தமிழ் அரங்கம்

Saturday, September 3, 2005

அமெரிக்காவைத் தாக்கிய ...

அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளி இயற்கையானதா!

இக் கேள்வி பலரை ஆச்சரியப்படவைக்கலாம்;. ஆனால் இது இயற்கையாக நடந்தாத அல்லது சோக்கையாக மனித செயல்பட்டால் நடந்தாத என்பதை நாம் எழுப்பியாக வேண்டும். எனென்றால் இந்த சமூக அமைப்பு நேர்மையானவை அல்ல. மனிதனை புடுங்கித் தின்னும் வக்கிரமான அமைப்பு. இயற்கையை குதறும் அமைப்பு.

பூமி சூடாதல் தொடர்பானதும், மாசு அடைவது தொடாபான பல அறிவியல் பூர்வமான விளக்கத்தை எப்போதும் கடித்துக் குதறும் மூலதனம் நிராகரித்;தே வந்துள்ளது. இதில் அமெரிக்கா மூலதனம் அதற்கு எதிராகவே உலகெங்கும் திட்மிட்டு இயங்குகின்றது. இயற்கையின் மாற்றங்கள் தான், இயற்கையின் விளைவாக மாறுகின்றது. இதில் இயற்கையாக எற்படுவது ஒருபுறம். செயற்கையாக எற்படுவது மறுபுறம்.

நாம் இயற்கையை இயற்கையாக பாதுகாக்க மறுத்தல் என்பது, மனிதனை மனிதனாக வாழ முடியாத பூமியாக உருவாக்கிவிடும். சூறாவளி என்பது, மனிதன் மிக மோசமான இயற்கை விரோத செயல்பாட்டினால் கூட உருவாகின்றது. சுற்றுச்சூழல் இயற்கையில் மாறும் போது, அதன் விளைவு மிகக் கடுமையானவை.

1980இல் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரும், அமெரிக்க கருவூலத் துறையின் தலைவருமான லாரன்ஸ் சம்மர்ஸ், 1992 உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தவர். இவர் 1991 இல் ஒரு கடிதத்தை உலகவங்கியின் ஊழியர்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதினார். அதில் அவர் ''குறைந்த வளர்ச்சி உடைய நாடுகளுக்கு அசுத்தமான தொழிற்சாலைகளை மாற்றுவதை உலக வங்கி ஏன் ஊக்குவிக்ககூடாது'' என்று கேள்வியெழுப்பி வழிகாட்டினார். அக்கடிதத்திலேயே அவர்

'' 1. மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது. மாசுகேட்டினால் நோய் மற்றும் மரணம் எற்படின் குறைந்த செலவே எற்படும்.

2. மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே எற்பட்டுள்ளது. இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறப்பானது. என்னெனின் அங்கு வீசும் காற்று லாஸ் ஏஞ்சல்ஸ் விட உயர்தரமானது.

3. ஏழைகள் எழைகள் தான். ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியமில்லை. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரண வீதம் 200 சதவீதமாக இருக்கும் போது, மார்பு புற்றுநோய்க்கு இரசாயண நஞ்சு காரணம் என்ற கவலைப்படமாட்டர்கள்'' என்றார்.

உலக வங்கியின் கொள்கை இப்படித்தான் உலக மக்களுக்கு எதிராக வகுக்கப்படுகின்றது. இவற்றின் விளைவுகளின் ஒன்றுதான் இன்றைய சூறாவளி. அறிவியல் உலகம் தெளிவாக உலகக்கு இதன் விளைவை அறிவித்து வந்துள்ளது. அதை மூலதனமும், அரசியல் வாதிகளும் எப்போதும் மறுத்து வந்துள்ளனர். அதைக் காலில் போட்டு மித்த வருகின்றனர். ஏன் மிதிக்கின்றனர். இவர்களின் ஆன்மாவே இதில் தான் உயிருடன் உள்ளது. ஏப்படி என்கின்றிர்களா!

1.உலகை மாசுபடுத்தும் தொழிச்சாலையில் 29 சதவீதம் இராணுவ உற்பத்தியுடன் தொடர்புடையவையாக உள்ளது. மக்களின் வாழ்வுடன் தொடர்பற்றவை.

2.வாகனங்கள் வைத்திருப்பதினால் எற்படும் மாசு ஏகாதிபத்தியங்களையே சாரும்; உலகில் மொத்த நெடுஞ்சாலை வாகனங்களில் 78 சதவீதம் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து காணப்டுகின்றது.

3.ஏகாதிபத்தியங்களில் ஒரு லட்சம் ஆபாத்தான இரசயணக் பொருள் சார்ந்த உற்பத்தி வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றது.

4.1984 இல் பசுமை இல்ல விளைவுகளை 49 சதவீகிதம் சக்தி தயாரிப்பிலும், 24 சதவீகிதம் தொழில் துறையில் இருந்தும், 14 சதவீகிதம் காடு அழிப்பில் இருந்தும் 13 சதவீகிதம் வேளான்மையில் இருந்தும் வருகின்றது.

5.1994 இல் வெளியான அறிக்கை ஒன்றின் படி தொடர்ந்த 20, 30 வருடத்தில் 2.5 லட்சம் உயிரணங்கள் மண்ணில் இருந்த காணமல் போய்விடும் நிலைமையை அறிவித்திருந்தது. 350 பறவையினங்கள், 200 வகையான பாலுட்டிகள், 25 ஆயிரம் தவரங்கள் உடனடியாக அழிந்து போகும் நிலையில் இருந்தது.

6.1990 இல் ஐ.நா சுற்றுச்சூழல் கூட்ட தொடரில் 30 முதல் 40 கோடி தொன் கழிவு உலகில் உருவகுவதாக அறிவித்தது. இதில் 98 சதவீதம் 24 முன்னேறிய நாடுகளினால் உருவாக்கப்படுகின்றது என அறிவித்தது. 7.1990 ஆண்டுகளில் இருந்த காடுகளின் அளவில் இருந்து வருடாந்தம் 2.4 சதவீதம் அளவுக்கு காடுகள் அழிகப்படுகின்றது. 10 முதல் 20 வருடத்தில் 40 சதவீதமான காடுகளை மூலதனம் அழித்துள்ளது.

8.1996 இல் 2270 கோடி தொன் காபனீர் ஒட்சையிட்டை உலகளாவில் வெளியிட்டப்பட்டது.

வெளியிட்ட பிரதேசம் சதவீகிதத்தில்

செல்வந்த நாடுகள் - 53 சதவீகிதம் (அமெரிக்கா மட்டும் 22.5 சதவீகிதம்)
ருசியா - 10.3 சதவீகிதம்
சீனா - 13.8 சதவீகிதம்
ஐரோப்பா (செல்வந்த நாடுகள் அல்லாதவை) - 1.4 சதவீகிதம்
ஆசியா (சீனா தவிர்த்து) - 8.7 சதவீகிதம்
தென் அமெரிக்கா - 3.7 சதவீகிதம்
ஆபிரிக்கா - 3 சதவீகிதம்
மத்திய கிழக்கு - 3.9 சதவீகிதம்
மற்றவை - 1.8 சதவீகிதம்


9.2025 க்கும் 2050 க்கும் இடைப்பட்ட காலத்தில் 1994 இல் இருந்த கரியமில வாயுவின் அளவைப் போல் இரண்டு மடங்கு வளிமண்டலத்தில் இருக்கும். இதனால் பூமியின் வெப்ப நிலை 1.5 முதல் 4.5 பகை அதிகாரிக்கும். இதனால் பல மில்லியன் வருடமாக நிலையாக இருந்த பனி மலைகள், பனிப் பறைகள் உருகத் தொடங்கிவிடும். 2050களில் கடல் மட்டம் 30 முதல் 50 சென்டிமீற்றர் உயரும். 2100 இல் இது ஒரு மீற்றர் வரை உயரும். பல நிலத் தொடர்கள் கடலில் மூழ்கும். இவை அனைத்தும் இன்றைய நுகாவு கண்ணோட்ம் சார்ந்த மூலதனத்தின் வெறிபிடித்த சூறையாடலினால் எற்படுகின்றது.

10.1979 க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒசோன் படத்தில் சராசரி அளவு 5 சதவீத்தால் குறைந்துள்ளது. ஆனால் புதிதாக 1980 இல் அண்டாடிக்காவுக்கு மேலே ஒரு துவாரம் கண்டு அறியப்பட்டது. இது போன்று 1994 இல் ஆர்டிக்கிற்கு மேலே ஒரு துவாரம் எற்படும் சத்தியக் கூறு காணப்பட்டது. 1960க்கும் 1985 க்கும் இடையில் சல்பர் டையாக்ஸைடு வாயுவின் வெளியேற்றம் வருடத்துக்கு 70 லட்சம் தொன்னில்; இருந்து 15.5 கோடி தொன்னாக அதிகாரித்துள்ளது. இது அமில மழையை பூமியின் மேல் பொழியவைத்துள்ளது

சுற்றுச்சூழலில் மாற்றம் பற்றி பல தரவகள் மனித இனத்துக்கு எதிராக குவிந்த கிடக்கின்றது. இதன் விளைவு இயற்கையானது என்று மூலதனம் மக்களை தமது ஊடாகங்கள் மூலம் எமாற்றலாம்

. சிந்திக்கும்; சமூக அறிவுள்ள மனிதனை அப்படி ஏமற்றமடியாது. அவன் சமூகத்தின் நலனுக்காக, இயற்கையின் பாதுகாப்பக்காக தொடாந்து போராடுவான்.


இயற்கை பற்றி விரிவான தகவல்களுக்கு, உலகமயமாதல் பற்றி வெளிவரவுள்ள எனது தொடர் நூல்களில் விரிவாக அறியமுடியும்.

4 comments:

NambikkaiRAMA said...

நிறைய புள்ளி விபரங்களை தந்துள்ளீர்கள். நன்றி.

விதைத்தவன் அறுக்கிறான் என்பதுபோல் இப்போது இயற்கையின் சீரழிவில் நாம். என்னதான் செய்ய. இனியாவது இயற்கையை பேண வேண்டும்.

Vaa.Manikandan said...

என்னங்க பண்ணுறது?இனி தொலைஞ்சமா?

Anonymous said...

நல்ல வேளை. நேசகுமார் கூட்டணிகள் இதை இன்னும் படிவிக்கவில்லை. படித்தால் இவை அனைத்திற்கும் இஸ்லாமும், முஸ்லிம்களும்தான் காரணம் என்று கதைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

Sri Rangan said...

நன்றி,ரயா பதிவுக்கு.சிறப்பான ஆய்வு.அமெரிக்கா பற்றிய பிரமைகளைத் தகர்க்கும் உங்கள் படைப்புகள் நிச்சியம் பலராலும் உள்வாங்கப்படும்.