தமிழ் அரங்கம்

Saturday, March 1, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...21.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...21.

திகிலூட்டிய பாதுகாப்பான வீடு

குல்பர்க் பகுதியில் அச்சத்தால் உறைந்து போன முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்கு நிச்சயமுண்டு என்னும் நம்பிக்கையோடு முன்னாள்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாப்ரியின் வீட்டில் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் எதைக் கொண்டு அச்சப்பட்டார்களோ, அது அங்கே உயிர்பெற்றது.


குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றி 5 மாத காலமாக தெஹல்கா நடத்திய விசாரணைகளின் போது, வன்முறையாளர்கள் மற்றும் சதி திட்டங்களை வகுத்தச் சதிகாரர்களில் அதிகமானவர்கள் தங்களது பங்களிப்பைப் பற்றி மிக விளக்கமாகவே கூறினார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளப் படாத ஒரு இடம் உண்டு - அது தான் குல்பர்க். அஹ்மதாபாத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த சமூக குடியிருப்பானது, ஒரு சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாப்ரியின் இருப்பிடமாக இருந்தது. காவல்துறையின் படைகுழு ஒன்று அங்கே இருந்தும் கூட, பிப்ரவரி 28 அன்று வன்முறை வெறிபிடித்த ஹிந்துத்துவக் கும்பல் ஒன்று அந்த குடியிருப்பை முற்றுகையிட்டது. 5 மணி நேரத்துக்கும் மேலாக ஜாப்ரி பதட்டத்தோடு காவல் துறை ஆணையாளருக்கும், முதலமைச்சர் அலுவலகத்திற்கும், டெல்லியிலிருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் உதவி கோரி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார்.

கிட்டத்தட்ட 30 முஸ்லிம் குடும்பத்தினர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக பிராத்தனை செய்தவர்களாகத் தாங்கள் ஆபத்திலிருந்துக் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தனர். இவர்களோடுப் பக்கத்து சேரிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும் குல்பர்கிலே தஞ்சம் தேடியிருந்தனர். காரணம் காங்கிரஸ் தலைவர் தங்கியுள்ள சமூகக் குடியிருப்பு, பலமான பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். இறுதியில் மதியம் 2:30 மணியளவிலே காட்டுமிராண்டி வெறியர்கள் கூட்டம் சமூக குடியிருப்புக்குள்ளே நுழைந்து மூர்க்கத்தனமாகத் தாக்க ஆரம்பித்து, யாரெல்லாம் அவர்களின் கைகளில் அகப்பட்டார்களோ அவர்கள் அனைவரையும் கொன்றனர். அதிகாரப்பூர்வமாக 39 பேர் கொல்லப்பட்டதாக கூறினாலும், உயிர் பிழைத்தவர்களின் கூற்றுபடி மிக அதிக எண்ணிக்கையிலான பேர் கொல்லபட்டனர். ஜாப்ரியே உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். அவரது உடல் பாகங்கள் எதுவும் கண்டெடுக்கப் படவில்லை (முற்றிலுமாக அவர் கரித்துச் சாம்பலாக்கப்பட்டார்). குல்பர்க்கிலும், நரோடாவிலும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள், 6ம் தேதி மார்ச் 2002 அன்று அஹ்மதாபாத்திலுள்ள கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2007 செப்டம்பர் 1ம் தேதி கடைசியாக தெஹல்கா பஜ்ரங்கியைச் சந்தித்த போது, குல்பர்க் படுகொலைகளில் பங்கெடுத்த குற்றவாளிகளில் விஹெச்பியைச் சார்ந்த அதிகமானவர்களை தனக்குத் தெரியும் என்று கூறினான். விஹெச்பி அவர்களை முறையாக கவனிக்கவில்லை. எனவே அவசியப்பட்டால் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் வருத்தத்துடன் கூறினான். "குல்பர்க் குற்றாவாளிகளைச் சந்திப்பதற்காக 2007 செப்டம்பர் 8ம் தேதி அஹ்மதாபத்திற்கு பறந்து சென்றேன். பஜ்ரங்கியின் உதவியாளர்களில் ஒருவன் குல்பர்க் சங்கம் இருக்கும் பகுதியான மெகானின் நகருக்கு என்னை அழைத்து சென்றான். குல்பர்க் சங்கத்திற்கு எதிரேயுள்ள சாலையின் புறத்தில் சந்திப்பதற்கு முடிவு செய்தோம். பரபரப்பு மிகுந்த பார்ப்பதற்கு குளிர்ச்சியான பகுதியின் மையத்தில் அமைந்துள்ள குல்பர்க் சங்கம், மக்கள் யாருமில்லாமல் வெறிச்சோடி கிடப்பதைப் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு பயத்தை வரவழைக்கிறது. முன்னால் உள்ள இரும்பு கதவு, அதனுள் இருக்கும் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், மேல் கூரை என எல்லாம் ஒரே நிறத்தில் காட்சியளிக்கிறது -- அடுப்பு கரி கருப்பு நிறத்தில்.

கடைகாரர்கள், தெரு ஓர வியாபரிகள், பக்கத்தில் வசிப்போர், வழியாக செல்வோர் என எவரும் இந்த இடத்தை சற்று கூட ஏறிட்டும் பார்க்காமலேயே செல்கிறனர். இரண்டு உள்ளுர் விஹெச்பி தலைவர்கள் அங்கு வந்து சேரும் வரை 20 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்தோம். அதில் ஒருவன் பெயர் மஹேஷ் பட்டேல். இவனுக்கு பக்கத்திலேயே கடையும் உள்ளது. இவர்கள் இருவரும் காவல்துறையினரின் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் எவர்களுடைய பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கிறதோ அவர்களை இவ்விருவரும் அறிமுகம் செய்து வைத்தனர். மஹேஷ் பட்டேல் ஒரு வீட்டிற்கு என்னை அழைத்து சென்று, அவனுடைய இடத்திற்கு வந்து சேருமாறு குற்றவாளிகளுக்குத் தகவல் அனுப்பினான். குற்றவாளிகளுக்கு விஹெச்பி செய்தவற்றை பட்டேல் கூறும் போது- சிறையில் உணவு அளிப்பது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவது, சட்ட உதவிகள் வழங்குவது என விஹெச்பி செய்யும் உதவிகளை அடுக்கிக் கொண்டு சென்றான் (பட்டேலைப் பொருத்த வரை நான் ஒரு RSSகாரன், கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள் - குற்றவாளிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி மதிப்பீடு செய்ய டெல்லியிருந்து வந்திருப்பவன்)

சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு, பிரகலாத் ராஜு, மங்கிலால் ஜெயின் மற்றும் மதன் சாவல் ஆகிய மூன்று குற்றவாளிகள் வந்து சேர்ந்தனர் (39 ஹிந்துக்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தும் மூவரை மட்டுமே அன்றைய தினத்தில் சந்திக்க முடிந்தது). அவர்கள் தங்களது பேச்சைத் துவக்கும் போதே, விஹெச்பி குற்றவாளிகளை நன்றாகக் கவனித்து கொள்கிறது என்னும் பட்டேலுடைய கூற்றைத் தகர்த்தெறிந்தனர். (விஹெச்பி குறித்த) அவர்களுடைய குற்றச்சாட்டுகளின் பட்டியல் மிக நீளமானதும் கசப்பானதுமாகும். நான் அவர்களுடைய தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய எல்லா குற்றச்சாட்டுகளும் முறையாக சரியானவர்களிடம் எடுத்துச் சொல்லபடும், அவர்களுக்கு அதிகமான உதவிகள் விஹெச்பி மற்றும் RSSஆல் செய்து தரப்படும் என்ற உத்திரவாதத்தையும் அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். அவ்வாறு செல்லும் வழியில், மங்கிலாலை அவனது கைத்தொலைபேசி மூலமாக அழைத்து என்னை அஹ்மதாபாத் வானூர்தி நிலைத்திற்கு சமீபமாக நான் தங்கியுள்ள விடுதியில் வந்து சந்திக்குமாறு கூறி, அவனுடன் மற்ற இருவரையும் உடன் அழைத்து வரவும் கேட்டுக் கொண்டேன்".

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

No comments: