தமிழ் அரங்கம்

Friday, October 5, 2007

தொலைபேசி மூலம் பாலியல் ரீதியாக பெண்களை இழிவுபடுத்தல்

பி.இரயாகரன்
05.10.2007

வை தனிப்பட்ட பெண்களை அணுகுவதாக இருந்தபோதும், இது ஆணாதிக்க சமூக நோய். சமூகம் என்ற அறநெறிகளை இழந்து வரும் சமூகத்தில், இவை போன்றன தனிப்பட்ட சம்பவங்களாக மிக வக்கிரமாக வெடித்துக் கிளம்புகின்றது. தமிழ் சினிமா இப்படி வக்கிரமாக அணுகிக் கூத்தடிப்பதையே, தமிழ் காதலாக, உயர்வான கதாநாயகத் தன்மை கொண்டதாக காட்டுகின்றது. இதை சமூகமே ஜிரணிக்கும் பண்பாடாகி வருகின்றது.

இதையே அரசியல் தளத்தில் சிலர் செய்கின்றனர். தமிழ்மண இணையத்தில் செயல்படும் தமிழச்சிக்கு, பாலியல் ரீதியான மிரட்டல் விடப்பட்டுள்ளது. 'தமிழச்சியின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிடுவோம் - இணையப் பொறுக்கிகள் பகீரங்க மிரட்டல்! -தமிழச்சி" அவரின் கருத்துக்களை எதிர் கொள்ளமுடியாது பாலியல் ரீதியாக மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணின் எழுத்துரிமையை நிறுத்தமுனைகின்றனர். அவள் ஒரு பெண்ணாக இருப்பதால், பெண்ணை பாலியல் ஊடாக மிரட்டும் இழிவான ஆணாதிக்க வக்கிரங்களே பொறுக்கி அரசியலாக அரங்கேறுகின்றது.

கருத்தியல் ரீதியாக கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான, இழிவான செயல்கள், ஆணாதிக்கம் ஊடாக வெளிப்படுகின்றது. இது இந்த வர்க்க சமூக அமைப்பின், தரம் கெட்ட நடத்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பிரான்சில் அதாவது பாரிசைச் சுற்றி இந்தச் சம்பவம் நடக்கின்றது. தமிழச்சி பாரிசில் வாழ்ந்த போதும், நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இணையம் மூலம் தெரிந்து கொண்ட ஒரு நிலையில், கருத்து மற்றும் நடைமுறைகள் தொடர்பாக எமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் உண்டு. ஆனால் சமூகத்தின் ஒரு இழிவான பக்கத்தை சாட முனைகின்ற அந்த துணிச்சலை, அந்த நேர்மையை நாம் மதிக்கின்றோம்;. இதற்கு எதிரான எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்க முடியாது.

எந்தக் கருத்தின் மீது, எந்தத் தரப்பால் இவை விடப்படுகின்றது என்பதை தமிழச்சி வெளியிடவில்லை. அதாவது இதன் பின்னணியை பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் அவை மேலும் இந்தச் சம்பவத்தின் பின்னணியை கூர்மையாக்க கூடியவையாக இருக்கும்.

பாரிசில் நாம் அறிய தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் பெண் குழந்தைகளை குறிவைத்து, தொலைபேசி மூலம் பாலியல் வக்கிரத்தைக் கொட்டுகின்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றது. இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான். தம்மைத் தாம் தமிழர் என்றும், தமிழ்ப்; பண்பாட்டின் வாரிசுகள் என்றும் கூறிக்கொள்பவர்கள் தான். இதனால் தமிழ் ஊடகங்கள் இதை மூடிமறைக்கின்றன, அதை பூசி மொழுகுகின்றன. தந்தை அல்லது தாயை அல்லது அண்ணையைக் கொன்று விடுவோம் என்று கூறி, மிக இளம் வயது பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக அணுகுகின்ற தமிழ் வீரர்களைக் கொண்டதே எமது தமிழ் சமூகம். இப்படி தமது பாலியல் வக்கிரங்கள் அவர்களால் அன்றாடம் கொட்டித் தீர்க்கப்படுகின்றது.

தமிழச்சிக்கு நடந்தது இதில் இருந்து வேறுபட்டது. அரசியல் ரீதியாக நடக்கின்றது. ஆளும் வர்க்க, கருத்து தளத்தின் இயலாமையில் இருந்து வக்கிரமாகி கொட்டுகின்றது. அவர் இதன் பின்னணி பற்றி எதையும் தெரிவிக்கவில்லை என்ற போதும், இந்த வக்கிரம் என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தின் கடைகெட்டுப்போன போன உதிரி பொறுக்கிகளின் மானம் கெட்ட ஒழுக்கமாகின்றது. இது போன்ற வம்புகளால் தான், முன்பு இதே பாரிசில் நிதர்சினி படுகொலையும், கற்பழிப்பும்; நடந்தது.

தான் ஒரு ஆண் என்ற அகங்காரத்துடன், தன்னால் எந்தப் பெண்ணையம் எப்படியும் இழிவுபடுத்த முடியும் என்ற ஆணாதிக்க திமிர். இந்த இழிவை வாழ்வாக கொண்டவர்களின்;, இழிவான பண்பாடற்ற காடடு;மிராண்டி நடத்தைகள் இவை. இந்த அற்பர்கள் தம்மை இந்த சமூகத்தின் முன் மூடிமறைத்துக் கொண்டு, இயங்குகின்ற கோழைகள். ஆனால் இவர்கள் தான் புரையோடிப்போன இந்த அமைப்பின், முதுகெலும்புகளாக, வாழ்வில் நடித்துக்கொண்டும் இருப்பவர்கள்.

தமிழச்சிக்கு எதிராக மூன்று பிரதானமான போக்கில் இருந்து, இந்த இழிவாடல் மிரட்டலும்; விடப்பட்டு இருக்கும்.

1. பெரியார் இந்து மதம் தொடர்பான கருத்துக்களையும், மற்றைய அவரின் கருத்துகளையும் தொடர்ச்சியாக வெளியிடும் தமிழச்சி செயலை சகிக்க முடியாதவர்கள் செயலாக அமையலாம்.
2. அண்மையில் பாரிஸ்சில் நடைபெற்ற தேர் தொடர்பாக வெளியிட்ட துண்டுப்பிரசுரம், அது பற்றி பிரச்சாரத்தையும் கண்டு குலைக்கும் கூட்டம்
3. புலிகளுக்கு எதிராக, அவர் வெளியிட்ட சில கருத்துகள்

இந்த மிரட்டல் பின்னணியில் இதில் ஒன்று முதன்மை காரணமாக இருக்கும். ஆனால் இந்த மூன்று போக்கும், இந்த சமூக அமைப்பில் இழிந்து சீரழிந்து கிடக்கின்றது. அவர்களின் எதிர் ஆயுதம் என்பது அறிவு அல்ல. மாறாக அந்த அமைப்பின் இழிவான, கேவலமான குறுக்கு வழிகள் தான். அதிலும் ஒரு பெண், தனது சொந்தப் படத்தைப் போட்டு, இந்த அமைப்பின் சீர்கேட்டை அதன் இழிவை அம்பலமாக்குவதை, ஆணாதிக்கமுடைய இந்த இழிவான அமைப்பால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதை கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளும், கருத்தியல் ஆண்மை அதனிடம் கிடையாது.

ஆகவே ஆண் பெண் என்ற வேறுபாட்டை உருவாக்கியதன் மூலம் கிடைத்த, ஆணாதிக்க மேன்மையைக் கொண்டு மிரட்டுகின்றது.

பெண்களை பெண் அடையாளம் மூலம் இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது, பாலியல் ரீதியாக மிரட்டுவது, பாலியல் ரீதியாக உரசிபார்ப்பது, பாலியல்; ரீதியான நுகர முனைவது, இந்த அமைப்பில் சர்வசாதாரணமாகிவிட்டது.

பெண் என்பவள் பாலியல் நுகர்வுப்பண்டம் என்பதே, தமிழ் ஆணாதிக்க அமைப்பில் புளுத்துவிடடது. பாரிஸ் லாச்சப்பலின் வீதிகள் தோறும் இந்த கும்பலைச் சேர்ந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக, வீதிகளில் வீணிவடிய காற்சட்டையை திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர். எந்த பெண்ணும் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்ல முடியாது. ஒரு ரவுடித்தனத்துடன் பாலியல் வக்கிரத்தை தீர்க்க முனைகின்ற பொதுஅவலமே அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. லாச்சப்பலுக்கு எந்த பெண்ணும் சுதந்திரமாக செல்ல முடியாது. தமிழ் பாடசாலைகள் கூட இதை அங்கீரித்து, அனுசரித்து இதற்குள் இயங்குகின்றது.

இப்படி பட்டப்பகலில் லாச்சப்பலில் இந்த நிலை நீடிக்கும்; போது, கம்யூட்டர் மூலமும் தொலைபேசி மூலமும் இதுவே நடக்கின்றது இந்த அசிங்கம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, பயங்கரமானது. சம்பந்தப்பட்ட பெண், அந்தக் குடும்பதின் உளவியல் அவலம் கடுமையானதும், சித்திரவதையை கொண்டதுமாகும்;.

இந்த இழிவான சமூகத்தை வழிநடத்தும் அரசியல் பிரிவினரே நேரடியாக களமிறங்கி, மூகத்தை மூடிக்கொண்டு பாலியல் வக்கிரத்தை தமிழச்சிக்கு எதிராக கொட்டுகின்றனர். இந்த ஈனச்; செயலை எதிர்த்து, தமிழச்சி எதிர்கொள்ளும் திறன் பெண்களுக்கே முன்மாதிரியானது.

எந்தப் பண்பாடுமற்று, நாகரிகமற்று காற்சட்டை போட்டு திரிகின்ற இந்த மூகமுடிக் கும்பலை, அதை அனுசரிக்கும் இந்த சமூக அமைப்பை எதிர்த்து நிற்பது, போராட்டத்தின் ஒரு கூறாகிவிடுகின்றது.

24 comments:

Sri Rangan said...

அன்பு இரயா,வணக்கம்!

உங்களிடமிருந்து தமிழச்சியின் மீதான தாக்குதலுக்கெதிரான கருத்தியற்றளத்திலான தத்துவார்த்தத் தேடலை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.சில நாளாக எதுவுங்காணாதபோது மனதுக்குள் சலிப்புத் தோன்றியது.அதற்கான காரணம் உங்களிடமிருந்து அறிவுப+ர்வமான கருத்துக்கள் வருமென்ற எதிர்பார்ப்பாகவுமிருக்கலாம்.

இதோ, இக் கட்டுரை நான் கருதியதைப் பொய்யாக்கவில்லை!


மிகவும் அவசியமான கட்டுரை தோழரே!


நாம் இதைப் பார்த்திருக்க முடியாது.


உங்கள் மீதோ அல்லது என்மீதோ தொடுக்கப்படும் கருத்து அம்புகள்-அவதூறுகளுக்கு நிலவுகின்ற வர்க்க அரசியலே அடிப்படையாக இருக்கும்.

ஆனால், தமிழச்சிமீதான தாக்குதற்கு பல தளங்களிலான-பன்முகத் தன்மை உண்டு."வர்க்க-பால்,மத,சாதிய-பண்பாட்டு"த் தளங்களிலிருந்து அவரைத் தாக்குவதால் அதன் தாக்கம் பாரியது.நாம் தமிழச்சியின் அரசியல் நிலைப்பாட்டையுங் கடந்து, அவரின் துணிவுக்கும்,போராட்டவுணர்வுக்கும், அதுவும் முடங்கிக் கிடக்கும் பெண்ணிலைவாதிகளுக்கே முன்னோடியாகச் செயற்படும் அவரது நேர்மைக்கும் சிரந்தாழ்த்த-தோழமையை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உங்களின் இக் கட்டுரை மிகவும் அவசியமானது தோழரே!

உங்களது பல வேலைப் பளுவுக்குள்ளும் அயராத உங்கள் உணர்வுக்கு என் நன்றி.


தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்

மாசிலா said...

நல்ல பதிவு.

அய்யா, நீங்கள் ஒரு கருத்தை விளக்க மறந்துவிட்டீர்கள்.

இதோ அது.

பாரீசில் இரண்டாம் உலக போர் காலங்களுக்கு முற்பட்ட காலங்களில் இருந்தே புதுவை தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பிழைப்பிற்கு மட்டும் வந்தவர்கள். இதில் 95% பிரஞ்ச் பட்டாளத்தை சார்ந்து வந்தவர்கள். இவர்களுடைய பிள்ளைகள் நல்ல படிப்புகளை படித்து பலர் நல்ல நிலமையில் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்கள் அகதிகளாக வரும் காலம் வரை இவர்களால் பிரான்சுக்கு தமிழர் என்கிற முறையில் எந்த வித பிரச்சினையும் எழுந்தது இல்லை. இந்த அகதிகளாக வந்தவர்களில் சில கூட்டங்களே பிரான்சின் மொத்த தமிழர்களின் மதிப்பை கெடுத்துக்கொண்டு வருகிறார்கள். எனவே இனி பிரான்சில் உள்ள தமிழர்களை பற்றி எழுதும்போது, இலங்கை தமிழர்கள் என்றும் புதுவை தமிழர்கள் என்றும் பிரித்து வேண்டியது அவசியம்.

இந்தியா வேறு இலங்கை வேறு. எனவே, மனப்பான்மைகளும் வேறு வேறே!

தமிழ் தெரியும் ஒரு காரணத்திற்காகவும், தமிழ் கலாச்சாரம்(?)சார்ந்தவர்கள் என்கிற ஒரு காரணத்திற்காகவும் சில இரவுடிக்கும்பல்கள் ஏனைய அனைத்து தமிழ் சமுதாயத்தினர் மீது தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி மட்டும் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டு இங்கு நடக்கும் மத கூத்துக்களே!

பதிவில் நீங்கள் கூறியிருக்கும் அனைத்து கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போகிறேன். வரவர பாரீஸ் லாசப்பேல் வீதிகளில் நடந்து போவதற்கே மிகவும் யோசிக்க வேண்டியதாக உள்ளது.

புதுவை தமிழர்கள் ஒன்று கூடி பொறுக்கிகளின் கூட்டங்களை ஒழித்துக்கட்டுவோம். அனைத்து தமிழர்களும் பயமில்லாமல் அமைதியான முறையில் வாழ வழி செய்வோம்.

Thamizhan said...

தோழியர் தமிழச்சி அவர்கள் வெளிப்படையாகவே அவரது பதிவுகள் பெரியார் கொள்கைகள் பரப்புவத்ற்கு மட்டுமே என்று எழுதியுள்ளார்.

வேறு எந்த அரசியல் காரணங்களையும் அதில் புகுத்தவேண்டும் என்று எண்ணிச் செயல் படாதீர்கள்.

அவரவர் களங்கள் அவரவர்கள் போராட்டங்களாக இருக்கட்டும்.

தமிழச்சியின் பெரியார் பணியில் யாரும் குறுக்கு சால் ஓட்டாதீர்கள் என் தமிழர்களுக்கு,தமிழர்களுக்கு மட்டுந்தான் வேண்டுகோள் விடுகின்றேன்.

ரவி said...

தோழர்.தமிழச்சிக்கு எனது தார்மீக ஆதரவை இந்த பதிவில் தெரிவிக்கிறேன்...!!!!

மு. மயூரன் said...

தோழர் தமிழச்சி புலிகளுக்கு எதிராக வெளிப்படுத்திய கருத்துக்களைத் தேடிப்பெற முடியவில்லை. தொடுப்பெதுவும் தந்தால் நல்லது.

தமிழரங்கம் said...

http://thamilachi.blogspot.com/2007/09/blog-post_19.html

-/பெயரிலி. said...

//3. புலிகளுக்கு எதிராக, அவர் வெளியிட்ட சில கருத்துகள்//

??
அவருடைய கலகத்துக்கான அறிக்கையினையும் அதே அறிக்கையின் "விரிவான" சத்தியக்கடதாசி வடிவத்தையும் பார்க்க... யார் எதை எதற்காகத் தவறவிட்டார்? ;-)

/இலங்கை தமிழர்கள் அகதிகளாக வரும் காலம் வரை இவர்களால் பிரான்சுக்கு தமிழர் என்கிற முறையில் எந்த வித பிரச்சினையும் எழுந்தது இல்லை./

அதிதித்தமிழர் மாசிலா, உங்கள் அறிதலுக்கும் புரிதலுக்கும் நன்றி. ;-)

இராயாகரன், இப்பின்னூட்டமாவது வருமா? (அசுரன் பற்றியோ உங்களின் சர்வதேசப்புரட்சி பற்றியோ ஏதும் எழுதவில்லை)

-/பெயரிலி. said...

http://thamilachi.blogspot.com/2007/09/blog-post_19.html

இதில் விடுதலைப்புலிகள் எங்கே வந்தார்கள்? 'தலைவர் (?)' என்ற பதத்திலா?

Sri Rangan said...

//இராயாகரன், இப்பின்னூட்டமாவது வருமா? (அசுரன் பற்றியோ உங்களின் சர்வதேசப்புரட்சி பற்றியோ ஏதும் எழுதவில்லை)//

இரயா,பெயரிலியின் இக் கோரிக்கை எதனால் வருகிறது?அவர் அசுரனின் கருத்தோடு உடன்பாடின்றி,எதிர்க் கருதாடியதை நீங்கள் மட்டுறுத்திருந்தால் அதைத் தயவுகூர்ந்து வெளியே விடுங்கள்.அவசியம் கருதியே இதைத் தோழமையோடு கேட்கிறேன்.

கொழுவி said...

//தான் ஒரு ஆண் என்ற அகங்காரத்துடன், தன்னால் எந்தப் பெண்ணையம் எப்படியும் இழிவுபடுத்த முடியும் என்ற ஆணாதிக்க திமிர். //

இதுவும் இராயகரன்.

//கற்பழிப்பும் நடந்தது//

இதுவும் அவர் தான். அண்ணை நீங்கள் அடிக்கடி விபசாரம் என்ற சொல்லைப் பயன்படுத்திறனியள். இதில கற்பழிப்பு எண்டு சொல்லி என்ன சொல்ல முற்படுகிறீர்கள் ?

தமிழரங்கம் said...

விடுதலைப் புலிகள் வேறு, தமிழ்ச்சோலை வேறுயல்ல. இதை நீங்களும், உங்களைப் போன்ற சிலர் மறுப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.

சகல தமிழ் மக்களுக்கும் தெரிந்த இந்த உண்மையை மறுத்து, வாதிடுபவர்களுடன் மறுத்து வதிடுவதில் பயனில்லை. அன்று ராஜிவை கொன்ற பின், புலிகள் கொல்லவில்லை என்று பலர் வாதிட்டனர். அப்படிப்பட்டவர்களுடன் தொடர்ச்சியாக வாதிடுவதில் பயனில்லை. என்னை புலிகள் கடத்திச்சென்று 80 நாட்கள் பின், நானாக புலிகளின் வதை முகாமில் இருந்து தப்பி வரை, புலிகளும் அவர்களின் எடபிடிகளும் தாம் கட்டத்தவில்லை என்று மறுத்தனர். இது எப்படியோ, அந்த மாதிரி வகையாறுகளுக்கு நாம் பொழுது போக்காக பதிலளிக்க எமக்கு நேரம் கிடையாது. இதனால் இது போன்றவற்றை நாம் அனுமதிக்க முடியாது.

உண்மை பொய்யென்றும், அனத்தையும் திரித்தும் புரட்டியம் கதையளப்தே அரசிலாகிவிட்டதல்லவா!

சட்டப்படி புலிகள் என்ற பெயரில் ஐரோப்பில் வேலை செய்ய முடியாது. ஐரோப்பாவில் புலிகள் இல்லை என்று சொல்லியும் விவாதிகலாம். தமிழ்ச் சோலை நாம் அறிவோம். அதன் ஐரோப்பிய தளுவிய வடிவத்தையும் நாம் அறிவோம். தனிமனித முயற்சிகளால் உருவான சுதந்திரமான பாடசாலைகளை விழுங்கி பல கதைகளை அறிவோம். நாம் தொடங்கிய பாடசாலை விழுங்க முனைந்து, அதை நாமே எமது சில பிள்ளைகளுடன் தற்கலிகமாக (2 வருடம்) வைத்திருத்து அதைக் கருவில் இல்லாதாக்கினோம்.

தமிழரங்கம் said...

//கற்பழிப்பும் நடந்தது//
http://www.tamilcircle.net/Bamini/books/book_03/Book_03_03/Book03_03_67.htm

தமிழரங்கம் said...

''இரயா,பெயரிலியின் இக் கோரிக்கை எதனால் வருகிறது?அவர் அசுரனின் கருத்தோடு உடன்பாடின்றி,எதிர்க் கருதாடியதை நீங்கள் மட்டுறுத்திருந்தால் அதைத் தயவுகூர்ந்து வெளியே விடுங்கள்.அவசியம் கருதியே இதைத் தோழமையோடு கேட்கிறேன்."

"மாதிரி வகையாறுகளுக்கு நாம் பொழுது போக்காக பதிலளிக்க எமக்கு நேரம் கிடையாது. இதனால் இது போன்றவற்றை நாம் அனுமதிக்க முடியாது."

சின்னக்குட்டி said...

மாசிலாவின் பின்னோட்டமா என்று ஆச்சிரியமாக இருக்கிறது.

பாண்டிச்சேரி வைட் கொலர் தமிழன் ,அகதி தமிழன் என உங்களுக்கு ஒரு உயர்வு மனப்பான்மை இருக்குமானால் பிறகு என்னத்துக்கு பெரியார் தலித் பிராமணியம் என்று கோஸம் போட்டுக்கொண்டு மினக்கெடுறியள்

-/பெயரிலி. said...

/விடுதலைப் புலிகள் வேறு, தமிழ்ச்சோலை வேறுயல்ல. இதை நீங்களும், உங்களைப் போன்ற சிலர் மறுப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும். /

எனக்குத் தமிழ்ச்சோலையே தமிழச்சி எழுதித்தான் தெரிகிறது. தெரியாத ஒன்றைப் பற்றி எடுத்தவாக்கிலே நான் மறுப்பதற்கும் ஆதரிப்பதற்கும் என்ன கூட்டணி-எதிரணி அரசியலா நடத்துகிறேன் ? (தமிழச்சிக்கே இது வெளிச்சமா என்று அவரே சொல்லட்டும்)

நிற்க, இந்த, பட்டியிலே என்னை அடைத்து மந்தை கட்டத் தேவையில்லை. தியாகி-துரோகி, ராஜீவ் காந்தி கொலை இவை பற்றி எனது கருத்துகள் எட்வையாகவிருக்குமென நீங்கள் உங்கள் கருத்துகளைத் தரவேண்டாம். தருவதானால், குறைந்தது, எனது முந்த நாளையப் பின்னூட்டத்தினையாவது விட்டுவிட்டுச் சொல்லியிருக்கலாம்.

இனி உங்கள் நேரத்தை என்னைப் போன்றவர்களின் பின்னூட்டங்களுக்காகச் செலவழிக்கவேண்டாம். உங்கள் முழுநேரப்புரட்சிக்கு அவ்வகையிலே எனது பங்களிப்பு. ;-)

இதுவரை வெளியிட்டவைக்கு நன்றி.

தமிழரங்கம் said...

உங்கள் விருப்பப்படி அனுமதித்துள்ளேன்.

மாசிலா said...

மு.மயூரன் // தோழர் தமிழச்சி புலிகளுக்கு எதிராக வெளிப்படுத்திய கருத்துக்களைத் தேடிப்பெற முடியவில்லை. தொடுப்பெதுவும் தந்தால் நல்லது.//

இதற்கு பதிலாக தமிழரங்கம் //
http://thamilachi.blogspot.com/2007/09/blog-post_19.html//

இது போன்று திரித்து வீண் கதைகளை உருவாக்கி கலகம் மூட்டிவிடுவதை உடனடியாக நிறுத்துங்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது போல் பேசவோ எழுதவோ உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

தமிழரங்கம் said...

உங்கள் அறியாமைக்கு வருந்துகின்றோம். அப்பாவிகள் பரிதபத்துக்குரியவர்கள். தமிழ்சோலை புலிகளுடையது என்று தெரியாவிட்டால் அதைத் தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களை கலகமூட்டி நாம் எழுதுவது கிடையாது. அதில் நம்பிக்கையும் கிடையாது

மாசிலா said...

விளக்கம் ஏதும் தராமல் இப்படி மொட்டையாக முடித்துவிட்டீர்களே!

எனது மற்றும் தமிழரங்கம் உங்களது கடைசி பின்னூட்டத்திற்கும் தகுந்த விளக்கம் கொடுக்கவும்.

மயூரன் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஏன் தமிழச்சியின் தமிழ்ச்சோலை பதிவை பதிலாக அளித்தீர்கள்?

துளசி கோபால் said...

தமிழச்சியின் பதிவுகள் பிடிக்கலைன்னா பேசாம படிக்காம இருக்கவேண்டியதுதானே?

அவுங்களை எதுக்கு அசிங்கமா மிரட்டணும்?

தமிழரங்கம் said...

//விளக்கம் ஏதும் தராமல் இப்படி மொட்டையாக முடித்துவிட்டீர்களே!

எனது மற்றும் தமிழரங்கம் உங்களது கடைசி பின்னூட்டத்திற்கும் தகுந்த விளக்கம் கொடுக்கவும்.//


//மயூரன் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஏன் தமிழச்சியின் தமிழ்ச்சோலை பதிவை பதிலாக அளித்தீர்கள்?//


முழுவதுமாக நீங்கள் இங்கிடப்பட்ட பின்னூட்டங்களையும் வாதங்களையும் திரும்பப் படிப்பீர்களாயின் விளக்கம் தானே கிடைக்கும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இந்த அகதிகளாக வந்தவர்களில் சில கூட்டங்களே பிரான்சின் மொத்த தமிழர்களின் மதிப்பை கெடுத்துக்கொண்டு வருகிறார்கள்.//

மாசிலா!
இதை நீங்கள் சரியாகப் புரிந்திருந்தால் போதும், ஆனால் 'நான் புதுவைத் தமிழன்' என்று நெற்றியில் பச்சையா?குத்திக் கொள்ளப் போறீர்கள்.
பெற்ற பிள்ளையே கோணங்கியாகிறது.
உத்தமர்( உங்கள் கருத்து என்னவோ நானறியேன், உலகம் அப்படித்தான் சொல்லுது) காந்திக்கே ,உதவாக்கரைப் பிள்ளை இருந்தது.
அதனால் குடும்பத்திலுள்ள கோணங்கிப் பிள்ளை ஒன்றுக்காக அந்த குடும்பத்தை ஒதுக்க முடியுமா??
அப்படி நீங்கள் ஒதுங்குவது உங்கள் விருப்பமானால் தாராளமாக ஒதுங்குங்கள்.
50 வருடங்களுக்கு மேல் புதுவைத் தமிழர் பிரான்சில் இருந்தும், அகதித் தமிழன் வந்துதான்' தமிழன் என்றோர் இனம் உண்டு,தனியே அவர்க்கோர் குணமுண்டென பிரான்சுக்காரருக்குக் காட்டினார்கள்.(மறுக்க முடியுமா??)
இதேவேளை லா சப்பையை சுத்தமாக்குவீர்களேயானால் போற்றப்படுவீர்கள்.

செல்வநாயகி said...

Thanks for this post rayakaran.

லக்கிலுக் said...

தமிழன் என்றால் தமிழன் தான். இதில் என்ன ஈழத்தமிழன், புதுவைத்தமிழன் என்ற புண்ணாக்கு வாதமெல்லாம்?

மாசிலா அண்ணே! உங்க பின்னூட்டம் எனக்கு வருத்தத்தை தருகிறது.