தமிழ் அரங்கம்

Monday, August 4, 2008

புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!

எங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?

புலிகள் ஒரு எதிர்தாக்குதலை நடத்தவே, தந்திரமாக பின்வாங்குவதாக நம்பும் பிரமை அதிகரித்துள்ளது. எதிர்த்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கனவு, எதார்த்தத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படையை தளபதிகளுக்கு காட்ட வெளிக்கிட்டது முதல், தளபதிகள் மிக விரைவில் வெற்றித் தாக்குதல் என்ற அறிக்கைகள் விட்டு, அவை ஒய்ந்துள்ள நிலையிலும், கனவுகள் பிரமைகள் நம்பிக்கைகளாகின்றது.

புலிகள் முதல் அரசு வரை இப்படி நம்புவது, ஒருதலைப்பட்சமாக அதிகரித்து பல்வேறு ஊகங்களாகின்றது. இந்த எல்லைக்குள் ராஜதந்திரிகள் முதல் தொடர்ச்சியாக கருத்துரைப்பவர்கள் அனைவரும், இப்படியே இதற்குள்ளேயே கருத்துரைப்பதுடன், அதையே எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். நிலைமையை ஆராய அடிப்படையான தரவுகளின்றி, கடந்தகால அனுமானங்களில் இருந்து இவை வெளிப்படுகின்றது.

நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: