தமிழ் அரங்கம்

Friday, February 15, 2008

தலித்துக்களின் எதிரிகளும், தலித்துகளும்

பி.இரயாகரன்
15.02.2008

லித்துகளின் எதிரி யார்? என்பதை அடையாளப்படுத்தாது, தலித்தியம் பற்றி பேசும் நுட்பம் தான் இவர்கள் அரசியல். கடந்தகால இயக்கங்கள் முதல் இன்றுவரை அரசியல் பேசுவோர் வரலாறு இது.

எல்லா இயக்கமும், சாதிய விடுதலை, வர்க்கவிடுதலை பற்றிப் பேசினர். இன்று தலித் முன்னணியின் பெயரிலும் பேசுகின்றனர். இது எப்படி என்பதை மட்டும், அவர்கள் சொல்வது கிடையாது. தலித்துக்கு யார் எதிரி, யார் நண்பன் என்று கூறுவது கிடையாது. தலித்துகளின் எதிரிகள் தான், தலித்துகளின் பெயரில் அதை தமது குறுகிய நோக்கத்துக்கு பயன்படுத்த முனைகின்றனர்.

உண்மையில் புலியெதிர்ப்பு அரசியல் செய்ய இது உதவும் என்ற அடிப்படையில் தான், பலர் இதற்குள் தவளைகள் போல சலசலத்தனர், சலசலக்கின்றனர். இதை மேலும் ஒருபடி உயர்த்தி புலிகளும் இதற்குள் வம்பளக்க முடியும் என்கின்றார் கதையாசிரியர் சோபாசக்தி.

இதைப் பாதுகாக்க இவர்கள் என்ன தான் வரட்டுமார்க்சியம் என்று அழுது புலம்பினாலும், இவர்கள் கூடி நடத்தும் அரசியல் பின்புலத்தில் வரட்டல்லாத மார்க்சியத்ததையும் அதன் இயங்கியலையும் நாம் காணமுடிவதில்லை. வரட்டுமார்க்சியம் என்று சொல்கின்றவர்கள், ஒருபுறம் வலதுசாரிகள் மறுபக்கத்தில் மார்க்சியத்தை தமது லேபலுக்கு பயன்படுத்துபவர்கள். வரட்டு மார்க்சியம் அல்லாத நபர்களாக தேடிக்கண்டு பிடித்தவர்கள் தான், தலித் மாநாட்டுக்கு வருகின்றார்கள். இவர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் செய்யும் அரசியலோ, தலித்துகளுக்கு எதிரானது. இந்த நபர்கள் உள்ள கட்சிகளினதும் இவர்களினது அரசியல் நடத்தைகளையும், இங்கு விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அது ஊர் உலகம் அறிந்ததே. இங்குள்ளவர்களின் தலித்விரோத அரசியல் நடத்தைக்கு, ஏற்றவர்கள் தான் அவர்கள்.

சோபாசக்தி கண்டு பிடித்த பின்நவீனத்துவ அறிதல்முறையோ, அம்மணமாக ஏகாதிபத்திய வாலில் தொங்குகிது. வெறும் அறிதல் முறைதான் என்று எடுத்தால், அதற்கு ஒரு அரசியல் இல்லையோ? அதற்கு ஒரு தத்துவப் பார்வையே கிடையாதோ? இப்படிச் சொல்வது தான், வரட்டு அல்லாத மார்க்சியமோ?

யாருக்கு காதில் பூ வைக்கின்றீர்கள். இது என்ன, அரசியலற்ற அறிதல் முறையோ? எதை அறிய? ஏன் அறிய? எப்படி அறிய? எதற்காக அறிய? யார் தான் படைத்தான். என்ன பார்ப்பனின் பிரமனா படைத்தான்?

இவர்கள் அறிந்து அறிய வைத்த தலித்தியம், இந்தியாவில் மூக்கைத் துளைக்க நாற்றமடிக்கின்றது. ஏன்? இதில் இருந்து எந்த புரட்சிகர கோட்பாடுகளையும் வடிகட்டி எடுக்க, எதுவும் மிஞ்சுவதில்லை. ஏன்? அவனவன் தனது பிழைப்புக்காக தலித்தை பயன்படுத்தி பிழைப்பது தான் நடக்குது. எப்படி தன்னைப் போலும், மற்றவர்களும் தலித்தைச் சொல்லி பிழைக்கின்றனர் என்று சொல்ல, அதையே தொழிலாக கொண்ட அ.மார்க்ஸ் வருகின்றார்.

இவர் 80 களில் தேசியத்தை ஆதரித்ததால் வெளியேற்றப்பட்டவராம். நல்ல வேடிக்கையான கண்டு பிடிப்பு. இந்தளவுக்கு அக்காலத்துக்கு முந்தைய மகிமையை எண்ணுகின்றராம். இப்படி வித்தை காட்டுகின்றார் சோபாசக்தி.

வெளியேறியவர், தொடர்ந்து மக்களுக்காக என்ன செய்தார்? தேசிய ஆதரவு மார்க்சிய இயக்கத்தை கட்டினாரா? இல்லை. சரி இவர் தேசியத்ததை ஆதரித்ததால் வெறியேறியவர் என்றால், அவர் அன்று அரசியல் பிழைப்புக்காக ஆதரித்த தேசிய விடுதலை இயக்கங்களோ பாசிசமாக அங்குமிங்குமாக ப+த்துக் குலுங்குகின்றது. இவரின் தலித்தியமும் இப்படிப்பட்டது தான்.

இவர் தேசியத்தையே கற்பிதம் என்றவர். ஏகாதிபத்திய நோக்கில் தேசியம் கற்பிதம் என்று அவர்கள் எழுதியதை, மூன்றாம் உலக நாடுகளின் எதிர் அணியில் நின்று அதை எதிர்க்கவில்லை. ஏகாதிபத்தியம் தேசியத்தை அழிப்பதற்கு ஆதரவாக, தேசத்தை கற்பிதம் என்று கூறி, தேசியத்துக்கு எதிரான கோட்பாட்டை முன்வைத்தவர். தன்னார்வக் குழுக்களின் அரசியல் நோக்கிலேயே, இவரின் அரசியல் நோக்கமும் செயற்பாடும் அமைந்திருந்தது.

ஏகாதிபத்தியத்துக்கு ஏற்ற கருத்துக்களையும், கோட்பாடுகளையும் எடுத்துவந்து பிரச்சாரம் செய்து, அதை சந்தைப்படுத்தியவர். இப்படி மார்க்சிய இயக்கத்துக்கு எதிராகவே இயங்கிய, ஒரு அற்ப பதர் தான் இந்த அ.மார்க்ஸ். அரசியல் சாக்கடையில் மீன்பிடிக்க நினைக்கும் ஒடுகாலிகளின் தங்கிடமாக, போக்கிடமாக, குட்டையாக அ.மார்க்ஸ் அன் கோவின் அரசியல் களம் அமைந்தது. தண்ணி அடிக்கவும், கூடிப் படுக்கவும், கதா உபதேசம் செய்வதற்கும் ஏற்ற, ஒரு வடிகட்டிய தரகன் தான் அ.மார்க்ஸ்.

இவர்கள் கூவிவித்த தலித், பார்ப்பனியத்தை ஒழிக்கவில்லை. மாறாக அதனுடன் சமரசம் கண்டும், பேரம் பேசியும் நக்கிப் பிழைக்கின்றது. தலித்துக்குள்ளான சாதியத்தை ஒழித்ததா என்றால், அதுவும் இல்லை. தலித்தியம் சாதியத்தை பலப்படுத்தி, தனக்குள் சாதிய ஒடுக்குமுறையையே புதிய வன்முறையாக மாற்றியுள்ளது. உண்மை இப்படி தான் இருக்கின்றது.

இதை எல்லாம் ஆராயவும், களைவதற்காகவுமா கூடுகின்றனர். செத்த மாட்டில் உள்ள உண்ணி போல், இரத்தம் குடிக்க இடம் தேடி அலைகின்றனர். இப்படி தலித் மக்களின் பெயரில் நாய் வேஷங்கள்.

இதற்கு சோபாசக்தி கூவி அழைக்கும் போது, அவரின் நாவல்கள் போல் வளுவளுகின்றது. புலி உள்ளவர்களும் வாருங்கள், புலியெதிர்ப்பில் உள்ளவர்களும் வருங்கள், நாங்கள் கூடி விவாதிப்போம் என்கின்றார். இப்படி 30 வருடமாக தமிழ் மக்களை வெட்டியும், கொத்தியும் துண்டுபோட்டும் தின்றவர்கள் எல்லாம் கூடி, குய்யா முய்யா என்று ஒப்பாரிவைத்து அழப் போகின்றீர்களோ! இதனால்தான் இலங்கை அரசின் ஏஜண்டுகள் வாழ்த்தி, ஆதரித்தும் தமது ஆசீர்வாதத்தைச் செலுத்துகின்றனர். செத்துப் போன தலித்தியத்தை வாழ்த்துவது, அரசியல் மரபல்லவோ!

20, 30 வருடமாக ஏன் செய்கின்றோம் என்று தெரியாது உழுகின்றவர்கள் இவர்கள். இலக்கியம், பினநவீனத்துவம், தலித்தியம் என்ற சொற்களின் பின், எதைத் தான் சொல்லியுள்ளீர்கள். அ.மார்க்ஸ் என்ற அற்ப பிழைப்புவாதி முக்கினால், அன் கோக்கள் தாமாகவே பேலுமளவுக்கு தத்துவங்கள் விளக்கங்கள். இதற்கு பெயர் தலித்தியம்.

தேசியம் கற்பிதம் பற்றி, சோபாசக்தி அ.மார்க்ஸ்சுக்காக முக்கி முனகுகின்றார். இந்த தலித் மாநாட்டை நடத்துகின்ற நால்வர் கொண்ட நிழல் அணியில், இதன் தலைமைக் குருவான புலியெதிர்ப்பு அணி ராகவன், தேசியம் கற்பிதம் என்று முதல் மாநாட்டில் சொன்னவர். இதை வசதிகருதி ஏன் சோபாசக்தி மறந்துபோனார். அவரின் கற்பிதம் சரி என்று கருதிய சோபாசக்தி, அதை தனது இணையத்தில் போட்டவர், இதன் மேல் கருத்துச் சொன்னாரா? இல்லை. இன்று ஏன் அ.மார்க்ஸ்சுக்காக முக்கி முனகுகின்றார்.

தலித்துக்கு எதிர் தேசியம் என்று சொல்ல, புலியெதிர்ப்பு ராகவன் தேசியத்தை கற்பிதம் என்று மார்பு தட்டியபோது, சோபாசக்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாரா அல்லது நிறை வெறியில் இருந்தாரா?

அ.மார்க்ஸ்சை நாம் அம்பலப்படுத்த, திடீரென கற்பிதத்துக்கு எதிர் விளக்கம். அதுவும் ராகவனுக்கு எதிராக அல்ல, எமக்கு எதிராக. என்ன அரசியல்.

தலித்தியத்தை கேடுகெட்டதனமாக தமது குறுகிய அற்ப நோக்கத்துக்காக பயன்படுத்துவது, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப கருத்துரைப்பது தான் சிலருக்கு அரசியலாகின்றது. மனிதத்தை மிதித்து பிழைக்கின்ற கூட்டத்தின் பெயரில், தலித்திய அழைப்பு விடப்படுகின்றது. மனிதவிரோதிகளே! நாம் எல்லாம் கூடி விவாதிப்போம் வாருங்கள் என்கின்றது. இதற்கு பெயர் தலித் மாநாடு. இது தேவை தானா?

2 comments:

அற்புதன் said...

தம்மிடம் தலிதுக்களுக்கான அரசியல் வேலைத் திட்டம் எதுவும் இல்லையாம்,ஆனால் எல்லோரும் ஒண்டாக் கூடுவம் வரட்டாம்.ஆட்களைக் கூடக் கூட்டிக் காட்டினால் அதற்குத் தகுந்தால் போல் கூலி கூடக் குடுகிறாங்களாக்கும்.

இதை விடக் கேடு கெட்டத் தனம் என்ன இருக்கிறது? என்ன அரசியல் என்ன தீர்வு என்று எதுவும் அற்ற வெறும் 'தலித் லேபிள்' ஒட்டிய விபச்சாரம் தான் நடக்கிறது.

தமிழச்சி said...

"தலீத்" என்ற மூன்றெழுத்தை மிக கவனமாகவே தேர்ந்தெடுத்து அரசியலில் புலிகள் என்று நிருபித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் புலியெதிர்ப்புக்கு எதிராக திருப்பிவிடும் இவர்கள் தலீத்துக்காக என்ன புடுங்கிவிடப்போகிறார்கள்? எந்த சமூகத்திலும் அரசியல் பிண்ணனி இல்லாமல் எந்த எதுமில்லை என்பதை என் அனுபவத்தில் தாமதமாகவே புரிந்து கொண்டாலும் எனக்கு தெரிந்த வரையில் இந்த கூட்டத்திற்கும், இந்திய அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்பபோம். இங்கே இருப்பது மனிதமா? வஞ்சகமா என்று?