தமிழ் அரங்கம்

Monday, May 26, 2008

சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும்,

-ரவி
18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிhpப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விhpந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிhpப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குhpயதுதான்.


யாழ் மேலாதிக்கம் என்பதை எல்லாப் பிரச்சினைக்குமான விளக்கத் தளமாகக் கொள்வது முதல் வன்முறையை புலிகளோடு அல்லது -அவர்கள் விhpந்த தளமாகக் கண்டுகொள்ளும்- யாழ்ப்பாணியத்தோடு மட்டும் அடையாளம் காணும் நிலை இருக்கிறது. அப்படியானால் தலையை முண்டமாக வெட்டியெடுத்து வீசுவதுவரையான சிங்களப் போpனவாதத்தின் வன்முறையை எதனால் விளக்கப் போகிறோம். ஐனநாயகம் செழித்தோங்குவதாகச் சொல்லப்படும் மேற்குலகில் இளைஞர் வன்முறை என்ற ஒரு விடயம் பெரும் பிரச்சினையாக ஊடக விவாதங்களை நிரப்புவனவாக இருக்கிறது என்பதை நாம் புhpந்துகொள்ள வேண்டும். இந்த வன்முறைகள், அதிகாரங்கள் செயற்படும் நுண்களங்கள் பற்றியெல்லாம் பின்நவீனத்துவம் சொன்ன விடயங்களையெல்லாம் இப்போதைய விவாதங்களில் பலர் பேசுவது கிடையாது. முதலாளித்துவ ஐனநாயகம், அதன் அதிகார நிறுவனங்கள், தேர்தல் பற்றிய கணிப்பீடுகள் எல்லாம் இப்போ வசதியாக மறக்கப்பட்டிருக்கின்றன.
.

No comments: