தமிழ் அரங்கம்

Tuesday, February 26, 2008

சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...

"கையெழுத்திட்டென்ன, குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2008

லங்கையில் குழந்தைகளை இராணுவத்துக்காக-போராளிகளாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.அத்தகைய சட்டத்தை மீறுபவர்கள்மீது 20 ஆண்டு காலச் சிறைத் தண்டனையும் உண்டாம்!எனினும்,குழந்தைகளைக் குண்டுபோட்டுக் கொல்லும் அந்த அரசை எந்தவொரு அமைப்போ அல்லது அரசுகளோ இதுவரை கண்டும் காணாததாக இருக்கின்றன.ஒரு கண்டனத்தைக்கூட எவரும் செய்யவில்லை!தமிழ்பேசும் மக்கள்மீது பாரிய இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிடும் அரசபயங்கரவாதம் நீடிக்கும்வரை குழந்தைகளைப் போராட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடிவதில்லை!தமது கண்ணெதிரே குண்டுகள்வீழ்ந்து மரணிக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உள்வாங்கும் சிறார்கள், நிச்சியமாக அதை எதிர்ப்பதற்காக ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருப்பதற்கில்லை!இதை உலகம் நன்றாகவே அறியும்!




அதைவிட ஜேர்மனிய அரசின் கடந்தகாலச் சரித்திரம் இதை மிக அழகாகவே அறியும்.

"கிட்லர் யுங்க" என்ற வார்த்தையினூடே இன்று அர்த்தமறிய முனையும் நவ ஜேர்மனிக்கு இதன் தாத்பரியம் நன்றாகவே புரியும். எனினும், இன்றைய இனவாத அரசுகளைத் தட்டிக்கொடுத்தபடி குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்கு எதிராகக் குரல் கொடுப்பது மக்களையும்,குழந்தைகளையும் ஏமாற்றுவதாகவே இருக்கிறது.உலகத்தில் சிறார்பருவமானது மிக அழகாகக் காத்து அனுசரிக்கவேண்டிய பருவமாகும்.இந்த வயதில் குழந்தைகள் யுத்ததுக்கு இரையாகும் நிலை வெகுவாக வெறுக்கத் தக்கதாகும்.இத்தகையவொரு சூழலில் எமது சிறார்கள் வாழ நேரிட்டது எங்ஙனம் உருவாகியது?,அதைத் தடுப்பதற்கான மூலத் தீர்வு என்னவென்பதைக் குறித்து இதுவரை எந்தவொரு உலக அமைப்பும் சிந்திக்காது,தத்தம் போக்குக்கு இணங்கச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது மிக மிகக் கபடத்தனமானதாகும்.

"அச்சுறுத்தலுக்குள் இருக்கும் மக்களுக்கான அமைப்பு" எனும் ஜேர்மனிய அமைப்பானது இலங்கையில் சிறார்களைப் படையில் சேர்க்கும் புலிகளுக்கெதிராகப் போர்க் கொடி உயர்த்துகிறது.அது, ஜேர்மனிய வெளிநாட்டமைச்சருக்குப் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் படிவங்களை இதுவரை சேகரித்து அனுப்பியுள்ளது.கூடவே, இணையத்தின் வாயிலாகவும் அது இத்தகைய கையெழுத்து வேட்டையைச் செய்து வருகிறது.

இலங்கையில் போரை நிறுத்திக் குழந்தைகளைத் துஷ்பிரயோகஞ் செய்யும் நிலையைத் தடுக்கும்படியும் ஐரோப்பியக்கூட்டமைப்பையும், ஜேர்மனியையும் கோருகிறது.இன்றைய சூழலில் 4.000.வரையிலான சிறார்கள் புலிகளின் படையணியில் இருப்பதாகவும்,அவர்கள் இன்றும் 12 வயதே கடந்துவிடவில்லையெனவும் அது குற்றஞ் சுமத்துகிறது.



குழந்தைப் போராளிகள் உருவாகும் நாடுகளாக இன்னும் பல ஆபிரிக்க நாடுகளையும் அது பட்டியலிட்டபடி இலங்கையில் சிறார்கள் அகதி முகாங்களிலிருந்தே வலுகட்டாயமாகக் கடத்தப்படுவதாகும் ஆதார பூர்வமாகச் சொல்கிறது.புலிகளின் பிளவுக்குப் பின்பான நிகழ்வில் கருணா குழுவுருவாக்கத்தின் பின்பாக 200 தடவைகளுக்கு மேலாகக் குழந்தைகளைக் கருணா குழுவும் கடத்தியதாகவும் இந்த அமைப்புக் கூறுகிறது.

குழந்தைகள் ஒரே பொழுதில் அகதியுமாகியும்,போராளிகளுமாகும் நிலை இலங்கையில் இருப்பதாக அந்த அமைப்புக் கூறுகிறது!


இந்த அமைப்பின் குரல் மிகச் சரியானதாகவே இருக்கிறது.

குழந்தைப் போராளிகளை உருவாக்கும் அரசுகளே மிகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.இலங்கையில் போராடும் நிலை உருவாக்கப்பட்டத்தற்கு மேற்குலகுக்கும் பங்குண்டு.அத்தகைய தேசங்களே இன்று குழந்தைப் போராளிகளின் உருவாக்கத்துக்குத் துணைபோனபடி தத்தமது வர்க்க-தேச நலன்களை இலங்கையில் காத்துவரும்போது, அங்கே தவிர்க்க முடியாது இனவொடுக்குமுறை கூர்மையடைகிறது!இத்தகைய நடத்தைக்குத் தோதாக இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் தேசங்கள் முதலில் தண்டிக்கப்பட வேண்டிய தேசங்களாகும்.இவர்களின் குண்டுகள் தமிழ் பேசும் மழலைகளைக் கொன்று குவிக்கும்போது அதுகுறித்து எந்தவொரு செய்தியையும் போடாதிருக்கும் மேற்குலகப் பத்திரிகைகள் இந்தக் குழந்தைப் போராளிகளின் உண்மையான அவலத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது மிகவும் வேதனையானதாகும்.

சிறார்களைப் போராளிகளாக்கும் நிலைக்கு உந்தித் தள்ளப்படும் இனவாத அழிப்பானது ஒரு இனத்தின் இருப்போடு சம்பந்தப்பட்ட சிறார் போராளிகளைத் தயார்படுத்திவிடுகிறது.வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் வாழும் சின்னஞ்சிறார்களின் முன்னுள்ள தேர்வு போராடிச்சாவதென்பதே!இதைவிட அவர்கள் தம்மைக் காத்து வருவதற்கான எந்தச் சூழலை இலங்கைச் சிங்களப் பாசிச அரசு விட்டு வைத்திருக்கிறது?ஆறுமாதக் குழந்தையின் கைகள் ஒடித்து,குடல் சிதறி மரிக்கும்படி குண்டுத் தாக்குதல் செய்யும் சிங்கள அரசை எவ்வழியில் தடுத்து நிறுத்தமுடியும்?

இலங்கையின் கொடூரமான அரச பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியாத அரசுகள்"குழந்தைப் போராளிகள்"குறித்துக் கதைவிடுவது சாத்தான் வேதம் ஓதும் நிலைதாம்.

புலிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்த முறிவுக்குபின்பான இன்றைய சூழலில் சர்வதேசக் கண்காணிப்புக்குழுவுக்கு இலங்கையில் அனுமதியில்லாத சூழல் குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்குச் சாதகமான சூழலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.என்றபோதும், இலங்கைமீதான குற்றப்பத்திரிகைகளை அடக்கி வாசிப்பவர்கள் புலிகளின்மீதே குற்றத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்!

புலிகளால் சிறார்கள் போராட்டத் தூண்டும் நிலைமைகளின் உருவாக்கம் இலங்கையின் அரச முன்னெடுப்புகாளாலேயேதாம் தோற்றுவிக்கப்படுகிறது!இதைத் தடுத்து நிறுத்தாமல் சிறார்களைக் காத்தலென்பது இலங்கை இராணுவம் மக்கள் குடியிருப்புகள்மீது குண்டைப் போட்டுக் குழந்தைகளைப் பலியெடுத்துவிட்டு,அது புலிகளைத்தாம் அழித்தோம் என்பது போன்றதே.

இத்தகைய நிலையில் இவர்கள் "கையெழுத்திட்டென்ன,குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2008



KAMPAGNE

Aktion für Kindersoldaten in Sri Lanka zum Red Hand Day

Kinder sind keine Soldaten!

08. Februar 2008Mit der symbolischen "Roten Hand" protestieren Menschenrechtsorganisationen in aller Welt am 12. Februar gegen den Einsatz von Kindern als Soldaten. Mehr als 300.000 Kinder wurden nach Schätzungen der Vereinten Nationen im Jahr 2007 als Soldaten in Konflikten im Kongo, dem Sudan, Tschad, den Philippinen, in Sri Lanka, Afghanistan und Kolumbien sowie in vielen anderen Ländern eingesetzt.

Manche Kindersoldaten waren sogar noch nicht einmal zwölf Jahre alt. In Sri Lanka werden regelmäßig Kinder aus Flüchtlingslagern entführt und zum Dienst an der Waffe gezwungen. Seit 1983 starben in einem blutigen Bürgerkrieg in dem asiatischen Inselstaat mehr als 70.000 Menschen.

In den kommenden Monaten wird die Gewalt noch weiter eskalieren, da die Regierung Sri Lankas im Januar 2008 ein Waffenstillstandsabkommen mit der tamilischen Befreiungsbewegung "Liberation Tigers of Tamil Eelam" (LTTE) aufkündigte. Denn die Regierung wollte nicht länger neutrale internationale Waffenstillstandsbeobachter in der Region haben, die Menschenrechtsverletzungen der Konfliktparteien dokumentierten. Die LTTE kämpft für einen unabhängigen Staat der diskriminierten tamilischen Minderheit.

Sie schreckt dabei weder vor Terroranschlägen, noch vor dem Einsatz von Kindersoldaten zurück. Rund 4.000 Kindersoldaten sollen heute in den Rängen der LTTE kämpfen. Die Regierung Sri Lankas setzt nicht mehr auf Gespräche mit der LTTE, sondern auf ihre militärische Zerschlagung. Dabei setzt sie auch Milizen wie die Karuna Gruppe ein, die Kinder als Soldaten kämpfen lassen. So wurden zwischen November 2006 und August 2007 mehr als 200 Entführungen von Kindern durch die Karuna Gruppe registriert.

Weder Polizei, noch Militär verhindern diese Zwangsrekrutierungen, obwohl nach dem Recht Sri Lankas der Einsatz von Kindersoldaten mit bis zu 20 Jahren Haft bestraft werden kann.

Kinder sind nicht nur als Soldaten, sondern auch als Flüchtlinge die ersten Opfer des Bürgerkrieges in Sri Lanka. Bitte appellieren Sie an Bundesaußenminister Frank-Walter Steinmeier, sich gemeinsam mit der Europäischen Union für ein Ende des Bürgerkrieges und des Missbrauchs von Kindersoldaten in Sri Lanka einzusetzen Denn Sri Lankas Kinder brauchen ein Zeichen der Hoffnung.

http://www.gfbv.de/inhaltsDok.php?id=1220&PHPSESSID=27b7f0def8e4ed54144d51d96a2aa53b

No comments: