத் தளபதிகள், ஊழல் குற்றச்சாட்டுக்களால் இராணுவத்தை நவீனப்படுத்துவது தடைபட்டுப் போவதாகப் புலம்பியுள்ளனர்.


இராணுவம் நடத்தும் படுகொலைகளில் இருந்து சிப்பாய்களைப் பாதுகாக்க ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் இருப்பது போல, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முற்றிலுமாக இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்க ஒரு சிறப்புச் சட்டத்தைக் கேட்பார்கள் போலும். தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டையே உறிஞ்சித் தின்னும் மிகப் பெரிய ஒட்டுண்ணியாக இராணுவம் வளர்ந்திருப்பதுதான், நாட்டையும் மக்களையும் அச்சுறுத்தும் மிகப் பெரிய அபாயம்!

செல்வம்



Sunday, December 17, 2006

பாசிசம்

இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்."

பி.இரயாகரன்

மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசீச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர்.

இலங்கையில் பாசீசப் புலிகள், தேசிய வீரர்களாக வீரநடை போடும் கதையும் இப்படித்தான். ஈவிரக்கமற்ற, கோழைத்தனமான படுகொலைகள் சித்திரவதைகள் மூலம், பல ஆயிரம் சமூகப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர், ஒழிக்கின்றனர். நாள் தோறும் படுகொலைகள் சித்திரவதைகள் மூலமே, தமது மக்கள் விரோத பாசீச ஆட்சியை தக்க வைக்கின்றனர். மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை உள்ளடக்கி எழுந்த தேசியத்தை, துப்பாக்கி முனையில் அடக்கியொடுக்குகின்றனர். இதன் மூலம் தேசிய அடிப்படைகளை திரித்து, அதில் தான் தம்மை போராடும் சக்தியாக நிலைநிறுத்த முனைகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோரிக்கையை முன்வைப்பதன் மூலம், இந்த போராட்டத்தில் ஊன்றி நிற்பதாக காட்டுகின்றனர். இதற்கு அறிவியல் சூனியத்தை சமூகமயமாக்கி, அதில் தம்மை தாம் நிலை நாட்டுகின்றனர். இதற்காக மக்களின் இரத்தத்தையும், அவர்களின் உடல் உழைப்பையும் உறுஞ்சி வாழும் புலிகள், அர்த்தமற்ற தியாகங்களை கேடுகெட்ட வகையில் தமது கோழைத்தனமான அரசியலுக்காக பலியிடுகின்றனர்.

மாபியா குழுக்களுக்குரிய லும்பன் கொள்கையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறையுடன் இணைந்த புலிகள், பாசீசத்தை தமது அரசியலாக்கி அதையே ஆணையாக கொள்கின்றனர். இதற்காக எமது மண்ணில் பல ஆயிரம் உயிர்களை ஈவிரக்கமற்ற வழிகளில் கொன்று, அந்த இரத்ததை தமது கால் பாதங்களில் தெளித்தே தம்மைத் தாம் புனிதப்படுத்துகின்றனர். இந்த புனிதமான பாசீச இருப்பை மூடிமறைக்க, பினாமிய பிழைப்பு வாதங்கள் வக்கிரப்படுகின்றன. மாற்றுக் கருத்தை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கி வைத்த பின் தான், தேசிய பாசிட்டுகளால் அனைத்தையும் வக்கிரமாக நியாயப்படுத்த முடிகின்றது. இப்படி நியாயப்படுத்திய புனிதத்தைப் பற்றி, கோழைகள் தமது பாசீச வழிகளில் வீர வசனங்களை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மாற்றுக் கருத்துகள் மீதான தனிநபர் அரசியல் படுகொலைகள் மட்டும் தான், புலிகளை பாதுகாப்பதற்கான ஒரேயொரு அரசியல் மார்க்கமாகிவிட்டது. தமிழ்மக்களின் போராட்டத்தின் ஊடான அரசியல் தலைமையை நிறுவுவதற்கு பதில், படுகொலை அரசியல் வழியில் மட்டுமே தமது சர்வாதிகார மக்கள் விரோத தலைமையை தக்கவைக்கின்றது. இந்த பொதுத் தன்மையில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்து என்பது, தப்பித்துச் செல்லும் வழியில் தன்னை சந்தர்ப்பவாதமாக மாற்றி புரட்சிகர அரசியலை சிதைத்துள்ளது. புலிகளை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளமுடியாத, பூர்சுவா ஊசலாட்டத்தை அடிப்படையாக கொண்ட முதுகெலும்பற்ற போக்கு, மாற்றுக் கருத்தை மறுதளத்தில் வக்கிரமாகச் சிதைத்துள்ளது. இதைவிட துரோக குழுக்களாக, இனவாத அரசினதும் ஏகாதிபத்தியத்தினதும் நேரடி கைக்கூலிகளாக புலிக்கு வெளியில் ஸ்தாபன ரீதியாக ஒரு பகுதி அணிதிரண்டுள்ளது. இதற்கு புலிகளால் பாதிக்கப்பட்டவர்களினதும், போராட்டத்தில் இருந்து விலகி வாழும் பூர்சுவா வர்க்கத்தினதும் பலமான மக்கள் அடித்தளமும் உண்டு.

நேரடியாக புலிகள் மற்றும் துரோகக் குழு அல்லாத பிரிவில் ஏற்பட்ட அரசியல் சிதைவால் ஏற்பட்ட சேதம், புலிகளின் படுகொலை அழிப்பை போன்ற மற்றொரு கோர வடிவமே. உதாரணமாக கம்யூனிசத்தை வெளியில் இருந்து அழிப்பது ஒருவகை. உள்ளிருந்து கோட்பாட்டு ரீதியாக அழிப்பது இன்னொரு வகை. இவை இரண்டும் சாரம்சத்தில் ஒரே தன்மை கொண்டவை. இந்த நிலையில் குறைந்த பட்சம் சமூகத்தை பகுத்தாயும் முறை, சமுகத்தை நேர்மையாக நேசிப்பது, அவர்களின் பல்வேறு பிரச்சனைகளில் தலையிடுவது, அதைப்பற்றி சிந்திக்க தூண்டுவது என்பதே எனது நோக்கம்.

எனது நோக்கம் அரசியலற்ற பெரும் தேசிய ஒடுக்குமுறைக்கு கோட்பாட்டில் சார்பு நிலையை கொண்டோருக்கும் சரி, இலங்கை அரசுடன் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் இணைந்து செயற்படுவோருக்கும் சரி, திட்டவட்டமாக எதிரானது. அவர்கள் யாரும் இதில் இருந்து அரசியலை வெட்டி கழித்தும், திரித்தும், பயன்படுத்துவதை, எந்தவிதத்திலும் எனது அரசியல் திட்டவட்டமாக அனுமதிக்கவில்லை.

தமிழ் பேசும் மக்கள் சிங்கள பெரும் தேசிய இன பாசீச ஒடுக்குமுறையை, அதன் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக சந்திக்கின்றார்கள். இதை எதிர்த்து போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதை யாரும் கொச்சைப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியாது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை ஆதரிக்க வேண்டியது, பெரும்பான்மை சிங்கள மக்களின் தேசியக் கடமை. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டியது தேசியக் கடமை. இப்படி எமது நாட்டில் பல்வேறு ஜனநாயகக் கடமைகள் மறுக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயகத்தை உயர்த்தி பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது அனைத்துத்தரப்பினதும் அவசரக் கடமையாக
(கட்டுரை முழுவதையும் படிப்பதற்கு இங்கே செல்லவும் )